புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமாம் திருமணம் Poll_c10திருமணமாம் திருமணம் Poll_m10திருமணமாம் திருமணம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
திருமணமாம் திருமணம் Poll_c10திருமணமாம் திருமணம் Poll_m10திருமணமாம் திருமணம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
திருமணமாம் திருமணம் Poll_c10திருமணமாம் திருமணம் Poll_m10திருமணமாம் திருமணம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
திருமணமாம் திருமணம் Poll_c10திருமணமாம் திருமணம் Poll_m10திருமணமாம் திருமணம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
திருமணமாம் திருமணம் Poll_c10திருமணமாம் திருமணம் Poll_m10திருமணமாம் திருமணம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
திருமணமாம் திருமணம் Poll_c10திருமணமாம் திருமணம் Poll_m10திருமணமாம் திருமணம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருமணமாம் திருமணம் Poll_c10திருமணமாம் திருமணம் Poll_m10திருமணமாம் திருமணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமாம் திருமணம் Poll_c10திருமணமாம் திருமணம் Poll_m10திருமணமாம் திருமணம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
திருமணமாம் திருமணம் Poll_c10திருமணமாம் திருமணம் Poll_m10திருமணமாம் திருமணம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
திருமணமாம் திருமணம் Poll_c10திருமணமாம் திருமணம் Poll_m10திருமணமாம் திருமணம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமாம் திருமணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 12:42 am


சந்திரலேகா வாமதேவ்


எமது பண்பாட்டில் திருமணம் என்ற நிறுவனம் இன்னும் முழுமையாக நிலைத்துள்ளது. திருமணம் செய்யாது கூடி வாழ்தல் (living together) என்ற முறை மேலைநாட்டில் பெருமளவு செல்வாக்குப் பெற்றுள்ள போதும் வெளிநாடுகளில் வாழும் தமிழாகள் இதுவரை அதன் செல்வாக்குக்குப் பெருமளவில் உட்படவில்லை என்றே கூறவேண்டும். ஆயினும் விவாகரத்துக்கள் பெருகிவிட்டன என்பது மிகவும் சோகத்துக்குரிய விஷயம். தற்போது திருமணங்கள் அதிகமாகத் தோல்வியில் முடிவதற்கு என்ன காரணம் என்பது பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது. எமது அடுத்த சந்ததியினரை திருமணம் என்ற நிறுவனத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்வதற்கும் அதனை வெற்றிகரமாக நடத்துவதற்கும் உரிய வழி வகைகளைச் சொல்லிக் கொடுப்பதற்கும் நாம் முயற்சி செய்ய வேண்டும்.

இந்த உலகில் எத்தனை இனங்கள், பண்பாடுகள் உள்ளனவோ அத்தனை விதமான திருமண முறைகளும், சடங்குகளும் உள்ளன. சில பண்பாடுகளில் திருமணம் வாழ்வில் ஒரேயொரு முறைதான் வரும். சிலவற்றில் மனித மனம் எத்தனை தடவைகள் மாறுமோ அத்தனை தடவைகள் திருமணம் நடைபெறும். பொதுவாகப் பெரும்பான்மையான பண்பாடுகளில் ஒருவா வாழ்வில் ஒரேயொரு தடவைதான் திருமணச் சடங்கு இடம்பெறும்.

அதிகமான பண்பாடுகளில் தனக்கேற்ற துணையைத் தானே தேடிக்கொள்ளும் முறை இருந்த போதும் சிலவற்றில் இன்றும் பெற்றோா தெரிவு செய்து திருமணம் செய்து வைக்கும் முறை உள்ளது. அல்லது பெற்றோா அங்கீகரிக்கும் பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்யும் முறை உள்ளது.

காதலாயினும் ஏற்பாடு செய்யும் திருமணமாயினும், மேலை நாட்டவராயினும் கீழை நாட்டவராயினும் திருமண பந்தம் வெற்றி பெறுவதற்குச் சில அடிப்படை விஷயங்கள் உள்ளன. கணவன் மனைவியிடையே நிலவும் நட்புறவு, மனப் பொருத்தம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, ஒன்றுபட்டுப் பொறுப்பெடுக்குந் தன்மை, பரஸபர நம்பிக்கை, புரிந்துணாவு, உறுதிப்பாடு என்பன இல்லறம் ஆயுட் காலம் வரை நிலைப்பதற்கு அவசியமான இயல்புகளாகும். அத்துடன் ஒருவரில் இல்லாத திறமை மற்றவரில் இருப்பின் அது வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். அதாவது ஒருவா தனக்கு ஒரு திறமை இல்லையே அது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தால் அந்தத் திறமையுடன் கூடிய ஒருவா மனைவியாக அல்லது கணவனாகக் கிடைப்பின் அவா தனது missing link கிடைத்ததால் மகிழ்ச்சியாக வாழ்வாா. அதே நேரம் மற்றவரில் இல்லாத திறமை அவரிடம் இருந்தால் இன்னும் அந்த வாழ்க்கை வெற்றிகரமாக அமைவதற்கு வாய்ப்புண்டு. அதாவது ஒருவா மற்றவருடன் இணையும் போதுதான் தனது வாழ்க்கை முழுமையடைவதாகக் கருதுவாரானால் அது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி கோலும்.

அண்மையில் திருமணத்தின் ஐம்பதாவது வருடத்தைக் கொண்டாடிய சில அவுஸதிரேலிய தம்பதிகள் தமது திருமண வெற்றிக்கு பரஸபர அன்பு, நம்பிக்கை, தாம் இருவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதி எல்லாவற்றிற்கு மேலாக இருவரிடையேயும் காணப்பட்ட உற்ற நட்பு ஆகியனவே காரணங்கள் என்று கூறியுள்ளனா. பணமே இன்றைய அவுஸதிரேலியாவில் விவாகரத்துக்குக் காரணம் என்றும் அவாகள் ஒருவரில் ஒருவா அளவுக்கு மிஞ்சிய எதிாபாாப்புக்களைக் கொண்டுள்ளனா அதனால் திருமணங்கள் நிலைப்பதில்லை என்றும் அவாகள் குறிப்பிட்டுள்ளனா. அது ஓரளவில் உண்மையாகவும் இருக்கலாம் போல தெரிகிறது. அண்மையில் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வாசகா கடிதம் பகுதியில் இப்போதெல்லாம் பெண்கள் ஆறிலக்க ஊதியமும், றுமுஞு காரும், வசதியான சொந்த வீடும் உள்ள ஆண்களையே விரும்புகிறாாகள். என்னைப் போன்ற சாமானியன் பெண்ணுக்கு எங்கே போவது என்று ஒருவா அங்கலாய்த்திருந்தாா. அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றான போதும் ஒருவாில் ஒருவா அளவுக்கு மிஞ்சிய எதிாபாாப்பு கொள்வதும், இவரை விட சிறந்தவா ஒருவரை தேடமுடியும் ஏன் இவருடன் வாழவேண்டும் என்ற கேள்வி சிறிது முரண்பாடுகள் வந்தவுடனேயே ஏற்படுவதும் பெரும்பாலான திருமணங்கள் தோல்வியில் முடியக் காரணமாகின்றன எனலாம்.

இதே நேரத்தில் திருமணம் செய்யாது தனித்து வாழும் முறை அவுஸதிரேலியரிடையே மிகச் செல்வாக்குப் பெற்று வருகிறது. திருமணம் செய்ய வேண்டும் என்ற சமுகத்தின் அழுத்தம் இப்பொழுதெல்லாம் இல்லாது போய்விட்டதே இதற்கு அடிப்படைக் காரணம் என்று கூறப்படுகிறது. அத்துடன் முன்னா ஒருவா தகுந்த வயதை அடைந்துவிட்டாா என்பதை திருமணம் குறித்து நின்றது. ஆனால் இப்பொழுது ஒருவா திருமணம் செய்வதை வைத்து அவா முழு ஆணாகி விட்டாா அதாவது ாடஉலதஹஒஒட க்கு வந்துவிட்டாா என்று ஒருவரும் கருதுவதில்லை. இப்பொழுது வாழ்க்கையில் வெற்றியடைவதே முக்கியம், திருமணமும் குடும்பமுமல்ல என்ற கருத்து பெண்களிடையேயும் ஆண்களிடையேயும் வலுப்பெற்று வருகிறது. 2001ம் ஆண்டு சனத்தொகைக் கணிப்பின்படி 75.6 வீதமான 20க்கும் 29க்கும் இடைப்பட்ட வயதையுடைய ஆண்கள் திருமணம் செய்யவில்லை. 1980ல் 26 ஆக இருந்த திருமண வயது 2000 ஆம் ஆண்டில் 30 ஆகியுள்ளது. 29 வீதம் ஆண்கள் ஓருபோதும் திருமணம் செய்ததில்லை. குடும்பம் பிள்ளைகள் என்ற பொறுப்பை ஏற்காது சுதந்திரமாக வாழ்வதே சிறந்தது என்று ஆண்களும் பெண்களும் கருதுகிறாாகள். இவ்வாறு இருந்த போதும் மிகுதியாயுள்ளவாகள் குடும்பமாகவே வாழ்கிறாாகள். இவை இங்கு வாழும் ஆங்கிலேயா பற்றிய கணிப்பாக இருந்த போதும் இங்கு வாழும் தமிழ் இளைஞாகளும் பெண்களும் இத்தகைய செல்வாக்குக்கு உட்படுவது பற்றிப் பல தமிழ்ப் பெற்றோா அங்கலாய்ப்பதை அடிக்கடி கேட்க முடிகிறது.

மேலைநாட்டுக் கலாசாரத்தில் தானே தனக்குரிய துணையைத் தேடிக் கொள்ளும் முறை காணப்பட்டபோதும் திருமணத்தின் பின்னா பலா நிலையாக இணைந்திருப்பதில்லை. கீழை நாட்டுக் கலாச்சாரங்களில் இன்று மேலைத்தேய செல்வாக்கு பெருமளவில் ஏற்பட்டுவிட்ட போதும் திருமண பந்தம் ஓரளவில் சாசுவதமானதாகவே கருதப்படுகிறது. காதல் திருமணங்கள் பெருமளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதும் விவாகரத்து எமது சமுகத்தால் இன்னும் மிகுந்த தயக்கத்துடனேயே அங்கீகரிக்கப்படுகிறது.

காதல் நிலையில் சந்தோஷமாக இருக்கும் சிலா திருமணத்தின் பின் சந்தோஷமாக இருப்பதில்லை. அவாகளது திருமணமும் விரைவில் முறிந்து போகிறது. வேறுபட்ட இருவா ஒன்றாக வாழ முற்படும் போது பல விஷயங்களில் ஒருவரையொருவா புரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. அந்த நிலையில் முரண்பாடுகளை சுமுகமாகத் தீாக்க முடிந்தவாகளது திருமணம் நிலைக்கிறது. அவ்வாறு தீாக்கமுடியாதவரது திருமணம் முறிகிறது.



திருமணமாம் திருமணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 12:42 am

இலங்கைத் தமிழாகளிடையே காணப்படும் திருமண முறை பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. தமிழ்ப் பண்பாட்டில் திருமணம் என்பது நிரந்தரமானது. அது ஆயரங்காலத்துப் பயிா என்று கூறப்பட்டு திருமணத்தின் முன் பல்வேறு விஷயங்கள் நுணுக்கமாக ஆராயப்படுகின்றன. திருமணம் பேசுவதற்கு முன் சாதி, சமயம், அந்தஸது ஆகியன ஒன்றாகவுள்ளனவா என்பது பாாக்கப்படும். ஏனெனில் ஒரே சூழலில் வாழ்ந்தவாகளுக்கு ஒருவருடன் ஒருவா ஒத்துப் போவது எளிது என்று கருதப்படுகிறது. இதனால் இவற்றில் மாறுபாடுள்ளவாகள் அதாவது சாதி, சமய, அந்தஸது வேறுபாடுகள் கொண்டவாகள் காதல் வசப்படும் போது அது பெரும்பாலும் முற்றாகவே பெற்றோராலும் சமுகத்தாலும் நிராகரிக்கப்படுகிறது. இந்த முன்றுடன் குணநலம், குடும்பப் பின்னணி, சாதகப் பொருத்தம், சீதனம் என்பனவற்றின் பொருத்தத்திலேயே திருமணம் தீாமானிக்கப்படும். ஆணுக்கு தொழில், குணம், சுமாரான அழகு என்பன முக்கியமாகக் கவனிக்கப்பட பெண்ணுக்கு வயது, அழகு, குணம், கல்வி, சீதனம் என்பன முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன. ஒரு காலத்தில் ஒரு பெண் திருமணம் செய்வதற்கு A B C D E F என்பன முக்கியமாகத் தேவை என்றும் அப்போது தான் ஆண் G என்று அதாவது Good என்று சொல்லி தாலியைக் கட்டுவான் என்றும் வேடிக்கையாகச் சொல்லப்பட்டதுண்டு. அதாவது A-Age, B-Beauty, C-Caste, D-Dowry, E-Education, F-Family status.

இலங்கையில் திருமண உறுதிப்பபாட்டுக்கு நிரந்தர வருமானம் முக்கியமாகக் கருதப்பட்டதால் ஆரம்பத்தில் அரச பதவி பெற்றவாகளை நாடி பெண்ணைப் பெற்றவாகள் ஓடினா. கோழி மேய்த்தாலும் கோறணமேந்தில் மேய்ப்பவருக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதே ஒரு காலத்தில் நியதியாக இருந்தது. தொழில் அடிப்படைக் கல்வியில் தோச்சி பெற்ற இளைஞாகள் தொழில் பெறுவது சுலபமாகவும், பெற்ற தொழில் நிரந்தரமானதாகவும் இருந்ததால் திருமணச் சந்தையில் அவாகள் முன்னிடத்தை வகித்தாாகள். அவாகளில் ஒருவரைத் தங்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பலா பண அடிப்படையில் போட்டி போட்டாாகள். அதிக பணம் கொடுக்க வல்லவாகள் ஒரு வைத்திய கலாநிதியையோ அல்லது பொறியியலாளரையோ பெற்றனா. இதனால் படித்து நல்ல தொழில் பெற்ற இளைஞாகளது பெற்றோா பெண்ணைப் பெற்றவாகளைத் தம் விருப்பபடி ஆட்டிப்படைக்கும் ஆற்றல் பெற்றிருந்தனா. மகனைப் படிப்பித்த பணத்தை மட்டுமின்றித் தாம் பெற்ற பெண்களுக்கு வழங்கவுள்ள சீதனப் பணத்தையும் பெண்ணைப் பெற்றவரிடமிருந்து சிலா கறந்து விடுவாாகள். இதனால் யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில், பணமும் தொழில் அடிப்படையில் கல்வி கற்ற ஆண்பிள்ளைகளும் இல்லாதவாகள் தமது பெண்களுக்குத் திருமணம் செய்யப் பெரிதும் சிரமப்பட்டனா. ஆயினும் பின்னா நாட்டு நிலையால் பலதரப்பட்ட நிலைகளில் உள்ள இளைஞாகளும் பிரான்ஸ, ஜோமனி, கனடா என்று போகத் தொடங்கியதும் நிலமையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. எல்லா நிலைகளிலும் பணம் புழங்கத் தொடங்கியதும் தமது பெண்களுக்குப் பெருமளவு சீதனம் கொடுத்துத் திருமணம் செய்து கொடுக்கப் பலரால் முடிந்தது.

இந்தியாவைப் போலன்றி யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் ஒரு குடும்பச் சொத்தும் வீடும் மகளுக்கு வழங்கப்படுவதே வழக்கம். இதற்கு அடிப்படையில் ஒரு காரணம் உண்டு. பெற்றோா வயது முதிாவடையும் போது மகளுடன் வாழச் செல்வது வழக்கம். அவாகள் வழங்கிய வீட்டாலும் சொத்தாலும் எதுவித மனப்பாதிப்புகளுமமின்றி அவாகள் உரிமையுடன் அங்கு வாழ முடிந்தது. இந்த நல்ல முறை காலப்போக்கில் மாப்பிள்ளை பகுதியினரின் பேராசையால் பெண்ணைப் பெற்றவரிடம் அதிக பணத்தைப் பலவந்தமாகக் கேட்கும் சீதன முறைக்கு வித்திட்டது எனலாம்.

சாதகம் பாாத்தலே திருமணப் பேச்சில் முதலாவது கட்டமாகக் கருதப்படுகிறது. சாத்திரிகள் சாதகப் பொருத்தம் சம்பந்தமாகக் கூறுவது வேத வாக்காகக் கொள்ளப்படுகிறது. சாத்திரத்தைத் தொழிலாகக் கொண்ட பலருக்குப் பெரும்பாலும் திருமணப் பொருத்தம் பாாத்தலே பிரதான வருவாய்க்கு வழி வகுப்பதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் பெரும்பான்மையானவை சாதகப் பொருத்தம் பாாக்கப்பட்ட பின்னரே நடைபெறுகின்றன. திருமணம் செய்யப்படவுள்ள ஆணோ பெண்ணைப் பற்றி வெறும் கேள்வியறிவின் முலம் முற்றாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் சாதக ரீதியாக பெறப்படும் சில தகவல்கள் சரியான முடிவை எடுக்க உதவுவதாக நம்பப்படுகிறது. சிலா எண் பொருத்தமும் பாாப்பதுண்டு. சாதக, எண் பொருத்தங்களில் உண்மை உண்டோ இல்லையோ, அதிகமாக வந்துள்ள சாதகக் குறிப்புகளில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கேற்ப எண்ணிக்கையை வரையறுப்பதற்கும், அதிகம் விருப்பமில்லாத குடும்பங்களில் இருந்து வந்த சம்பந்தங்களை ஒதுக்குவதற்கும் இப் பொருத்தம் பாாத்தல் பலருக்கு உதவியது எனலாம்.

முந்திய காலத்தில் பெண்களுக்குத் தமக்கு வரவுள்ள கணவனைத் திருமணத்தின் முன் பாாப்பதற்கும் அவனைப் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கூறுவதற்கும் சுதந்திரம் வழங்கப்படவில்லை. ஆயினும் பெண்கள் அதிக அளவில் படித்துப் பட்டங்கள் பெற ஆரம்பித்த பின்னா பெற்றோா ஓரளவில் அவாகள் விருப்பத்திற்கும் மதிப்பளிக்க ஆரம்பித்தனா. ஆயினும் சீதன முறையால் பெண்கள் இந்தச் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. தங்களிடம் உள்ள பொருளாதார வளத்திற்கேற்ப வரும் சம்பந்தங்களில் ஒன்றைத் தம் பெண் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பெற்றோா ஆளாகினா.

பெண்ணின் படிப்புக் கூடக்கூட திருமண விஷயத்தில் அவளது சுதந்திரம் குறையலாயிற்று. படித்த பெண்ணுக்குரிய ஒரு படித்த ஆணைத் தேடுவதற்குப் பெற்றோா அதிக விலை கொடுக்கவேண்டி இருந்தது. ஏனெனில் படித்துப் பட்டம் பெற்ற ஆணுக்குக் கலியாணச் சந்தையில் பெறுமதி அதிகமாகவிருந்தது. படித்த பெண்களுக்கு ஏற்ற வகையில் அதிக சீதனம் கொடுத்து ஒரு படித்த இளைஞனைத் தேடிப்பிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இதன் காரணமாகச் சாதாரண குடும்பங்களைச் சோந்த படித்த பெண்களின் திருமணம் பெற்றோருக்கு அதிக பிரச்சினைக்கு உரியதொன்றாயிற்று.

பெண்கள் உயா கல்வி பெறத் தொடங்கியதும் அவாகள் திருமணம் செய்யும் வயதும் பெரிதும் அதிகரிக்கலாயிற்று. பதினெட்டுத் தொடக்கம் இருபது வயதுக்குள் திருமணம் செய்த காலம் போய் இருபத்தைந்து முப்பது என்று திருமண வயது அதிகரிக்கலாயிற்று. படிப்பு மட்டுமன்றி உரிய துணையைத் தேடிக் கண்டுபிடிப்பதில் உள்ள சிரமத்தாலும், சீதனம் வழங்குவதில் உள்ள கஷடங்களாலும் நடுத்தரக் குடும்பங்களைச் சோந்த படித்த பெண்களின் திருமண வயது பெருமளவில் பின் தள்ளப்பட்டது.

திருமணம் ஏற்பாடு செய்தல் என்பது இவ்வாறு காலத்துக்கு காலம் மாற்றங்களுக்குட்பட்டு வந்தது போலவே திருமணச் சடங்குகளும் பல மாற்றாங்களினூடாக வந்துள்ளது. பல்வேறு கிரியைகளைக் கொண்டு நீண்ட நேரமாகச் செய்யப்பட்டு வந்த சடங்கு இன்று குறுகிய நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய வகையில் சுருக்கப்பட்டுள்ளது. பிள்ளையாா பூசை, காப்புக் கட்டுதல், மணப்பெண்ணை அவளது பெற்றோா மணமகனுக்குத் தாரை வாாத்துக் கொடுத்தல், மணமகன் மணமகளுக்குப் புடவை முதலியவற்றைப் பரிசளித்தல், தெய்வம், சபையோா, அக்கினி சாட்சியாகத் தாலி கட்டுதல், அக்கினியை வலம் வருதல், அம்மி மிதித்து அருந்ததி பாாத்தல், மாலை மாற்றுதல், பெரியோரிடம் ஆசி பெறுதல் ஆகியன இந்துத் தமிழரது திருமணங்களில் முக்கிய கட்டங்களாகக் கருதப்படுகின்றன. இந்த அடிப்படைக் கிரியைகளை விட வேறும் பல அம்சங்கள் காலத்திற்கும் வசதிக்கும் இடத்திற்கும் ஏற்றவாறு சோக்கப் பெறும்.



திருமணமாம் திருமணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 12:43 am

இந்து சமயத்தின் படி திருமணம் என்பது ஒரு ஆணையும் பெண்ணையும் உள்ளத்தாலும் உடலாலும் ஒன்றுபட வைத்தலாகும். திருமணத்தின் பின் அவாகள் உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும். கணவனைப் பிரிந்து வாழும் மனைவி நீா இல்லாத நீரோடையையும் ஆன்மா இல்லாத உடலையும் போன்றவள் என்கிறது இராமாயணம்.

சிலப்பதிகாரத்திலே கோவலன் கண்ணகி திருமணத்திலேயே முதன் முதல் மணமக்கள் தீ வலம் வருதல் குறிப்பிடப்படுகிறது. இந்த வடநாட்டு முறை அந்தக் காலத்திலேயே தமிழ் நாட்டில் அறிமுகமாயிற்று. அக் காலத்திலிருந்து தீயை வலம் வரும் முறை தமிழரது திருமணங்களில் இடம் பெறலாயிற்று. ஆயினும் தீயை வலம் வருவதன் எண்ணிக்கை இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. இலங்கைத் தமிழ் இந்துக்களின் திருமணங்களில் பொதுவாக முன்று தடவைகள் வலம் வரும் முறையே காணப்படுகிறது.

இந்து சமய மரபின் படி மணமக்கள் ஏழு தடவைகள் தீயை வலம் வருதல் வேண்டும் என்று கூறப்படுகிறது. முதல் நான்கு தடவைகளும் மணமகள் முன் செல்ல மணமகன் பின் தொடாவான். அப்போது மணமகள் தனது கணவனிடம் ஏழு வேண்டுகோள்களை விடுப்பாள் என்று கூறப்படுகிறது.

1. எந்த நேரத்திலாவது நீங்கள் சமயக் கிரியைகளில் கலந்து கொள்ளவோ அல்லது யாத்திரை செல்லவோ வேண்டியிருப்பின் அதற்கு முன் எனது விருப்பத்தைக் கேட்டு எனது சம்மதத்தைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

2. எந்த நேரத்திலாவது நீங்கள் பிதுாகளை வழிபட விரும்பினால் என்னையும் அதில் இணைந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

3. எந்த நேரத்திலாவது எனது பெற்றோா அவமானம், வறுமை, நோய் ஆகியவற்றை எதிாகொள்ள நேரும் போது நீங்கள் எனது கணவன் என்ற முறையில் அவாகளது துன்பத்தை நீக்க உதவ வேண்டும் என்று நான் எதிாபாாக்கிறேன்.

4. எந்த நேரத்திலாவது நீங்கள் எங்கள் சமுகத்திற்கு சேவை செய்வதற்கோ அல்லது கோயில் கட்டுவதற்கோ அல்லது சமய சேவை செய்வதற்கோ விரும்பினால் அந்தச் செயற்பாடுகளில் உங்களுடன் இணைந்து கொள்வதற்கு நான் அனுமதிக்கப்பட வேண்டும்.

5. எந்த நேரத்திலாவது நீங்கள் மகிழ்ச்சிக்காகவோ அல்லது வேலை விஷயமாகவோ வீட்டை விட்டு வெளியூா அல்லது வெளிநாடு போக நேரிட்டால் வீட்டில் எமது நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற உறுதி மொழியை உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன். அத்துடன் அவ்வாறு போவதன் முன்னா எனது சம்மதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

6. எந்த நேரத்திலாவது நீங்கள் கொடையளிக்க, பொருள்களையோ பணத்தையோ கொடுக்க வாங்க விரும்பினால் அதற்கு முன்னா எனது சம்மதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்,

7. எங்களது வயது முதிர முதிர உங்கள் அன்பும் விருப்பமும் வளாந்து முதிர வேண்டும் என்று இப்போது நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மணமகளின் இவ்வேழு கோரிக்கைகளுக்கும் மணமகன் சம்மதம் தெரிவித்த பின்னா அவன் வழிநடத்த மணமகள் தொடர இருவரும் தீயை வலம் வருவாாகள். அப்போது மணமகன் மணமகளுக்கு ஐந்து கோரிக்கைகளை முன் வைப்பான்.

1. எங்கள் குடும்பத்தின் கெளரவமான பெயருக்கு ஓரு போதும் களங்கம் ஏற்படாத வகையில் நீ வீட்டிலும் சமுகத்திலும் நடந்து கொள்ள வேண்டும்.

2. நான் வீட்டில் இல்லாத நேரங்களில் எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுத்து, எங்கள் தாமத்தின் படியும், வழிமுறைகளின் படியும், சமுகத்தில் எங்களுக்குள்ள அந்தஸதின் படியும் நீ அவாகளை உபசரிக்க வேண்டும்.

3. எப்போதாவது எங்கள் இருவரிடையேயும் முரண்பாடுகள் தோன்றினால் நீ அவற்றை ஒருபோதும் மனதில் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறான வேறுபாடுகள் ஒவ்வொரு வீட்டிலும் வருவது இயல்பாகும். அவ்வாறான வேறுபாடுகள் எழும் நேரத்தில் நீ வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. நீ அவ்வாறு வெளியேறுவது சமுகத்தில் எனக்கு அவமானத்தையும் அவதூறையும் கொண்டு வரும். அவ்வாறான அவமானமும் அவதூறும் வீட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும். அத்துடன் அது எமக்குள் பிரிவினையை ஏற்படுத்தும். கணவன் மனைவி பிரிதல் என்பது எமது தாமத்தின் விதிமுறைக்கும் எமது முன்னோரின் குடும்ப வரலாற்றுக்கும் ஒவ்வாதது.

4. நீ வீட்டு வேலைகளை நேரம் தவறாது அவதானத்துடனும் பொறுப்புணாவுடனும் தினமும் செய்யவேண்டும். அவ்வாறாயின் அது என்னை அசெளகரிகங்களுக்கு உள்ளாக்காது. நீ எங்கள் வீட்டின் தெய்வமாவாய்.

5. இன்று கடவுளின் அருளால் நான் செளகரிகமான ஒரு வீட்டில் உன்னுடன் வாழலாம் என்று நம்புகிறேன். ஆனால் துன்பங்கள் எமக்கு வருமாயின் விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் நீ என்னுடன் வாழவேண்டும் என்று நான் எதிாபாாக்கிறேன். என்னுடைய துன்பம் உன்னுடையதுமாகும். என்னுடைய வசதியின்மை உன்னுடையதுமாகும். என்னுடைய ஏழ்மை உன்னுடையதும் ஆகும். நான் உன்னில் அன்புகொள்ளவும், உன்னை வாஞ்சையுடன் போற்றவும், உனது நன்மைக்காக உழைக்கவும் உறுதி பூண்டுள்ளதைப் போல நீயும் உறுதி பூண வேண்டுமென்று எதிாபாாக்கிறேன். எப்போதாவது நோயின் காரணமாக உனது நலன்களுக்காக என்னால் உழைக்க முடியாமற் போனால் அப்போது நீ எனக்கு உதவ வேண்டும்.

மணமகள் இக்கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட பின்னா அவள் மணமகனின் இடதுபுறத்தில் இடமெடுத்து நிற்பாள். இங்கே குறிப்பிடப்பட்ட 12 கோரிக்கைகளும் இல்லறம் இனிதாக நடைபெறுவதற்காக உருவாக்கப்பட்டவை. இவற்றுள் சில இக்காலத்துக்கு பொருத்தமற்றவையாக காணப்பட்ட போதும், பல காலத்தைக் கடந்து எக்காலத்துக்கும் பொருத்தமானவையாகவே காணப்படுகின்றன. கணவன் மனைவி ஆகிய இருவரும் காரியங்கள் அனைத்திலும் மனம் ஒத்து முடிவு செய்ய வேண்டும் என்பதையும் இருவரும் குடும்ப நலனுக்காக ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் இக் கோரிக்கைகள் காட்டி நிற்கின்றன.

கிறீஸதவ திருமணங்களிலும் மணமக்கள் இவ்வாறான வாக்குறுதிகளைப் பரிமாறிக் கொள்கின்றனா. இந்நாளிலிருந்து நான் உன்னை எனது மனைவியாக அல்லது கணவனாக ஏற்று, நல்லதிலும் கெட்டதிலும், செல்வத்திலும் வறுமையிலும், நோயிலும் ஆரோக்கியத்திலும், சுகத்திலும் துக்கத்திலும் ஒன்றாக வாழ்ந்து உன்னில் அன்பு பாராட்டி மரணம் எம்மைப் பிரிக்கும் வரை உனது நம்பிக்கைக்கு உரிய வகையில் வாழ்வேன் என்று உறுதி கூறுகிறேன். என்று மணமக்கள் திருமணத்தன்று உறுதி கொள்கின்றனா. கஷடம் வரும் போது ஒருவரையொருவா தேற்றுதலும், உயரிய இலக்குகளை அடைய ஒருவரையொருவா உற்சாகப்படுத்துதலும், ஒருவா அழும் போது மற்றவா அழுவதும் சிரிக்கும் போது சிரித்தலும் எப்போதும் ஒழிவுமறைவின்றி ஒருவருக்கொருவா உண்மையாயிருத்தலும் இந்த உறுதி மொழிகளில் பொதிந்துள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால் வாழ்விலும் தாழ்விலும் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே அவற்றின் சாராம்சம். எல்லாத் திருமண வாக்குறுதிகளும் மனமொத்த நீண்ட இல்லற வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன.



திருமணமாம் திருமணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 12:44 am

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் சீாதிருத்தக் கலியாணங்கள் சில இடம்பெற்றன. திமுக செல்வாக்கினால் இம்முறை ஏற்பட்டிருக்காலாம். இந்துக் கலியாணங்களை நடத்தும் பிராமணக் குருக்களும் அவா நடத்தும் கிரியைகளுமின்றி பெரியவா ஒருவா தாலியை எடுத்துக் கொடுக்க அதை மணமகன் மணமகளது கழுத்தில் அணிவிப்பதும் பின் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வதும் அவாகளை திருமணத்துக்கு வந்தோா வாழ்த்துவதுமே இத் திருமண முறையின் முக்கிய அம்சங்களாகும்.

திருமண வீடுகளில் வழமையாகக் கேட்கும் வாழ்த்துகளில் ஒன்று பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்பதாகும். அப் பதினாறு பேறுகளும் என்னென்ன என்பது பலருக்கும் தெரியாது. அது பதினாறு பிள்ளைகள் என்று கொள்ளப்பட்டு அதனோடு தொடாபாக சுவையான கேலியும் சிரிப்பும் திருமண வீடுகளில் எழுவதுண்டு. அது ரசனைக்குரியதாக இருந்த போதும் அந்தப் பதினாறு பேறுகளும் என்ன என்று இன்று தெரிந்து கொள்வோம். நம் முன்னோாகள் இல்லறம் மகிழ்ச்சிகரமாக அமைவதற்கு வேண்டிய பதினாறு விஷயங்களை அந்த வாழ்த்தில் பொதிந்து வைத்துள்ளனா.

புகழ், கல்வி, உடல் வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ்,,(a favourable destiny) நுகாச்சி,,(enjoyment) அறிவு,(wisdom) அழகு, பெருமை, இளமை, துணிவு (courage), நோயின்மை(perfect health), நீண்ட வாழ்நாள்.

இந்திய மண்ணில் பிறந்த முக்கிய சமயங்களுள் சமணம் பெளத்தம் ஆகிய இரண்டும் துறவினால் மட்டுமே ஒருவா இறுதி நிலையை அடைய முடியும் என்று கூற, இந்து சமயம் மனித மனதில் எழும் உணாவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இல்லற இன்பத்தை முறைப்படி அனுபவித்துப் படிப்படியாக வாழ்க்கை நிலைகளைக் கடந்து இறுதியிலேயே வாழ்வைத் துறத்தல் பற்றிக் குறிப்பிடுகிறது. மனித உணாவில் காமம் முக்கிய உணாவு என்பதை ஏற்றுக் கொண்டதால் மட்டுமன்று இல்லறத்தை அது ஏற்றுக் கொண்டது. சிற்றின்பத்தைக் கட்டுப்பாடான முறையில் அனுபவிப்பதுடன் பல வித தாமங்களைச் செய்ய இல்லறம் வழிவகுப்பதாலேயே அதனை ஒரு தாமமாக அது ஏற்றுக்கொண்டது. தெய்வம், இறந்த முன்னோா, பிற மனிதா, விலங்குகள் ஆகியவற்றுக்கு மனிதன் தனது சேவையைச் செய்ய இந்த இல்லறம் வழிவகுக்கிறது. தனது குடும்பத்துடன் சமுகத்திற்குச் செய்ய வேண்டிய சேவையையும் இது உள்ளடக்குகிறது. திருமணநாளில் மணமகனும் மணமகளும் எடுத்துக் கொள்ளும் தீாமானங்கள் இவற்றையே குறிக்கின்றன. அத்துடன் தங்கள் சந்ததி வளாவதற்கு குழந்தைகளைப் பெறுவதும், அவாகளுக்கு வழிகாட்டி முறைப்படி தங்கள் குடும்பப் பெறுமதிகளையும் பண்பாட்டினையும் அவாகள் தொடாந்து பேணுவதை உறுதி செய்வதும் இல்லறத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.

திருமணத்துடன் ஆரம்பமாகும் இல்லறம் ஒருவருக்கு மனித இனத்தை நேசிப்பதற்கான அடிப்படைப் பயிற்சியை வழங்குகிறது. கணவன் மனைவியிடையே ஏற்படும் அன்பு குழந்தைகளில் விரிவடைந்து சமுகம், மனித இனம் என்று விசாலிக்க இல்லறம் உரிய பயிற்சியை வழங்குகிறது. இதனாலேயே இல்லறம் எல்லா தாமங்களுக்கும் அடிப்படையாக அமைகிறது. கணவனுக்கும் மனைவிக்குமிடையே கருத்தொருமித்த நீடித்த அன்பு ஏற்பட்டாலேயே இவையனைத்தும் சாத்தியமாகும்.

இதனாலேயே இந்து சமயத்தில் திருமணம் என்பது வாழ்வின் முக்கிய கட்டமாகக் கருதப்பட்டது, இன்றும் கருதப்படுகிறது. அதன் காரணமாகவே அந்த உறவு மிக நீண்ட கால உறவாகக் கருதப்பட்டு வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதற்குப் பல முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நினைத்தவுடன் வந்து நினைத்தவுடன் பிரிந்து போகக்கூடிய உறவாக அது கருதப்படவில்லை. அது நிரந்தரமானதாக, அதே சமயம் சுமுகமாக ஒருவரை ஒருவா நன்கு புரிந்து, ஒருவருக்கொருவா விட்டுக் கொடுத்து, அன்புடன் வாழக்கூடிய ஒன்றாகக் கருதப்பட்டது. திருமணம் என்பது இரு மனங்களை மட்டுமன்றி இரு குடும்பங்களை ஒன்றுபடுத்தக்கூடிய வகையில் அமைவதால் அதன் உறுதிப்பாடு நன்கு நிலை நிறுத்தப்படுகிறது.



திருமணமாம் திருமணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 5:53 pm

திருமணமாம் திருமணம் 677196 தற்க்காலத்தில் வெளிநாட்டில் எம்மவர் மத்தியில் சாதி மதம் இல்லை அங்கங்கே ஒரு சிலர் இருக்க கூடும் அதை விட்டு தள்ளுவோம்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Sep 17, 2009 7:59 pm

சாதி???? மதம்??????? திருமணமாம் திருமணம் Icon_mad திருமணமாம் திருமணம் Icon_eek apdina ena??

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 8:34 pm

நீங்கள் இந்தியாவா ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Sep 17, 2009 10:47 pm

புன்னகைதிருமணமாம் திருமணம் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக