புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_m10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_m10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_m10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10 
3 Posts - 6%
prajai
குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_m10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10 
2 Posts - 4%
Baarushree
குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_m10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10 
2 Posts - 4%
viyasan
குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_m10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10 
1 Post - 2%
Rutu
குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_m10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10 
1 Post - 2%
சிவா
குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_m10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_m10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_m10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10 
2 Posts - 15%
Rutu
குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_m10குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்;


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 10, 2011 7:15 pm

சென்னை, செப். 10-


சட்டசபையில் இன்று முதல் - அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

உண்டி
கொடுத்து, உயிர் கொடுக்கும் உழவுத்தொழிலே உலகத்தின் உன்னதத் தொழில் என்பதை
இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி விவசாயி!

முன்னேற்றப் பாதையிலே
மனதை வைத்து முழு மூச்சாய் அதற்காகத் தினம் உழைத்து மண்ணிலே
முத்தெடுத்துப் பிறர்வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி என்று இதய தெய்வம்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடியபடி, நீரிலே முத்தெடுக்காமல் நிலத்திலே
முத்தெடுத்து ஊருக்கு உணவூட்டும் உன்னதத் தொழிலாளி தான் விவசாயி.

பயிர்
வளர்த்து, உயிர் வளர்க்கும் விவசாயப் பெருமக்களின் வாழ்வு வளம் பெற எனது
தலைமையிலான அரசு பல முன்னோடித் திட்டங்களைத் தீட்டி செயல் படுத்தி
வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும்,
சிறு / குறு விவசாயிகளுக்கும், வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பு அளிக்கும்
பொருட்டு, கருவறை முதல் கல்லறை வரை பயன் அளிக்கக் கூடிய தமிழக
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்ற சமூகப் பாதுகாப்புத்
திட்டம், எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், 15.8.2005 முதல் நடை
முறைப்படுத்தப்பட்டது. ஆனால், அதன் பின்னர், 2006 ஆம் ஆண்டு, முந்தைய
மைனாரிட்டி தி.மு.க. அரசு, இந்தத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு
விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்)
சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றியது. இந்த நிலையில், இந்தத் திட்டத்தின்
கீழ், ஏதாவது ஒரு இனத்தின் கீழ் உதவித் தொகையின் அளவு மாற்றம் செய்யப்பட
வேண்டும் என்றால் கூட, சட்டமன்றத்தைக் கூட்டி, இந்தச் சட்டத்திற்கு
திருத்தம் கொண்டு வந்தாக வேண்டும்.

இவ்வாறு, 2006
ஆம் ஆண்டு தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் (சமூகப்
பாதுகாப்பு மற்றும் நலம்) சட்டம் நடைமுறைச் சிக் கல்கள் நிறைந்ததாக
இருந்ததால், அந்தச் சட்டத்தை ரத்து செய்வதற்காக, 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு
விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் (சமூகப் பாது காப்பு மற்றும் நலம்)
நீக்கச் சட்டம் இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆளு
நரின் ஒப்புதல் பெறப்பட்டு, இதற்கான அரசு அறிவிக்கை 27.8.2011 நாளிட்ட
தமிழ் நாடு அரசிதழில் வெளி யிடப்பட்டது. தமிழ்நாட்டில், விவசாயத்
தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும்
அவர்களது குடும்பத் தினருக்கு வாழ்நாள் முழு வதும் உறுதுணையாக இருக்கும்
வகையில், புதிய, விரிவுபடுத்தப்பட்ட, சமூக பாதுகாப்புத் திட்டம் ஒன்றை எனது
தலைமையிலான அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புதிய திட்டம்
Òமுதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்று அழைக்கப்படும். இந்தத்
திட்டத்தின் கீழ், (அ) 2.5 ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலம் அல்லது 5
ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலம் முதலிய வற்றை உடமையாகக் கொண்டு, அந்த
நிலத்தில் நேரடியாக பயிர் செய்யும், 18 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்ட
குறு மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் (ஆ) விவசாயம் சார்ந்த தொழிலில்
ஊதியத்திற் காகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 முதல் 65
வயது வரை உள்ள அனைத்து விவசாய குத்தகைதாரர்கள் / தொழிலாளர்கள் மற்றும் (இ)
இவர்களைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் பயன் அடைவர்.

இத்திட்டத்தின்
கீழ், ஒரு குடும்பத்தில், விவசாயத் தொழிலில் ஈடுபடும் கணவன் மற்றும் மனைவி
இருவருக்கும் பண்பேறிய சிவப்பு வண்ணத்திலும், அவர்களைச் சார்ந்து வாழும்
பிற குடும்ப உறுப்பினர்களுக்கு சாம்பல் நிறத்திலும் அடையாள அட்டைகள்
வழங்கப்படும். இவ்வாறு அடையாள அட்டை பெறுபவர்கள் அனைவரும் அரசின் திட்ட
உதவிகளைப் பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

இதுவரை
குடும்பத் தலைவருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்த நிலை மாறி
இந்தப் புதிய உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் குடும்ப உறுப்பினர் ஒவ்
வொருவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படுவதால், எவ்வித விடுபடுதலும் இன்றி,
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் திட்ட உதவிகளைப் பெற வழிவகை ஏற்படும்.
விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள்
கல்லூரிக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில், இவர்கள்
வேறு எந்த கல்வி உதவித் திட்டத்தின் கீழ் உதவி பெற்றாலும், இந்தத்
திட்டத்தின் கீழும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு வழி வகை
செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கு கீழ்க்கண்ட வாறு உதவித் தொகைகள் வழங்கப்படும்:-

*
தொழிற்பயிற்சி நிறு வனம் (ஐ.டி.ஐ.), பல்தொழில் நுட்ப பயிற்சி நிறுவனம்
(பாலிடெக்னிக்) மற்றும் இதர பட்டயப் படிப்புகளுக்கு 1,250 ரூபாய் முதல்
1,950 ரூபாய் வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

* இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு 1,750 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

* முதுகலை பட்டப் படிப்புகளுக்கு 2,250 ரூபாய் முதல் 3,750 ரூபாய் வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

*
சட்டம், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை அறிவியல் போன்ற
தொழிற்கல்வி படிப்புகளுக்கு இளங்கலையில் 2,250 ரூபாய் முதல் 4,750 ரூபாய்
வரையிலும், முதுகலையில் 4,250 ரூபாய் முதல் 6,750 ரூபாய் வரையிலும் ஆண்டு
ஒன்றுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

2006
ஆம் ஆண்டு, முந்தைய தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்தில், வேறு
ஏதேனும் மத்திய அல்லது மாநில அரசு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை
பெறப்பட்டால், இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற முடியாது
என்ற நிலைமை தற்போது மாற்றப்பட்டு, வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்
தொகை பெற்றாலும், இந்தத் திட்டத்திலும் கல்வி உதவித் தொகை பெற இயலும்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூகநலத்
துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திருமண உதவி திட்டத்தின் கீழ் உதவித்
தொகை பெற தகுதி உள்ளவர்கள் அத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவர்.
அவ்வாறு திருமண உதவி திட்டங்களின் கீழ் உதவித் தொகை பெற இயலாதவர்களுக்கு
இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்
கீழ் திருமண உதவித் தொகையாக, ஆணுக்கு 8,000 ரூபாயும், பெண்ணுக்கு 10,000
ரூபாயும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பதிவு
பெற்ற உறுப்பினருக்கு சுகா தாரம் மற்றும் குடும்ப நலத் துறையால் மகப்பேறு
உதவிக்கென செயல் படுத்தப்படும் திட்டத்தின் மூலம் இந்த உதவித் தொகை
வழங்கப்படும். மகப்பேறு உதவித் தொகையினை எளிதாகப் பெறும் வகையில் தனி
வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மூலம் தேவையான சான்றிதழ்களை
ஒருமுகப் படுத்தி வழங்க இத்திட்டத்தின் கீழ் வசதிகள் செய்து தரப்படும்.
60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள்
மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாய் ஓய்வூதியமாகப் பெறுவர்.

முந்தைய
தி.மு.க. அரசால் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், இயற்கை மரணம் மற்றும்
விபத்து போன்ற நிகழ்வுகளில் குடும்பத் தலைவருக்கு பாதிப்பு ஏற் பட்டால்
மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது. அது தற்போது மாற்றப்பட்டு, ஒரு
குடும்பத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள
நிலையில், இவர்கள் இருவருக்கும் தனித் தனியே அடையாள அட்டைகள்
வழங்கப்படுவதால், இந்த இருவரில் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் நிவாரணம்
வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் உறுப்பினரோ
அல்லது அவரைச் சார்ந்தவரோ இறக்க நேரிட்டால், அந்தக் குடும்பத்திற்கு ஈமச்
சடங்கிற்கான உதவித் தொகை உடனடியாக வழங்கப்படும். ஈமச் சடங்கு நிவாரணம் பெற
இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படுவதுடன்,
குடும்பத் தலைவர் இறந்தால் மட்டுமே ஈமச் சடங்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற
நிபந்தனையும் தற்போது மாற்றப்பட்டுள்ளது என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மாவட்ட அளவில் ஆட்சித் தலைவர்கள்
மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மூலமாக செயல்படுத்தப்படும். திட்டச்
செயல்பாட்டினை மேற்பார்வை இடுவதற்கு அரசு அளவில் ஒரு உயர்நிலைக் குழு
அமைக்கப்படும். முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்ற இந்த
விரிவுபடுத்தப்பட்ட புதிய திட்டம், தமிழக விவசாயிகள் மற்றும் விவசாயத்
தொழிலாளர்கள் ஆகியோருக்கு மிகுந்த பயன் அளிக்கக் கூடிய திட்டமாக இருக்கும்
என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்; Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக