புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 2:12 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 2:10 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 12:53 pm

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 12:51 pm

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 12:49 pm

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 12:47 pm

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 12:46 pm

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 12:45 pm

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 12:43 pm

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 12:41 pm

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 12:38 pm

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:31 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 12:26 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:21 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 11:23 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Today at 1:02 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 1:39 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 1:34 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 7:49 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 1:36 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 1:34 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 7:48 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 9:55 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 9:54 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 9:52 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 9:51 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 3:28 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 3:23 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 1:49 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 1:40 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 1:31 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 1:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
60 Posts - 50%
heezulia
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
52 Posts - 43%
mohamed nizamudeen
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
335 Posts - 46%
ayyasamy ram
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
17 Posts - 2%
prajai
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_m10பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 14, 2014 1:52 pm

பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! FQgC2ZVLTNqPx71156s5+12

தமிழர்களின் வீரத்தை உலகுக்கு பறைசாற்றும் விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. தமிழகத்தில் குறிப்பாக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றைய நாளிலும் கூட ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று மாடுகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு எந்த அளவுக்குப் பெருமை உள்ளதோ அதே அளவுக்கு, அவர்களைத் தூக்கி வீசிவிட்டுச் செல்லும் காளைகளுக்கும் தனிப்பெருமை உண்டு. அந்த கௌரவத்திற்காகவே மதுரை, திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற மாவட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் மாடுபிடி வீரர்களிடம் பிடி கொடுக்காமல், பரிசு பெற்றுவிட்டால் அந்தக் காளைக்கும், அதன் உரிமையாளருக்கும் தனிச் சிறப்பு.

கடந்த 4 ஆண்டுகளாக மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் 30க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்ற காளையின் பெயர் வேட்டையன். இதை திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள சேர்வீடு பகுதியைச் சேர்ந்த லெ.ந.ரமேஷ் என்பவர் வளர்த்து வருகிறார். அவரிடம் பேசினோம்:

""எனது தந்தை நல்லியப்பன்தான் எனக்கு ஜல்லிக்கட்டில் ஆர்வம் ஏற்படக் காரணம். எங்கள் குல தெய்வமான நல்லியப்பசுவாமி கோயில் காளையை, எனது தந்தையே பராமரித்து வந்தார். அந்தக் காளை மஞ்சு விரட்டுப் போட்டிகளுக்கு சென்று பரிசுகள் வாங்கி வருவதைப் பார்த்த எனக்கு, ஜல்லிக்கட்டு மீதும், காளைகள் மீதும் இயல்பாகவே ஆர்வம் ஏற்படத் தொடங்கியது.

ஜல்லிக்கட்டில் விதவிதமான போட்டிகள் உள்ளன. விரட்டு மஞ்சு விரட்டு (வெளி விரட்டு), எருது கட்டு, வாடி மஞ்சு விரட்டு, வட மாடு மஞ்சு விரட்டு என ஜல்லிக்கட்டில் பல விதமான போட்டிகள் இருந்தன. தற்போது வாடி மஞ்சு விரட்டு மட்டும் இருக்கிறது, அதுவும், பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்று வருகிறது.
நான் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்துள்ள சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம், 4 ஆண்டுகளுக்கு முன் இந்த வேட்டையன் காளையை வாங்கினேன்.

மாடு பிடி வீரர்களிடம் சிக்காமல் இருக்க வேட்டையனுக்கு நிறையப் பயிற்சிகள் கொடுத்தோம். களத்தில் மண் குவித்து, அதில் காளையை குத்தவிடுவோம். இதன் மூலம் தன்னை பிடிக்க வருவோரையும், தரையில் தள்ளி குத்துவதற்கு முயற்சிக்கும். மேலும் மனித பொம்மைகள் தயாரித்து, அவற்றைக் கயிறு மூலம் கட்டி காளையின் திமில் மற்றும் முதுகுப் பகுதியில் இறக்குவோம். இப்படிச் செய்யும் போது, காளை அந்தப் பொம்மையைத் தூக்கி எறிந்தும், கீழே தள்ளியும் தாக்க முற்படும். நீச்சல் பயிற்சியும் வழங்குவோம். தற்போது கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால், நீச்சல் பயிற்சி அளிக்க முடியவில்லை. எனது காளை மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், சக்குடி, ஆவியூர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவப்பட்டி, தவசிமடை, புகையிலைப்பட்டி, பிள்ளமநாயக்கன்பட்டி, வெள்ளோடு, சொரிப்பாறைப்பட்டி, வீரசின்னம்பட்டி ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின், பல ஊர்களில் போட்டி நடத்துவது நின்றுவிட்டது. மேலும் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு ரூ.500க்கான காசோலை செலுத்தி, பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்திடமிருந்து உரிமம் பெற வேண்டியுள்ளது. அதன் பின்னர் காளையின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்த உரிமம் வழங்கும் முறையும் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய காளைகள் பங்கேற்க அனுமதி கிடைப்பதில்லை. இதுபோன்ற சூழ்நிலையிலும் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களும், காளைகளும் தொடர்ந்து வருவது மட்டுமே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

மாடுபிடி வீரர்களிடம் அகப்படாமல் இருந்தாலே காளைக்கு வெற்றிதான். கடந்த 4 ஆண்டுகளாக 10க்கும் மேற்பட்ட ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு வேட்டையனை அழைத்துச் செல்கிறேன். இதுவரை எந்த வீரரிடமும் வேட்டையன் அகப்படவில்லை.

சக்குடி ஜல்லிக்கட்டில் தங்கக் காசு உள்பட பல போட்டிகளில் கட்டில், பீரோ என 30க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றுள்ளது எனது காளை'' என்கிறார் பெருமையாக.

- ஆ.நங்கையார் மணி

காசு பார்க்கும் விளையாட்டல்ல!

மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள ஊர் வீரபாண்டி. அந்த ஊரில் கடந்த 25 ஆண்டுகளாக தான் பங்கேற்ற ஜல்லிக்கட்டு நினைவுகளில் மூழ்கியிருந்த விவசாயி நவநீதன் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை இதோ:

""ஜல்லிக்கட்டானது காசு பார்க்கும் விளையாட்டல்ல. கபடியைப் போன்ற கெüரவத்துக்கான வீர விளையாட்டு. ஆனால், இன்று காளையை அடக்கி வீரத்தை நிலைநாட்டுவதைவிட, பரிசு பெற்றுவிட்டு ஓடுவதிலேயே பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

என்னிடம் உள்ள 5 காளைகளில் எம்.ஜி.ஆர். எனப் பெயரிட்ட காளை இதுவரை 29 ஜல்லிக்கட்டுகளில் விளையாடி பிடிபடாமலே வந்துள்ளது. சூழ்ச்சியால் அதை ஒருமுறை பிடிபட்டதாக அறிவித்தாலும் உண்மையில் எம்.ஜி.ஆர். யாரிடமும் பிடிபடவேயில்லை'' என்கிறார் நவநீதன்.

நவநீதனின் மகனான வினோத் காவலராக உள்ளார். அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக மாடு பிடித்ததற்காக அப்போதைய ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் பாராட்டி பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்ட தமிழர் வீர விளையாட்டு மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தின் தலைவராக உள்ள நவநீதனின் 90 வயது தாய் சிட்டுப்பிள்ளைதான் இந்த ஜல்லிக்கட்டில் காளையரைத் தூக்கி வீசும் 5 காளைகளின் பராமரிப்புத் தாய்.

நெருங்குவோரை தலையாட்டி சீறி முட்டவரும் அக் காளைகள் சிட்டுப்பிள்ளையிடம் சிறுபிள்ளையாகி நிற்பது ஆச்சரியம்தான். - வ.ஜெயபாண்டி
- dinamani

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 14, 2014 2:02 pm

இன்று காலை புதியதலைமுறை தொலைகாட்சியில் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்தேன் , ஒரு காளை யாரிடமும் பிடிபடாமல் சுமார் 5 நிமிடங்கள் களத்திலேயே சுழன்று அடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றது.

பிறகு போட்டி அமைப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து அந்த வீரனை மரியாதையாக அனுப்பிவைத்தனர் புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 15, 2014 1:37 pm

பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! 103459460 
-
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! DzQKrwdLRx2Iq8ZYTEXH+cow

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 15, 2014 2:05 pm

ayyasamy ram wrote:பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! 103459460 
-
பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! DzQKrwdLRx2Iq8ZYTEXH+cow
 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக