புதிய பதிவுகள்
» ஆதாமிடம் சமவுரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Today at 1:05 am

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Today at 12:18 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Yesterday at 11:33 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by சிவா Yesterday at 10:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Yesterday at 7:13 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by சிவா Yesterday at 6:35 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Yesterday at 5:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:57 pm

» கருத்துப்படம் 23/03/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 22, 2023 4:12 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm

» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm

» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm

» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
46 Posts - 64%
T.N.Balasubramanian
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
18 Posts - 25%
mohamed nizamudeen
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
3 Posts - 4%
Dr.S.Soundarapandian
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
3 Posts - 4%
venkat532
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
1 Post - 1%
கோபால்ஜி
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
458 Posts - 66%
T.N.Balasubramanian
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
108 Posts - 16%
Dr.S.Soundarapandian
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
66 Posts - 10%
mohamed nizamudeen
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
25 Posts - 4%
Dhivya Jegan
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
4 Posts - 1%
eraeravi
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
4 Posts - 1%
Kannasme
உணவு யுத்தம்! Poll_c10உணவு யுத்தம்! Poll_m10உணவு யுத்தம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

உணவு யுத்தம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2407
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 22, 2014 7:42 am

ஜூனியர் விகடன் இதழில் வெளியாகும் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதும் தொடர் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:-

எனது மகனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சென்னையில் உள்ள பன்னாட்டு உணவகம் ஒன்றுக்குப்போயிருந்தேன். விடுமுறை நாள் என்பதால் காத்திருந்து இடம்பிடித்துச் சாப்பிட உட்கார்ந்தோம். மெனுகார்டு கைக்கு வந்தது. புரட்டிபுரட்டிப் பார்த்தேன்.

எனக்குத்தெரிந்த ஒரு உணவின் பெயர்கூட அதில் இல்லை. ஸ்பெகட்டி, சரமுரா, அல்பஸ்தா, க்ரோகுயிட், பேகட் என மாத்திரைப் பெயர்களைப்போல உணவின் பெயர்கள் பயமுறுத்தின. இதில் எந்த உணவைச் சாப்பிடுவது எனத்தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தபோது பிள்ளைகள் அவர்களாக சில உணவுகளைத் தேர்வு செய்தனர்.

இதை எல்லாம் எங்கே சாப்பிடப்பழகினார்கள்? யார் இவர்களுக்கு அறிமுகம் செய்தனர்? என்னைப்போலவே அன்றாடம் வீட்டில் இட்லியும் பொங்கலும் சோறும் சாம்பாரும்தானே சாப்பிடுகிறார்கள், அவர்களுக்கு இதையெல்லாம் யார் அறிமுகப்படுத்தியது என்று வியப்போடு அவர்களைப்பார்த்தபடி, ‘எப்படித்தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டேன். ‘டிவி விளம்பரத்தில் காட்டுவார்கள்; என்றனர். நாம் என்ன சாப்பிடவேண்டும் என்பதை டிவி முடிவு செய்கிறது. இதுதான் காலக்கொடுமை.

பிள்ளைகளிடம் உணவு எப்படி இருக்கிறது என்று கேட்டேன். இப்போதுதான் நாங்களும் முதன்முறையாகச் சாப்பிடுகிறோம். என்னவோ போல் இருக்கிறது என்றார்கள். அதற்கு அர்த்தம் பிடித்திருக்க்வும் இல்லை; பிடிக்காமல் போகவும் இல்லை.

நான்கு பேர் சாப்பிட்ட இரவு உணவுக்கு 6500 ரூபாய். அந்த பில்லை உற்றுப்பார்த்தபடி இருந்தேன். கணக்குப்பார்க்காதே என்பது போல் பிள்ளைகள் திரும்பி பார்த்தார்கள். உணவகத்தில் பில்லை சரிபார்ப்பது அநாகரிகமான் செயல் என இந்தத் தலைமுறையினர் ஏன் நினைக்கிறார்கள்.

6500 ரூபாய்க்கு ஒரு வேளை உணவு. அடித்தட்டுக்குடும்பம் ஒன்று ஒரு மாதம் சாப்பிடுவதற்கான தொகை இது. உணவின் பெயரால் நடக்கும் கொள்ளையை ஏன் அனுமதிக்கிறேன் என்று மனச்சாட்சி கேட்டுக்கொண்டேயிருந்தது.
(தொடரும்)


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 22, 2014 3:56 pm

6500 ரூபாய்க்கு ஒரு வேளை உணவு. அடித்தட்டுக்குடும்பம் ஒன்று ஒரு மாதம் சாப்பிடுவதற்கான தொகை இது. உணவின் பெயரால் நடக்கும் கொள்ளையை ஏன் அனுமதிக்கிறேன் என்று மனச்சாட்சி கேட்டுக்கொண்டேயிருந்தது. wrote:

நல்ல பதிவு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 3:58 pm

அதுலயும் அத்தோ,மொய்மொ குய்மொன்னு என்னென்னமோ பேர்ல எப்டித்தான் தின்றாங்களோ?..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 5:04 pm

ரா.ரா3275 wrote:[link="/t110417-topic#1065228"]அதுலயும் அத்தோ,மொய்மொ குய்மொன்னு என்னென்னமோ பேர்ல எப்டித்தான் தின்றாங்களோ?..

சும்மா ஒரு பெருமைக்குத்தான் சேகரன், எதுக்கு பன்னாட்டு உணவகத்துக்கு போகணும் கரேன்? அது வெளிநாட்டவா இங்கு வரும்போது சாப்பிடத்தானே ? இங்கிருந்து அமெரிக்க போனாலும் நம் சாப்பாட்டை தேடித்தேடி சாப்பிடும் நம் ஆட்கள் இங்கு எதுக்கு அங்கெல்லாம் போகணும்? சொல்லுங்கோ ? புன்னகை

போவானேன் அப்புறம் அவாளை குத்தம் சொல்வானேன் ? அங்கு போக 'dress code ' குட இருக்குமே? அத சொல்லலியே அவர் புன்னகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 22, 2014 6:30 pm

டை கட்டி
மெனு நீட்டி
பணம் அள்ளும் கூட்டம்
- கையேந்தி பவனே துணை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2407
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 22, 2014 10:34 pm

krishnaamma wrote:சும்மா ஒரு பெருமைக்குத்தான் சேகரன், எதுக்கு பன்னாட்டு உணவகத்துக்கு போகணும் கரேன்? அது வெளிநாட்டவா இங்கு வரும்போது சாப்பிடத்தானே ?

பன்னாட்டு உணவகத்துல மட்டும் இல்ல...உள்நாட்டு உணவகத்துலயும் இதே கதைதான். நம்ம ஆளுங்களுக்கு நம்ம மொழியில சொன்னா எதுவும் பிடிக்காது.

சாம்பார் சாதம் தயிர் சாதம்னு சொன்னா பிடிக்காது...பிஸிபேலாபாத் பகாளாபாத்னு சொல்லிப்பாருங்க. நல்லாயிருக்கும்னு சொல்லுவான்.
உலகிலேயே 'தன்பெருமை தெரியாத அறிவிலிகள்' தமிழர்கள் மட்டும்தான்.


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 10:38 pm

சாமி wrote:[link="/t110417-topic#1065274"]
krishnaamma wrote:சும்மா ஒரு பெருமைக்குத்தான் சேகரன், எதுக்கு பன்னாட்டு உணவகத்துக்கு போகணும் கரேன்? அது வெளிநாட்டவா இங்கு வரும்போது சாப்பிடத்தானே ?

பன்னாட்டு உணவகத்துல மட்டும் இல்ல...உள்நாட்டு உணவகத்துலயும் இதே கதைதான். நம்ம ஆளுங்களுக்கு நம்ம மொழியில சொன்னா எதுவும் பிடிக்காது.

சாம்பார் சாதம் தயிர் சாதம்னு சொன்னா பிடிக்காது...பிஸிபேலாபாத் பகாளாபாத்னு சொல்லிப்பாருங்க. நல்லாயிருக்கும்னு சொல்லுவான்.
உலகிலேயே 'தன்பெருமை தெரியாத அறிவிலிகள்' தமிழர்கள் மட்டும்தான்.

சரியான சவுக்கு சொடுக்கு இது சாமி...

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2407
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri May 23, 2014 6:00 am

2. உணவு யுத்தம்! LTJlFnZRhiiAJw4MZHIG+ht2093

வீட்டுக்குப்போய் பழைய சோறும் தயிரும் ஊறுகாயும் சாப்பிடவேண்டும் என்று பசி இழுத்துக் கொன்டிருந்தது. வீட்டுக்கு வந்து சோறும் தயிறும் சாப்பிட்ட போது பிள்ளைகள், “உங்களை எல்லாம் பன்னாட்டு உணவகத்துக்கு அழைத்துப்போனது வீண். நீங்கள் இட்லி சாப்பிடத்தான் லாயக்கு” என்று கேலி செய்து சிரித்தார்கள்.

இட்லி சாப்பிடுகிற மனிதன் ஏன் இளக்காரமாகப் பார்க்கப்படுகிறான். இட்லி, சோறு, களி, கம்பங்கூழ், குதிரைவாலிச்சோறு என்று அவரவர் வாழ்விடத்தில் கிடைத்த உணவுகள் ஏன் இன்று பரிகசிக்கப்படும் உணவாக மாறிப்போய்விட்டன?

சோறு என்ற சொல்லை சென்னையில் பெரும்பாலும் பயன்படுத்துவதே இல்லை. ரைஸ் என்றுதான் கேட்கிறார்கள். சாப்பிடுகிற சோறை சொல்வதற்கு கூசுகிற மனிதனை எப்படிப்புரிந்து கொள்வது?
சோறு என்பதற்கு
அடிசில்,
கூழ்,
அழினி,
அவிழ்,
கொன்றி,
நிமிரல்,
புழுங்கல்,
பொம்மன்,
மிதவை

எனப்பல சொற்கள் தமிழில் உள்ளன.

நீர்கலந்த சோற்றுப்பருக்கையை கஞ்சி என்கிறோம். கஞ்சிக்கு காடி, மோழை, சுவாகு என்னும் மூன்று வேறு சொற்களைக்கூறுகிறது பிங்கல நிகண்டு. ஊன்சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்ச்சோறு, மெல்லடை, கும்மாயம், ஊன்துவை அடிசில், புளியங்கூழ் என பழந்தமிழ் மக்கள் சாப்பிட்ட உணவுகள் என்னவென்று கூட இன்றைய தமிழருக்குத் தெரியாது.

உணவு யுத்தம்! Y79aVcHwTpCSKijpeoEn+idli

இட்லி சாப்பிடுவதால் உள்ள நன்மை இளந்தலைமுறைக்குத் தெரியாது. அது ஆவியில் வேகும் எளிமையான உணவு. அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊற வைத்து அரைத்து, மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம். இதனால் உடலுக்குத்தேவையான தாது உப்புகளும் அமினோ அமிலங்களும் கிடைக்கின்றன.

திசுக்களைப்புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும், சிறுநீரக செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் 10 மடங்கும் அதிகரிக்கின்றன. உலகின் மிகச்சிறந்த காலை உணவில் இட்லி சிறந்த ஒன்றாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

இன்று கடைகளில் உடனடி இட்லி, தோசை மாவு விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில் சில நிறுவனங்கள் மாவு புளித்துப்போகாமல் இருக்க போரிக் ஆசிட் மற்றும் ஆரூட் மாவு கலக்கிறார்கள்.

உணவுப்பழக்கம் தானாக மாறவில்லை. அதைத்திட்டமிட்டு மாற்றுகிறார்கள். உணவுச்சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளை அடிப்பதற்காக புதிய உணவு ரகங்களை அதன் நன்மை தீமை பற்றி எவ்விதமான கவலையும் இன்று விற்றுத்தள்ளுகிறார்கள். காலனி ஆதிக்கம் தொடங்கி வைத்த இந்த மோசடி இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.

இன்று உணவு வெறும் சாப்பாட்டு விசயம் இல்லை. அது பெரிய சந்தை. கோடி கோடியாக பணம் புரளும் பன்னாட்டு விற்பனைக்களம். நாம் என்ன சாப்பிடவேண்டும் என்பதை அமெரிக்காவில் உட்கார்ந்து தீர்மானிக்கிறான். உணவு குறித்து விதவிதமான பொய்களைப் பரப்புகிறார்கள். நகரம், கிராமம் என பேதமில்லாமல் ஜங்க்ஃபுட் எனப்படும் சக்கை உணவுகள் ஆக்கிரமித்துவிட்டன.

உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் ஏமாற்றப்படுகிறோம்.

(தொடரும்)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8292
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 24, 2014 12:53 pm

உணவு யுத்தம்! 103459460 உணவு யுத்தம்! 1571444738 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக