புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_m10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10 
30 Posts - 55%
heezulia
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_m10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10 
21 Posts - 38%
Manimegala
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_m10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_m10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_m10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10 
1 Post - 2%
jairam
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_m10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_m10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_m10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_m10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10 
12 Posts - 4%
prajai
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_m10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10 
9 Posts - 3%
Jenila
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_m10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10 
4 Posts - 1%
Rutu
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_m10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10 
3 Posts - 1%
jairam
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_m10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_m10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_m10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_m10குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 28, 2011 4:02 pm

குலசை எனப்படும் குலசேகரப்பட்டணம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி காப்புக்கட்டி விரதத்தை தொடங்கியுள்ளனர்.

இந்துக்களின் திருவிழாக்களில் ஒன்றான தசரா திருவிழாவை மைசூருக்கு அடுத்தப்படியாக வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இடம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த திருச்செந்தூருக்கு அருகில் அமைந்திருக்கும் குலசேகரப்பட்டிணம். இங்கு ”அம்மையும் அப்பனுமாய்” ஒரே கல்லில் வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாளித்து வரும் ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் கொண்டாடப்படும் தசரா திருவிழா, மைசூரில் கொண்டாடப்படும் தசரா திருவிழாவுக்கு அடுத்தப்படியானது ஆகும்.

முத்தாரம்மன் பெயர்க்காரணம்

குலசை என்று சுருக்கமாக அழைக்கப்படும் குலசேகரப்பட்டிணம் முற்காலத்தில் பாண்டியர்களின் துறைமுகமாக திகழ்ந்தது. தூத்துக்குடி முக்கிய துறைமுகமாக மாற்றப் பட்டபின்னர், இதன் முக்கியத்துவம் குறைந்தாலும் 300ஆண்டுகள் பழமையான முத்தாரம்மன்கோயில் அனைவரையும் ஈர்த்துள்ளது. பாண்டிய நாட்டில் சிறப்புற்று விளங்குவன முத்துகளே. பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக் குவித்து தேவியாக பாவித்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன. முத்துகளிலிருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள்.

அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச் செய்வர். இதனால் முத்துநோய் இறங்குகிறது. முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து + ஆற்று + அம்மன் ஸ்ரீ முத்தா (ற்ற) ரம்மன் எனவும் அழைக்கப்படுகிறாள். சிப்பியிலிருந்து விடுபட்டது முத்து. முத்தைச் சிப்பி மூடியிருக்கிறது. உயிர்களை ஆணவ மலம் மூடி மறைத்துள்ளது. உயிர்களை மலக்கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் சீவன் முத்தர்கள் ஆவர். அம்பாள் சிப்பியிலிருந்து முத்துக்களைப் பிரித்தெடுப்பது போல உலக உயிர்களை மலக்கட்டுகளிலிருந்து பிரித்துச் சீவன் முத்தர்களாக மாற்றுகிறாள். இதனால் அன்னைக்கு, முத்தாரம்மன் என்ற பெயர் நிலைக்கலாயிற்று.

மேலும் நவமணிகளில், (முத்து, மரகதம், பச்சை, புஸ்பராகம், நீலம், வைடூரியம், பவளம், மாணிக்கம், வைரம்) முத்து மட்டுமே பட்டை தீட்டப்படாமலேயே தானே ஒளிவிடும் தன்மையுடையது. இங்கே அம்பாள் சுயம்புவாகத் தோன்றி உலகைக் காப்பதால் முத்தாரம்மன் எனவும் சிறப்பிக்கப்படுகிறாள். கற்பகத் தருவின் கீழ் இருப்பவர் எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்-இங்குக் கேட்டவரம் கொடுக்கும் கற்பகத் தருவாக-அம்பாள் எழுந்தருளியுள்ளாள்

வேடமிடும் பக்தர்கள்


குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் போது பல்வேறு ஊர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது நேர்ச்சை கடனாக விரதமிருந்து பல்வேறு வேடமிட்டு முத்தாரம்மனை வழிபடும் விதம் அனைவரையும் பிரம்மிக்க வைக்கும்.

மைசூரைப் போல பிரம்மாண்டமோ. ஆடம்பரமோ கிடையாது. இந்த திருவிழாவில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்கின்றனர். இந்த திருவிழாவின் முக்கிய அம்சம், பக்தர்கள் விதவிதமான மாறுவேடமணிந்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது தான்.

நவராத்திரி தொடக்க நாளன்று, மாலையணிந்து, காப்பு கட்டி விரதம் தொடங்குவர். அவரவர் விருப்பத்திற்கேற்ப அம்மன், காளி, ராமர், சீதை, முருகன், ஹனுமன், கரடி என பலவிதமான வேடமணிந்து, வீடுவீடாக வந்து, அம்மனுக்கு காணிக்கை வாங்கி கோயிலுக்கு செலுத்துவர். இந்த பத்து நாட்களிலும், ``முத்தாரம்மனுக்கு காணிக்கை போடுங்க’’ எனும் குரல்களை தினம் பலமுறை கேட்கலாம். இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தவரும் மதத்தவரும் இவர்களுக்கு காணிக்கை போடுவது வியப்பானது.

நாட்டுப்புற பாடல் பாடி காணிக்கை


``வாராளே..., வாராளே.., முத்தாரம்மா ; நாங்க வேஷம் கட்டும் அழக பாக்க ... என்னும் பாடல் அழகான நாட்டுப்புற மெட்டில், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட அனைத்துக் கிராமங்களிலும் ஒலிக்கக் கேட்கலாம்.. வேடம் அணிந்த பக்தர்கள், காலை ஏழுமணியிலிருந்து, இரவு பதினொருமணி வரையிலும் கூட வருகின்றனர். சிலர் குழுக்களாக சேர்ந்து மேளதாளத்துடன் ஆடியபடி வருவர். வேடமணியும் பக்தர்களின் எண்ணிக்கை, வருடாவருடம் அதிகரித்து வருகிறது. இவர்கள் வசூலிக்கும் பணத்தை பத்தாம் நாள் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.

பத்துநாளும் விதவிதமான

லட்சகணக்கான மக்கள் கூடுவதால், இந்த சிறியகிராமம் திணறித்தான் போகிறது. அங்குள்ள மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் கூறிய விஷயம் இது. வேடமணியும் பக்தர்கள் உலோகத்தாலான சூலம், வேல் கொண்டு வருவது தடை செய்யப் பட்டிருக்கிறது. கூட்டமும் நெரிசலும் மிக அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு விதிகள் இன்னமும் அதிகப் படுத்த வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தெல்லாம் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் கூடுவதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மகிஷாசூர சம்ஹாரம்

தசரா திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் விசுவகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதிகிருஷ்ணன், மகிசாசுரமர்த்தினி, அனந்த நடராஜர், கஜலெட்சுமி, கலைமகள் போன்ற திருக்கோலங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

விழாவின் முக்கிய அம்சமான மகிஷாசூர சம்காரம் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்நது அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு முன்பு எழுந்தருளுகிறார். பின்னர் கடற்கரையில் மகிசாசுரமர்த்தினியாக மாறி மகிசாசூரனை வதம் செய்யும் மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும். இதனையடுத்து அன்னையின் வெற்றியை கொண்டாடும் விதமாக சிறப்பு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். குலசேகரப்பட்டணத்தில் பத்துநாளும் நடைபெறும் நாட்டுப்புற திருவிழாவை ரசிக்க தயாராகின்றனர் பக்தர்கள்.

தட்ஸ்தமிழ்



குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 28, 2011 4:16 pm


நானும் சென்றுய்ருக்கிறேன்.. ஆயிரம் கணக்கான மக்கள் வேடம் இட்டு வருவார்கள்.. லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர்.. ஜாலி




குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Power-Star-Srinivasan
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 28, 2011 4:24 pm

நான் இதுவரை பார்த்தது இல்லை.பார்க்கணும்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் திருவிழா Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக