புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
3 Posts - 3%
prajai
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
3 Posts - 3%
manikavi
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
2 Posts - 2%
Rutu
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
216 Posts - 42%
heezulia
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
18 Posts - 3%
sugumaran
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
6 Posts - 1%
manikavi
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
prajai
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
கிரிக்கெட் செய்திகள் Poll_c10கிரிக்கெட் செய்திகள் Poll_m10கிரிக்கெட் செய்திகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் செய்திகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 10, 2014 4:47 pm

முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸை வாட்டி வதைத்த நியூசிலாந்து

கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 508 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் 2ஆம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.

2ஆம் நாளான நேற்று 240/2 என்று துவங்கியது நியூசிலாந்து. கேன் வில்லியம்சன் 105 ரன்களுடனும், டெய்லர் 34 ரன்களுடனும் துவங்கினர்.

வில்லியம்சன் 113 ரன்கள் எடுத்து சுலைமான் பந்தில் பவுல்டு ஆனார். 55 ரன்கள் எடுத்த ராஸ் டெய்லர் ஷில்லிங்போர்ட் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

கேப்டன் மெக்கல்லம் இறங்கி 7 ரன்களில் சுலைமான் பென்னிடம் வீழ்ந்தார். 279/5 என்று ஆனது நியூசீலாந்து.

அதன் பிறகுதான் வெஸ்ட் இண்டீஸுக்கு தலைவலி துவங்கியது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் சதம் எடுத்த ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் மற்றும் விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆகியோர் இணைந்தனர்.

மட்டைக்குச் சாதகமான ஆட்டக்களத்தில் இவர்கள் இருவரும் அபாரமாக ஆடினர். இதில் யாராவது ஒருவரை உடனடியாக வீழ்த்தியிருந்தால் 350 ரன்களுக்குள் நியூசீலாந்தை அடக்கியிருக்கலாம். ஆனால் விதி யாரை விட்டது.

அடுத்த 60 ஓவர்களுக்கு விக்கெட்டே விழவில்லை. ஜேம்ஸ் நீஷம் 107 ரன்களை விளாச, வாட்லிங் 89 ரன்களை எடுத்தார். இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்காக 201 ரன்களைச் சேர்க்க ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் கையை விட்டுச் சென்றது.

கிறிஸ் கெய்ல் விளையாடும் 100வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் இனி வெல்வது கடினம். மேலும் தோற்காமல் இருந்தால் சரி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தன் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் கண்ட 8வது வீரர் என்ற பெருமையை எட்டினார் ஜேம்ஸ் நீஷம். மொத்தம் 174.3 ஓவர்கள் வீசி நொந்து நூலானது வெஸ்ட் இண்டீஸ். கடைசியில் டிம் சவுதீ இறங்கி 7 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க மெக்கல்லம் டிக்ளேர் செய்து வெஸ்ட் இண்டீஸுக்கு பரிவு காட்டினார்.

அதன் பிறகு கெய்ல், போவெல் ஜோடி இறங்கி 9 ஓவர்களைத் தாக்குப் பிடித்து விக்கெட் இழக்காமல் 19 ரன்கள் எடுத்தனர்.

கெய்ல் 100வது டெஸ்ட்டில் சதம் எடுப்பாரா இன்று என்பதே இந்த டெஸ்ட் போட்டியில் எஞ்சியுள்ள ஒரே சுவாரசியம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 10, 2014 4:49 pm

ஐசிசி-யை பிசிசிஐ மிரட்டியதாகக் கூறியது பெரிய நகைச்சுவை என்கிறார் முன்னாள் ஐசிசி தலைவர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் சஞ்சய் படேல் ஐசிசியை தங்கள் வழிக்குக் கொண்டுவர இன்னொரு ஐசிசி-யை அமைப்போம் என்று மிரட்டியதாகக் கூறியிருப்பது பெரிய நகைச்சுவை என்று முன்னால் ஐசிசி தலைவர் ஈஷான் மானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் கூறுகையில்,

“நான் எனது சொந்த அனுபவத்திலிருந்து ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறேன். நான் ஐசிசி தலைவராக இருந்தபோது ஒரு நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐசிசி நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டோம் என்று அச்சுறுத்தியது. நான் அப்போது ஐசிசி-யின் மற்ற வாரிய உறுப்பினர்களை ஒன்று சேர்த்தேன், இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் நாட்டு வாரியங்களும் உண்டு. இவர்களிடம் நிலைமை பற்றி பேசினேன், அதன் பிறகு இவர்களே அந்த குறிப்பிட்ட கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி-யின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்க முடியும் என்றும் உங்கள் இஷ்டத்திற்கு முறித்துக் கொள்ள முடியாது என்றும் அறிவுறுத்தினர்.

மற்ற உறுப்பினர்கள் இவ்வாறு திட்டவட்டமாகக் கூறியவுடன் ‘அந்தக் குறிப்பிட்ட நாட்டு கிரிக்கெட் வாரியம்’தன் நிலையை உணர்ந்து கொண்டது” என்றார்.

மேலும், இப்போது தான் ஐசிசி தலைவராக இருந்திருந்தால், பிசிசிஐ மிரட்ட்லை எப்படி எதிர்கொண்டிருப்பார் என்று கூறினார் அவர். முதலில் அதன் நிலைப்பாடு என்ன என்பதை எழுத்தில் கேட்டிருப்பார் என்றும், மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் உறுதியாக இருக்கச் செய்து பிசிசிஐ-யின் மிரட்டலை ஒன்றுமில்லாதது என்று அவர் உலகிற்கு எடுத்துக் காட்டியிருப்பார் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வாரியங்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மிரட்டியதை உண்மையென நினைத்து பதட்டம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆட்டத்தின் நன்மையையே பெரிதாகக் கருதியிருக்க வேண்டும். மாறாக அவர்களும் சேர்ந்து கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மோசமான ஒன்றைச் செய்துள்ளனர்.

இந்திய மக்கள் பிசிசிஐ-யின் இந்தச் செயல்பாட்டை ஏற்கப்போவதில்லை. கிரிக்கெட் உலகிற்கு நிறைய வருவாயை இந்திய கிரிக்கெட் ஈட்டித் தருகிறது என்பது உண்மைதான், ஆனால் உலக கிரிக்கெட்டின் அந்த வருவாய்களுக்கு பிசிசிஐ தங்களை ஏதோ முதலாளிகள் போல் கருதுவதை இந்திய மக்கள் ஏற்கமாட்டார்கள். இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு. இந்தியா நன்றாக விளையாட வேண்டும் என்றே அவர்கள் விரும்புவர்.

இந்திய கிரிக்கெட்டிற்கு ஸ்பான்சர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் பெரிய வருவாயை ஈட்டித் தருகின்றனர். இதற்கும் பிசிசிஐ-க்கும் என்ன தொடர்பு? இந்திய கிரிக்கெட் பெரிய அளவுக்கு வருவாயைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்பதை நான் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன், ஆனால் அது பிசிசிஐ-யின் பணம் அல்ல.

70% வருவாய் இந்தியா மூலம் வருகிறது என்று கூறுகிறார் சஞ்சய் படேல் ஆனால் இந்தியா தொடர்ந்து ஜிம்பாவே, வங்கதேசம், நியூசீலாந்திலாந்து ஆகிய அணிகளுடன் ஆடினால் வருவாய் வந்து விடுமா? ஆகவே உயர்மட்ட அணிகளுக்கிடையே போட்டிகள் நடந்தால்தான் வருவாயும் குவியும். ஆகவே இந்திய கிரிக்கெட் அதிக வருவாயைக் கொண்டு வருகிறது என்றால் அது ஒருவழிப்பாதையல்ல அது இருவழிப்பாதை.

இவ்வாறு கடும் விமர்சனப்பார்வையை முன் வைத்துள்ளார் ஈஷான் மானி.



கிரிக்கெட் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 14, 2014 2:57 am

இந்திய-வங்கதேச ஒருநாள் தொடரை தொலைக்காட்சியில் பார்க்க முடியுமா?

ஜூன் 15ஆம் தேதி தொடங்கும் இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சியில் நேரலையாகக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த 3 போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை வங்கதேசத்தின் காஸி டிவி வாங்கியுள்ளது. இவர்கள் எந்த ஒரு இந்தியத் தொலைக்காட்சி நிறுவனத்துடனும் ஒளிபரப்பு ஒப்பந்தத்தில் இதுவரை ஈடுபடவில்லை.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மட்டும் ஆர்வம் காண்பித்தது. ஆனால் அது ரூ.5 கோடி மட்டுமே 3 போட்டிகளுக்கும் அளிப்பதாகக் கூறியுள்ளது.

இந்தத் தொகை நிச்சயம் குறைவானது என்று காஸி டிவி கருதுகிறது. சோனி தொலைக்காட்சி நிறுவனம் இந்தத் தொடரில் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் அது ஃபீபா உலகக் கோப்பை கால்பந்து ஒளிபரப்பு உரிமைகளை வாங்கியுள்ளது. அதனால் இந்தக் கிரிக்கெட் தொடர் நேரடி ஒளிபரப்பிற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறிவிட்டது.

இது குறித்து காஸி தொலைக்காட்சி அதிகாரி சலாஹுதீன் சவுத்ரி கூறுகையில், “ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மிகக் குறைந்த தொகைக்கு கேட்கிறது. பிசிசிஐ-க்கும் நியோ ஸ்போர்ட்ஸ் மற்றும் டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கும் பிரச்சனைகள் இருப்பதால் அவர்களுக்கு உரிமைகளை நாங்கள் விற்க முடியாது. ஆகவே அடுத்த 2 நாட்களில் ஏதாவது நடந்தால்தான் இந்திய ரசிகர்கள் இந்தப்போட்டிகளை நேரலையாகக் காண முடியும்”என்கிறார்.

உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் நாங்கள் ஒளிபரப்பாளர்களை முடிவு செய்துவிட்டோம், இந்தியாவில் மட்டும் இன்னும் முடியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.



கிரிக்கெட் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 14, 2014 2:57 am

200 ரன்கள் அடித்தார் ஜோ ரூட்; இங்கிலாந்து 575 ரன்கள் குவிப்பு

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 575 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

அந்த அணியின் இளம் வீரர் ஜோ ரூட் 200 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இரட்டைச் சதம் எடுக்கும் 3வது இளம் இங்கிலாந்து வீரர் ஆவார் இவர்.

மேலும் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸில் எடுக்கும் அதிகபட்ச ரன்கள் இது என்பது குறிப்பிடத் தக்கது.

முதல் நாளில் எடுத்த 344/5 என்ற ரன்களுடன் இன்று துவங்கியது இங்கிலாந்து. முதலில் 400 ரன்களை எட்டியது. சுமார் 27 டெஸ்ட் இன்னிங்ஸ்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி 400 ரன்களைப் பார்த்துள்ளது.

உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து ஆக்ரோஷமாக அதிரடியாட்டம் ஆடியது. இலங்கை பந்து வீச்சை மெதுவாக்கினாலும் 24 ஓவர்களில் 129 ரன்களை உணவு இடைவேளை வரை அடித்து நொறுக்கியது.

ஸ்டூவர்ட் பிராட் 38 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். இதில் 9 பவுண்டரிகள். பிளன்கெட் 39 ரன்களை எடுத்தார். ஜோ ரூட் உணவு இடைவேளைக்கு சற்று முன்னர் 150 ரன்களை எட்டினார்.

பெல் விக்கெட்டை நேற்று வீழ்த்தும்போது இங்கிலாந்து 120/4 என்று தட்டுத் தடுமாறியது. அதிலிருந்து ஆட்டத்தின் பிடியை இழந்தது இலங்கை. பிரையரை 86 ரன்கள் அடிக்கவிட்டது பெரும் தவறாக முடிந்தது. பிரையரும், ஜோ ரூட்டும் இணைந்து 40 ஓவர்களில் 171 ரன்களைச் சேர்த்தனர்.

இன்று 402/7 என்று ஆன போதும், பின்கள வீரர்களை விரைவில் வீழ்த்தமுடியாமல் இலங்கைத் திணறியது. அதன் பலன் ஜோ ரூட்டின் இரட்டைச் சதம் மற்றும் கடைசி 3 விக்கெட்டுகள் சேர்ந்து 173 ரன்களைச் சேர்த்ததும் ஆகும்.

இலங்கை தரப்பில் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, எரங்கா 163 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இடது கை ஸ்பின்னர் ரங்கன்னா ஹெராத்திற்கு நேரம் சரியில்லை. அவர் 37 ஓவர்களில் 136 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இலங்கை முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது. கருணரத்னவும், ஜே.கே.சில்வாவும் களமிறங்கியுள்ளனர்.



கிரிக்கெட் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 14, 2014 2:58 am

எங்களுக்கு நெருக்கடி ஒன்றுமில்லை-சுரேஷ் ரெய்னா

வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் இந்திய அணிக்கு எந்த ஒரு நெருக்கடியும் இல்லை என்று கேப்டன் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இன்று கொல்கத்தா வந்த சுரேஷ் ரெய்னா தி டெலிகிராப்பிற்கு கூறுகையில், “ஒரு நெருக்கடியும் இல்லை, நாங்கள் உண்மையில் மகிழ்ச்சியுடன்தான் வங்கதேசத்தை எதிர்கொள்கிறோம், சில வீரர்களுக்குத் தங்களை நிரூபிக்க இந்தத் தொடர் ஒரு அருமையான சந்தர்ப்பம்.

சிறிது உடற்பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகக் கூறிய ரெய்னா, சவுரவ் கங்கூலியை சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் குடும்பத்துடன் காஷ்மீர் சென்றதாகவும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே சென்றதாகவும் அவர் கூறினார். இது புத்துணர்வுட்டுவதாக உள்ளது என்கிறார் சுரேஷ் ரெய்னா.



கிரிக்கெட் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 14, 2014 2:59 am

2015 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறும் 2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளது.

2015 உலகக்கோப்பை ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி ஜான் ஹார்ன்டென் இது குறித்துக் கூறியதாவது:

பிப்ரவரி 15ஆம் தேதி அடிலெய்டில் நடைபெறும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

ஆஸ்திரேலியா ஒரு பெரிய பன்முகக் கலாச்சார நாடு. எப்போதுமே நான் இந்தியா, பாகிஸ்தான் விளையாடும் ஆட்டத்தை நேரில் காண்பேன்.

அதுபோலவே இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அவர்கள் சொந்த நாட்டில் இந்தப் போட்டியைப் பார்ப்பது போன்ற சூழலை உருவாக்குவோம்.

உலகின் சிறந்த போட்டித் தொடரான உலகக் கோப்பையை நடத்துகையில் நகரங்களை உயிரோட்டமாகச் செய்ய வேண்டியது எங்கள் கடமை. என்றார் அவர்.

2015, பிப்ரவரி 14ஆம் தேதி தொடக்கப் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியையும், நியூசிலாந்து, இலங்கையையும் எதிர்கொள்கிறது.



கிரிக்கெட் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 14, 2014 7:36 pm

கலக்குங்க தல .....

இங்கே கிரிக்கெட் ,அங்கே கால்பந்து பற்றிய திரி அருமை தல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 15, 2014 11:55 pm

ரஹானே, உத்தப்பா அபாரம்: வங்கதேசத்தை வென்றது இந்தியா

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி 273 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால், வெற்றி இலக்கு 26 ஓவர்களில் 150 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

ரஹானே மற்றும் உத்தப்பாவின் அபார ஆட்டத்தின் துணையுடன், இந்திய அணி 24.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சுரேஷ் ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணிக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி இது.

துவக்க ஆட்டக்காரர் உத்தப்பா 44 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். ரஹானே 70 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். புஜாரா ரன் ஏதும் எடுக்கவில்லை. ராயுடு ஆட்டமிழக்காமல் 16 ரன்களும், சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 15 ரன்களும் எடுத்தனர்.

முன்னதாக, இந்திய - வங்கதேச அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தின் மிர்பூரில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்தது.

ரஹீம், ஹசன் ஆகியோரின் அரைசதங்களின் துணையுடன், இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 272 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், இந்தியாவுக்கு 273 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க வீரர் தமீம் இக்பால் ரன் ஏதும் எடுக்காத நிலையில், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அனாமுல் ஹக்-குடன் ஜோடி சேர்ந்த மொமினுல் ஹக் 6 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர், அனாமுல் ஹக் - கேப்டன் முஷ்திவிகர் ரஹீம் இணை நிதானமாக பேட் செய்து, அணியை சரிவில் இருந்து மீட்டது. அனாமுல் ஹக் 44 ரன்களையும், ரஹீம் 59 ரன்களையும் எடுத்தனர்.

ஷாகிப் அல் ஹசனும் சிறப்பாக பேட் செய்து 52 ரன்கள் எடுத்து, வங்கதேச அணிக்கு உறுதுணை புரிந்தார். நாசர் ஹுசைன் 22 ரன்களைச் சேர்த்தார். ஜியாஹுர் ரஹ்மான் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். முஷாரப் மோர்டஸா 18 ரன்களில் அவுட் ஆனார். அப்துல் ரஸாக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 16 ரன்கள் எடுத்தார்.

இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரெசூல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அக்‌ஷர் படேல் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

கேப்டன் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட 7 முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் சுரேஷ் ரெய்னா தலைமையில் களமிறங்கியிருக்கிறது இந்திய அணி.

ராபின் உத்தப்பா, மனோஜ் திவாரி, பர்வீஸ் ரசூல், அக்ஷர் படேல், கேதார் ஜாதவ் ஆகியோர் தங்களின் திறமையை நிரூபிக்க இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பை போட்டியில் கழற்றி விடப்பட்ட ரெய்னா, ஐபிஎல் போட்டி யில் அபாரமாக ஆடியதன் மூலம் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிக ரன் குவித்தவரான உத்தப்பா இந்தத் தொடரில் சிறப்பாக ஆடும்பட்சத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவண் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



கிரிக்கெட் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 12:20 am

91 பந்துகளில் 295 ரன்கள்: அயர்லாந்தில் ராய் சில்வா சாதனை

அயர்லாந்து உள்நாட்டு அணிக்கு விளையாடிய இலங்கையைச் சேர்ந்த ராய் சில்வா 40 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 91 பந்துகளில் 295 ரன்கள் விளாசியுள்ளார்.

ராய் சில்வா, இவருக்கு வயது 34. கடந்த ஆண்டு வரை இவர் கொழும்பு கிரிக்கெட் கிளப் அணிக்கு விளையாடியவர். இவர்தான் 40 ஓவர் போட்டி ஒன்றில் 91 பந்துகளில் 295 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

அயர்லாந்து உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஓ’நீல்ஸ் அல்ஸ்டர் ஷீல்ட் தொடரில் கிளெண்டர்மாட் அணிக்கு ராய் சில்வா விளையாடினார்.

கிளிஃப்டன்வில் அணிக்கு எதிராக இவர் ஆடிய இந்த ஆட்டத்தில்தான் 91 பந்துகளில் 295 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 11 பவுண்டரிகள், 34 சிக்சர்கள் அடங்கும். அதாவது 248 ரன்களை இவர் பவுண்டரி வாயிலாக எடுத்துள்ளார்.

இவரது அணியான கிளெண்டர்மாட் 40 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 462 ரன்கள் எடுத்தது. சதத்தை 27 பந்துகளில் எடுத்த இவர் அடுத்த 64 பந்துகளில் 195 ரன்களை விளாசியுள்ளார்.

இவர் 13 ஆண்டுகளாக முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது



கிரிக்கெட் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 10:00 pm

வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட்: இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டிக்கான இந்திய அணியில் பர்வேஸ் ரசூல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற வங்கதேச அணி இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. அதன் படி துவக்க வீரர்களாக உத்தப்பாவும், ரகானேவும் களமிறங்கினர். முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்து ரகானே வெளியேற மூன்றாவது விக்கெட்டுக்கு புஜாரா களமிறங்கினார். இருவரும் வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை சந்திக்க சிரமப்பட்டனர். இந்த நிலையில் 6வது ஓவரின் போது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.

மழை நின்ற பின் ஆட்டத்திற்கான ஓவர்கள் 41 ஆக குறைக்கப்பட்டது. பின்னர் ஆட்டத்தின் 8வது ஓவரில் 14 ரன்களை எடுத்திருந்த உத்தப்பா டஸ்கின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ராயுடு வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். இதனால் ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் ரெய்னா களமிறங்கினார். அவர் மட்டுமே வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை அடித்து ஆடினார். இந்த நிலையில் ஆட்டத்தின் 14வது ஓவரில் புஜாரா டஸ்கின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழக்க கேப்டன் ரெய்னா மட்டும் 27 ரன்கள் குவித்து ரன் அவுட்டானார். கடைசியாக களமிறங்கிய உமேஷ் யாதவ் மட்டும் சற்று ஆறுதல் தரும் வகையில் ஆட்டத்தின் ஒரே ஒரு சிக்சர் அடித்து 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 25.3 ஓவர்களிலேயே இந்திய அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

106 ரன்கள் என்ற இலக்குடன் வங்கதேச அணி ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பாலும், அனாமுல் ஹக்கும் களமிறங்கினர். முதல் ஓவரின் 2வது பந்தில் அவுட்டாகி தமிம் நடையை கட்டினார். 3வது ஓவரில் அனாமல்லும் டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மிதுன் அலியும், முஷ்பிக்குர் ரஹிமும் சிறிது நேரம் பொறுமையாக விளையாடினார். எனினும் மிதுன் அலி 26 ரன்களுக்கும், ரஹிம் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க வங்கதேச அணி 58 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் ஸ்டூவர்ட் பின்னி 28 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளர் மோகித் ஷர்மா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.



கிரிக்கெட் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக