புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
3 Posts - 2%
jairam
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
2 Posts - 2%
சிவா
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
15 Posts - 4%
prajai
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
7 Posts - 2%
jairam
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
3 Posts - 1%
Rutu
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்


   
   
avatar
PROFESSORSSK
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 12/05/2014

PostPROFESSORSSK Tue Jun 24, 2014 10:56 am

அன்புள்ள இலக்கியச் சுவை அருந்தும் ஈகரை நண்பர்களே !
உங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கமும் வாழ்த்துக்களும் !

இது இன்று நான் இந்த வலைத் தளத்தில் வரையும் முதல் கடிதம் !


'' குறுந்தொகையில் உள்ளுறை உவமம் '' என்பது அதன் தலைப்பு !


'' உள்ளுறை உவமம் '' என்றால் உள்ளே மறைந்து வெளியே தெள்ளெனத் தெரியாமல் கிடக்கும் உவமை  என்று

பொருள் !




'' நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறோடு
ஒத்தப் பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்ற
இத்திறத்த எட்டுத் தொகை ''


என்ற தனிப் பாடலில் உள்ள எட்டுத் தொகை நூல்கள்

1. நற்றிணை

2. குறுந்தொகை

3 .ஐங்குறுநூறு

4. பதிற்றுப் பத்து

5. பரிபாடல்

6. கலித் தொகை

7 . அகநானூறு

8 .புறநானூறு

என்ற எட்டு நூல்களில் நல்ல குறுந்தொகை என்று இது சிறப்பிக்கப்பட்டுள்ளது !



சில குறுகிய அடிகளைக் கொண்ட அகத் துறைப் பாடல்கள் கொண்டதால் இது குறுந்தொகை எனப்பட்டது .

பல நீண்ட அடிகளைக் கொண்ட அகத் துறைப் பாடல்கள் கொண்ட நெடுந்தொகை என்ற நூல் பின்னால் அகநானூறு எனப் பெயர் பெற்றது .





இன்று ஒரு குறுந்தொகைப் பாடல் !

காதற்பரத்தை கூற்று :


(தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என்று அறிந்த காதற் பரத்தை அத்தலைவியின் பக்கத்திலுள்ளார் கேட்கும்படி, “தலைவன் எமக்கு வயப்பட்டான் போல இங்கே இருந்து விட்டு, தலைவிபாற் சென்றுஅவளுக்கு அடங்கி அவள் மனம்போல் ஒழுகினான்; தருக்குற்று என்னை அவள் இகழ்ந்ததற்குக் காரணம் அதுபோலும்!’’ என்று கூறியது ! )

இது ஒரு மருத நிலத்துப் பாடல் !

இந்தப் பாடலை இயற்றியவர் ஆலங்குடி வங்கனார் என்ற புலவர் !





ஒரு தலைவன் ஒரு தலைவியை மணக்கிறான் .

அவர்களுக்கு ஒரு புதல்வனும் பிறக்கிறான் .

அவனுக்கு இல்லற வாழ்வில் ஒரு மாற்றம் காண மனம் விழைகிறது !

ஒரு பரத்தையை நாடுகிறான் .

அவளும் அவனுக்கு இன்பம் நல்குகிறாள் !

'' பழகப் பழகப் பாலும் புளிக்கும் '' என்பார்களே , அது போல அவளும் புளிக்கிறாள் !

கோவலன் போல பழைய படியும் தனது மனைவியை நாடுகிறான் !

ஒரு வண்டு தேனை நாடி மலருக்கு மலர் தாவுவது போலவே ஆணின் மனமும் பல பெண்களை நாடும் போலும் !





இப்போது அந்தப் பரத்தை தனது தோழியிடம் சொல்வது போல் ஒரு பாடல் !

'' கழனி மாவத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூவும் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்மில்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடியிற் பாவை போல மேவன செய்யும்
தன் புதல்வன் தாய்க்கே ''


பாடலைக் கொஞ்சம் மாற்றி வரைகிறேன் .


'' கழனி மா அத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூவும் ஊரன்
எம் இல் பெரு மொழி கூறித் தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடியில் பாவை போல மேவன செய்யும்
தன் புதல்வன் தாய்க்கே ''





அருஞ்சொற்பதவுரை :

கழனி - வயல்

மா - மாமரம்

அத்து - அசைச் சொல்

உகு - பழுது கீழே விழுகின்ற

தீம் - இனிமையான

பழன - வயலில் உள்ள வாய்க்கால்

வாளை - பாம்பு வடிவத்தில் இருக்கும் ஒரு மீன்

கதூவும் - கவ்விப் பிடித்துக் கொள்ளும்

ஊரன் - ஊருக்கு அரசன்

எம் இல் - எமது வீட்டில்

பெரு மொழி - புகழ்ந்து சொல்லும் சொற்கள்

தம் இல் - தனது வீட்டில்

ஆடி - கண்ணாடி , முகம் பார்க்கும் கண்ணாடி , கண்ணுக்கு அணிவது தான் கண்ணாடி , முகம் பார்ப்பது ஆடி !

மேவன - அவள் விரும்புகிற


பாடலின் விளக்கம் :


வயல்களின் குறுக்கே ஓடும் வாய்க்காலில் உள்ள தண்ணீரில் வசிக்கும் வாளை மீன் அந்த வயலின் வரப்பில் இருக்கும் மாமரத்தில் காய்த்துக் கனிந்து விழும் மாங்கனியைக் கவ்விப் பிடித்து உண்ணும் மருத நிலங்களுக்கு சொந்தமான தலைவன் என்னுடன் இருக்கும் போது என்னைப் புகழ்ந்து பேசி விட்டு ,

தனது வீட்டுக்குச் சென்ற பின்பு அவன் வீட்டில் கண்ணாடி முன் நின்று கையையும் காலையும் தூக்கினால் அந்தக் கண்ணாடியில் தெரியும் பிம்பமும் தனது கையையும் காலையும் தூக்குமே , அந்தப் பிம்பத்தைப் போலத் தனது மனைவி சொல்லைத் தட்டாமல் அவளது சொற்களைக் கேட்டு வாழ்கிறான் .


பாடல் நயம் :

1. இந்தப் பரத்தை அவளாகவே தலைவனை நாடிச் செல்லவில்லை , மாறாக அவனே வந்து அவளிடம் இன்பம் துய்க்க வந்தான்

2. மாமரத்தின் மாங்கனியை நாடி வாளை மீன் போகவில்லை , மாங்கனியே தானாக வந்து வாளை மீனின் வாயில் விழுந்தது

3. இங்கு வாளை மீன் பரத்தைக்கும் , மாங்கனி தலைவனுக்கும் உவமை ஆகின்றன . இந்த உவமைக்கு உள்ளுறை உவமம் என்று பெயர் .

4. நமது வலது கையை அசைத்தால் ஆடியில் காணும் பிம்பம் தனது இடது கையை அசைக்கும் .

இதன் பொருள் என்னவென்றால் , தலைவன் தலைவியின் கருத்துக்கு மாறாகத் தான் செயல் படுகிறான் . அவள் கருத்துக்கு இசைந்து செயல் படுவதாக அவளுக்குக் காட்டிக் கொள்ளுகிறான் . குற்றம் புரிந்த நெஞ்சம் அல்லவா, அவனது நெஞ்சம் !

5. இயற்பியலில் இது LAW OF REFLECTION !

'' THE INCIDENT RAY AND THE REFLECTED RAY ARE REVERSED BY 180 DEGREES ''

6. தலைவனது மனைவியை அவள் அவனது மகனின் தாய் என்றே அழைக்கிறாள் , அவனது மனைவி என்று அழைக்க அவள் விரும்பவில்லை . ஏனெனில் மனைவிக்கு உரிய உரிமை தனக்கும் இருப்பதாக அவள் கருதுகிறாள் !




இங்கு உள்ளுறை உவமம் என்பது யாதெனில் ,

வாளை மீன் பரத்தைக்கும் , தலைவன் மாங்கனிக்கும் உவமையாக்கப்படுகிறார்கள் !

ஆனால் இந்த உவமை வெளியே தெரிவதில்லை !

உள்ளே மறைந்து கிடக்கிறது

அதனால் தான் இது உள்ளுறை உவமை ஆயிற்று !



அன்பர்களே !

இது '' ஆசை பற்றி அறையலுற்ற '' கடிதம் !

தவறுகள் இருந்தால் கோடிட்டுக் காட்டுங்கள் , திருத்திக் கொள்கிறேன் !

அன்புடன்

பேராசிரியர்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jun 24, 2014 12:46 pm

அண்ணாவுக்கு உங்கள் தம்பியின் அன்பான வேண்டுகோள், உங்கள இலக்கிய படைப்பை இன்னும் படிக்கவில்லை, பச்சை நிறத்தில் உள்ளதை வேறு நிறத்திற்கு மாற்ற முடியுமா, படிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கிறது அண்ணா.  

நன்றியுடன் உங்கள் தம்பி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக