புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
83 Posts - 50%
heezulia
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
2 Posts - 1%
prajai
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
125 Posts - 54%
heezulia
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
8 Posts - 3%
Srinivasan23
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
2 Posts - 1%
prajai
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 18, 2012 7:08 am

கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Jayalalitha+Calls+for+calm+among+Keralites+in+Mulla+Periyar+Issue

`கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் மட்டும்தான் இறையருள் கிட்டும்'' என்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கதை சொல்லி முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

இப்தார் நோன்பு திறப்பு

கடந்த 15 ஆண்டுகளாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாலை 6.10 மணிக்கு அரங்கிற்கு வந்தார். அவரை, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, தலைமை ஹாஜி முகம்மது சலாபுதீன் அய்ïப் உள்ளிட்டோர் மேடைக்கு அழைத்து சென்றனர்.

முதலில், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா அனைவரையும் வரவேற்றார். அவர் தனது வரவேற்புரையில், ``முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். இது மதநல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்குகிறது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து, இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

5 கடமைகள்

அ.தி.மு.க. சார்பில் ஒவ்வோர் ஆண்டும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நான் விடுத்த அழைப்பினை ஏற்று `இப்தார் நோன்பு திறப்பு' நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதத்தின் மீது பற்று வைத்தல், குர்ஆன் ஓதுதல், நோன்பிருத்தல், இரவலர்க்கு தர்மம் செய்தல், புனித யாத்திரை மேற்கொள்ளுதல் ஆகிய 5 கடமைகளில் ஒன்றான நோன்பிருத்தலை இந்தப் புனித மாதத்தில் மேற்கொண்டிருக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறையருள் யாருக்கு கிடைக்கும்?

நீர் அருந்தாமல், உணவு உட்கொள்ளாமல் இறைப் பற்றுடன் இந்த நோன்பினை இஸ்லாமியப் பெருமக்கள் மேற்கொண்டு இருக்கும் இந்தத் தருணத்தில், "இறையருள் யாருக்குக் கிடைக்கும்?'' என்பது குறித்த ஒரு செய்தியை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு வறண்ட பூமி. அங்கே ஒரு மனிதர் நடந்து போய்க் கொண்டிருந்தார். மழை பெய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்து ஆகாயத்தைப் பார்த்தார் அந்த மனிதர். அப்போது "இன்னாருடைய தோட்டத்தில் மழை பொழிவாயாக'' என்று மேகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.

தோட்டக்காரர்


பின்னர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மழை பொழிந்தது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த மனிதர், ஓடிய அந்தத் தண்ணீரை பின்தொடர்ந்து போனார். அங்கே ஒரு தோட்டக்காரர் மண்வெட்டியால் அந்தத் தண்ணீரை திருப்பிவிட்டு தன் தோட்டத்துக்கு பாய்ச்சிக் கொண்டிருந்தார். அந்த தோட்டக்காரரிடம் இந்த மனிதர் "உங்கள் பெயர் என்ன'' என்று விசாரித்தார். அந்தத் தோட்டக்காரரும் தன் பெயரைக் குறிப்பிட்டார்.

உடனே அந்த மனிதர் "கொஞ்ச நேரத்துக்கு முன்பு அந்த வழியாக வந்து கொண்டிருந்தேன். அப்போது உங்கள் பேரைச் சொல்லி உங்கள் தோட்டத்தில் மழை பெய்யும்படியாக என்று மேகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது'' என்று கூறினார். "அப்படியா?'' என்றார் அந்த தோட்டக்காரர்.

கடமை உணர்வு

உடனே அந்த மனிதர் "இந்த அளவுக்கு உங்களுக்கு இறையருள் கிடைத்திருக்கிறதே, அதற்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்'' என்று வினவினார். அதற்கு அந்தத் தோட்டக்காரர் "நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தத் தோட்டத்தில் எது விளைந்தாலும் அதை மூன்றாக பிரித்து விடுவேன். ஒரு பகுதியை தர்மம் செய்து விடுவேன். இரண்டாவது பகுதியை எனது குடும்பத்திற்காக வைத்துக் கொள்வேன். மூன்றாவது பகுதியை இதே நிலத்தில் மீண்டும் பயிர் செய்து விடுவேன்'' என்று கூறினார். இதில் இருந்து கடமை உணர்வுடன் இறைவனைத் தொழுகிறவர்களுக்கு மட்டும் தான் இறையருள் கிட்டும் என்ற உண்மை தெரிகிறது.

இறை வழிபாட்டுடன், ஏழை, எளியவர்களுக்கு தர்மம் செய்யும் கடமை உட்பட இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து கடமைகளையும் மேற்கொண்டு இறையருளை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

இறுதியாக, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் முகம்மது ஜான் நன்றி கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பி.எச்.பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தமிழ்மகன் உசேன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் பிரெசிடெண்ட் முகம்மது அபுபக்கர், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் என்.சேதுராமன், இந்திய குடியரசு கட்சி தலைவர் சே.கு.தமிழரசன், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினத்தந்தி



கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக