புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
31 Posts - 36%
prajai
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
3 Posts - 3%
Jenila
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
1 Post - 1%
jairam
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
7 Posts - 5%
prajai
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
6 Posts - 4%
Jenila
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
4 Posts - 3%
Rutu
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தாமதம்  Poll_c10தாமதம்  Poll_m10தாமதம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமதம்


   
   
ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Sat Oct 06, 2012 8:56 am

ஒரு உருவம் மறைந்து மறைந்து அலுவலகத்தில் நுழைந்தது. கண்காணிப்பாளரின் அறையை கடக்கும் போது ஒரு அசைவை உணர்ந்த அவர் திரும்பி பார்த்தார். அதற்குள் அந்த உருவம் அவரை கடந்து விட்டது. வேலை பளு காரணமாக அவர் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. கண்காணிப்பாளரிடம் இருந்து தப்பிய மகிழ்ச்சியில் தன் இடத்தை அடைய முற்பட்ட போது அந்த உருவம் உயர் அதிகாரியிடம் பிடிபட்டது. அது வேற யாரும் இல்லை. அந்த அலுவலத்தில் பணி புரியும் கார்த்திக்.

பிறகு எதற்கு ஒளிந்து மறைந்து வந்தான் என்று யோசிக்கிறீர்களா? அலுவலத்திற்கு தாமதமாக வரும் அவனை யாரும் பார்த்து விட கூடாது என்பதற்காக தான். அலுவலத்திற்க்கு தாமதமாக வருவது அவ்வளவு பெரிய குற்றமா என்று கேட்காதீர்கள்!! கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் இவன் 25வது தடவையாக தாமதமாக வருகிறான். அவனின் வெள்ளி விழாவை யாரும் கண்டு பிடித்து விட கூடாது என்றே ஒளிந்து மறைந்து வந்தான். கார்த்திக் தன் உயர் அதிகாரியின் அறைக்கு அழைக்கப் பட்டான். என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

அவனுக்கு அந்த கஷ்டத்தையே கொடுக்கலை அவர். உள்ளே நுழைந்ததில் இருந்து ஒரே வசவு மழை. வாயிலேயே வயலின் வாசித்தார். கார்த்திக்கு காதில் பஞ்சு வைத்து அடைத்துக் கொள்ளலாம் போல இருந்தது. இருந்தாலும் தன் ஐம்புலங்களையும் அடக்கி வைத்துக் கொண்டிருந்தான். முகத்தை பாவம் போல வைத்து கொண்டு நின்றிருந்தான். கார்த்திக்கின் மனக் குரல். அதான் மைண்ட் வாய்ஸ் இது. (பாழப்போன வேலைக்காக கண்டவன் திட்டுறதெல்லாம் காது கொடுத்து கேட்க வேண்டிருக்கு. நான் என்ன வேணும்னா பண்றேன். எனக்கு நேரம் சரி இல்லை. 7 ½ சனி நடக்குது. ஆடி போய் ஆவணி வந்தா டாப் பா வருவேன்னு எங்க அம்மாவே சொல்லிட்டாங்க. இவன் வேற கழுத்தறுக்கிறானே! சரி சமாளிப்போம்).

ஒரு வழியா வயலினோட வாய் அந்து போய் சத்தம் நின்றது. பாவம் அவருக்கும் வாய் வலிக்கும்ல. கடைசியாக வயலின் கொடுத்த சத்தம் இது. “5 நாள் சம்பளம் இல்லாமல் உன்னை வேலை நிறுத்தம் செய்யறேன். 6வது நாள் ல இருந்து சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வராவிட்டால் உன்னை மொத்தமாக வேலையை விட்டு நிறுத்தி விடுவேன்” என்று கூறியவரிடம் “சாரி சார். ஓகே சார்” என்று உளறிக் கொட்டினான் கார்த்திக். “கெட் அவுட் ஆஃப் மை ரூம்” என்று அலறினார். வெளியே வந்த கார்த்திக் “அப்பப்பா! இந்த ஆளு பிறக்கும் போதே ஸ்பீக்கர்ற முழுங்கிட்டார் போல இருக்கே. என்ன சத்தம். என்ன சத்தம். முடியலை” என்று புலம்பினான்.

தன் சக பணியாளர்களிடம் ஏதோ விருதை வாங்கியதை பகிர்ந்துக் கொண்டதை போல “ என்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. நான் வீட்டுக்கு போறேன். வீட்டுக்கு போறேன்” என்று சந்தோஷமாக அறிவித்து விட்டு வீட்டுக்கு கிளம்பினான். வீட்டிற்கு சென்றதும் அவன் அப்பா, “என்னடா அதுக்குள்ள ஆஃபிஸ் ல இருந்து வந்துட்ட?” என்றார் ஆச்சரியத்துடன். காரணத்தை கூறியதும் வீட்டில இருந்த வயலினும் வாசிக்க தொடங்கியது. இது 24 வருடமாக கேட்டு கேட்டு சலித்துப் போன ராகம் தான் என்பதால் கார்த்திக் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அதற்குள் சமையல் அறையில் இருந்து வந்த அவன் அம்மா “விடுங்க. அவன் என்ன வேணும்னா பண்றான். அவன் கிரகம் தான் அவனை இப்படி ஆட்டி வைக்குது. பாவம் புள்ளை. காலையில சாப்பிடாம கூட ஆபிஸ் கிளம்பிட்டான். நீ வா டா!! சாப்பிடலாம்” என்று முடிப்பதற்குள் சாப்பிட அமர்ந்தான் கார்த்திக். “நல்லா கொட்டு. நீ எங்க அவனை உருப்பட விட போற” என்று தனியே புலம்பினார் கார்த்திக் அப்பா.

சாப்பிட்டு முடித்து தன் அறைக்கு சென்றவன் 1,2,3,4,5 என சுவற்றில் கிறுக்கினான். தன் வேலை நிறுத்த நாட்களை எண்ணிக் கொள்வதற்காக. நன்கு உண்டு உறங்கி என முதல் நாள் எப்படியோ கழிந்தது. சுவற்றில் இருந்த 1 என்ற எண்னை வட்டமிட்டு 1 நாள் முடிந்ததை குறித்துக் கொண்டான். 2 வது நாளில் இருந்து பொழுது கழிவதே பெரும்பாடாக இருந்தது. இனியேனும் எப்படியாவது காலம் தவறாமல் அலுவலகம் செல்வதென்று முடிவெடுத்தான். 5 நாட்கள் முடிந்தது. அன்று இரவு தூங்கும் முன் தன் அலைபேசியில் அலறிமணியை 6 மணிக்கெல்லாம் வைத்து விட்டு படுத்தான். ஏனோ அவன் தூங்கும் முன் சிறு சந்தேகம் ஏற்பட்டது. ஒரு வேலை அலைபேசி அலறிமணி அடித்தும் தான் விழிக்காவிட்டால் உயரதிகாரியின் வயலினை யார் கேட்பது என்று!!!

உடனே எழுந்து தன் வீட்டில் இருந்த எழுப்பு மணி கடிகாரம் இரண்டிலும் அலறிமணியை 6 மணிக்கு ஒலிக்க செய்துவிட்டு, தன் அம்மாவிடமும் காலையில் சீக்கிரம் தன்னை எழுப்பும் படி கூறி விட்டு உறங்க சென்றான். அலறிமணி வேலை செய்யுமோ செய்யாதோ என்ற குழப்பத்திலே இருந்தவன் உறங்க 3 மணி ஆனது. அனைத்து அலறிமணியும் சரியாக 6 மணிக்கு வேலை செய்தது. ஆனால் அவன் காதுகள் தான் வேலை செய்யவில்லை. பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த அவன் தந்தை எழுந்து, “ஏன் டி. உன் புள்ளை எனக்கு அலாரம் வச்சானா, அவனுக்கு வச்சானா. பாரு. எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி தூங்குறத.” என்று ஆரம்பித்தார். “காலைலே பிள்ளையை திட்ட ஆரம்பிச்சுட்டீங்களா? போய் பால் வாங்கிட்டு வாங்க. காபி போட்டு தரேன்” என்று சமாதானப் படுத்தி அனுப்பிவிட்டு, கார்த்திக் அறைக்கு சென்று, “தங்கம் எழுந்துரு பா” என்று 2,3 தடவை எழுப்பி பார்த்தாள். இடியே விழுந்தாலும் அவன் காதுகளில் கேட்பதாக இல்லை. அவளும் சமையல் அறை சென்று தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.

மணி 8 ஆனது. செய்திதத்தாள் படித்துக் கொண்டிருந்த அவன் அப்பா, “6 மணிக்கு அலாரம் வச்ச உன் புள்ளை இன்னுமாடி எழுந்திருக்கிறான்?” என்றார். “தெரியலைங்க. நான் கூட போய் எழுப்பி பார்த்தேன். எழுந்திருக்கலை” என்றாள் அவன் அம்மா. “இப்போ பாரு உன் புள்ளை எப்பிடி எழுந்திரிக்கிறானு என்றவர் ஒரு வாளி நிறைய தண்ணீரை எடுத்து வந்து கார்த்திக் மேல் ஊற்றினார். பதறி எழுந்தவன் திடுக்கிட்டு மணியைப் பார்த்தான். 8.30 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினால் தான் அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியும். அலறிமணியையும், அம்மாவையும் திட்ட கூட அவனுக்கு நேரம் இல்லை. அவசர அவசரமாக ஒரு கையில் பல் துலக்கிக் கொண்டு, ஒரு கையில் முக சவரத்தை செய்துக் கொண்டிருந்தான். அரையும் குறையுமாக இரண்டையும் முடித்து குளியலறைக்குள் சென்றான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் அப்பா, “துரை இவ்வளோ அவசரமா எங்க கிளம்புறார்னு” என்று கேட்க, “தெரியலைங்க. என்கிட்டயும் ஏதும் சொல்லலை” என்றாள் அவன் அம்மா.

குளித்து முடித்து உடை அணிந்து கிளம்ப மணி சரியாக 8.30 ஆனது. எப்படியாவது சரியான நேரத்திற்கு செல்ல நினைத்து உணவு உண்ணாமலே வீட்டை விட்டு வெளியேறினான். தமிழ்நாட்டின் மின்தடையும் அவன் நேரத்தை வீணடித்தது. மின்தூக்கி வேலை செய்யாததால் படிக்கட்டுகளில் பறந்தான் எதிரே வந்த பக்கத்து வீட்டு நண்பன் இளங்கோ, “என்னடா கார்த்தி காலையிலே எங்க கிளம்பிட்ட?” என்று முடிப்பதற்குள் அவனை விலக்கிக் கொண்டு தன் இரண்டு சக்கர வாகனத்தை கிளப்பினான். வாகனமும் பொறுமையை சோதித்தே கிளம்பியது. வழியில் போக்குவரத்து நெரிசலும் அவனை விடவில்லை. அனைத்து பிரச்சனையும் சமாளித்து அவன் அலுவலக வாசலை அடைந்த போது மணி சரியாக 9. சரியான நேரத்திற்கு வந்து வயலின் வாயில் விழுகாததை நினைத்து மகிழ்ச்சியுடன் கதவை திறக்க முயன்றான். பல முறை முயன்றும்’ கதவு திறக்கவில்லை. அப்போது அங்கு வந்த அலுவலக காவலாளி, “சார் சார் என்ன பண்றீங்க.?” என்று கேட்க, “யோ ஏன் யா 9 மணி ஆகியும் கதவு திறக்காம என்னய்யா பண்ற?” என்றான் கார்த்திக். “இன்னைக்கு ஞாயிறுக் கிழமை சார். அது தெரியாம என்கிட்ட ஏன் கோவப்படுறீங்க?” என்றான் அலுவலக காவலாளி. நொந்து போன கார்த்திக் “என்னைக்காவது நான் சரியான நேரத்திற்கு வந்து பாத்துருக்கியா? அப்புறம் ஏன்?” என்று தலையில் கை வைத்து அருகில் இருந்த இருக்கையிலேயே அமர்ந்து போனான் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 11:41 am

கார்த்திக்கின் அவஸ்தைகள் அருமை.

நாங்கல்லாம் கார்த்திக் மாதிரி இல்லாமல் நேரத்துக்கு ஈகரைக்கு வந்துருவோம் - சிவா வயலின் வாசிச்சா கொடுமையா இருக்கும் அதான். புன்னகை




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக