புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்
Page 1 of 1 •
கதையே இல்லாமல் ஒரு படம் என்று விளம்பரம் செய்தாலும் இதில் கதை இருக்கிறது. கதையைத் தேடுவதையே ஒரு படமாக எடுத்து, கலைடாஸ்கோப்பை உருட்டி விளையாடியிருக்கிறார் பார்த்திபன். அதில் நறுக், சுருக், நக்கல், நையாண்டி என எல்லாவற்றையும் கலந்து கட்டி, பிலிம் ரோல்களாலேயே ஒரு தோரணம் கட்டியிருக்கிறார்.
உலகப் பிரச்சினைகளை எல்லாம் தொட்டுச் சலித்துவிட்டதாலோ என்னவோ, சினிமா எடுப்பவர்கள் தங்களின் சிக்கல்களையே படமாக எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அதுவும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியான ஜிகர்தண்டா, சினேகாவின் காதலர்கள், கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய மூன்று படங்களிலுமே திரையுலகம் முக்கிய களமாய் இருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டாவில் புதுமுக இயக்குநர், ஒரு ரவுடியின் கதையைப் படமாக எடுப்பது கதை என்றால், முத்துராமலிங்கனின் சினேகாவின் காதலர்களில் கதாநாயகியின் மூன்று காதலர்களில் ஒருவராக வருபவர், பட வாய்ப்புத் தேடும் உதவி இயக்குநர். இப்போது பார்த்திபனின் க.தி.வ.இ. படத்திலும் முதல் வாய்ப்பினைத் தேடும் இயக்குநர் ஒருவரே கதாநாயகன்.
இந்த இயக்குநர் சந்தோஷ், தன் உதவி இயக்குநர்களுடன் கதை விவாதம் நிகழ்த்துவதும் கதையை உருவாக்குவதும் தயாரிப்பாளரிடம் கதையைச் சொல்வதும் அதைத் தயாரிப்பாளர் ஏற்றாரா என்பதும்தான் இப்படத்தின் முக்கிய கதை. ஆனால், இயக்குநரின் காதல் மனைவி, உதவி இயக்குநர்கள் சொல்லும் காட்சிகள், எதிர்வீட்டுப் பெண்ணின் காதல் தூது, மர்மமாய் நிகழும் ஒரு கொலை, திரைப்படத்துக்குள் எடுக்கப்படும் இன்னொரு திரைப்படம்.... எனப் பல துணைக் கதைகள், இந்தப் படத்தில் உண்டு.
திரையுலகை உள்ளது உள்ளபடி காட்ட முயல்வது, அதன் மீது பல்வேறு விமர்சனங்களைப் பலர் வாயிலாக முன்வைப்பது, அதன் நம்பிக்கைகள் பலவற்றை உடைப்பது எனப் பல கோணங்களில் பார்த்திபன் பயணிக்கிறார்.
முதல் பாதியில் திரைப்படத்தில் பல முடிச்சுகளைப் போட்டுக்கொண்டே போய், அடுத்த பாதியில் அந்த முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்துக்கொண்டே வருவதை, திரைப்படத்தின் இலக்கணங்களில் ஒன்றாக இப்படத்தில் முன்வைக்கிறார்கள். அடுத்த காட்சி என்னவென்று தெரியாத வகையில் டுவிஸ்ட் (Twist), திடீர் திருப்பம், முடிச்சு ஆகியவை அமைய வேண்டும். அவை முன்கூட்டியே தெரிந்துவிட்டால், படம் ஓடாது, ரசிகர்களைக் கவராது என்பது தமிழ்த் திரையுலகின் நம்பிக்கை. ஆனால், அதைப் பார்த்திபன் நம்பவில்லை.
இந்தப் பாத்திரம், அடுத்து இப்படித்தான் ஆகப் போகிறது என முன்கூட்டியே காட்டிவிட்டுக் கதையை நகர்த்துகிறார். சில பாத்திரங்களின் உள்ளுணர்வை (Intuition) இதற்கு அவர் பயன்படுத்துகிறார். ஆனால், எல்லா உள்ளுணர்வுகளும் அப்படியே பலிக்காது. அதற்கான வாய்ப்பு 50 - 50 என்றும் சொல்கிறார். ஆக, அந்த உள்ளுணர்வு பலிக்குமா, பலிக்காதா என்பதே இயக்குநர் வைக்கும் மர்ம முடிச்சு. இது, ஒரு பலவீனமான புள்ளி என்றாலும் வசனங்களின் மூலம் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறார்.
