புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_c10வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_m10வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_c10 
30 Posts - 50%
heezulia
வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_c10வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_m10வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_c10வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_m10வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_c10வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_m10வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_c10 
72 Posts - 57%
heezulia
வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_c10வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_m10வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_c10வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_m10வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_c10வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_m10வேம்பு மாமியும், வேப்பமரமும்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேம்பு மாமியும், வேப்பமரமும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 10:13 pm

நான்கு பக்க வீடுகளின் பால்கனிகளைத் தொட்டு குடைபரத்தி நின்ற வேப்பமரத்தை வழக்கம்போல் நலம் விசாரிக்க நின்று வேம்பு மாமிக்கு, மனம் கொள்ளாத வருத்தம். மரம் இருப்பது இடைஞ்சல் வெட்டிவிடலாம் என்று காலனி கமிட்டியில் தீர்மானம் ஆனதுதான் காரணம். மாமியின் தாத்தா காலத்தில் ஐந்நூற்றுக்கும் அதிகமான மரங்களுடன் தோப்பாக இருந்த இடத்தில் இன்று எண்பதைத் தொடும் மாமி, தமது எட்டாவது பிறந்தநாளன்று ஆசையாக நட்டுப் பராமரித்து வளர்த்த மரம் அது.


மனித இனப் பெருக்கத் தேவைக்கேற்ப கட்டங்கள் காளான்களாய் முளைக்க, இந்த மரம் மட்டும் தோப்பின் கடைசி வாரிசாய் மிஞ்சி நின்றுவிட்டது. நல்ல மனம் படைத்த பில்டர் ஒருவர் மரத்தைச் சுற்றி எழுப்பிய குடியிருப்பில் வேம்பு மாமியின் சென்டிமெண்ட்டுக்காகவே மாமியின் கணவர் வேதபுரீஸ்வரன், இந்த ஃப்ளாட்டை வாங்கினார்.


""கா....கா' என்று நொண்டிச் சாக்கை குரல் கொடுத்ததும் மாமி இயல்பு நிலைக்கு வந்தார்.
வாடியம்மா உனக்குச் சாப்பாட்டு நேரம் வந்தாச்சு. நாளைக்கு இந்த மரத்தை வெட்டிவிடப் போறா குடியிருப்புக்கு என்ன பண்ணப் போறே? '' அக்கறையாகக் கேட்டபடி சோற்று உருண்டையைக் கையில் வைத்து நீட்டியதம் கர்.... என்று அடிக்குரலில் செல்லமாகக் கத்திவிட்டு கொத்திக் கொண்டு பறந்தது. சரியாக ஒன்பது மணிக்கு எங்கிருந்தோ வந்த மைனாக் கூட்டப் பார்லிமெண்ட் கூட்டம் நடத்த கிளைகளில் அமர்ந்தது. தொடர்ந்து சர்ச்சைக் கூட்டம் கலைக்கப்பட்டு காச்மூச் என்று கத்தியபடி மைனாக்கள் மலைக்கொன்றாய்ப் பறந்தன.


மாமி ரசிக்கும் தினசரி நிகழ்ச்சி இது. இதற்குள் வேப்பமரப் பொந்துகளிலிருந்த அணில்கள் கீச் கீச் என்று தொண்டை கிழிய கத்தியபடி பால்கனியில் மாமி இறைந்திருந்த பொரிகடலைக்குப் போட்டியிட்டன. உச்சானிக் கிளையில் தொங்கும் பெரிய தேனடையில் தேனீக்கள் நடமாட்டத்தைக் காணோம். ஒரு வேளை மரம் வெட்டப்படப் போகும் விஷயம் முன்பே தெரிந்திருக்குமோ மாமி யோசித்தாள்.


குழந்தைகள் மாரல் வகுப்புக்கு வந்தாச்சு. அவங்களைக் கவனி! நீதான் மரத்தை மகமாயின்னு சொல்லுவியே. தன்னைக் காப்பாத்திக்கும் வழி அவளுக்குத் தெரியாதா என்ன?
வேதபுரீஸ்வரன் குரல் கொடுக்கவும் மாரல் இன்ஸ்ட்ரக்ஷன் வகுப்பு எடுக்கத் தயாரானாள் மாமி. எப்போதும்போல் வேப்ப மரத்தடியில் பாய்களை விரித்து காலனியிலிருக்கும் மொத்தக் குழந்தைகளும் உட்கார்ந்தார்கள். கதையும், பாட்டும், விளையாட்டுமாகக் கழியும் வகுப்பில் அன்று களையேயில்லை. என்ன முயன்றும் மாமியால் உற்சாகமாக இருக்க முடியவில்லை. சுற்றி நின்று ரசிக்கும் குழந்தைகளின் அம்மாக்களில் யாருமே அன்று வரவில்லை.


மரம் வெட்டப்படுவதில் பெண்களுக்கு ஒப்புதல் இல்லை. குழந்தைகளுக்கும் என்ன புரிந்ததோ? வகுப்பின் கடைசியில் எழுந்து நின்று இயற்கையைப் போற்றுவோம்; வரும் தலைமுறைகளுக்கு அனுப்புவோம்! என்ற வழக்கமான வரிகளைக் கூறும்போது குரல் கம்பீரம் இல்லை. தடுமாற்றம் தெரிந்தது.

மரத்தை வெட்டுவதற்காக வரவழைக்கப்பட்ட பெரிய மின்சார ரம்பம் கர்... கர்... என்று வேலையைத் தொடங்கியது. கிளைகளில் கெட்டியான தாம்புக் கயிறுகளைக் கட்டி, கீழே பிடித்திழுக்க காலனி ஆண்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர். மரம் மெல்லச் சாய்ந்தது. கூடுகளில் இருந்த பறவைகள் அலறிப் பறக்க, இறக்கை வளராத குஞ்சுகள் கீழே விழுந்து துடிக்க முட்டைகள் உடைந்து சிதறின. நின்றபோது தெரியாத மரத்தின் விஸ்வரூபம் கீழே விழுந்தவுடன் நன்றாகத் தெரிந்தது.


பாவிகளா! இயற்கையின் சீற்றம் எத்தனை பயங்கரமானதுன்னு தெரிஞ்சிருந்தும் மேலே மேலே தப்புப் பண்றீங்களே! உங்களுக்கு எப்போ புத்தி வரும்? நெஞ்சைப் பிடித்துக் கொண்டு வேம்பு மாமி அலற, என்ன கனவு கண்டியா? உடம்பெல்லாம் வியர்த்திருக்கு என்று கணவர் எழுப்ப, முதலில் பால்கனிக்கு ஓடினாள் மாமி. புது வேப்பம்பூ மணத்தைப் பரப்பி அமைதியாக நின்றிருந்தது மரம். இரவில் கூடு திரும்ப வழி தெரியாத கிளி, சிட்டுக்குருவி, வாலாட்டி இன்னும் பெயர் தெரியாத பல பறவைகள் வரிசையாகக் கிளைகளில் அமர்ந்து விடியலுக்காக மோனத் தவம் செய்து கொண்டிருந்தன. காலையில் நடக்கப் போகும் வதம் கண்ணில் படவேண்டாம் என்று பால்கனிக்கதவைச் சார்த்தி திரைச் சீலையை இழுத்துவிட்டு வந்து படுத்தாள்.


"மாமீ... மாணி!'' என்ற குரல் கேட்டு கண்விழித்த மாமி கதவைத் திறந்தபோது காலனி செக்ரட்டியின் மனைவி புவனா, தன் மகன் புகழேந்தியுடன் நின்று கொண்டிருந்தாள்.
மாமி! ராத்திரி பையன் படுக்கப் போகும்போதுகூட நல்லாத்தான் இருந்தான். காலையிலே பார்த்தா உடம்பு முகமெல்லாம் அங்கங்கே சிவப்பு சிவப்பா கொப்புளம் மாதிரி ஏதோ வந்திருக்கு. மாரியாத்தாவான்னு பார்த்துச் சொல்லுங்க மாமி! புவனாவின் குரலில் பயம் பதற்றம்.
புகழேந்தியைப் பரிசோதித்துவிட்டு தலைக்குத் தண்ணீர் விடும் வரை இவன் என் வீட்டிலேயே இருக்கட்டும். உனக்குக் கைக் குழந்தை இருக்கு.. அதைப் பத்திரமாய் பார்த்துக்கோ, போகும்போது ஒரு கொத்து வேப்பிலையைப் பறிச்சுக்கிட்டுப் போய் வீட்டு வாசலில் செருகி வை! புவனாவை அனுப்பி வைத்தாள்.



வேம்பு மாமியும், வேப்பமரமும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 10:13 pm

கணவரிடம், புகழேந்தியைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு கோயிலுக்குப் புறப்பட்டாள். எல்லாம் முடிந்த பிறகு வந்தால்போதும் என்று உச்சிக்கால பூஜை முடிந்து வீடு திரும்பிய மாமிக்கு, ஒரே ஆச்சர்யம்! எப்போதும் போல் வேப்பமரம் மாமியை வரவேற்றது. குழந்தைகள் ஓடிவபந்து மாமி, வேப்ப மரத்தை வெட்டுவது கேன்ஸல் ஆயிடுச்சு என்று மகிழ்ச்சியோடு சொன்னபோது அம்மாக்கள் முகத்திலும் மகிழ்ச்சி


புகழேந்திக்கு அம்மை வந்த விஷயம் ஒரு மணி நேரத்துக்குள் காலனி பூராவும் பரவிவிட்டது. இத்தனை வருடம் தலைகாட்டாத இந்த நோய் இப்ப வந்திருப்பது வேப்ப மரத்தை வெட்ட முடிவெடுத்ததால்தான். மாமி ஆசையா வளர்த்து, சாமியா கும்பிட்ட மரம். கண்டிப்பா இது சாமிக்குத்தம்தான். புகழேந்தியை அடுத்து மற்ற குழந்தைகளுக்கும் வராமலா போகும்?
மரத்துக்கு உயிர் இருக்குங்கறதை ஒத்துக்கற நாம மரத்தை வெட்டறது மனுஷனை வெட்டற மாதிரிதானே? அந்தப் பாவத்தாலே இனி பொறக்கப் போற குழந்தைகள் ஊனமா பொறந்தா என்ன செய்றது'' இப்படிப் பெண்கள் ஆளுக்கு ஆள் எண்ணப் பரிமாற்றம் செய்து கொண்டதில் எல்லோர் வயிற்றிலும் கனல்.


ஒன்பது மணிகஅகள் அத்தனைக் குழந்தைகளும் தங்களுக்கள் பேசி வைத்துக் கொண்டு மருந்தை அணைத்தபடி சுற்றி நின்று வேப்பமரத்தை வெட்டக்கூடாது என்று கோஷம்போட பெண்கள் அவர்களைச் சுற்றி நின்று மனிதச் சங்கிலி அமைத்து மௌனப் போராட்டம் நடத்தினார்கள்.
காலனி கமிட்டியின் முடிவுக்கு முதன் முதலாக சக்தி மிகுந்த எதிர்ப்பு. அதே சமயம் மின்சார ரம்பம் பழுதாகிவிடவ்டது. அது சரியாக இரண்டு நாட்கள் ஆகும் என்று செக்ரட்ரிக்குப் ஃபோன் வந்தது. புகழேந்திக்கு அம்மை நோய் வந்திருப்பது சாமி குத்தமாக இருக்கலாம்னு பெண்கள் நினைக்கிறது உண்மைதான். அதான் இப்படித் தடை வருது என்று எல்லா உறுப்பினர்களும் மறுப்பு தெரிவிக்க மரம் வெட்டும் முடிவு கைவிடப்பட்டது.


வீட்டை அடையும் முன்பே மாமிக்கு, அனைத்து விஷயங்களும் எட்டிவிட்டன. புகழேந்தியை அணைத்துக் கொண்டு, உனக்கு வந்திருப்பது மகமாயி இல்லைன்னு பார்த்தவுடனே தெரிஞ்சு போச்சு, உன்னை விசாரிக்கணும்னு தான் இங்கே இருக்கச் சொன்னேன். ஏதோ நல்லதுக்குத்தான் இப்படி நடக்குதுன்னு உன்னோட நாடகத்துக்கு நானும் ஒத்துப்போனேன். ஏன் இந்த டிராமா போட்டே? நிஜம் சொல்லணும்"" என்றாள் கரிசனத்துடன்.
மாமி! வெள்ளைக்காரங்க ஊமைத்துறையை பிடிக்க வராங்கன்னு தெரிஞ்சவுடனே வெள்ளையம்மா, இரும்புக் கம்பியைக் காய்ச்சி ஊமைத்துறை முகத்துலே அக்கங்கே சூடு வச்சு அம்மை வந்த மாதிரி டிராமா போட்டு காப்பாத்தினாங்க. ஏன்னா அம்மைன்னா வெள்ளைக்காரனுக்கு ரொம்ப பயம்னு நீங்க கதை சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.


நாமும் அந்த மாதிரி ஏதாவது செஞ்சு மரத்தைக் காப்பத்தலாம்னு தோணுச்சு. அதான் எல்லோரும் தூங்கின பிறகு ஊதுபத்தியைக் கொளுத்தி உடம்புல அங்கங்கே சூடு வச்சுக்கிட்டேன். புகழேந்தியை உச்சி முகர்ந்த மாமி, இரண்டே நாள்ல சரியாயிடுவே என்று சந்தனத்தை அரைத்து உடம்பில் பூசினாள்.

உன்னைக் காப்பத்திக்க சின்னப் பிள்ளையை வருத்தி இனிமே இப்படியொரு டிராமா போடக்கூடாது என்று வேப்ப மரத்தைச் செல்லமாகக் கடிந்து கொண்ட வேம்பு மாமியின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.

- ஜெயஸ்ரீ ராஜ்



வேம்பு மாமியும், வேப்பமரமும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 10:41 pm

அட பாவமே வேப்ப மரத்துக்காக சொந்த பிள்ளைக்கே ஸூடா..என்னங்க இது ..



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக