புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
3 Posts - 5%
Baarushree
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
prajai
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Rutu
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
viyasan
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
2 Posts - 13%
Rutu
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_m10Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 15 matches for அண்ணாமலை


தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த இரண்டு ஆண்டுகளில், அண்ணாமலை செய்திகளில் பேசப்படாமல் இருந்ததில்லை அடிக்கடி சொந்தக் கட்சியினரை மோசமாக நடத்தி இருக்கிறார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையின் ஆக்ரோஷமான அணுகுமுறை கட்சியின் பார்வையை உறுதி செய்திருந்தாலும், பல பா.ஜ.க தலைவர்கள் இது ஒரு மாநில அரசியலில் சிறந்த உத்தியாக இருக்காது என்று கருதுகின்றனர். மாநிலத்தில் அதிக மேலாதிக்க கூட்டாளிகளுக்கு அதன் இரண்டாவது கட்ட அந்தஸ்தைக் கொடுத்து பல உணர்வுகளை சமநிலைப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்.

சமீபத்தில், #அண்ணாமலை வெளியிட்ட நீண்ட சொத்துப் பட்டியல் தொடர்பாக தி.மு.க-விடம் இருந்து ரூ. 500 கோடிக்கான நஷ்ட ஈடு வழக்கை மட்டும் பெறவில்லை, கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க மீதான அவரது விமர்சனங்கள் பா.ஜ.க உடன் உறவை முறித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியது – அ.தி.மு.கமிருந்து கூர்மையான பதிலடியைப் பெற்றுள்ளது.

39 வயதான அண்ணாமலை, ஊடகங்களை கையில் எடுத்துக்கொண்டு, பா.ஜ.க தலைவர்களை தனது புத்திசாலித்தனமான முறையில் தவறான வழியில் குலைத்துள்ளார். கடந்த சில மாதங்களில் பலர் கட்சியை விட்டு வெளியேற வழிவகுத்தார்.

தமிழகத்தில் அவ்வளவாகப் பிரபலமடையாத ஒரு தேசியக் கட்சிக்கு, ஆகஸ்ட் 2014-ல் தமிழிசை சௌந்தரராஜன், பெண் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதைப் போல, அண்ணாமலையை மாநில அரசியலில் இறக்குவது என்பது ஒரு பரிசோதனை நகர்வாக இருந்தது.

பா.ஜ.க-வைச் சேர்ந்த மூத்த மாநில தலைவர் ஒருவர் ஒருமுறை அவரை அனுபவம் இல்லாத தலைவர் என்று விவரித்தார். மற்றொரு தலைவர் அண்ணாமலையின் எழுச்சி ‘ஒரு குன்றில் இருந்து ஒரு மலையை உருவாக்குவது’ என்று கூறினார். காவல்துறையில் பணிபுரிந்த காலம்தான் அவருடைய புகழுக்கான ஒரே உரிமை என்பதை வலியுறுத்தி, அந்த தலைவர் கூறினார்: “தமிழகத்தில் ஒரு தேசியக் கட்சிக்கு தலைமை தாங்குபவர் குறைந்தது பத்தாண்டு காலமாவது தொண்டர்களுடன் களத்தில் பணியாற்றியவராக இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அவர் அப்படி இல்லை, அவர் கர்நாடகாவில் இருந்து பி.எல்.சந்தோஷால் (பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர்) நியமிக்கப்பட்டார்.

அண்ணாமலையுடன் நட்பாகப் பழகாத மற்றொரு நிர்வாகி, மாநிலத் தலைமையை அடிக்கடி மாற்றுவதால் கட்சி பாதிக்கப்படுவதாகக் கூறினார்.

தமிழ்நாட்டின் உயர்மட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் கூறியதாவது: அண்ணாமலை உற்சாகமாக இருந்தாலும், பிரச்சினைகளைப் பற்றிய அவரது அறியாமை மற்றும் முதிர்ச்சியற்ற நடத்தை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. மூத்த பத்திரிக்கையாளர்களை கோவில்களுக்கோ, தேவாலயங்களுக்கோ செல்கிறீர்களா என்று அவர் கேள்வி கேட்பது, அவர்களது வாழ்க்கைத் துணைவர்களின் மதம் குறித்து விசாரிப்பது போன்றவை நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறோம்.” என்று கூறினார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியர் ராமு மணிவண்ணன், அண்ணாமலை ஒரு புதிய அரசியலைப் பிரதிபலிப்பதாகக் கூறினார் “நாம் ஊடகங்களைச் சரியாக நிர்வகித்தால் மக்களை நிர்வகிக்க முடியும். ஆனால், மக்கள்தான் ஊடகங்கள் என்று தவறாகப் புரிந்துகொண்டால் அது முட்டாள்தனம்.” என்று கூறினார்.

மேலும், “அவருடைய முன்னாள் ஐ.பி.எஸ் பதவி அடையாளம், மற்றும் அவருடைய வயது ஆகியவற்றின சுவாரசியமான கலவையால் அண்ணாமலை ஒரு விற்பனைப் பொருளாக இருக்கலாம், ஆனால், அதன் காரணமாக அவரை முக்கிய எதிர்க்கட்சியாகப் பார்ப்பது தவறு என்று அவர் கூறினார். மத்திய பா.ஜ.க அரசுதான் தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது.” என்று கூறினார்.

அ.தி.மு.க கூட்டணியில் இருந்து பிரிந்து செல்வதற்கான அண்ணாமலை வலியுறுத்துவதன் பின்னணி என்ன என்பது குறித்து பா.ஜ.க மாநில பிரிவுக்கும் உறுதியாக தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி ஊழல் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக சாடிய அண்ணாமலை, இதை சகித்துக்கொள்வதற்காக தான் அரசியலில் சேரவில்லை என்றும், அ.தி.மு.க உடனான உறவை பா.ஜ.க துண்டிக்கவில்லை என்றால் ராஜினாமா செய்வதாகவும் மிரட்டினார்.

ஆனால், 2024 லோக்சபா தேர்தலில் தென் மாநிலங்களில் இருந்து முடிந்தவரை அதிக எம்.பி.க்களை பெற வேண்டும் என்ற பா.ஜ.க-வின் நம்பிக்கையை கருத்தில் கொண்டு, அ.தி.மு.க.வை தூக்கி எறிவது பா.ஜ.க-வின் திட்டங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளது – குறிப்பாக ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு இறந்த பின், கூட்டணியில் பா.ஜ.க செலவழித்த நேரத்தையும் முயற்சியையும் பார்க்கும்போது கூட்டணியை முறித்துக்கொள்ள வாய்ப்பு இல்லை.

அண்ணாமலைக்கு இந்தளவுக்கு சுதந்திரமாக செயல்பட பா.ஜ.க தலைமை ஏன் அனுமதிக்கிறது என்று பா.ஜ.க-வின் பல மூத்த தலைவர்கள் குழப்பத்தில் இருப்பதாக ஒப்புக்கொள்கிறார்கள். “வேறு எந்த தலைவனாக இருந்திருந்தால், அவர் இப்போது டெல்லிக்கு வரவழைக்கப்பட்டிருப்பார்” என்று ஒரு மாவட்ட தலைவர் கூறினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

திமுக சொத்து பட்டியல் தொடர்பாக சிபிஐ-யில் புகார் அளிக்க உள்ளேன்: அண்ணாமலை



திமுக சொத்து பட்டியல் தொடர்பாக அடுத்த வாரம் சிபிஐயில் புகார் அளிக்க உள்ளேன் என்று பாஜக மாநில தலைவர் #அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அடுத்த வாரம் சிபிஐயிடம் புகார் அளிக்க உள்ளேன். சிபிஐ அதிகாரிகளை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்.

திமுகவைச் சார்ந்தவர்கள் என் மீது வழக்கு தொடர்ந்தாலும் நான் பயப்பட போவதில்லை. நான் குற்றஞ்சாட்டிய நிறுவனங்கள் எதுவும் என்னுடையதல்ல என திமுகவைச் சார்ந்த எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

இன்னும் பல ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிட தயாராக இருக்கின்றோம். 100 ஆண்டு வாழப் போவதில்லை இன்றோ, நாளையோ மரணம் தழுவுவது உறுதி, எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

திமுக அமைச்சா்கள், நிா்வாகிகளின் சொத்து, ஊழல் பட்டியல் ஏப். 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருந்தாா். அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இந்தப் பட்டியலை அவர் நேற்று வெளியிட்டார்.
Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Annamalai-eegarai

டெல்லி சென்றுவிட்டு வந்த வேகத்தில் தமிழக மாகாணம் தென்காசியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கும் விஷயம் பல விஷயங்களை உறுதிபடுத்துகின்றது,

முதலாவது தமிழக பாஜகவின் தலைவராக அவர்தான் இனி நீடிப்பார், அவரின் பதவிகாலம் முடிந்தபின்பும் சிறப்பு அந்தஸ்து கொண்ட தலைவராக் நீடிப்பார் அதனில் மாற்றமில்லை

இரண்டாவது அண்ணாமலை அரசியல் செய்ய வரவில்லை, வழமையான கூட்டணி தொகுதி நிலவரம், தந்திர அரசிய என எதற்கும் அனுப்பபடவில்லை, அவர் ஒரு புல்டோசர் போல அனுப்பபட்டிருக்கின்றார் அதை சரியாக செய்ய டெல்லி முழு ஒத்துழைப்பு வழங்கும்

மூன்றாவது என்னதான் 2026 சட்டசபை தேர்தல் இலக்கு என அவர் சொன்னாலும் நிஜத்தில் கட்சியின் வெற்றி தோல்வியினை பற்றி கொஞ்சமும் கவலைபடாது அடித்து ஆடும் அரசியல் , இது தமிழகத்திற்கு புதிது

இப்படி பல விஷயங்களை சொல்லி அண்ணாமலை மேல் பாயும் எல்லா பாஜகவினருக்கும் தலையில் மெல்ல தட்டி வாயை அடக்க வைத்து உட்கர வைத்திருக்கின்றது டெல்லி

வந்த வேகத்தில் திமுகவின் 27 பேருக்கு 2 லட்சத்து 20 ஆயிர்ம கோடி சொத்து என அவர் அறிவித்திருப்பது டெல்லியின் அதிரடி அரசியல் தொடங்கிவிட்டது, பாஜக பெரும் முடிவோடு தமிழகத்தை முற்றுகை இட்டுவிட்டது என்பதை சொல்கின்றது

என்னதான் மக்களாட்சி என்றாலும் இங்கு நடப்பது மன்னர்கால அரசியல், அரசியல் அப்படித்தான் உருவம் மாறுமே தவிர அடிப்படை மாறாது

பாஜக எனும் பெரும் அரசனுக்கு கப்பம் கட்ட திமுக ரெடி, அதிமுகவும் தயார்

இங்கு கூடுதல் கப்பம் அதாவது எம்பிக்கள் தர அதிமுக தயார்

ஆனால் இரண்டும் வேண்டாம் நேரடியாக இனி என் ஆட்சி என பாஜக களமிறங்குகின்றது, அதன் தளபதி அண்ணாமலை

அவர் ஏப்ரல் 14ம் தேதி சொல்லபோகும் பட்டியல்தான் முதலில் வீசபடும் பெரும் குண்டு, அதை தொடர்ந்துதான் கோட்டை சுவர் வீழ்ந்து யுத்தம் தொடங்கும்

நிச்சயம் அவர் தென்காசியில் சொன்ன வார்த்தைகள் பெரும் பரபரப்பை சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது நிஜம்

கவனியுங்கள், திமுக தரப்பு பெரும் அமைதி கனத்த அமைதி

ஒருவரவாது அண்ணாமலை முடிந்தால் நிருபிக்கட்டும் எங்கள் கட்சியில் அப்படி யாரும் இல்லை என்பதால் அச்சமில்லை என சொல்லவே இல்லை

இந்த அமைதிதான் மிகபெரிய எதிர்பார்ப்பை அண்ணாமலை மேல் ஏற்படுத்துகின்றது

வழமையாக எதிர்குரல் கொடுக்கும் திமுக இம்முறை கனத்த அமைதி

இதுதான் தமிழகத்துக்கு தேவையான அரசியல், அதை செய்யும் தகுதி வானதிக்கு இல்லை, நயினாருக்க்கு இல்லை, பொன்னாருக்கு இல்லை, கேஸ் விநாயகயத்துக்குமில்லை

மாரிதாசருக்குமில்லை

இது மிகபெரிய முதலை அகழி, அதை தாண்டி விஷ நாகம், சிங்கம் திமிங்கலம் பாதாளம் மாயலோகம் என என்னவெல்லாமோ உண்டு

அக்கா வானதியின் "அண்ணன் ஸ்டாலின் அவர்களே" போன்ற அரசியலும் பொன்னாரின் "மரியாதைக்குரிய அய்யா ஸ்டாலின்" வச்னங்களும் இங்கு எடுபடாது

இங்கு அடிக்கவேண்டும் ஓங்கி அடிக்க வேண்டும் அதற்கு திமுகவின் ஆணிவேர் வரை தோண்டிபார்க்கும் பலமும் தைரியமும் பன்னாட்டு தொடர்பும் பெரும் பின்புலமும் வேண்டும்

அது அண்ணாமலைக்குக்குத்தான் இருக்கின்றது

இந்த நிர்மல் குமாரோ, காயத்திரியோ, எஸ் வி சேகரோ இதையெல்லாம் செய்யமுடியுமா என்றால் முடியாது, பல தகவல்களை திரட்டும் மாரிதாசராலும் இதனை செய்யமுடியாது

அதை செய்யும் பலமும் வாய்ப்பும் தகுதியும் அண்ணாமலையிடம் மட்டும்தான் இருக்கின்றது, ஏபரல் 17ல் அவர் சொல்லபோகும் பட்டியல் சுமார் 100 ஆண்டு கால தமிழக அரசியலை நிச்சயம் அசைக்கும்

இதனால் தமிழக பாஜகவினரும் வோட்டு கணக்கிட்டு கூட்டணி அவசியம் என புலம்புவோரும், எல்லோரையும் அணைப்பவனே தலைவன் என அறிவுரை சொல்வோரும் அமைதியாக இருத்தல் நலம்

கூண்டைவிட்டு வெளிவரபோவது கிளி அல்ல, அது டைனோசர்

இங்கு நடக்கபோவது அரசியல் அல்ல, இது யுத்தம் மாபெரும் யுத்தம், அதை நடத்த அண்ணாமலையினை தவிர யாருக்கும் சக்தி இல்லை

வழமையான ஒரு தொகுதி இரண்டு தொகுதி விளையாட்டு அல்ல, மெல்லமாக விளையாடும் சதுரங்கம்,கேரம்போர்டு ஆட்டம் அல்ல‌

இது இனி போர், இறங்கி அடிக்கும் போர், காலகாலமான கோட்டைகளை தகர்த்தெறியும் உக்கிரமான போர்

இரு எதிர்களில் ஒரு எதிரி பலவீனமான நேரம் அவனோடு கூட்டணி அது இது என பேசமால் உன் இடம் எனக்கு என அடித்து மோதும் போர்

எமது ஆச்சரியமெல்லாம் அண்ணாமலையின் பேட்டியினை தொடர்ந்து ஆர்.எஸ் பாரதி எப்படி அமைதியாய் இருக்கின்றார் என்பதுதான், "இது மோசமான கட்சி டோவ்" என அடிக்கடி சொல்லும் அவர் என்னென்ன திட்டம் வைத்திருப்பார் என்பதை நினைத்தாலே பகீரென்கின்றது

ஆர்.எஸ் பாரதியினை அண்ணாமலை எப்படி எதிர்கொள்ள போகின்றார் என்பதுதான் முதல்கட்ட எதிர்பார்ப்பு

குறிச்சொற்கள் #அண்ணாமலை #பாஜக #திராவிடம்


Topics tagged under அண்ணாமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 BJP-AIADMK

"அண்ணாமலை ரகசியமாக பேசும் தமிழக அமைச்சர் யார்?" நிர்மல்குமார் குற்றச்சாட்டால் தகிக்கும் பாஜக, அதிமுக


#பாரதிய_ஜனதா கட்சியில் இருந்து விலகி அண்மையில் அதிமுகவில் சேர்ந்துள்ள சி.டி.ஆர்.நிர்மல்குமார் முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை திரைமறைவில் மாநில அமைச்சருடன் தொடர்பில் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன், அதிமுக, பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் பரஸ்பரம் எதிர்வினை விமர்சனத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த இரு கட்சிகளின் கூட்டணி அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

#அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில், கட்சியில் மட்டுமின்றி தமிழ்நாடு அரசியலிலும் சக்தி வாய்ந்த தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் முன்னாள் முதல்வர் #எடப்பாடி_கே.பழனிசாமி வேகம் காட்டி வருகிறார். அதிமுக ஒட்டுமொத்தமாக தன் பின்னே திரள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளும் அதே நேரத்தில், பிற கட்சி நிர்வாகிகளையும் கட்சியில் இணைத்துக் கொள்ள அவர் அவர் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது

அதன் ஒரு பகுதியாகவே, கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வைச் சேர்ந்த நிர்வாகிகளையும் அடுத்தடுத்து அதிமுகவில் அவர் இணைத்துக் கொண்டதாக தெரிகிறது.

பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக பதவி வகித்த சி.டி.ஆர். நிர்மல்குமாரும் அவர்களில் ஒருவர்.

காயத்ரி ரகுராமைப் போல சி.டி.ஆர்.நிர்மல்குமாரும் பா.ஜ.க.வில் இருந்து விலகும் போது அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அதேநேரத்தில், நிர்மல்குமாரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதற்காக சில இடங்களில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பதாகைகளை வைத்திருந்த பா.ஜ.கவினர், அவரது உருவ படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமர்பிரசாத் ரெட்டி, கருப்பு முருகானந்தம் போன்ற #பாஜக நிர்வாகிகள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை பகிர்ந்து கொண்டனர்.

அண்ணாமலையும் கூட அதிமுகவை விமர்சிக்க தயங்கவில்லை. "பாஜகவிலிருந்து ஆட்களை கூட்டிச் சென்றால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வளர்ச்சியைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்ட அவர், இந்த செயலுக்கு எதிர்வினை இருக்கும் என்று எச்சரித்தார்.

'420' மலை, மனநலம் குன்றியவர் போல் செயல்படுகிறார், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை வேவு பார்க்கிறார் என்று அண்ணாமலை மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது ஏன் என்று கேட்டோம்.


"கூட்டணிக் கட்சியாக இருக்கும் போதே சமீப காலத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் பா.ஜ.க.வில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அப்போதெல்லாம் அதிமுகவினர் யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபடவில்லை. அவர்களின் தனிப்பட்ட முடிவு என்று அதிமுகவினர் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டனர். ஆனால், தற்போது என்ன நடக்கிறது? எனக்கு எதிராக தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்களில் பா.ஜ.க.வினர் பலரும் தாக்குதல் நடத்துவதுடன், எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தையும் எரித்துள்ளனர். இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தாமல் அண்ணாமலை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். நல்ல மனநிலையில் உள்ள ஒருவர் செய்யும் காரியமா இது?" என்று அவர் பதிலளித்தார்.

திரைமறைவில் அமைச்சர் ஒருவருடன் அண்ணாமலை பேரம் பேசுவதாக குறிப்பிட்டிருந்தீர்களே. அது யார்? என்ற கேள்வியை முன்வைத்தோம்.


அதற்கு அவர், "என்னுடன் பயணிக்கும் ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு என் முடிவு குறித்து விளக்கம் அளிக்க வேண்டியே நான் சில விஷயங்களை தெரிவித்திருந்தேன். அதைத் தாண்டி குறிப்பிட்ட அமைச்சர் யார்? என்ன நடந்தது? என்பது குறித்துப் பேசி கூடுதல் தர்மசங்கடங்களை உருவாக்க விரும்பவில்லை. அதைத் தாண்டி, என் மீதான பா.ஜ.க.வினரின் தனிப்பட்ட தாக்குதல்களும் மோசமாக இருக்கலாம் என்பதால் அந்த சங்கடங்களை தவிர்க்க விரும்புகிறேன்" என்றார்.

பா.ஜ.க.வில் மாநில அளவிலான பொறுப்பில் இருந்த சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு அதிமுகவில் இன்னும் பதவி ஏதும் வழங்கப்படவில்லை. அதிமுகவிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் வலுவான தலைவராக உருவெடுத்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் செயல்படப் போவதாக அவர் கூறுகிறார்.

அதேநேரத்தில், பா.ஜ.க. நிர்வாகிகளை அழைத்துச் சென்று அதிமுகவை வளர்க்கும் நிலை உருவாகியிருக்கிறது என்ற அண்ணாமலை விமர்சனத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக கண்ணாடி அல்ல, கல் வீசியதும் உடைந்து விழுவதற்கு. அது சமுத்திரம். அதன் மீது கல் வீசினால் கல் காணாமல் போகுமே தவிர சமுத்திரம் அப்படியேதான் இருக்கும்," என்றார்.

அவர் மேலும் "அம்மாவைப் போன்ற தானும் ஒரு தலைவர் என்று அண்ணாமலை தன்னை அழைத்துக் கொள்ளக் கூடாது. செஞ்சிக்கோட்டையில் ஏறியவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மனும் கிடையாது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இதை புரிந்து கொள்ளலாம்" என்றும் ஜெயக்குமார் கூறினார்.


பா.ஜ.க. - அதிமுக இடையே சிறுசிறு உரசல்கள் இருந்தாலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி நீடிக்கும் என்று டி.ஜெயக்குமார் கூறினார். நம்முடன் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனும் இதையே பிரதிபலித்தார்.

"பா.ஜ.க. - அதிமுக இடையே இருப்பது தேர்தல் கூட்டணிதான். தேர்தல் அல்லாத மற்ற நேரங்களில் கட்சியை வளர்க்க ஒவ்வொருவருமே ஆசைப்படுவது இயல்புதான். தமிழ்நாட்டில் . 25 நாடாளுமன்ற தொகுதிகளை வெல்வோம், நாங்களே உண்மையான எதிர்க்கட்சி என்பன போன்ற பா.ஜ.க. தலைவர்களின் பேச்சுகள் அப்படியான ஆசைகளே. ஆனால், ஆசைக்கும், குறிக்கோளுக்கும் வேறுபாடு இருக்கிறது. குறிக்கோள் என்பது நடைமுறை யதார்த்தம் சார்ந்தது. நாடாளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் வரும் போது அவர்களிடம் அந்த யதார்த்த அணுகுமுறையை எதிர்பார்க்கலாம்" என்று அவர் கூறினார்.

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படங்களை பா.ஜ.க.வினர் எரித்தது அநாகரிகம் என்று சாடிய வைகைச்செல்வன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதிர்ச்சியற்ற தலைவராக செயல்படுவதாக விமர்சித்தார்.

#சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் அதிமுக தலைவர்களின் விமர்சனங்கள் குறித்து பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜனிடம் பிபிசி தமிழ் பேசியது.

சி.டி.ஆர்.நிர்மல்குமார் கற்பனையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக குறிப்பிட்ட அவர், சுயலாபத்திற்காக ஒரு முடிவை எடுத்துவிட்டு, கட்சி மீது நிர்மல்குமார் பழி போடுவதாக நாகராஜன் கூறினார்.

தமிழ்நாட்டு அரசியலில் கட்சி மாறுவது என்பது புதிதல்லல, செந்தில்பாலாஜி, நயினார் நாகேந்திரன், முத்துசாமி போன்ற பலரும் கட்சி மாறியவர்கள்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

"தமிழ்நாட்டில் அதிமுக - பா.ஜ.க. கூட்டணியைப் பொருத்தவரை அண்ணாமலையோ, எடப்பாடி பழனிசாமியோ கூறுவதே இறுதியானதாக இருக்கும். மற்ற தலைவர்கள், நிர்வாகிகளின் கருத்துகளோ, சமூக வலைதள பதிவுகளோ கூட்டணியை தீர்மானிக்காது. 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது தேமுதிகவுடன் பேச்சு நடத்திக் கொண்டிருந்த போதே அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அந்த கூட்டணி அமைந்து பெரு வெற்றி பெற்றது. அரசியலில் ஒரேயொரு நாளில் எத்தகைய மாற்றங்களும் நடக்கலாம்," என்று அவர் மேலும் கூறினார்.

ஜெயலலிதாவுடன் #அண்ணாமலை தன்னை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது என்ற டி.ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, "ஜெயலலிதா அதிமுகவுக்கு தலைவர் என்பது போல அண்ணாமலை தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு தலைவர். அவர் தன்னுடைய கட்சியில் ஒரு தலைவராக, அனைத்து முடிவுகளையும் மேற்கொள்கிறார். சிறப்பாக செயல்படுகிறார். அதிமுக வங்கக்கடல் என்றால் பா.ஜ.க இந்தியப் பெருங்கடல்" என்கிறார் கரு.நாகராஜன்.

பிபிசி தமிழ்

உங்களால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடிந்தது என்றால் அதற்குப் பின்னால் இருக்கும் ஆன்மீக ரகசியங்கள் எத்தனை தெரியுமா?


நீங்கள் இதுவரை அருள்மிகு #உண்ணாமுலை சமேத அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலைச் சுற்றிலும் அமைந்திருக்கும் கிரிவலப் பாதையில் (14 கி மீ) ஒரே ஒரு முறை வலம் வந்திருந்தால்,அதுவே #அண்ணாமலை கிரிவலம் என்று பெயர்; அது பவுர்ணமி அன்று சென்றிருந்தாலும் சரி; விடுமுறை நாளில் சென்று இருந்தாலும் சரி; எந்த நாளாக இருந்தாலும் சரி;

பகலில் கிரிவலம் சென்று இருந்தாலும், இரவில் கிரிவலம் சென்று இருந்தாலும், வெயிலில் கிரிவலம் சென்று இருந்தாலும், கொட்டும் மழையில் கிரிவலம் சென்று இருந்தாலும்; பனியில் கிரிவலம் சென்று இருந்தாலும் சரி;

உலகத்தின் அனைத்து ஜீவன்களுக்கும் அப்பா தான் இந்த அண்ணாமலை என்று எண்ணியவாறு #கிரிவலம் சென்று இருந்தாலும் சரி; கொஞ்சம் கூட பக்தி உணர்ச்சியே இல்லாமல் ஒருவர் கூப்பிட்டார்; அதனால் கிரிவலம் வந்தேன் என்று கிரிவலம் சென்று இருந்தாலும் சரி; ஜோதிடர் சொன்னதால் பரிகாரத்திற்காக கிரிவலம் சென்று இருந்தாலும் சரி!!!

3000 முறை மனிதப் பிறவிகள் எடுத்தப் பின்னர் தான் ஒரே ஒருமுறை #அண்ணாமலை கிரிவலம் செல்ல ஒருவரால் முடியும்;

உங்களுடைய அப்பா, அம்மா மற்றும் அவர்களுடைய அப்பாக்கள், அம்மாக்கள், அவர்களுடைய அப்பாக்கள், அம்மாக்கள் என்று முன்னோர்கள் அவர்களுடைய இறப்பிற்குப் பிறகு, அவரவர் செய்த புண்ணியங்களுக்கு ஏற்றவாறு பித்ருக்கள் உலகத்திற்கு செல்கிறார்கள்;

அங்கே அவர்கள் பல கோடி முறை பூஜை செய்து, தவம் இருந்து பெற்ற வரத்தால் தான் உங்களால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடிந்திருக்கின்றது என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

அதுமட்டும் அல்ல; பல நூறு பிறவிகளாக நம்மைப் படைத்த அந்த ஈசனிடம் கோவிலுக்குச் சென்று உருகி,உருகி, அழுது, அழுது "அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும்; அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்" என்று வேண்டியிருந்தால் மட்டுமே இப்பிறவியில் அருணாச்சலேஸ்வரர் என்ற அண்ணாமலையாரின் அருள் கிட்டும்; இதை நாம் உணர்வது கிடையாது;

பல விதமான விலங்குகள், செடி, கொடிகள் என்று 84,00,000 பிறவிகள் எடுத்துவிட்டு, இறுதியாக காளை பிறவி எடுக்கும் ஆத்மா, அதற்கு அடுத்த படியாக முதன் முறையாக ஆண் மனிதப் பிறவி எடுக்கும்; பசு பிறவி எடுக்கும் ஆத்மா, அதற்கு அடுத்த படியாக முதன் முறையாக பெண் மனிதப் பிறவி எடுக்கும்; அப்படி முதன் முறையாக மனிதப் பிறவி எடுக்கும் போது, அண்ணாமலையில் தான் ஈசன் பிறக்க வைக்கிறார் என்பது அகத்தீசர் நமக்கு போதிக்கும் அருணாச்சல ரகசியங்களில் ஒன்று!!!

நாம் கிரிவலம் செல்லும் போது இதுவரை நாம் எத்தனை முறை மனிதப் பிறவி எடுத்திருந்தோமோ அத்தனை பிறவிகளும் நம்முடன் கூடவே ஆவி வடிவில் கிரிவலம் வரும்; அதனால் தான் யார் இந்த பிறவியில் 1008 முறை அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்கிறார்களோ, அவர்களுக்கு மறுபிறவி இல்லாத முக்தி கிடைக்கும் என்று அகத்தீசர் உபதேசித்து இருக்கிறார்;

1008 முறை கிரிவலம் முடிக்கும் போது நமது அனைத்து முற்பிறவி பாவங்களும், புண்ணியங்களையும் அண்ணாமலையார் ஈர்த்து நம்மை பரிசுத்தமான ஆத்மாவாக மாற்றிவிடுகிறார்; நமது அனைத்து முற்பிறவிகளின் மொத்த கர்மாக்களும் அக்னி மலையான அருணச்சலம் என்ற அண்ணாமலையார் எரித்துவிடுகிறார்;

ஒருவேளை, இப்பிறவியில் ஒரே ஒரு முறை கூட அண்ணாமலை கிரிவலம் வராமல் வாழ்ந்துவிட்டால், நமது வாழ்க்கையில் என்ன நடக்கும்?

போன நான்கு பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தை மட்டுமே அனுபவிக்க இப்பிறவி செலவாகிவிடும்; போன நான்கு பிறவிகளில் செய்த புண்ணியங்கள் தான் பெற்றோர், உடன் பிறந்தோர், வாழ்க்கைத்துணை, வாரிசுகள், சொத்துக்கள், படிப்பு,

புகழ், வருமானம், லாபம், பெருமை, பிரபல யோகம் என்று கிடைக்கின்றன;

அதே போன நான்கு பிறவிகளில் செய்த பாவங்கள் தான் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி காலத்தில் எதிர்கொள்ளும் நோய், அவமானங்கள், கடன், வம்பு வழக்குகள், மாந்திரீகத்தால் எவனுக்காவது/எவளுக்காவது அடிமையாக இருத்தல், விரக்தி மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள், ஏமாறுதல், துரோகத்தால் துவண்டு போகுதல், பணம் இருந்தும் சாப்பிட முடியாமல் தவித்தல், சுய இன்பத்தால் உடல் நலத்தைச் சீரழித்தல், ஆங்கில மருத்துவத்தினால் உண்டாகும் பக்கவிளைவுகள், விபத்துக்களால் உண்டாகும் உடல் உறுப்புச் சேதாரம், தெய்வங்களைப் பழித்துப்பேசுதல் அல்லது கேலி செய்தல்=அதன் மூலமாக மேலும் பல கொடூரமான பாவவினைகளை உருவாக்கிடுதல் போன்றவைகள் உண்டாகின்றன;

பல கோடி கர்மவினைகள் ஒரே ஒரு அண்ணாமலை கிரிவலத்தினால் தீர்கின்றன; அதே சமயம், இன்னும் பல ஆயிரம் கோடி கர்மவினைகளை நாமே முற்பிறவிகளில் உருவாக்கி வைத்திருக்கிறோம்;

உங்களில் சிலருக்கு இந்த கிரிவலம் எளிமையானதாக இருக்கும்; பலருக்கு கடினமானதாக இருக்கும்; சிலருக்கு கிரிவலம் செல்லும் போதே வயிற்று உபாதைகள், காலில் அடிபட்டு ரத்தம் வருதல், தொடர்ந்து நடக்க முடியாத அளவுக்கு மயக்கம் வருதல் போன்றவைகள் ஏற்படும்; இவையெல்லாம் இனி வரும் காலங்களில் உங்களுக்கு வர இருக்கும் விபத்து, அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு மாற்றாக அருணாச்சலேஸ்வரர் தரும் பரிகாரம் ஆகும்;

மிகவும் அபரிதமான தெய்வீக சக்திகளை ஒரே ஒரு முறை கிரிவலம் சென்றாலே பெற முடியும்; அதை முறைப்படி பாதுகாப்பது நமது சுய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது;

பகலில் கிரிவலம் செல்பவர்கள் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம் வரையிலும் பசுக்கள் இருப்பதைக் காணலாம்; அதற்கு வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை தானமாகத் தருவது இன்னும் பல கோடி புண்ணியத்தை அள்ளித் தரும்; நமது ஊரில் இருக்கும் கோவில் பகுதியில் அல்லது நமது தெருவில் இருக்கும் ஒரே ஒரு பசுவுக்கு (நாட்டுப் பசு தான் புண்ணியம் தரும்; ஜெர்ஸிப்பசுவால் ஒரு ஆன்மீக நன்மையும் ஒரு போதும் கிடையாது) ஒரு வாழைப்பழம் தானம் செய்தாலே பெரும் புண்ணியம்;அப்படிப் பட்ட சூழ்நிலையில் அண்ணாமலை கிரிவலப் பாதையில் ஒரே ஒரு பசுவுக்கு தானம் செய்தால் அது எப்பேர்ப்பட்ட புண்ணியம் என்பதை இக்கணத்தில் புரிந்து கொள்ளுங்கள்:

இரவில் கிரிவலம் செல்பவர்கள் கிரிவலப் பாதை முழுவதும் பைரவர்களை (நாய்களை) பார்க்கலாம்; அவைகளுக்கு உணவு பொருட்கள் தானம் செய்வது ஒரே நேரத்தில் பைரவரின் அருளையும், அண்ணாமலையாரின் ஆசிகளையும் அள்ளித் தரும் என்பதை மறக்காதீர்கள்;

நீங்கள் கிரிவலம் செல்லும் போது திடீரென மழை வந்தால், உடனே கட்டிடத்திற்குள் ஒதுங்க வேண்டாம்; விடாப்பிடியாக கிரிவலம் செல்லுங்கள்; மழை வரும் சமயத்தில் சில பல வருண சித்தர்கள் அப்போது கிரிவலம் வருவார்கள்: அதை நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் உணர முடியாது; ஆனால்,அவர்கள் நம்மை ஒரே ஒரு விநாடி பார்ப்பார்கள்; அதன் மூலமாக பெருமளவு கர்மாக்கள் நம்மிடம் இருந்து அருணாச்சலேஸ்வரரின் அருளால் ஈர்த்துக் கொள்வார்கள்;

மழை பொழியும் போது சுவாமி தரிசனம் செய்வது நமது ரகசியக் குற்றங்களை மன்னித்து அரிய பெரிய வரங்களை அள்ளித் தரும்; மழை பொழியும் போது கிரிவலம் சென்றாலே அருணாச்சலேஸ்வரராகிய அண்ணாமலையார் நமது உணர்ச்சி மேலீட்டால் செய்த பாவங்களை மன்னிக்கிறார் என்று தான் அர்த்தம்; ஆனால், இது எப்போதாவது யாருக்காவது மட்டுமே அருளாக கிடைக்கும்;

இந்த வரிகளை வாசித்துவிட்டு, மழை நாட்களாக தேர்வு செய்து கிரிவலம் சென்று கொண்டே, மீண்டும் உணர்ச்சி பூர்வமான தவறுகளைச் செய்தால் ஒரு போதும் அருணாச்சலேஸ்வரர் மன்னிக்க மாட்டார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ



முகநூல் பகிர்வு

#கிரிவலம் #திருவண்ணாமலை

Back to top

Page 2 of 2 Previous  1, 2