புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
39 Posts - 49%
heezulia
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
3 Posts - 4%
jairam
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
1 Post - 1%
சிவா
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
1 Post - 1%
Manimegala
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
14 Posts - 4%
prajai
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
9 Posts - 3%
jairam
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச் செல்வங்கள்: மண்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 26, 2014 9:24 pm

தமிழ்ச் செல்வங்கள்: மண் - 1 - புலவர் இரா.இளங்குமரன்

கையில் எடுக்கிறான்; துகள் துகளான புழுதி; பூழ்தியும் அது பூதியும் அது. பூ எனவும் ஆம். இவையெல்லாம் சொல்லியல் நெறிமுறைகள். துகள் - தூள் ஆவது எப்படி?

இரு குறில் ஒரு நெடில் ஆகியது; பொருள் மாறவில்லை. விழுது - வீழ்து ஆவது எப்படி? இரு குறில் நெடிலானது; ஆனால், இரண்டாம் எழுத்தின் ஒற்று நீங்காமல் நின்றது. அதனால், வீழ்து ஆயது. புழுதி பூழ்தி ஆனது அப்படித்தான்.

பொழுது "போழ்து' ஆகிப் "போதும்' ஆகிவிடவில்லையா? எப்பொழுது வந்தார்? எப்போழ்து வந்தார்? எப்போது வந்தார்? ஒரு பொழுது மூவடிவாகிவிட்டதே!

"எப்போதும் வென்றான்' ஒருவன் வீறு; அவன் ஊர்ப் பெயராய் நிலைத்துள்ளதே! புழுதிக்கு மீண்டும் வருவோம். புழுதியில் மழை பெய்கிறது; அல்லது தண்ணீர் விடுகிறோம். புழுதி ஒன்று சேர்ந்து மண்ணாகப் படிகிறதே! மண்ணைக் குழைவாக்கி விடுகிறோம். மண்ணைக் குழைவாக்கி வெயிலில் காய்ந்து - நன்றாகக் காய்ந்தால் கட்டியாகிவிடுகிறதா? குழைந்த மண்ணைக் கலம் வனைவார் பானை, குடம், சட்டி, மூடி என வனைந்து உலர வைத்ததுடன் விட்டுவிடுகிறார்களா? சூளையில் இட்டுச் சுட்டுப் பொசுக்கிக் கட்டமைப்புச் செய்ததுடன் நின்றார்களா?

பச்சை அல்லது ஈரமண்ணாக வனையும் போதே, எத்தனை வரி? எத்தனை கோலம்? எத்தனை ஓவியம்? எத்தனை எழுத்து? -

என நெஞ்சப் பதிவை நிலைப்பதிப்பு ஆக்கிவிடுகிறார்களே! மண்கலப் பெயர் "மண்டை'யாயிற்றே இதே உத்திதானே, செங்கல் கட்டளை! மண்ணைக் குழைக்க - கட்டளையில் வைத்து அழுத்திச் செறிக்க - வெயிலில் காயவிட - சூளையில் வேகவைக்க - அம்மண் கல்லாகிவிட்டதே! அதன் வண்ணச் சிறப்பால் "செங்கல்' ஆகிவிட்டதே! சுடுமண்ணாம் செங்கல்தானே, ""சுடுமண் ஓங்கிய நெடுநிலை மாடம்''

சுடுமண்தானே கலங்கள்! சுடுமண்தானே சுவர்! சுடுமண்தானே தெய்வ உருக்கள்! சுடுமண்தானே கோட்டை கொத்தளம்! புழுதியா இது? செறிவின் - திண்மையின் - கட்டமைவின் - மூலம் அல்லவோ! அதனால்தானே, ""மண் திணிந்த நிலன்'' என்று நம் புறநாநூற்றுப் பாட்டன் கூறினான்.

மண் செறிவு - மட்செறிவு; மண் பானை - மட்பாணை; மண் தாழி - மட்டாழி; மண் குடம் - மட்குடம் என வல்லினம் வர, மெல்லினத்தையும் வல்லினம் ஆக்கும் புணர்ச்சியிலும் புலப்படுத்தினானே! புழுதி மண்ணா இந்த மண்? பொன் மண் அல்லவா!

தொடர்வோம்...



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 02, 2014 5:10 pm

தமிழ்ச் செல்வங்கள்: மண் - 2

மண்ணின் வளம் முழுவதும் உலகம் கண்டு கொண்டதா? ஒரு பகுதியாவது கண்டு கொண்டதா? எத்தனை அறிவர்கள் தோன்றி ஆய்ந்தாலும் கணக்கிட முடியாமல் தோற்றே போவர். நீரில் நாம் நடாமல், நிலத்தில் இருக்கும் இடம் தெரியாமல், புதைந்து கிடந்த தாமரை, ஆம்பல், கொட்டி என்பவை தாமே முளைத்து, நீர்மேலே இலையும் பூவும் தேனும் பூம்பொடியும் வண்டும் ஈயும் ஒருசேரக் காண்கிறோமே!

மண்ணுள் புதையுண்டு கிடந்த கிழங்குதானே, அவற்றின் மூலம்! தாமரைக்குளம், தாமரைத் தடாகம், அல்லி (ஊர்ப்பெயர்) இலஞ்சி (ஊர்ப்பெயர்) ஆக விளங்கவில்லையா? இலக்கிய வாணர்களைக் கொள்ளை கொள்ளவில்லையா? ஓவியர்களை வண்ணம் தீட்ட வைக்கவில்லையா? சிற்பிகளையும் விட்டுவைத்ததா? "சிற்றண்ணல் வாயில்' சான்று இல்லையா? நீரின் அளவு நிமிர்ந்தும், படிந்தும் நமக்குக் காட்சிதரும் அளவு, வாழ்வியல் அளவாம் உள்ளத்து அளவு காட்டுவது இல்லையா?

""வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு''

""நீரளவே ஆகுமாம் நீராம்பல்; தாம்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு''

என்பவை நினைவில் எழுமே! நீரில் பிறங்கிய மலர்தான் தாமரை. மருதநில வளமாம் அது, ""பூவெனப் படுவது பொறிவாழ் பூவே'' எனச் சிறப்புப் பெற்றாலும், மல்லிகை, முல்லை மணம் அதற்கு உண்டா? அல்லி, குவளை ஆயவற்றுக்கு உண்டா? இல்லை! நீர்ப்பூவாம் அவை, நிலப்பூ மணத்தை ஒட்டவில்லை! எட்டவும் இல்லை!

காய், கனி, பிஞ்சு, பிருக்கு எனவும் வித்து, கொட்டை எனவும் வளப்பயன் உண்டா? இல்லையே! ஏன்? மண்ணில் இருந்து கிளம்பும் மண்+அம்=மணம் அதற்கு இல்லாமை, இயற்கைப் படைப்பாளி வைத்த ஒழுங்கு முறை அல்லவா!

மழை பெய்கிறது; எங்கோ பெய்கிறது! மணம் இங்கே வந்துவிடுகிறது அல்லவா? விண்ணும் மண்ணும் கலந்த மணம்தானே அது! நீரில் மணமில்லை! மண்ணில் மணம் இருந்தது. இரண்டும் கலந்தன; மண்ணின் மணத்தை வெளிப்படுத்தியது. வளி உதவியது; நம் மூக்கின் மூன்றாம் அறிவுக்கு வேலை தந்துவிட்டது!

மண்ணில் வளரும் பூவின் நறுமணம், நீரில் கிளரும் பூவுக்குக் குன்றிய அளவு அமைந்ததும், நீரற்ற காலத்து நிலத்தாயின் வயிற்றில் கிடந்து, நீர்வரக் கிளர்ந்து, தன் பிறவி வனப்பையும் பொலிவையும் தேன் கொடையையும் இனப்பெருக்கப் பூம்பொடியையும் தந்து, பொருட்டு என்னும் அளவில் நின்றது. நிலத்தில் பிறந்த கொடியின் மணம், மண்ணில் பிறந்ததால் பெருகியது. மண்+மணம்=மணம் ஆய அரிய "பெயர் சூட்டு விழா'வைப் பெற்றது. - தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 02, 2014 5:22 pm

தமிழ்ச் செல்வங்கள்: மண் 103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக