புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_c10மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_m10மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_c10மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_m10மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_c10மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_m10மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_c10 
53 Posts - 60%
heezulia
மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_c10மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_m10மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_c10மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_m10மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_c10மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_m10மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்கள் போராட்டம் விபரீதமாகும் முன் உரிய பதில் தாருங்கள்


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Mar 16, 2013 2:27 pm

இலங்கை பிரச்னை தொடர்பாக, தமிழக மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம், கடும் விளைவுகளை ஏற்படுத்தும் முன், உருப்படியான பதிலை மத்திய அரசு தர வேண்டும்' என, ராஜ்யசபாவில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.
இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஐ.நா., மனித உரிமை கமிஷனில், அந்நாட்டுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாணவர்கள் போராட்ட பிரச்னையை, ராஜ்யசபாவில் நேற்று, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள் எழுப்பினர்.
தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது: மாநிலம் முழுவதும், ஆங்காங்கே கல்லூரி மாணவர்களின், தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், தமிழகமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஏறத்தாழ எல்லா கல்லூரிகளுமே, களத்திற்கு வரும் சூழ்நிலை காணப்படுகிறது. மத்திய அரசு என்ன செய்யப்போகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷனில், தாக்கலாகியுள்ள தீர்மானத்தை, ஆதரிக்கும் முடிவை, மத்திய அரசு எடுக்க வேண்டும். இலங்கை மீது, நடுநிலையான விசாரணைக்கு வழி வகை செய்ய வேண்டும். இதன் மூலமே, மாணவர்களை அமைதிப்படுத்த முடியும். மத்திய அரசுக்கு, இதில், பொறுப்பும் கடமையும் உள்ளது. இந்த பிரச்னையில், தெளிவான உறுதியான பதிலை மத்திய அரசு தர வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், தமிழகம் எங்கும் கடும் விளைவுகள் ஏற்படுவது நிச்சயம். எதிர்காலத்தில் நடக்கப்போகும், விரும்பத்தகாத நிகழ்வுகளை, தடுத்து நிறுத்த வேண்டும் எனில், மத்திய அரசு இனியும் காலம் கடத்தாமல், உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சிவா பேசினார்.
அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷனில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம், திருப்திகரமானது அல்ல. அதிலுள்ள அம்சங்கள் எல்லாமே, பெரிய அளவில், அழுத்தத்தை தரக்கூடியவை அல்ல. அத்துடன், தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைக் கூட, மேலும் வலு இல்லாதவைகளாக மாற்ற, பல சக்திகள் முயன்று வருகின்றன. பாரபட்சமற்ற வகையில், சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு குறைவாக எதையும் ஏற்க முடியாது. மேலும், அமெரிக்காவின் தீர்மானத்தை, இந்தியா ஆதரித்தால் மட்டும் போதாது. அந்த தீர்மானத்தை, வலுவான தீர்மானமாக மாற்ற வேண்டிய பொறுப்பும், மத்திய அரசுக்கு உள்ளது. கடந்த, 1960ம் ஆண்டுகளில், இந்தி மொழியை திணித்தபோது, தமிழகம் பற்றி எரிந்தது. மாணவர்களே, அப்போதும் களத்தில் நின்றனர். அந்த இந்தி எதிர்ப்பு போராட்டம்தான், தமிழகத்தில் காங்கிரசை இல்லாமல் செய்து விட்டது. இப்போதும், மாணவர்களே களத்திற்கு வந்துள்ளனர் என்பதை இங்குள்ளவர்கள் உணர்ந்தால் சரி. இவ்வாறு மைத்ரேயன் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., ரங்கராஜன் பேசுகையில், ""தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த பிரச்னையில், மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் போராட்டத்திற்கு, மத்திய அரசு போதிய உறுதி மொழியை அளிக்க வேண்டும். எத்தகைய முடிவை, மத்திய அரசு எடுத்தாலும், அதற்கு முன், மாநில அரசையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்,'' என்றார். இறுதியாக பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜிவ் சுக்லா, ""எம்.பி.,க்களின் உணர்வுகளை, அரசு கவனத்தில் கொள்ளும். இந்த கருத்துக்கள் எல்லாம், வெளியுறவு அமைச்சரிடம் தெரிவிக்கப்படும். இதுகுறித்து, அறிக்கை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார். லோக்சபாவிலும், இதே பிரச்னைக்காக குரல் கொடுத்த தி.மு.க., - எம்.பி.,யான டி.ஆர்.பாலு, ""அமெரிக்காவின் தீர்மானத்தை, மேலும் கூர்மையானதாக, இந்தியா மாற்ற வேண்டும். இல்லையெனில், விபரீத விளைவுகள் ஏற்படும்,'' என்றார். அ.தி.மு.க.,வின் தம்பி துரை, ""அமெரிக்காவை விட, இந்தியாவே இந்த விவகாரத்தில், முன்னின்று செயல்பட வேண்டும். இந்தியா சார்பில், அமெரிக்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர, மத்திய அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.
விரைவில் இறுதி முடிவு: ""இலங்கை எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதுபற்றி தீவிரமாக ஆய்வு செய்கிறது. இது முடிவு எடுக்கப்பட்ட உடன் சபையில் தெரிவிக்கப்படும்,'' என, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், ராஜ்யசபாவில் தெரிவித்தார். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் கோரிக்கைக்குப் பின், ராஜ்யசபாவில் அறிக்கை தாக்கல் செய்த, சல்மான் குர்ஷித் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தீர்மானம் தொடர்பாக, என்ன நிலையை கடைப்பிடிக்கலாம் என்பது குறித்து, மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டியது தேவையோ, அதை மத்திய அரசு எடுக்கும். போர்க் குற்றங்கள் தொடர்பாக, பாரபட்சமற்ற, சுதந்திரமான, ஒளிவுமறைவற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு குர்ஷித் கூறினார்.
நன்றி:தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக