புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடனமும் அதன் தொன்மையும்! Poll_c10நடனமும் அதன் தொன்மையும்! Poll_m10நடனமும் அதன் தொன்மையும்! Poll_c10 
60 Posts - 48%
heezulia
நடனமும் அதன் தொன்மையும்! Poll_c10நடனமும் அதன் தொன்மையும்! Poll_m10நடனமும் அதன் தொன்மையும்! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
நடனமும் அதன் தொன்மையும்! Poll_c10நடனமும் அதன் தொன்மையும்! Poll_m10நடனமும் அதன் தொன்மையும்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நடனமும் அதன் தொன்மையும்! Poll_c10நடனமும் அதன் தொன்மையும்! Poll_m10நடனமும் அதன் தொன்மையும்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நடனமும் அதன் தொன்மையும்! Poll_c10நடனமும் அதன் தொன்மையும்! Poll_m10நடனமும் அதன் தொன்மையும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நடனமும் அதன் தொன்மையும்! Poll_c10நடனமும் அதன் தொன்மையும்! Poll_m10நடனமும் அதன் தொன்மையும்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நடனமும் அதன் தொன்மையும்! Poll_c10நடனமும் அதன் தொன்மையும்! Poll_m10நடனமும் அதன் தொன்மையும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடனமும் அதன் தொன்மையும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 04, 2009 4:30 pm

நாட்டியத்தின் பிறப்பு

அண்ட சராசரங்களை ஆதிபராசக்தியானவள் படைத்து பின்னர் பூமியையும் படைக்கின்றாள். இவ்வாறு படைக்கும் போது ஆவேசமாகவும் மனக்குமுறலுடனும் படைத்த போது அது சூரியனாகவும், மிக அமைதியாக படைத்த போது சந்திரனாகவும், கனிந்த மனத்துடன் படைத்த போது பூமியாகவும் அவளது படைப்புகள் உருப்பெற்றன. அண்டங்களைப் படைத்த ஆதிசக்தி, தான் படைத்த பூவுலகையே பெரிதும் விரும்பி அங்கு சஞ்சரிக்கிறாள். அப்போது, தான் தனித்து இயங்குவது குறித்து வருந்தியவளாய் தனக்கு துணையாக மூன்று தேவர்களையும் படைக்கின்றாள். அந்த மூன்று தேவர்களில் சிவந்த மேனி உடையவனும், மிக அழகிய தோற்றமும் ஜடாமுடியுடனும் காட்சி தந்த சிவபெருமானை தனது துணையாக தேர்ந்தெடுக்கின்றாள். சிவபெருமானோ, தன்னை படைத்த பராசக்தியானவள் தனக்கு தாயைப் போன்றவள் என்றும் மீண்டும் அவள் பிறந்தால் அவளை பார்வதி என்ற பெயரில் மணப்பதாக கூறுகின்றான். அதுபோன்றே தக்ஷனின் மகளாக பார்வதி என்ற பெயருடனும், தாக்ஷாயினி என்ற பெயருடனும் பராசக்தியானவள் பிறந்து பரமசிவனை மணந்து கயிலையில் தேவர்களுக்கும், யாகவர்க்கும் அருள் பாலிக்கிறாள்.

தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி கைலாயத்திற்கு வந்து தங்களின் மனம் எப்போதும் ஏதோ சஞ்சலத்தில் இருப்பதாகவும், உடலும் உள்ளமும் மகிழ்ந்திருக்கச் செய்யும் வல்லமையும் உடைய ஏதேனும் ஒன்றை இறைவனாகிய சிவபெருமான் உருவாக்கி தர வேண்டும் என்று கேட்கின்றார்கள். அப்போது சிவபெருமான் தனது கையிலிருந்த டமருகத்தினை அசைத்து ஒலியினையெழுப்புகின்றார். அப்போது உடுக்கையிலிருந்து எழுந்த அந்த ஓங்கார ஒலியானது அங்கிருந்த அத்தனை தேவர்களின் மனதிலும் ஒருவித உற்சாகத்தினைத் தந்தது.

உடுக்கையிலிருந்து எழுந்த ஓங்கார ஒலிக்கேற்ப மகாதேவன் தனது உடலை அசைத்து ஆடலானார். அவர் ஆட அவர் உடலில் இருந்த ஆடை ஆபரணங்கள் ஆடின. உடன் இருந்த தேவரும் அவருக்கு துணையாக பாடலைப் பாடலானார்கள்.


ஆடலுக்கு அரசனான பரமசிவன் ஆட சடை ஆடியது, பிறை ஆடியது, குழையாடியது, அரவமாடியது, அவனது நீண்ட மெல்லிய புருவம் அசைய அதனால் அவன் பூசியிருந்த திருநீரும் அசைந்தது. இனிமையான சலங்கையின் நாதம் கயிலை எங்கும் எதிரொலித்தது. அம்மையாட பிரம்மனும் கைதட்டி தாளம் போடலானான். இப்படி அமைந்த நாட்டியம்தான் உலகிலேயே முதன் முதலில் ஆடப்பட்ட நாட்டியமாகும். சிவனின் ஆடலிலே அண்டங்கள் அசைந்தன, கோள்கள் தன்னிலையிலிருந்து திரிந்தன, கடல் ஆர்ப்பரித்தது. இதனால் தேவர்கள் அஞ்சி மகாதேவனிடம், தாங்கள் ஆடிய திரு நடனத்தினால் கடலும், அண்டங்களும், கோள்களும் கலங்கிவிட்டன. ஆதலால் தாங்கள் சாந்தமும், நளினமும் நிறைந்த நாட்டியத்தை எங்களுக்காக ஆடிக்காட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

தேவர்களின் விருப்பத்தினை ஈசன் நிறைவேற்றினாரா?


டமருகத்திலிருந்து தோன்றிய ஓங்கார ஒலி தனது ஆடலில் ருத்ரத்தினை தோற்றுவித்துள்ளது என்பதனை உணர்ந்த இறைவன், அந்த டமருகத்தினை இரண்டாக முறித்து பருத்த புறம் சேர்த்து சிறுத்த புறம் தோல் போர்த்து மகா விஷ்ணுவிடம் தந்தார். இதுவே மத்தளம் அல்லது மிருதங்கம் என்று பெயர்பெற்றது. மதுசூதனன் மத்தளம் கொட்ட, பிரம்மன் தாளம் போட பரமசிவன் ஆடிய ஆடல் காண்பதற்கே மிக அழகாகவும், ரம்யமாகவும், நளினம் மிகுந்தும் காணப்பட்டது. கொடி போல மகாதேவனின் இடை வளைந்து ஆடப் பெற்றதால் இதனை லதா தாண்டவம் என்றனர். முதலில் ஆடிய ஆடலில் ருத்ரம் அதிகமாக இருந்ததால் அது ருத்ர தாண்டவம் என்று அழைக்கப் பெற்றது. பரமசிவனின் ஆடலிலே இருந்த நளினமான அசைவுகள் பார்வதியின் மனத்தில் தானும் ஆடவேண்டும் என்கின்ற ஆசையை எழுப்பியது. மகாதேவனிடம் தனக்கும் அவர் ஆடுகின்ற அந்த ஒப்பற்ற நாட்டியத்தினை கற்றுத் தரும்படியாக பார்வதி கேட்டுக்கொண்டாள். மகாதேவனும் பார்வதிக்கு அந்த நாட்டியத்தினைக் கற்றுத்தர பார்வதி மேலும் ஒயிலாக ஆடலானாள்.

சிவசக்தி நாட்டியத்தினைக் கண்ணுற்ற தேவர்கள், சிவனிடம் இந்த உயர்வான நாட்டியக்கலை உலகெங்கும் பரவ அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அதற்கு மகாதேவன் தான் ஆடிய ஆடலை தாண்டவம் என்றும், பார்வதிக்கு கற்றுக்கொடுத்த நடனம் லாஸ்யம் என்றும் தேவர்களுக்கு கூறி, அங்கிருந்த பரதரிஷிக்கு ஆடலின் நுட்பங்களை விவரித்து உபதேசித்தார். பரதரிஷி அதனை தனது நாட்டிய சாஸ்திரம் என்கின்ற நூலில் எழுதினார். பரதரிஷியின் சீடரான தண்டு என்கின்ற முனிவர் தாண்டவ நூலினை எழுதியருளினார்.



நடனமும் அதன் தொன்மையும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 04, 2009 4:30 pm

நாட்டியம் பரவியமை

பார்வதி தனது தோழியான பாணாசுரனின் மகளான உஷை என்பவளுக்கு நாட்டியத்தினை கற்றுத் தர, உஷை தேவலோக மாதர்களுக்கும், கந்தர்வலோக மாதர்களுக்கும், உத்தர தேசத்து மாதர்களுக்கும் கற்றுத் தருகின்றாள். அதே போன்று பரதரிஷியிடம் பரதஸாஸ்திரத்தை பயின்ற சீடர்கள் உலகமெங்கும் பிரிந்து சென்று நாட்டியத்தினை பரப்பினார்கள்.

பரத ரிஷி தனது சீடர்களுக்கு போதிக்கும் போது பராசக்தி படைத்த உலகமும், அண்டங்களும் சரீராபிநயமாகவும், நான்கு வேதங்கள், பதினொன் புராணங்கள், ஆறுசாஸ்திரங்கள் வாசிகாபிநயமாகவும், சூர்ய, சந்திர, நட்சத்திரங்கள் ஆஹாயபிநயமாகவும், ஒப்பற்ற திருநடனம் புரிகின்ற மகாதேவனே ஸாத்விகாபிநயமாகவும் உள்ளார் என்று குறிப்பிடுகின்றார்.

பரத ரிஷிக்கு ஈஸ்வரன் நந்திகேஸ்வரரைக் கொண்டு தாண்டவத்தினையும், பார்வதியைக் கொண்டு லாஸ்யத்தையும் கற்றுத் தருகின்றார். இதனால் பரதரிஷி கம்பீரமும், வேகமும், முரட்டுத்தனமும் நிறைந்த தாண்டவம் ஆடவர்களுக்கு மட்டுமே ஏற்றது என்றும், மென்மையும், நளினமும் மிகுந்த லாஸ்யம் பெண்களுக்கு ஏற்றது என்றும் தனது பரத சாஸ்திரத்தில் கூறியிருக்கிறார்.



நடனமும் அதன் தொன்மையும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 5:14 pm

அருமையான தகவல்..நன்றிகள் அண்ணா..

பரதரிஷி கம்பீரமும், வேகமும், முரட்டுத்தனமும் நிறைந்த தாண்டவம் ஆடவர்களுக்கு மட்டுமே ஏற்றது என்றும், மென்மையும், நளினமும் மிகுந்த லாஸ்யம் பெண்களுக்கு ஏற்றது என்றும் தனது பரத சாஸ்திரத்தில் கூறியிருக்கிறார் நடனமும் அதன் தொன்மையும்! 677196 நடனமும் அதன் தொன்மையும்! 154550 .
ஆமாம்..முரட்டுத்தனம் ..ஆண்கள்
நளினம் பெண்கள்..



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக