புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல் முருகன்! Poll_c10கல் முருகன்! Poll_m10கல் முருகன்! Poll_c10 
16 Posts - 57%
heezulia
கல் முருகன்! Poll_c10கல் முருகன்! Poll_m10கல் முருகன்! Poll_c10 
11 Posts - 39%
rajuselvam
கல் முருகன்! Poll_c10கல் முருகன்! Poll_m10கல் முருகன்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல் முருகன்! Poll_c10கல் முருகன்! Poll_m10கல் முருகன்! Poll_c10 
294 Posts - 46%
ayyasamy ram
கல் முருகன்! Poll_c10கல் முருகன்! Poll_m10கல் முருகன்! Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
கல் முருகன்! Poll_c10கல் முருகன்! Poll_m10கல் முருகன்! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
கல் முருகன்! Poll_c10கல் முருகன்! Poll_m10கல் முருகன்! Poll_c10 
16 Posts - 2%
prajai
கல் முருகன்! Poll_c10கல் முருகன்! Poll_m10கல் முருகன்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கல் முருகன்! Poll_c10கல் முருகன்! Poll_m10கல் முருகன்! Poll_c10 
9 Posts - 1%
jairam
கல் முருகன்! Poll_c10கல் முருகன்! Poll_m10கல் முருகன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கல் முருகன்! Poll_c10கல் முருகன்! Poll_m10கல் முருகன்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கல் முருகன்! Poll_c10கல் முருகன்! Poll_m10கல் முருகன்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கல் முருகன்! Poll_c10கல் முருகன்! Poll_m10கல் முருகன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல் முருகன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 14, 2013 3:22 am

சுமார் இருநூறு வருடங்களுக்கு முந்தைய ஒரு நாளின் பனிமூடிய விடிதயற்காலை நேரம். சிந்தை முழுக்க சிவபாலனை நிறை(னை)த்தபடி நடந்து கொண்டிருந்தார் அந்த பக்தர்.

"ணங்' என்று காலில் இடித்தது ஒரு கல். "ஆ' என்று அலறுவதற்கு பதில், "ஆறுமுகா' எனச் சொன்னார். மறுகணம் கல் இருந்த இடத்தில் கந்தனின் திருமுகம் தெரிய, சட்டென்று விழித்து எழுந்தார்.

ஆம். அத்தனையும் கனவு! வேலவனைக் கண்ட வியப்போடு, கல்லாகத் தோன்றிய கந்தன் எங்கே இருக்கிறான் எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் சேர்ந்துகொள்ள, இரவு முழுக்க வேல்முருகனை நினைத்தபடி தூங்காமல் விழித்திருந்தார்.

பொழுது புலர்ந்தது. கனவில் கண்ட இடம் தேடி, கால்போன போக்கில் நடந்தார். காடு, மேடு எனச் சுற்றியும் கண்டுபிடிக்க முடியாமல் வருந்தினர்.

உடல் சோர்வைவிட உள்ளத்தின் வலி அதிகமாக வாட்டவே, மேலும் நடக்க இயலாமல் தவித்தார். பக்கத்தில் இருந்த பாறை ஒன்றின் மேல் ஏறி ஓய்வாக அமர்ந்திட அவர் நினைத்த அதே சமயத்தில் மனம் இரங்கினான் மயிலோன்.

"ணங்' என்று இப்போது நிஜமாகவே அவர் காலில் இடித்தது ஒரு கல். குனிந்து பார்த்தவருக்குப் புரிந்தது கனவில் கண்ட அதே வடிவக் கல்... இல்லை இல்லை கல் வடிவில் உறைந்திருக்கும் கதிர்வேள்! உள்ளம் சிலிர்க்க, உடல்வியர்க்க, வீழ்ந்து வணங்கினார்.

அதே இடத்தில் கூரைக் கொட்டகை ஒன்றில் வைத்து வணங்கினார். குமரனை வழிபட்டோர் வாழ்வில் குறை யாவும் தீரவே பக்தர் கூட்டம் அதிகரித்தது. கொட்டகை சிறு கோயிலானது.

கல்லாக இருந்த குகனுக்கு கற்சிலை வடித்துவைக்க விரும்பினார்கள் பக்தர்கள். அதையே வேண்டுதலாக அவன் முன் வைத்தார்கள். அவன்தான் கேட்டதைத் தருபவன் ஆயிற்றே! பிறகென்ன, தடை ஏதும் இல்லாமல் தனக்கு ஒரு சிலை வைத்திட அருளினான். குமரன் குடிகொண்ட அந்தத் தலத்தின் பெயர், குன்னகம்பூண்டி. ஒரு காலத்தில் சித்தர்கள் நிறைந்து இருந்ததாலோ என்னவோ இந்த ஊருக்கு சித்தருகாவூர் மதுராபுதூர் (சி.எம். புதூர்) என்றும் ஒரு பெயர் உண்டு. இருந்தாலும் குன்னகம்பூண்டி அல்லது குண்ணம்பூண்டி என்றே பலரும் சொல்கிறார்கள்.

அன்றமைந்த அதே கோயிலில் இதோ இன்றும் அருள்மணம் குன்றாமல் சிவசுப்ரமண்யனாக ஆட்சி செய்கிறான் சிவமைந்தன். பாறை மீது அமைந்த கோயில் என்பதால் படி ஏறித்தான் செல்ல வேண்டும்.

ஏறுமயில் வாகனனை தரிசிக்க ஏறிச்செல்லும் படிகளிலும் ஒரு கணக்கு இருக்கிறது. நான்கு வேதங்களும், பதினெட்டுப் புராணங்களும், பன்னிரு திருமுறைகளும் போற்றும் முருகனைப் பணிந்தால் அஷ்டலட்சுமி கடாட்சம் கிட்டும். தடைகளையும் தீவினைகளையும் தகர்க்க நவவீரர்களும் துணை நிற்பார்கள் எனச் சொல்லாமல் சொல்லும் விதமாக 4, 18, 12, 8, 9 என படிகளுக்கு இடையே சமதள இடைவெளிகள் விட்டு அமைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஐம்பத்து ஒன்று சக்தி பீடங்களைக் குறிக்க, ஐந்தையும் ஒன்றையும் கூட்டுவதால் வரும் ஆறு, முருகனின் சடாட்சர மந்திரமான "ஓம் சரவண பவ' என்பதை உணர்த்துகிறது.

விவரங்களைத் தெரிந்துகொண்டு படியேறும்போது நம் கஷ்டங்கள் படிப்படியாக இறங்கிவிடுவது போன்ற உணர்வு படர்கிறது.

படியேறிச் சென்றால் உடனே தரிசிக்கும்படி நேர் எதிரே அமைந்திருக்கிறது கருவறை. வேண்டுவோர் குறைதீர்க்கச் செல்லும் வேலவனை சுமந்து செல்லத் தயாராக முன் நிற்கிறது மயில்.

மூலஸ்தானத்தில் மான் மகளும், தேவர் கோன் மகளும் உடனிருக்க மணக்கோல தரிசனம் தருகிறார் தமிழ்க்கடவுள். சிவசுப்ரமண்யன் என்பது இத்தலத்தில் இவருக்கு வழங்கும் திருப்பெயர். அக்னியில் உதித்தவன் இருக்கும் இடம். ஆனாலும் முருகனின் அருள்மழை எப்போதும் பொழிவதால் குளிர்ச்சியாக இருக்கிறது கோயில். கும்பிடும் பக்தர் கோரிடும் வரத்தினை குறைவின்றித் தரும் குமரன் இவன் எனச் சொல்கிறார்கள் பலன் பெற்ற பக்தர்கள்.

மூலவர் முன் சரவணபவ சக்கரம் வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சக்கரத்திற்கு முன்பாக ஆவுடை இல்லா சிவலிங்கம் போல் சிறிதாக ஒரு கல்இருக்கிறது. இதுவே ஆதியில் ஆறுமுகனின் அம்சமாக வழிபடப்பட்டதாம். உமைமைந்தன் தானே உவந்து குடிகொண்ட கல் அது என்பதை நினைக்கும்போது உள்ளம் நெகிழ்கிறது.

தம்பியின் கோயிலில் தனையன் ஆனைமுகன் முன் மண்டபத்தின் இடப்புறம் வீற்றிருக்கிறான். வலப்புறம் சிவலிங்கமும், பாலதண்டாயுதபாணியின் சிலைவடிவும் உள்ளன.

கருவறை முன் உள்ள விரிசல் விழுந்த சிறு மண்டபத்தின் நடுவே, மூடப்பட்ட பள்ளம் ஒன்று காணப்படுகிறது. பள்ளம் போல் காட்சியளிப்பது ஒரு சுரங்கம். அதன்மீது அமைந்துள்ள மண்டபத்தின் சுவர், குறிப்பிட்ட காலத்திற்குப் பின் விரிசல் ஏற்பட்டு விழுந்துவிடுமாம். பின்னர் மீண்டும் புதிதாகக் கட்டப்படும் என்கிறார்கள். பாறை மீது கட்டப்பட்ட கோயில் என்பது வலம் வரும்போது தெரிகிறது. சுற்றுப்பாதையில் சனிபகவானும் நவக்கிரகங்களும் இருக்கின்றனர்.

அகத்தியர் சீடனும் ஆறுமுகன் தூதனுமான இடும்பன் தனிச் சன்னதியில் காவடி சுமந்த நிலையில் காட்சியளிக்கிறான்.

வழக்கமாக வைகாசி விசாக தினத்தில்தான் பக்தர்கள் காவடி எடுத்துவந்து கந்தனை வணங்குவார்கள். இங்கே வித்தியாசமாக ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்று விதவிதமான காவடிகளோடு, வேண்டுதல்களையும் நன்றிகளையும் சுமந்து வருகிறார்கள், ஏராளமான பக்தர்கள்.

கந்தசஷ்டியை ஒட்டி சூரசம்ஹாரமும் சிறப்பாக நிகழ்த்தப்படுகிறது.

வேல் என்றால் வேதனை விலகும். மயில் என்றால் அச்சங்கள் அகலும். வேலுக்கும் மயிலுக்கும் உரியவனான் முருகன் பெயரைச் சொன்னாலோ முக்காலமும் வாழ்வினிக்கும். கல்லிலே தோன்றிய கந்தனை ஒருமுறை தரிசியுங்கள். உங்கள் வாழ்வில் தடைக்கல் ஏதும் வரவே வராது.


எங்கே இருக்கு: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இரந்து வெடால் செல்லும் வழியில் குன்னகம் பூண்டியில் இருக்கிறது இந்த முருகன் கோயில்.

எப்படிச் செல்வது: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சென்று அங்கிருந்து வெடால் செல்லும் பேருந்தில் செல்ல வேண்டும். குன்னகம்பூண்டி முருகன் கோயில் நிறுத்தத்தில் இறங்கினால் அருகிலேயே உள்ளது கோயில்.

தரிசன நேரம்: காலை 8 முதல் 9 மணி வரை, மாலை 5 முதல் 7 மணி வரை. அர்ச்சகர் வீடு அருகிலேயே இருக்கிறது. அழைத்தால்  நடை திறந்து தரிசனம் செய்து வைக்கின்றனர்.

-ஜெயாப்ரியன்.

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 14, 2013 2:52 pm

கல் முருகன்! 103459460 கல் முருகன்! 103459460 கல் முருகன்! 1571444738 கல் முருகன்! 1571444738 கல் முருகன்! 1571444738 கல் முருகன்! 1571444738 கல் முருகன்! 1571444738



அன்புடன் அமிர்தா

கல் முருகன்! Aகல் முருகன்! Mகல் முருகன்! Iகல் முருகன்! Rகல் முருகன்! Tகல் முருகன்! Hகல் முருகன்! A
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Nov 14, 2013 6:15 pm

கல் முருகன்! 3838410834 கல் முருகன்! 1571444738 கல் முருகன்! 1571444738 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 14, 2013 6:39 pm

நல்ல பகிர்வு ...

புகைப்படங்கள் இருந்தால் கொடுங்கள் தல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக