புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்வெளி இந்தியன்! Poll_c10விண்வெளி இந்தியன்! Poll_m10விண்வெளி இந்தியன்! Poll_c10 
68 Posts - 59%
heezulia
விண்வெளி இந்தியன்! Poll_c10விண்வெளி இந்தியன்! Poll_m10விண்வெளி இந்தியன்! Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
விண்வெளி இந்தியன்! Poll_c10விண்வெளி இந்தியன்! Poll_m10விண்வெளி இந்தியன்! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
விண்வெளி இந்தியன்! Poll_c10விண்வெளி இந்தியன்! Poll_m10விண்வெளி இந்தியன்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்வெளி இந்தியன்! Poll_c10விண்வெளி இந்தியன்! Poll_m10விண்வெளி இந்தியன்! Poll_c10 
110 Posts - 60%
heezulia
விண்வெளி இந்தியன்! Poll_c10விண்வெளி இந்தியன்! Poll_m10விண்வெளி இந்தியன்! Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
விண்வெளி இந்தியன்! Poll_c10விண்வெளி இந்தியன்! Poll_m10விண்வெளி இந்தியன்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
விண்வெளி இந்தியன்! Poll_c10விண்வெளி இந்தியன்! Poll_m10விண்வெளி இந்தியன்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்வெளி இந்தியன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 1:59 am

'சந்திராயன்’, 'மங்கள்யான்’... வரிசையில் இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் பெயரிடப்படாத, தீவிரமாக வேலைகள் நடந்துகொண்டிருக்கும் அடுத்த திட்டத்தின் பெயர், 'மேன் ஆன் மிஷன்’ (இது தோராயமான பெயர்தான்!). விண்வெளிக்கு ஒரு இந்தியனை அனுப்பி சில நாட்கள் மிதக்கவைத்து, மீண்டும் கீழே இறக்குவதுதான் மேன் ஆன் மிஷன். கிட்டத்தட்ட ஒரு டூர் அடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவது மாதிரி. என்ன... அது விண்வெளி ட்ரிப் என்பதால், எக்கச்சக்க டெக்னாலஜி அக்கப்போர், உலக நாடுகளின் பனிப்போர் எல்லாம் ஈர்த்துக் கவனம் பெறுகிறது; கோடிகளில் செலவு பிடிக்கிறது!

சரி... முதலில், எதற்கு மனிதனை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும்?

நாடு, நாடோடி... என எல்லோருக்கும் இடம் பிடிக்கும் ஆசை என்பது, ஆழ்மனதில் ஊறிய விஷயம். துணையின் மனதில் முதல் இடம் பிடிப்பதில் இருந்து, 'சென்னைக்கு மிக அருகில்’ திண்டிவனம் தாண்டி இடம் பிடிப்பதாகட்டும், அமெரிக்கா போல அடுத்த நாட்டின் அதிகாரத்தை வளைத்துப் பிடிப்பதாகட்டும், உலக வரலாற்றில் இடம் பிடிப்பது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் ஒரு நிகழ்வு.

இருக்கும் உலகத்தைக் குப்பைமேடு ஆக்கிவிட்டோம்; கடலைக் கழிவுநீர்த்தொட்டி ஆக்கிவிட்டோம். எரிபொருள், குடிநீர் இரண்டும் அதிவேகமாகத் தீர்ந்துகொண்டிருக்கின்றன. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விரிசல் பெரிதாகிக்கொண்டே இருக்கிறது. இன்னும் சில நூறு வருடங்கள் இந்தப் பூமி தாக்குப்பிடிக்கலாம். அதற்குப் பிறகு பூமி பயன்படாமலே போய்விட்டால், மனிதனுக்கு வேறு கிரகங்களில் குடியேற வாய்ப்பு கிடைக்குமா? இப்படி யோசித்த வல்லரசுகள் அண்ணாந்து பார்த்ததில் அம்புட்டதுதான் விண்வெளி.

'செவ்வாயில் ஒருகாலத்தில் நீர் இருந்திருக்கலாம்’ என்ற ஒரு வரி ஆய்வு முடிவுகள் அமெரிக்காவுக்கு ஆசையைத் தூண்டியது. உலக நாடுகளிடையே விண்வெளிப் போட்டியைத் தூண்டியது. சோஜர்னர், கியூரியாசிட்டி விண்கலங்களை அமெரிக்கா அனுப்ப, வேறு சில நாடுகள் செயற்கைக் கோள்களை அனுப்பிவைத்தன. அந்த வரிசையில் இந்தியா அனுப்பிய 'குறைந்த செலவு கர்ச்சீஃப்’தான் மங்கள்யான். இந்த விண்வெளிப் போட்டியின் அடுத்த கட்டத் திட்டமே 'மேன் ஆன் மிஷன்’!

ஒரு செயற்கைக்கோளை ராக்கெட்டில் வைத்து ஏவி புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்துவதுகூட எளிது. ஆனால், அதை மீண்டும் பூமிக்குக் கொண்டுவருவது... ஏவுவதைவிட செலவு எகிறும், ரிஸ்க் நிறைந்த கடினமான சவால். அதனாலேயே விண்வெளியில் செயற்கைக்கோள் பழுதடைந்தால், அதை அப்படியே கைவிட்டுவிடுவார்கள். அதுவாகவே ஒருநாள் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்து விழுந்துவிடும். இது அப்படி அல்ல. ஒரு மனிதனை ராக்கெட்டில் அனுப்பி, சில நாட்கள் விண்வெளியில் சுற்றவைத்து, அவரை மீண்டும் பூமிக்குக் கொண்டுவரவேண்டும்.

மனிதனை எப்படி அனுப்புவார்கள்?

செயற்கைக்கோளை அனுப்ப, பி.எஸ்.எல்.வி வகையறா ராக்கெட்கள் போதும். ஆனால், மனிதன் பயணம் செய்யும் கேப்சூலை அனுப்ப ஜி.எஸ்.எல்.வி வகையறா ராக்கெட்கள் வேண்டும். பி.எஸ்.எல்.வி அதிகபட்சமாக இரண்டு டன் எடையைத் தூக்கிக்கொண்டு பறக்கும் என்றால், ஜி.எஸ்.எல்.வி ஆறு டன் வரை தூக்கிக்கொண்டு பறக்கும். மேன் ஆன் மிஷனின் முதல் தேவை... மனிதன் உள்ளே அமரும் அளவுக்கு, மிதந்துகொண்டே தூங்கும் அளவுக்கு ஒரு கேப்சூல் வேண்டும். அதற்குள்ளே ரேடியோ டிரான்ஸ்மீட்டர்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, சிறுநீரைக் குடிநீராக மாற்றும் உபகரணங்கள், (அங்கே அம்மா மினரல் வாட்டர் எல்லாம் கிடைக்காதே..!) வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் கருவிகள், ஆக்சிஜன் அளவைப் பராமரிக்கும் கருவிகள் எல்லாம் வேண்டும். இதையெல்லாம் வைத்து கேப்சூல் செய்தால், அது எக்கச்சக்க எடையுடன் இருக்கும். இவ்வளவு எடை மிகுந்த கேப்சூலைத் தூக்கிக்கொண்டு குறைந்தது 160 கிலோமீட்டர் உயரம் பறக்க மெகா சைஸில் இருக்கும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்கள்தான் லாயக்கு. ஆனால், அவ்வளவு எடைகொண்ட ராக்கெட்களை விண்ணில் செலுத்த கிரையோஜெனிக் இன்ஜின்கள் தேவை. அந்த வகை இன்ஜின்கள் தயாரிப்பில், இந்திய விஞ்ஞானிகள் இப்போதுதான் ஆரம்பக் கட்டங்களைத் தாண்டி வருகிறார்கள்.

எப்படித் திரும்பக் கொண்டுவருவார்கள்?

ராக்கெட்டில் இருந்து பிரிந்து செல்லும் கேப்சூலை, விண்வெளியில் சில நாட்கள் மிதக்கவிடுவார்கள். பின்னர் குறிப்பிட்ட நாள் வந்ததும், கேப்சூலில் இருக்கும் எரிபொருள் மூலம் உந்துதல் உண்டாக்கி கேப்சூலை அதிவேகமாக பூமியை நோக்கிச் செலுத்துவார்கள். விநாடிக்கு எட்டு கி.மீ வேகத்தில் கேப்சூல் பூமியை நோக்கிப் பயணித்து, வளிமண்டலத்தில் நுழையும்போது காற்றில் உரசி கேப்சூலின் வெளிப்புறம் முழுவதும் தீப்பிடித்துக்கொள்ளும். இந்தத் தீயும் வெப்பமும் உள்ளே பரவாமல் இருக்க, வெப்பத் தடுப்பு மற்றும் தீ தடுப்பு தகடுகள் பதிக்கப்பட்டிருக்கும்.

தீ அணைந்த பின், ஒரு பாராசூட் விரியும். அப்போது கேப்சூலின் வேகம் விநாடிக்கு 101 மீட்டராகக் குறைந்துவிடும். இன்னும் கொஞ்சம் தூரம் கடந்த பின், இன்னொரு பாராசூட் விரியும். அப்போது கேப்சூலின் வேகம் விநாடிக்கு 47 மீட்டராகச் சரியும். இந்த வேகத்தில் கடலில் விழும் கேப்சூல், அதன் ஆழத்துக்குச் சென்றுவிடும். அதனால், கடலை நெருங்கியதும் கேப்சூலைச் சுற்றி பெரிய பலூன் படாரென விரிந்து, கேப்சூல் கடலில் மூழ்காமல் மிதக்கவைக்கும். கடலில் கேப்சூல் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க, அதன் உச்சியில் அடர் ஆரஞ்சு நிறத்தில் ஒரு பலூன் முளைக்கும். வெப்பம் தணிந்த பின், கேப்சூலைப் பத்திரமாகக் கரைக்கு இழுத்துவருவார்கள். இதுதான் பொதுவான, அடிப்படையான நடைமுறை.

இந்தத் திட்டத்தின் முதல் கட்ட முயற்சியாக, 2007-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி சி7 ராக்கெட் மூலமாக 555 கிலோ எடையுள்ள ஒரு கேப்சூலை (ஆள் இல்லாமல்) விண்வெளிக்கு அனுப்பியது இஸ்ரோ. 12 நாட்கள் விண்வெளியில் சுற்றிய பின் மேற்சொன்ன முறைப்படி வங்காளவிரிகுடாவில் அதைக் கீழே விழ வைத்தார்கள். அந்தக் கேப்சூல், இப்போது பெங்களூரில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது அடுத்த கட்டத்தை முயற்சிக்கிறது இஸ்ரோ.

அந்த 'இந்தியன்’ தயாரா?

இந்த முறையும் கேப்சூலில் ஆள் இருக்கப்போவது இல்லை. ஆளுக்குப் பதிலாக தோராயமாக 60 கிலோ எடை கொண்ட பொம்மை ஒன்று இருக்கும். மனிதன் சென்றால் என்னென்ன வசதிகள் செய்யவேண்டி இருக்குமோ, அதெல்லாம் இருக்கும். கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று டன் எடை கொண்ட அந்தக் கேப்சூலைப் பத்திரமாக பூமிக்குத் திரும்பக் கொண்டுவந்துவிட்டால், அது பெரிய வெற்றிதான். இதுவரை விண்வெளிக்குச் சென்ற ஒரே இந்தியர் ராகேஷ் சர்மா. அதுவும் ரஷ்ய விண்வெளி ஓடமான சோயூஸில் பயணித்தவர். அவரையே மீண்டும் விண்வெளிக்கு அனுப்பிவைக்கலாம் என்பது இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலரின் ஐடியா. ஆனால், அவர் விண்வெளிக்குச் சென்று 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அவருக்கு வயதும் 65 ஆகிவிட்டது. எனவே 'புதிய இளம் இந்தியன்’ ஒருவரைத் தேடிப் பிடித்துப் பயிற்சி கொடுத்து விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இருக்கிறது இஸ்ரோ.

எப்படிப் பயிற்சி கொடுப்பார்கள்?

மும்பையில் இருக்கும் அமெரிக்க அறிவியல் நிறுவனத்தில் பணிபுரியும் அறிவியல் மென்பொருளாளர் சுதாகர் கஸ்தூரி, விண்வெளி பயிற்சி குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார். ''முன்பு விண்வெளி வீரர்களுக்கு நீலப் பச்சைப் பாசி போன்ற திரவ வகை உணவுகளைப் பதப்படுத்திக் கொடுப்பார்கள். அப்படிப் பதப்படுத்தப்படும் உணவு, விண்வெளி வீரரில் உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சிவிடாததாக இருக்க வேண்டும். அதனால் இப்போது கார்போஹைட்ரேட், புரதச்சத்து நிறைந்த மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள். 12 நாட்கள் விண்வெளியில் மிதக்க வேண்டும் என்றால் மனோதிடப் பயிற்சி அவசியம். இந்தப் பயணத்துக்குப் பெரும்பாலும் இந்திய விமானப் படையைச் சேர்ந்த வீரரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்குத்தான் உயரம், வேகம் குறித்த நடுக்கமோ பயமோ இருக்காது. அதிநவீனக் கருவிகளைக் கையாளவும் தெரியும். விண்வெளியில் சிறிய அறை ஒன்றில், அமைதியாக இருக்க, அதுவும் தனிமையில் அமைதியாக இருக்க பெரும் பயிற்சி தேவைப்படும். அதுதான் பயிற்சியின் மிக முக்கியமான கட்டம். விண்வெளிக்குச் சென்ற பின், நேரம் காலம் தெரியாததால் ஒருவரது உடலில் இருக்கும் உயிர்ச்சூழல் கடிகாரம் பாதிக்கப்படும். இதயத்துடிப்பு குறையும். உப்பு கூடும். அந்தச் சிக்கல்களை எல்லாம் தானாகவே கண்டுபிடித்துச் சரிசெய்ய வேண்டும். இதற்காக பூமியிலேயே விண்வெளி போன்ற ஈர்ப்பு விசையற்ற நிலையை உருவாக்கி, அதில் விண்வெளி வீரரை முதலில் மணிக்கணக்கில் தங்கவைப்பார்கள். பிறகு ஒரு நாள், இரண்டு நாட்கள், நான்கு நாட்கள்... எனப் பயிற்சியை அதிகரிப்பார்கள். சமயங்களில் தனிமையில் கேப்சூலில் ஒரு மாதம் முழுக்கக்கூடத் தங்கவைப்பார்கள். அப்போதுதான் 'சவாலே சமாளி’ மனதிடம் அதிகரித்து, விண்வெளியில் 12 நாட்கள்கூடத் தாக்குப்பிடிப்பார். கொதிக்கும் மதிய வெயிலில் தார் சாலையில் நடக்கச் சொன்னால் யோசிப்பீர்கள்தானே? ஆனால், வெறும் காலோடு தார் பாலைவனத்தில் நடந்து பயிற்சி பெற்ற பின், தார் சாலை நடை என்பது ஜூஜூபிதானே... அதே டெக்னிக்தான் இது!''

இந்த வருடத்துக்குள் 'பொம்மை இந்தியன்’ விண்வெளியில் பறந்து திரும்பி வருவான் என்பது இஸ்ரோவின் நம்பிக்கை. அது சாத்தியமானால், நீல் ஆம்ஸ்ட்ராங்கை நாம் படித்தது போல, நமது குழந்தைகள் படித்துப் படித்து மனப்பாடம் செய்யவிருக்கும் அந்த 'இந்தியன்’ தேடுதல் வேட்டையை ஆரம்பித்துவிடும் இஸ்ரோ!

- ஆனந்த விகடனிலிருந்து...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக