புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
306 Posts - 42%
heezulia
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
6 Posts - 1%
prajai
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
5 Posts - 1%
manikavi
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_m10பிரம்ம லிங்கேஸ்வரர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரம்ம லிங்கேஸ்வரர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 19, 2012 12:04 pm


பிரம்ம லிங்கேஸ்வரர் E_1342538344

எல்லோருடைய தலை எழுத்தையும் எழுதும் பிரம்மாவுக்கு அவர் தலையில் யார் என்ன எழுதினார்களோ சாபத்துக்கு மேல் சாபம் வந்து சேர்ந்தது அவருக்கு.

அதுவும் பட்டகாலிலேயே படும் என்பதுபோல, ஒரே மாதிரியான சாபம். முதலில் சாபமிட்டவர் பிருகு முனிவர்.

ஒருசமயம் ரிஷிகள் எல்லோரும் சேர்ந்து, சரஸ்வதி நதிக்கரையில் ஒரு யாகம் நடத்தத் தீர்மானித்தார்கள்.

அந்த யாகத்தில் யாருக்கு முதல் மரியாதை தருவது என்ற கேள்வி எழுந்தது. அதற்காக மும்மூர்த்தியரையும் பரீட்சிக்கத் தீர்மானித்த ரிஷிகள், அந்தப் பணியைச் செய்திட பிருகு முனிவரை அனுப்பினர்.

பிருகு முனிவர் முதலில் சென்ற இடம் சத்யலோகம். அதாவது பிரம்மாவின் இருப்பிடம். அங்கே முனிவருக்கு சரியான வரவேற்போ மரியாதையோ கிடைக்காததால் முனிவர் சினத்தோடு பிரம்மாவுக்கு சாபம் விட்டார்.

“பூவுலகில் உனக்கு கோயிலே இல்லாமல் போகட்டும்..!’

முனிவரின் ராசியோ என்னவோ பிரம்மாவுக்குக் கிடைத்த இரண்டாவது சாபமும் “பூலோகத்தில் பூஜையோ கோயிலோ உனக்கு இல்லாமல் போகட்டும்’ என்றே விடப்பட்டது.

இரண்டாவது சாபத்தை விட்டவர், சிவபெருமான்.

திருமாலும், நான்முகனும் தங்களின் யார் பெரியவர் என்று சண்டைபோட்டது, அப்போது ஜோதிவடிவாக சிவபிரான் அங்கே தோன்றி தனது திருவடி திருமுடி காணச் சொன்னது, அந்த சமயத்தில் பிரம்மா பொய் சொல்லி சாபத்துக்கு ஆளானது எல்லாம் உங்களுக்கே தெரியும்தானே!

மூன்றாவதாக சாபம் விட்டவர், சரஸ்வதி. தான் படைத்தவளைத் தானே மணந்துகொண்டதால் பிரம்மாவுக்கு வந்த சாபம் அது. அதுவும்... வேறே என்ன “மண்ணுலகில் உமக்கு கோயில் எழுப்ப மாட்டார்கள்...!’ என்ற அதே சாபம்தான்.

இப்படி சாபத்துக்கு மேல் சாபம் வாங்கியதாலோ என்னவோ, மற்ற எல்லோருடைய சாபத்துக்கும் விமோசனம் கிடைப்பதுபோல் நான்முகனின் சாபத்துக்கு மட்டும் விமோசனமே இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் ஆறுதலளிப்பதுபோல் மிக அபூர்வமாக ஓரிரு கோயில்கள் பிரம்மாவுக்கு இருக்கின்றன.

அப்படி அமைந்த கோயில்களுள் பிரபலமானது. புஷ்கர் பிரம்மா கோயில். பலருக்கும் தெரியாத ஒரு பிரம்மா ஆலயத்தைத்தான் நாம் இப்போது தரிசிக்கப் போகிறோம்.

இந்த ஆலயம் இருப்பது, ஆந்திராவில் குண்டூரில் இருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள செபரோலு என்ற கிராமத்தில் கோயிலின் பெயர், சதுர்முக பிரம்ம லிங்கேஸ்வரசுவாமி திருக்கோயில்.

பிரம்மாவின் இருப்பிடம் தாமரைமலர் என்கின்றன புராணங்கள். அதனாலோ என்னவோ இந்தக் கோயிலும் ஒரு தாமரைப் பூவைப்போல குளத்தின் நடுவில் அமைந்துள்ளது.

நான்கு புறமும் படிகள் அமைந்து அழகான குளம். அதன் நடுவே இருக்கும் கோயிலுக்குச் செல்ல நீளமான பாதை சுற்றிலும் தணீர் நிறைந்து நிற்க, ஜில் காற்று நம்மைத் தழுவ, இயற்கையின் பசுமை கண்களைக் குளிர்வித்து மனதிற்கு இதமளிக்க, அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது கோயில்!

ஒரே ஒரு கர்ப்பகிரகம் மட்டுமே இருக்கிறது. வலம் வர விசாலமான பிரதட்சணப் பாதை. கர்ப்பகிரகத்தின் எதிரே உள்ள துவஜஸ்தம்பத்தின் உச்சியில் ஒரு சூலம் காணப்படுகிறது. சூலத்திலும் துவஜஸ்தம்பத்திலும் ஏராளமான மணிகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.

கருவறையில் உயரமான தாமரை மலர் போன்ற பீடத்தில் பிரம்ம லிங்கேஸ்வரரின் தரிசனம் கிடைக்கிறது. அந்த லிங்கத் திருமேனியின் நான்கு புறமும் பிரம்மாவின் உருவம் செதுக்கப் பட்டு உள்ளது. ஒரு காலை மடக்கி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் நான்முகன். நான்கு புறமும் தரிசனம் செய்வதற்கு வசதியாக நான்கு ஜன்னல்கள் அமைந்திருக்கிறார்கள். அபிஷேக, அர்ச்சனை, பூஜைகள் தினமும் நடைபெறுகின்றன.

இந்தக் கோயிலுக்குப் பக்கத்திலேயே ஒரு சிவன், ரங்கநாதர் வேணு கோபாலசுவாமி கோயில்கள் அமைந்திருப்பது ஆச்சரியமான விஷயம். அருகில் ஒரே கல்லால் ஆன பெரிய நந்திதேவர் தரிசனமும் கிடைக்கிறது.

பேரரசர்கள் பலர் ஆண்ட பெருமைக்கும் பழமைக்கும் உரிய தலம் இது. வெவ்வேறு வம்சத்து அரசர்கள் ஆட்சி செய்ததால் அவரவர் காலத்தில் கோயில்கள் அமைக்கப்பட்டதில், இந்த ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தனவாம். காலப்போக்கில் பல அழிந்துவிட இப்பொழுது ஒரு சில கோயில்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்கிறார்கள்.

எப்படியோ, பிரம்மாவுக்கு கோயில்கள் இருப்பதே அபூர்வம். அதிலும் பக்கத்தில் இருந்த பல கோயில்கள் சிதைந்து சீரழிந்து காலப்போக்கில் மறைந்தும்விட்ட நிலையில் இந்த பிரம்மன் கோயில் நிலைத்திருப்பது அதிசயம்! பழமையான பக்தி அதிர்வுகள் நிறைந்த கோயில். கிராமிய மணத்தைத் தொலைக்காத வித்தியாசமான சூழல். வேண்டிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லாமல், தரிசனம் செய்தாலே தேவைகள் எல்லாம் ஈடேறச் செய்யும் பிரம்ம லிங்கேஸ்வரர். இன்னும் வேறு என்ன வேண்டும் நீங்கள் இந்தக் கோயிலுக்குச் சென்றுவர...!

- சமாத்மிகா, பெங்களூரு.



பிரம்ம லிங்கேஸ்வரர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 19, 2012 12:36 pm

எப்படியோ, பிரம்மாவுக்கு கோயில்கள் இருப்பதே அபூர்வம். அதிலும் பக்கத்தில் இருந்த பல கோயில்கள் சிதைந்து சீரழிந்து காலப்போக்கில் மறைந்தும்விட்ட நிலையில் இந்த பிரம்மன் கோயில் நிலைத்திருப்பது அதிசயம்! பழமையான பக்தி அதிர்வுகள் நிறைந்த கோயில். கிராமிய மணத்தைத் தொலைக்காத வித்தியாசமான சூழல். வேண்டிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லாமல், தரிசனம் செய்தாலே தேவைகள் எல்லாம் ஈடேறச் செய்யும் பிரம்ம லிங்கேஸ்வரர். இன்னும் வேறு என்ன வேண்டும் நீங்கள் இந்தக் கோயிலுக்குச் சென்றுவர...!
:வணக்கம்: நன்றி
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக