புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_m10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_m10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10 
47 Posts - 46%
T.N.Balasubramanian
காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_m10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_m10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_m10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_m10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10 
1 Post - 1%
Shivanya
காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_m10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_m10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10 
248 Posts - 49%
ayyasamy ram
காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_m10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_m10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_m10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10 
12 Posts - 2%
prajai
காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_m10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_m10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10 
9 Posts - 2%
Jenila
காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_m10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10 
4 Posts - 1%
jairam
காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_m10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_m10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_m10காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் தின கவிதைகள் - (கிரிகாசன்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 14, 2013 6:35 pm

1. வாடி என் செல்லமே

கண்கள் என்னும் மின்னல்பட்டு காதல்வந்ததோ இல்லை
பெண்கள் கூந்தல் முல்லைமொட்டு வாசம் கொல்லுதோ
உண்ண எங்கும் தேனின் சொட்டு ஊற்று கின்றதோ - மலர்
உன்னத்தொட்டுக் கொள்ளுஎன்று என்னை தூண்டுதோ

சின்னசிட்டு வானம்தொட்டுத் துரப் போகுதே - ஆசை
என்னைத் தட்டி ஏக்கம் கொள்ள இன்ப மாகுதே
உன்னைத் தொட்டுகொள்ள நீயும் ஓடிச்செல்வதேன் -அந்தக்
கன்னம் தொட்டுக் கொள்ள வாழ்வில்காலம் உள்ளதோ

கொட்டுவானம் பூமி வந்து வீழும் வெள்ளமே உனை
கட்டிக் கையுள் காணும்போது இன்பம் கொள்ளுதே
வட்டக் கண்ணில் பார்வையென்ன வெட்டும் மின்னலே -அதில்
தட்டத் தட்டச் சத்தபோடும் எந்தன் நெஞ்சமே

அச்சமின்றி பக்கம்வாடி அன்புதெய்வம்நீ -உந்தன்
மச்சக் கண்ணில் என்னைப் போட்டு வைச்சதென்ன தீ
உச்சிவானின் வெண்ணிலாவின் தங்கையாமோ நீ - மனம்
இச்சைகொண்டு காயும் தாகம், கொல்லுதேமே னி

பச்சைமேனி மஞ்சள் பூசி பார்வை கொள்ளவே - நீயும்
வைச்சகண்ணும் என்னைக் கொல்ல வாழ்வதெப்படி?
கச்சை மார்பில் வெப்பமூச்சு சுட்ட துன்பமே அதை
இச்சை கொண்டு நானணைக்க பக்கம் நில்லடி

கொண்டை மாலை சூட்டிஉன்னைக் கோலமாகவே - நானும்
செண்டுப்பூவை கொள்வதாக செல்லமாகவே
வண்டுபோல வந்துநின்று வாழ்வுகாணலாம் ஊரும்
ரண்டுபேரும் நல்லஜோடி என்றுவாழ்த்தணும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 14, 2013 6:44 pm

என் காதலி

எழில் கொஞ்சும் இசையொன்று எழுகின்றதே
இதுகாவின் குயில் பாடுமொலி யல்லவே
பொழிலாடும் அலையென்றே உணர்வாகுதே
புரியாத மழையொன்று பொழிகின்றதோ
தழலான உளவெம்மை தணிகின்றதே
தரைமீது நிலவொன்று தவழ்கின்றதோ
அழகோபொன் னொளியாஅல் லதுதாரகை
அதுமின்னும் இயல்பாக மனம்கொள்வதேன்

நெளிந்தாடும் அலைகொண்ட நீரோட்டமோ
நிகழ்வான வில்லொன்றின் நிறமூட்டமோ
குளித்தாடும் மலர்கொண்ட குளிர்தேக்கமோ
குவிந்தாலும் பனிகொண்ட நிறவெண்மையோ
அளித்தாலும் குறையாத அமுதானதோ
அருஞ்செல்வம் குவிகின்ற திறைசேரியோ.
தெளிந்தோடு முகிலற்ற பகல் வானமோ
தினம் தேய்ந்து வளர்திங்கள் முழுதானதோ

ஒளிவானின் வழிதோன்று மொருகாலையில்
உருகாத பனிதன்னும் நிறை காற்றினில்
அழியாத மெருகோடு அருகாமையில்
அழகான மயிலென்று விரிதோகையில்
பொழிகின்ற முகில்கண்டு நடம் கொள்ளுதோ
பொதுவாக வலம்போகும் தெருவீதியில்
நெளிகின்ற நளினத்தின் அசைகாற்றுமே
நிகழ்வுக்கு இவள் கொண்ட அசைகற்குமே

வலை கொண்ட மீனென்றால் விழிதுஞ்சுமே
வளர்கின்ற பிறை யென்னில் வெகுதூரமே
அலைந்தோடும் நதியென்றால் விழும்பாவமே
அனல் வீசும் ஒளிர்வென்னில் சுடும்நோகுமே
மலைமீது எழும்காற்றின் குளிரானதே
மனம் போதை யுறச்செய்யு தெனில்போர்வையும்
நிலைகொள்ளச் செயும்பாவம் இவனல்லவோ
நெடும்வானில் முகில்மூடும் நிலவல்லவோ

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 14, 2013 6:49 pm

காதல் ஏக்கம்
( நீ வாராயோ)


விண்ணெழில் மதி வான்வருகுது
--வீசுங் காற்றதும் வாசங் கொள்ளுது
--வண்ண மென்முகம் வாடிக் காணுது ஏன்தானோ
கண்ணிரண்டினில் நீர்வருகுது
--காவ லெண்ணிடத் தீ எழுகுது
--காட்சி கொண்டெனைக் கனவு கொல்லுது ஏன்தானோ
எண்ணம் துஞ்சிடத் துயரெழுகுது
--ஏழை நெஞ்சினில் தீபரவுது
--என்னவளென நீஅழைத்ததும் நான்தானோ
பெண்மை அஞ்சிடத் தலைகுனியுது
--பேச்சிழந்திட ஊர் சிரிக்குது
--பேதை என்றிவள் ஏளனமிடப் பேசாயோ

கால் நடந்திடச் சோர்வுகொள்ளுது
--காற்று வந்துடல் சேர்த்துத் தள்ளுது
--காணும் நெஞ்சிடை ஏக்கம் கொள்ளுது வாராயோ
வேல்க ளென்றிடும் விழி ஒழுகுது
--விம்மிஎந்தனின் குரல்நடுங்குது
--விடிகிற அடிவான் சிவப்பது போல்நானோ
நால்குணத்தினில் நாணம்கெட்டது
--நாஇனித்திடும் தேவைவிட்டது
--நல்லிசைக்குமென் நாட்டம் கெட்டது நான்யாரோ
பால்நிலவினில் பார்குளிருது
--பாய்ந்தலைகடல் வேகம் கொள்ளுது
--பாவை நெஞ்சினைப் பார்த்திரங்கிடல் ஆகாதோ

காக்கை குருவி சேர்ந்து கத்துது
--காளை மாடுகள் தேடிமுட்டுது
--காட்டுத்தோப்பினில் ஆந்தைகத்துது ஏன் தானோ
பூக்கள் மொக்கினை மெல்லவிழ்க்குது
--போயிதழ்களைக் காற்றுத் தொட்டது
--பார்க்க நெஞ்சினில் வேர்த்துக் கொட்டுது பாராயோ
வாக்குத் தந்ததை நீமறக்கவும்
--வாரிகொட்டிமண் நான்கிடக்கவும்
--வாழ்க்கை என்பது ஆகிவிட்டது வீண்தானே
தீக்கு மென்னுடல் சூடுபட்டது
--தென்றல்தொட்டதில் நோவும்கொண்டது
--திங்கள் போலுடல் தேய்ந்து கெட்டது கேளாயோ

ஊர் நகைத்திட ஓரம் நிற்பதும்
--ஊமைப் பெண்ணென வார்த்தை விட்டதும்
--ஓடித் துள்ளிடும் பாவம்கெட்டதும் உன்னாலே
ஊற்று நீரணி கீழ்க்குளிக்கவும்
--உண்மை கண்டிளம் பெண்கள் வந்ததும்
--ஓடிஎன்மன எண்ணம் கண்டவர் ஒன்றாகி
வேர் பரந்திடும் ஆல் மரமென
--வேகம்பெற்றயல் ஊர் பசப்பிட
--வேடன் விட்டம்பு தைத்தபுள்ளென வீழ்வேனோ
கார்முகிலுக்குத் தோகை என்றிடக்
--களிநடமிடும் உன் நினைவினில்
--காலிடை கொண்ட பாம்பென நான் சாவேனோ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக