புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூ வாசம்  Poll_c10பூ வாசம்  Poll_m10பூ வாசம்  Poll_c10 
30 Posts - 50%
heezulia
பூ வாசம்  Poll_c10பூ வாசம்  Poll_m10பூ வாசம்  Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
பூ வாசம்  Poll_c10பூ வாசம்  Poll_m10பூ வாசம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூ வாசம்  Poll_c10பூ வாசம்  Poll_m10பூ வாசம்  Poll_c10 
72 Posts - 57%
heezulia
பூ வாசம்  Poll_c10பூ வாசம்  Poll_m10பூ வாசம்  Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
பூ வாசம்  Poll_c10பூ வாசம்  Poll_m10பூ வாசம்  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பூ வாசம்  Poll_c10பூ வாசம்  Poll_m10பூ வாசம்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூ வாசம்


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 24, 2011 2:01 pm

கட்டி மல்லிகையும், கனகாம்பரமும் வாங்கி, மகளுக்கு ரெட்டைப்பின்னலில்
வைத்துவிட்டு, தன்பக்கம் திருப்பி முத்தமிட்டுவிட்டு, அவளுக்கு
நெட்டிமுறித்தாள் கற்பகம். அப்பாவின் சாயலும் அம்மாவின் நிறமுமாய்த்
துறுதுறுவென்று நின்ற மகளைப் பார்க்கையில் பெருமிதம் தாங்கவில்லை அவளுக்கு.

"வெளையாடப்
போகணும், விடும்மா..." என்றபடி,அம்மாவின் அணைப்பிலிருந்து விடுபட்டு
வாசலுக்கு ஓடினாள் எட்டுவயது அமுதா.மிச்சப்பூவிலிருந்து ரெண்டு கண்ணியைத்
தன் தலையில் வைத்துக்கொண்டு, அடுப்படிக்குள் நுழைந்தாள் கற்பகம்.

வாசலில்
பைக் சத்தம் கேட்க, வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான் கற்பகத்தின்
கணவன் செந்தில். கணவனுக்கு சூடாகக் காப்பியை ஆற்றிக்கொண்டே வந்தவள், மகனின்
குரல் கேட்கவே வாசலை எட்டிப்பார்த்தாள்.

"அம்மா, இவளை ஏன் வெளிய
விளையாட அனுப்பினே? அங்கவந்து தலைவலிக்குதுன்னு அப்பவேருந்து
அழுதுகிட்டிருக்கா..." என்றபடி தங்கையைக்கொண்டுவந்து விட்டுவிட்டு,
திரும்பவும் விளையாட ஓடினான் அருண், அமுதாவின் அண்ணன்.

தலையைப்பிடித்தபடி வந்து கட்டிலில் விழுந்தாள் அமுதா.
"என்னம்மா,
எங்கியாவது விழுந்திட்டியா? கிரிக்கெட் விளையாடும்போது பந்துகிந்து
பட்டுருச்சா"ன்னு பதறிப்போனாள் கற்பகம்."ஒண்ணும் அடிபடலம்மா. சும்மாதான்
வலிக்குது...ஆனா, ரொம்ப வலிக்குது" என்று அழுதபடியே சொன்னாள் அமுதா.

"வெளையாடப்போற
புள்ளைக்கு ஏண்டி இத்தனை அலங்காரம் பண்ணி அனுப்புறே? யாரு கண்ணுபட்டுச்சோ?
முதல்ல புள்ளைக்கு சூடம் சுத்திப்போடு" என்றபடி மகளைத்தூக்கி மடியில்
இருத்திக்கொண்டான் செந்தில். ஒண்ணும் இல்லம்மா சரியாயிடும் என்ற தகப்பனின்
அணைப்பிலிருந்தும் தலைவலி அதிகரிக்க, அப்பா, இந்தப் பூவைக்
கழட்டச்சொல்லுங்கப்பா என்று அழுதாள் அமுதா. "எத்தனை ஹேர்ப்பின் மாட்டி
வச்சிருக்கா பாரு. இதுவே புள்ளைக்குத் தலைவலிக்கும் என்றபடி, வந்து
சீக்கிரம் இந்தப்பூவைக் கழற்றிவிடு நீ" என்றான் மனைவியிடம்.

வாசலில்
சூடத்தைக்கொளுத்திவிட்டுவந்து பூவைக் கழற்றியபடி, "எதுக்கும் டாக்டர்கிட்ட
கூட்டிப்போய்ட்டு வந்திருவோமா?" என்றாள் கற்பகம். "புள்ளைக்கு முதல்ல சூடா
ஏதாவது குடிக்கக்குடு. கொஞ்ச நேரம் கழிச்சுப் பாப்போம்" என்றபடி, மகளை
மடியில் படுக்கவைத்துக்கொண்டு, தலையை மெதுவாக அழுத்திக்கொடுத்தான்
செந்தில்.

கொஞ்ச நேரத்தில் எழுந்துகொண்டு, தலைவலி சரியாயிருச்சுப்பா
என்றபடி,விட்ட விளையாட்டைத் தொடர வெளியே ஓடினாள் அமுதா.
நிம்மதிப்பெருமூச்சோடு, "அப்பா பக்கத்தில இருந்தா மகளுக்கு எல்லாம் உடனே
சரியாயிடும்" என்றபடி கணவனைப் பார்த்துச் சிரித்தாள் கற்பகம்.பெருமிதம்
நிறைந்திருந்த தன் கணவனின் முகத்தை ரசித்தாள்.

அதுக்கப்புறம்,
நல்லநாள், விசேஷம்னு வந்து ஆசையா அலங்கரிச்சுக்கிறதும், அன்னிக்கு உடம்பு
முடியாம படுத்துக்கிறதும் அமுதாவுக்கு வாடிக்கையாகிப்போனது.
கல்லூரிக்குப்போனபின்தான் ஒருநாள் காரணம் புரிந்தது அவளுக்கு. பக்கத்தில்
இருந்த பாமா வச்சிருந்த மல்லிப்பூ, அவளுக்குள் அதே அசௌகரியத்தை ஏற்படுத்த,
அம்மாவிடம் வந்து சொன்னாள்.

"பூ வாசமெல்லாம் பிடிக்காம போகாது. நீயா
இப்படி எதையாவது மனசில நினைச்சுக்காத. அப்புறம் அதுவே உனக்கு ஒரு
காரணமாப்போயிரும் என்றபடி, பொண்ணுன்னா பூவச்சாதாண்டி அழகே..." என்றாள்
கற்பகம்.

ஆனால், மெல்லமெல்லப் பூவைத் தவிர்த்தாள் அமுதா.
பக்கத்தில் யாராவது பூவச்சவங்க உட்காந்தாகூட, தானா பூக்கிற பூவை இப்படித்
தலையில வச்சு, அதுக்குத் தூக்குத்தண்டனை குடுக்கிறீங்களே என்று
கடிந்துகொள்ளுவாள். எப்போதாவது அம்மா பிடிவாதம்பிடித்தால், கொஞ்சமாய்க்
கனகாம்பரம் வைத்துக்கொண்டாள்.

கல்யாணத்தன்று, அவள் தலைநிறைய வச்ச
பூவே அவளுக்கு பிரச்சனையை உண்டாக்கியது. "வந்த அன்னிக்கே ஏன் இப்படி
முகம்வாடிப்போயிருக்கே..." என்றபடி, இன்னும் கொஞ்சம் பூவை வைத்து
அலங்கரித்து, அவளை அறைக்குள் அனுப்பிவைத்தார்கள்.

அவள் சொன்ன காரணம் அவள் கணவனுக்குத் திருப்தியாயில்லாமல்போக,
"இந்தக்
கல்யாணத்தில உனக்கு இஷ்டமில்லையா அமுதா" என்றான் அவன்."ஐய்யையோ,
அப்படியெல்லாம் இல்லைங்க" என்று அவசரமாக மறுத்தவள்,தலையிலிருந்து பூவை
எடுத்துரட்டுமா என்று கணவனிடம் கேட்க நினைத்து, கட்டிலில் தூவியிருந்த
பூக்களைப்பார்த்ததும் பல்லைக்கடித்துக்கொண்டு மௌனமானாள்.

அப்புறம்,
ஆசையாய் அவன் பூவாங்கி வருவதும், அன்றைக்கெல்லாம் சண்டை வருவதும்
சகஜமாகிப்போயிற்று.கொஞ்சம் கொஞ்சமாக அவனும் புரிந்துகொண்டு அவளைக்
கட்டாயப்படுத்துவதை விட்டிருந்தான்.

அன்றைக்குக் காலையில், புதுசாக ஒரு புடவைகட்டியிருந்த அவளிடம், "தலையில,
பூ மட்டும் வச்சிருந்தா அப்படியே தேவதை மாதிரி இருப்பே" என்று
காதுக்கருகில்வந்து சொல்லிவிட்டுப்போனவன், சாலைவிபத்தில் சிக்கி உயிரற்ற
உடலாகத்தான் வீட்டுக்குத் திரும்பினான்.

கத்தி அழக்கூடமுடியாமல்
விக்கித்துப்போனாள் அமுதா. அக்கம்பக்கத்திலிருந்தவர்கள்,அவளுடைய உறவுகள்,
அவனுடன் பணியாற்றியவர்களென்று அத்தனைபேரும் மாலைவாங்கிவந்து மரியாதை
செலுத்திவிட்டுப்போனார்கள்.தாங்கமுடியாத வேதனையும் தலைபாரமும்
சேர்ந்துகொள்ள, தன்னுணர்விழந்துபோனாள் அமுதா. மயக்கத்திலிருந்தவளைத்
தெளியவைத்து கணவனுக்கான கடைசிக் கடமைகளைச் செய்யவைத்தார்கள் உறவினர்கள்.

கண்களிலிருந்து
கண்ணீர் தானாக வழிந்துகொண்டிருக்க, நிலைகுத்திய பார்வையுடன் சரிந்து
அமர்ந்திருந்தாள் அமுதா. கையில் குங்குமச்சிமிழும், கனகாம்பரமும்
மல்லிகையுமாக உள்ளே நுழைந்தார்கள் உறவுக்காரப்பெண்கள் சிலர். என்னவோ
புரிந்தது அவளுக்கு.

"ஐயோ,இன்னுமா என்னைக்
கொடுமைப்படுத்துவீங்க...என்னை விட்டுடுங்க, விட்டுடுங்க" என்று
பித்துப்பிடித்தவள்போலக் கத்தத் தொடங்கினாள் அமுதா.கொண்டு வந்த பூவைத்
தரையில்போட்டுவிட்டு, "புருஷன் போன துக்கமும்,அடக்கிவச்ச அழுகையும் இந்தப்
பொண்ணுக்கு மனசைப் பாதிச்சிருச்சோ..." என்று முணுமுணுத்தபடி,
வெளியேறிச்சென்றார்கள் வந்திருந்த பெண்கள்.

சொல்லிச்சென்ற வார்த்தைகள் தன்னிரக்கத்தை உண்டுபண்ண, தரையில் கிடந்த பூவை எடுத்து வெளியே வீசிவிட்டு, அலறி அழத்தொடங்கினாள் அமுதா.

அனுராதா




kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 24, 2011 2:09 pm

பூ வாசம்  440806 பூ வாசம்  440806



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பூ வாசம்  Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 24, 2011 3:43 pm

சோகம் சோகம் சோகம் சோகம்
என்னே ரேவதி ஒரே சோகமா இருக்கு கதை.கொடுமை,கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க இரண்டு கொடுமை ஆடிச்சாம்.அது மாதிரி இருக்கு




பூ வாசம்  Uபூ வாசம்  Dபூ வாசம்  Aபூ வாசம்  Yபூ வாசம்  Aபூ வாசம்  Sபூ வாசம்  Uபூ வாசம்  Dபூ வாசம்  Hபூ வாசம்  A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக