புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆகஸ்ட் மாத பலன்கள் :)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேஷம்
மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழ்பவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியாலும், சாதுர்யமான பேச்சாலும் சாதித்துக் காட்டுவீர்கள். தடைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். எதிர்பார்த்த தொகையும் கைக்கு வரும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளும் எடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கு சி. எம். டி. ஏ அப்ரூவளெல்லாம் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
ராசிக்கு 6-ல் ராகு நிற்பதால் வேற்றுமொழிப் பேசுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலமாகவும் பணம் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். 12-வது வீட்டில் கேது நிற்பதால் யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். கோவில் நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்துவீர்கள். 4-ல் குரு தாயாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மோதல்களும் வரும். சிலர் வீடு மாற வேண்டிய சூழ்நிலை வீடு விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சேர்ந்து காணப்படுவதால் தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, அலர்ஜி, இன்பெக்ஷன், தோலில் நமைச்சல் வந்து நீங்கும். கண்டகச் சனி நடைபெறுவதால் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவரின் நட்பை தவிர்ப்பது நல்லது. கன்னிப்பெண்களே! உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.
பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். என்றாலும் புது வாடிக்கையாளர்களால் லாபம் அதிகரிக்கும். பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றங்களும் வர வாய்ப்பிருக்கிறது. குரு 10-ம் இடத்தை பார்ப்பதால் உயரதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பரிகாரம்: ஸ்ரீகற்பக விநாயகரை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழ்பவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியாலும், சாதுர்யமான பேச்சாலும் சாதித்துக் காட்டுவீர்கள். தடைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். எதிர்பார்த்த தொகையும் கைக்கு வரும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளும் எடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கு சி. எம். டி. ஏ அப்ரூவளெல்லாம் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
ராசிக்கு 6-ல் ராகு நிற்பதால் வேற்றுமொழிப் பேசுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலமாகவும் பணம் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். 12-வது வீட்டில் கேது நிற்பதால் யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். கோவில் நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்துவீர்கள். 4-ல் குரு தாயாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மோதல்களும் வரும். சிலர் வீடு மாற வேண்டிய சூழ்நிலை வீடு விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சேர்ந்து காணப்படுவதால் தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, அலர்ஜி, இன்பெக்ஷன், தோலில் நமைச்சல் வந்து நீங்கும். கண்டகச் சனி நடைபெறுவதால் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவரின் நட்பை தவிர்ப்பது நல்லது. கன்னிப்பெண்களே! உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.
பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். என்றாலும் புது வாடிக்கையாளர்களால் லாபம் அதிகரிக்கும். பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றங்களும் வர வாய்ப்பிருக்கிறது. குரு 10-ம் இடத்தை பார்ப்பதால் உயரதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பரிகாரம்: ஸ்ரீகற்பக விநாயகரை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரிஷபம்
பிறர் நிழலில் வாழ விரும்பாதவர்களே! இந்த மாதம் முழுக்க சூரியன் சாதகமாக இருப்பதால் தைரியம் பிறக்கும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். தாயாரின் உடல் நிலை சீராகும்.
சகோதரக்காரகனும், சப்தமாதிபதியுமான செவ்வாய் சனியுடன் சேர்ந்து 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, முதுகு வலி, மூச்சுத் திணறல் வரக்கூடும். மனைவியுடன் வாக்குவாதங்களும், ஈகோப் பிரச்னைகளும் வரும். மனைவிவழி உறவினர்களையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையிலும் அலைச்சல், செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் தாமதமாகி முடியும். உங்களின் ராசிநாதனான சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகளையும் தாண்டி நீங்கள் முன்னேறுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தைக் கூடி வரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் பணவரவு உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்ததையும் தந்து முடிப்பீர்கள்.
பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் அயல்நாடு சென்று உயர்கல்விப் பெற விசா கிடைக்கும். என்றாலும் ராகு 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் டென்ஷன் இருக்கும். தாய்வழி உறவினர்களாலும் அலைச்சல்களும், பயணங்களும் அதிகரிக்கும். குரு 3-ல் மறைந்திருப்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால் புதிய முயற்சிகள் தடைப்பட்டு முடிவடையும். கன்னிப் பெண்களே! உற்சாகமாக காணப்படுவீர்கள். சமயோஜித புத்தியுடன் நடந்துக் கொள்ளுங்கள். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகளே! கட்சி தலைமைக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். உட்கட்சி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். சந்தை நிலவரத்தையும் கண்காணித்து அதற்கேற்ப முதலீடும் செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோக ஸ்தானாதிபதி சனி உச்சமாகி வலுவடைந்திருப்பதால் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும். பரிகாரம்: ஸ்ரீசக்கரத்தாழ்வாரை புதன் கிழமையில் சென்று வணங்குங்கள்.
பிறர் நிழலில் வாழ விரும்பாதவர்களே! இந்த மாதம் முழுக்க சூரியன் சாதகமாக இருப்பதால் தைரியம் பிறக்கும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். தாயாரின் உடல் நிலை சீராகும்.
சகோதரக்காரகனும், சப்தமாதிபதியுமான செவ்வாய் சனியுடன் சேர்ந்து 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, முதுகு வலி, மூச்சுத் திணறல் வரக்கூடும். மனைவியுடன் வாக்குவாதங்களும், ஈகோப் பிரச்னைகளும் வரும். மனைவிவழி உறவினர்களையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையிலும் அலைச்சல், செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் தாமதமாகி முடியும். உங்களின் ராசிநாதனான சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகளையும் தாண்டி நீங்கள் முன்னேறுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தைக் கூடி வரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் பணவரவு உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்ததையும் தந்து முடிப்பீர்கள்.
பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் அயல்நாடு சென்று உயர்கல்விப் பெற விசா கிடைக்கும். என்றாலும் ராகு 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் டென்ஷன் இருக்கும். தாய்வழி உறவினர்களாலும் அலைச்சல்களும், பயணங்களும் அதிகரிக்கும். குரு 3-ல் மறைந்திருப்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால் புதிய முயற்சிகள் தடைப்பட்டு முடிவடையும். கன்னிப் பெண்களே! உற்சாகமாக காணப்படுவீர்கள். சமயோஜித புத்தியுடன் நடந்துக் கொள்ளுங்கள். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகளே! கட்சி தலைமைக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். உட்கட்சி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். சந்தை நிலவரத்தையும் கண்காணித்து அதற்கேற்ப முதலீடும் செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோக ஸ்தானாதிபதி சனி உச்சமாகி வலுவடைந்திருப்பதால் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும். பரிகாரம்: ஸ்ரீசக்கரத்தாழ்வாரை புதன் கிழமையில் சென்று வணங்குங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிதுனம்
சமாதானத்தை எப்போதும் விரும்புபவர்களே! உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். அனுபவப் பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தடைப்பட்டிருந்த உயர்கல்வி தொடரும். உங்களுடைய ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் அடிமனதிலிருந்த தாழ்வுமனப்பான்மை விலகும். வீண் விவாதங்களையெல்லாம் தவிர்ப்பீர்கள். குடும்பத்திலே உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். மருந்து, மாத்திரை குறையும்.
ஆரோக்யம் கூடும். உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டில் செவ்வாயும், சனியும் நிற்பதால் இனந்தெரியாத மனக்கவலைகள், எதிர்காலம் பற்றிய பயமும் வந்துப் போகும். வழக்கால் நிம்மதியிழப்பீர்கள். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்துக் கொண்டால் நலமாக இருக்குமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். கர்ப்பிணிப் பெண்களும் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். நெடுந்தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கனவுத் தொல்லை வந்து நீங்கும்.
4-ம் இடமான சுகஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பதால் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டேப் போகும். தாய்வழி உறவினர்களாலும் அலைச்சல் இருக்கும். மற்றவர்களுக்காக பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வெளிவட்டாரத்தில் மற்றவர்களை தாக்கிப் பேசாதீர்கள். கன்னிப் பெண்களே! போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். உங்கள் ரசனைக் கேற்ற நல்ல வரன் அமையும்.
அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாதீர்கள். தகுந்த ஆதராமின்றி எதிர்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். பக்குவப்படாத வேலையாட்களை பணியிலிருந்து நீக்குவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். 10-ம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆனால் வேலை அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது அதற்கான ஊதிய உயர்வோ, சலுகைகளோ கிடைக்கவில்லையென்று ஆதங்கப்படுவீர்கள். பரிகாரம்: ஸ்ரீரடி ஸ்ரீசத்ய சாய்பாபாவை வியாழக் கிழமையில் சென்று வணங்குங்கள்.
சமாதானத்தை எப்போதும் விரும்புபவர்களே! உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். அனுபவப் பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தடைப்பட்டிருந்த உயர்கல்வி தொடரும். உங்களுடைய ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் அடிமனதிலிருந்த தாழ்வுமனப்பான்மை விலகும். வீண் விவாதங்களையெல்லாம் தவிர்ப்பீர்கள். குடும்பத்திலே உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். மருந்து, மாத்திரை குறையும்.
ஆரோக்யம் கூடும். உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டில் செவ்வாயும், சனியும் நிற்பதால் இனந்தெரியாத மனக்கவலைகள், எதிர்காலம் பற்றிய பயமும் வந்துப் போகும். வழக்கால் நிம்மதியிழப்பீர்கள். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்துக் கொண்டால் நலமாக இருக்குமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். கர்ப்பிணிப் பெண்களும் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். நெடுந்தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கனவுத் தொல்லை வந்து நீங்கும்.
4-ம் இடமான சுகஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பதால் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டேப் போகும். தாய்வழி உறவினர்களாலும் அலைச்சல் இருக்கும். மற்றவர்களுக்காக பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வெளிவட்டாரத்தில் மற்றவர்களை தாக்கிப் பேசாதீர்கள். கன்னிப் பெண்களே! போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். உங்கள் ரசனைக் கேற்ற நல்ல வரன் அமையும்.
அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாதீர்கள். தகுந்த ஆதராமின்றி எதிர்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். பக்குவப்படாத வேலையாட்களை பணியிலிருந்து நீக்குவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். 10-ம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆனால் வேலை அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது அதற்கான ஊதிய உயர்வோ, சலுகைகளோ கிடைக்கவில்லையென்று ஆதங்கப்படுவீர்கள். பரிகாரம்: ஸ்ரீரடி ஸ்ரீசத்ய சாய்பாபாவை வியாழக் கிழமையில் சென்று வணங்குங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடகம்
மன்னிக்கும் குணம் அதிகமுள்ளவர்களே! உங்களுடைய ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குரு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் உடல் சோர்வு, அசதி வந்து நீங்கும். அடுத்தடுத்த வேலைச்சுமையாலும் ஒருவிதமான அலுப்பு, சலிப்பு ஏற்படும். உங்களுடைய ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும். கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள்.
உறவினர், நண்பர்களில் ஒருசிலர் உங்களை விட்டு ஒதுங்குவார்கள். பார்த்தும் பார்க்காமல் செல்வார்கள். அதையெல்லாம் பார்த்து படபடப்பாகாதீர்கள். பெரிய நோய்கள் இருப்பது போல் தோன்றும். நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமோ என்ற ஒரு ஆதங்கம் அடிமனதில் இருக்கும். பலர் பயன்படுத்திக் கொண்டு கருவேப்பில்லையாக வீசி விட்டார்கள் என்றெல்லாம் அலுத்துக் கொள்வீர்கள். உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் எல்லாப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும். மாற்றுவழி தேடுவீர்கள்.
புதிய பாதை தெரியும். உங்களிடம் உள்ள பலவீனங்களையெல்லாம் பட்டியலிட்டு ஒவ்வொன்றாக அதை சரி செய்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குவீர்கள். கன்னடம், ஹிந்தி பேசுபவர்களால் ஆதாயம் அதிகரிக்கும். ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் வீட்டில் செவ்வாயும், சனியும் சேர்ந்திருப்பதால் வாயுக் கோளாறால் வயிற்று வலி, நெஞ்சு வலி வந்துப் போகும். உடல் உஷ்ணமும் அதிகரிக்கும். வாகனம் அடிக்கடி பழுதாகும். வீட்டிலும் கழிவு நீர் குழாய் அடைப்பு, மின் கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கவனமாக இருங்கள். உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்ரன் செல்வதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு.
ஆனால் மனைவியுடன் கருத்து மோதல் வரும். ஷேர் மூலமாக பணம் வரும். கேது 9-ம் வீட்டில் நிற்பதால் ஆன்மிக நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கோவில் விழாக்களிலும் முதல் மரியாதைக் கிடைக்கும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் மீது திடீர் அக்கறை காட்டுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். தோலில் நமைச்சல் வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! உங்கள் குடும்ப பிரச்னைகள் வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாத வகையில் அதை தீர்த்துக் கொள்ளப்பாருங்கள். பரிகாரம்: ஸ்ரீமுப்பாத்தம்மனை வெள்ளிக் கிழமையில் சென்று வணங்குங்கள்.
மன்னிக்கும் குணம் அதிகமுள்ளவர்களே! உங்களுடைய ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குரு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் உடல் சோர்வு, அசதி வந்து நீங்கும். அடுத்தடுத்த வேலைச்சுமையாலும் ஒருவிதமான அலுப்பு, சலிப்பு ஏற்படும். உங்களுடைய ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும். கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள்.
உறவினர், நண்பர்களில் ஒருசிலர் உங்களை விட்டு ஒதுங்குவார்கள். பார்த்தும் பார்க்காமல் செல்வார்கள். அதையெல்லாம் பார்த்து படபடப்பாகாதீர்கள். பெரிய நோய்கள் இருப்பது போல் தோன்றும். நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமோ என்ற ஒரு ஆதங்கம் அடிமனதில் இருக்கும். பலர் பயன்படுத்திக் கொண்டு கருவேப்பில்லையாக வீசி விட்டார்கள் என்றெல்லாம் அலுத்துக் கொள்வீர்கள். உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் எல்லாப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும். மாற்றுவழி தேடுவீர்கள்.
புதிய பாதை தெரியும். உங்களிடம் உள்ள பலவீனங்களையெல்லாம் பட்டியலிட்டு ஒவ்வொன்றாக அதை சரி செய்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குவீர்கள். கன்னடம், ஹிந்தி பேசுபவர்களால் ஆதாயம் அதிகரிக்கும். ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் வீட்டில் செவ்வாயும், சனியும் சேர்ந்திருப்பதால் வாயுக் கோளாறால் வயிற்று வலி, நெஞ்சு வலி வந்துப் போகும். உடல் உஷ்ணமும் அதிகரிக்கும். வாகனம் அடிக்கடி பழுதாகும். வீட்டிலும் கழிவு நீர் குழாய் அடைப்பு, மின் கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கவனமாக இருங்கள். உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்ரன் செல்வதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு.
ஆனால் மனைவியுடன் கருத்து மோதல் வரும். ஷேர் மூலமாக பணம் வரும். கேது 9-ம் வீட்டில் நிற்பதால் ஆன்மிக நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கோவில் விழாக்களிலும் முதல் மரியாதைக் கிடைக்கும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் மீது திடீர் அக்கறை காட்டுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். தோலில் நமைச்சல் வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! உங்கள் குடும்ப பிரச்னைகள் வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாத வகையில் அதை தீர்த்துக் கொள்ளப்பாருங்கள். பரிகாரம்: ஸ்ரீமுப்பாத்தம்மனை வெள்ளிக் கிழமையில் சென்று வணங்குங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிம்மம்
முயற்சிகளில் பின் வாங்காதவர்களே! உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டிலேயே சனி அமர்ந்திருப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தள்ளிப் போன காரியங்களும் நல்ல விதத்தில் முடிவடையும். கோபம் குறையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மனஇறுக்கங்கள் நீங்கும். ஹிந்தி, ஆங்கிலம் தாய்மொழியாகக் கொண்டவர்களால் ஆதாயமடைவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் விலகும். 16-ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் சூரியன் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் தூக்கம் குறையும். வேலைச்சுமை அதிகமாகும்.
17-ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள்ளேயே ராசிநாதன் சூரியன் ஆட்சிப் பெற்று அமர்வதால் உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடிவடையும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான குரு 12-ல் மறைந்துக் கிடப்பதால் உங்கள் உள்மனதில் ஒருவிதமான அலட்சியம் வரும். ஜெயிப்போமோ, ஜெயிக்க மாட்டோமோ என்ற சந்தேகமும் அடிக்கடி ஏற்படும். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். திடீர் பயணங்களும் அதிகமாகும். பிள்ளைகளுடன் மனத்தாங்கல் வரும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் ராகு நிற்பதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். அவசர முடிவுகளையும் தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். செவ்வாய் 3-ம் வீட்டில் சனியுடன் முடங்கிக் கிடப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாயார் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையென்று ஆதங்கப்படுவீர்கள்.
சிறுசிறு வாகன விபத்து வந்து நீங்கும். அடிக்கடி வாகனமும் பழுதாகும். ராசிக்கு 8-ல் கேது நிற்பதால் வருங்காலம் பற்றிய பயம் வரும். ஆன்மிகத்தில் சில சூட்சுமங்களை உணருவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகளே! சிலர் உங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். உத்தியோகத்தில் எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். சிலருக்கு புது உத்தியோக வாய்ப்பு வரும். பரிகாரம்: ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள்.
முயற்சிகளில் பின் வாங்காதவர்களே! உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டிலேயே சனி அமர்ந்திருப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தள்ளிப் போன காரியங்களும் நல்ல விதத்தில் முடிவடையும். கோபம் குறையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மனஇறுக்கங்கள் நீங்கும். ஹிந்தி, ஆங்கிலம் தாய்மொழியாகக் கொண்டவர்களால் ஆதாயமடைவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் விலகும். 16-ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் சூரியன் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் தூக்கம் குறையும். வேலைச்சுமை அதிகமாகும்.
17-ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள்ளேயே ராசிநாதன் சூரியன் ஆட்சிப் பெற்று அமர்வதால் உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடிவடையும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான குரு 12-ல் மறைந்துக் கிடப்பதால் உங்கள் உள்மனதில் ஒருவிதமான அலட்சியம் வரும். ஜெயிப்போமோ, ஜெயிக்க மாட்டோமோ என்ற சந்தேகமும் அடிக்கடி ஏற்படும். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். திடீர் பயணங்களும் அதிகமாகும். பிள்ளைகளுடன் மனத்தாங்கல் வரும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் ராகு நிற்பதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். அவசர முடிவுகளையும் தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். செவ்வாய் 3-ம் வீட்டில் சனியுடன் முடங்கிக் கிடப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாயார் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையென்று ஆதங்கப்படுவீர்கள்.
சிறுசிறு வாகன விபத்து வந்து நீங்கும். அடிக்கடி வாகனமும் பழுதாகும். ராசிக்கு 8-ல் கேது நிற்பதால் வருங்காலம் பற்றிய பயம் வரும். ஆன்மிகத்தில் சில சூட்சுமங்களை உணருவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகளே! சிலர் உங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். உத்தியோகத்தில் எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். சிலருக்கு புது உத்தியோக வாய்ப்பு வரும். பரிகாரம்: ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கன்னி
மனசாட்சி அதிகமுள்ளவர்களே! உங்களுடைய ராசிக்குள்ளேயே ராகு வந்தமர்ந்திருப்பதால் ஒருவித படபடப்பு உங்களுக்குள் இருக்கும். கடந்த காலத்தைப் போல பிரச்னைகளில் சிக்கிக் கொள்வோமோ என்றெல்லாம் அச்சப்படாதீர்கள். எல்லோரையும் நம்பி ஏமாந்து விட்டோம். அதுப்போல இப்போது இருப்பவர்களையும் நம்பி ஏமாந்துவிடக்கூடாது என்று நினைத்துக் குழம்பிக் கொண்டிருப்பீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகள், பிரச்னைகள், ஏமாற்றங்களெல்லாம் இனி கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 7-ம் வீட்டில் கேது நிற்பதால் உங்களுடைய உள்மனது உங்களை சரியாக வழி நடத்தும்.
உங்களையும் அறியாமல் உங்களுக்கு சில விஷயங்களெல்லாம் புரிய வரும். சின்ன சின்ன ஞானமும் கிடைக்கும். ராசிக்கு லாப வீட்டில் சூரியனும், குருவும் நிற்பதால் பணவரவு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். உறவினர், நண்பர்களின் பாரா முகம் நீங்கும். சிலர் வலிய வந்து உங்களிடம் பேசுவார்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்டுவதற்கு அனுமதிக் கிடைக்கும். சிலருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மூத்த சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.
தொட்ட காரியங்களும் துலங்கும். உங்களுடைய ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தன்னம்பிக்கை துளிர்விடும். மருந்து, மாத்திரை அளவுக் குறையும். அழகு, இளமைக் கூடும். வாடியிருந்த முகம் மலரும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவதற்கான யோகமும் கூடி வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். ஆனால் ஏழரைச் சனி தொடர்ந்துக் கொண்டிருப்பதால் இனந்தெரியாத மனக்கவலைகள் வந்து நீங்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.
மற்றவர்களுக்காக கேரண்டர் கையப்பமிட வேண்டாம். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சிக்காக நீங்கள் செய்யும் தொண்டால் தலைமையின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் இந்த மாதம் லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். பரிகாரம்: அருகிலுள்ள சித்தர் பீடம் சென்று தியானம் செய்து வணங்குங்கள்.
மனசாட்சி அதிகமுள்ளவர்களே! உங்களுடைய ராசிக்குள்ளேயே ராகு வந்தமர்ந்திருப்பதால் ஒருவித படபடப்பு உங்களுக்குள் இருக்கும். கடந்த காலத்தைப் போல பிரச்னைகளில் சிக்கிக் கொள்வோமோ என்றெல்லாம் அச்சப்படாதீர்கள். எல்லோரையும் நம்பி ஏமாந்து விட்டோம். அதுப்போல இப்போது இருப்பவர்களையும் நம்பி ஏமாந்துவிடக்கூடாது என்று நினைத்துக் குழம்பிக் கொண்டிருப்பீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகள், பிரச்னைகள், ஏமாற்றங்களெல்லாம் இனி கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 7-ம் வீட்டில் கேது நிற்பதால் உங்களுடைய உள்மனது உங்களை சரியாக வழி நடத்தும்.
உங்களையும் அறியாமல் உங்களுக்கு சில விஷயங்களெல்லாம் புரிய வரும். சின்ன சின்ன ஞானமும் கிடைக்கும். ராசிக்கு லாப வீட்டில் சூரியனும், குருவும் நிற்பதால் பணவரவு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். உறவினர், நண்பர்களின் பாரா முகம் நீங்கும். சிலர் வலிய வந்து உங்களிடம் பேசுவார்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்டுவதற்கு அனுமதிக் கிடைக்கும். சிலருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மூத்த சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.
தொட்ட காரியங்களும் துலங்கும். உங்களுடைய ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தன்னம்பிக்கை துளிர்விடும். மருந்து, மாத்திரை அளவுக் குறையும். அழகு, இளமைக் கூடும். வாடியிருந்த முகம் மலரும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவதற்கான யோகமும் கூடி வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். ஆனால் ஏழரைச் சனி தொடர்ந்துக் கொண்டிருப்பதால் இனந்தெரியாத மனக்கவலைகள் வந்து நீங்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.
மற்றவர்களுக்காக கேரண்டர் கையப்பமிட வேண்டாம். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சிக்காக நீங்கள் செய்யும் தொண்டால் தலைமையின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் இந்த மாதம் லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். பரிகாரம்: அருகிலுள்ள சித்தர் பீடம் சென்று தியானம் செய்து வணங்குங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
துலாம்
வாதிடும் திறன் அதிகமுள்ளவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் நீண்ட கால எண்ணங்கள் நிறைவேறும். தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். காது, தொண்டை வலி நீங்கும். வீடு கட்டுவதற்கு குறைந்த வட்டியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான புதனும் சாதகமாக இருப்பதால் உங்கள் செல்வாக்குக் கூடும். பணவரவும் திருப்திகரமாக இருக்கும். தந்தைவழியில் வர வேண்டிய தொகையும் வரும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிட்டும். பாகப்பிரிவினையும் நல்ல விதத்தில் முடியும்.
பழைய நண்பர்கள் உதவுவார்கள். சூரியன் இந்த மாதம் முழுக்க வலுவாக இருப்பதால் சிலருக்கு வேலைக் கிடைக்கும். ஆனால் வேலை சம்பந்தமாக உறுதி பத்திரங்கள் எதிலும் கையெழுத்திட வேண்டாம். உங்களுடைய ராசியிலேயே செவ்வாயும், சனியும் அமர்ந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும். உங்களை யாரும் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையென்றும், உங்களுக்கு எதுவும் சரியாக அமையவில்லையென்றும் அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள்.
உங்கள் ஜாதக அமைப்புப் படிதான் உங்களுக்கு எல்லாமே அமையும். அப்படியிருக்கும் போது எதுவும் சரியாக அமையவில்லையென்று ஏன் அலுத்துக் கொள்கிறீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகளை வளர விடாதீர்கள். ஏழரைச் சனி இருப்பதால் உப்புப் பொறாத விஷயத்திற்கெல்லாம் மோதல் வரும். நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
அரசியல்வாதிகளே! தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பாருங்கள். 6-ம் வீட்டில் கேது நிற்பதால் வியாபாரத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது முதலீடும் செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். பங்குதாரர்கள் உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை கூடிக்கொண்டேப் போகும். அதிகாரிகளால் ஏமாற்றப்படுகிறோமோ என்றெல்லாம் குழம்புவீர்கள். பரிகாரம்: ஸ்ரீராகவேந்திரரை நெய் தீபமேற்றி வணங்குங்கள்.
வாதிடும் திறன் அதிகமுள்ளவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் நீண்ட கால எண்ணங்கள் நிறைவேறும். தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். காது, தொண்டை வலி நீங்கும். வீடு கட்டுவதற்கு குறைந்த வட்டியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான புதனும் சாதகமாக இருப்பதால் உங்கள் செல்வாக்குக் கூடும். பணவரவும் திருப்திகரமாக இருக்கும். தந்தைவழியில் வர வேண்டிய தொகையும் வரும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிட்டும். பாகப்பிரிவினையும் நல்ல விதத்தில் முடியும்.
பழைய நண்பர்கள் உதவுவார்கள். சூரியன் இந்த மாதம் முழுக்க வலுவாக இருப்பதால் சிலருக்கு வேலைக் கிடைக்கும். ஆனால் வேலை சம்பந்தமாக உறுதி பத்திரங்கள் எதிலும் கையெழுத்திட வேண்டாம். உங்களுடைய ராசியிலேயே செவ்வாயும், சனியும் அமர்ந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும். உங்களை யாரும் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையென்றும், உங்களுக்கு எதுவும் சரியாக அமையவில்லையென்றும் அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள்.
உங்கள் ஜாதக அமைப்புப் படிதான் உங்களுக்கு எல்லாமே அமையும். அப்படியிருக்கும் போது எதுவும் சரியாக அமையவில்லையென்று ஏன் அலுத்துக் கொள்கிறீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகளை வளர விடாதீர்கள். ஏழரைச் சனி இருப்பதால் உப்புப் பொறாத விஷயத்திற்கெல்லாம் மோதல் வரும். நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
அரசியல்வாதிகளே! தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பாருங்கள். 6-ம் வீட்டில் கேது நிற்பதால் வியாபாரத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது முதலீடும் செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். பங்குதாரர்கள் உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை கூடிக்கொண்டேப் போகும். அதிகாரிகளால் ஏமாற்றப்படுகிறோமோ என்றெல்லாம் குழம்புவீர்கள். பரிகாரம்: ஸ்ரீராகவேந்திரரை நெய் தீபமேற்றி வணங்குங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விருச்சிகம்
யதார்த்தமாக பேசி சாதிப்பவர்களே! உங்களுடைய ராசிக்கு 9-ம் வீட்டில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். உள்மனதில் ஒருவித தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் உண்டாகும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடைகளும் விலகும். அரசிடமிருந்து பெற வேண்டிய முக்கிய சலுகைகள், அனுமதிகளெல்லாம் இந்த மாதத்தில் பெறுவீர்கள்.
உங்களுக்கு சாதகமாக புதனும், சுக்ரனும் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். பழுதான டி. வி. , ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினையெல்லாம் மாற்றுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் ராகு நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை வாங்கும் அமைப்பு உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சேர்ந்து ராசிக்கு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் வேலைச்சுமை இருக்கும். தூக்கமும் குறையும்.
சகோதரங்களால் அதிருப்தி அடைவீர்கள். திடீர் பயணங்களால் திணறுவீர்கள். தவிர்க்க முடியாத செலவுகளாலும் பணப்பற்றாக்குறை ஏற்படும். அலர்ஜி, இன்பெக்ஷன், கழுத்து, காது வலி வந்து நீங்கும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.
அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார். சகாக்களைப் பற்றிக் குறைக் கூறாதீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. சந்தை நிலவரங்களை தெரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய பிரச்னைகள் தீரும். பரிகாரம்: வல்லக்கோட்டை ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
யதார்த்தமாக பேசி சாதிப்பவர்களே! உங்களுடைய ராசிக்கு 9-ம் வீட்டில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். உள்மனதில் ஒருவித தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் உண்டாகும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடைகளும் விலகும். அரசிடமிருந்து பெற வேண்டிய முக்கிய சலுகைகள், அனுமதிகளெல்லாம் இந்த மாதத்தில் பெறுவீர்கள்.
உங்களுக்கு சாதகமாக புதனும், சுக்ரனும் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். பழுதான டி. வி. , ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினையெல்லாம் மாற்றுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் ராகு நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை வாங்கும் அமைப்பு உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சேர்ந்து ராசிக்கு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் வேலைச்சுமை இருக்கும். தூக்கமும் குறையும்.
சகோதரங்களால் அதிருப்தி அடைவீர்கள். திடீர் பயணங்களால் திணறுவீர்கள். தவிர்க்க முடியாத செலவுகளாலும் பணப்பற்றாக்குறை ஏற்படும். அலர்ஜி, இன்பெக்ஷன், கழுத்து, காது வலி வந்து நீங்கும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.
அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார். சகாக்களைப் பற்றிக் குறைக் கூறாதீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. சந்தை நிலவரங்களை தெரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய பிரச்னைகள் தீரும். பரிகாரம்: வல்லக்கோட்டை ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தனுசு
யதார்த்தமாக பேசி சாதிப்பவர்களே! உங்களுடைய ராசிக்கு 9-ம் வீட்டில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். உள்மனதில் ஒருவித தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் உண்டாகும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடைகளும் விலகும். அரசிடமிருந்து பெற வேண்டிய முக்கிய சலுகைகள், அனுமதிகளெல்லாம் இந்த மாதத்தில் பெறுவீர்கள். உங்களுக்கு சாதகமாக புதனும், சுக்ரனும் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும்.
பழுதான டி. வி. , ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினையெல்லாம் மாற்றுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் ராகு நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை வாங்கும் அமைப்பு உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சேர்ந்து ராசிக்கு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் வேலைச்சுமை இருக்கும். தூக்கமும் குறையும். சகோதரங்களால் அதிருப்தி அடைவீர்கள். திடீர் பயணங்களால் திணறுவீர்கள்.
தவிர்க்க முடியாத செலவுகளாலும் பணப்பற்றாக்குறை ஏற்படும். அலர்ஜி, இன்பெக்ஷன், கழுத்து, காது வலி வந்து நீங்கும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார். சகாக்களைப் பற்றிக் குறைக் கூறாதீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. சந்தை நிலவரங்களை தெரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய பிரச்னைகள் தீரும். அதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பரிகாரம்: ஸ்ரீராமலிங்க சுவாமியை பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
யதார்த்தமாக பேசி சாதிப்பவர்களே! உங்களுடைய ராசிக்கு 9-ம் வீட்டில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். உள்மனதில் ஒருவித தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் உண்டாகும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடைகளும் விலகும். அரசிடமிருந்து பெற வேண்டிய முக்கிய சலுகைகள், அனுமதிகளெல்லாம் இந்த மாதத்தில் பெறுவீர்கள். உங்களுக்கு சாதகமாக புதனும், சுக்ரனும் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும்.
பழுதான டி. வி. , ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினையெல்லாம் மாற்றுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் ராகு நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை வாங்கும் அமைப்பு உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சேர்ந்து ராசிக்கு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் வேலைச்சுமை இருக்கும். தூக்கமும் குறையும். சகோதரங்களால் அதிருப்தி அடைவீர்கள். திடீர் பயணங்களால் திணறுவீர்கள்.
தவிர்க்க முடியாத செலவுகளாலும் பணப்பற்றாக்குறை ஏற்படும். அலர்ஜி, இன்பெக்ஷன், கழுத்து, காது வலி வந்து நீங்கும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார். சகாக்களைப் பற்றிக் குறைக் கூறாதீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. சந்தை நிலவரங்களை தெரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய பிரச்னைகள் தீரும். அதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பரிகாரம்: ஸ்ரீராமலிங்க சுவாமியை பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மகரம்
தளராத தன்னம்பிக்கையாளர்களே! உங்களுடைய ராசிக்கு லாப வீட்டிலேயே சனிபகவான் நிற்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டு. பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. பிள்ளைகளின் பொறுப்பற்றப் போக்கு மாறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். நட்பு வட்டம் விரியும். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல் விலகும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். செல்வாக்குக் கூடும். வீடு கட்டுவதற்கு அனுமதிக் கிடைக்கும். உறவினர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். உங்கள் ராசிநாதன் குரு 8-ல் மறைந்திருப்பதால் செலவுகள் அதிகமாகும். ஆனால் குரு உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் செலவுக்கேற்ற வரவும் உண்டு. குருவுடன் சூரியனும் நிற்பதால் அரசியல் பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். நாடாளுபவர்களின் நட்பும் கிடைக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் பூமி, சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். ஆனால் செவ்வாய், சனியுடன் சேர்ந்து நிற்பதால் வீட்டு மனை வாங்கும் போது மூல பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகள் பிடிவாதகமாக இருப்பா£கள். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரியக் கூடிய சூழ்நிலை உருவாகும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பெற்றோருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள்.
அரசியல்வாதிகளே! அதிகம் உழைக்க வேண்டி வரும். கட்சிக் கூட்டங்களுக்கு தவறாமல் கலந்து கொள்ளப்பாருங்கள். ராசிக்கு சாதகமாக சுக்ரனும், புதனும் இருப்பதால் வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சந்தையில் உங்கள் புகழ், கௌரவம் கூடும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமையில் ஸ்ரீதுர்க்கை அம்மனை சென்று வணங்குங்கள்.
தளராத தன்னம்பிக்கையாளர்களே! உங்களுடைய ராசிக்கு லாப வீட்டிலேயே சனிபகவான் நிற்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டு. பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. பிள்ளைகளின் பொறுப்பற்றப் போக்கு மாறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். நட்பு வட்டம் விரியும். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல் விலகும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். செல்வாக்குக் கூடும். வீடு கட்டுவதற்கு அனுமதிக் கிடைக்கும். உறவினர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். உங்கள் ராசிநாதன் குரு 8-ல் மறைந்திருப்பதால் செலவுகள் அதிகமாகும். ஆனால் குரு உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் செலவுக்கேற்ற வரவும் உண்டு. குருவுடன் சூரியனும் நிற்பதால் அரசியல் பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். நாடாளுபவர்களின் நட்பும் கிடைக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் பூமி, சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். ஆனால் செவ்வாய், சனியுடன் சேர்ந்து நிற்பதால் வீட்டு மனை வாங்கும் போது மூல பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகள் பிடிவாதகமாக இருப்பா£கள். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரியக் கூடிய சூழ்நிலை உருவாகும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பெற்றோருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள்.
அரசியல்வாதிகளே! அதிகம் உழைக்க வேண்டி வரும். கட்சிக் கூட்டங்களுக்கு தவறாமல் கலந்து கொள்ளப்பாருங்கள். ராசிக்கு சாதகமாக சுக்ரனும், புதனும் இருப்பதால் வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சந்தையில் உங்கள் புகழ், கௌரவம் கூடும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமையில் ஸ்ரீதுர்க்கை அம்மனை சென்று வணங்குங்கள்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|