கொய்யாப் பழத்தைக் கையில் வைத்திருக்கும் பெண், "இது கொய்த பழம் தான்; கொய்யாப் பழம், மரத்தில் தானே இருக்கும்" என்கிறார். எதிர்வீட்டில் இருந்தபடி ஒருதலையாய்க் காதலிக்கும் பெண், நாயகனிடம் வந்து, "நீ அழிப்பாய் என்று எதிர்பார்த்து இன்று லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு வந்திருக்கேன்" என்கிறார். அவரது காதல் கடிதத்தில் 'இறுமாப்பு' என்ற வார்த்தையை 'இரு மாராப்பு' எனத் தவறாகப் படிக்கிறார் நாயகன். இப்படியாக, படம் முழுதும் வசனங்களில் பார்த்திபன் ஒரு வாண வேடிக்கையே நடத்தியிருக்கிறார்.
பார்த்திபனுக்கு அடுத்தபடியாக, தம்பி ராமையா இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்கிறார். இரண்டு மனைவிகளைக் கொண்ட உதவி இயக்குநராய், 58 வயதிலும் திரைத் துறையை நம்பிக் காத்திருக்கும் அவர், குணச்சித்திரத்திலும் நகைச்சுவையிலும் அசத்தியிருக்கிறார்.
தாலி என்பது என்னவென்றே ஒருவருக்குத் தெரியாது என்று சின்னத்தம்பியில் பி.வாசு காட்டியதும் ஒரு ஈ பழி வாங்கும் என ராஜமவுலி நான் ஈ படத்தில் காட்டியிருப்பதும் உலகில் இல்லாத மிருகத்தை இருப்பதாக நம்ப வைத்து ஸ்பீல்பர்க் ஜூராசிக் பார்க் படத்தை வெற்றிப் படமாக எடுத்ததும் என இயக்குநர்களின் திறமைக்கு உதாரணங்களாக அவர் எடுத்து வைக்கும் உதாரணங்கள் ரசிக்கும்படி உள்ளன.
அது போலவே, தேவர் பிலிம்ஸ் உள்பட, பழைய கிளாஸிக் படங்களிலிருந்து அவர் மேற்கோள் காட்டும் ஒவ்வொன்றும் மிக அருமை. இன்றைய தலைமுறையினருக்கு அவற்றுள் பலவும் புதுமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.
படம் எப்படி இருக்க வேண்டும் என இந்தப் படத்தில் பலரிடமும் கருத்துக் கேட்டுள்ளது, நல்ல முயற்சி. மக்களின் பல வகையான எதிர்பார்ப்புகளை இதன் மூலம் வெளிப்படுத்திய இயக்குநர், வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் திரைத் துறையை விமர்சிக்கிறார். "படத்தைப் பார்க்காமலேயே வெளியிட்டுருவீங்களா? அப்புறம் ஏன் இவ்வளவு மோசமா இருக்குது?" என்ற விமர்சனம் அதில் ஒன்று.
படத்தில் வாய்ப்பு தேடும் இயக்குநரின் மனைவியாக நடித்திருக்கும் அகிலா கிஷோரும் அவருக்குக் குரல் கொடுத்திருக்கும் சுசித்ராவும் மனத்தில் பதிகிறார்கள். அகிலா தான் வேலைக்குச் சென்று, கணவரின் கனவு நிறைவேற உதவுகிறார். ஆனால், தன் பிரைவஸி போய்விட்டதாகப் பின்னர் சண்டை போடுகிறார். ரொமான்ஸ் காட்சிகளில் அவர் பளிச்சென்று கவர்கிறார். அவரது பாதத்தைக் கணவரான இயக்குநர் பிடித்துவிடும்போது, "இதுதான் டைரக்டர் டச்சா?" எனக் கேட்பது 'டைமிங்' வசனம்.
இயக்குநராக நடித்திருக்கும் சந்தோஷூக்கு மலையாள முகவெட்டு. கதாநாயகனாக அளவோடு உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.
ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவு, பளிச். கலை, வளமாக உள்ளது. பின்னணி இசை நன்று. படத்தில் ஆர்யா, அமலாபால் தொடங்கி, மிகப் பெரிய எண்ணிக்கையில் நட்சத்திரப் பட்டாளமே கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறது.
படத்தின் இறுதியில், 'அடுத்த சீன் என்னவென்று தெரிந்துவிட்டால் வாழ்க்கையே போருடா' என ஒரு பாடல் வரி வருகிறது. ஆனால், இந்தப் படத்தில் இடையிடையே உள்ளுணர்வு மூலமாகப் பல காட்சிகளை இயக்குநர் முன்கூட்டியே காட்டுகிறார். இது ஒரு சிறிய முரண் என்றாலும், இதற்குக் காரணங்கள் வெவ்வேறு.
பார்த்திபன், ஒரு புதுமைப் பித்தன். படம் பார்த்த பிறகு நீங்கள் உணரப் போவது புதுமையா? பித்து நிலையா? என்று கேட்டால், அதற்கும் பதில் 50 - 50 தான்.
[thanks]வெப்துனியா[/thanks]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திரையரங்கில் தேம்பி அழுத தருணம்: இயக்குநர் பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்திற்கு விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு, இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில், பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி, டாப்ஸி, அமலா பால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கவுரவ வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று வெளியான இப்படம் விமர்சகர்கள், ரசிகரக்ள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
தனது படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை திரையரங்கு சென்று பார்த்த இயக்குநர் பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நிலைத்தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், "சத்தியமாக இவ்வவு பெரிய வெற்றி காண.. காத்திருந்த காலத்தின் எடை, கண்களை அழுத்த சுமை தாளாமல் கீழிமை கிழிந்து, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் முதல் காட்சி போல் என்னை ஒட்டு மொத்தமாக புரட்டிப் போட்டது. கைதட்டல் விசிலில் அரங்கம் அதிரும் போது சின்னப் பிள்ளையாய் தேம்பியது, யாருக்கும் தெரிந்துவிடாதிருக்க ஏற்கனவே நனைந்த கைகுட்டையும் கைவிரித்தது. அந்நேரமும் என் மானம் காக்க கீர்த்தனா தான் வந்தார். கட்டிப் பிடித்து அவர் கன்னம் நிறைத்து நனைத்தேன்.
நினைக்கலாம் நீங்கள்.. அப்படியென்னா? பொல்லாத பொடலங்கா படம் என்று. கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒரு new wave பிலிம். முற்றிலும் புது முயற்சி. ரசிகர்களின் ரசனை மற்றும் புத்திசாலித்தனத்தை மட்டும் நம்பி, முதன்முறையாக ரசிகனுக்கும் திரைக்குமான இடைவெளியை வெகுவாக விலக்கி எடுக்கப்பட்ட படம். இவ்வெற்றி எனதல்ல நமது!
தயவு செய்து (திருட்டு VDC போன்ற) களவு முறைகளை கையாளமால் திரையில் பார்த்து என்னை இன்னும் உயரம் அழைத்து சொல்லுங்கள்.. நன்றி" என்று குறிப்பிட்டு இருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.
இயக்குநர் பார்த்திபனின் இந்த நிலைத்தகவல் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விருப்பங்களைக் குவித்தது கவனிக்கத்தக்கது.
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்திற்கு விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு, இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில், பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி, டாப்ஸி, அமலா பால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கவுரவ வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று வெளியான இப்படம் விமர்சகர்கள், ரசிகரக்ள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
தனது படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை திரையரங்கு சென்று பார்த்த இயக்குநர் பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நிலைத்தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், "சத்தியமாக இவ்வவு பெரிய வெற்றி காண.. காத்திருந்த காலத்தின் எடை, கண்களை அழுத்த சுமை தாளாமல் கீழிமை கிழிந்து, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் முதல் காட்சி போல் என்னை ஒட்டு மொத்தமாக புரட்டிப் போட்டது. கைதட்டல் விசிலில் அரங்கம் அதிரும் போது சின்னப் பிள்ளையாய் தேம்பியது, யாருக்கும் தெரிந்துவிடாதிருக்க ஏற்கனவே நனைந்த கைகுட்டையும் கைவிரித்தது. அந்நேரமும் என் மானம் காக்க கீர்த்தனா தான் வந்தார். கட்டிப் பிடித்து அவர் கன்னம் நிறைத்து நனைத்தேன்.
நினைக்கலாம் நீங்கள்.. அப்படியென்னா? பொல்லாத பொடலங்கா படம் என்று. கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒரு new wave பிலிம். முற்றிலும் புது முயற்சி. ரசிகர்களின் ரசனை மற்றும் புத்திசாலித்தனத்தை மட்டும் நம்பி, முதன்முறையாக ரசிகனுக்கும் திரைக்குமான இடைவெளியை வெகுவாக விலக்கி எடுக்கப்பட்ட படம். இவ்வெற்றி எனதல்ல நமது!
தயவு செய்து (திருட்டு VDC போன்ற) களவு முறைகளை கையாளமால் திரையில் பார்த்து என்னை இன்னும் உயரம் அழைத்து சொல்லுங்கள்.. நன்றி" என்று குறிப்பிட்டு இருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.
இயக்குநர் பார்த்திபனின் இந்த நிலைத்தகவல் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விருப்பங்களைக் குவித்தது கவனிக்கத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வித்தியாச முயற்சி வெற்றி பெற வேண்டும்.. அதுவும், பார்த்திபன் போன்ற புதுமைவாதிகள் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். வாழ்த்துக்கள்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பார்த்திபனுக்கு வாழ்த்துக்கள்.
படம் பார்க்கவேண்டும்.
படம் பார்க்கவேண்டும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
பார்திபன் -
புதுமை உங்களுக்கு புதியது அல்லவே .
அமைத்த புதிய பாதை , உங்களுக்கு புதிய பாதை அல்லவே .
ரமணியன்
புதுமை உங்களுக்கு புதியது அல்லவே .
அமைத்த புதிய பாதை , உங்களுக்கு புதிய பாதை அல்லவே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|