புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
Page 1 of 15 •
Page 1 of 15 • 1, 2, 3 ... 8 ... 15
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"
உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.
பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?
பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.
சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொடரும்...
உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.
பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?
பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.
சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தொடருங்கள் சார்லஸ்...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
"சாத்தானின் பூர்வீகம்"
இன்று, பிசாசு என்று அழைக்கப்படும் சாத்தானை, தேவன் பிசாசு என்ற நிலையில் சிருஷ்டிக்கவில்லை. பிசாசின் பூர்வீகத்தை அறிந்து கொள்வதற்கு ஆதி பூமியின் வரலாற்றையும் நாம் அறிவத அவசியம்.
பிதாவாகிய தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் கொண்டு வானத்தையும், பூமியையும், பரலோகத்திலும், பூலோகத்திலுள்ளவைகளுமான காணப்படுகிறவைகளையும், காணப்படாதவைகளுமாகிய சகலத்தையும் சிருஷ்டித்தார். இந்த உண்மை சத்தியத்தை பரிசுத்த வேதாகமத்தில் பல வசனங்களில் காணலாம். (ஆதியாகமம்: 1:1; யோவான்: 1:13; கொலோசெயர்: 1:16; 1கொரிந்தியர்: 8:5,6; சங்கீதம்: 53:6; எபிரேயர்: 1:2).
ஆதிபூமியை தேவன் சிருஷ்டித்த காலத்தை நாம் அறிவதற்கில்லை. 'ஆதியில்' என்ற பதம் (Dateless past ) கணக்கிலடங்காத ஒன்றாகும். பூமியை சிருஷ்டிக்கும் முன்பு தேவன் வாத்தையும், அதன் ஜீவராசிகளையும் குறிப்பாக தேவதூதர்களையும் சிருஷ்டித்தார். பூமி சிருஷ்டிக்கப்பட்ட வேளையில் 'தேவதூதர்கள் கெம்பீரித்தார்கள்' என்பதாக யோபு: 38:7 - ல் கர்த்தர் யோபிடம் கூறுவதாக வாசிக்கிறோம்.
ஆனால், தற்போதைய பூமியில் முதல் மனிதனாக சிருஷ்டிக்கப்பட்டவர் ஆதாம். முதல் மனிதனாகிய ஆதாம் சிருஷ்டிக்கப்பட்ட 4000 ஆண்டுகளுக்குப் பின்பு இயேசு பூமியில் அவதரித்தார். இயேசு கிறிஸ்து பூமியில் பிறந்து சுமார் 2000 ஆண்டுகள் ஆகின்றன. இதை வைத்துக்கொண்டு பூமியின் சராசரி வயதை 6000 ஆண்டுகள்தான் என்று முடிவு செய்யக் கூடாது.
ஆதாமின் காலத்திற்கு முன்பே (Dateless past) தேவன் ஆதிபூமியை சிருஷ்டித்தார். அந்த ஆதிபூமி ஜலத்தினால் அழிக்கப்பட்டு (2பேதுரு: 3:6) இருண்ட நிலையில் செயலற்று கிடந்தது. ஒழுங்கற்று - வெறுமையாக இருந்த அந்த ஆதிபூமியை தேவன் திரும்பவும் புதுப்பித்து (Renovated) பின்பு ஆதாமை உண்டாக்கினார்.
ஆதியாகமம்: 1:1 க்கும் 2 ம் வசனத்திற்கும் இடையில் ஒரு யுகமே கடந்து சென்று விட்டது. அதாவது, ஆதிபூமியின் சிருஷ்டிப்பையும், (Past earth), இரண்டாம் வசனம் அந்த ஆதிபூமி அழிக்கப்பட்டு செயலற்று கிடந்ததையும், 3 ம் வசனம் தற்போதைய பூமியையும் (Present earth) குறிக்கிறது.
தொடரும்...
இன்று, பிசாசு என்று அழைக்கப்படும் சாத்தானை, தேவன் பிசாசு என்ற நிலையில் சிருஷ்டிக்கவில்லை. பிசாசின் பூர்வீகத்தை அறிந்து கொள்வதற்கு ஆதி பூமியின் வரலாற்றையும் நாம் அறிவத அவசியம்.
பிதாவாகிய தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் கொண்டு வானத்தையும், பூமியையும், பரலோகத்திலும், பூலோகத்திலுள்ளவைகளுமான காணப்படுகிறவைகளையும், காணப்படாதவைகளுமாகிய சகலத்தையும் சிருஷ்டித்தார். இந்த உண்மை சத்தியத்தை பரிசுத்த வேதாகமத்தில் பல வசனங்களில் காணலாம். (ஆதியாகமம்: 1:1; யோவான்: 1:13; கொலோசெயர்: 1:16; 1கொரிந்தியர்: 8:5,6; சங்கீதம்: 53:6; எபிரேயர்: 1:2).
ஆதிபூமியை தேவன் சிருஷ்டித்த காலத்தை நாம் அறிவதற்கில்லை. 'ஆதியில்' என்ற பதம் (Dateless past ) கணக்கிலடங்காத ஒன்றாகும். பூமியை சிருஷ்டிக்கும் முன்பு தேவன் வாத்தையும், அதன் ஜீவராசிகளையும் குறிப்பாக தேவதூதர்களையும் சிருஷ்டித்தார். பூமி சிருஷ்டிக்கப்பட்ட வேளையில் 'தேவதூதர்கள் கெம்பீரித்தார்கள்' என்பதாக யோபு: 38:7 - ல் கர்த்தர் யோபிடம் கூறுவதாக வாசிக்கிறோம்.
ஆனால், தற்போதைய பூமியில் முதல் மனிதனாக சிருஷ்டிக்கப்பட்டவர் ஆதாம். முதல் மனிதனாகிய ஆதாம் சிருஷ்டிக்கப்பட்ட 4000 ஆண்டுகளுக்குப் பின்பு இயேசு பூமியில் அவதரித்தார். இயேசு கிறிஸ்து பூமியில் பிறந்து சுமார் 2000 ஆண்டுகள் ஆகின்றன. இதை வைத்துக்கொண்டு பூமியின் சராசரி வயதை 6000 ஆண்டுகள்தான் என்று முடிவு செய்யக் கூடாது.
ஆதாமின் காலத்திற்கு முன்பே (Dateless past) தேவன் ஆதிபூமியை சிருஷ்டித்தார். அந்த ஆதிபூமி ஜலத்தினால் அழிக்கப்பட்டு (2பேதுரு: 3:6) இருண்ட நிலையில் செயலற்று கிடந்தது. ஒழுங்கற்று - வெறுமையாக இருந்த அந்த ஆதிபூமியை தேவன் திரும்பவும் புதுப்பித்து (Renovated) பின்பு ஆதாமை உண்டாக்கினார்.
ஆதியாகமம்: 1:1 க்கும் 2 ம் வசனத்திற்கும் இடையில் ஒரு யுகமே கடந்து சென்று விட்டது. அதாவது, ஆதிபூமியின் சிருஷ்டிப்பையும், (Past earth), இரண்டாம் வசனம் அந்த ஆதிபூமி அழிக்கப்பட்டு செயலற்று கிடந்ததையும், 3 ம் வசனம் தற்போதைய பூமியையும் (Present earth) குறிக்கிறது.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
தேவன் ஆதிபூமியை சிருஷ்டித்தபோது அது ஒழுங்கற்றதும், வெறுமையானதுமாக இருந்தது என்று சொல்லக் கூடாது. ஏசாயா: 45:8 ல் எழுதப்பட்டிருக்கிறபடி தேவன் ஆதிபூமியை வெறுமையாகப் படைக்கவில்லை. 'வானங்களை சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காக செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர்' (ஏசாயா: 45:18) என்று வேதம் கூறுகிறது.
எரேமியா தீர்க்கதரிசி தன்னுடைய தரிசனத்தில் அவர் கண்டதை கூறுவதாவது; 'பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது' (எரேமியா: 4:23). இதிலிருந்து நாம் ஒரு உண்மையை அறியலாம். தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஆதிபூமி, அழிக்கப்பட்டதின் காரணமாக ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் காட்சியளித்தது.
தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருந்த ஆதிபூமியின் ஆட்சியையும், அதிகாரத்தையும் ஒரு பிரதான தேவ தூதனிடம் (Arch - Angle ) தேவன் ஒப்படைத்து இருந்தார். இந்த பிரதான தேவதூதனையும் சிருஷ்டித்தவர் தேவனே. இவனுக்கு மிகுந்த ஞானம் கொடுக்கப்பட்டிருந்தது. சிறந்த அழகும், பராக்கிரமும், வல்லமையும் வாய்ந்த தேவனுடைய பிரதான தூதர்களில் 'லூசிபர்' (Lucifer ) என்ற பெயரில் அவன் செயலாற்றினான். இவனுக்கு இருந்த மேன்மை, சிறப்பு, ஞானம், அழகு எப்படிப்பட்டது என்பதை கீழ்க்கண்ட வசனங்களில் வாசிக்கலாம்:
"...நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன். நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோதேகம், யஸ்பி, இந்திர நீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேள வாத்தியங்களும் உன் நாதசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது. நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேரூப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய், நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவங்கி உன்னில் அநியாயம் கண்டு பிடிக்கப்பட்டது மட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய், உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ் செய்தாய்; ஆகையால் நான் உன்னைத் தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேரூபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப் போடுவேன், உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையில் தள்ளிப் போடுவேன்..." (எசேக்கியேல்: 28:12-17).
தொடரும்...
எரேமியா தீர்க்கதரிசி தன்னுடைய தரிசனத்தில் அவர் கண்டதை கூறுவதாவது; 'பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது' (எரேமியா: 4:23). இதிலிருந்து நாம் ஒரு உண்மையை அறியலாம். தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஆதிபூமி, அழிக்கப்பட்டதின் காரணமாக ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் காட்சியளித்தது.
தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருந்த ஆதிபூமியின் ஆட்சியையும், அதிகாரத்தையும் ஒரு பிரதான தேவ தூதனிடம் (Arch - Angle ) தேவன் ஒப்படைத்து இருந்தார். இந்த பிரதான தேவதூதனையும் சிருஷ்டித்தவர் தேவனே. இவனுக்கு மிகுந்த ஞானம் கொடுக்கப்பட்டிருந்தது. சிறந்த அழகும், பராக்கிரமும், வல்லமையும் வாய்ந்த தேவனுடைய பிரதான தூதர்களில் 'லூசிபர்' (Lucifer ) என்ற பெயரில் அவன் செயலாற்றினான். இவனுக்கு இருந்த மேன்மை, சிறப்பு, ஞானம், அழகு எப்படிப்பட்டது என்பதை கீழ்க்கண்ட வசனங்களில் வாசிக்கலாம்:
"...நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன். நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோதேகம், யஸ்பி, இந்திர நீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேள வாத்தியங்களும் உன் நாதசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது. நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேரூப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய், நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவங்கி உன்னில் அநியாயம் கண்டு பிடிக்கப்பட்டது மட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய், உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ் செய்தாய்; ஆகையால் நான் உன்னைத் தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேரூபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப் போடுவேன், உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையில் தள்ளிப் போடுவேன்..." (எசேக்கியேல்: 28:12-17).
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஆதிபூமியின் மீதும், அந்த பூமியில் வாழ்ந்த ஜீவராசிகள் அனைத்தின் மீதும் லூசிபருக்கு ஆட்சியும் அதிகாரமும் கொடுக்கப்பட்டிருந்தது. அவைகளைக் காப்பாற்றும் பொறுப்பையும் தேவன் அவனுக்கு கொடுத்திருந்தார். இந்த பிரதான தூதனாகிய 'லூசிபரின்' அதிகாரத்துக்குட்பட்டிருந்த பூமியில் அன்று வாழ்ந்தவர்கள் இன்றைய பூமியில் வாழும் மக்களைப்போலவே அறிவும், ஆற்றலும், ஞானமும், நாகரீகமும் உடையவர்களாய் இருந்தனர். அன்று வாழ்ந்தவர்களுக்குத் தெரியாத ஒன்றையும் இன்றைய உலகில் உள்ள விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கவில்லை என்று பிரசங்கி: 1:9,10 வசனங்களில் கீழ்க்கண்டவாறு வாசிக்கிறோம்:
"முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்கு கீழே நூதனமானது ஒன்றுமில்லை. இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத் தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வ காலங்களிலும் இருந்ததே."
மேற்கூறிய வசனங்களிலிருந்து ஆதி பூமிவாசிகளின் அறிவும் ஆற்றலும் விளங்குகிறது. ஆதி பூமியில் ராஜரீகம் நடத்தி ஆட்சி புரிந்த 'லூசிபர்' என்ற பிரதான தூதனுக்கு உதவியாக ஏராளமான தேவதூதர்களையும் தேவன் கொடுத்திருந்தார். இந்த தூதர்களையும் ஆதிபூமியில் வாழ்ந்தவர்களையும் லூசிபர் கவர்ந்து கொண்டான்.
தன் தூதர்களின் ஒத்தாசையுடன் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்த லூசிபரின் மனதில் தகாத ஆசைகளும், நினைவுகளும் ஏற்பட்டன. தன்னுடைய ஆட்சியை நட்சத்திர மண்டலத்திலுள்ள தேவனுடைய தூதர்கள் மத்தியிலும், உன்னதத்தில் உள்ள தேவனுடைய சிங்காசனம் வரையிலும் கூட விஸ்தரிக்க வேண்டும் என்ற அளவுகடந்த ஆசைகள் அவனுக்கு உண்டாயிற்று. சுருங்கச் சொன்னால், தேவனுக்கு ஒப்பான ஒரு நிலையை தானும் அடைய வேண்டுமென்று முயற்சித்தான்.
தொடரும்...
"முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்கு கீழே நூதனமானது ஒன்றுமில்லை. இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத் தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வ காலங்களிலும் இருந்ததே."
மேற்கூறிய வசனங்களிலிருந்து ஆதி பூமிவாசிகளின் அறிவும் ஆற்றலும் விளங்குகிறது. ஆதி பூமியில் ராஜரீகம் நடத்தி ஆட்சி புரிந்த 'லூசிபர்' என்ற பிரதான தூதனுக்கு உதவியாக ஏராளமான தேவதூதர்களையும் தேவன் கொடுத்திருந்தார். இந்த தூதர்களையும் ஆதிபூமியில் வாழ்ந்தவர்களையும் லூசிபர் கவர்ந்து கொண்டான்.
தன் தூதர்களின் ஒத்தாசையுடன் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்த லூசிபரின் மனதில் தகாத ஆசைகளும், நினைவுகளும் ஏற்பட்டன. தன்னுடைய ஆட்சியை நட்சத்திர மண்டலத்திலுள்ள தேவனுடைய தூதர்கள் மத்தியிலும், உன்னதத்தில் உள்ள தேவனுடைய சிங்காசனம் வரையிலும் கூட விஸ்தரிக்க வேண்டும் என்ற அளவுகடந்த ஆசைகள் அவனுக்கு உண்டாயிற்று. சுருங்கச் சொன்னால், தேவனுக்கு ஒப்பான ஒரு நிலையை தானும் அடைய வேண்டுமென்று முயற்சித்தான்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
லூசிபரின் பேராசைகளையும், மேட்டிமையான எண்ணங்களையும் தேவன் கண்டார். தேவனுடைய ஆட்சியையே கவிழ்த்து அதைக் கைப்பற்றும் நோக்கம் கொண்டிருந்த லூசிபரையும், அவனுடைய ஆதரவாளர்களாக கருதப்பட்ட அனைத்து தேவதூதர்களையும் தேவன் சபித்து கீழே விழத்தள்ளினார். இதினிமித்தம் லூசிபரும் அவனுடைய தூதர்கள் அனைவரும் தேவ கோபத்துக்குள்ளாகி தங்கள் மேன்மையான நிலையிலிருந்து சபிக்கப்பட்டவர்களாக தள்ளப்பட்டனர். ஆதிபூமியும் அதிலுள்ளவைகளும் ஜலத்தினால் அழிக்கப்பட்டது.
"அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்தக்கு ஏறுவேன்; தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூடத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன் , உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் உன் இருதயத்தில் சொன்னாயே." (ஏசாயா: 14:12-14).
இவ்விதமாக தள்ளப்பட்ட லூசிபரும் அவனுடைய சேனையும் தங்கள் மகிமையின் பிரகாசத்தையும், அழகையும் முற்றிலும் இழந்து அலங்கோலமும், குரூரதோற்றமும், இருளும் உடையவர்களாக மாறினார்கள். தள்ளுண்டுபொன லூசிபர் என்ற அந்த பிரதான தேவதூதனுக்கு அன்று முதல் "சாத்தான்" அல்லது "பிசாசு" (Satan or Devil ) என்றும், அவனுடைய சகல தூதர்களுக்கும் "பேய்கள்" அல்லது "பிசாசின் ஆவிகள்" ( Demons) என்றும் பொதுவான பெயர் உண்டாயிற்று.
தேவனால் கொடுக்கப்பட்டிருந்த மகிமையும் பிரகாசமும் இவர்களை விட்டு முற்றிலும் நீங்கிப் போனதால் இவர்கள் இருளின் பிம்பங்களாக (Images ) மாறிப் போயினர். இவர்களே இன்றைய உலகில் 'பிசாசு' (Devil ) என்றும், 'பேய்கள்' (Demons ) என்றும் அழைக்கப்படுகின்றனர்.
தொடரும்...
"அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்தக்கு ஏறுவேன்; தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூடத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன் , உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் உன் இருதயத்தில் சொன்னாயே." (ஏசாயா: 14:12-14).
இவ்விதமாக தள்ளப்பட்ட லூசிபரும் அவனுடைய சேனையும் தங்கள் மகிமையின் பிரகாசத்தையும், அழகையும் முற்றிலும் இழந்து அலங்கோலமும், குரூரதோற்றமும், இருளும் உடையவர்களாக மாறினார்கள். தள்ளுண்டுபொன லூசிபர் என்ற அந்த பிரதான தேவதூதனுக்கு அன்று முதல் "சாத்தான்" அல்லது "பிசாசு" (Satan or Devil ) என்றும், அவனுடைய சகல தூதர்களுக்கும் "பேய்கள்" அல்லது "பிசாசின் ஆவிகள்" ( Demons) என்றும் பொதுவான பெயர் உண்டாயிற்று.
தேவனால் கொடுக்கப்பட்டிருந்த மகிமையும் பிரகாசமும் இவர்களை விட்டு முற்றிலும் நீங்கிப் போனதால் இவர்கள் இருளின் பிம்பங்களாக (Images ) மாறிப் போயினர். இவர்களே இன்றைய உலகில் 'பிசாசு' (Devil ) என்றும், 'பேய்கள்' (Demons ) என்றும் அழைக்கப்படுகின்றனர்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
"யார் இந்த பேய்கள்?"
பிசாசு பேய்கள் என்ற நிலையில் அவைகளை தேவன் சிருஷ்டிக்கவில்லை என்றும், பிரதான தூதனாகவும்தேவதூதர்களாகவும் சிருஷ்டிக்கப்பட்டிருந்தவர்கள், இடையில் பிசாசாகவும் பேய்களாகவும் மாறியதாக பார்த்தோம்.
பூமியில் மானிடராகப் பிறந்து, வளர்ந்து திடீரென கொலை - தற்கொலை - விபத்துக்கள் மூலம் அகால மரணமடைந்த மனிதரின் ஆவிகள் பேய்களாக பூமியில் அலைந்து திரிகின்றன என்று பலர் நம்புகின்றனர். இவ்வித நம்பிக்கையின் பலனாக அநேக விபரீதங்கள் ஏற்படுகின்றன. எனவே, பேய்களைக் குறித்த சரியான அறிவும் விளக்கமும் கிடைப்பதற்கு அகால மரணமடைந்தவர்களின் ஆவிகளைக் குறித்த விவரங்களை பரிசுத்த சத்திய வேதாகமத்தில் இருந்து நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது.
தன்னைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள விடாமல் அவர்கள் மனக் கண்களை குருடாக்கியிருப்பது 'மோசம் போக்கும் பிசாசின்' தந்திரமான செயலாகும்.
சில சமயங்களில் மனித சரீரத்தை அலைக்கழிக்கும் அசுத்த ஆவியை 'நீ யார்?' - 'உன் பெயரென்ன?' என்று கெட்டால் - சமீபத்தில் அங்கு அகால மரணமடைந்த ஒரு நபரின் பெயரை அது கூறுவதுடன் சில விசித்திரமான தகவல்களையும் அது சொல்லும். இதைக் கேட்கும் மக்கள் அவைகளை அப்படியே நூற்றுக்குநூறு நம்பி பரிசுத்த சத்திய வேதாகமம் கூறும் உண்மைகளைக் கவனியாமற் போகின்றனர். பேய்கள் கூறும் பொய் வார்த்தைகளை நம்பி தேவனுடைய வசனத்தின் உண்மைகளை புறக்கணிக்கின்றனர்.
பரிசுத்த சத்திய வேதாகமம், சமூலமும் சத்தியமுமாக இருப்பதால் அதில் கூறப்பட்டிருப்பவைகளையே நாம் உண்மையாகக் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி, வேறு யார் எதைக் கூறினாலும் அவைகளை நம்பி மோசம் போகத் தேவையில்லை.
அகால மரணமடைந்தவர்களின் ஆவிகள், பூமியில் அலைந்து திரிவது உண்மையானால், சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவும் சிலுவையில் மரித்த கள்வர்களும் பேய்களாக அலைந்தார்களா?
தன்னுடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர் இருவரில் ஒருவனிடம் 'இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்' (லூக்கா: 23:43) என்று இயேசு சொன்னார். இதிலிருந்து அகால மரணமடைந்த இயேசு கிறிஸ்துவின் ஆவியும், அந்தக் கள்வனின் ஆவியும் பூமியில் அலைந்து திரியவில்லை என்றும், மரணமடைந்த அன்றே 'பரதீசில்' இடம் பெற்றன என்பதையும் அறியலாம். அதே வேளையில் இயேசுவை மறுதலித்த அடுத்த கள்வனின் ஆவி இந்த பரதீசில் இடம் பெறவில்லை என்பதும் உண்மையாகும். இவைகளை குறித்து பின்னர் பார்ப்போம். இனி...
தொடரும்...
பிசாசு பேய்கள் என்ற நிலையில் அவைகளை தேவன் சிருஷ்டிக்கவில்லை என்றும், பிரதான தூதனாகவும்தேவதூதர்களாகவும் சிருஷ்டிக்கப்பட்டிருந்தவர்கள், இடையில் பிசாசாகவும் பேய்களாகவும் மாறியதாக பார்த்தோம்.
பூமியில் மானிடராகப் பிறந்து, வளர்ந்து திடீரென கொலை - தற்கொலை - விபத்துக்கள் மூலம் அகால மரணமடைந்த மனிதரின் ஆவிகள் பேய்களாக பூமியில் அலைந்து திரிகின்றன என்று பலர் நம்புகின்றனர். இவ்வித நம்பிக்கையின் பலனாக அநேக விபரீதங்கள் ஏற்படுகின்றன. எனவே, பேய்களைக் குறித்த சரியான அறிவும் விளக்கமும் கிடைப்பதற்கு அகால மரணமடைந்தவர்களின் ஆவிகளைக் குறித்த விவரங்களை பரிசுத்த சத்திய வேதாகமத்தில் இருந்து நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது.
தன்னைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள விடாமல் அவர்கள் மனக் கண்களை குருடாக்கியிருப்பது 'மோசம் போக்கும் பிசாசின்' தந்திரமான செயலாகும்.
சில சமயங்களில் மனித சரீரத்தை அலைக்கழிக்கும் அசுத்த ஆவியை 'நீ யார்?' - 'உன் பெயரென்ன?' என்று கெட்டால் - சமீபத்தில் அங்கு அகால மரணமடைந்த ஒரு நபரின் பெயரை அது கூறுவதுடன் சில விசித்திரமான தகவல்களையும் அது சொல்லும். இதைக் கேட்கும் மக்கள் அவைகளை அப்படியே நூற்றுக்குநூறு நம்பி பரிசுத்த சத்திய வேதாகமம் கூறும் உண்மைகளைக் கவனியாமற் போகின்றனர். பேய்கள் கூறும் பொய் வார்த்தைகளை நம்பி தேவனுடைய வசனத்தின் உண்மைகளை புறக்கணிக்கின்றனர்.
பரிசுத்த சத்திய வேதாகமம், சமூலமும் சத்தியமுமாக இருப்பதால் அதில் கூறப்பட்டிருப்பவைகளையே நாம் உண்மையாகக் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி, வேறு யார் எதைக் கூறினாலும் அவைகளை நம்பி மோசம் போகத் தேவையில்லை.
அகால மரணமடைந்தவர்களின் ஆவிகள், பூமியில் அலைந்து திரிவது உண்மையானால், சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவும் சிலுவையில் மரித்த கள்வர்களும் பேய்களாக அலைந்தார்களா?
தன்னுடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர் இருவரில் ஒருவனிடம் 'இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்' (லூக்கா: 23:43) என்று இயேசு சொன்னார். இதிலிருந்து அகால மரணமடைந்த இயேசு கிறிஸ்துவின் ஆவியும், அந்தக் கள்வனின் ஆவியும் பூமியில் அலைந்து திரியவில்லை என்றும், மரணமடைந்த அன்றே 'பரதீசில்' இடம் பெற்றன என்பதையும் அறியலாம். அதே வேளையில் இயேசுவை மறுதலித்த அடுத்த கள்வனின் ஆவி இந்த பரதீசில் இடம் பெறவில்லை என்பதும் உண்மையாகும். இவைகளை குறித்து பின்னர் பார்ப்போம். இனி...
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
யினியவன் wrote:தொடருங்கள் சார்லஸ்...
நன்றி யினியவன்.
உங்கள் பேராதரவுடன் தொடருகிறேன்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
தேவனுக்கென்று இரத்த சாட்சிகளாக மரிக்கும் அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், பரிசுத்தவான்கள் ஆகியோரின் ஆவிகள் அனைத்தும் மரணமடைந்த உடன் தானே பரதீசை அடைகின்றன.
இவ்விதமே திடீர் மரணத்திற்குட்பட்டு அகால மரணமடையும் எந்த மனிதரின் ஆவியும் பூமியிலே பேயாக அலைந்து திரிவதில்லை.
முன் விரோதத்தின் காரணமாக படுகொலை செய்யப்பட்ட ஒரு பொல்லாத வாலிபரின் ஆவி தன்னைக் கொலை செய்தவனையோ அல்லது அவனுடைய குடும்பத்தினரையோ பிடித்து அலைக்கழிக்காமல் வேறு ஒரு பாமரப் பெண்ணைப் பிடித்து அலைக்கழிப்பது ஏன்?
வறுமையின் கொடுமையால் தன் பிள்ளைகளைப் போஷித்து வளர்க்க முடியாத ஒரு தாய் தூக்குப் போட்டு - விஷம் குடித்து - கிணற்றில் விழுந்து தற்கொலை செய்கிறாள். இவ்விதம் தற்கொலை புரிந்து அகால மரணமடைந்த இந்தப் பெண்ணின் ஆவி, தன் பிள்ளைகளுக்கு நன்மை செய்வதை விட்டுவிட்டு, அந்த வழியே வந்த வேறொரு பெண்ணை பிடித்து ஆடி அலைக்கழிப்பதேன்?
தன்னைக் காதலித்து பின்பு துரோகம் செய்த வாலிபனை விட்டு மனமுடைந்து தற்கொலை புரிந்து அகால மரணமடையும் ஒரு பெண்ணிண் ஆவி தனக்கு துரோகம் செய்த அந்த வாலிபனை அலைக்கழிப்பதை விட்டு வேறொருவரை பிடித்து ஆடுவது ஏன்? இவைகள் எல்லாம் உங்கள் சிந்தனைக்கு உரியது!
மனிதரை அலைக்கழிக்கும் பிசாசின் ஆவிகள் (பேய்கள்) , அகால மரணமடைந்தோரின் ஆவிகள் அல்ல என்ற உண்மையை நீங்கள் முதலாவது அறிவது அவசியம். அப்படியானால்,
1. அவர்கள் யார்?
2. அகால மரணமடைந்தோரின் ஆவிகள் எங்கே?
- என்ற கேள்விகள் உண்டாகலாம்.
மனிதரைப் பூமியில் அலைக்கழிக்கும் இவ்வித பேய்கள் அகால மரணமடைந்து இறந்துபோன மனிதரின் ஆவிகள் அல்ல. நாம் முன்பு வாசித்தது போல இவைகளை 'சாத்தானின் கணங்கள்' (Demons ) என்று கூறலாம்.
"... அவன் ஆதி முதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கின்றான்; சத்தியம் அவனிடத்திலிராதபடியால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை: அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால், அவன் பொய் பேசும்பொழுது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்" (யோவான்: 8:44).
தொடரும்...
இவ்விதமே திடீர் மரணத்திற்குட்பட்டு அகால மரணமடையும் எந்த மனிதரின் ஆவியும் பூமியிலே பேயாக அலைந்து திரிவதில்லை.
முன் விரோதத்தின் காரணமாக படுகொலை செய்யப்பட்ட ஒரு பொல்லாத வாலிபரின் ஆவி தன்னைக் கொலை செய்தவனையோ அல்லது அவனுடைய குடும்பத்தினரையோ பிடித்து அலைக்கழிக்காமல் வேறு ஒரு பாமரப் பெண்ணைப் பிடித்து அலைக்கழிப்பது ஏன்?
வறுமையின் கொடுமையால் தன் பிள்ளைகளைப் போஷித்து வளர்க்க முடியாத ஒரு தாய் தூக்குப் போட்டு - விஷம் குடித்து - கிணற்றில் விழுந்து தற்கொலை செய்கிறாள். இவ்விதம் தற்கொலை புரிந்து அகால மரணமடைந்த இந்தப் பெண்ணின் ஆவி, தன் பிள்ளைகளுக்கு நன்மை செய்வதை விட்டுவிட்டு, அந்த வழியே வந்த வேறொரு பெண்ணை பிடித்து ஆடி அலைக்கழிப்பதேன்?
தன்னைக் காதலித்து பின்பு துரோகம் செய்த வாலிபனை விட்டு மனமுடைந்து தற்கொலை புரிந்து அகால மரணமடையும் ஒரு பெண்ணிண் ஆவி தனக்கு துரோகம் செய்த அந்த வாலிபனை அலைக்கழிப்பதை விட்டு வேறொருவரை பிடித்து ஆடுவது ஏன்? இவைகள் எல்லாம் உங்கள் சிந்தனைக்கு உரியது!
மனிதரை அலைக்கழிக்கும் பிசாசின் ஆவிகள் (பேய்கள்) , அகால மரணமடைந்தோரின் ஆவிகள் அல்ல என்ற உண்மையை நீங்கள் முதலாவது அறிவது அவசியம். அப்படியானால்,
1. அவர்கள் யார்?
2. அகால மரணமடைந்தோரின் ஆவிகள் எங்கே?
- என்ற கேள்விகள் உண்டாகலாம்.
மனிதரைப் பூமியில் அலைக்கழிக்கும் இவ்வித பேய்கள் அகால மரணமடைந்து இறந்துபோன மனிதரின் ஆவிகள் அல்ல. நாம் முன்பு வாசித்தது போல இவைகளை 'சாத்தானின் கணங்கள்' (Demons ) என்று கூறலாம்.
"... அவன் ஆதி முதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கின்றான்; சத்தியம் அவனிடத்திலிராதபடியால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை: அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால், அவன் பொய் பேசும்பொழுது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்" (யோவான்: 8:44).
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
"அகால மரணமும், அவ்வித மரணமடைந்தோரின் ஆவிகளும்"
அகால மரணமடைந்த மனிதரின் ஆவிகள் பேய் - பிசாசாக உலகில் அலைவதாக அநேகர் நம்புகின்றனர். அதாவது, தங்களுடைய பூரணவயதை அடைவதற்குள் ஒருவர் விபத்துக்குள்ளாகி, அல்லது கொலை செய்யப்பட்டு, அல்லது தற்கொலை புரிந்து, அல்லது வேறு காரணத்தால் திடீரென மரிக்க நேரிட்டால் அவ்வித அகால மரணத்திற்கு உட்பட்ட மனிதரின் ஆவிகள் பூமியில் அலைந்த திரிவதாகவும் உயிரோடு வசிக்கும் மனிதரை இவைகள் ஆட்கொள்வதாகவும் நம்புகின்றனர். இந்த விஷயங்களை அறிந்து கொள்ளும் முன்பு அகால மரணத்தைக் குறித்த சில உண்மைகளை நாம் அறிந்து கொள்வது அதிக நன்மை தரும்.
தொடரும்...
அகால மரணமடைந்த மனிதரின் ஆவிகள் பேய் - பிசாசாக உலகில் அலைவதாக அநேகர் நம்புகின்றனர். அதாவது, தங்களுடைய பூரணவயதை அடைவதற்குள் ஒருவர் விபத்துக்குள்ளாகி, அல்லது கொலை செய்யப்பட்டு, அல்லது தற்கொலை புரிந்து, அல்லது வேறு காரணத்தால் திடீரென மரிக்க நேரிட்டால் அவ்வித அகால மரணத்திற்கு உட்பட்ட மனிதரின் ஆவிகள் பூமியில் அலைந்த திரிவதாகவும் உயிரோடு வசிக்கும் மனிதரை இவைகள் ஆட்கொள்வதாகவும் நம்புகின்றனர். இந்த விஷயங்களை அறிந்து கொள்ளும் முன்பு அகால மரணத்தைக் குறித்த சில உண்மைகளை நாம் அறிந்து கொள்வது அதிக நன்மை தரும்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Page 1 of 15 • 1, 2, 3 ... 8 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 15
|
|