புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_m10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_m10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10 
13 Posts - 25%
prajai
கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_m10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10 
2 Posts - 4%
Baarushree
கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_m10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_m10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10 
2 Posts - 4%
Rutu
கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_m10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10 
1 Post - 2%
சிவா
கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_m10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10 
1 Post - 2%
viyasan
கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_m10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_m10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_m10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10 
1 Post - 8%
Rutu
கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_m10கருப்பை புற்றுநோய் தடுக்க..  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பை புற்றுநோய் தடுக்க..


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Nov 24, 2011 4:47 pm



கருப்பை புற்றுநோய் தடுக்க..







Thursday 24 November 2011






கருப்பை புற்றுநோய் தடுக்க..  Resize_20111124001825தாய்மை
என்பது பெண்ணுக்கு அளிக்கப்பட்ட வரம். பெண்களுக்கு பெருமையை தருகின்ற
கருப்பையில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் பெண்களை மிரட்டி வருகின்றன.
கருத்தடை முறைகள், மாதவிலக்கின் போது சுகாதாரமின்மை மற்றும் கிருமித்
தொற்று போன்ற காரணங்களால் கருப்பை வாய் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கான
வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. ஆரம்ப அறிகுறிகளை கண்டுபிடித்து சிகிச்சை
செய்தால் கருப்பை புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்கிறார்
மகப்பேறு மருத்துவர் கல்பனா சம்பத்.

வாழ்க்கை
முறை மாற்றம், சுற்றுச் சூழல் மாசு, பரம்பரைக் காரணங்களால் கருப்பை,
கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்படலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை
பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின்னர் புற்று நோய்க்கான வாய்ப்புகள் அதிகம்
இருந்தது. தற்போது 30 வயதிலேயே பலர் பாதிப்புக்கு ஆளாவதாக
கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் முதலே
கருப்பை பகுதியில் புற்று நோய்க்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை ஆண்டு
தோறும் சோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கருப்பையில்
புற்றுநோய் ஏற்பட எச்.பி.வி. வைரசும் காரணம் என கண்டறிப்பட்டுள்ளது.
கேன்சர் உருவாக 80 சதவீதம் வரை எச்.பி.வி. வைரஸ் முக்கிய காரணமாகிறது. இந்த
வைரஸ் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பூசியும்
கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் திருமணம் முடிந்து 5 ஆண்டுகளில் இருந்து இந்த
தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட இடைவெளியில் பேப்ஸ்மியர் டெஸ்ட் மூலம் கருப்பை வாயில் புற்றுநோய்க்கான அறிகுறி தென்படுகிறதா என சோதிக்க வேண்டும்.
கருப்பை
புற்று நோய் இருக்கும் பட்சத்தில் சில அறிகுறிகள் தென்படலாம். உறவின்
போதோ அல்லது அதற்குப் பின்னரோ ரத்தம் வெளிப்படுதல், வெள் ளைப் படுதல்
அதிகம் இருக்கலாம். வெள்ளைப்படுதலுடன் சிறிது ரத்தம் கலந்து வரலாம். இரண்டு
மாதவிடாய்க்கு இடையில் அடிக்கடி ரத்தம் வெளிப்படுதல் போன்ற அறிகுறிகள்
இருந்தால் கருப்பைப் புற்று நோய்க்கான பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

பயாப்சி
மற்றும் பேப்ஸ்மியர் சோதனைகள் மூலம் புற்று நோய் கண்டறியப்படுகிறது.
புற்று நோய் ஆரம்பிக்கும் சமயத்தில் கண்டறிந்தால் கருப்பையை அகற்றுவதன்
மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும். நோய் பரவிய பின்னர் தாமதமாக
கண்டறியப்படும் போது ரேடியோ தெரபி மற்றும் ஹீமோ தெரபி போன்ற சிகிச்சைகள்
அளிக்கப்படும். வந்த பின் தவிப்பதைவிட வரும் முன்னர் கண்டறிந்து தடுப்பதே
சிறந்தது.

பாதுகாப்பு முறை
பெண்
குழந்தைகள் சிறு வயதில் இருந்தே குறிப்பாக பூப்பெய்திய பின்னர் சத்தான
உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதே போல் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் மாதவிலக்கு
கோளாறுகளை மருத்துவரிடம் காண்பித்து உடனே சரி செய்து கொள்ள வேண்டும்.
திருமணத்துக்கு பின்னர் சுகாதாரத்தை கடை பிடிக்க வேண்டும்.

பால்வினை
நோய்கள் தாக்காமல் காத்துக் கொள்ள வேண்டும். புற்றுநோய் தடுப்பூசி
போட்டுக் கொள்வது அவசியம். சத்தான உணவு மற்றும் டென்ஷன் இல்லாத வாழ்க்கை
முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

உடல்
எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். உடல்
நலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை தவிர்த்து, உடற்பயிற்சி மூலம் எடையை
பேண வேண்டும். 30 வயதுக்கு பின்னர் கண்டிப்பாக ஆண்டுக்கு ஒரு முறை பெண்கள்
தங்களது உடல் நலம் சார்ந்த பரிசோதனை செய்வதை நடை முறைப்படுத்திக் கொள்ள
வேண்டும். அதே போல் கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக
அது சார்ந்த மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம்.


ரெசிபி

குடைமிளகாய்
ஊத்தப்பம் குடைமிளகாய் ஒன்றைக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன
வெங்காயம் ஒரு கப், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், பூண்டு துருவல் ஒரு
டீஸ்பூன், கொத்தமல்லி, கருவேப்பிலை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
தோசை மாவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். வாணலியில்
கடுகு தாளித்து, நறுக்கிய குடை மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டு துருவல்,
மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து
கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து இறக்கவும். தோசைக் கல்லில்
ஊத்தப்பத்துக்கு தேவையான மாவு ஊற்றி அதன் மீது வதக்கிய கலவையைத் தூவி மேலே
மூடி வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.


முட்டைக்கோஸ்
துவையல் முட்டைக்கோஸ் பொடியாக நறுக்கியது ஒரு கப், தக்காளி 2, சின்ன
வெங்காயம் ஒரு கப், வரமிளகாய் 3, பூண்டு தேவையான அளவு, புளி சிறிதளவு,
உப்பு தேவைக்கு எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அனைத்தையும்
நன்றாக வதக்கி

அரைத்து எடுத்தால் முட்டைக் கோஸ் துவையல் ரெடி.

ஆப்பிள்
கேசரி ஆப்பிளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முந்திரி, திராட்சை
ஆகியவற்றை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் ரவையின் அளவை
விட 3 அல்லது 4 மடங்கு தண்ணீர் வைத்து கொதிக்க விடவும், சர்க்கரை சேர்த்து
கொதித்த பின்னர் சுவைக்காக சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரில்
ரவை சேர்க்கவும். ரவை வெந்த பின்னர் நெய் சேர்த்து, நெய்யில் வறுத்த
முந்திரி, திராட்சை, நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் சேர்த்து கிளறி இறக்கவும்.



டயட்
கருப்பை
புற்றுநோய் இருப்பின் அதிக ரத்தப்போக்கு, மாதவிலக்கு சமயத்தில் அதிக வலி,
மாதவிலக்கு நின்ற பின் உடல் எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
பரம்பரையில் யாருக்காவது கருப்பை புற்றுநோய் இருந்திருந்தால் வர
வாய்ப்புள்ளது. ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் மூலம் வரலாம், சர்க்கரை அளவு
அதிகரித்தல், உடல் எடை அதிகரிப்பு போன்ற காரணங்களாலும் ஏற்பட
வாய்ப்புள்ளது. இவற்றை தவிர்க்க சாதத்தின் அளவைக் குறைத்து காய்கறிகள் அளவை
அதிகரித்து சாப்பிட வேண்டும். பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம். தினமும்
பழங்கள் சாப்பிடுவது முக்கியம். ஆவியில் வேக வைத்த உணவுகள் சாப்பிடலாம்.
அதிகம் புரதம் உள்ள உணவுகளை கூடுமான வரை தவிர்க்கவும். காய்கறிகளில்
முட்டைக் கோஸ், காலிபிளவர், முளை கட்டிய பயறு வகை இதில் ஏதாவது ஒன்றை
சேர்த்துக் கொள்ளவும். இவற்றில் இருக்கும் இன்டோல் திரீ கார்பினால் கேன்சரை
உருவாக்கும் கிருமிகளை அழிக்கிறது. மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள
பழங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு
சக்தி கிடைக்கிறது. ஆப்பிள், எலுமிச்சை, தக்காளி, சாத்துக்குடி ஆகியவற்றில்
எதிர்ப்பு சக்தி உள்ளது. சிவப்பு குடைமிளகாயில் உள்ள பைட்டோகெமிக்கலும்
புற்றுநோய் வராமல் தடுக்கும். பாதாம், பிஸ்தா உள்ளிட்ட கொட்டை வகைகள்
சேர்த்துக் கொள்ளலாம். அசைவ வகைகளில் மீன் மட்டும் ஆவியில் வேக வைத்து
அல்லது குழம்பு செய்து சாப்பிடலாம். சத்தான, உடல் நலத்துக்கு ஏற்ற உணவுகளை
சாப்பிடுவதன் மூலம் புற்று நோய் வருவதைத் தடுக்கலாம் என்கிறார் உணவு
ஆலோசகர் சங்கீதா.


பாட்டி வைத்தியம்

அசோகமரப்பட்டை,
மாதுளம் பழத்தை காய வைத்து பொடி செய்து, தினமும் காலை, மாலை இரண்டு
வேளையும், மூன்று சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை
கோளாறுகள் குணமாகும்.


கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்க அசோகமரப் பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம்.

அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.

ஆலமரப் பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.

ஆற்றுத்
தும்பட்டியை மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் குன்மகுடோரி மெழுகை
கடைகளில் வாங்கி பட்டாணி அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் கருப்பை சார்ந்த
அத்தனை கோளாறுகளும் தீரும்.


பத்து கிராம் இம்பூறல் வேர்ப்பட்டையுடன் ஒரு கிராம் பெருங்காயம் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

கரிசலாங்கண்ணி
கீரைச்சாறு 30 மில்லியுடன் பருப்பு கீரை சாறு 30 மில்லி எடுத்து
இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்ப நிலைப்
புற்றுநோய் குணமாகும்.



http://www.thedipaar.com/news/news.php?id=37270




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக