புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 8:50 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_m10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10 
32 Posts - 56%
ayyasamy ram
மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_m10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10 
23 Posts - 40%
Ammu Swarnalatha
மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_m10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10 
1 Post - 2%
M. Priya
மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_m10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_m10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10 
75 Posts - 65%
ayyasamy ram
மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_m10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10 
23 Posts - 20%
mohamed nizamudeen
மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_m10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10 
4 Posts - 3%
Rutu
மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_m10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10 
3 Posts - 3%
prajai
மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_m10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10 
2 Posts - 2%
Jenila
மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_m10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10 
2 Posts - 2%
Baarushree
மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_m10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_m10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10 
2 Posts - 2%
manikavi
மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_m10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_m10மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 21, 2012 12:37 pm



பனி விலகாத அந்தக் காலை வேளையில் தெருவில் நடந்தால் இட்லி, சாம்பார் மணம் வீசுகிறது... மாரியம்மன் கோவில் ஒலிபெருக்கியில் `செல்லாத்தா... செல்ல மரியாத்தா...' என்று எல்.ஆர். ஈஸ்வரி குரல் ஒலிக்கிறது... சற்றுத் தள்ளி ஐயனார் குதிரை கம்பீரமாக நிற்கிறது...

நீங்கள் படிப்பது, ஒரு தமிழக கிராமத்தைப் பற்றிய வர்ணனை இல்லை. தமிழ்நாட்டில் இருந்து பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மலர்ந்திருக்கும் ஒரு `தமிழ்க் கிராமம்' குறித்த விவரத்தை.

மணிப்பூர் மாநிலத்தில், மியான்மர் நாட்டையொட்டி ஒடுங்கிக் கிடக்கும், முழுக் கிராமமும் அல்லாத, முழு நகரமும் அல்லாத ஊர் இது. ஊரின் பெயர் மோரே. அன்றாடம் மியான்மர்வாசிகள் (பர்மாக்காரர்கள்) வந்து சரக்குகளை அள்ளிச் செல்லும் இந்த ஊரில் சரளமாகப் புழங்குவது தமிழ்.

தமிழ்நாட்டில் இருந்து இவ்வளவு தொலைவில் உள்ள ஊருக்கு தமிழும், தமிழர்களும் வந்தது எப்படி? அது, சுவாரசியமும், சோகமும் பூசிய கதை.

இந்த மோரேயில் 1960-களில் பூர்வீக குடிகளான குக்கி மலைவாழ் மக்கள்தான் சிறிய எண்ணிக்கையில் வாழ்ந்துவந்தனர். ஆனால் 1962-ல் மியான்மரில் நடைபெற்ற ராணுவப் புரட்சி, மோரேயின் தலைவிதியையே தலைகீழாக மாற்றிப் போட்டுவிட்டது.

மியான்மரின் புதிய ராணுவ ஆட்சியாளர்கள் அந்நாட்டில் இருந்து ஜனநாயகத்தை மட்டும் துரத்தவில்லை, இந்தியர்கள் போன்ற வெளிநாட்டவரையும் -அவர்களில் பெரும்பான்மை யானவர்கள் தமிழர்கள்- அங்கிருந்து துரத்திவிட்டார்கள்.

தாய்மண்ணான தமிழகம் திரும்பிய மியான்மர் தமிழர்கள் இங்கு முகாம்களில் தஞ்சம் புக வேண்டிய நிலை. மியான்மர் சுற்றுச்சூழல், வாழ்க்கை, உணவுமுறைக்குப் பழகிப் போயிருந்த பல தமிழர்களால் இங்குள்ள சூழலுக்கு ஒத்துப் போகவும் முடியவில்லை.

மியான்மர் ஏக்கத்திலிருந்து மீள முடியாத சில குடும்பங்கள் மீண்டும் அந்நாட்டுக்கே திரும்ப முடிவு செய்தன. அப்போது கடல்வழிப் பயணமெல்லாம் சாத்தியமேயில்லை. ரெயில், சாலை வசதியும் சிலாகிக்கும்படி இல்லாவிட்டாலும், எப்படியோ ஏழு மியான்மர் அகதி தமிழ்க் குடும்பங்கள் தமிழ்நாட்டில் இருந்து மியான்மர் எல்லையான மோரே வந்து சேர்ந்தன. அவர்களைப் பின்பற்றி இன்னும் இரண்டு குழுக்கள் தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்தன.

எல்லோருமாக மீண்டும் மியான்மருக்குள் ஊடுருவினார்கள். ஆனால் அவர்களைப் பிடித்துவிட்ட மியான்மர் அரசாங்கம், மோரேயில் உள்ள இந்திய போலீசிடம் ஒப்படைத்தது. சுவாசித்து வளர்ந்த மியான்மருக்குள்ளும் நுழைய முடியாமல், தமிழ்நாட்டுக்கும் திரும்பிச் செல்ல முடியாமல் திரிசங்கு நிலையில் தவித்தன அந்தத் தமிழ்க் குடும்பங்கள்.

சரி, மியான்மர் ஓரமாக மோரேயிலேயே தங்கிவிடலாம் என்றால் அதற்கும் பிரச்சினை. உள்ளூர் போலீஸ், தமிழர்களை அங்கிருந்து கிளப்பிவிடுவதிலேயே குறியாக இருந்தது. ஆனால் அந்தக் கஷ்ட காலத்திலும் ஒரு சிறு ஒளி பிறந்தது தமிழர்களுக்கு.

``அப்போது இங்கு மத்திய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரியாக ஒரு ஆந்திராக்காரர் இருந்தார். தமிழர்களை இங்கிருந்து வெளியேற்ற நடக்கும் முயற்சி பற்றி அவர் அறிந்தார். உடனே இந்த விவகாரத்தில் தலையிட்டு, குக்கி கிராமத் தலைவருடன் பேசி சமரசம் செய்தார். சுமார் 40 தமிழ்க் குடும்பங்கள் மோரேயில் செட்டிலாகவும் வழி பிறந்தது'' என்கிறார் கே.பி.எஸ். மணியன்.

இவர், மோரேயில் 1967-ம் ஆண்டு தமிழர்களால் தொடங்கப்பட்ட நேதாஜி நினைவு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர்.

தமிழர்கள் இங்கு குடியேறிய காலகட்டத்தில், அருகில் உள்ள, இரு நாடுகளுக்கும் சொந்தமில் லாத நாம்ப்லாங் சந்தையில் சிறிய அளவில் பண்டமாற்று வியாபாரம் நடந்து வந்தது. அங்கு தொழிலாளர்களாகப் பணிபுரியத் தொடங்கினார் கள் தமிழர்கள்.

ஆனால் தமிழர்களுக்கே உரிய புத்திசாலித்தனமும், உழைப்பும் அவர்களுக்குப் புதிய கதவுகளைத் திறந்தன. கூப்பிடு தொலைவில் உள்ள மியான்மரில், ஆடைகள் முதல் மளிகைப் பொருட்கள் வரை இந்திய உற்பத்திகளுக்கு ஏக கிராக்கி இருந்தது. எனவே தமிழர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்கள். சட்டபூர்வமாகவும், கொஞ்சம் சட்டப்பூர்வம் அல்லாமலும் மியான்மருக்கு பொருட்களை அனுப்பத் தொடங்கினார்கள்.

``அப்போதெல்லாம் இங்கே அதிகப் பாதுகாப்புக் கெடுபிடி இல்லை. எனவே தமிழர்கள் வியாபாரத்தில் செழிக்க ஆரம்பித்தார்கள். அந்தச் செழுமை, மேலும் பல தமிழர்களை மோரேக்கு ஈர்த்தது'' என்கிறார், மோரேயில் வசிக்கும் தமிழர்களில் மூத்தவரான 92 வயது முத்தையா.

தற்போது மோரேயின் மக்கள்தொகை 30 ஆயிரம். இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே. இப்பகுதியின் பூர்வீக குடிகளான குக்கிகள், எண்ணிக்கையில் இரண்டாமிடத்துக்குப் போய்விட்டார்கள்.

``மியான்மரை ஒட்டியிருப்பதால் மோரேயும் மியான்மர் போலத்தான். நாங்கள் இங்கு செட்டிலானதற்கு ஒரு முக்கியக் காரணம், இங்கு கிடைக்கும் பர்மிய அரிசி. நாங்கள் அனைவருமே பர்மிய அரிசிக்கும், அந்நாட்டு உணவுக்கும் பழகிப் போய்விட்டோம். இங்கு தங்களை நிலைநிறுத்திக் கொண்ட தமிழ்க் குடும்பங்கள், தங்களைப் போல அகதிகளான தங்கள் உற்றார், உறவினர்களை இங்கு அழைத்துக் கொண்டார்கள். 1990-ம் ஆண்டுவாக்கில் இங்கு தமிழ்க் குடும்பங்களின் எண்ணிக்கை 12 ஆயிரம் ஆனது. இப்பகுதியில் தனிப்பெரும் சமூகமாகிவிட்டோம் நாங்கள்'' என்கிறார், மோரே தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன்.

ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக தமிழர்கள் மோரேயில் வசிப்பதால், இங்கு ஒரு நடை போட்டால் எங்கும் தமிழ் அடையாளம். `பளிச்'சென்று வர்ணம் பூசப்பட்ட கோவில்கள், இட்லி, தோசை வியாபாரம் செய்யும் தெருவோரக் கடைகள்... அதைவிட ஆச்சரியம், இங்கு வந்து செல்லும் மியான்மர்காரர்களும், மண்ணின் மைந்தர்களான குக்கிகளும் கூட தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு நாளைக்கு சுமார் 40 லட்ச ரூபாய் வர்த்தகம் தமிழ் வார்த்தைப் பரிமாற்றத்திலேயே நடக்கிறது. தமிழர்கள், குக்கிகள் கலப்பு மணமும் பரவலாகக் காணப்படுகிறது.

இதெல்லாம் மோரேயின் அழகான பக்கங்கள் என்றால், பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை.

இப்பகுதியின் மற்றொரு பூர்வீக இனத்தவரான நாகாக்கள் பிரச்சினையைப் பற்ற வைத்தார்கள். மோரே தங்களுக்குத்தான் சொந்தம் என்று போர்க்கொடி பிடித்தார்கள். தொடர் விளைவாக பல்வேறு சமூகங்களுக்கு இடையே நெருக்கடிகள், புகைச்சல்கள் அதிகரித்தன. 1995-ல் தமிழர்களுக்கும், குக்கிகளுக்கும் இடையிலான மோதலில் இரு தரப்பிலும் இருபதுக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

இப்போது நிலைமை பரவாயில்லை என்றபோதும், தமிழர்களுக்கு முந்தைய பாதுகாப்பு உணர்வும், நிம்மதியும் இல்லை. இங்கே எஞ்சியிருப்பது மூவாயிரம் தமிழ்க் குடும்பங்களே. கல்வி வசதி போன்றவை போதுமான அளவில் இல்லாதிருப்பதும் தமிழர்களை தொடர்ந்து மோரேயில் வசிப்பது குறித்துச் சிந்திக்க வைத்திருக்கிறது.

ஆனால் 30 வயதாகும் ஞானசேகர் போன்றோருக்கு மோரேதான் தாய் பூமி. இவர் தலைமுறையினர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இங்கேதான். கல்வி, வேலைவாய்ப்பு என்று வெளியிடங்களுக்குப் பறந்தாலும், அவ்வப்போது மோரே வந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

``மோரேயில் வந்திறங்கியதும்தான் சொந்த ஊரில் காலடி வைக்கும் உணர்வு ஏற்படுகிறது'' என்கிறார் ஞானசேகர்.

பஸ்களும், ஜீப்களும் புழுதி கிளப்பியபடி ஊர்ந்துகொண்டிருக்க, ஒரு வித்தியாச வரலாற்றைச் சுமந்தபடி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது மோரே.

தினதந்தி



மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 21, 2012 12:39 pm

மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை MMTM01

மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை MMTM02

மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை MMTM03





மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை MMTM04மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை MMTM05மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை MMTM06



மணிப்பூர் மாநிலத்தில் `தமிழ் மணம்'! எல்லைப் பகுதியில் கோலோச்சும் தமிழர்களின் வாழ்க்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 21, 2012 1:04 pm

பார் எங்கும் என் தமிழ் மக்கள் உள்ளனர் என்பதில் பெருமிதம் எனக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக