புதிய பதிவுகள்
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
68 Posts - 45%
heezulia
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
5 Posts - 3%
prajai
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
2 Posts - 1%
jairam
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
9 Posts - 4%
prajai
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
2 Posts - 1%
jairam
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_m10தலைவலி: இளமைக்குச் சவால்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவலி: இளமைக்குச் சவால்!


   
   

Page 1 of 2 1, 2  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Dec 20, 2008 12:03 pm

வாழ்நாளில் தலைவலியை எப்போதாவது ஒரு சமயம் அனுபவித்திருக்காதவர் இருக்கவே முடியாது. தலைவலிக்குப் பெரும்பாலும் பரபரப்புத் தன்மையே காரணம். ஒருவர் இளமைக் காலத்தில், 20 முதல் 40 வயது வரை பரபரப்புடன் செயல்படுவதால் அக் காலகட்டங்களில் தலைவலி வருவது இயல்பாக உள்ளது. முதுமையில் தலைவலியின் தாக்கம் குறையத் தொடங்கி விடும்.

வலி தலையில்தான் என்றாலும்கூட கண் கோளாறால் ஏற்படும் சாதாரண தலைவலி உள்பட ஒற்றைத் தலைவலி வரை அறிகுறிகள் வேறுபடும். தலைவலியைப் பொருத்தவரை அது வந்துபோகும் கால அளவு கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். உதாரணமாக இரண்டு மாதத்துக்கு அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறை வரும் தலைவலிக்கு தொடர் சிகிச்சை தேவை இல்லை. ஆனால் அடிக்கடி தலைவலி வரும் நிலையில் சுயமாக மாத்திரை சாப்பிட்டுக்கொண்டே இருக்காமல் மருத்துவ சோதனை அவசியம்.

இனி "தலை வலி' இல்லாதபோது நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ள...

தலைவலிக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு என்ன?

மூளையை அறுத்தால் எந்த வலியும் ஏற்படாது. ஏனெனில் மூளைக்குள் நரம்புகள் கிடையாது என்பதால் உணர்ச்சி கிடையாது. ஆனால் மூளைக்கு வெளியே உள்ள மூளை உறை, எலும்பு உறைகள், ரத்தக் குழாய்கள், தோல் ஆகியவற்றை ஒட்டி வலியை உணர்த்தக்கூடிய நரம்புகள் உள்ளன. இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும் நிலையில் நரம்பு மூலமாக தலைவலி ஏற்படுகிறது. சைனுசைட்டிஸ் நோய்ப் பிரச்சினை இருந்தாலும் தலைவலி வரும்.

பரபரப்பு, சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் இருத்தல் உள்பட பல காரணங்களால் நோய்களின் பின்னணி இன்றி தலைவலி வரலாம். சைனுசைட்டிஸ்-மூளைக்காய்ச்சல் உள்பட நோய்கள் காரணமாகவும் தலைவலி வரக்கூடும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Dec 20, 2008 12:04 pm

பொதுவான தலைவலிகள் யாவை?

1. குறைத் தூக்கத்தால் ஏற்படும் தலைவலி; 2. அதிகத் தூக்கத்தால் ஏற்படும் தலைவலி; 3. பசியினால் ஏற்படக்கூடிய தலைவலி; 4. தாமதமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் தலைவலி; 5. குறைவாகச் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய தலைவலி; 6. விரதம் இருப்பதால் ஏற்படும் தலைவலி; 7. பழகிவிட்ட குறிப்பிட்ட நேரத்துக்கு காபி குடிக்காமல் இருப்பதால் ஏற்படும் தலைவலி; 8. ஐஸ்கிரீம், சாக்லேட் போன்ற உணவுப் பொருள் ஒவ்வாமை காரணமாக ஏற்படும் தலைவலி; 9. பதற்றத்தால் ஏற்படும் தலைவலி; 10. பார்வைக் கோளாறு காரணமாக ஏற்படும் தலைவலி; 11. சைனுசைட்டிஸ் காரணமாக ஏற்படும் தலைவலி; 12. காதில் சீழ் பிடிப்பதால் ஏற்படும் தலைவலி; 13. மதுப் பழக்கம் காரணமாக ஏற்படும் தலைவலி; 14. மருந்துகளினால் ஏற்படும் தலைவலி. 15. எதிர்பார்ப்பு நிறைவேறாமல் ஆழ்ந்த மன வருத்தம் (Depression) காரணமாக ஏற்படும் தலைவலி; 16. வாகனப் புகை காரணமாக ஏற்படும் தலைவலி.

தலைவலி என்று ஒருவர் சொன்னாலே கண் மருத்துவ சோதனை செய்துகொள்ளுமாறு நண்பர்கள் கூறுவது வழக்கமாக உள்ளதே? இந்தக் கருத்து சரியா?

சரி அல்ல. கண் நரம்புகளுக்கும் மூளைக்கும் தொடர்பு உள்ளது. எனினும் கண் தசைகளுக்கு அதிக வேலை கொடுக்கும் புத்தகம் படித்தல், கம்ப்யூட்டரில் வேலை செய்தல், பார்வைக் கோளாறு ஆகியவை காரணமாக தலைவலி வந்தால் கண் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது அவசியம். சாதாரணமாக தலைவலி வரும் நிலையில் கண் டாக்டரிடம் செல்லத் தேவை இல்லை. குடும்ப மருத்துவரிடமோ அல்லது நரம்பியல் மருத்துவரிடமோ சென்றால் போதும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Dec 20, 2008 12:05 pm

காய்ச்சல் காரணமாக தலைவலி வருவது ஏன்?

காய்ச்சலின்போது உடலில் ரத்த ஓட்டம் அதிகமாகும். இதனால் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து தலைவலி ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்த அளவு (Systolic Pressure) இயல்பான அளவைவிட அதிகரிக்கும் நிலையிலும் தலைவலி வரும்.

தலைவலியின் வகைகள் யாவை?

தலைவலியை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. பரபரப்புத் தன்மை காரணமாக ஏற்படும் தலைவலி (Tension Type Headache);

2. ஒற்றைத் தலைவலி (Migraine);

3. தொகுப்புத் தலைவலி (Cluster Headache);

4. நாள்பட்ட நித்தம் நித்தம் தலைவலி (Chronic Daily Headache).

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Dec 20, 2008 12:05 pm

"டென்ஷன்' காரணமாக ஏற்படும் தலைவலியின் குறிப்பிட்ட அறிகுறிகள் என்ன?

ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற டென்ஷன் காரணமாக தலைவலி ஏற்படலாம். வேலைப் பளு, அதிக தூக்கம், நீண்ட தூரப் பயணம், உடல் தசைகள் அதிக அளவுக்குச் சுருங்குதல் காரணமாக இத்தகைய தலைவலி வரும்.

பொதுவாக இந்தத் தலைவலி தாங்கக்கூடியதாக இருக்கும். இந்தத் தலைவலியில் வாந்தி, குமட்டல் இருக்காது. வெளிச்சத்தைக் கண்டால் கண் கூசுதல், ஓசையைக் கேட்டாலே வெறுப்பு ஆகிய உணர்வுகள் இருக்காது.

எனினும் தசைகள் அதிக அளவுக்குச் சுருங்குதல் காரணமாக டென்ஷன் தலைவலி ஏற்படும் நிலையில் தலையில் கை வைக்க முடியாத அளவுக்கு, சீப்பைக் கொண்டு தலையை வார முடியாத அளவுக்கு வலி இருக்கும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Dec 20, 2008 12:06 pm

ஒற்றைத் தலைவலியின் முக்கிய அறிகுறிகள் என்ன?

மாதக் கணக்கில், வருஷக் கணக்கில் விட்டு விட்டு வரும் தலைவலி ஒற்றைத் தலைவலி "மைக்ரேன்' (Migraine) எனப்படுகிறது. பெயருக்கு ஏற்றாற்போல் இந்த வலி தலையின் ஒரு புறம் மட்டுமே வரலாம்; தலையின் இரு புறமும் மாறி, மாறியும் அல்லது பிடரியில் வலி வந்தாலும் ஒற்றைத் தலைவலிதான்.

மக்கள் தொகையில் 10-ல் ஒருவருக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சினை உள்ளது. ஒருவரது இயல்பான வாழ்க்கையை முடக்கும் ஆற்றல் ஒற்றைத் தலைவலிக்கு உண்டு. அதாவது மருத்துவ விடுப்பு எடுத்துச் சிகிச்சை பெறும் அளவுக்கு இந்தத் தலைவலி இருக்கும்.

சுத்தியல்களால் அடிப்பதுபோல் வலி மண்டையைப் பிளக்கும். வாந்தி, குமட்டல் இருக்கும். வெளிச்சத்தைப் பார்த்தால் கண்கள் கூசும். இந்த வலி வரும்போது ஓசையைக் கேட்டாலே வெறுப்புணர்வு ஏற்படும்.

தலையைக் குனிந்தால் வலி ஏற்படும். நடந்தால் தலைவலி அதிகமாகும். உடலின் சிறு அதிர்வுகளுக்குக்கூட வலி அதிகமாகி வாந்தி வரும். வாசனை காரணமாகவும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். மேலே சொன்ன பொதுவான தலைவலிகளும் (குறைத் தூக்கம், பசி, ஐஸ்கிரீம், சாக்லேட் போன்ற உணவுப் பொருள்கள்...) ஒற்றைத் தலைவலியைத் தூண்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Dec 20, 2008 12:07 pm

ஒற்றைத் தலைவலிப் பிரச்சினைக்கு பாரம்பரியத் தன்மை உண்டா?

உண்டு. குடும்பத்தில் அப்பா, அம்மா, மாமா, சித்தப்பா, உடன் பிறந்தோர் ஆகியோரில் யாராவது ஏற்கெனவே ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தால் ஒற்றைத் தலைவலி பிரச்சினை வர வாய்ப்பு உண்டு. ஆண்களைவிட பெண்களே ஒற்றைத் தலைவலி பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மாதவிடாய் வருவதற்கு முன்பு பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. கர்ப்பத் தடை மாத்திரைகள் சாப்பிடும் பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

தொகுப்புத் தலைவலியின் (Cluster Headache) அறிகுறிகள் என்ன?

ஒற்றைத் தலைவலியில் மிகவும் கொடியது இந்த வகை (Cluster Headache). இந்தத் தலைவலி பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் வரும். இந்தத் தலைவலி தூக்கத்தில் வரும். தூங்கிக் கொண்டிருக்கும் நோயாளிக்கு வலியை உருவாக்கி அவரை எழச் செய்யும் ஆற்றல் இந்த வகை ஒற்றைத் தலைவலிக்கு உண்டு. ஏதாவது ஒரு பக்கம் மட்டுமே இந்தத் தலைவலி இருக்கும். வலி வரும் பக்கத்தில் உள்ள மூக்குத் துவாரத்திலிருந்து மூக்கில் நீர் ஒழுகும். ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு முறை இந்தத் தலைவலி வரும். வாந்தி, குமட்டல் இருக்காது. வலி போகும் வரை தூக்கம் வராது. மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கு இதுபோன்று தலைவலி வரும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Dec 20, 2008 12:08 pm

நாள்பட்ட நித்தம் நித்தம் தலைவலி (Chronic Daily Headache) அறிகுறிகள் என்ன?

பரபரப்புத் தன்மையால் ஏற்படும் தலைவலி (Tension Type Headache), ஒற்றைத் தலைவலி (Migraine) ஆகியவை காரணமாக தினந்தோறும் மருந்து சாப்பிடும் பழக்கத்தை சிலர் மேற்கொள்வர். ஒரு கட்டத்தில் மருந்துக்குக் கட்டுப்படாத தலைவலியாக மாறி நித்தம் நித்தம் தலைவலி வரக்கூடும். இத்தகைய வலி வருவோருக்கு வலி வருவதற்கு முன்பே தலைவலி மாத்திரையைச் சாப்பிடும் பழக்கம் இருக்கும்.

பிடரியில் (தலையின் பின்புறம்) வலி வந்தால் கழுத்தில் பிரச்சினை எனக் கொள்ள வேண்டுமா?



கழுத்தில் ஏழு எலும்புகள் உள்ளன. இதில் மேல் புறம் உள்ள முதல் மூன்று எலும்புகளுக்கும் மூளைக்கும் தொடர்பு உண்டு. இந்த எலும்புகளில் பிரச்சினை ஏற்படும் நிலையில் தலையின் பின்புறம் வலி ஏற்படும். இந் நிலையில் கழுத்தைத் திருப்புவதும் சிரமமாக இருக்கும். எக்ஸ் ரே உள்பட பரிசோதனைகள் செய்துகொண்டு சிகிச்சை பெறுவது அவசியம். ஏனெனில் ஒற்றைத் தலைவலி காரணமாகவும் பிடரியில் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Dec 20, 2008 12:08 pm


தலைவலி சிகிச்சையில் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுவது என்ன?


ஒருவருக்கு எவ்வளவு கால இடைவெளி விட்டு தலைவலி வருகிறது என்பதைப் பொருத்து சிகிச்சை தேவையா என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு ஒரு மாதத்துக்கு ஒரு முறை தலைவலி வரலாம். ஒரு சிலருக்கு மூன்று நாளுக்கு ஒரு முறை மூன்று மணி நேரம் தலைவலி வந்து போகலாம். ஒரு சிலருக்கு ஆறு மாதத்துக்கு ஒரு முறை தலைவலி வரலாம். ஒரு சிலருக்கு தினந்தோறும் தலைவலி வரலாம். ஒரு சிலருக்கு தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாள்களுக்குத் தலைவலி இருக்கலாம்.

எப்போதாவது ஒரு முறை வரும் தலைவலிக்குச் சிகிச்சை தேவை இல்லை. பசி, நேரம் கழித்துச் சாப்பிடுதல், போதிய துக்கம் இல்லாமை உள்பட பொதுவான தலைவலிகளுக்கு அவற்றுக்கு உரிய காரணங்களை நோயாளிகள் தாங்களாக தவிர்த்துவிடுவதே எளிய சிகிச்சையாகும். குறிப்பாக அதிக அலைச்சலால் ஏற்படும் தலைவலிக்கு ஓய்வு எடுத்தாலே சரியாகிவிடும். ஆனால் ஒற்றைத் தலைவலி உள்பட அடிக்கடி வரும் தலைவலிக்கு மருத்துவப் பரிசோதனை செய்து உரிய காரணத்தைக் கண்டுபிடித்துச் சிகிச்சை அளிப்பது அவசியம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Dec 20, 2008 12:11 pm

சிகிச்சை தேவையா என்பதைக் கண்டறிவது எப்படி?

பாரம்பரியத் தன்மை உள்பட நோய் குறித்து நோயாளி கூறுவதை (Patient History) முதலில் கேட்க வேண்டும். பின்னர் நோயாளியின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பது அவசியம். இதையடுத்து மூளையின் அதிக அழுத்தம் இருந்தால் வெளிப்படுத்தக்கூடிய "ஆப்தல்மாஸ்கோப்' கருவி மூலம் கண்களைப் பரிசோதனை செய்ய வேண்டும். இப் பரிசோதனையில் மூளைக்குச் செல்லும் பார்வை நரம்பு வீக்கம் அடைந்திருந்தால் (Papilloedema) தெரிந்துவிடும்.இதனால் மூளையில் அழுத்தம் அதிகமாக இருக்கும். இதுபோன்ற நிலையில் மேற்கொண்டு சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. போன்ற மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும்.

ஒற்றைத் தலைவலியின் சாதக அம்சம் என்ன?

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவோருக்கு வலி வருவதற்கு முன்பே தெரிந்துவிடும். இந் நிலையில் முன்கூட்டியே மாத்திரையைச் சாப்பிடுவதன் மூலம் வலி கடுமையாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Dec 20, 2008 12:15 pm

ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சினைகளுக்கு ஆயுள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா?

முன்பே சொன்னதுபோல் வயது ஆக ஆக தலைவலிப் பிரச்சினை குறைந்துவிடும். எனவே ஆயுள் முழுவதுக்கும் மாத்திரைகள் சாப்பிடும் தேவை இருக்காது. தலைவலிக்கு உரிய காரணத்தைக் கண்டறிந்து மருந்து சாப்பிடுவது அவசியம்.

தலைவலிக்கான நிவாரண மருந்துகளை (Balms) நெற்றியில் தடவிக் கொள்வது நல்லதா?

தவறில்லை. எப்போதாவது வரும் தலைவலிக்கு இந்த நிவாரண மருந்துகள் பலன் அளிக்கக் கூடியவை. இதேபோன்று துணி-கர்சீப்பால் தலையை இறுகக் கட்டிக் கொள்வதிலும் தவறில்லை. துணியால் கட்டும்போது ரத்தக் குழாய்கள் விரிவடையாமல் தடுக்கப்பட்டு நிவாரணம் கிடைக்கிறது. ஒற்றைத் தலைவலி ஏற்படும் நிலையிலும் இதுபோன்ற நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

அடிக்கடி தலைவலி நிலையில் காரணத்தைக் கண்டறிந்து வராமல் தடுப்பதற்கு சிகிச்சை செய்துகொள்வது அவசியம். அடிக்கடி தலைவலி வரும் நிலையில் தடுப்புக்கு மட்டுமே மாத்திரைகள் உதவும்; அப்போது வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு மேலே சொன்ன கை வைத்திய முறைகள் பலன் அளிக்கும்.

தலைவலிக்கு யோகா, தியானப் பயிற்சி உதவுமா?

நிச்சயம் உதவும். யோகா, தியானப் பயிற்சி காரணமாக தலைவலி ஏற்படும் இடைவெளி அதிகமாகி நல்ல கட்டுப்பாட்டுக்கு வரும். மாத்திரை சாப்பிடும் தேவை குறையும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக