புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:30

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 20:27

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 0:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 0:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 21:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 21:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 21:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 21:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 21:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 20:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 17:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 14:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 11:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 10:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 9:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 23:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 20:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 14:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 13:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அநாகரிகம்...! Poll_c10அநாகரிகம்...! Poll_m10அநாகரிகம்...! Poll_c10 
12 Posts - 86%
ayyasamy ram
அநாகரிகம்...! Poll_c10அநாகரிகம்...! Poll_m10அநாகரிகம்...! Poll_c10 
2 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அநாகரிகம்...! Poll_c10அநாகரிகம்...! Poll_m10அநாகரிகம்...! Poll_c10 
308 Posts - 42%
heezulia
அநாகரிகம்...! Poll_c10அநாகரிகம்...! Poll_m10அநாகரிகம்...! Poll_c10 
302 Posts - 41%
Dr.S.Soundarapandian
அநாகரிகம்...! Poll_c10அநாகரிகம்...! Poll_m10அநாகரிகம்...! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அநாகரிகம்...! Poll_c10அநாகரிகம்...! Poll_m10அநாகரிகம்...! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அநாகரிகம்...! Poll_c10அநாகரிகம்...! Poll_m10அநாகரிகம்...! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அநாகரிகம்...! Poll_c10அநாகரிகம்...! Poll_m10அநாகரிகம்...! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அநாகரிகம்...! Poll_c10அநாகரிகம்...! Poll_m10அநாகரிகம்...! Poll_c10 
6 Posts - 1%
prajai
அநாகரிகம்...! Poll_c10அநாகரிகம்...! Poll_m10அநாகரிகம்...! Poll_c10 
5 Posts - 1%
manikavi
அநாகரிகம்...! Poll_c10அநாகரிகம்...! Poll_m10அநாகரிகம்...! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அநாகரிகம்...! Poll_c10அநாகரிகம்...! Poll_m10அநாகரிகம்...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அநாகரிகம்...!


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu 20 Dec 2012 - 15:09

புதுதில்லி புறநகர்ப் பகுதியில் ஓடும் பேருந்தில் ஒரு மாணவி ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும், பாலியல் கொடுமை குற்றங்களுக்குத் தனியாக விரைவு நீதிமன்றம் தேவை என்றெல்லாம் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை முன்வைக்கின்றனர்.

இந்தியா முழுவதிலும் இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல நகரங்களில் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டங்கள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். புதுதில்லியில் ஒவ்வொரு நாளும் ஒரு பெண் வல்லுறவுக்கு இலக்காகிறார் என்று தில்லியின் ஒரு பத்திரிகை புள்ளிவிவரம் தருகிறது.

பெண்கள் மீதான பாலியல் வன்முறை அண்மைக்காலமாக அதிகரித்துவிட்டது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இத்தகைய பாலியல் கொடுமைகளில் மிகச் சிலவே வெளிச்சத்துக்கு வருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்தச் சம்பவம் தில்லியில் நடக்காமல், பிகாரின் ஏதாவது ஒரு பழங்குடிப் பெண்ணுக்கு நடந்திருக்குமேயானால், இது நாடு முழுவதும் இத்தகைய எதிர்வினையைச் சந்தித்திருக்குமா? சந்தேகம்தான்.

இதே தில்லி நகரில், ஒரு ஜெர்மனிப் பெண் கடந்த மாதம் 4 பேரால் வல்லுறவுக்கு இலக்கானார். ஆனால், அது பெரிதாகப் பேசப்படவே இல்லை. இந்தச் சம்பவம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்ததால் மட்டுமே இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

கேரளத்தில் ஒரு மாணவி தன் தந்தையாலும் சகோதரராலும் தன் வீட்டுக்குள்ளேயே தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம்கூட கடந்த வாரம் செய்தியாக வந்தது. இதுவும் மறுநாளே மறக்கப்பட்டது.

ஆனால், தில்லியில் நடந்த சம்பவம் அப்படியல்ல. பாதிக்கப்பட்ட துணை மருத்துவ மாணவி ஒரு வளர்இளம் பெண். ஆனால், தனது அறிவீனத்தால் இத்தகைய நேர்வில் சிக்கினார். தனது அறியாமையால் தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொண்டார். குற்றவாளிகளைத் தண்டிக்கச் சொல்லும் அதேவேளையில், இந்த மாணவியின் செயலை யாரும் பேசக்கூடவில்லை.

துணை மருத்துவப் படிப்பு தொடர்பான பயிற்சிக்காக தில்லி வந்துள்ள, டேராடூன் கல்லூரியின் மாணவி, கணினி நிறுவனத்தில் பணிபுரியும் தனது ஆண் நண்பரான பொறியியல் பட்டதாரியுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமையை இனிமையாகக் கழிப்பது அவரது விருப்பம். ஆண் நண்பர்களுடன் ஷாப்பிங் மால் செல்வதும், இரவு விருந்துக்குச் செல்வதும் அவரது உரிமை. ஆனால், இரவு 9.30 மணிக்கு, ஒரு தனியார் சொகுசுப் பேருந்தில், அதுவும் பெண்களே இல்லாமல் முரட்டு வாலிபர்கள் மட்டுமே இருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார். அந்த இரவு வேளையில் அதைப்போன்ற ஆபத்தை அழைக்கும் செயல் வேறேதுமில்லை என்பதை அந்த மாணவியோ, அல்லது அவரது ஆண்-நண்பரோ ஏன் உணர்ந்திருக்கவில்லை?.

காதலுக்குத் தனிமை எத்தனை இனிமை சேர்க்குமோ அதே அளவுக்குத் துன்பத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் என்ற எச்சரிக்கை உணர்வு இருந்திருந்தால், இந்த ஜோடிகள் இந்த சொகுசு தனியார் பேருந்தைத் தவிர்த்திருப்பார்கள். இதை இந்த சந்தர்பத்தில் "அசட்டு தைரியம்' என்று நாம் குறிப்பிட்டால், அதை நாம் சம்பவத்தை நியாயப்படுத்துவதாகக் கருதலாகாது. குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக விரைவு நீதிமன்றங்கள் தேவை. இருப்பினும், இத்தகைய நேர்வுகள் பலவற்றைப் பெண்கள் தமது உள்ளுணர்வு மற்றும் விழிப்பினால் தவிர்த்துவிட முடியும்.

ஆண்-நண்பர் தன்னுடன் இருக்கும் தைரியத்தில், பயணிகள் குறைவாக இருக்கும் ரயில்பெட்டியைத் தேடி ஏறுவதையும், பேருந்தில் பின்இருக்கையைத் தேடிப்பிடித்து சிரித்துக் கொஞ்சிப்பேசுவதையும் பெருநகரங்களில் காண முடிகிறது. இது அவர்களது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அச்செயல் சகபயணிகளின் கவனத்தை மட்டுமின்றி சமூகவிரோதிகளின் கவனத்தையும் ஈர்க்கின்றது. தேவையற்ற ஆபத்துக்கு ரகசிய அழைப்பாக அமைந்துவிடுகிறது. ஆண்கள் கண்மூடிகளாக இருந்தாலும் பெண்கள் விழிப்பாக இருந்தால் ஆபத்துகள் பலவற்றிலிருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட முடியும்.

உடலை அதிகம் வெளிப்படுத்தும் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், பெண்கள் மதுக்கூடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், நேரத்தோடு வீடு திரும்ப வேண்டும் என்பதும் ஆணாதிக்க உலகத்தால் பெண்களுக்கு விதிக்கப்படும் தடைகள், கட்டுப்பாடுகள் என்று பெண்ணியவாதிகள் விமர்சனம் செய்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்துகொண்டிருக்கும்போது வெளியுலகில் எத்தனை எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்? என்ற அறிவுறுத்தல் என்பதைப் புரிந்துகொள்வதில்லை.

"எங்கள் உடல் எங்கள் சுதந்திரம்' என்று பதாகையுடன் ஊர்வலம் வருகிறார்கள். "நாங்கள் ஒழுங்காக ஆடை உடுத்தினால் பாலியல் வன்முறை நின்றுவிடுமா?' என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

"புகைப் பிடிக்காதீர், புற்றுநோய்க்கு ஆளாகாதீர்' என்பது நோய்த்தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மட்டுமே. சிகரெட் பிடிக்காதவருக்கும் நுரையீரல் புற்றுநோய் வருகிறது என்பதால் புகைப்பிடிப்பது ஆரோக்கியமானதாக ஆகிவிடுமா?

"முள் பட்டாலும் முள்ளில் இட்டாலும் முதலில் கிழிவது துணிதான். துணியாய் இருந்து கிழிவதை விடவும் முள்ளாய் இருப்பேன் இனிநான்! கல் பட்டாலும் கல்லில் இட்டாலும் சிதைந்துபோவது கனிதான். கனியாய் இருந்து சிதைவதை விடவும் கல்லாய் இருப்பேன் இனிநான்!' (கவிஞர் வைரமுத்துவின் கவிதை) என்ற மனத்துணிவு கொண்ட பெண்கள் மிகச் சிலர்தான்.

சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லாதது. ஆனால், பெண்கள் சில சுயக்கட்டுப்பாடுகளால் பெறும் விழிப்பு நிலையும், உள்ளுணர்வும் அவர்களைப் பல்வேறு பாலியல் வன்முறைச் சூழலில் சிக்காதபடி பாதுகாக்கும். தீதும் நன்றும் பிறர்தர வாரா................

தினமணி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu 20 Dec 2012 - 15:29

"சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லாதது. ஆனால், பெண்கள் சில சுயக்கட்டுப்பாடுகளால் பெறும் விழிப்பு நிலையும், உள்ளுணர்வும் அவர்களைப் பல்வேறு பாலியல் வன்முறைச் சூழலில் சிக்காதபடி பாதுகாக்கும். தீதும் நன்றும் பிறர்தர வாரா................"


காலத்தின் கட்டாயம் இது




அநாகரிகம்...! Mஅநாகரிகம்...! Uஅநாகரிகம்...! Tஅநாகரிகம்...! Hஅநாகரிகம்...! Uஅநாகரிகம்...! Mஅநாகரிகம்...! Oஅநாகரிகம்...! Hஅநாகரிகம்...! Aஅநாகரிகம்...! Mஅநாகரிகம்...! Eஅநாகரிகம்...! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக