புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
4 Posts - 3%
prajai
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
1 Post - 1%
Kavithas
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
1 Post - 1%
bala_t
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
293 Posts - 42%
heezulia
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
6 Posts - 1%
prajai
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
4 Posts - 1%
manikavi
மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10மதமாற்றம் செய்யலாமா?  Poll_m10மதமாற்றம் செய்யலாமா?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதமாற்றம் செய்யலாமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jan 07, 2013 2:33 pm

கட்டாய மதமாற்றம், மத சுதந்தரம், மத அவமதிப்பு ஆகிய ஒவ்வொன்றுக்கும் நம் நாட்டில் தனிச் சட்டங்கள் உள்ளன. கட்டாய மதமாற்றத் தடைச் சட்டதை பற்றி தெரிந்து கொள்ளும் தருவாயில் மத சுதந்திரம் மற்றும் மத அவமதிப்பு பற்றி சட்டங்கள் என்ன சொல்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். முதலில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைப் பற்றி பார்ப்போம்.

கட்டாய மதமாற்றம்
மதமாற்றம் தவறில்லை. ஆனால் கட்டாய மதமாற்றம் குற்றம். அதுவும் ஒரு சில மாநிலங்களில்தான். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மதமாற்றச் சட்டம் இயற்றப்படவில்லை. மத்தியப் பிரதேசம், ஒரிசா, சத்திஸ்கர், குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் இயற்றபட்டு அமல்படுத்தபட்டது. ஆனால் அதை செயல்படுத்த தேவையான விதிகள் இயற்றப்படவில்லை.

ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது, ஆனால் ஆளுநர் (அப்போது இருந்தவர் திருமதி பிரதீபா பாட்டீல்) கையெழுத்துப் போட மறுத்துவிட்டார்.

தமிழ்நாட்டிலும் 2002ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா முதலமைச்சாராக இருந்தபொழுது கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் பொருட்டு ஓர் அவசரச் சட்டத்தை கொண்டுவந்தார். Tamil Nadu Prohibition of Forcible Conversion of Religion Ordinance. அந்தச் சட்டம் 2004 ஆம் ஆண்டு அதே ஜெயலலிதா அரசால் ரத்து செய்ப்பட்டது.

மேற்சொன்ன சட்டத்தின்படி யாரேனும் ஒருவர் மற்றவரை கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ, ஆசை காட்டியோ, ஏமாற்றியோ அவருடைய மதத்திலிருந்து வேறோர் மதத்துக்கு மாற்றுவது குற்றமாகக் கருதப்பட்டது. இந்தக் குற்றத்தை செய்பவருக்கும், குற்றம் நடப்பதற்குத் தூண்டுதலாக இருப்பவருக்கும் மூன்றாண்டு சிறை தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதே குற்றத்தை இளையோரிடமும் (மைனர்), பெண்களிடமும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரிடமும் நிகழ்த்தினால், குற்றம் செய்தவருக்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ஒரு லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டச் சட்டத்தில் உள்ள ஷரத்துக்களே மற்ற மாநிலங்களில் கொண்டுவரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்திலும் இடம்பெற்றிருந்தன. குற்றாவாளிக்கு வழங்கப்படும் தண்டனையில்தான் வித்தியாசம் இருந்தது.

மதமாற்றத் தடைச் சட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் மட்டும்தான் மதமாற்றத்தில் ஈடுபடுகிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதுவும்கூட மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வழிகளைப் பின்பற்றினால் மட்டுமே. ஒருவர் தன்னுடைய மதத்தின் அருமை, பெருமைகளைச் சொல்லி மற்றவரை அவரது மதத்தை ஏற்றுக்கொள்ள வைத்தால் அது சட்டப்படி குற்றமாகாது. அத்தகை மதமாற்றச் சடங்குகளில் ஈடுபடுபவரும், அச்சடங்கை நடத்தி வைப்பவரும் அந்தச் சடங்கு நடைபெற்ற சம்பவத்தை, குறிப்பிட்ட காலத்துக்குள் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் தெரிவிக்கவேண்டும். இல்லை என்றால் அதுவும் குற்றமாகக் கருதப்பட்டுத் தண்டனை வழங்கப்படும்.

மத சுதந்தரம்
இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 25 முதல் 28 வரையிலான ஷரத்துக்களின்படி இந்திய குடிமகனாகிய ஒருவர் தனக்குப் பிடித்த மதத்தை பின்பற்றலாம். அந்த மதத்தைப் பற்றி மக்களிடயே பிரசாரம் செய்யலாம். அது அந்த குடிமகனின் அடிப்படை உரிமை (Fundamental Right).

ஒவ்வொரு மதத்தவரும் தம் மத நம்பிக்கைக்கு ஏற்ப கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் கட்டிக்கொள்ளலாம். மதக்கோட்பாட்டுக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களை நடத்தலாம். தர்மாலயங்கள் நிறுவி தர்மம் செய்து வரலாம். ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய மதநிர்வாகத்துக்காக தேவையான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கலாம்.

அதே சமயம், மத நம்பிக்கைக்குத் தொடர்புடைய பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்தவும் சீரமைக்கவும் தேவையான சட்டங்களை கொண்டுவர அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. இந்து சமயத்துக்கு உட்பட்ட வழிபாட்டுத் தலங்கள், கோவில்கள், மடாலயங்கள் ஆகியவற்றை இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து ஜாதியினரும் பயன்படுத்த அரசால் வழிவகைச் செய்யமுடியும். முழுக்க முழுக்க அரசு வருவாயிலிருந்து நடத்தப்படும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மதம் சம்பந்தமான கோட்பாடுகளை, மதம் சம்மந்தப்பட்ட பாடங்களை மாணவர்களுக்கு போதிக்கக்கூடாது.

மத அவமதிப்பு
ஒருவருடைய மதத்தை அவமதிப்பது குற்றமாகும். இதற்கான சட்ட விதிகள் 150 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றிவிட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (இ.பி.கோ) கொண்டுவரப்பட்டது. இ.பி.கோ 295 ஆம் பிரிவிலிருந்து 298 வரை உள்ள பிரிவுகளில் மத அவமதிப்பு சம்பந்தமான குற்றங்களும் அதற்கான தண்டனைகளும் விளக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில், கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுகிறவர்கள் மத அவமதிப்பு குற்றத்தில் ஈடுபட்டவர்களாகக் கருதப்படுவார்கள். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யமுடியும்.

நாம் இ.பி.கோவுக்கு மறுபடியும் வருவோம். ஒரு மதத்தை அவமதிக்கும் பொருட்டு அந்த மதத்தின் வழிபாட்டுத் தலங்களுக்குச் சேதம் விளைவித்தாலோ, புனிதமாகக் கருதப்படும் பொருள்களை அவமதித்தாலோ அச்செயல் குற்றமாகக் கருதப்பட்டு, தவறு இழைத்தவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும். (இ.பி.கோ 295 வது பிரிவு).

ஒரு மதத்தின் நம்பிக்கைகளை இழிவு செய்யும் நோக்கத்தோடு அல்லது அந்த மதத்தைப் புண்படுத்தும் பொருட்டு, கெட்ட எண்ணத்துடன் வார்த்தைகளாலோ, எழுத்துகளாலோ செய்கையாலோ இழிவுபடுத்தினால், இழிவுபடுத்தியவர்க்கு 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும். (இ.பி.கோ 295 ஆவது பிரிவு).

ஒரு மதக்கூட்டத்தின் போதோ அல்லது மதம் சம்பந்தப்பட்ட விழாக்களின் போதோ அல்லது பண்டிகைகளின் போதோ யாரேனும் பங்கம் விளைவித்தால், அல்லது அமைதியை குலைத்தால், கலவரம் உண்டுசெய்தால், அவ்வாறு செய்பவர்களுக்கு ஓர் ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும். (இ.பி.கோ 296 வது பிரிவு).

ஒருவருடைய மத நம்பிக்கைகளைக் காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அல்லது இவ்வாறு செய்தால் ஒருவர் காயப்படுவார் என்று தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் அவருடைய வழிபாட்டு இடத்தில் நுழைவதோ, அவர் சம்பந்தப்பட்ட சமூகத்துக்குச் சொந்தமான சமாதி, கல்லறை, இறுதிச் சடங்கு செய்யும் இடங்கள் ஆகியவற்றுள் அத்து மீறி நுழைவதோ அல்லது கிடத்தப்பட்டிருக்கும் சடலத்துக்கு அவமரியாதை செய்வதோ அல்லது ஈமச்சடங்கு செய்யவிடாமல் தடுப்பதோ சட்டப்படி குற்றமாகும். குற்றமிழைத்தவர்களுக்கு ஓர் ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும். (இ.பி.கோ 297 வது பிரிவு).

ஒருவருடைய மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்தில் வார்த்தைகளால் உச்சரிப்பது அல்லது சப்தங்களால் காதுபட கூச்சலிடுவது போன்ற அவமதிப்புச் செயல்களில் ஈடுபடுதல் அல்லது மற்றவருடைய மத உணர்வுகள் பாதிக்கப்படும் விதத்தில் செய்கை செய்வது அல்லது அவர் கண்ணில் படும்படி ஒரு பொருளை வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கான தண்டனை ஒர் ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரணடும். (இ.பி.கோ 298 வது பிரிவு).

நம் நாட்டில் மத சுதந்தரம் உண்டு. யார் வேண்டுமானாலும் எந்த மதத்தையும் பின்பற்றலாம், போதிக்கலாம். ஆனால், மற்றவர்கள் தன் மதத்துக்கு மாறவேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. தான் பின்பற்றுகிற மதம்தான் சிறந்தது என்ற நோக்கில் மற்ற மதங்களை இழிவுபடுத்தக்கூடாது. அதற்குச் சட்டத்தில் இடமில்லை.

நன்றி - S.P. சொக்கலிங்கம்/தமிழ்பேப்பர்.நெட்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக