புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
48 Posts - 48%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
3 Posts - 3%
prajai
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
2 Posts - 2%
manikavi
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
1 Post - 1%
shakigullo
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
214 Posts - 42%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
189 Posts - 37%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
6 Posts - 1%
manikavi
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
4 Posts - 1%
prajai
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 73 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 73 of 81 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 77 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 73 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 22, 2021 9:30 pm





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 24, 2021 6:43 pm

தலிபான்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்களின் நிலைகள் மீது கடந்த சில நாள்களாக தங்கள் நாட்டு போா் விமானங்கள் தாக்குதல் நிகழ்த்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் சண்டையிட்டு வரும் அந்த நாட்டுப் படையினருக்கு ஆதரவாக, தலிபான்களின் நிலைகளின் மீது அமெரிக்க விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த பல நாள்களாக இந்தத் தாக்குதல்கள் தொடா்ந்து வருகின்றன. அந்த நடவடிக்கைகள் குறித்து முழுமையான விவரங்களை எங்களால் தர முடியாது.

எனினும், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதைப் போல, ஆப்கன் ராணுவத்துக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்க விமானங்கள் இனியும் தொடா்ந்து மேற்கொள்ளும் என்றாா் அவா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க வீரா்கள் முழுமையாக வெளியேறும்வரை, அங்கு விமானத் தாக்குதல்களை நடத்துவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் அந்தப் பிராந்தியத்துக்கான அமெரிக்க முப்படைகளின் தளபதி கென்னத் மெக்கென்ஸீயிடம் இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 30 நாள்களில் மட்டும் அமெரிக்க ராணுவம் 6 அல்லது 7 விமானத் தாக்குதல்களை ஆப்கானிஸ்தானில் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஆப்கன் அரசுப் படையினரிடமிருந்து தலிபான்கள் கைப்பற்றிய ராணுவ தளவாடங்களைக் குறிவைத்து அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் கடந்த 2001-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு, அல்-காய்தா தலைவா் பின் லேடன் மூளையாக செயல்பட்டாா்.

அவருக்கு, ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுதது, அந்த நாட்டின் மீது படையெடுத்த அமெரிக்கா, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.

அதனைத் தொடா்ந்து, அமெரிக்காவின் ஆதரவுடன் அந்த நாட்டில் புதிய அரசு அமைக்கப்பட்டது. மேலும், ஆப்கன் அரசுப் படைகளுக்குப் பயிற்சியளிக்கவும் தலிபான்களுக்கு எதிரான போரில் அவற்றுக்கு உதவவும் அமெரிக்கா தலைமையிலான படை அந்த நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கியிருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனா். அதையடுத்து, ஆப்கானிஸ்தானில் தங்களது நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டதாகக் கூறிய அமெரிக்கா, அந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காக தலிபான்களுடன் கத்தாா் தலைநகா் தோஹாவில் பல கட்டங்களாகப் பேச்சுவாா்த்தை நடத்தியது.

அதன் விளைவாக, இரு தரப்புக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் கடந்த 2019-ஆம் ஆண்டு கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், பயங்கரவாத அமைப்புகளுடனான தொடா்புகளைக் கைவிட தலிபான்கள் ஒப்புக் கொண்டனா். ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை திரும்பப் பெற அமெரிக்கா ஒப்புக் கொண்டது.

அதன் ஒரு பகுதியாக, தங்களது படையினரை அடுத்த மாதம் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக திரும்ப அழைக்க அமெரிக்கா இலக்கு நிா்ணயித்துள்ளது.

ஏற்கெனவே 95 சதவீத அமெரிக்க வீரா்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி முன்னேறி வருகின்றனா். இதில், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப் பகுதிகளும் அடங்கும்.

இந்தச் சூழலில், ஆப்கன் ராணுவத்துக்கு ஆதரவாக தலிபான்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 73 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 24, 2021 8:19 pm

மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் பல நாடுகளுக்குத் தேவை !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 26, 2021 6:01 pm

மத தலைவர்கள், பெண்கள் 33 பேர் சுட்டுக்கொலை: ஆப்கானில் தலிபான்கள் வெறிச்செயல்

ஆப்கான்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படை வீரர்கள் வெளியேறி வருவதால், தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது.

நாட்டின் பெரும் பகுதியை அவர்கள் பிடித்து விட்டனர். இந்நிலையில், தாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளில் தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை தலிபான்கள் கொன்று குவித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களில் அவர்கள், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ஆண், பெண் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட 33 பேரை கொன்றுள்ளனர். இதனால், அமெரிக்க படைகள் இருந்த தைரியத்தில் தலிபான்களை எதிர்த்தவர்கள், குடும்பத்துடன் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி ஓடுகின்றனர்.

இரவு நேர ஊரடங்கு தலிபான்களை தாக்குதல் அதிகமாகி வருவதால், அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஆப்கானிஸ்தான் அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. இந்த நாட்டில் உள்ள 34 மாகாணங்களில் 31ல் இது அமல்படுத்தப்பட்டுள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 73 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 27, 2021 11:40 pm

வட கொரியா தென் கொரியா நட்பு: நாடகமா? நடைமுறையில் சாத்தியமா?

தென் கொரியாவும் வட கொரியாவும் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த தங்கள் தகவல்தொடர்புத் தடங்களை மீண்டும் தொடங்கவும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளன.

சியோல்: உலகின் மிகக் கடுமையான எதிரிகள் இருவர் கைகோர்த்துள்ளனர். முறைத்துக்கொள்ளும் முகங்கள் முன்னோக்கி பார்க்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரோதம் விடை பெற்றதா? குரோதம் குறைந்து விட்டதா? ஆபத்தாய் பார்க்கப்பட்ட அண்டை நாட்டின் மீது இப்போது அன்பு கசிகிறதா? ஆம்!!

தென் கொரியாவும் (South Korea) வட கொரியாவும் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த தங்கள் தகவல்தொடர்புத் தடங்களை மீண்டும் தொடங்கவும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் ஆக்ரோஷமான எதிரிகளாக இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தனது அண்டை நாடான தென் கொரியா தங்கள் நாட்டுக்கு எதிராக சதி செய்வதாக வட கொரியா பலமுறை குற்றம் சாட்டியுள்ளது.

ஏப்ரல் முதல் முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன

எங்கள் இணை வலைத்தளமான WION இல் வெளியிடப்பட்ட செய்தியின்படி, தென் கொரியாவின் அதிபர் அலுவலகம் இரு நாடுகளுக்கிடையேயான தகவல்தொடர்புத் தடங்களை மீண்டும் தொடங்கவும் பரஸ்பர நட்பை அதிகரிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதிபர் மூன் ஜே-இன் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஏப்ரல் முதல் பல முறை கடிதங்களை பரிமாறிக்கொண்டுள்ளனர். அதன் பின்னர் இரு தலைவர்களும் உறவுகளை சீராக்க ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு இணைப்புகளை வட கொரியா முடக்கியது

அதிகரித்து வரும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, வட கொரியா (North Korea) கடந்த ஆண்டு ஜூன் 16 அன்று தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தது. இது மட்டுமல்லாமல், தென் கொரியா மீது துண்டுப்பிரசுர பிரச்சாரத்திற்கான குற்றம் சாட்டி, அதன் எல்லை நகரமான கேசோங்கில் உள்ள இடை-கொரிய தொடர்பு அலுவலகத்தையும் வட கொரியா மூடியது.

பலூன்கள் மூலம் துண்டு பிரசுரங்களை பரப்பி, தென் கொரியா தனக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக வட கொரியா கூறியது. தலைவர் கிம் ஜாங் உனுக்கு (Kim Jong Un) எதிராக மக்களைத் தூண்டுவதற்கு இந்த துண்டு பிரசுரம் பயன்படுத்தப்படுவதாக வட கொரியா குற்றம் சாட்டியது.

நீண்ட காலமாகத் தொடரும் வட கொரியா தென் கொரியா மோதல்

கடந்த மாதம், தென் கொரிய அமைச்சக அதிகாரி ஒருவர், ”எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக கொரிய நாடுகளுக்கு இடையேயான தொடர்பு தடத்தை மீட்டெடுக்க வேண்டும். தகவல் தொடர்புத் தளங்களை மீட்டெடுக்க வட கொரியாவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என்று கூறியிருந்தார். இப்போது இரு நாடுகளும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

குறிப்பிடத்தக்க வகையில், வட கொரியா தென் கொரியா இடையிலான மொதல் 70 ஆண்டுகளுக்கும் மேலானது. இது உலகின் மிக நீண்ட மோதல் என்று பெயரிடப்பட்டது. அண்டை நாடுகளாக இருந்தபோதிலும், இரு நாடுகளும் ஒருபோதும் நல்ல உறவைக் கொண்டிருக்கவில்லை.

மொத்தம் 50 தொடர்புத் தடங்கள் தொடங்கப்பட்டன

முன்னாள் சோவியத் இராணுவம் சியோலுக்கும் ஹெஜுக்கும் இடையிலான தொலைபேசி இணைப்பை துண்டித்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் ஹாட்லைன் சேவை 1971 செப்டம்பர் 22 அன்று தொடங்கப்பட்டது. 1971 முதல் வட கொரியா மற்றும் தென் கொரொயா இடையே மொத்தம் 50 தொலைபேசி இணைப்புகள் துவக்கப்பட்டன. இதில் இரண்டை கொரிய அதிபர்களும், மீதமுள்ளவற்றை இராணுவ மற்றும் உளவு அமைப்புகளும் பயன்படுத்தின.



உலகச் செய்திகள்!  - Page 73 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 28, 2021 3:43 pm

உலகச் செய்திகள்!  - Page 73 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2021 10:02 pm

கலிபோர்னியா : காட்டுத் தீயினால் 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசம்

வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் இதுவரை 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியிருக்கிறது.


அம்மாகாண வனத்துறை சார்பில் அளிக்கப்பட்ட தகவலில் ," 2.44 லட்சம் ஏக்கர் வனப்பகுதி காட்டுத் தீயால் எரிந்தது. இது மொத்த வனப்பகுதியில் 32 சதவீதம் . வனத்தில் ஏற்பட்ட தீக்கு காரணமானவர்களைத் தேடி வருகிறோம் ' எனத் தெரிவித்தனர்.


பாதிப்புகள் மற்றும் சேதாரங்கள் குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது. அதில் மொத்தம் 69 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் 9 கட்டடங்கள் சேதாரமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .


தற்போது அமெரிக்கா முழுவதும் 83 க்கும் மேற்பட்ட வனப்பகுதியில்  காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதனால் 10,435 கட்டடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக வனத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.


மேலும் இதுவரை ஒட்டுமொத்தமாக 400 கட்டடங்களும்  342 வாகனங்களும் தீக்கிரையானதாக கூறப்பட்டிருக்கிறது .





உலகச் செய்திகள்!  - Page 73 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2021 10:13 pm

ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் ராணுவம் நடத்திய அதிரடி நடவடிக்கையில் 254 தலீபான்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இரு தரப்புக்கு இடையிலும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இதனால் தலீபான்கள் பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

சமீபத்தில், அரசு மற்றும் தலீபான்கள் இடையிலான மோதலில் இந்திய புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக் உயிரிழந்தது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஒருபுறம் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வந்தபோதிலும் மறுபுறம் தலிபான்களின் வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை மாதத்தில் 70 மாவட்டங்கள் தலிபான்களால் கைப்பற்றப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் 2வது பெரிய நகரான கந்தகாரை தலிபான்கள் இலக்காக வைத்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு கந்தகார் விமான நிலையத்தின் மீது அவர்கள் 3 ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 2 ஏவுகணைகள் விமான நிலைய ஓடுபாதையில் விழுந்து வெடித்தன.

இதனால், ஓடுபாதை சேதமடைந்தது. இதனை தொடர்ந்து நேற்று விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தலிபான்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே நகர பகுதிகளை சுற்றி கடும் சண்டை நடந்து வருகிறது.

ஆப்கானிஸ்தானின் கஜினி, கந்தகார், ஹெராத், பரா, ஹெல்மண்ட், பால்க், குண்டூஸ், காபூல் மற்றும் கபீசா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் ராணுவ வீரர்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு தலிபான்கள் மீது பதிலடி தாக்குதல் தொடுத்தனர்.

இதில், 254 தலிபான்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 97 பேர் காயமடைந்து உள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தலிபான்களால் வைக்கப்பட்ட 13 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 73 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 05, 2021 10:03 pm

புர்கா அணியாத இளம்பெண் தாலிபான்களால் படுகொலை..!

பாலக்: தாலிபான் படையினர் கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானில் தொடர் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல அப்பாவி குடிமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களது பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கி இருப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது. சமீபத்தில் 21 வயது ஆகிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவரை தாலிபான் படையினர் ஒரு சாதாரண விஷயத்துக்காக சுட்டுக் கொன்றுள்ளனர். இது உலகம் முழுவதும் கண்டனத்தை பெற்றுள்ளது.

இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கா முகத்தை முழுவதுமாக மூடக்கூடிய ஓர் ஆடை ஆகும். இஸ்லாமிய பெண்கள் தங்கள் தலை மற்றும் முகத்தை வெளியே காட்டக்கூடாது என இஸ்லாமிய ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவர். இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் பற்று கொண்ட தாலிபான் அமைப்பினர் நாசானீன் என்கிற 21 வயது பெண் தலையில் புர்கா அணியாததால் அவரது காரில் இருந்து அவரை வெளியே எடுத்து சுட்டு கொன்றுள்ளனர்.
இச்சம்பவம் ஆப்கானிஸ்தானின் பலாக் பகுதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1996ம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டுவரை ஆப்கானிஸ்தானில் தாலிபான் கட்டுப்படுத்தியது. அப்போது கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் ஆப்கானிஸ்தானில் பின்பற்றப்பட்டன.

பெண்கள் பள்ளிக்குச் சென்று கல்வி பயிலக்கூடாது, ஆபாச படங்கள் பார்க்கக்கூடாது, திருமணத்திற்கு முன்னர் உடலுறவில் ஈடுபடக் கூடாது போன்ற அடாவடியான இஸ்லாமிய சட்டங்களை அப்போது திணித்தது தாலிபான். தற்போது தாலிபானின் ஆப்கானிஸ்தானில் 223 மாகாணங்களை கைப்பற்றி விட்டதாக கூறப்படும் நிலையில் இந்த புராதன அடக்குமுறைகளை மீண்டும் தட்டியெழுப்ப தாலிபான் தீவிர முயற்சி மேற்கொள்கிறது. இதன் விளைவாகவே நாசானீனை தலிபான் அமைப்பினர் சுட்டுக்கொன்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 73 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 06, 2021 11:45 am

“பெண்கள் பள்ளிக்குச் சென்று கல்வி பயிலக்கூடாது, ...... அடாவடியான இஸ்லாமிய சட்டங்களை அப்போது திணித்தது தாலிபான். ...... இந்த புராதன அடக்குமுறைகளை மீண்டும் தட்டியெழுப்ப தாலிபான் தீவிர முயற்சி மேற்கொள்கிறது. இதன் விளைவாகவே நாசானீனை தலிபான் அமைப்பினர் சுட்டுக்கொன்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.”--

இது நமக்கு ஒரு பாடம் ! இந்தியாவிலும் மதத் தீவிரவாதம் பரவக்கூடாது என்று இதற்காகவே நல்லவர்கள் கவலைப்படுகிறார்கள்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 73 of 81 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 77 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக