புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
19 Posts - 50%
heezulia
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
1 Post - 3%
Guna.D
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
17 Posts - 4%
prajai
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
9 Posts - 2%
Guna.D
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
4 Posts - 1%
Jenila
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
4 Posts - 1%
jairam
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி


   
   

Page 1 of 2 1, 2  Next

saranya karnan
saranya karnan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 31/03/2013

Postsaranya karnan Fri Jan 24, 2014 2:01 pm

என் பெயர் சரண்யா பிறந்த தேதி 28.8.1993 இரவு 2.52 க்கு பிறந்தேன் உத்திராடம் நட்சத்திரம் மகரம் ராசி . நான் ரொம்ப நாள் வேலை தேடுகிறேன் வேலை கிடைக்கவில்லை . எந்த விசயத்திலும் தடங்கல் .எனக்கு வேலை கிடைக்குமா .எந்த மாறி துறையில்உதவுங்களேன்

baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Sat Jan 25, 2014 6:58 am

ஈகரையில் கேட்டது கெடைக்கும் கவலை வேண்டாம் தோழி...

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Jan 25, 2014 9:29 am

உறவுகள் தெரிந்ததை கூறுவார்கள் தோழி காத்திருங்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 25, 2014 10:45 am

saranya karnan wrote:என் பெயர் சரண்யா பிறந்த தேதி 28.8.1993 இரவு 2.52 க்கு பிறந்தேன் உத்திராடம் நட்சத்திரம் மகரம் ராசி . நான் ரொம்ப நாள் வேலை தேடுகிறேன் வேலை கிடைக்கவில்லை . எந்த விசயத்திலும் தடங்கல் .எனக்கு வேலை கிடைக்குமா .எந்த மாறி துறையில்உதவுங்களேன்
1993 என்றால் இப்ப உங்களுக்கு 21 வயது தானே ஆகிறது அதற்குள் இந்த அளவிற்கு என் வருத்தபடுறீங்க. தொடர்ந்த முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 25, 2014 2:03 pm

வாரந்தோறும் புதன் கிழமை வரும் ஹிந்து நாளிதழில் ஏகப்பட்ட ஜாப் வேகன்சிஸ் தனி பேஜ் ஆக வரும் அதில் பாருங்கள் உங்களுக்கு ஏற்ற வேலை கண்டிப்பாய் கிடைக்கும்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 25, 2014 3:11 pm

பன்னிரெண்டு ராசிகளிலேயே ஆழமான, அகலமான ராசி மகரம். அனைத்துத் துறைகளைப் பற்றிய அறிவையும் பெற்றிருப்பீர்கள். தெரியாததை தெரிந்தது போலவும், தெரிந்ததை தெரியாதது போலவும் காட்டி, சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்வீர்கள். இதனாலேயே நீங்கள் வெற்றியும் பெறுவீர்கள்; உங்களை யாராலும் அழிக்க முடியாது. ஆனால், உங்களுக்கு நீங்கள்தான் எதிரி என்பதை மறந்து விடாதீர்கள். இலக்கை அடையும் வரை வேகமாக ஓடும் நீங்கள், அடைந்தவுடன் ஏற்படும் அலட்சியத்தால் அடைந்ததை இழந்து மீண்டும் பெறுவீர்கள்.

வேலை பார்த்துக் கொண்டே வியாபாரம் செய்வதில் வல்லவர்கள் நீங்கள். எந்தத் தொழிலாக இருந்தாலும் அதன் ஆணிவேர் முதல் நுனி இலை வரை பதம் பார்த்துவிட்டுத்தான் குதிப்பீர்கள். அதனால் எதைத் தொட்டாலும் ஜெயித்துக் காட்டுவீர்கள். ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தால் நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும், கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் இருப்பீர்கள். உங்களைப் போன்று களப்பணி யாராலும் செய்ய முடியாது. அதிலும் பயணம் செய்தபடியே வேலை செய்வது மிகவும் பிடிக்கும்.

உங்களின் உத்யோக ஸ்தானத்திற்கு துலாச் சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், தராசு சின்னத்தைத் தாங்கியிருப்பதாலும், எப்போதும் வியாபாரச் சிந்தனையோடு இருப்பீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் கூட, ‘வேலைக்குப் போகிறோம், சம்பளத்தை வாங்குகிறோம்’ என்று இல்லாமல், கம்பெனியின் லாப நஷ்டக் கணக்குகளை தெரிந்து வைத்திருப்பீர்கள். ‘‘இதுபோல நாம ஒரு தொழிலை ஆரம்பிச்சோம்னா பெரிய ஆள் ஆகறதுக்கு எத்தனை வருடமாகும்’’ என்று மனக்கணக்கும் போடுவீர்கள். துலாச் சுக்கிரன் பத்தாம் இடத்திற்கு அதிபதியாக வருவதால், மேலிடத்திற்கு யதார்த்தமான ஆலோசனைகளை சொல்லிக் கொண்டிருப்பீர்கள்.

புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்திருந்தாலும், குடும்பத் தொழில், கூட்டாளிகளோடு கூட்டு வியாபாரம், கைத்தொழில் என்று நிறைய கற்று வைத்திருப்பீர்கள். கடைசி வரை ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வூதியம் வாங்குபவர்கள் உங்களில் ஒரு சிலரே. எந்த வேலையை செய்தாலும், அதில் ஒரு நேர்த்தி இருக்கும்; முழுமை இருக்கும். உங்களுக்கு களத்திரகாரகனாக சுக்கிரன் இருப்பதால், திருமணத்திற்குப் பிறகுதான் அதிக சம்பளத்துடன் கூடிய கௌரவமான உத்யோகம் கிடைக்கும். ‘உத்யோகமா... வியாபாரமா... முதலாளியா... தொழிலாளியா...’ என்கிற போராட்டங்கள் வெகு வருடங்கள் உள்ளுக்குள் இருக்கும். இதனாலேயே பல வேலைகளில் உங்கள் நிலை திரிசங்கு சொர்க்கம்தான். எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்; அதனாலேயே வேலையை இழந்தாலும் கவலைப்பட மாட்டீர்கள். ‘மகரத்தார் நகரத்தை ஆள்வார்’ என்பது பழமொழி. அதுபோல உங்களில் பெரும்பாலானோருக்கு நல்ல நிர்வாகத்திறன் இருக்கும். மகரம் என்பது கடல் வீடு. கடலலை எப்படி அடுத்தடுத்து வந்து முட்டுமோ, அதுபோல மனதிற்குள் புதுப்புது ஆலோசனைகள் வந்தபடி இருக்கும்.

பத்தாம் இடமான வேலை மற்றும் கர்ம தர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். மத்திம வயதுக்குப்பிறகு சொந்தத் தொழிலில் இறங்குவீர்கள். நிறைய பேர் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் லாபம் சம்பாதிப்பீர்கள். பணமும், புகழும் சேர்ந்து எங்கு அதிகம் புழங்குகிறதோ, அங்குதான் வேலை பார்ப்பீர்கள்; உயர் பதவியில் அமருவீர்கள். சுக்கிரனால் கலைத்துறையோடு எப்போதும் நெருங்கி இருப்பீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். மேலும், சம்பாத்தியத்தோடு சேர்ந்து லாபமும் இருப்பதால் லாப ஸ்தானத்தையும் பார்க்கலாம். உங்களின் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருவதால் மூத்த சகோதரரோடு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். அதேசமயம் பங்குதாரர்களோடு தொழில் செய்யும்போது, பேச்சு பேச்சாக இருக்க வேண்டும்; பேப்பரில் எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்க வேண்டும் என்று தீர்மானமாக இருங்கள்.

உத்திராட நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கொஞ்சம் கோபக்காரர்களாகவும் நேர்மையாளர்களாகவும் இருப்பீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் நெருப்பாக இருப்பீர்கள். மேலதிகாரியே சொன்னாலும் தவறு செய்ய அஞ்சுவீர்கள். மேலிடத்தை அனுசரித்துப் போகாதிருப்பதால் பல சறுக்கல்களை சந்திப்பீர்கள்.

மகர ராசிக்குள் வரும் உத்திராடம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் பெட்ரோ கெமிக்கல், எரிபொருள், வனத்துறை அதிகாரி, தோட்டக்கலை, சுரங்கத்துறை, மருந்து கம்பெனி, சுகாதாரத்துறை, சரும நோய் மருத்துவர், இ.என்.டி. டாக்டர், கனிம, கரிமத்துறை, சினிமாவில் கேமராமேன், நடிகர் என்று பல துறைகளில் கால் பதிப்பீர்கள். வியாபாரமெனில் லாட்ஜ், ஹோட்டல், பெட்ரோல் பங்க், மீன் பண்ணை, சினிமா ரெக்கார்டிங் ஸ்டூடியோ, டிராவல்ஸ் அண்ட் டூர்ஸ், காய்கனி கடை, பருப்பு மண்டி, கட்டிட வேலைகளுக்கான பொருட்கள் விற்பனை என்று வளமாக வாழ்வீர்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் பத்திரப் பதிவுத் துறை, வருவாய்த்துறை, கருவூலம், கார் மெக்கானிக், போக்குவரத்துக் கழகம், வனவிலங்கு சரணாலயம், இரும்பு உருக்காலை, மீன் பிடித்தல், படகு கட்டுமிடம் என்று பல்வேறு இடங்களில் வேலை பார்ப்பீர்கள்.

வியாபாரமெனில், அச்சுத் தொழில், சிமென்ட் தொழில், கல் குவாரி, பாத்திரக் கடை, இரும்புக் கடை, எண்ணெய் கம்பெனி, ரியல் எஸ்டேட், பியூட்டி பார்லர், இறைச்சிக் கடை, டிபன் கடை, நெடுஞ்சாலையோர உணவகம் என்று ஈடுபட்டால் வெற்றி பெறலாம். நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் வங்கி, மெரைன் எஞ்சினியர், கப்பல் படை, நெடுஞ்சாலைத்துறை, ஆங்கில ஆசிரியர், கடன் வாங்கித் தரும் ஏஜென்ட், ஆயுள் காப்பீட்டுக் கழகம், வக்கீல், குழந்தை நல மருத்துவர், மனநல மருத்துவர், சூரிய சக்தி மின்சார சாதனங்கள் தயாரிக்கும் கம்பெனியில் பணி, அனல் மின் நிலையம், இந்து அறநிலையத்துறை என்ற துறைகளில் வேலை பார்ப்பீர்கள். வியாபாரமெனில், திருமணத் தகவல் மையம், பழச்சாறு கடை, புத்தகக் கடை, திருமண அழைப்பிதழ் அச்சிட்டு விற்பவர், புத்தக வெளியீட்டாளர், தங்க முலாம் பூசுதல், மரக் கடை, கடல் உணவகம் என்று தொடங்கினால் வெற்றி பெறலாம்.

நன்றி: http://astrology.dinakaran.com



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 25, 2014 3:34 pm

ஜோசியம் சொல்லிட்டிங்க செந்தில்.ஆனா இதெல்லாம் உண்மையா நடக்குமா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 25, 2014 3:38 pm

ஜாஹீதாபானு wrote:ஜோசியம் சொல்லிட்டிங்க செந்தில்.ஆனா இதெல்லாம் உண்மையா நடக்குமா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

அவங்க ஜோதிட ரீதியில் கேள்வி கேட்டதால், நானும் அதே முறையில் பதில் சொல்லி இருக்கேன். நடக்குமா? நடக்காதா என்றெல்லாம் கேட்டால், எனது பதில்,

நம்மால் முடியும் என்று
நம்பிக்கையோடு
தோல்வி வந்தாலும்
வெற்றியை நோக்கி நடந்தால்
எதுவும் நடக்கும்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 25, 2014 3:59 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:ஜோசியம் சொல்லிட்டிங்க செந்தில்.ஆனா இதெல்லாம் உண்மையா நடக்குமா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

அவங்க ஜோதிட ரீதியில் கேள்வி கேட்டதால், நானும் அதே முறையில் பதில் சொல்லி இருக்கேன். நடக்குமா? நடக்காதா என்றெல்லாம் கேட்டால், எனது பதில்,

நம்மால் முடியும் என்று
நம்பிக்கையோடு
தோல்வி வந்தாலும்
வெற்றியை நோக்கி நடந்தால்
எதுவும் நடக்கும்

 ஆமோதித்தல் ஆமோதித்தல் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 25, 2014 4:07 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:ஜோசியம் சொல்லிட்டிங்க செந்தில்.ஆனா இதெல்லாம் உண்மையா நடக்குமா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

அவங்க ஜோதிட ரீதியில் கேள்வி கேட்டதால், நானும் அதே முறையில் பதில் சொல்லி இருக்கேன். நடக்குமா? நடக்காதா என்றெல்லாம் கேட்டால், எனது பதில்,

நம்மால் முடியும் என்று
நம்பிக்கையோடு
தோல்வி வந்தாலும்
வெற்றியை நோக்கி நடந்தால்
எதுவும் நடக்கும்

 ஆமோதித்தல் ஆமோதித்தல் 

சுகமான வாழ்வது - நான் வாழ்ந்திருக்கிறேன்,
கஷ்டத்தையும் கண்டிருக்கிறேன்
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற
உயரிய தத்துவத்தையும்
அனுபவித்திருக்கிறேன்
ஆதலால் நம்பிக்கையோடு
போராடினால் வெற்றி நிச்சயமே,..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக