புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_c10110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_m10110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_c10110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_m10110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_c10110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_m10110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_c10 
52 Posts - 59%
heezulia
110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_c10110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_m10110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_c10110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_m10110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_c10110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_m10110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 15, 2014 10:20 pm

நெறிக்கப்படும் ஜனநாயகத்தின் குரல் வளை

110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Jayalalitha

ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் 100 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு சாதனை புரிந்துள்ளதாக மே 12ம் தேதி சட்டப்பேரவை தலைவர் ப. தனபால் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

இது சாதனையா வேதனையா? ஜனநாயகம் படும்பாடு எனப் பல்வேறு தலைப்புகளில் எதிர்க்கட்சியினர் தமிழகமெங்கும் இதை எதிர்த்து கண்டனக் கூட்டங்களை நடத்தினர். “விதியை மாற்றிய விதி” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு அதிமுகவினர் இதை கொண்டாடி வருகின்றனர். இதைப் பார்த்து தமிழக மக்கள் என்ன நடக்கிறது என்று புரியாமலேயே விழி பிதுங்கி நிற்கின்றனர்.

அப்படி 110 விதிதான் என்ன சொல்கிறது? அரசமைப்பு சட்டத்தின் 208-வது பிரிவு 1-வது உட்பிரிவின்படி இயற்றப் பெற்றவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள். இதில் மொத்தம் 23 அத்தியாயங்கள், 292 விதிகள் உள்ளன. விதிகளில் உட்பிரிவுகளும் உள்ளன. இந்த விதிகள்படிதான் சட்டப்பேரவை நடத்தப்படவேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதில் ஒன்றுதான் விதி-110. இது என்ன சொல்கிறது?

(1) பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப்பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் அனுமதியுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம்.

(2) அவ்வறிக்கையின் மீது எவ்வித விவாதமும் இருத்தல் கூடாது.

(3) உள் விதி 1-இன் கீழ்அறிக்கையளிக்க விரும்பும் ஓர் அமைச்சர் எந்நாளில் அந்த அறிக்கை அளிக்க விரும்புகிறார் என்பதையும் பேரவைத் தலைவரின் பார்வைக்கு வைக்க அதன் பிரதி ஒன்றையும் முன்கூட்டியே சட்ட பேரவை செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.


நாம் அடிக்கடி ஊடகங்களில் படிக்கும், கேட்கும் விதி-110 இதுதான். இந்த விதி எந்த காரணத்திற்காக கொண்டுவரப்பட்டது என்றால் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனைக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது அப்பொருளைப்பற்றி உறுப்பினர்கள் விவாதித்தால் காலவிரயம் கூடும் அல்லது அப்பொருள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும் என அரசு கருதும் போது இந்த விதிப்படி அரசு பயன்படுத்த ஏதுவாக கொண்டுவரப்பட்டதுதான் விதி-110.

ஆனால் 14-வது சட்டப்பேரவைக்கு முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா தினமும் சட்டப்பேரவை விதி-110ன் கீழ் திட்டங்களை அறிவிப்பதையே வழக்கமாக மாற்றியுள்ளார். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறிவிடும். விதி என்று ஒன்று எதிலும் உருவாக்கினால் விதிவிலக்கு என்று உருவாவது இயல்பே. ஆனால் விதிவிலக்கையே நிரந்தர விதியாக மாற்றுவது நோக்கத்தையே சிதைத்துவிடும். இந்த வேலையைத்தான் ஜெயலலிதா கனகச்சிதமாக தற்போது செய்து வருகிறார்.

இந்திய ஜனநாயகம் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு மக்களுக்காக திட்டங்களை தீட்டும்போது மக்களுடன் (மக்கள் பிரதிநிதியான சட்டப்பேரவை உறுப்பினர்களுடன்) கலந்து ஆலோசித்து – விவாதித்து முடிவெடுக்க மறுத்தால் ஜனநாயகம் எங்கே இருக்கிறது? மக்களுக்கான அரசாங்கம் எங்கே இருக்கிறது? 110-விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்கள் உண்மையிலேயே மக்களுக்கு பயனுள்ள திட்டங்களாக இருந்தாலும் கூட அரசு சட்டப்பேரவையில் விவாதிக்கும் போதுதான் அத்திட்டம் மேன்மையுறும், மெருகேறும். முக்கியமாக ஜனநாயகம் காக்கப்படும்.

ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு, “110 விதியின் கீழ்தான் தினமும் அனைத்து திட்டங்களையும் அறிவிப்பேன்; அத்திட்டங்களைப் பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க மாட்டேன், அதுபற்றி யாரும் கேள்வி கேட்க கூடாது, நான் பதிலும் சொல்ல மாட்டேன்” என விதி விலக்கை விதியாக மாற்றி ஜனநாயகவாதி என்ற போர்வையில் சர்வாதிகாரியாக செயல்படுவது மக்களாட்சி தத்துவத்தையே கேலிக்கூத்தாக்கி விடும். இப்படி ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டால் தமிழகத்தின் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது.

1- “110 விதியின் கீழ் செய்யப்படும் அறிவிப்புகளுக்கு தனியாக நிதி ஒதுக்கப்படுமா? துறைக்கான அமைச்சர்களை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த போது இந்த அறிவிப்புகளையெல்லாம் அமைச்சர்கள் ஏன் செய்யவில்லை?” என கருணாநிதி கேள்வி எழுப்பியதற்கு, “புதிய திட்டத்தை செயல்படுத்த எதிர்பாராத செலவு நிதியில் இருந்து வழங்கப்பட்டு செலவு செய்யப்படும். பின்னர் இதற்கான நிதி முதல் துணை மதிப்பீடு மற்றும் இறுதி துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டு சட்டப்பேரவையின் அனுமதி பெறப்படும்” என ஜெயலலிதா பதில் அளித்துள்ளார்.

2 - விதியில் 110-ல் மாற்றம் தேவை: 110-விதியின் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் பற்றி பேரவை உறுப்பினர்கள் கேள்வி கேட்கவோ, விவாதிக்கவோ முடியாது என தற்போது விதி உள்ளது. இந்த விதியில் சில மாறுதல்களை கொண்டு வரவேண்டும். அதாவது விதி 110ன் கீழ் அறிவிப்பு-திட்டங்கள் அறிவித்தால் அன்றைய தினம் அதுபற்றி கேள்வி எழுப்பவோ விவாதிக்கவோ முடியாது எனவும் மறுநாள் இதை முதலாவதாக பேரவை உறுப்பினர்களின் விவாதத்திற்கு வைக்க வேண்டும் எனவும் திருத்தம் செய்யப்பட வேண்டும். மேலும் ஒரு கூட்டத்தொடரின் கடைசி நாளன்று 110-விதியின் கீழ் அறிவிப்பு செய்தால் அதுபற்றி அன்றே விவாதம் நடத்தவும் விதிகளில் திருத்தம் செய்யப்படவேண்டும்.

[thanks]லோக்சத்தா கட்சி[/thanks]




110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 15, 2014 10:27 pm

நம்ம சிவா, அண்ணாவிற்கு குண்டர் சட்டம் உறுதியாகி விட்டது..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 15, 2014 10:29 pm

110 விதியின் கீழ் இந்த பின்னுட்டத்தை எழுதுகின்றேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 15, 2014 10:34 pm

பாலாஜி wrote:110 விதியின் கீழ் இந்த பின்னுட்டத்தை எழுதுகின்றேன்
மேற்கோள் செய்த பதிவு: 1079700

தல நீங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க, உங்களுக்கும் குண்டர் சட்டம்?



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 15, 2014 10:36 pm

விதியேன்னு கதியத்து வீதியில திரியற நமக்கு இவ்விதி எம்மாத்திரம் - அம்மா ஆத்திரம் வேண்டாம் - தொடருங்கள் தங்கள் பணியை விதி 110 ன் படியே...




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 15, 2014 10:38 pm

யினியவன் wrote:விதியேன்னு கதியத்து வீதியில திரியற நமக்கு இவ்விதி எம்மாத்திரம் - அம்மா ஆத்திரம் வேண்டாம் - தொடருங்கள் தங்கள் பணியை விதி 110 ன் படியே...
மேற்கோள் செய்த பதிவு: 1079706

விதியத்து வீதியில சுத்தினாலும், நம்மள நம்பி ஊட்டுல பொண்டு, புள்ளைங்க இருக்கே தல



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 15, 2014 10:42 pm

அவங்களும் விதியேன்னு நம்மள அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 15, 2014 10:44 pm

M.M.SENTHIL wrote:நம்ம சிவா, அண்ணாவிற்கு குண்டர் சட்டம் உறுதியாகி விட்டது..


இல்லை பாஸ், நான் கொஞ்சம் ஒல்லியாகத்தான் உள்ளேன்!



110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 15, 2014 10:44 pm

பாலாஜி wrote:110 விதியின் கீழ் இந்த பின்னுட்டத்தை எழுதுகின்றேன்


 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 



110 வது விதி - தமிழகத்தின் தலை-விதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 15, 2014 10:49 pm

சிவா wrote:
M.M.SENTHIL wrote:நம்ம சிவா, அண்ணாவிற்கு குண்டர் சட்டம் உறுதியாகி விட்டது..


இல்லை பாஸ், நான் கொஞ்சம் ஒல்லியாகத்தான் உள்ளேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1079712

நீங்கள் ஒல்லிதான் ஆனால் சட்டம் குண்டாச்சே அண்ணா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக