புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
64 Posts - 50%
heezulia
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_m10திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கழுக்குன்றத்து அதிசய கழுகுகள் எங்கே...?


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 19, 2013 7:07 am

திருக்கழுக்குன்றத்தில், இரண்டு கழுகுகள் பல நூறு ஆண்டுகளாக வந்து உணவுண்டு போன கதையை அந்த ஊரின் சிறுகுழந்தையும் கவிதையாக சொல்லும். கடந்த, 1681, ஜனவரி 3ம் தேதி கழுகுகள் வந்து போனதை, ஹவட் என்ற டச்சுக்காரர் நேரில் பார்த்து பதிவு செய்துள்ளார். ஆனால், காலமாற்றம் அங்கேயும் தனது கையை வைத்து விட்டதால்,1994ம் ஆண்டில் இருந்து கழுகுகள் அங்கு வருவதில்லை. அதற்கு காரணங்கள் பல கூறப்படுகின்றன.கழுகுகளுக்கு தலைமுறை தலைமுறையாக, உணவூட்டிய குடும்பத்து வாரிசான ராமலிங்க தேசிகரிடம் பேசிய போது சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

அவரிடம் பேசியதில் இருந்து...

கழுகுகள் கடைசியாக எப்போது வந்தன? அவற்றுக்கு உணவூட்டிய உங்கள் அனுபவம் பற்றி...?
என் தாத்தா வேதாசலம் தேசிகர், கழுகுகளுக்கு, 41 ஆண்டுகள் உணவூட்டியதாக என் தந்தை சிவராம தேசிகர் கூறியுள்ளார். எனது தந்தையும், 40 ஆண்டுகள் உணவூட்டினார்.
கழுகுகளுக்கு உணவளிப்பதற்காக, தனி மானியம் வழங்கப்பட்டிருந்தது. சம்பாதி தேவர் காலத்தில், இதற்காக திருக்கழுக்குன்றம் அடுத்த, கீரப்பாக்கத்தில், 3 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அதில் கிடைத்த வருமானத்தில், உணவு சமைத்து கழுகுகளுக்கு வைப்போம்.

கழுகுகளுக்கான உணவை எவ்வாறு தயார் செய்தீர்கள்?
காலை, 6:00 மணிக்குள் சங்குதீர்த்த குளத்தில் குளித்துவிட்டு, உணவு சமைப்போம். 1 கிலோ அரிசியில், வெல்லம், முந்திரி, நெய் ஆகியவை சேர்த்து சமைத்தோம்.அதை இறைவனுக்கு படைப்பதில்லை. நேராக வீட்டிலிருந்தே எடுத்து சென்று கழுகுகளுக்கு தான் கொடுப்போம்.

கழுகுகள் எத்தனை மணிக்கு வரும்?
முற்பகல், 11:30 மணி முதல், 12:00க்குள் வந்து விடும். ஒருநாளும் அவை வராமல் இருந்ததில்லை. சில நாட்களில், சில நிமிடங்கள் தாமதமாக வந்ததுண்டு. கழுகுகள் வெள்ளை நிறத்தில், கூர்மையான அலகுடன், பெரியதாக இருக்கும்.

உணவை எவ்வாறு கொடுப்பீர்கள்?
ஒரு கிண்ணத்தில் நெய் வைப்போம். கையில் சர்க்கரை பொங்கல் வைப் போம். கையில் உள்ள சர்க்கரை பொங்கலை சாப்பிட்டு விட்டு, நெய்யில் அலகை அலசும். மீதி பொங்கலை பக்தர்களுக்கு வினியோகித்து விடுவோம்.கழுகுக்கு உணவு கொடுக்கப்படும் அந்த குறிப்பிட்ட இடத்தில், ஒருவர் மட்டுமே அமர முடியும். பக்கத்தில் சுனை உள்ளது. சற்று தூரத்தில் இருந்து அனைவரும் பார்ப்பார்கள். வடமாநிலங்களில் இருந்து நிறைய பேர் தினமும் வருவர்.

உங்கள் தந்தையுடன் சிறுவயதில் நீங்கள் பக்கத்தில் இருந்தீர்களா?
என் தந்தை உணவு கொடுத்தபோது, அருகில் இருந்துள்ளேன். முதலில் பார்ப்பதற்கு பயமாக இருந்தது. பின்பு பழகிவிட்டது.நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கழுகுக்கு உணவு அளித்தபின், சூபாங்கா' என்ற இசை கருவி மூலம் ஒலி எழுப்பப்படும். அதை கேட்ட பின்புதான் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுவது வழக்கம். தற்போது மாறிவிட்டது.

கழுகுகள் கடைசியாக வந்தது எப்போது? வராமல் நின்றபிறகு எத்தனை நாட்கள் காத்திருந்தீர்கள்?
கடந்த, 1994ல் கும்பாபிஷேகம் நடந்தது. அன்று தான் கடைசியாக வந்தன. அதன் பின் வரவே இல்லை. ஐந்து ஆண்டுகள் தினமும் மலை மீது ஏறி காத்திருந்தேன். கழுகுகள் வராததற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. மலைக்கோவிலில், கோபுரத்தில் கழுகுகள் வரும் வழியான கூடு போன்ற அமைப்பை, 1994 கும்பாபிஷேகத்தில் அடைத்து விட்டனர். அதனால் வரவில்லை என்கின்றனர்.மலையை சுற்றி இருந்த நரிக்குறவர்களின் துப்பாக்கி சத்தத்தால் வரவில்லை என்றனர். நரிக்குறவர்களை இடம் மாற்றினர். அதுவும் தவறானது. அதற்கு முன்பிருந்தே கழுகுகள் வந்தன. சிலர், அவை, முத்தியடைந்து விட்டதாக கூறுகின்றனர். உண்மை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.

கழுகுகளை வரவைப்பதற்கு என்ன முயற்சிகள் நடந்தன?
கேரளாவில் இருந்து நம்பூதிரியை அழைத்து வந்து யாகம் செய்தனர். அதன் பின் கோவில் நிர்வாகம் பல முயற்சிகள் செய்தது. வரும் என்ற நம்பிக்கை குறைந்துவிட்டது. வாய்ப்பு இல்லை.

கழுகுகள் மீண்டும் வந்தால் உங்கள் குடும்பத்தில் மீண்டும் உணவு வைப்பீர்களா?
நிச்சயமாக... என் மகன் அதை தொடர்ந்து செய்வார்
நன்றி தினமலர்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Thu Sep 19, 2013 10:25 am

நானும் பல்முறை பார்திருகின்றேன் 1994 ம் வருடம் கும்பாபிஷேகதிற்கு மலைமேல் ஏராளமான வெடிகள் வெடிக்கபட்டது அதனால் பயந்து எங்கோ சென்றுவிட்டது அதுமுதல் வருவதில்லை.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 19, 2013 10:27 am

இப்பொழுதுள்ள மனிதன் எந்த உயிரினத்தையும் வாழ விடுவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 19, 2013 10:57 am

சோகம் சோகம் சோகம் 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 19, 2013 11:00 am

சோகம் சோகம் சோகம் சோகம் 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 11:55 am

நாங்க 94 வாக்கில் செங்கல் பட்டில் இருந்தோம் , அப்போது ஒருமுறை கிருஷ்ணாவுக்கு காட்டுவதர்க்காக சென்றோம் அப்போ சொன்னார்கள் கழுகுகள் வருவதில்லை என்று சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக