புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_m10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10 
56 Posts - 50%
heezulia
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_m10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_m10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_m10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_m10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_m10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_m10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_m10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_m10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_m10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_m10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10 
12 Posts - 2%
prajai
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_m10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_m10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10 
9 Posts - 2%
jairam
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_m10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_m10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_m10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_m10தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 8:27 am

இந்தோனேசியா அருகே கடலில் 8.7 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த பூமி அதிர்ச்சி உணரப்பட்டது.

மனிதனால் முன்கூட்டியே கணிக்க முடியாத இயற்கை சீற்றங்களில் முக்கியமானது பூகம்பம்.

பூமி அதிர்ச்சி

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் உள்ள பாண்டா ஏஸ் நகருக்கு அருகே நேற்று பிற்பகல் 2.08 மணிக்கு கடலுக்கு அடியில் 8.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் 80 சென்டி மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் ஏற்பட்டு கடற்கரையை நோக்கி வந்தன. இதனால் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இந்த பூகம்பம் சென்னை நகரிலும், திருச்சி, மதுரை, சேலம், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உணரப்பட்டது. சென்னை நகரில் எழும்பூர், மைலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாநகர், கிண்டி, தியாகராயநகர், வடபழனி, அடையார் ஆகிய பகுதிகளில் நில நடுக்கத்தை நன்றாக உணர முடிந்தது.

கட்டிடங்கள் குலுங்கின

சென்னை நகரில் திடீரென்று பூகம்பம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. அலுவலகங்களில் இருக்கைகளில் அமர்ந்து இருந்தவர்கள் பூமி அதிர்ச்சியை உணர முடிந்தது. இருக்கைகள் அசைந்ததால் பீதி அடைந்த அவர்கள் அவசர அவசரமாக அலுவலகங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. கட்டில்கள் அசைந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்து வெளியே வந்து ஒருவரிடம் ஒருவர் பதற்றத்துடன் விசாரித்தனர்.

சிறிது நேர இடைவெளிக்கு பிறகு மறுபடியும் ஒருமுறை பூமி அதிர்ந்தது. இதனால் அலுவலகங்களை விட்டும், வீடுகளை விட்டும் வெளியே வந்தவர்கள் உள்ளே செல்ல தயங்கினார்கள்.

சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக கடலில் சுனாமி அலைகள் உருவாகி பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தின் சார்பில் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அரசின் சார்பிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நிலைமையை சமாளிக்க முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா உள்பட கடலோர பகுதியில் வசிக்கும் மக்களிடையே பீதி ஏற்பட்டது.

ஆனால் எந்த சூழ்நிலையையும் சந்திக்க அரசு தயாராக இருப்பதால் மக்கள் பீதி அடைய தேவை இல்லை என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா அரசுகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

மெரினா கடற்கரையில் பாதுகாப்பு

சுனாமி எச்சரிக்கையின் காரணமாக சென்னை நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேசியா அருகே ஏற்பட்ட பூகம்பம் காரணமாக ராட்சத சுனாமி அலைகள் உருவாகி, தாக்கியதில் மெரினா கடற்கரை நாசமானதோடு பலத்த உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. இதனால் கடற்கரையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். கடற்கரைக்கு வந்தவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் நேற்று பிற்பகலில் மெரினா கடற்கரை வெறிச்சோடியது.

இதேபோல் பெசன்ட் நகர் கடற்கரையிலும் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பூகம்பத்தின் காரணமாகவும், சுனாமி பீதியின் காரணமாகவும் பல ஊர்களில் நேற்று பிற்பகலில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சென்னை நகரில், பல தனியார் நிறுவனங்களில், "இனி வேலை செய்ய வேண்டாம், வீடுகளுக்கு செல்லுங்கள்'' என்று அறிவித்தனர். இதனால் அந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அவசர அவசரமாக வீடு திரும்பினார்கள்.

திருச்செந்தூரில் கடல் சீற்றம்

திருச்செந்தூரில் வழக்கத்துக்கு மாறாக நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அதிக உயரத்துக்கு எழும்பின. சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே வெகு தூரம் வரை கடல்நீர் வந்தது.

ஆனால் தூத்துக்குடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் அமைதியாக காணப்பட்டது.

ஆபத்து நீங்கியது

பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரத்தில் சுனாமி அலைகள் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த பூகம்பம் காரணமாக சுனாமி அலைகள் உருவாகவில்லை.

இதைத்தொடர்ந்து நேற்று மாலையில், 28 நாடுகளுக்கும் விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தினதந்தி



தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 8:27 am

பூமி அதிர்ச்சியால் சென்னையில் 10 செ.மீட்டர் அலைகள்

இந்தோனேசியா அருகே ஏற்பட்ட பூமி அதிர்ச்சியால் வலு குறைந்த சுனாமி அலைகள் ஏற்பட்டன. இந்தோனேசியா கடற்கரை அருகே 80 செ. மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் வந்து தாக்கின.

அந்தமான் தீவில் 45 செ.மீட்டர் உயரத்துக்கும், சென்னை, எண்ணூரில் தலா 10 செ.மீட்டர் உயரத்துக்கும், விசாகப்பட்டினத்தில் 9 செ.மீட்டர் உயரத்துக்கும் அலைகள் ஏற்பட்டதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.



தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 8:28 am

தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின CNI1204SU09



தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 8:28 am

தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின CNI1204SU01



தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 8:28 am

தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின First12



தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 8:36 am

எந்த நிலைமையையும் சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளது, சுனாமி குறித்து எந்தவித அச்சம் கொள்ளத் தேவையில்லை - ஜெயலலிதா அறிக்கை

தமிழ்நாட்டில் சுனாமி ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து எந்த நிலைமையையும் சமாளிக்கக்கூடிய வகையில் அரசு இயந்திரம் தயார் நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் சுனாமி குறித்து எந்தவித பீதியும், அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு தயார் நிலையில்...

இன்று (நேற்று) பிற்பகல் 2 மணியளவில் இந்தோனேசியாவின் வட சுமத்ராவின் மேற்கு கடற் பகுதியில் ரிக்டர் அளவில் 8.7 திறன் கொண்ட கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம், சுனாமி உஷார் நிலை எச்சரிக்கையை விடுத்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழகக் கடற்கரையை சுனாமி தாக்கும் என்ற நிலை இல்லாத போதும், உஷார் நிலை எச்சரிக்கையின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க அரசு உயர் அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன். அதன் அடிப்படையில், கடலோர மாவட்ட கலெக்டர்கள் உஷார்படுத்தப்பட்டனர். கடற்கரை பகுதிகளுக்கு எவரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எந்தவித அவசர சூழ்நிலையையும் எதிர்கொள்ளக் கூடிய வகையில், தயார் நிலையில் இருக்கும்படி அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அச்சம் கொள்ள தேவையில்லை

இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் சமயத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த செயல்முறைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்திட மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை நகரிலும், கடற்கரையில் இருந்த மக்களை அங்கிருந்து செல்லும்படி ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

8.7. திறன் கொண்ட பெருமளவிலான நில நடுக்கம் ஏற்பட்ட பின் அதனைத் தொடர்ந்து சிறு சிறு நடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கை தான். இதைப் போன்ற சிறு நில நடுக்கங்கள் சென்னை உட்பட தமிழ்நாட்டில் சில இடங்களில் உணரப்பட்டன. சுனாமி ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து எந்த நிலைமையையும் சமாளிக்கக்கூடிய வகையில் அரசு இயந்திரம் தயார் நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் சுனாமி குறித்து எந்தவித பீதியும், அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 8:36 am

உயிருக்கு பயப்பட வேன்டிய நிலை இயற்கையால் ஒரு நோடிப்பொழுதில் ஏற்பட்டது. நேற்று மதியம் முழுக்க சென்னை முழுவதும் மதியம் மக்கள் அலைப்பாய்ந்தனர். நல்லவேளையாக சுனாமி வரவில்லை.. கடவுளுக்கு நன்றி.
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 8:37 am

செல்போன்கள் செயல் இழந்ததால் பதற்றம், மின்சார ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன

சென்னையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது பல அலுவலகங்கள், வீடுகளில் நாற்காலிகள், கட்டில்கள், பீரோக்கள் பயங்கரமாக அசைந்து ஆடின. சென்னை துறைமுகத்தில் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. மின்சார ரெயில்கள், ஆங்காங்கே நிறுத்தப்பட்டு மெதுவாக ஓட்டப்பட்டன.

இந்த நேரத்தில் பதற்றப்பட வைத்தது என்னவென்றால், செல்போன்களின் சேவையும் செயல் இழந்ததுதான். செல்போன்கள் இயங்காததால் தாங்கள் பணிபுரியும் இடங்களில் இருந்து வீடுகளுக்கு தொடர்பு கொண்டு எந்த தகவலையும் குடும்பத்தினருடன் பரிமாறிக்கொள்ள முடியாமல் பலர் தவித்ததை காண முடிந்தது.



தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 8:38 am

சென்னையில் நிலநடுக்கம் ஏன்? வானிலை அதிகாரி விளக்கம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை செயற்கைகோள் இயக்குனர் டபிள்ï.பி.கோபால் பூகம்பம் பற்றி நிருபர்களிடம் கூறியதாவது:-

சுமத்ரா தீவில் வடக்கு பகுதியில் பகல் 2மணி 8 நிமிடத்திற்கு ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பகல் 2 மணி 31 நிமிடத்திற்கு இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியிலும் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.

சுமத்ரா தீவில் அதிகபட்சமாக 8.7 ரிக்டர் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அந்த நிலநடுக்கத்தை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்கள் உணர்ந்துள்ளனர்.

சென்னையில் நடந்த பூமி அதிர்ச்சி சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின் எதிரொலிதான். அதைத்தான் சென்னை நகர மக்களும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் உள்ள மக்களும் உணர்ந்துள்ளனர்.

இவ்வாறு இயக்குனர் கோபால் தெரிவித்தார்.



தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 12, 2012 8:39 am

உயிரைப் பறிக்கும் சுனாமி அலைகள் ஏற்படாதது ஏன்?

சுனாமி என்றால் என்ன என்பதும் அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதும் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதிதான் இந்தியர்களுக்கு தெரிந்தது.

அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் அருகே கடலுக்கு அடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் 9.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக உருவான சுனாமி அலைகள் அந்த நாட்டில் மட்டும் பேரழிவை ஏற்படுத்தவில்லை.

இந்தியா, இலங்கை, மியான்மர், தாய்லாந்து, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளின் கடலோர பகுதியையும் தாக்கின. இதில் 2 லட்சத்து 22 பேர் பலி ஆனார்கள். தமிழ்நாட்டிலும் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

பின்னர் கடந்த ஆண்டு ஜப்பானில் 9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக சுனாமி அலைகள் உருவாகி ஊருக்குள் புகுந்தது. அப்போது 19 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர். அங்குள்ள புகுஷிமா அணு உலையும் நாசமானது.

நேற்று ஏற்பட்ட பூகம்பமும், இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட அதே பகுதியில், 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்டதை போன்று சக்தி வாய்ந்ததுதான். இருந்த போதிலும் 2004-ம் ஆண்டில் ஏற்பட்டதை போன்று பெரிய அளவில் உயிரைப் பறிக்கும் சுனாமி அலைகள் இப்போது ஏற்படவில்லை.

2004-ல், கடலுக்கு அடியில் உள்ள பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாறை தட்டுக்கள் செங்குத்தாக அதாவது மேலும் கீழுமாக நகர்ந்தால் கடல் நீரை அதிக அளவில் வெளியே தள்ளி பெரிய அளவில் சுனாமி அலைகள் ஏற்பட்டன.

ஆனால் இப்போது ஏற்பட்ட பூகம்பத்தின்போது பாறை தட்டுக்கள் பக்கவாட்டில்தான் நகர்ந்து உள்ளன. இதனால்தான் பெரிய அளவில் சுனாமி அலைகள் ஏற்படவில்லை. புவியியல் நிபுணர் ஒருவர் இந்த விளக்கத்தை அளித்து இருக்கிறார்.



தமிழகம் முழுவதும் பூமி அதிர்ச்சி - கட்டிடங்கள் குலுங்கின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக