புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செல்வந்தனா... ஏழையா? Poll_c10செல்வந்தனா... ஏழையா? Poll_m10செல்வந்தனா... ஏழையா? Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
செல்வந்தனா... ஏழையா? Poll_c10செல்வந்தனா... ஏழையா? Poll_m10செல்வந்தனா... ஏழையா? Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
செல்வந்தனா... ஏழையா? Poll_c10செல்வந்தனா... ஏழையா? Poll_m10செல்வந்தனா... ஏழையா? Poll_c10 
3 Posts - 6%
prajai
செல்வந்தனா... ஏழையா? Poll_c10செல்வந்தனா... ஏழையா? Poll_m10செல்வந்தனா... ஏழையா? Poll_c10 
2 Posts - 4%
Baarushree
செல்வந்தனா... ஏழையா? Poll_c10செல்வந்தனா... ஏழையா? Poll_m10செல்வந்தனா... ஏழையா? Poll_c10 
2 Posts - 4%
Rutu
செல்வந்தனா... ஏழையா? Poll_c10செல்வந்தனா... ஏழையா? Poll_m10செல்வந்தனா... ஏழையா? Poll_c10 
1 Post - 2%
சிவா
செல்வந்தனா... ஏழையா? Poll_c10செல்வந்தனா... ஏழையா? Poll_m10செல்வந்தனா... ஏழையா? Poll_c10 
1 Post - 2%
viyasan
செல்வந்தனா... ஏழையா? Poll_c10செல்வந்தனா... ஏழையா? Poll_m10செல்வந்தனா... ஏழையா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செல்வந்தனா... ஏழையா? Poll_c10செல்வந்தனா... ஏழையா? Poll_m10செல்வந்தனா... ஏழையா? Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
செல்வந்தனா... ஏழையா? Poll_c10செல்வந்தனா... ஏழையா? Poll_m10செல்வந்தனா... ஏழையா? Poll_c10 
2 Posts - 15%
Rutu
செல்வந்தனா... ஏழையா? Poll_c10செல்வந்தனா... ஏழையா? Poll_m10செல்வந்தனா... ஏழையா? Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வந்தனா... ஏழையா?


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 10, 2013 1:38 pm

கரும்பூர் என்ற நாட்டை ஆண்டு வந்த அரசர், ஒருசமயம், அரசவையில் இருந்தவர்களிடம் பல்வேறு செய்திகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர்கள் பேச்சு நேர்மையைப் பற்றித் திரும்பியது.
""ஏழை நேர்மையானவனாக இருப்பானா? செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பானா?'' என்று கேட்டார் அரசர்.

""அரசே! செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பான். ஏழைதான் நேர்மை இல்லாதவனாக இருப்பான்,'' என்று அறிஞர் ஒருவர் பதிலளித்தார்.
""இப்படிப் பொதுவாக சொல்லக் கூடாது. எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார் அரசர்.
""அரசே! பரம்பரைச் செல்வந்தர்கள் பணத்தை மதிக்க மாட்டார்கள். நேர்மையாக நடந்து கொள்வர். பணத்தையே பாத்திராத ஏழைகளுக்குப் பணம் கிடைப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். வறுமை அவர்களை நேர்மை இல்லாமல் நடக்கத் தூண்டும். அதனால்தான் அப்படி சொன்னேன்,'' என்றார்

அறிஞர்.
""அரசே! இவர் கருத்து தவறு. எப்போதும் ஏழைகள்தான் நேர்மையான வர்களாக இருப்பர். செல்வந்தர்கள்தான் நேர்மையற்றவர்களாக இருப்பர்,'' என்று விதூஷகன் கூறினான்.
இதைக் கேட்ட அந்த அறிஞர் கோபம் கொண்டார்.
""இப்படி முட்டாள்தனமாகப் பேசாதே... நீ சொன்னதை உண்மை என்று நிரூபிக்க முடியுமா?'' என்று கேட்டார்.

""உன்னால் நிரூபிக்க முடியுமா?'' என்று அரசரும் கேட்டார்.
""அரசே! நீங்கள் உதவி செய்தால் என்னால் நிரூபிக்க முடியும்,'' என்றான் விதூஷகன்.
""என்ன உதவி வேண்டும்? கேள். செய்கிறேன்,'' என்றார் அரசர்.
""அரசே! நூறு பொற்காசுகள் கொண்ட இரண்டு பை எனக்கு வேண்டும். நம்பிக்கைக்கு உரிய வீரர்கள் நான்கு பேர் வேண்டும். அவர்கள் அந்தப் பொற்காசுப் பைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

""நீ கேட்டபடியே செய்கிறேன். பொற்காசுப் பைகளையும், வீரர் களையும் வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்?''
""அரசே! இந்த நகரத்தில் செல்வந்தர் களும், ஏழைகளும் ஆற்றிற்கு நீராட வருவர். செல்வந்தர் கள் ஆற்றின் மேற்குப் பகுதியில் நீராடுவர். அங்கே அவர்கள் செல்வதற்குத் தனிப் பாதை உள்ளது.
அதே போல, ஏழைகள் கிழக்குப் பகுதி யில் நீராடுவர். அவர்கள் செல்வதற்கும் தனிப்பாதை உள்ளது. செல்வந்தர்கள் பாதையில் ஏழைகளும், ஏழைகள் பாதையில் செல்வந்தர்களும் செல்வது இல்லை!''
""ஆமாம். அதற்கு என்ன?'' என்று கேட்டார் அரசர்.
"
"அரசே! செல்வந்தர்கள் பாதையில் பொற்காசுப் பை ஒன்றைப் போட வேண்டும். இரண்டு வீரர்கள் அங்கே மறைந்து இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று பார்த்து வந்து சொல்ல வேண்டும்.
அதே போல ஏழைகள் பாதையில் ஒரு பையைப் போட வேண்டும். அங்கும் இரண்டு வீரர்கள் மறைந்திருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று சொல்ல வேண்டும்!'' என்றார் விதூஷகன்.
""அருமையான திட்டம். வீரர்களுக்கு அங்கே என்ன வேலை?''

""அரசே! யார் பொற்காசுப் பையை எடுத்தாலும் அவரைப் பின்தொடர்ந்து வீரர்கள் செல்ல வேண்டும். என்ன நடந்தது என்பதை அறிந்து வந்து சொல்ல வேண்டும். யார் நேர்மையானவர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்,'' என்றார் விதூஷகன்.
உடனே அவர் தன் நம்பிக்கைக்கு உரிய வீரர்கள் நான்கு பேரை அழைத்தார். பொற்காசு பைகள் இரண்டை அவர்களிடம் தந்தார்.

""விதூஷகன் சொல்வது போல நடந்து கொள்ளுங்கள்,'' என்றார்.
அன்றிரவு அந்த வீரர்களுடன் புறப்பட்டான் விதூஷகன். செல்வந்தர்கள் வரும் பாதையில் பொற்காசுப் பை ஒன்றைப் போட்டான்.
"
"வீரர்களே! நீங்கள் இருவரும் இங்கே ஒளிந்திருக்க வேண்டும். யார் பொற்காசுப் பையை எடுத்தாலும், அவர் களுக்கு தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்து என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்றான்.

அதே போல இன்னொரு பையை ஏழைகள் பாதையில் போட்டான். மீதமுள்ள இரண்டு வீரர்களிடமும் அதையே சொன்னான்.
பொழுது விடியும் நேரம் வந்தது. செல்வந்தர்கள் பாதை வழியாக வட்டிக் கடைக்காரர் ஒருவர் வந்தார்.

வழியில் கிடந்த பையைப் பார்த்த அவர் பரபரப்புடன் எடுத்தார். உள்ளே பொற்காசுகள் மின்னின. தான் எடுத்தது யாருக்காவது தெரியுமா என்று நாலா பக்கமும் பார்த்தார்.
புதரில் ஒளிந்திருந்த வீரர்கள் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.
"கடவுள் கண் திறந்து விட்டார். என் வேண்டுதல் நிறைவேறி விட்டது. இல்லையேல் இந்தப் பொற்காசுப் பை என் கையில் கிடைக்குமா? இதைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்' என்று

நினைத்தார் அவர்.
நீராடாமலேயே வீட்டிற்குத் திரும்பினார்.
வீரர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர்.

அங்கே ஏழைகள் பாதையில் மற்ற வீரர்கள் இருவரும் ஒளிந்திருந்தனர்.
அப்போது உழவன் ஒருவன் மகிழ்ச்சியாகப் பாடியபடியே அந்த வழியாக வந்தான். வழியில் கிடந்த

பை அவன் கண்ணில் பட்டது. அதை எடுத்துப் பார்த்தான். உள்ளே பொற்காசுகள் இருந்தன.
அதிர்ச்சி அடைந்த அவன், ""இங்கே யாராவது இருக்கிறீர்களா? இங்கே யாராவது இருக்கிறீர்களா? யாராவது பொற்காசுப் பையைத் தவற விட்டீர்களா?'' என்று உரத்த குரலில் கத்தினான்.
யாரும் அவனுக்குப் பதில் தரவில்லை.

""இது ஏழைகள் பாதை. இந்தப் பொற்காசுகள் ஏழை ஒருவனின் வாழ்நாள் சேமிப்பாக இருக்க வேண்டும். நான் இதை அரண் மனையில் சேர்க்க வேண்டும். உரியவரிடம் எப்படியாவது சேர்க்கச் சொல்ல வேண்டும்,'' என்று முணுமுணுத்தான்.
அதன்படியே அரண்மனைக்குச் சென்ற அவன் அமைச்சரைச் சந்தித்தான். அவரிடம் நடந்ததை எல்லாம் சொன்னான். அந்தப் பொற்காசுப் பையைத் தந்தான். உரியவரிடம் சேர்த்து விடுங்கள் என்றான்.

இரண்டு நாட்கள் சென்றன-
அரசவை கூடியது. அரசரைப் பார்த்து விதூஷகன், ""உங்கள் வீரர்களை அழையுங்கள். பொற்காசுப் பைகள் இரண்டையும் பற்றி விசாரியுங்கள்,'' என்றான்.
வீரர்களை அழைத்தார் அவர்.

முதல் பொற்காசுப் பை வட்டிக் கடைக்காரர் ஒருவரிடம் கிடைத்தது. அதை அவர் என்ன செய்தார் என்பதைச் சொன்னார்கள்.

அதே போல இரண்டாவது பொற்காசுப் பை ஏழை உழவன் ஒருவனிடம் கிடைத்தது. அவன் அதை அரண்மனையில் ஒப்படைத்தான் என்றும் சொன்னார்கள்.
""நீங்கள் உடனே சென்று வட்டிக் கடைக்காரரையும், உழவனையும் அழைத்து வாருங்கள்!'' என்றார்

அரசர்.
சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் அரசவைக்கு வந்தனர்.
வட்டிக் கடைக்காரனைப் பார்த்து அரசர், ""உமக்கு வழியில் பொற்காசுப் பை கிடைத்தது. அதை நீ ஏன் அரசவையில் ஒப்படைக்கவில்லை?'' என்று கோபத்துடன் கேட்டார்.

""அரசே! எனக்கு இப்போது போதிய வருவாய் கிடைப்பது இல்லை. கடவுளிடம் நான் நாள்தோறும் நிறைய பணம் தருமாறு வேண்டினேன். வழியில் கிடந்த அந்த பொற்காசுப் பையைப் பார்த்தேன். கடவுள்தான் அருள் செய்து விட்டார் என்று நினைத்தேன். அங்கு என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அதனால் நானே அதை வைத்துக் கொண்டேன்,'' என்றார்.
உழவனைப் பார்த்து அரசர், ""பொற்காசுப் பையை நீயே ஏன் வைத்துக் கொள்ள வில்லை? ஏன் அமைச்சரிடம் அதைத் தந்தாய்?'' என்று கேட்டார்.

""அரசர் பெருமானே! அந்தப் பொற்காசுப் பை ஏழைகள் பாதையில் கிடந்தது. அது ஏழை ஒருவன் உடையது. அவன் வாழ்நாள் சேமிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். கடவுளிடம் நான் எப்போதும் பணத்தை வேண்டியது இல்லை. நானும், என் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் வேண்டுவேன்,'' என்றான்.

""அரசே! நான் என் கருத்தை நிரூபித்து விட்டேன். ஏழை போதும் என்ற உள்ளம் கொண்டவனாக இருப்பான். அதனால் நேர்மையானவனாக நடந்து கொள்வான். செல்வந்தன் பேராசை கொண்டவனாக இருப்பான். அதனால் நேர்மையற்றவனாக நடந்து கொள்வான். இதை எல்லாரும் இப்போது அறிந்து கொண்டிருப்பீர்கள்,'' என்றான் விதூஷகன்.
அந்த அறிஞரைப் பார்த்த அரசர், ""இப்போது நீர் என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டார்.
""அரசே! என் தவறை உணர்ந்து விட்டேன். இனி இப்படி அவசரப்பட்டுக் கருத்து சொல்ல மாட்டேன். சிந்தித்தே எதையும் பேசுவேன்,'' என்றார்.

வட்டிக் கடைக்காரரைக் கோபத்துடன் பார்த்த அரசர், ""உம் பேராசைக்கு நீர் தண்டனை பெற்றே ஆக வேண்டும். அந்த பையில் எவ்வளவு பொற்காசுகள் இருந்ததோ அதைப் போல இரண்டு பங்கு பொற்காசுகள் தர வேண்டும்,'' என்றார்.
உழவனைப் பார்த்து அவர், ""உன் நேர்மைக்கு நான் பரிசு வழங்கியாக வேண்டும். உனக்குக் கிடைத்த பொற்காசுப் பையை நீயே திரும்ப வாங்கிக் கொள். அந்தப் பொற்காசுகளைச் செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்து,'' என்றார்.

பிறகு விதூஷகனை பார்த்து, ""உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உன்னால் எல்லாரும் ஓர் உண்மையைக் கற்றுக் கொண்டோம்,'' என்று பாராட்டினார்.

சிறுவர் மலர்!

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Mar 10, 2013 1:43 pm

அருமை அருண் பகிர்வுக்கு நன்றி



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 13, 2013 1:32 pm

http://img.dinamalar.com/data/uploads/E_1362641363.jpeg

கரும்பூர் என்ற நாட்டை ஆண்டு வந்த அரசர், ஒருசமயம், அரசவையில் இருந்தவர்களிடம் பல்வேறு செய்திகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர்கள் பேச்சு நேர்மையைப் பற்றித் திரும்பியது.

"ஏழை நேர்மையானவனாக இருப்பானா? செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பானா?'' என்று கேட்டார் அரசர்.

"அரசே! செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பான். ஏழைதான் நேர்மை இல்லாதவனாக இருப்பான்,'' என்று அறிஞர் ஒருவர் பதிலளித்தார்.

"இப்படிப் பொதுவாக சொல்லக் கூடாது. எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார் அரசர்.

"அரசே! பரம்பரைச் செல்வந்தர்கள் பணத்தை மதிக்க மாட்டார்கள். நேர்மையாக நடந்து கொள்வர். பணத்தையே பாத்திராத ஏழைகளுக்குப் பணம் கிடைப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். வறுமை அவர்களை நேர்மை இல்லாமல் நடக்கத் தூண்டும். அதனால்தான் அப்படி சொன்னேன்,'' என்றார் அறிஞர்.

"அரசே! இவர் கருத்து தவறு. எப்போதும் ஏழைகள்தான் நேர்மையான வர்களாக இருப்பர். செல்வந்தர்கள்தான் நேர்மையற்றவர்களாக இருப்பர்,'' என்று விதூஷகன் கூறினான்.

இதைக் கேட்ட அந்த அறிஞர் கோபம் கொண்டார்.

"இப்படி முட்டாள்தனமாகப் பேசாதே... நீ சொன்னதை உண்மை என்று நிரூபிக்க முடியுமா?'' என்று கேட்டார்.

"உன்னால் நிரூபிக்க முடியுமா?'' என்று அரசரும் கேட்டார்.

"அரசே! நீங்கள் உதவி செய்தால் என்னால் நிரூபிக்க முடியும்,'' என்றான் விதூஷகன்.

"என்ன உதவி வேண்டும்? கேள். செய்கிறேன்,'' என்றார் அரசர்.

"அரசே! நூறு பொற்காசுகள் கொண்ட இரண்டு பை எனக்கு வேண்டும். நம்பிக்கைக்கு உரிய வீரர்கள் நான்கு பேர் வேண்டும். அவர்கள் அந்தப் பொற்காசுப் பைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

"நீ கேட்டபடியே செய்கிறேன். பொற்காசுப் பைகளையும், வீரர் களையும் வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்?''

"அரசே! இந்த நகரத்தில் செல்வந்தர் களும், ஏழைகளும் ஆற்றிற்கு நீராட வருவர். செல்வந்தர் கள் ஆற்றின் மேற்குப் பகுதியில் நீராடுவர். அங்கே அவர்கள் செல்வதற்குத் தனிப் பாதை உள்ளது.

அதே போல, ஏழைகள் கிழக்குப் பகுதி யில் நீராடுவர். அவர்கள் செல்வதற்கும் தனிப்பாதை உள்ளது. செல்வந்தர்கள் பாதையில் ஏழைகளும், ஏழைகள் பாதையில் செல்வந்தர்களும் செல்வது இல்லை!''

"ஆமாம். அதற்கு என்ன?'' என்று கேட்டார் அரசர்.

"அரசே! செல்வந்தர்கள் பாதையில் பொற்காசுப் பை ஒன்றைப் போட வேண்டும். இரண்டு வீரர்கள் அங்கே மறைந்து இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று பார்த்து வந்து சொல்ல வேண்டும்.

அதே போல ஏழைகள் பாதையில் ஒரு பையைப் போட வேண்டும். அங்கும் இரண்டு வீரர்கள் மறைந்திருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று சொல்ல வேண்டும்!'' என்றார் விதூஷகன்.

"அருமையான திட்டம். வீரர்களுக்கு அங்கே என்ன வேலை?''

"அரசே! யார் பொற்காசுப் பையை எடுத்தாலும் அவரைப் பின்தொடர்ந்து வீரர்கள் செல்ல வேண்டும். என்ன நடந்தது என்பதை அறிந்து வந்து சொல்ல வேண்டும். யார் நேர்மையானவர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்,'' என்றார் விதூஷகன்.

உடனே அவர் தன் நம்பிக்கைக்கு உரிய வீரர்கள் நான்கு பேரை அழைத்தார். பொற்காசு பைகள் இரண்டை அவர்களிடம் தந்தார்.

"விதூஷகன் சொல்வது போல நடந்து கொள்ளுங்கள்,'' என்றார்.

அன்றிரவு அந்த வீரர்களுடன் புறப்பட்டான் விதூஷகன். செல்வந்தர்கள் வரும் பாதையில் பொற்காசுப் பை ஒன்றைப் போட்டான்.

"வீரர்களே! நீங்கள் இருவரும் இங்கே ஒளிந்திருக்க வேண்டும். யார் பொற்காசுப் பையை எடுத்தாலும், அவர் களுக்கு தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்து என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்றான்.

அதே போல இன்னொரு பையை ஏழைகள் பாதையில் போட்டான். மீதமுள்ள இரண்டு வீரர்களிடமும் அதையே சொன்னான்.

பொழுது விடியும் நேரம் வந்தது. செல்வந்தர்கள் பாதை வழியாக வட்டிக் கடைக்காரர் ஒருவர் வந்தார்.

வழியில் கிடந்த பையைப் பார்த்த அவர் பரபரப்புடன் எடுத்தார். உள்ளே பொற்காசுகள் மின்னின. தான் எடுத்தது யாருக்காவது தெரியுமா என்று நாலா பக்கமும் பார்த்தார்.

புதரில் ஒளிந்திருந்த வீரர்கள் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.

"கடவுள் கண் திறந்து விட்டார். என் வேண்டுதல் நிறைவேறி விட்டது. இல்லையேல் இந்தப் பொற்காசுப் பை என் கையில் கிடைக்குமா? இதைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்' என்று நினைத்தார் அவர்.

நீராடாமலேயே வீட்டிற்குத் திரும்பினார்.

வீரர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர்.

அங்கே ஏழைகள் பாதையில் மற்ற வீரர்கள் இருவரும் ஒளிந்திருந்தனர்.

அப்போது உழவன் ஒருவன் மகிழ்ச்சியாகப் பாடியபடியே அந்த வழியாக வந்தான். வழியில் கிடந்த பை அவன் கண்ணில் பட்டது. அதை எடுத்துப் பார்த்தான். உள்ளே பொற்காசுகள் இருந்தன.

அதிர்ச்சி அடைந்த அவன், "இங்கே யாராவது இருக்கிறீர்களா? இங்கே யாராவது இருக்கிறீர்களா? யாராவது பொற்காசுப் பையைத் தவற விட்டீர்களா?'' என்று உரத்த குரலில் கத்தினான்.

யாரும் அவனுக்குப் பதில் தரவில்லை.

"இது ஏழைகள் பாதை. இந்தப் பொற்காசுகள் ஏழை ஒருவனின் வாழ்நாள் சேமிப்பாக இருக்க வேண்டும். நான் இதை அரண் மனையில் சேர்க்க வேண்டும். உரியவரிடம் எப்படியாவது சேர்க்கச் சொல்ல வேண்டும்,'' என்று முணுமுணுத்தான்.

அதன்படியே அரண்மனைக்குச் சென்ற அவன் அமைச்சரைச் சந்தித்தான். அவரிடம் நடந்ததை எல்லாம் சொன்னான். அந்தப் பொற்காசுப் பையைத் தந்தான். உரியவரிடம் சேர்த்து விடுங்கள் என்றான்.

இரண்டு நாட்கள் சென்றன-

அரசவை கூடியது. அரசரைப் பார்த்து விதூஷகன், "உங்கள் வீரர்களை அழையுங்கள். பொற்காசுப் பைகள் இரண்டையும் பற்றி விசாரியுங்கள்,'' என்றான்.

வீரர்களை அழைத்தார் அவர்.

முதல் பொற்காசுப் பை வட்டிக் கடைக்காரர் ஒருவரிடம் கிடைத்தது. அதை அவர் என்ன செய்தார் என்பதைச் சொன்னார்கள்.

அதே போல இரண்டாவது பொற்காசுப் பை ஏழை உழவன் ஒருவனிடம் கிடைத்தது. அவன் அதை அரண்மனையில் ஒப்படைத்தான் என்றும் சொன்னார்கள்.

"நீங்கள் உடனே சென்று வட்டிக் கடைக்காரரையும், உழவனையும் அழைத்து வாருங்கள்!'' என்றார் அரசர்.

சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் அரசவைக்கு வந்தனர்.

வட்டிக் கடைக்காரனைப் பார்த்து அரசர், "உமக்கு வழியில் பொற்காசுப் பை கிடைத்தது. அதை நீ ஏன் அரசவையில் ஒப்படைக்கவில்லை?'' என்று கோபத்துடன் கேட்டார்.

"அரசே! எனக்கு இப்போது போதிய வருவாய் கிடைப்பது இல்லை. கடவுளிடம் நான் நாள்தோறும் நிறைய பணம் தருமாறு வேண்டினேன். வழியில் கிடந்த அந்த பொற்காசுப் பையைப் பார்த்தேன். கடவுள்தான் அருள் செய்து விட்டார் என்று நினைத்தேன். அங்கு என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அதனால் நானே அதை வைத்துக் கொண்டேன்,'' என்றார்.

உழவனைப் பார்த்து அரசர், "பொற்காசுப் பையை நீயே ஏன் வைத்துக் கொள்ள வில்லை? ஏன் அமைச்சரிடம் அதைத் தந்தாய்?'' என்று கேட்டார்.

"அரசர் பெருமானே! அந்தப் பொற்காசுப் பை ஏழைகள் பாதையில் கிடந்தது. அது ஏழை ஒருவன் உடையது. அவன் வாழ்நாள் சேமிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். கடவுளிடம் நான் எப்போதும் பணத்தை வேண்டியது இல்லை. நானும், என் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் வேண்டுவேன்,'' என்றான்.

"அரசே! நான் என் கருத்தை நிரூபித்து விட்டேன். ஏழை போதும் என்ற உள்ளம் கொண்டவனாக இருப்பான். அதனால் நேர்மையானவனாக நடந்து கொள்வான். செல்வந்தன் பேராசை கொண்டவனாக இருப்பான். அதனால் நேர்மையற்றவனாக நடந்து கொள்வான். இதை எல்லாரும் இப்போது அறிந்து கொண்டிருப்பீர்கள்,'' என்றான் விதூஷகன்.

அந்த அறிஞரைப் பார்த்த அரசர், "இப்போது நீர் என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டார்.

"அரசே! என் தவறை உணர்ந்து விட்டேன். இனி இப்படி அவசரப்பட்டுக் கருத்து சொல்ல மாட்டேன். சிந்தித்தே எதையும் பேசுவேன்,'' என்றார்.

வட்டிக் கடைக்காரரைக் கோபத்துடன் பார்த்த அரசர், "உம் பேராசைக்கு நீர் தண்டனை பெற்றே ஆக வேண்டும். அந்த பையில் எவ்வளவு பொற்காசுகள் இருந்ததோ அதைப் போல இரண்டு பங்கு பொற்காசுகள் தர வேண்டும்,'' என்றார்.

உழவனைப் பார்த்து அவர், "உன் நேர்மைக்கு நான் பரிசு வழங்கியாக வேண்டும். உனக்குக் கிடைத்த பொற்காசுப் பையை நீயே திரும்ப வாங்கிக் கொள். அந்தப் பொற்காசுகளைச் செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்து,'' என்றார்.

பிறகு விதூஷகனை பார்த்து, "உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உன்னால் எல்லாரும் ஓர் உண்மையைக் கற்றுக் கொண்டோம்,'' என்று பாராட்டினார்.

***
சிறுவர் மலர்



செல்வந்தனா... ஏழையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 13, 2013 1:39 pm

அருமையான கதை அண்ணா, நல்ல பகிர்வு அன்பு மலர்
chinnavan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் chinnavan




அன்புடன்
சின்னவன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 13, 2013 1:40 pm

தேங்யு அங்கிள் நன்றி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 13, 2013 3:27 pm

நல்ல பகிர்வு நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக