புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:55
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43
by heezulia Today at 12:55
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாமரர் தேவாரம்
Page 18 of 20 •
Page 18 of 20 • 1 ... 10 ... 17, 18, 19, 20
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)
(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)
அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1
[அன்னதானச் செய்தி: Aadalvallan
மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2
[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]
கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3
[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]
ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4
[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]
புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5
[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]
அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6
உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7
கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8
பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9
ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10
ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11
--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114
*****
பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)
(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)
அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1
[அன்னதானச் செய்தி: Aadalvallan
மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2
[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]
கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3
[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]
ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4
[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]
புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5
[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]
அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6
உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7
கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8
பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9
ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10
ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11
--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மார்க்கண் டேயர்தம் பூசைக் கென்றொரு
. மாற்று லிங்கம மைத்ததே
கார்க்க டன்றனைத் தீர்த்து வைத்தருள்
. காப்பு லிங்கமென் றாவதாம்
வேர்க்க டன்வினை மூன்று தீர்ந்திட
. வேள்வி யைந்தென ஆற்றவே
சேர்த்த ருள்செயும் தீர்த்த னென்றுறை
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 3
[மேற்சொன்ன மூன்று கடன்களைத் தீர்க்கும் வேள்விகள் ஐந்து.
இவை பிரம்ம, தேவ, பூத, பித்ரு, மனுஷ்ய விஷயமாகச்
செய்யும் வேள்வி மற்றும் அறங்கள்]
அப்பர் பாடிய பைர வர்புகழ்
. அந்த நாள்முதல் ஓங்குமே
கப்பு வல்வினை கண்ட போதிவர்
. காத்த ருள்செயும் கோவெனச்
சிற்ப மாயுரு மேவு காட்சியில்
. சிந்தை யில்நலம் சேருமே
சிப்பி யில்லுறை அப்ப னின்தலம்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 4
இரட்டைச் சண்டராய் ஈசன் பத்தரும்
. இங்குக் காவலில் மேவினார்
அருந்த வத்தவர் மார்க்கண் டர்செய
. அரனி லிங்கமென் றாகியே
இருணம் தீர்த்திடும் ஈச னென்றவர்
. இங்க ருள்செய்யும் ஆலயம்
தெரிநி லைதரும் அரிவை மேலுறும்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 5
[இருணம் = கடன்; தெரிநிலை = அறிவு தெளிந்த நிலை; அரிவை = பெண்]
. மாற்று லிங்கம மைத்ததே
கார்க்க டன்றனைத் தீர்த்து வைத்தருள்
. காப்பு லிங்கமென் றாவதாம்
வேர்க்க டன்வினை மூன்று தீர்ந்திட
. வேள்வி யைந்தென ஆற்றவே
சேர்த்த ருள்செயும் தீர்த்த னென்றுறை
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 3
[மேற்சொன்ன மூன்று கடன்களைத் தீர்க்கும் வேள்விகள் ஐந்து.
இவை பிரம்ம, தேவ, பூத, பித்ரு, மனுஷ்ய விஷயமாகச்
செய்யும் வேள்வி மற்றும் அறங்கள்]
அப்பர் பாடிய பைர வர்புகழ்
. அந்த நாள்முதல் ஓங்குமே
கப்பு வல்வினை கண்ட போதிவர்
. காத்த ருள்செயும் கோவெனச்
சிற்ப மாயுரு மேவு காட்சியில்
. சிந்தை யில்நலம் சேருமே
சிப்பி யில்லுறை அப்ப னின்தலம்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 4
இரட்டைச் சண்டராய் ஈசன் பத்தரும்
. இங்குக் காவலில் மேவினார்
அருந்த வத்தவர் மார்க்கண் டர்செய
. அரனி லிங்கமென் றாகியே
இருணம் தீர்த்திடும் ஈச னென்றவர்
. இங்க ருள்செய்யும் ஆலயம்
தெரிநி லைதரும் அரிவை மேலுறும்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 5
[இருணம் = கடன்; தெரிநிலை = அறிவு தெளிந்த நிலை; அரிவை = பெண்]
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மாவி லிங்கமென் றேவி ருட்சமே
. மாதம் நாலுபின் மாறுமே
பூவி ரித்துவெண் மையென் றோருரு
. பூவி லைவெறும் பச்சிலை
பூவும் பச்சிலை யேது மின்றியே
. பூணும் கோலமு மாகுமே
தேவ நாயகர் மேவு பேரெனச்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 6
மின்னு வார்சடை வேத முட்பொருள்
. வித்த கன்கழல் சேருவோர்
இன்னல் வாழ்வினில் வந்த போதிலும்
. ஏற்று நின்றவர் வாழ்வரே
பின்னு வார்குழல் அன்னை மேவிடும்
. பெண்ணி டத்தனைப் போற்றவே
சென்னி யிற்பிறை கங்கை கொண்டவன்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 7
அன்று மாமலை ஆட்டு தானவன்
. ஆவி சோர்ந்தவன் வீழ்ந்ததே
கொன்றை மாமலர் சென்னி சூடிய
. கூத்தன் கால்விரல் மாயமே
பின்னி ராவணன் கானம் செய்திடப்
. பித்தன் வாளினைத் தந்தனன்
சென்னி யிற்சடை கங்கை தாங்கிடும்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 8
. மாதம் நாலுபின் மாறுமே
பூவி ரித்துவெண் மையென் றோருரு
. பூவி லைவெறும் பச்சிலை
பூவும் பச்சிலை யேது மின்றியே
. பூணும் கோலமு மாகுமே
தேவ நாயகர் மேவு பேரெனச்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 6
மின்னு வார்சடை வேத முட்பொருள்
. வித்த கன்கழல் சேருவோர்
இன்னல் வாழ்வினில் வந்த போதிலும்
. ஏற்று நின்றவர் வாழ்வரே
பின்னு வார்குழல் அன்னை மேவிடும்
. பெண்ணி டத்தனைப் போற்றவே
சென்னி யிற்பிறை கங்கை கொண்டவன்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 7
அன்று மாமலை ஆட்டு தானவன்
. ஆவி சோர்ந்தவன் வீழ்ந்ததே
கொன்றை மாமலர் சென்னி சூடிய
. கூத்தன் கால்விரல் மாயமே
பின்னி ராவணன் கானம் செய்திடப்
. பித்தன் வாளினைத் தந்தனன்
சென்னி யிற்சடை கங்கை தாங்கிடும்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 8
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
(இறுதிப் பகுதி)
செங்கண் மாலுடன் வாணி கேள்வனும்
. செங்க ழல்முடி தேடியே
எங்கும் காண்கிலர் ஏழை யாயவர்
. ஏங்கி நின்றவப் போதிலே
அங்க ணன்தன துண்மை காட்டியே
. அங்க வர்க்கருள் செய்தனன்
செங்க னல்வரும் அங்க மாய்நுதல்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 9
வேதம் தள்ளிடும் வேற்றுப் பாதைகள்
. வீணர் கூற்றென விட்டவர்
வேத னை-களை வேள்வி யாளன்தன்
. வெள்வி டைவரக் கூடுமே
பேத மில்லறப் பத்தி யுள்வரப்
. பெய்யன் பில்லவர் வாழ்வரே
தேதி யென்வரும் சேதி சேருவீர்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 10
குற்ற மில்புக லிப்பிள் ளையவர்
. கூத்தன் சேறையிற் பாடினார்
உற்ற வேதனை தீர்த்த நாதனை
. உன்னி யப்பரும் பாடினார்
பற்றும் பாசமும் போக்கி யேயருள்
. பாவ நாசனை நாடுவோர்
சிற்சு கந்தனைப் பெற்று வாழ்ந்திடச்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 11
[புகலி = சீர்காழி; சிற்சுகம் = அறிவின்பம், ஞானானந்தம்]
--ரமணி, 13-18/08/2015, கலி.01/05/5116
*****
செங்கண் மாலுடன் வாணி கேள்வனும்
. செங்க ழல்முடி தேடியே
எங்கும் காண்கிலர் ஏழை யாயவர்
. ஏங்கி நின்றவப் போதிலே
அங்க ணன்தன துண்மை காட்டியே
. அங்க வர்க்கருள் செய்தனன்
செங்க னல்வரும் அங்க மாய்நுதல்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 9
வேதம் தள்ளிடும் வேற்றுப் பாதைகள்
. வீணர் கூற்றென விட்டவர்
வேத னை-களை வேள்வி யாளன்தன்
. வெள்வி டைவரக் கூடுமே
பேத மில்லறப் பத்தி யுள்வரப்
. பெய்யன் பில்லவர் வாழ்வரே
தேதி யென்வரும் சேதி சேருவீர்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 10
குற்ற மில்புக லிப்பிள் ளையவர்
. கூத்தன் சேறையிற் பாடினார்
உற்ற வேதனை தீர்த்த நாதனை
. உன்னி யப்பரும் பாடினார்
பற்றும் பாசமும் போக்கி யேயருள்
. பாவ நாசனை நாடுவோர்
சிற்சு கந்தனைப் பெற்று வாழ்ந்திடச்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 11
[புகலி = சீர்காழி; சிற்சுகம் = அறிவின்பம், ஞானானந்தம்]
--ரமணி, 13-18/08/2015, கலி.01/05/5116
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
திருப்பறியலூர் [இன்று (கீழ்ப்)பரசலூர்] (அட்டவீரட்டத் தலக்களில் ஒன்று)
(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா: அரையடி: திருநேரிசை அமைப்பு)
திருநேரிசை (நேரிசைக் கொல்லி) அமைப்பு
http://www.thevaaram.org/thirumurai_1/ani/06aaraaichi12.htm
1. பொதுவான சீர்மைப்பு: கூவிளம் புளிமா தேமா கூவிளம் புளிமா தேமா
2. அறுசீர்க் கட்டளையடிகள்
3. முதற்சீரும் நான்காம் சீரும் ஒரோவழிக் கருவிளம் ஆவதுண்டு
4. இரண்டாம் ஐந்தாம் சீர்கள் ஒரோவழித் தேமா ஆவதுண்டு
5. மூன்றாம் ஆறாம் சீர்கள் எப்போதும் தேமா.
திருநேரிசை விளக்கம்
விபுலாநந்த அடிகளாரின் ’யாழ்நூல்’, பக்.217
இந்நூலைத் தரவிறக்க
http://www.noolaham.org/wiki/index.php?title=யாழ் நூல்
கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=510
http://www.shivatemples.com/sofct/sct041.php
பதிகம்
சம்பந்தர்: 01.134: கருத்தன் கடவுள்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=11340
காப்பு
கோட்டத்தில் நர்த்தனராய்க் கோவில்வி நாயகராய்
ஆட்டம் நடத்தும் அருளாள! - தாட்டனை
வீட்டிய வித்தல வீரட்டே சன்பெருமை
பாட்டில்நான் செய்யப் பரி.
[தாட்டன் = பெருமைக்காரன், போக்கிரி: இங்கு தட்சன்]
பதிகம்
(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா: அரையடி: திருநேரிசை அமைப்பு)
தட்சனும் செருக்குற் றானே
. தானெனும் அகந்தை தானே
திட்டமாய் அவிசு பாகம்
. தில்லையம் பலனுக் கில்லை
இட்டமாய் உமையாள் வந்தும்
. ஈசனை மதித்தான் இல்லை
வெட்டினார் தலையை யீசர்
. வீடுறும் பறிய லூரே. ... 1
அன்னையாம் இளமை யம்மை
. அத்தனின் மனையாய் இங்கே
தன்னிடம் வருவோர்க் கெல்லாம்
. தாமதம் இலாத ருள்வாள்
நன்னெறி நலத்தில் வாழ
. நாடுவோர்க் கின்னல் இல்லை
மன்னிய வினைகள் மாண்டே
. வீடுறப் பறிய லூரே. ... 2
(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா: அரையடி: திருநேரிசை அமைப்பு)
திருநேரிசை (நேரிசைக் கொல்லி) அமைப்பு
http://www.thevaaram.org/thirumurai_1/ani/06aaraaichi12.htm
1. பொதுவான சீர்மைப்பு: கூவிளம் புளிமா தேமா கூவிளம் புளிமா தேமா
2. அறுசீர்க் கட்டளையடிகள்
3. முதற்சீரும் நான்காம் சீரும் ஒரோவழிக் கருவிளம் ஆவதுண்டு
4. இரண்டாம் ஐந்தாம் சீர்கள் ஒரோவழித் தேமா ஆவதுண்டு
5. மூன்றாம் ஆறாம் சீர்கள் எப்போதும் தேமா.
திருநேரிசை விளக்கம்
விபுலாநந்த அடிகளாரின் ’யாழ்நூல்’, பக்.217
இந்நூலைத் தரவிறக்க
http://www.noolaham.org/wiki/index.php?title=யாழ் நூல்
கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=510
http://www.shivatemples.com/sofct/sct041.php
பதிகம்
சம்பந்தர்: 01.134: கருத்தன் கடவுள்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=11340
காப்பு
கோட்டத்தில் நர்த்தனராய்க் கோவில்வி நாயகராய்
ஆட்டம் நடத்தும் அருளாள! - தாட்டனை
வீட்டிய வித்தல வீரட்டே சன்பெருமை
பாட்டில்நான் செய்யப் பரி.
[தாட்டன் = பெருமைக்காரன், போக்கிரி: இங்கு தட்சன்]
பதிகம்
(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா: அரையடி: திருநேரிசை அமைப்பு)
தட்சனும் செருக்குற் றானே
. தானெனும் அகந்தை தானே
திட்டமாய் அவிசு பாகம்
. தில்லையம் பலனுக் கில்லை
இட்டமாய் உமையாள் வந்தும்
. ஈசனை மதித்தான் இல்லை
வெட்டினார் தலையை யீசர்
. வீடுறும் பறிய லூரே. ... 1
அன்னையாம் இளமை யம்மை
. அத்தனின் மனையாய் இங்கே
தன்னிடம் வருவோர்க் கெல்லாம்
. தாமதம் இலாத ருள்வாள்
நன்னெறி நலத்தில் வாழ
. நாடுவோர்க் கின்னல் இல்லை
மன்னிய வினைகள் மாண்டே
. வீடுறப் பறிய லூரே. ... 2
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஆவுடைச் சதுரம் மூலர்
. ஆனபை ரவரே வீரம்
மேவுபத் திரரென் றாகி
. வேள்வியை அழித்தே தக்கன்
பாவியின் தலையைக் கொய்தே
. பாதமும் அருளி யீசர்
தேவரை யொறுத்தே பாவம்
. தீய்த்தனர் பறிய லூரே. ... 3
ஆடுகொள் தலையாய்த் தக்கன்
. ஆதியை வணங்கும் சிற்பம்
மேடுகொள் உருவாய்க் கோட்டம்
. மேவிடும் பலவாய்ச் சிற்பம்
ஈடுகொள் உருவொன் றில்லா
. ஈசரின் வகையாய்ச் சிற்பம்
வீடுகொள் அருளும் கிட்ட
. வீற்றருள் பறிய லூரே. ... 4
தலமரம் பலவென் றாகும்
. தடாகமாய் உத்ர வேதி
சிலையெழில் இளங்கொம் பன்னாள்
. சிவனெழில் பலவாய்க் காண
விலகியே வினைகள் போக
. விடையவர் கருணைப் பார்வைத்
திலகமாய்த் திகழும் ஊரே
. திருப்பறி யலெனும் பேரே. ... 5
[பலவு = பலாமரம்; தடாகம் = குளம்;]
. ஆனபை ரவரே வீரம்
மேவுபத் திரரென் றாகி
. வேள்வியை அழித்தே தக்கன்
பாவியின் தலையைக் கொய்தே
. பாதமும் அருளி யீசர்
தேவரை யொறுத்தே பாவம்
. தீய்த்தனர் பறிய லூரே. ... 3
ஆடுகொள் தலையாய்த் தக்கன்
. ஆதியை வணங்கும் சிற்பம்
மேடுகொள் உருவாய்க் கோட்டம்
. மேவிடும் பலவாய்ச் சிற்பம்
ஈடுகொள் உருவொன் றில்லா
. ஈசரின் வகையாய்ச் சிற்பம்
வீடுகொள் அருளும் கிட்ட
. வீற்றருள் பறிய லூரே. ... 4
தலமரம் பலவென் றாகும்
. தடாகமாய் உத்ர வேதி
சிலையெழில் இளங்கொம் பன்னாள்
. சிவனெழில் பலவாய்க் காண
விலகியே வினைகள் போக
. விடையவர் கருணைப் பார்வைத்
திலகமாய்த் திகழும் ஊரே
. திருப்பறி யலெனும் பேரே. ... 5
[பலவு = பலாமரம்; தடாகம் = குளம்;]
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
உற்சவர் பலராய் மேனி
. ஊர்வலம் செலுதற் கென்றே
பொற்பதம் மயில்மேல் ஊன்றிப்
. போற்றுவோர்க் கருளும் கந்தன்
கற்பகத் தருவாம் சோமாஸ்
. கந்தரைங் கரனும் என்றே
உற்சவர் பலராய்க் காணும்
. ஊரெனப் பறிய லூரே. ... 6
[சோமாஸ் கந்தரைங் கரனும் = சோமாஸ்கந்தர், ஐங்கரன்]
காமனை எரித்த கண்ணும்
. காலனை உதைத்த காலும்
தாமரைக் கடவுள் சென்னி
. தட்டிய தலைவன் கையும்
நாமெலாம் அவரே யென்னும்
. ஞானமும் அருளும் பாதம்
சேமமாய் இகத்தில் காண்போர்
. சேர்வது பறிய லூரே. ... 7
இராவணன் மலையை ஆட்ட
. இராமநா தன்றன் காலின்
உராய்ஞ்சலாய் விரலை வைத்தே
. ஒறுத்துடன் நாள்-வாள் தந்தார்
ஒரோவழி அறம்நின் றாலும்
. உறுதியாய் உறவன் ஆகி
பராக்கதம் அருளும் ஊரே
. பறியலூர் அதனின் பேரே. ... 8
[பராக்கதம் = தைரியம்]
. ஊர்வலம் செலுதற் கென்றே
பொற்பதம் மயில்மேல் ஊன்றிப்
. போற்றுவோர்க் கருளும் கந்தன்
கற்பகத் தருவாம் சோமாஸ்
. கந்தரைங் கரனும் என்றே
உற்சவர் பலராய்க் காணும்
. ஊரெனப் பறிய லூரே. ... 6
[சோமாஸ் கந்தரைங் கரனும் = சோமாஸ்கந்தர், ஐங்கரன்]
காமனை எரித்த கண்ணும்
. காலனை உதைத்த காலும்
தாமரைக் கடவுள் சென்னி
. தட்டிய தலைவன் கையும்
நாமெலாம் அவரே யென்னும்
. ஞானமும் அருளும் பாதம்
சேமமாய் இகத்தில் காண்போர்
. சேர்வது பறிய லூரே. ... 7
இராவணன் மலையை ஆட்ட
. இராமநா தன்றன் காலின்
உராய்ஞ்சலாய் விரலை வைத்தே
. ஒறுத்துடன் நாள்-வாள் தந்தார்
ஒரோவழி அறம்நின் றாலும்
. உறுதியாய் உறவன் ஆகி
பராக்கதம் அருளும் ஊரே
. பறியலூர் அதனின் பேரே. ... 8
[பராக்கதம் = தைரியம்]
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
(இறுதிப் பகுதி)
அயனரி அலைய வைத்த
. அழலென நிலம்வான் ஆழ்ந்தார்
கயலெழும் விழியாள் சேரக்
. கடவிடும் சிவனாய் ஆனார்
வயவரி உரிவை கொள்வார்
. மயலினை நலியச் செய்வார்
செயலுறும் மனதில் உண்மை
. செழித்திடும் பறிய லூரே. ... 9
[கடவுதல் = செலுத்துதல்; வயவரி = புலி; உரிவை = தோல்]
வேதமில் நெறிகள் யாவும்
. வீணென மனதில் கொள்வோர்
போதனை எனவே தந்த
. பொய்யுரை அனைத்தும் தள்ளி
வேதனின் அருளைப் பெற்றே
. வேரினை யறிந்தே வாழ்வர்
ஓதுவார் அடியார் காணும்
. உள்ளொளி பறிய லூரே. ... 10
ஆழியின் நஞ்சைக் கொண்ட
. ஆரணன் தாளைப் பற்றி
ஊழியம் செய்தே வாழ்ந்து
. ஊரெலாம் கண்டே சொன்ன
காழியின் பிள்ளை சொல்லைக்
. காதுறப் பாடும் உள்ளம்
வாழிய வாழ்க வென்றே
. வாழ்த்துமூர் பறிய லூரே. ... 11
--ரமணி, 10-13/09/2015, கலி.27/05/5116
*****
அயனரி அலைய வைத்த
. அழலென நிலம்வான் ஆழ்ந்தார்
கயலெழும் விழியாள் சேரக்
. கடவிடும் சிவனாய் ஆனார்
வயவரி உரிவை கொள்வார்
. மயலினை நலியச் செய்வார்
செயலுறும் மனதில் உண்மை
. செழித்திடும் பறிய லூரே. ... 9
[கடவுதல் = செலுத்துதல்; வயவரி = புலி; உரிவை = தோல்]
வேதமில் நெறிகள் யாவும்
. வீணென மனதில் கொள்வோர்
போதனை எனவே தந்த
. பொய்யுரை அனைத்தும் தள்ளி
வேதனின் அருளைப் பெற்றே
. வேரினை யறிந்தே வாழ்வர்
ஓதுவார் அடியார் காணும்
. உள்ளொளி பறிய லூரே. ... 10
ஆழியின் நஞ்சைக் கொண்ட
. ஆரணன் தாளைப் பற்றி
ஊழியம் செய்தே வாழ்ந்து
. ஊரெலாம் கண்டே சொன்ன
காழியின் பிள்ளை சொல்லைக்
. காதுறப் பாடும் உள்ளம்
வாழிய வாழ்க வென்றே
. வாழ்த்துமூர் பறிய லூரே. ... 11
--ரமணி, 10-13/09/2015, கலி.27/05/5116
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பாமரர் தேவாரம்
திருநனிபள்ளி (இன்று புஞ்சை)
(கலித்துறை: ’தான தானன தானன தானன தானன’: ’மா கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்’ என்ற அமைப்பு.)
கட்டளை அடிகள்
அடியீற்றைத் தவிர மற்ற சீர்கள் நெடிலில் முடியா.
கூவிளம் வருமிடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளச்சீர் வருமிடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரலாம்.
சம்பந்தர்: 02.010.01
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20100
சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி வடமங் கலக்குடி
நீரின் மாமுனி வன்னெடுங் கைகொடு நீர்தனைப்
பூரித் தாட்டியர்ச் சிக்க விருந்த புராணனே.)
கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=265
http://www.shivatemples.com/sofct/sct043.php
பதிகம்
சம்பந்தர்: 02.084: காரைகள் கூகைமுல்லை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20840
அப்பர்: 04.070: முற்றணை யாயி னானை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40700
சுந்தரர்: 07.097: ஆதியன் ஆதிரையன் அயன்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=70970
சிவசிவா அவர்களின் பதிகம்:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/nayMqE8k7Vw%5B351-375%5D
காப்பு
(நேரிசை வெண்பா)
தந்தைமணக் கோலம் தனயனாய்க் கண்டுமகிழ்
எந்தை கணபதியே இன்னருள் - தந்தருள்வீர்!
கோட்டவி நாயகரே கும்பிட்டேன் ஈசனைப்
பாட்டிலே செய்திடப் பஃது.
பதிகம்
(கலித்துறை: ’தான தானன தானன தானன தானன’: ’மா கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்’ என்ற அமைப்பு.
ஆனை சுற்றிட வானது வுள்ளறை; ஆதியாய்
ஆன மூர்த்தியென் றேதிகழ் நற்றுணை யப்பராய்
பானு சோதியென் றேயரு ளீசனும் பாலையை
பானல் நெய்தலென் றேவரச் செய்நனி பள்ளியே. ... 1
[பானல் = கடல்]
அன்னை யாயிரு பர்வத புத்திரி அம்மனும்
இன்னு மாமலை யான்மடந் தையெனும் ஈச்வரி
நின்ற ருள்செய நைந்திடக் காணுவம் நீள்வினை
பன்ம வெண்பொடி பூண்டவ ருள்நனி பள்ளியே. ... 2
[பன்மம் = பஸ்மம் = விபூதி; பூண்டவருள் = பூண்டவரின் உள் (இடம்)]
ஆடு தெய்வமென் றாம்பல சிற்பமென் றாவரே
கோடி வட்டமென் றாயொரு மண்டபம் கோவிலில்
நாடு வோர்வினை காணுவர் நாள்பட நையவே
பாடி யேதொழ மூவரும் சூழ்நனி பள்ளியே. ... 3
[ஆடு தெய்வம் = சஞ்சரிக்கும் தெய்வம்; மூவர் = சம்பந்தர், அப்பர், சுந்தரர்]
--ரமணி, 19/10/2015
*****
(தொடரும்)
திருநனிபள்ளி (இன்று புஞ்சை)
(கலித்துறை: ’தான தானன தானன தானன தானன’: ’மா கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்’ என்ற அமைப்பு.)
கட்டளை அடிகள்
அடியீற்றைத் தவிர மற்ற சீர்கள் நெடிலில் முடியா.
கூவிளம் வருமிடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளச்சீர் வருமிடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரலாம்.
சம்பந்தர்: 02.010.01
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20100
சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி வடமங் கலக்குடி
நீரின் மாமுனி வன்னெடுங் கைகொடு நீர்தனைப்
பூரித் தாட்டியர்ச் சிக்க விருந்த புராணனே.)
கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=265
http://www.shivatemples.com/sofct/sct043.php
பதிகம்
சம்பந்தர்: 02.084: காரைகள் கூகைமுல்லை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20840
அப்பர்: 04.070: முற்றணை யாயி னானை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40700
சுந்தரர்: 07.097: ஆதியன் ஆதிரையன் அயன்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=70970
சிவசிவா அவர்களின் பதிகம்:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/nayMqE8k7Vw%5B351-375%5D
காப்பு
(நேரிசை வெண்பா)
தந்தைமணக் கோலம் தனயனாய்க் கண்டுமகிழ்
எந்தை கணபதியே இன்னருள் - தந்தருள்வீர்!
கோட்டவி நாயகரே கும்பிட்டேன் ஈசனைப்
பாட்டிலே செய்திடப் பஃது.
பதிகம்
(கலித்துறை: ’தான தானன தானன தானன தானன’: ’மா கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்’ என்ற அமைப்பு.
ஆனை சுற்றிட வானது வுள்ளறை; ஆதியாய்
ஆன மூர்த்தியென் றேதிகழ் நற்றுணை யப்பராய்
பானு சோதியென் றேயரு ளீசனும் பாலையை
பானல் நெய்தலென் றேவரச் செய்நனி பள்ளியே. ... 1
[பானல் = கடல்]
அன்னை யாயிரு பர்வத புத்திரி அம்மனும்
இன்னு மாமலை யான்மடந் தையெனும் ஈச்வரி
நின்ற ருள்செய நைந்திடக் காணுவம் நீள்வினை
பன்ம வெண்பொடி பூண்டவ ருள்நனி பள்ளியே. ... 2
[பன்மம் = பஸ்மம் = விபூதி; பூண்டவருள் = பூண்டவரின் உள் (இடம்)]
ஆடு தெய்வமென் றாம்பல சிற்பமென் றாவரே
கோடி வட்டமென் றாயொரு மண்டபம் கோவிலில்
நாடு வோர்வினை காணுவர் நாள்பட நையவே
பாடி யேதொழ மூவரும் சூழ்நனி பள்ளியே. ... 3
[ஆடு தெய்வம் = சஞ்சரிக்கும் தெய்வம்; மூவர் = சம்பந்தர், அப்பர், சுந்தரர்]
--ரமணி, 19/10/2015
*****
(தொடரும்)
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பாமரர் தேவாரம்
திருநனிபள்ளி (இன்று புஞ்சை)
பொன்னி மாநதி மாமுனி பாத்திரம் பொங்கவே
முன்பு காக்கைக விழ்க்கருள் ஐங்கர முக்கணர்
சொர்ண தீர்த்தமென் னும்சுனை யில்லவர் தோயவே
பொன்செய் என்கிற பேரது புஞ்சையென் றாகுமே. ... 4
பஸ்வ மாங்கினி பேரினில் காவிரி பாயுமே
அஸ்த மித்திசை மேற்கெனப் போக்கினில் மாறுமே
வஸ்தி ரந்தரித் தேயருள் வள்ளலைக் காணவே
பஸ்தி சேர்த்தருள் ஈசனின் இல்நனி பள்ளியே. ... 5
[பஸ்தி = வளம்]
சுற்றில் தக்கணன் நான்முகன் பாவகி சூரியன்
மற்றும் சண்டிகை ஐங்கரன் சண்டிதன் வல்லவி
பற்றக் காலடி பற்றுவி னைத்தொகை பாழ்படும்
பற்ற ருத்தருள் பண்பனின் இல்நனி பள்ளியே. ... 6
[பாவகி = முருகன்; சண்டிதன் வல்லவி = சண்டிகேசர் தன் மனைவியருடன்;
வினைத்தொகை = முக்காலமும் சேர்கின்ற வினைகளின் தொகை]
கோல மாயுரு மேவிடும் தேவரின் கோவிலில்
கால னையுதை காரணன் பூரணன் காட்சியில்
ஓல மாமனம் உட்புறம் தோய்ந்திடும் ஓய்வெனப்
பாலை நெய்தலென் றாகிய ஊர்நனி பள்ளியே. ... 7
--ரமணி, 20/10/2015
*****
(தொடரும்)
திருநனிபள்ளி (இன்று புஞ்சை)
பொன்னி மாநதி மாமுனி பாத்திரம் பொங்கவே
முன்பு காக்கைக விழ்க்கருள் ஐங்கர முக்கணர்
சொர்ண தீர்த்தமென் னும்சுனை யில்லவர் தோயவே
பொன்செய் என்கிற பேரது புஞ்சையென் றாகுமே. ... 4
பஸ்வ மாங்கினி பேரினில் காவிரி பாயுமே
அஸ்த மித்திசை மேற்கெனப் போக்கினில் மாறுமே
வஸ்தி ரந்தரித் தேயருள் வள்ளலைக் காணவே
பஸ்தி சேர்த்தருள் ஈசனின் இல்நனி பள்ளியே. ... 5
[பஸ்தி = வளம்]
சுற்றில் தக்கணன் நான்முகன் பாவகி சூரியன்
மற்றும் சண்டிகை ஐங்கரன் சண்டிதன் வல்லவி
பற்றக் காலடி பற்றுவி னைத்தொகை பாழ்படும்
பற்ற ருத்தருள் பண்பனின் இல்நனி பள்ளியே. ... 6
[பாவகி = முருகன்; சண்டிதன் வல்லவி = சண்டிகேசர் தன் மனைவியருடன்;
வினைத்தொகை = முக்காலமும் சேர்கின்ற வினைகளின் தொகை]
கோல மாயுரு மேவிடும் தேவரின் கோவிலில்
கால னையுதை காரணன் பூரணன் காட்சியில்
ஓல மாமனம் உட்புறம் தோய்ந்திடும் ஓய்வெனப்
பாலை நெய்தலென் றாகிய ஊர்நனி பள்ளியே. ... 7
--ரமணி, 20/10/2015
*****
(தொடரும்)
- Sponsored content
Page 18 of 20 • 1 ... 10 ... 17, 18, 19, 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 18 of 20
|
|