புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
1 Post - 1%
bala_t
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
1 Post - 1%
prajai
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
293 Posts - 42%
heezulia
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
6 Posts - 1%
prajai
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
அம்மாவின் அகால மரணம்  Poll_c10அம்மாவின் அகால மரணம்  Poll_m10அம்மாவின் அகால மரணம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் அகால மரணம்


   
   
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Sat Dec 29, 2012 6:59 pm

[You must be registered and logged in to see this image.]

ஒரு மரணத்தில்தான் இன்னொரு மரணம் ஏற்படுகிறதா ?தெரியவில்லை எனக்கு,

கார்த்திகையின் தொடக்கத்தில் அக்காவின் சொந்தத்தில் ஒருவரின் மரணம் எங்கள் வீட்டில் பிற நபர்கள் யாரும் வராத காரணத்தினால் நானும் என் அம்மாவும் மட்டும் கலந்து கொண்டோம்.சடங்குகள் முடிந்து வீட்டிற்கு வந்து வெளியே தண்ணீர் தெளித்து முன் பகுதியில் சிறிய குளியல் அறை இருக்கும் அதில் குளிர்ச்சியான தண்ணீரில் (மின்சாரம் இல்லாததால் சுடு தண்ணீரும் இல்லை) குளித்தார் அம்மா (என்ன சம்பரதயமோ கருமமோ) வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கவில்லை அம்மா சிறிது நேரத்தில் அடிக்கடி தும்மல் மருந்தகத்தில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டாகி விட்டார்.சில நாள் தொந்தரவு ஒன்றும் இல்லை மீண்டும் ஆரம்பித்தது மூக்கடைப்பு இருமல் அடிக்கடி மூச்சடைப்பு மருத்துவரிடம் சென்று காண்பித்ததில் சளி கெட்டியாக கட்டி கொண்டு இருக்கு மருந்து தருகிறேன் என்று நான்கு நாளைக்கு தந்தார்.அந்த மாத்திரைகள் சரி வரவில்லை அடிக்கடி மூச்சடைப்பு இருந்து கொண்டே இருந்தது.திரும்பவும் மருத்துவரிடம் அவர் பார்த்து விட்டு எல்லா பரிசோதனைகளுக்கும் எழதி கொடுத்து விட்டார்.எல்லா பரிசோதனைகளையும் பார்த்து விட்டு "சளி கெட்டியாக கட்டி கொண்டு இருப்பதால் மூச்சு விட சிரமமாக இருக்கு "கெட்டி சளியை இரு முறைகளில் எடுக்கலாம் ஓன்று குழாய் மூலமும் இன்னொன்று ஊசி மூலமும் மருந்து செலுத்தி சிறு நீரில் வெளி கொண்டு வரலாம் என்றார்.குழாய் மூலம் எடுப்பதை விட ஊ சி மூலம் எடுப்பதே நன்றாக இருக்கும் ஏன் என்றால் அம்மாவிற்கு ஏற்கனவே இருதய தௌந்தர்வு இருந்ததால் ஊசி மூலம் கரைப்பதுதான் மிகவும் நன்றாக இருக்கும் அந்த வசதி சேலத்தில் கிடையாது.கோவைக்கு ராமகிருஷண மருத்துவமனக்கு எழுதி தருகிறேன் அங்கு சென்று விடுங்கள் என்றார் மருத்துவர்.உடனே சென்று காண்பித்ததில் அட்மிட் ஆகி விட சொல்லி ஆகியும் விட்டது முதலில் இரண்டு நாள் தொந்தரவு குறையவில்லை மூன்றாம் நாள் எந்த மூச்சடைப்பு தௌந்தர்வு எதுவும் இல்லை.மருத்துவர் பார்த்து விட்டு அம்மா நல்ல இருக்கிறார்கள் நாளை டிஸ்சார்ஜ் ஆகி விடலாம் என்றும் சொல்லி விட்டு சென்று விட்டார்.

அருகில் இருந்த எனக்கு சந்தோஷமான சந்தோசம் அப்பாடா நாளை அம்மாவுடன் வீடு திரும்பி விடலாம் என்று கற்பனையில் மிதந்து கொண்டே அம்மாவிற்கு மாலை நேர பால் வாங்கி கொண்டு வந்தேன்.சிறிது நேரத்தில் கை பேசியில் அழைப்பு அண்ணனின் மகள்( ukg படிக்கிறாள் )பாட்டியிடம் பேச வேண்டும் என்றாள்.நானும் அம்மாவிடம் கைபேசியை கொடுத்தேன்.அவர்களும் நன்றாக பேசி விட்டு நாளை இந்நேரத்திற்கு எல்லாம் வீட்டிற்க்கு வந்து விடுவோம் என்று குழந்தையிடம் சொல்லி கொண்டு இருந்தார் அம்மா பேசி முடித்து விட்டு மாத்திரையுடன் பால் ஊற்றி கொடுத்தேன்.பக்கத்தில் நடந்த நகைசுவையான சம்பவத்தை சொல்லி என்னை சிரிக்க வைத்து கொண்டு இருந்தார்.இருபது நிமிடம் இப்படியே கழிந்தது.சற்று நேரத்தில்,எனக்கு ஒரு மாதிரியாக இருக்குடா அம்மா என்னிடம் சொன்னார்.சரிம்மா அப்படியே படு நான் நர்சை கூட்டி கொண்டு வரேன்.டாக்டர் வந்துடவர் சார் கொஞ்ச நேரம் இருங்க என்றார் நர்ஸ்.அம்மாவிடம் ஓடினேன் நான்.மூச்சு விட சிரமம் ஏற்பட்டு கால்கால்களிருந்து இழுத்து கொண்டு மூன்று முறை உலுக்கிய அந்த மூச்சு சட்டெனெ நின்றது.நான் கதறி அழுத்து கொண்டே அம்மாவின் படுக்கை தள்ளி கொண்டே ஓடுகிறேன் icu வார்டுக்கு என்னுடன் நர்ஸ் மற்றும் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் மனிதாபத்துடன் ஓடி வருகிறர்ர்கள்.என்னை வெளியே நில்லுங்கள் என்று சொல்லி விட்டு முதல் உதவி செய்ய ஆரம்பித்தனர் அங்கு இருந்த மருத்துவர்கள்.எனக்கு என்ன நடக்குதுன்னு ஒன்றுமே புரிய வில்லை கண்களில் கண்ணீரும் அழு குரலும் மட்டும்தான் என்னால் உணர முடிகிறது.என் அருகில் சொந்தங்கள் என்று யாரும் இல்லை இன்றைய தினத்தை போல அடக்கப்பட்ட நீர் குமிழியை போல் அடித்து கொண்டு வந்தது அழுகை அதன் பின் நிறைய பயத்துடன் என் அண்ணனிடம் தகவல் சொல்லி வர சொன்னேன்.அவரும் வந்து சேர்ந்தார்.இருண்ட உலகத்தின் இரவல்லம் மரணத்தின் தருவாய் என்னவென்பதை அன்றுதான் தெரிந்து கொண்டேன்.நாடி துடிப்பு இருதய துடிப்பு அனைத்தும் மாறி மாறி ஆட்டம் காண்பித்தது.காலை 10.24 வரை கடைசியாக அம்மாவின் மூச்சற்ற உடலை காண்பித்தனர் மருத்துவர்.சார் ஒன்றும் செய்ய முடிய வில்லை மன்னிக்கவும் என்று மட்டும் சொல்லி விட்டு அடுத்த உடலுக்கு சென்று விட்டனர் மருத்துவர்கள்.

என் அம்மாவின் மரணம் நிகழ்ந்த நாள் (டிசம்பர் 23 காலை 10.24 )வைகுண்ட் ஏகாதேசி எனக்கு சொர்க்கத்தில் நம்பிக்கை இல்லைதான் ஆனால் என் அம்மா அந்த சொர்கதிற்க்குதான் செல்ல வேண்டும் என்னுடைய ஒரு வித ஆசை

வந்தவர்களும் இதை சொல்லித்தான் ஆறுதல் சொல்லுகிறார்கள்

இருப்பினும் அம்மாவின் மரணத்துக்குப் பின்

ஏற்பட்டு கொண்டு இருக்கும் தனிமையின் பயத்தை
தத்துவ புத்தகங்களை கொண்டுதான் நிரப்பி கொண்டு இருக்கிறேன் கண்ணீருடன்


'ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. – (திருமந்திரம் – 145)


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Dec 29, 2012 9:24 pm

அன்பின் நந்தகோபால்,

இத்தனை நாள் உயிராய், உறவாய், உணர்வாய் அருகே இருந்து அன்னமிட்டு அன்பு காண்பித்த அம்மா இப்போது இல்லை என்ற பயங்கரம் உங்கள் வரிகளை படிக்கும்போது மனதை உலுக்கியது....

என்ன ஆறுதல் சொன்னாலும் அது கண்டிப்பாக உங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யமுடியாது. ஆனாலும் அன்பு பரவி இருக்கும் இவ்வுலகில் தாயன்பை காண்பிக்கும் எத்தனையோ அன்பு உள்ளங்கள் உங்கள் மனம் ஆறுதல் அடையவும் அம்மாவின் ஆத்மா சாந்தி அடையவும் வேண்டிக்கொண்டே இருக்கும்பா...

இறைவன் உங்களுக்கு ஆத்மபலம் தரட்டும்... அம்மா அரூபமாய் அருகிருந்து உங்களை காக்கட்டும்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Dec 30, 2012 3:33 am

நந்தகோபால் அவர்களே!
அம்மாவின் இழப்பை ஈடுசெய்ய யாராலும் முடியாது.அந்த துன்பம் மிகவும் கொடுமையானது.காலப்போக்கில் அதை சிறிது சிறிதாக தாங்கிக்கொள்ள பழகவேண்டும். இல்லையென்றால் நாம் உயிருள்ள பிணங்களாகி விடுவோம். நீங்கள் வழமையான மனிதனாக மீண்டாலே அம்மாவின் ஆத்மா சாந்தியடையும்.காரணம் ஒரு தாய் தன பிள்ளையின் துன்ன்பத்தைப்பார்த்து அமைதிகொள்ள மாட்டாள்.
உங்களுக்கு அமைதி கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 30, 2012 12:43 pm

இழப்புகள் என்றுமே இழப்புகள் தான் நந்தகோபால்.
உடலால் இழந்தோம் உணர்வால் இழந்தவரை உணர்வோம்.

ஆழ்ந்த அனுதாபங்கள் - மீண்டு வரத்தான் வேண்டும் - கடமைகள் இருக்கே.

கலங்கினாலும் நல்ல நினைவுகளை மனதில் தேக்கி மீண்டு வர வேண்டுகிறேன்.





காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sun Dec 30, 2012 1:07 pm

அம்மாவின் இறப்பை நேரில் கண்டதுபோன்றதொரு நடுக்கம் தாங்கள் கூறியவிதம். ஆறுதலால் இழப்பை சரிசெய்ய முடியாதுதான்..இருப்பினும் இழப்பு என்பது இன்று இல்லையேல் நாளை என்பதை நாம் அறிந்ததே....அம்மா என்பவள் 100 வருடம் இருந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே இருப்பினும் இயற்கையை மாற்ற எவரால் முடியும் சகோ. ஆறுதல் கொள்வீர்...அம்மாவின் ஆன்மா அமைதிபெற்று இறையாக உங்கள் மகிழ்ச்சிக்கும், வெற்றிக்கும் என்றும் உடனிருப்பார்..



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக