Navigation


 ஈகரை வலைப்பதிவு


 Go back to the forum

ஈகரை தமிழ் களஞ்சியம்   

சர்க்கரை நோய் வகைகளும் - தடுப்பு முறைகளும் 

Admin | Published on the sun Jan 29, 2023 4:42 pm | 339 Views


சர்க்கரை நோய், நீரழிவு நோய் என பிரம்மாண்ட வளர்ச்சியினை பெற்றுள்ள இந்த நோய் உலகினையே உலுக்கிக்கொண்டு இருக்கின்றது என்பதுதான் உண்மை. இன்சுலின் ஹார்மோன் ரத்தத்தில் இருந்து சர்க்கரையினை செல்களுக்குள் செலுத்தி சக்தியாக செயல்படச் செய்கிறது. சர்க்கரை நோய் என்றால் உடல் தேவையான இன்சுலினை சுரக்கவில்லை அல்லது இன்சுலினை முறையாக செயல்படுத்த முடியவில்லை என்பதே பொருள். 


சிகிச்சை எடுக்கப்படாத உயர் சர்க்கரை உடலில் கொண்டவர்களுக்கு கண்கள், சிறுநீரகம், நரம்புகள் என ஒவ்வொரு உறுப்பினையும் பாதித்து விடும். இதனைப் பற்றி நன்கு அறிந்து கொள்வது வரும்முன் காப்பதற்கும், வந்து விட்டால் முறையாய் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் பயன்படும். 


நீரழிவு நோய் பிரிவு-1:


இதனை Autoimmune நோய் என்பர். நம் நோய் எதிர்பப்பு சக்தியே நம் உடலில் கணையத்தில் உள்ள நல்ல செல்களை அழித்து விடுகின்றது. கணையம் தானே இன்சுலினைத் தர வேண்டும். அதுவே அழிந்தால் என்னாவது இதன் காரணம் என்ன? என்பதனை இன்னமும் தெளிவாகச் சொல்ல முடிவதில்லை. இதனை தன்னுடல் தாக்கு நோய் பிரிவில் குறிப்பிடுகின்றனர். 


பிரிவு-2 சர்க்கரை நோய்: 90 முதல் 95 சதவீதம் வரை சர்க்கரை நோய் உடையவர்கள் இந்த பிரிவில்தான் உள்ளனர். நமது செல்கள் இன்சுலினுக்கு முறையாய் செயல்பாட்டில் இயங்காது இருக்கும். 

கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் சர்க்கரைக்கு பொதுவான அறிகுறிகள்: 


* பசி அதிகரித்தல்

* தாகம் அதிகரித்தல் 

* எடை குறைவது 

* அடிக்கடி சிறுநீர் செல்லுதல் 

* தெளிவான பார்வை இன்மை 

* மிக அதிக சோர்வு 

* ஆறாத புண்கள் (அல்லது) ஆறுவதற்கு அதிக காலம் பிடிக்கும் புண்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். 


ஆண்களுக்கு தசைகளின் வலிவு, உடலில் சக்தி குறைந்தது போல் இருக்கும். 


பெண்களுக்கு பிறப்புறுப்பில் வறட்சி, அரிப்பு, பூஞ்ஞை பாதிப்பு, சிறுநீர் பாதையில் கிருமி பாதிப்பு என இருக்கும். 


சர்க்கரை நோய் கர்ப்ப காலத்தில் ஏற்படுவதினை ரத்த பரிசோதனை செய்யும் பொழுதே பல நேரங்களில் கண்டறிய முடியும். சர்க்கரை நோய் முதல் பிரிவு குழந்தை பருவம் முதல் விடலை பருவத்தில் கூட ஏற்படலாம். 


வெகு சிலருக்கு வளர்ந்த காலத்திலும் பாதிப்பு ஏற்படலாம். இது வேகமான பாதிப்பினை குறுகிய காலத்திலேயே ஏற்படுத்தி விடும். 


உதாரணமாக வெகு வேகமான காரணமின்றி எடை குறைதல், வயிற்று வலி, வாந்தி போன்றவை ஏற்படலாம். காலம் தாழ்த்தாமல் மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் மட்டுமே பல பிரச்சினைகளில் இருந்து தீர்வு தரும்.


 சர்க்கரை நோய் பிரிவு 2: 


இது மெதுவாக உருவாகும். பலருக்கு சில காலம் எந்த அறிகுறிகளுமே இருக்காது. அறிகுறிகளும் மிகக் கடுமையாக இல்லால் இருப்பதால் ஆரம்பிக்கும் பொழுது அதனை கவனிக்காமல் பலர் தவறி விடுகின்றனர். 


காலப்போக்கில் சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் கொண்டு வராவிட்டால் * சரும பாதிப்பு * பார்வை இழத்தல் * பாதங்களில் புண் * கால், கைகளில் மதமதப்பு, வலி போன்றவை ஏற்படலாம். 


கர்ப்ப காலத்தில் கட்டுப்பாட்டிற்குள் சர்க்கரை அளவினை வைக்கவில்லை என்றால் பாதிப்புகள் ஏற்படும். 


இதனை தனிப்பட்ட முறையில் கூறுவதே நல்லது. அதாவது கர்ப்பிணிப் பெண்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். 


பிரிவு-1, பிரிவு-2 கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கு சிகிச்சை முறைகள் பாதிப்பின் அளவிற்கேற்ப மாறுபடும். எந்த பிரிவிலும் கார்ப்போஹைடிரேட் அளவினை கட்டுப்பாட்டில் வைப்பதும், சர்க்கரை உணவுகளை எடுத்துக் கொள்ளாது இருப்பதும் மிக அவசியம். உடற்பயிற்சி என்பது அவசியம். 


அதிகமாக ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்கள் செய்வது போன்ற பயிற்சிகள் கூடாது. வயது, வேலை இவற்றினை் பொறுத்து மருத்துவர் உடற்பயிற்சி முறை, நேரம் இவற்றினை அறிவுறுத்துவார். 


* நடப்பது * நடனம், * சைக்கிள், * நீச்சல் இவைகளை மருத்துவர் ஆலோசனைப்படி செய்யலாம்.


 பொதுவில் அதிக கெட்ட கொழுப்பு மிகுந்த உணவுகளை தவிர்த்து விட வேண்டும். சிறு சிறு அளவில் உண்ண வேண்டும். மருத்துவர் அனுமதித்த பழங்கள் மற்றும் முழு தானியங்கள் பெரும் உதவி செய்யும். 


அதிக எடை இருப்பின் முதலில் அதனை முறையாய் குறைத்தாலே பல பிரச்சினைகள் தீரும். 


எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது நல்லது. 


கீரை, ப்ரோகலி, காலிபிளவர், பச்சை காய்கறிகள், தக்காளி, குடை மிளகாய், நாட்டு காய்கறிகள், முழு தானிய உணவுகள் நார்சத்து இவை மிகுந்த பயனைக் கொடுக்கும். 


கொட்டை வகைகள், வேர்க்கடலை இவற்றினை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். தேவையான அளவு நீர் குடிப்பதும் அவசியம். 


மது, புகை இவை கண்டிப்பாக கூடாது. 


வைட்டமின் டி சத்து உடலில் சரியான அளவில் இருக்க வேண்டும். 


* வைட்டமின்கள், தாது உப்புகள் குறைபாடு இல்லாது இருக்க மருத்துவர் ஆலோசனைப்படி சத்து மாத்திரைகள் எடுப்பது அவசியம். 


* 3 மாதத்திற்கான சர்க்கரை அளவினை ரத்த பரிசோதனை மூலம் சரி பார்த்துக் கொள்வது நல்லது. வீட்டிலேயே பரிசோதனை கருவி மூலமும் சரி பார்த்துக் கொள்ளலாம். 


* சிலருக்கு அவ்வப்போது குறைந்த சர்க்கரை அளவும் ஏற்படலாம். 


* சில்லிப்பு

* உடல் நடுக்கம்

* மயக்கம்

* படபடப்பு

* பசி

* வயிற்றுப் பிரட்டல்

* குழப்பம் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். 


சர்க்கரை அளவு குறைவது என்பது சற்று ஆபத்தானது. கையில் ஒரு சாக்லெட் கூட வைத்திருக்கலாம். இதனை உங்கள் மருத்துவர் மூலம் நேரடி விளக்கம் பெற வேண்டும். 


சர்க்கரை நோய் பாதிப்பிற்கு விருந்தும் கூடாது. கடும் விரதமும் கூடாது. அதிகம் பலப்படுத்தப்பட்ட சிகப்பு மாமிசம், அதிக கொழுப்பு சத்து மிகுந்த பால், பால் சார்ந்த உணவுப் பொருட்கள், பாக்கெட்டில் ரெடிமேடாக கிடைக்கும் கொரிக்கும் உணவுகள். அதிக மாவுச் சத்து நிறைந்த உணவுகள், சர்க்கரை அதிகம் கொண்ட உணவுகள், உயர் பழங்கள், பொரித்த உணவுகள், ஜூஸ், சர்க்கரை சேர்த்த பானகங்கள் என இவை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியவை. 


பச்சை காய்கறிகள், வேக வைத்த காய்கறிகள், தக்காளி, வைட்டமின் 'சி' சத்து நிறைந்த பழங்கள், முழு தானியம், கொட்டை வகைகள், பருப்பு, கொழுப்பு இல்லாத பால், தயிர் என உண்ணும் பழக்கம் உருவாக வேண்டும். 


20 வருடங்களுக்கு முந்தைய காலத்தினை விட இன்று சர்க்கரை நோயாளிகளுக்கு பல முன்னேற்ற வகையிலான மருந்துகள் ஊசி முறைகள் என பல பிரிவுகளில் சிகிச்சைகள் உள்ளன. ஆயினும் முதல் சிகிச்சையாக முறையான உணவு, உடற்பயிற்சி இவைவே முதல் முக்கியத்துவம் பெறுகின்றன. 


வெந்தயம் எடுத்துக் கொள்பவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு டீஸ்பூன் அளவுக்கு மேல் எடுத்துக் கொள்வது சில வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். 


இன்சுலியன் செடி- இதற்கு இன்னமும் முழுமையான ஆய்வு முடிவுகள் வெளியாகவில்லை. 


பிரிவு - 1 நீரிழிவு நோய் என்றாலே நாம் செயற்கை முறையில் உடலுக்கு இன்சுலின் கொடுத்து ஆக வேண்டும். 


பிரிவு-1 பிரிவு-2 சர்க்கரை பாதிப்பிற்கு என்ன வித்தியாசம்? 


பிரிவு-1ல் கணையம் இன்சுலின் ஹார்மோன் சுரப்பதே இல்லை. முழுமையாக நாம் அதனை வாழ்நாள் முழுவதும் உடலில் ஊசி மூலமாக அன்றாட மருத்துவர் சொல்லும் அறிவுரைப்படி செலுத்திக் கொள்ள வேண்டும். 


பிரிவு-2ல் கணையம் போதுமான அளவு இன்சுலின் சுரப்பதில்லை அல்லது கூடவே உடல் இன்சுலினை அது ஏற்றுக்கொள்ள வேண்டிய அளவு ஏற்பதில்லை. 


பிரிவு-1 குழந்தைகள், இளம் வயது இவற்றிலேயே ஏற்பட்டு விடும் என்பது பொதுவானது. என்றாலும் வளர்ந்த பிறகும் இந்த பாதிப்பு ஏற்படலாம். ஆயினும் பிரிவு-1 வகை சர்க்கரை நோய் பாதிப்பு பிரிவு-2 ஐ விட குறைவு தான். 


கீட்டோ அசிடோசிஸ் என்பது சற்று கவலை தருவதான பாதிப்பாக பிரிவு ஒன்றிற்கு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இந்த பாதிப்பு ஏற்படுவதன் காரணம் உடல் தேவையான அளவு இன்சுலின் இல்லாத பொழுது தாக்குதல் ஏற்படும். இன்சுலின் எடுக்க மறந்து விடுதல் அல்லது போதுமான அளவு எடுக்கத் தவறுதல். அதிக சூடு, அதிக குளிர் இவற்றினால் இன்சுலின் பாதிக்கப்பட்டு செயலிழத்தல், காலாவதியான இன்சுலின், உடல் நோய், கிருமி தாக்குதல், மன உளைச்சல், கர்ப்ப காலம், கணைய வீக்கம், இருதய மாரடைப்பு, பக்கவாதம், மது, புகை, போதைப் பழக்கம், சில மருந்துகள் இவற்றின் காரணமாக இன்சுலின் பற்றாக்குறை ஏற்பட்டு கீட்டோ அசிடோசிஸ் பாதிப்பு ஏற்படலாம். 


இதற்கான பரிசோதனைகளை மருத்துவர் செய்து சிகிச்சை மேற்கொள்ளலாம். பரம்பரை, கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை பிரிவு- 1, 2 இவையும் பாதிப்பிற்கு காரணமாகின்றன. கீட்டோ அசிட்டோசிஸ் பாதிப்பின் அறிகுறிகள்: வாந்தி, வயிற்று வலி, வேகமாய் மூச்சு வாங்குதல், குழப்பம், மயக்கம், நினைவிழத்தல் போன்றவை இருக்கும். 


பிரிவு-1 சர்க்கரை நோய்க்கான தீவிர ஆய்வுகள் இன்றும் நடைபெறுகின்றது. 


இருப்பினும் தாய்க்கு இவ்வாறு இருப்பின் பிள்ளைகளுக்கு ஒரு சதவீதம் முதல் 4 சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்றும் தந்தைக்கு இருப்பின் 3 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. 


தாய், தந்தை இருவருக்கும் பிரிவு-1 வகை பாதிப்பு இருந்தால் பிள்ளைகளுக்கு 30 சதவீதம் வரை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் குறிப்பிடப்படுகின்றது. குழந்தைகளுக்கு பிரிவு 1 பாதிப்பு ஏற்படும் பொழுது குழந்தைகள் ஹார்மோன் பிரிவு சிறப்பு படிப்பினை மேற்கொண்டவரே சிகிச்சை அளிக்கின்றார். எடை, வயது, உடல் உழைப்பு, உணவு உண்ணும் வகை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இவற்றினை கொண்டே இன்சுலின் அளவு நிர்ணயிக்கப்படுகின்றது. 


இன்று இன்சுலின் ஊசி, பேனா போன்ற கருவி, பம்ப், வாயில் உள்ளிழுக்கும் வகை (ஆஸ்துமா இன்ஹேலர் போன்றது) என பல முன்னேற்ற வழிகளில் அளிக்கப்படுகின்றது. 


இன்சுலின் எடுக்கும் பொழுது வேகமாய் சர்க்கரை அளவு குறைந்து விடாமல் பாதுகாக்க தெரிந்து கொள்ள வேண்டும். இதன் அறிகுறிகள் முன்னமே குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும் அவசியம் கருதி மீண்டும் ஒரு முறை பார்ப்போம். நடுக்கம், அதிக வியர்வை, வேகமான இருதயத் துடிப்பு, மயக்கம், வெளிறிய சருமம், பசி, வயிற்றுப் பிரட்டல், தூக்கமின்மை, தளர்ந்து விடுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தானே முதலில் வீட்டில் பரிசோதனை கருவிக்கொண்டு சர்க்கரை அளவினை பரிசோதித்து கொள்ளலாம். 


70mg/dt என்பதற்கும் கீழே சர்க்கரை அளவு என்பது ஆபத்தானது. உடனே ஏதாவது ஒரு மாவு சத்து உணவு கூட உட்கொள்ளலாம். 


20 நிமிடங்கள் சென்று ரத்த பரிசோதனை செய்து தேவையெனில் கூடுதல் 20 கிராம் அளவுக்கு கார்போஹைட்ரேட் உணவு எடுத்துக் கொள்ளலாம். 


இதனை தனிப்பட்ட முறையில் மருத்துவர் ஆலோசனை பெற்று தெரிந்து கொள்வதே நல்லது. தாய், தந்தைக்கு பாதிப்பு இருந்தால் தனக்கு வரும் வாய்ப்பு உள்ளதா என்பதனை ஆட்டோ ஆண்ட்டி பாடிஸ் பரிசோதனையை உங்கள் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் செய்து கொள்ளலாம். 


பிரிவு-1 சர்க்கரை நோய் என்பது சிறந்த கண்காணிப்பில் இருக்க வேண்டிய ஒன்று. பாதிப்புகளாக கண் சார்ந்த பிரச்சினைகள், பாத பிரச்சினைகள், இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, வாயில் பாதிப்பு, நரம்பு பாதிப்பு, சரும பாதிப்பு, பக்கவாதம் என எண்ணற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். 


குழந்தைகளுக்கு பாதிப்பு என்றால் அவரது பள்ளி ஆசிரியை அவரைப் பற்றி அறிய வேண்டும். குழந்தையின் பையில் நோய் பற்றிய குறிப்பு, தொலைபேசி எண் போன்றவை இருக்க வேண்டும். 


பிரிவு- 2 வகை பிரிவினை பற்றி மீண்டும் பார்க்கும் பொழுது அளவான எடை, முறையான பரிந்துரைக்கப்பட்ட உணவுகள், உடற்பயிற்சி, இவை சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வைக்கும் என்பதனை நினைவுபடுத்திக் கொள்கின்றோம். இதற்கான அறிகுறிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. 


பாதிக்கும் நீரிழிவு என்றாலே, அதுவும் கட்டுப்படாத நீரிழிவு என்றாலே ஒரு மாதிரி தான். 


அநேகமாக மறதி இருக்கும். மறதி நோய் போன்றவை ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. சில சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு உள்ளதாக இருக்கும் பொழுது மேற்கூறிய முறைகளை கடைப்பிடித்தால் அதிக காலம் தள்ளிப்போடும் வாய்ப்புகள் உள்ளது. 


Hbai 6.5 சதவீதத்துக்கு கீழ் உங்கள் ரத்த பரிசோதனையில் இருந்தாலே நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். 


இன்று அநேக பிரீ டயபட்டிக் எனும் நிலையில் உள்ளனர். 


கழுத்து, கை, உள் மடிப்பு இவற்றில் சில மாற்றம், அடர்ந்த கருநிறம் போல் இருந்தால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 


வேகமான முறையான முயற்சி கைமேல் பலன் தரும். சர்க்கரை நோய் வராமல் தடுப்போம். வந்தவர்கள் அதனை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாய் வாழ்வோம்.


About the author