புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
10 Posts - 53%
heezulia
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
9 Posts - 47%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
52 Posts - 60%
heezulia
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
30 Posts - 35%
T.N.Balasubramanian
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_m10மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 11, 2012 7:11 am

மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து First11

சேலம் மாவட்டம் மேட்டூரில் மாநில அரசுக்கு சொந்தமான அனல் மின்நிலையம் அமைந்துள்ளது.

கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அனல்மின்நிலையத்தில் 4 ïனிட்டுகள் உள்ளன. இதில் ஒரு ïனிட்டுக்கு தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 4 ïனிட்டுகளுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

திடீர் தீவிபத்து

இதற்காக தினமும் 14 ஆயிரத்து 500 டன் நிலக்கரி பயன்படுத்தப்பட்டு வந்தது. மின் உற்பத்தி செய்யும் 4 ïனிட்டுகளுக்கும் நிலக்கரியை எடுத்துச்செல்ல தரை மட்டத்தில் இருந்து சுமார் 35 அடி உயரத்தில் நவீன கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கன்வேயர் பெல்ட் வழியாக தினசரி 14 ஆயிரம் டன் நிலக்கரி சப்ளை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அந்த கன்வேயர் பெல்ட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. நிலக்கரி இருந்தால் தீ மளமளவென பரவியது. சிறிது நேரத்தில் 400 மீட்டர் அளவுக்கு கன்வேயர் பெல்ட் எரிந்து சேதம் அடைந்ததுடன், அதை தாங்கி இருந்த 2 டவர்களும் சரிந்து கீழே விழுந்தன. இதன் காரணமாக மின் உற்பத்திக்கு நிலக்கரி அனுப்பும் பணி முற்றிலும் தடைபட்டது.

5 மணி நேரம் போராட்டம்

இதற்கிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் 9 தீயணைப்பு வாகனங்களில் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நள்ளிரவு பற்றிய தீ அதிகாலையில் முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் சேலம் மாவட்ட கலெக்டரும் (பொறுப்பு) மற்றும் அதிகாரிகளும் அங்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஊழியர் மூச்சு திணறி பலி


இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தில் அனல் மின்நிலையத்தில் இரவு நேர பணியில் இருந்த உதவியாளர் நல்லதம்பி (வயது 54) மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.

மற்றொரு உதவியாளர் கோபால் தீக்காயங்களுடன் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதேபோல புகை மூட்டத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உதவி நிர்வாக பொறியாளர் அதியமான் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தீ விபத்தை அணைக்கச்சென்ற தீயணைப்புத்துறையை சேர்ந்த மாணிக்கம், சுரேஷ்குமார், கிருஷ்ணன், மாதேஷ் ஆகிய 4 பேரும் காயமடைந்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெரிய விபத்து தவிர்ப்பு

தீ விபத்து நடந்த நிலக்கரி கன்வேயர் பெல்ட் அருகே தான் ஆயில் டேங்க் குடோன் உள்ளது. அதிர்ஷ்டவசமாக தீவிபத்து ஏற்பட்டபோது காற்று வீசவில்லை. இதனால் தீ ஆயில் டேங்க் குடோன் பக்கம் செல்லவில்லை. எனவே, மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இது குறித்து அனல் மின்நிலையத்தில் இரவு நேர பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர் கூறும்போது, ``திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் நாங்கள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றோம். உயிர் தப்புவோமோ? என்ற பயம் எங்களுக்குள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் நடைபெற இருந்த விபத்து உரிய நேரத்தில் தடுக்கப்பட்டு விட்டது'' என்றனர்.

அனல் மின் நிலையத்தில் தீ கொழுந்து விட்டு எரிவதை அறிந்ததும் அனல் மின்நிலைய சுற்றுச்சுவருக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் டிரைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தூங்கிக்கொண்டு இருந்த சக லாரி டிரைவர்கள் அனைவரையும் எழுப்பி நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர். அச்சத்தில் உறைந்த அவர்கள் தங்களது லாரிகளை மின்னல் வேகத்தில் அங்கிருந்து எடுத்து சென்றனர்.

இறந்தவர் குடும்பத்துக்கு ஆறுதல்


இதற்கிடையில் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்த உதவியாளர் நல்லதம்பியின் உடல் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. இதையறிந்ததும் அங்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நல்லதம்பியின் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

நல்லதம்பிக்கு அன்னபூரணி என்ற மனைவியும், கிஷோர் என்ற மகனும் உள்ளனர். கிஷோர் பொறியியல் பாடப்பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார்.

இறந்த நல்லதம்பியின் குடும்பத்தினருக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்ன வெங்கடேசன், மேட்டூர் உதவி கலெக்டர் சூரியபிரகாஷ், நகர்மன்ற தலைவர் லலிதா சரவணன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள்.

உயர்மட்ட குழு வருகை

சேலம் மாவட்ட கலெக்டரும்(பொறுப்பு), வருவாய் அதிகாரியுமான பிரசன்ன வெங்கடேசன் கூறும்போது, "இந்த விபத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அறியவும், அதற்குரிய நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து மின்வாரிய உயர்மட்ட குழுவினர் மேட்டூர் வருகிறார்கள். அவர்களது ஆய்வுக்குப்பின் சீரமைப்பு பணி விரைவாக செய்து முடிக்கப்படும். கடந்த ஜனவரி மாதம் அனல் மின்நிலையத்தில் இதேபோன்று தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னதாகவே உடனடியாக தீ அணைக்கப்பட்டது'' என்றார்.

கன்வேயர் பெல்ட்டில் ஏற்பட்ட வெப்பம் காரணமாக இந்த தீவிபத்து நடந்ததாகவும், விபத்து காரணமாக ரூ.50 கோடிக்கு சேதம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மின்உற்பத்தி அடியோடு நிறுத்தம்

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 250 டன் நிலக்கரி மட்டுமே இருப்பு இருந்தது. இந்த நிலக்கரி மூலம் நேற்று மாலை வரை மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடிந்தது. மாற்று ஏற்பாட்டுக்குரிய பகுதியும் தீயில் சேதம் அடைந்ததால் மீண்டும் நிலக்கரியை தேவையான பகுதிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

எனவே நேற்று மாலையுடன் மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது. ஏற்கனவே தமிழகத்தில் மின்வெட்டு அமலில் உள்ளது. மேட்டூர் அனல்மின்நிலையத்தில் இருந்து கிடைத்த 840 மெகாவாட் மின்சாரம் தடைபட்டு உள்ளதால் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது

ஜெயலலிதா உறுதி

இதற்கிடையே மேட்டூர் அனல்மின்நிலைய தீவிபத்து தொடர்பாக தமிழக சட்டசபையில் பேசிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்து, மீண்டும் மின் உற்பத்தி பணிகளை தொடங்க சுமார் ஒரு மாத காலம் ஆகும் என்றும், மின்சாரம் கிடைக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மேட்டூர் அனல் மின்நிலையத்தில் சீரமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொண்டு, அந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

தினத்தந்தி



மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 11, 2012 8:12 am

சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக