புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
Page 1 of 7 •
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
காதல் சுரங்கம் குறுந்தொகை
காதல் உங்களை கடக்கவில்லை என்றாலும், காதலை நீங்கள் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததுக்கான அர்த்தம் குறைவு. காதல் என்ற சொல் காதுக்கு இனிமையானது, பலரின் வாழ்க்கையில் கசப்பானது. காதல் என்ற சொல்லின் இருந்து தான் கவிதை, காவியம், கருணை, கல்யாணம், கலவி, காமம், கவலை, கண்ணீர், கைகலப்பு, கல்லறை என்ற சொல்லுக்கு வழி செல்கிறது. காதல் உச்சரிக்க, உணர சுகமானது, ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது.
காதல் இல்லை என்றால் இன்றைய சினிமாவில் டூயட் பாடல்களோ, சோகப் பாடல்களோ இடம் பெறாது. சிறகுகள் இல்லாமல் நம்மை பறக்கச் செய்வது, காயமோ, வெட்டோ இல்லாமல் வலிக்கச் செய்வது.
குறுந்தொகையின் சிறப்பு:
தமிழில் காதல் பற்றி கூறும் நூல்கள் ஏராளம். பதினெண் மேல் கணக்கு நூல்களுள் அகப் பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. அப்படி உள்ள பாடல்களில் காதலின் பல்வேறு கூறுகளை பற்றி கூறும் சிறப்பான தொகுப்பு (தொகை) நூல் குறுந்தொகை ஆகும். குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களை கொண்டு இருப்பதால் குறுந்தொகை என்று அழைக்கப் படுகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சுமார் இருநூறு புலவர்களால் பாடப் பெற்ற நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலாகும்.
காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், காதலில் துன்பப்பட்டவர்கள், காதல் கவிதை எழுதுவோர் என்று அனைவருக்கும் இதில் பாடல்கள் உள்ளது.
புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.
தமிழின் சிறப்பு
மற்ற மொழிகளில் இல்லாத ஒரு பெரும் சிறப்பு தமிழில் காணப்படும் திணை இலக்கணமும், அதற்குரிய பாடல் அமைப்பும் தான், பொதுவாக எல்லா மொழிகளும் கூறும் காலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று கூறுகள் தான். இடம், காலம், நேரம் பொறுத்து மாறுவது மனித மனதின் குணமாகும். நன்றாக குளிர் உள்ள இடத்தில், பனிக்காலத்தில் இருக்கும் காதல் நெருக்கம், வறண்ட நிலத்தில், வேனிர் காலத்தில் இருப்பதில்லை. இப்படி உள்ள இடம், சூழ்நிலை, காலம், நேரம் ஆகியவைகளை பிரித்து ஐந்திணை இலக்கணமாக கூறுவது தமிழில் உள்ள தனிப் பெரும் சிறப்பாகும். மேலும் மறை பொருள் அல்லது இறைச்சி என்று கூறப்படும் உள்ளார்ந்த அர்த்தமும், ஆழ்ந்த கருத்துகளும் அகப்பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.
குறுந்தொகையை ரசிப்பதற்கு முன்னர் இந்த ஐந்திணை என்றால் என்ன, அவற்றின் உட்கூறுகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
வளரும்.........
[You must be registered and logged in to see this image.]
காதல் உங்களை கடக்கவில்லை என்றாலும், காதலை நீங்கள் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததுக்கான அர்த்தம் குறைவு. காதல் என்ற சொல் காதுக்கு இனிமையானது, பலரின் வாழ்க்கையில் கசப்பானது. காதல் என்ற சொல்லின் இருந்து தான் கவிதை, காவியம், கருணை, கல்யாணம், கலவி, காமம், கவலை, கண்ணீர், கைகலப்பு, கல்லறை என்ற சொல்லுக்கு வழி செல்கிறது. காதல் உச்சரிக்க, உணர சுகமானது, ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது.
காதல் இல்லை என்றால் இன்றைய சினிமாவில் டூயட் பாடல்களோ, சோகப் பாடல்களோ இடம் பெறாது. சிறகுகள் இல்லாமல் நம்மை பறக்கச் செய்வது, காயமோ, வெட்டோ இல்லாமல் வலிக்கச் செய்வது.
குறுந்தொகையின் சிறப்பு:
தமிழில் காதல் பற்றி கூறும் நூல்கள் ஏராளம். பதினெண் மேல் கணக்கு நூல்களுள் அகப் பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. அப்படி உள்ள பாடல்களில் காதலின் பல்வேறு கூறுகளை பற்றி கூறும் சிறப்பான தொகுப்பு (தொகை) நூல் குறுந்தொகை ஆகும். குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களை கொண்டு இருப்பதால் குறுந்தொகை என்று அழைக்கப் படுகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சுமார் இருநூறு புலவர்களால் பாடப் பெற்ற நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலாகும்.
காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், காதலில் துன்பப்பட்டவர்கள், காதல் கவிதை எழுதுவோர் என்று அனைவருக்கும் இதில் பாடல்கள் உள்ளது.
புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.
தமிழின் சிறப்பு
மற்ற மொழிகளில் இல்லாத ஒரு பெரும் சிறப்பு தமிழில் காணப்படும் திணை இலக்கணமும், அதற்குரிய பாடல் அமைப்பும் தான், பொதுவாக எல்லா மொழிகளும் கூறும் காலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று கூறுகள் தான். இடம், காலம், நேரம் பொறுத்து மாறுவது மனித மனதின் குணமாகும். நன்றாக குளிர் உள்ள இடத்தில், பனிக்காலத்தில் இருக்கும் காதல் நெருக்கம், வறண்ட நிலத்தில், வேனிர் காலத்தில் இருப்பதில்லை. இப்படி உள்ள இடம், சூழ்நிலை, காலம், நேரம் ஆகியவைகளை பிரித்து ஐந்திணை இலக்கணமாக கூறுவது தமிழில் உள்ள தனிப் பெரும் சிறப்பாகும். மேலும் மறை பொருள் அல்லது இறைச்சி என்று கூறப்படும் உள்ளார்ந்த அர்த்தமும், ஆழ்ந்த கருத்துகளும் அகப்பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.
குறுந்தொகையை ரசிப்பதற்கு முன்னர் இந்த ஐந்திணை என்றால் என்ன, அவற்றின் உட்கூறுகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
வளரும்.........
[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தொடருங்கள் சதா அண்ணா.
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
அருமை...
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஐந்திணை இலக்கணம்:
தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் (ஒருதலை காதல்) காதல் முதலாக பெருந்திணை என்னும் பொருந்தாத காதல் வரை காதல் உணர்வுகள் 7 வகையாக பிரிக்கப் பட்டுள்ளது. இவற்றில் குறிஞ்சி முதல் பாலை வரை கூறும் ஐந்திணை உணர்வுகள் தான் அகப் பாடல்களில் பெரும்பாலும் காணப்படுகின்றது. ஒரு சில அசைவ காதல் பாடல்களும் அகப் பாடல்களில் இலைமறைகாயாய் அமைந்துள்ளது.
இன்றைய சினிமா காதல் பாடல்கள் பெரும்பாலும் மானே, தேனே, கண்ணே, மணியே, உன்னுயிர் என்னுயிர் என்று ஒரே விஷயத்தை வெவ்வேறு வார்த்தைகளில் அமைக்கப் படுகிறது. ஆனால் குறுந்தொகை பாடல் ஒவ்வொன்றும் முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை போல் புத்தம் புதிதானது. இப்படி கூறும் பாடல்கள் இலக்கண மரபுகள் மாறாமல் அமைந்து இருப்பது மிக ஆச்சரியமான விஷயம் ஆகும்.
ஐந்திணை பற்றி சற்று விரிவாக காண்போம்.
பாத்திரங்களின் பெயர்கள்
1. தலைவன் : பாடலின் கதாநாயகன்
2. தலைவி : பாடலின் கதாநாயகி
3. பாங்கன் : தலைவனின் தோழன்
4. தோழி : தலைவியின் தோழி
5. செவிலி : தலைவியை வளர்த்தவள்
6. பரத்தையர் : பொது மகளிர்
பெரும் பொழுது
ஒரு ஆண்டின் உள்ள மாதங்களின் கூறுபாடுகள்
1. கார்காலம் : ஆவணி, புரட்டாசி
2. கூதிர் : ஐப்பசி, கார்த்திகை
3. முன்பனி : மார்கழி , தை
4. பின்பனி : மாசி , பங்குனி
5. இளவேனில் : சித்திரை , வைகாசி
6. முதுவேனில் : ஆனி, ஆடி
சிறு பொழுது
ஒரு நாளில் உள்ள உட் கூறுகள்
1. மாலை - 6 மணி முதல் இரவு 10 மணி வரை
2. யாமம் - 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை
3. வைகறை - நள்ளிரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
4. காலை - 6 மணி முதல் பகல் 10 மணி வரை
5. நண்பகல் - 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
6. எற்பாடு - பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை
"புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங்காலை தினைக்குரிய பொருளே" - தொல்காப்பியம்
1. குறிஞ்சித்திணை
நிலம் : மலையும் மலையைச் சார்ந்த இடமும்
சிறுபொழுது : யாமம்
பெரும் பொழுது : கூதிர் , முன் பனி
உரிப்பொருள் : தலைவனும் தலைவியும் கூடி, புணர்ந்து மகிழ்ந்து இருப்பது
2. முல்லைத் திணை
நிலம் : காடும் காட்டைச் சார்ந்த இடமும்
சிறுபொழுது : மாலை
பெரும் பொழுது : கார் காலம்
உரிப்பொருள் : தலைவனும் தலைவியும் ஒருவருக்காக ஒருவர் காத்திருத்தல்
3. மருதத் திணை
நிலம் : வயலும் வயலைச் சார்ந்த இடமும்
சிறுபொழுது : வைக்கறை
பெரும் பொழுது : வருடம் முழுவதும்
உரிப்பொருள் : தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் ஊடல் (சண்டை) இடுதல்
4. நெய்தல் திணை
நிலம் : கடலும் கடலைச் சார்ந்த இடமும்
சிறுபொழுது : எற்பாடு
பெரும் பொழுது : வருடம் முழுவதும்
உரிப்பொருள் : தலைவனும் தலைவியும் ஒருவருக்காக ஒருவர் பதற்றம், கவலை கொள்ளுதல்
5. பாலைத் திணை
நிலம் : வெப்பம் மிகுந்த, நான்கு நிலமும் திரிந்த இடம்
சிறுபொழுது : நண்பகல்
பெரும் பொழுது : வேனில், பின்பனி
உரிப்பொருள் : தலைவனும் தலைவியும் பிரிந்து அதனால் வருந்துதல்
திருவிளையாடல் திரைப்படத்தில் வந்து புகழ் பெற்ற ஒரு குறுந்தொகைப் பாடலை முதலில் காண்போம்.
வளரும் ..............
தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் (ஒருதலை காதல்) காதல் முதலாக பெருந்திணை என்னும் பொருந்தாத காதல் வரை காதல் உணர்வுகள் 7 வகையாக பிரிக்கப் பட்டுள்ளது. இவற்றில் குறிஞ்சி முதல் பாலை வரை கூறும் ஐந்திணை உணர்வுகள் தான் அகப் பாடல்களில் பெரும்பாலும் காணப்படுகின்றது. ஒரு சில அசைவ காதல் பாடல்களும் அகப் பாடல்களில் இலைமறைகாயாய் அமைந்துள்ளது.
இன்றைய சினிமா காதல் பாடல்கள் பெரும்பாலும் மானே, தேனே, கண்ணே, மணியே, உன்னுயிர் என்னுயிர் என்று ஒரே விஷயத்தை வெவ்வேறு வார்த்தைகளில் அமைக்கப் படுகிறது. ஆனால் குறுந்தொகை பாடல் ஒவ்வொன்றும் முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை போல் புத்தம் புதிதானது. இப்படி கூறும் பாடல்கள் இலக்கண மரபுகள் மாறாமல் அமைந்து இருப்பது மிக ஆச்சரியமான விஷயம் ஆகும்.
ஐந்திணை பற்றி சற்று விரிவாக காண்போம்.
பாத்திரங்களின் பெயர்கள்
1. தலைவன் : பாடலின் கதாநாயகன்
2. தலைவி : பாடலின் கதாநாயகி
3. பாங்கன் : தலைவனின் தோழன்
4. தோழி : தலைவியின் தோழி
5. செவிலி : தலைவியை வளர்த்தவள்
6. பரத்தையர் : பொது மகளிர்
பெரும் பொழுது
ஒரு ஆண்டின் உள்ள மாதங்களின் கூறுபாடுகள்
1. கார்காலம் : ஆவணி, புரட்டாசி
2. கூதிர் : ஐப்பசி, கார்த்திகை
3. முன்பனி : மார்கழி , தை
4. பின்பனி : மாசி , பங்குனி
5. இளவேனில் : சித்திரை , வைகாசி
6. முதுவேனில் : ஆனி, ஆடி
சிறு பொழுது
ஒரு நாளில் உள்ள உட் கூறுகள்
1. மாலை - 6 மணி முதல் இரவு 10 மணி வரை
2. யாமம் - 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை
3. வைகறை - நள்ளிரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
4. காலை - 6 மணி முதல் பகல் 10 மணி வரை
5. நண்பகல் - 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
6. எற்பாடு - பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை
"புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங்காலை தினைக்குரிய பொருளே" - தொல்காப்பியம்
1. குறிஞ்சித்திணை
நிலம் : மலையும் மலையைச் சார்ந்த இடமும்
சிறுபொழுது : யாமம்
பெரும் பொழுது : கூதிர் , முன் பனி
உரிப்பொருள் : தலைவனும் தலைவியும் கூடி, புணர்ந்து மகிழ்ந்து இருப்பது
2. முல்லைத் திணை
நிலம் : காடும் காட்டைச் சார்ந்த இடமும்
சிறுபொழுது : மாலை
பெரும் பொழுது : கார் காலம்
உரிப்பொருள் : தலைவனும் தலைவியும் ஒருவருக்காக ஒருவர் காத்திருத்தல்
3. மருதத் திணை
நிலம் : வயலும் வயலைச் சார்ந்த இடமும்
சிறுபொழுது : வைக்கறை
பெரும் பொழுது : வருடம் முழுவதும்
உரிப்பொருள் : தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் ஊடல் (சண்டை) இடுதல்
4. நெய்தல் திணை
நிலம் : கடலும் கடலைச் சார்ந்த இடமும்
சிறுபொழுது : எற்பாடு
பெரும் பொழுது : வருடம் முழுவதும்
உரிப்பொருள் : தலைவனும் தலைவியும் ஒருவருக்காக ஒருவர் பதற்றம், கவலை கொள்ளுதல்
5. பாலைத் திணை
நிலம் : வெப்பம் மிகுந்த, நான்கு நிலமும் திரிந்த இடம்
சிறுபொழுது : நண்பகல்
பெரும் பொழுது : வேனில், பின்பனி
உரிப்பொருள் : தலைவனும் தலைவியும் பிரிந்து அதனால் வருந்துதல்
திருவிளையாடல் திரைப்படத்தில் வந்து புகழ் பெற்ற ஒரு குறுந்தொகைப் பாடலை முதலில் காண்போம்.
வளரும் ..............
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- bala23பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
நல்ல தொடர்..
தொடருங்கள்!
தொடர்கிறோம்....
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
காதலின் குணம்
காதல் வந்தவுடன் ஆண்கள் பேசும் வார்த்தைகளுக்கு அளவே கிடையாது. பெண்களுக்கு இதில் பெரும்பாலும் பொய் என்று தெரிந்திருந்தாலும் அவர்களும் அதை ரசிக்கத்தான் செய்கின்றனர்.
"மெய்தொட்டு பயிரல் பொய் பாராட்டல்" - தொல்காப்பியம் - களவியல்
பெண்களை பாராட்டும் அனைத்து கவிகளும் இந்த நிலையில் ஏற்பட்டவை தான். அப்படி காதல் ததும்பும் நிலையில் எழுதிய பாட்டு இது. மிகப் பிரபலமான பாடல் இது.
திணை - குறிஞ்சி
பாடல் 1 - தலைவியை நோக்கி தலைவன் பாடியது
பாடியவர் - இறையனார்
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழி யீய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே"
பொருள் விளக்கம்:
மலையில் உள்ள பூக்களில் தேனை அருந்தும் உயர்ந்த ஜாதி வண்டே, நீ பொய் கூறாமல் கண்ட உண்மையை சொல்லு. நீ இது வரை கண்ட மலர்களில், மயில் போல் மென்மையான் தேகத்தை உடைய
என் தலைவியின் கூந்தலின் மணத்தை விட மணம் கமழும் பூவும் உண்டோ?
கருந்து: தலைவியின் கூந்தல் மலர்களின் மணத்தை விட நறுமணமாக இருப்பதாக தலைவன் கூறுகிறான்.
திணை விளக்கம் : மலையில் உள்ள வண்டு, மென்மையான் தேகத்தை உணரும் தலைவன், கூந்தலின் மணத்தை நுகரும் தலைவன், (நெருக்கத்தை நீங்கள் ஊகித்து கொள்ளவும்) ஆகியவை தலைவன் தலைவியின் மகிழ்ச்சியை குறிப்பதால் குறுஞ்சி திணை ஆனது.
சரி, காதல் என்றால் என்ன அடுத்த பாடலில் காண்போம்.
காதல் வந்தவுடன் ஆண்கள் பேசும் வார்த்தைகளுக்கு அளவே கிடையாது. பெண்களுக்கு இதில் பெரும்பாலும் பொய் என்று தெரிந்திருந்தாலும் அவர்களும் அதை ரசிக்கத்தான் செய்கின்றனர்.
"மெய்தொட்டு பயிரல் பொய் பாராட்டல்" - தொல்காப்பியம் - களவியல்
பெண்களை பாராட்டும் அனைத்து கவிகளும் இந்த நிலையில் ஏற்பட்டவை தான். அப்படி காதல் ததும்பும் நிலையில் எழுதிய பாட்டு இது. மிகப் பிரபலமான பாடல் இது.
திணை - குறிஞ்சி
பாடல் 1 - தலைவியை நோக்கி தலைவன் பாடியது
பாடியவர் - இறையனார்
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழி யீய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே"
பொருள் விளக்கம்:
மலையில் உள்ள பூக்களில் தேனை அருந்தும் உயர்ந்த ஜாதி வண்டே, நீ பொய் கூறாமல் கண்ட உண்மையை சொல்லு. நீ இது வரை கண்ட மலர்களில், மயில் போல் மென்மையான் தேகத்தை உடைய
என் தலைவியின் கூந்தலின் மணத்தை விட மணம் கமழும் பூவும் உண்டோ?
கருந்து: தலைவியின் கூந்தல் மலர்களின் மணத்தை விட நறுமணமாக இருப்பதாக தலைவன் கூறுகிறான்.
திணை விளக்கம் : மலையில் உள்ள வண்டு, மென்மையான் தேகத்தை உணரும் தலைவன், கூந்தலின் மணத்தை நுகரும் தலைவன், (நெருக்கத்தை நீங்கள் ஊகித்து கொள்ளவும்) ஆகியவை தலைவன் தலைவியின் மகிழ்ச்சியை குறிப்பதால் குறுஞ்சி திணை ஆனது.
சரி, காதல் என்றால் என்ன அடுத்த பாடலில் காண்போம்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
தமிழ் வாழ்க......
நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் பாட புத்தகம் என் கையில் உள்ளது போன்ற உணர்வு
இப்போ என் தமிழ் மிஸ் திருமதி. சரஸ்வதி அவர்கள் நினைவுகள் வருகிறது
நன்றி ஸார்
நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் பாட புத்தகம் என் கையில் உள்ளது போன்ற உணர்வு
இப்போ என் தமிழ் மிஸ் திருமதி. சரஸ்வதி அவர்கள் நினைவுகள் வருகிறது
நன்றி ஸார்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
எனக்கும் என் தமிழ் ஆசிரியர் திரு.மாணிக்கம் அவர்களின் நினைவு வந்து விட்டது.
தமிழ் மொழியின் மேல், பாடல்கள் மீது மிகுந்த பற்று உள்ளவர்.தன் குழந்தைகளுக்கும் தமிழ் புலவர்களின் பெயரையே வைத்துள்ளார்.
எனக்கும் மொழியின் மேல் பற்று வர அவரும் ஒரு முதன்மைக் காரணம்.
தமிழ் மொழியின் மேல், பாடல்கள் மீது மிகுந்த பற்று உள்ளவர்.தன் குழந்தைகளுக்கும் தமிழ் புலவர்களின் பெயரையே வைத்துள்ளார்.
எனக்கும் மொழியின் மேல் பற்று வர அவரும் ஒரு முதன்மைக் காரணம்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
...சொல்ல சொல்ல..
...கேட்க கேட்க...
...இனிக்கும் மொழி..
....நம் தமிழ்...
...நன்றி நண்பரே....
...கேட்க கேட்க...
...இனிக்கும் மொழி..
....நம் தமிழ்...
...நன்றி நண்பரே....
- Sponsored content
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 7
|
|