புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_m10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10 
32 Posts - 51%
heezulia
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_m10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_m10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_m10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10 
74 Posts - 57%
heezulia
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_m10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_m10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_m10திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில்


   
   
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 10, 2011 12:56 pm

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்க்கும்,

புத்திர பாக்கியம் அருளும் திருத்தலம்


திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Thirubuvanam


தல இருப்பிடமும், கோயில் அமைப்பும்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருபுவன வீரபுரம் என்று ஆதி காலத்தில் அழைக்கப்பட்ட " திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில். வில்வவனம், திரிபுரவனம், தேஷேத்திரம், நிம்பாண்டியஷேத்திரம் என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உரியனவையே. முதற் கோபுரமாகிய திருத்தோரண வாயில், இரண்டாம் கோபுரமாகிய திருமாளிகைத் திருவாயில் மற்றும் அர்த்தத் திருவாயில் என மூன்று திருவாயில்களை கொண்டுள்ளது இத் திருக்கோயில்.

முதற் கோபுரம் ஏழு நிலைகளுடனும், இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளுடனும் காணப்படுகின்றது. இரு பிரகாரங்களை கொண்டுள்ள இத் திருக்கோயிலில், முதற் பிரகாரத்தின் மத்தியில் அமைந்துள்ளது "நடுக்கந்தீர்த்த பெருமான்" ஆலயம். இதன் விமானம் தஞ்சை பெரிய கோயிலையும், கங்கை கொண்ட சோழபுரத்தினையும் ஒத்ததை போல் அமைந்துள்ளது. முதற் பிரகாரத்தின் வட பகுதியில் அம்பாள் சந்நதியும், கீழ்ப் புறம் சரபேஸ்வரர் சந்நதியும் அமைந்துள்ளன. மூலவர் ஸ்ரீகம்பகரேஸ்வரர். தமிழில் நடுக்கந்தீர்த்த பெருமான் என்று அழைக்கபடுகின்றார். அம்பாள் தர்மசம்வர்த்தினி. தமிழில் அறம் வளர்த்த நாயகி.

பிரகலாதன் மற்றும் தேவர்களின் கம்பத்தினை ( நடுக்கத்தினை ) தீர்த்ததால் பெருமான் இப் பெயர் கொண்டார். இரணியனது குருதியை பருகிய நரசிம்மம் மதி மயங்கி ஆக்ரோஷம் கொண்ட வேளை, இத் தல மூர்த்தி சரபப் பறவை உரு கொண்டு நரசிம்மத்தினை சாந்தமடைய செய்ததால் சரபேஸ்வரர் என்ற திருநாமத்துடன் தனிக் கோயில் கொண்டு இத் திருத்தலத்தில் அருள் பாலிக்கின்றார்.

வில்வம் தல விருட்சம். சரப தீர்த்தம், தேவ தீர்த்தம், ஞான தீர்த்தம், வியாச தீர்த்தம், பிருகு தீர்த்தம் மற்றும் சித்த தீர்த்தம் என ஆறு தீர்த்தங்கள் உள்ளன. விஷ்ணு, லஷ்மி தேவி, வருணன், நாரதர், ராஜராஜன், வரகுண பாண்டியன் போன்றோர் வழிபட்ட திருத்தலம் இது. இங்குள்ள வசந்த மண்டபம் அழகிய வேலைப்படுடன் காணப்படுகின்றது. நாற்புறமும் கருங்கற்களாலான சக்கரங்களை கொண்டு ஒரு ரதத்தை போன்று காட்சி தருகிறது.

ஆலயத்தின் சிற்பங்கள் யாவும் மிக அழகிய வேலைப்படுகளை கொண்டவை. சரபர் சந்நதியில் உள்ள பூதேவி, ஸ்ரீதேவி சிலைகளும், சோமஸ்கந்தர் மண்டபத்தின் பரத நாட்டிய பாவங்களும் மிக அற்புதமானவை. கர்ப்பகிரக விமானம் முழுவதும் கருங்கல்லினால் ஆனது. அதில் உள்ள சிற்பங்களும் கருங்கற்களே.

எட்டு கால்கள், நீண்ட வால், இரண்டு சிங்க முகங்கள், இரண்டு இறக்கைகள் கொண்டு பெரும் கோபத்துடன், ஆராவாரத்துடனும் நரசிம்மத்தின் எதிரில் தோன்றி, அசுரனின் ரத்தம் குடித்து மிகச் செருக்குடன் வந்த நரசிம்மத்தின் ஆவி அடங்கும்படி செய்த, பகைவர் குலத்தை அழிக்கும் சரப மூர்த்தி.

திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் 14


பிரகலாதனும், சரபமூர்த்தியும்

இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும் தவத்தின் பயனாக பரமனிடம் இருந்து, " தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக் கூடாது " என்ற அரிய வரத்தினை பெற்றான். தன்னை எதிர்ப்பார் யாரும் இன்றி தானே கடவுள் எனக் கூறிக் கொண்டு, தன்னையே கடவுளாக வணங்க வேண்டும், மற்ற யாரையும் தெய்வமாக தொழக்கூடாதெனக் கூறி கொடுமையான ஆட்சி புரிந்து வந்தான்.

அவனுக்கு பிறந்த மகன் பிரகலாதன். தன் தாயின் வயிற்றில் இருக்கும் வேளையிலேயே நாரத முனிவர் மூலம் திருமால் உபன்யாசம் கேட்டு சிறந்ததொரு பரந்தாமன் பக்தனாய் பிறந்தான். எந்நேரமும் நாராயணன் நாமம் சொல்லி வளர்ந்தான். இதனை கண்ட இரணியன் கடும் கோபம் கொண்டான். எவ்வளவு சொல்லியும் தன் நாமம் சொல்லாத பிரகலாதனை, தன் மகன் என்றும் பாராமல் பல வழிகளில் அழித்திட முயன்றான். பரந்தாமனின் அருளால் அனைத்திலிருந்தும் தப்பிய பிரகலாதனை நோக்கி "எங்கெ உன் நாராயணன்?" எனக் கேட்க, பிரகலாதணோ " என் நாராயணன் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் " என்று கூறினான். கோபம் கொண்ட இரணியன் அருகில் இருந்த தூணை தன் கதை கொண்டு தாக்க, அதிலிருந்து நரசிம்ம உரு கொண்டு வெளிப்பட்டார் பரந்தாமன்.

இரணியனது வரத்தின் படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலொ இல்லாத அந்தி நேரத்தி, எவ்வித ஆயுதங்களுமின்றி தன் நகத்தினை கொண்டு, வீட்டின் உள்ளும் இல்லாது வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார். அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார். நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார். இவ்வாறு பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் இவர் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார்.

சரபரும், வழிபாடும்


நன்னா லிரண்டு திருவடியும் நனி நீள் வாலும் முகம் இரண்டம்

கொன்னார் சிறகும் உருத்திரமும் கொடும் பேரார்ப்பும் எதிர் தொற்றிச்

செந்நீர் பருகிச் செருக்கு நரமடங்கல் ஆவி செதுக்குரி கொண்டு

ஒன்னார் குலங்கள் முழுதழிக்கும் உடையான சரபத் திருவுருவம்



எட்டு கால்கள், நீண்ட வால், இரண்டு சிங்க முகங்கள், இரண்டு இறக்கைகள் கொண்டு பெரும் கோபத்துடன், ஆராவாரத்துடனும் நரசிம்மத்தின் எதிரில் தோன்றி, அசுரனின் ரத்தம் குடித்து மிகச் செருக்குடன் வந்த நரசிம்மத்தின் ஆவி அடங்கும்படி செய்த, பகைவர் குலத்தை அழிக்கும் சரப மூர்த்தி.

சரபம் என்ற சொல்லுக்கு எட்டு கால்களை கொண்ட பறவை, இரண்டு தலைகளை கொண்ட வடிவம் எனப் பொருள். பட்சிகளின் அரசன். சிங்கத்தையே வெல்லும் ஆற்றல் கொண்டது சரபம். இத்திருவடிவம் "சிம்மக்ன மூர்த்தி", "சிம்ஹாரி", நரசிம்ம சம்ஹாரர்" என்றும் அழைக்கபடுகின்றது. பறவை போன்ற பொன்னிறம், இரு இறக்கைகள், சிவப்பேறிய கண்கள் இரண்டு, கூரிய நகங்களுடன் கூடிய சிங்கத்தை போன்ற கால்கள் நான்கு. மனித உடல். கிரீடம் தரித்த சிங்க முகம். தந்தங்களை போன்ற கோரைப் பற்கள் என பயங்கர உருவமே சரபர் என்கின்றது காமிகாமகம்.

இம் மூர்த்தியை "அகாச பைரவர்" என்கின்றது உத்திர காமிகாமகம். சூரியன், சந்திரன் மற்றும் அக்னியே சரபரின் மூன்று கண்கள். பிரத்யங்கரா எனும் காளியும், துர்க்கையுமே இறக்கைகள். இந்திரனே நகங்கள். காலனே தொடைகள். சரபர் வழிபாடு சத்ருக்களை அழித்திடும். தீரா பிணிகள், குழந்தைப் பேறு, பில்லி சூனிய தொல்லைகள் போன்றவற்றிற்கு நிவர்த்தி. சரப மூல மந்திரத்தினை 100 அலது 1000 முறை ஜெபித்து, அபிஷேக ஆராதனைகள் செய்தால் வாதம், சூலை போன்ற கொடிய நோய்கள் தீரும். மலட்டுத் தன்மை நீங்கும். சரப காயத்ரி மந்திரம் ஜெபிப்பது பாம்புகளிடமிருந்து காத்திடும்

நன்றி : kumbakonamtourism


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 12:59 pm

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்க்கும்,

புத்திர பாக்கியம் அருளும் திருத்தலம்




இத்திருத்தலத்தைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் 677196 திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 1:02 pm

ஸ்தள வரலாறு அருமை சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 10, 2011 1:44 pm

நன்றிகள் கிச்சா நன்றி

நன்றிகள் பாலா கார்த்திக் நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக