புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 5:57 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_m10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10 
5 Posts - 71%
ayyasamy ram
இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_m10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10 
2 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_m10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10 
308 Posts - 42%
heezulia
இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_m10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10 
302 Posts - 41%
Dr.S.Soundarapandian
இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_m10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_m10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_m10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_m10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_m10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10 
6 Posts - 1%
prajai
இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_m10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10 
5 Posts - 1%
manikavi
இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_m10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_m10இதை அனுமதிக்கக் கூடாது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதை அனுமதிக்கக் கூடாது!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Jan 28, 2013 11:22 am

கோயம்பேடு மார்க்கெட்டில்15 கிலோ எடையுள்ள ஒரு கூடை தக்காளியை ஒட்டுமொத்தமாகக்கொள்முதல் செய்வோருக்கு (பல்க் கன்ஸ்யூமர்) ஒரு கூடைரூ.100 க்கு கொடுப்பார்கள். அதே கடையில் தனிநபர் வாங்கினால், ஒரு கிலோ தக்காளியை ரூ.15க்கு விற்பார்கள்.
-
இதுதான் உலக நடைமுறை. ஆனால்,இந்திய எண்ணெய் கொள்முதல் நிறுவனங்களுக்கு எல்லாமே தலைகீழ். ஒட்டுமொத்தக் கொள்முதல் செய்வோருக்கு ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.11 கூடுதலாக்கினார்கள். பொதுச்சந்தையில் வெறும் 55 காசு உயர்த்தி இருக்கிறார்கள். இது என்ன வியாபாரமோ தெரியவில்லை.
-
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டீசல் விலை குறித்த விவாதத்தின்போது, எஸ்யுவி (சூப்பர் யுடிலிட்டி வெகிக்கிள்) கார்களுக்கும்,இன்ன பிற தனியார் வாகனங்களுக்கும், வணிக வளாகங்களில், குறிப்பாக மால்களில் ஜெனரேட்டர்களுக்குப் பயன்படுத்தப்படும் டீசலுக்கும் சந்தை விலையை நிர்ணயிக்கவும், மற்றவர்களுக்கு அரசின் மானிய விலையில் டீசலை விற்பனை செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
-
ஆனால், அடுத்த ஆறு மாதத்தில் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என்ற நிலைமை வந்தபோது, பொதுச் சந்தையில் டீசல் விலையை லிட்டருக்கு 55 காசு உயர்த்த முடிவு செய்த எண்ணெய் நிறுவனங்கள், ஒட்டுமொத்தக் கொள்முதல் செய்வோருக்கு டீசல் விலையை ரூ.11 கூடுதலாக்கி இருக்கின்றன.
-
ஒட்டுமொத்தக் கொள்முதல் செய்யும் 90 விழுக்காடு நிறுவனங்கள் அரசுத் துறை சார்ந்தவை. ரயில்வே, ராணுவம், மாநில போக்குவரத்துக் கழகங்கள், சிமென்ட் ஆலைகள், சுரங்கங்கள், பெட்ரோலியப் பொருளைக்கொண்டு மின்உற்பத்தி செய்யும் நிலையங்கள் ஆகியன; பெரும்பாலும் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களே.
இவற்றிலும்கூட நுட்பமாகப் பார்த்தால், ரயில்வே, போக்குவரத்து இரண்டும் பொதுமக்கள் பயன்படுத்துவன. இவைகளுக்கு வழங்கப்படும் டீசல் விலையை அதிகரிப்பதன் மூலம், ரயில் மற்றும் போக்குவரத்துப் பயணக் கட்டணத்தை உயர்த்த நெருக்குதல் தரப்படுகிறது. அல்லது, பயணக் கட்டணத்தை உயர்த்தாமல் அந்த இழப்பை மத்திய, மாநில அரசுகள் வேறு வருவாய்களின் மூலம் ஈடுகட்ட நிர்பந்திக்கப்படுகின்றன.
-
ஒட்டுமொத்த டீசல் பயன்படுத்துவோர் (பல்க் கன்ஸ்யூமர்) டீசல் பயன்பாட்டில் 18% மட்டுமே. இவர்களுக்கு மட்டும் கூடுதலாக ரூ.11 விலை வைத்து,நஷ்டத்தை சரிகட்ட முடியாது என்பது ஒருபுறம் இருக்க, எண்ணெய் நிறுவனங்களின் இந்த முடிவால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. இதனால் ரயில், பேருந்து பயணக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதைத் தவிர, வேறு வழியே கிடையாது. தமிழக போக்குவரத்துக் கழகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டாலும், கட்டணம் உயர்த்தப்படாவிட்டால், இந்த விலை உயர்வால் ஆண்டுக்கு ரூ.750 கோடி இழப்பு அதிகரிக்கும்.
-
பொதுத்துறை வாகனங்களில் பயணக் கட்டணம் குறைவாக இருக்கும்போதுதான், மக்கள் அதிக அளவில் அதைப் பயன்படுத்த முனைவார்கள். டீசலில் அல்லது பெட்ரோலில் இயங்கும் கார் வைத்திருப்போரும்கூட பொதுத்துறை வாகனங்களில் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தால், அவர்கள் தங்கள் வாகனங்களைப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதே உலக நடைமுறை.
-
தனிநபர் வாகன எண்ணிக்கை அதிகரிக்கும்போது, சாலையில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளின் எண்ணிக்கையும் பெட்ரோல், டீசல் பயன்பாடும் அதிகரிக்கிறது. பொதுத்துறை வாகனங்களை மக்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும்போது இவை குறைகின்றது. இந்த உண்மையைப் புரிந்துகொண்ட எந்தவொரு அரசும், டீசலுக்குஇரட்டை விலை நிர்ணயிக்கும்போது, ஒட்டுமொத்தக் கொள்முதலுக்கு விலை குறைவாகவும், 80% வீதமாக இருக்கும் சில்லறை நுகர்வோர்களுக்கு விலை கூடுதலாகவும் நிர்ணயிக்கும். ஆனால், இங்கே தலைகீழாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
இன்னொரு வேடிக்கை, தனியார் வாகனங்கள், வணிக வளாகங்களில், குறிப்பாக மால்களில் பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர்கள் ஆகியவற்றுக்கு டீசல் விலை லிட்டருக்கு வெறும் 55 காசுதான் அதிகரித்திருக்கிறார்கள். இதுதான் இவர்களது "ஆம் ஆத்மி' கண்ணோட்டம், பலே!
-
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் விலையும் தனியார் பேருந்துகளுக்கான டீசல் குறைந்த விலையிலும் கிடைக்கும் என்றால், பிறகு எப்படி அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயங்க முடியும்? போக்குவரத்துத் துறையைத் தனியார் மயமாக்குங்கள் என்பதுதான் இதன் மூலம் மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கூறும் செய்தியா?
-
தனியார் பெட்ரோல் பங்க்கில் வரிசைகட்டி நிற்கின்றன அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் - விலை குறைவாகடீசல் பிடிக்கத்தான்! இதனால் காலதாமதம், தொழிலாளர் வேலைநாள் வீணாதல் ஆகியன மட்டுமே மிச்சம். இது தவிர, பிடித்த டீசலுக்கும் வாங்கிய ரசீதுக்கும் இடைவெளிகள் வேறு!
டீசலுக்கு இரட்டை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து குரல் கொடுத்த முதல் மாநில முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமே! அவரைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக தலைவரும் குரல் கொடுத்துள்ளார்.
-
இது தொடர்பாக, நியாயமாக கோபத்தை வெளிப்படுத்த வேண்டியவர்கள் போக்குவரத்து தொழிற்சங்கங்கள்தான். எதற்கெல்லாமோ வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கும் இவர்கள், இதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.
இந்தப் பிரச்னை அரசியல் பிரச்னை அல்ல. தமிழக அரசு அல்லது போக்குவரத்துக்கழகம் என்பதையும் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவின் சாமானிய மக்களின் பிரச்னை. இதற்காக அனைத்துக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் களத்தில் இறங்க வேண்டும். வேறு வழியில்லை என்றால், பொதுப் போக்குவரத்துதான் தலைவிதி என்றாகிவிட்ட பொதுமக்களும்!
-
தினமணி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 28, 2013 11:55 am

என்ன செய்தாலும் அவுங்க முடிவ மாத்தமாட்டாங்க என்ன கொடுமை சார் இது

கொஞ்ச நாளைக்கு ஜனங்க சுடு கஞ்சியா கொதிப்பாங்க ...அப்புறம் ஆறின கஞ்சி பழைய கஞ்சியாகிடும் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக