புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
32 Posts - 51%
heezulia
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
74 Posts - 57%
heezulia
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_m10திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 26, 2012 2:22 pm

திருவனந்தபுரம் - ராகுதோஷம் போக்கும் தேவி ஆலயம் E_1329734437
நூற்றாண்டுகள் பழமை கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது. திருவனந்தபுரத்தில் வள்ளக்கடவு என்ற இடத்திலுள்ள பனமோடு தேவி ஆலயம்.

வள்ளம் என்பது படகு, கடவு என்பது படித்துறை. ஒரு காலத்தில் படகுகள் தங்கி இருந்ததால் அந்த இடம் வள்ளக்கடவு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயம் உருவாவதற்குக் காரணமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

இந்தப் பிரதேசத்தில் ஒரு காலகட்டத்தில் கடுமையான நோய்கள் பெருகி மக்களை வாட்டிக் கொண்டிருந்ததாம். அதைப் பார்த்து மனம் நொந்த ஒரு மூதாட்டி, அங்கிருந்த கால்வாயின் கரையில் நின்று கொண்டு அது வழியாகச் சென்று கொண்டிருந்த திருவல்லம் ஆலய தலைமை அர்ச்சகரைப் பார்த்து, பனமோடு ஆலயத்திற்கு வந்து, பூஜை செய்யும்படி கேட்டுக் கொண்டாராம்.

அவரோ, தனக்கு நேரம் இல்லையென்றும், வேறு யாரையாவது ஏற்பாடு செய்யும்படியும் கூறியுள்ளார்.
அச்சமயம் ஒரு ஒளி தோன்றி, அந்த மூதாட்டியின் உருவம் திடீரென்று மறைய, அப்போதுதான், அந்த மூதாட்டியின் உருவில் வந்தது பனமோடு தேவி என்பதை உணர்ந்து தேவியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் பூசாரி. அதோடு திருவல்லம் பரசுராம ÷க்ஷத்திரத்தில் பூஜையை முடித்துவிட்டு திரும்பி வரும்போது, பனமோடு தேவி ஆலயத்திற்கு பூஜை செய்ய வருவதாகவும் கூறினார்.

திருவல்லம் கோயில் பூஜையை முடித்தவிட்டு திரும்பி வரும்போது, கால்வாய்க் கரையில் காத்திருந்த மூதாட்டி, தனியாக இரு இடத்தில் காணப்பட்ட ஒற்றைப் பனைமரத்தையும் அதன் அருகில் காணப்பட்ட சிறிய கோயிலையும் காண்பித்து, அந்த தேவிக்குத்தான் பூஜை செய்ய வேண்டும் என்றும்; அங்கு வாழும் மக்களின் நோய்கள் விலக, தகுந்த பரிகாரங்கள் கூற வேண்டும் என்றும் அவரிடம் கூறி மீண்டும் மறைந்துவிட்டார்.

அன்று முதல், பனமோடு கோயில் இருந்த இடத்திலேயே தங்கி, தேவிக்கு பூஜை செய்து வந்தார், அந்த பூசாரி. கோயிலுக்கு வரும் பக்தர்களின் நோய்களையும் அவர்களின் மனக்குறைகளையும் தகுந்த பரிகாரங்கள் கூறி தீர்த்தும் வைத்தார்.

அழகான சூழ்நிலையில் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவாசல் அருகே கம்பவிளக்கு காணப்படுகிறது. கோயிலின் உள் நுழைந்ததும் ஒரு மண்டபம் காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து சதுர வடிவமான கருவறை.

கருவறையின் முன்பக்க சுவரின் இரு பக்கமும் துவாரபாலகிகள் புடைப்புச் சிற்பங்களாக காணப்படுகின்றனர். அதற்கு முன்பு உள்ள இடத்தில் தீபாராதனை சமயத்தில் ஏராளமான அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
கருவறையில் தேவி அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். தேவியின் திருமகத்தின் அழகையும், அலங்காரத்தையும் பார்த்து மெய்மறந்து நிற்கிறோம்.

தேவியின் விக்ரகம், கடுகு சர்க்கரையுடன் இன்னும் ஒரு விசேஷக் கலவை சேர்த்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சாதாரணமாக கடுகு சர்க்கரையால் செய்யப்பட்ட விக்ரகத்திற்கு அபிஷேகம் கிடையாது. இந்த விக்ரகத்தில் இன்னொரு கலவையும் சேர்த்திருப்பதால் அபிஷேகம் செய்யப்படுகிறது என்கிறார்கள்.

தேவியின் அழகை தரிசிப்பதுடன், நமது பிரார்த்தனைகளையும் கூறுகிறோம். தேவியின் கருவறையின் முன் சில பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் திருஷ்டி தோஷம் விலக விசேஷ பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.

அதுபோல் ராகுதோஷம் விலக செவ்வாய்க்கிழமைகளில் அங்கு நடத்தப்படும் சடங்கு மிகவும் வித்தியாசமானது. கடல்நீரை ஒரு கலசத்தில் கொண்டு வைத்து, அதன் நடுவே ஒரு வாழைப்பூவைப் பொருத்தி வைத்து, அதில் 27 சிறிய தீப்பந்தங்களைச் செருகி வைக்கிறார்கள்.

27 தீப்பந்தங்கள் 27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது என்கிறார்கள். பிறகு அந்த கலசத்தை எடுத்துக் கொண்டு கோயிலை மூன்று முறை சுற்றி வந்து கலசத்தில் உள்ள நீரை பிரசாதமாகத் தருகிறார்கள். அந்த நீரை பாத்திரங்களில் வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்று குளிக்கும் நீருடன் சேர்த்துக் குளித்தால் சுருமநோய்கள் தீரும் என்றும் ராகுதோஷம் நீங்கும் என்பதும் பக்தர்கள் நம்பிக்கை!

கருவறையின் அருகில் ஒரு பனைமரமும் ஒரு சூலமும் காணப்படுகிறது. பனைமரத்தின் அடிப்பாகத்தருகே ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்திருக்கிறார்கள். கருவறையின் பின்னால் பழமையான வெள்ளை மகிழம்பூ மரம் உண்டு. அரசமர மேடையில் நாகர்கள் வீற்றிருக்கிறார்கள். ஆயில் பூஜை விசேஷமாக நடத்தப்படுகிறது. கணபதி, முருகன், மாடனுக்கு தனித்தனி மண்டபங்கள் உள்ளன.

இந்தக் கோயில் வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் மட்டும் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது. அது தவிர மலையாள மாசத்தின் முதல் தேதியன்றும், விஜயதசமியன்றும் கோயில் திறந்திருக்கும்.

செவ்வாய்கிழமைகளில் காலை 5 மணி முதல் 9.30 மணிவரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும்; வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் 8.30 மணிவரையிலும்; ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

திருஷ்டிதோஷம், ராகுதோஷம் மற்றும் நோய் நொடிகள் அகல பனமோடு தேவியை நீங்களும் தரிசியுங்களேன்!

பனமோடு தேவி ஆலயம், திருவனந்தபுரத்தில், வள்ளக்கடவு என்னுமிடத்தில் ராஜீவ் காந்தி சந்தில் இருக்கிறது.

- கமலநாதன், திருவனந்தபுரம்.

குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக