புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_m10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10 
31 Posts - 55%
heezulia
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_m10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_m10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10 
1 Post - 2%
rajuselvam
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_m10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_m10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_m10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_m10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_m10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_m10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10 
17 Posts - 3%
prajai
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_m10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_m10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10 
9 Posts - 1%
jairam
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_m10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_m10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10 
4 Posts - 1%
Jenila
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_m10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_m10டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு?


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Aug 31, 2014 7:36 pm

லேசான தலைவலி, இருமல், சளி என சின்னச் சின்ன உபாதைகளுக்குக்கூட மாத்திரைகளை விழுங்கும் காலம் இது. ஒவ்வொரு பிரச்னைக்கும் ஏற்ப, மாத்திரைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. மாத்திரைகள் உட்கொள்வதுபற்றிய சந்தேகங்களுக்கு, சென்னை அரசுப் பொது மருத்துவர் டாக்டர் அருள் தரும் தகவல்கள்.

மருத்துவரிடம் போகாமலேயே மாத்திரைகளைக் கடைகளில் வாங்கிச் சாப்பிடலாமா?

பொதுவாக, மாத்திரை சாப்பிடுவதில் இரண்டு வகை. காய்ச்சல், சளி போன்ற தற்காலிக உடல் பிரச்னைகளுக்காக சாப்பிடுவது. மற்றொன்று, சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு, போன்றவைக்குத் தொடர்ச்சியாகச் சாப்பிடுவது... இந்த இரண்டு வகைகளுக்கும் மருத்துவ ஆலோசனை இன்றி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

உணவுக்கு முன்பு, பின்பு என மருத்துவர் தரும் மாத்திரைகளை மாற்றி சாப்பிட்டால் என்ன ஆகும்?

எந்த ஆபத்தும் வராது. மாத்திரையின் வீரியம்தான் குறையும். ஆனால் உணவுக்குப் பின்பு சாப்பிடுகின்ற மாத்திரையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்று எரிச்சல், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகள் வரும்.

 சில மருத்துவர்கள் லேசான காய்ச்சலுக்குக்கூட நாலைந்து மாத்திரைகளைத் தருகிறார்களே?

சிலருக்கு காய்ச்சலுடன், தொண்டைப்புண், தலைவலி, உடல்வலி என கூடுதலாகப் பிரச்னைகள் இருக்கலாம். ஒவ்வொருவரின் உடல் பாதிப்பைப் பொறுத்து மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலட்சியப்படுத்தாமல், மருத்துவரின்மீது நம்பிக்கைவைத்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.

ஒரு முறை வந்த காய்ச்சலுக்கு மருத்துவர் தந்த மாத்திரையைச் சாப்பிட்டு சரியானதும், மறுமுறை காய்ச்சல் வந்தால், அதே மாத்திரையைக் கடையில் வாங்கிச் சாப்பிடலாமா?

காய்ச்சலில் பல வகை இருப்பதால், ஒருமுறை பயன்படுத்திய மாத்திரையை திரும்பவும் பயன்படுத்தும்போது, பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மருத்துவரின் ஆலோசனை பெறுவதே நல்லது.

மருத்துவர் எழுதித்தந்த மாத்திரைகள் இல்லையெனில், அதே பிராண்டில் வேறு கம்பெனி மாத்திரைகளைத் தருகிறார்களே?

சாதாரணக் காய்ச்சல், சளி போன்றவைக்கு வேறு பிராண்ட் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது பாதிப்பு இருக்காது. ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வாங்கும்போது மட்டும், மருத்துவர் எழுதித்தந்த மாத்திரைகளின் பிராண்டைத் தவிர, வேறு பிராண்டு மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது.

காலாவதியான மருந்துகளைச் சாப்பிடலாமா?

கூடாது. நிச்சயம் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Aug 31, 2014 7:38 pm

பால் உறவு, வெண்ணெய் பகை

நம்முடைய பாரம்பரிய உணவு வெண்ணெய், நெய். புராணக் கதைகளில் இருந்தே வெண்ணெய், நெய் போன்றவற்றுக்கு தனி இடம் உண்டு. ஆனாலும், இவற்றை அனைவரும் சாப்பிடலாமா? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? உணவில் நெய் சேர்த்துக்கொள்வதால் கொழுப்பு அதிகரித்து மாரடைப்பு வருமா என்பது போன்ற சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் தேனி பொது மருத்துவர் ராஜ்குமார்.

'எந்தஓர்ரு உணவையும் அளவோடு எடுத்துக்கொண்டால் பாதிப்பு இல்லை. வெண்ணெய், நெய் இரண்டுமே கொழுப்புதான். வளரும் குழந்தைகளுக்கு உணவில் வெண்ணெய், நெய் சிறிதளவு சேர்த்துக்கொள்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், பெரியவர்கள் மற்றும் முதியவர்களுக்கும் செரிமானப் பிரச்னை ஏற்படலாம்.'

குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா?

'மிகமிக குறைவாகக் கொடுக்க வேண்டும். பொதுவாக ஐந்து வயது வரை கால் டீஸ்பூன் அளவில் கொடுக்கலாம். இருப்பினும், உடல் பருமனாக உள்ள குழந்தைகளுக்கு முற்றிலும் தவிர்ப்பது நல்லது.'

முதியவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

'50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவு அதிகரிக்க இதுவும் ஒரு காரணம். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது, அது ரத்தக் குழாய்களில் படிந்து, குழாயின் சுருங்கி, விரியும் தன்மை குறைந்துவிடும். இதனால் மாரடைப்பு ஏற்படலாம். மேலும், உடலில் இதயம், தலை, கால் ஆகிய மூன்றும் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். தலையில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும்போது பக்கவாதம் ஏற்படலாம். காலில் கொழுப்புக் கட்டிச் சேரும்போது, காலுக்கு தேவையான ரத்த ஓட்டம் செல்லாமல் காலையே எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.'

பால் சத்தான உணவு. ஆனால் அதிலிருந்து பெறப்படும் வெண்ணெய், நெய் மட்டும் ஏன் உடலுக்கு கேடு?

'பாலில் கால்சியம், வைட்டமின் டி, ஈ மற்றும் தாது உப்புக்கள் அதிகம். குழந்தைகளின் எலும்புக்கும், பல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் இது மிக அவசியம். இதனால்தான் குழந்தைகளையும், பெண்களையும் ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் பால் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறோம். தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்தபிறகு கிடைக்கும் மோர்கூடச் சத்தானதுதான். ஆனால், வெண்ணெயும், நெய்யும் கொழுப்புச் சத்து கொண்டவை. சுருக்கமாகச் சொல்வதென்றால் வெண்ணெய் குறைக்கப்பட வேண்டியது, நெய் தவிர்க்கப்பட வேண்டியது.'

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Aug 31, 2014 7:48 pm

தலையணை மந்திரம்!

உழைத்த களைப்பு, நல் இரவின் நிம்மதியான தூக்கத்தில்தான் நீங்கும். இன்று பலரும் போதுமான தூக்கம் இன்றி அவதிப்படுகின்றனர். தூக்கம் வராமல் தவிப்பதற்கு, தலையணையும் ஒரு முக்கிய காரணம்.

தலையணை வைக்கலாமா...கூடாதா? எந்த மாதிரியான தலையணையைப் பயன்படுத்த வேண்டும்?.. போன்ற சந்தேகங்களுக்கு

கோயம்புத்தூரைச் சேர்ந்த மூளை மற்றும் நரம்பியல் மருத்துவர் ராமகிருஷ்ணன் விளக்கம் தருகிறார்.

'தலையணை வைப்பது நல்லதா?'


'தலையணை வைப்பது நல்லது, கெட்டது என்பதற்கு எந்த மருத்துவரீதியான நிரூபணமும் இல்லை. ஆனால், ஒரு சிலருக்கு தலையணை வைத்துப் படுப்பதால் சில பிரச்னைகள் வரலாம். உயரம் அதிகம் கொண்ட தலையணை பயன்படுத்துவதால் மட்டுமே பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.'

'தலையணை உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?'

'டர்க்கி டவல் அளவுக்கு மென்மையாகவும், அதை நான்காக மடித்தால் வரும் தடிமன் அளவுக்கு உயரமும் இருந்தால் போதும். அதையும்விட சற்று உயரமாக இருந்தால்கூட பரவாயில்லை. சின்னக் குழந்தைகளின் எலும்புகள் மென்மையாக இருக்கும். மிக குறைந்த உயரம் உள்ள இலவம் பஞ்சு தலையணையைப் பயன்படுத்தலாம். இதனால், குழந்தைக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் வராமல் இருக்கும்.'

'உயரமான தலையணை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?'

'முக்கியமான பிரச்னை, கழுத்துப் பகுதியில் சதைப்பிடிப்பு ஏற்படும். இதனால் மறுநாள் கழுத்தைத் திருப்புவதில் சிரமம் ஏற்படலாம். கழுத்துப் பகுதியில் ,இதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் முக்கிய ரத்தக்குழாய் உள்ளது. அதன் ரத்த ஓட்டம் பாதிக்கலாம்.'

'வேறு யாரெல்லாம் தலையணைகளை தவிர்க்க வேண்டும்?'

'குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கழுத்துப் பகுதியில் எலும்புத் தேய்மானம் உள்ளவர்கள், கழுத்துப் பகுதியில் உள்ள எலும்பில் சவ்வு விலகியவர்கள் தலையணையை தவிர்த்து சம நிலையில் மட்டுமே படுக்க வேண்டும். மற்றவர்கள் தலையணைப் பயன்படுத்துவதில் பிரச்னை இல்லை!'

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Aug 31, 2014 7:49 pm

ஆரோக்கியம் தொடர்பாக ஆயிரத்தெட்டு சந்தேகங்கள் நமக்குள் ஓடிக் கொண்டேதான் இருக்கும். ஒருவர் சரி என்று சொல்லும் முறையை, இன்னொருவர் தவறு என்பார். எதுதான் சரி என்று ஒவ்வொன்றுக்கும் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியுமா? நம் அனைவரின் சந்தேகங்கள், அவற்றின் தீர்வுகள் குறித்து சகல விஷயங்களையும் ஆராயும் பகுதிதான், 'டாக்டர் எனக்கு ஒரு டவுட்!’
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? P52
'சாப்பிடும்போது நடுநடுவுல தண்ணீர் குடிக்கக் கூடாதுன்னு சொல்றாங்களே? குறைவா குடிச்சா, உடலுக்குக் கேடு. அதிகமா குடிச்சாலும் ஆபத்துனு அடிக்கடி பேப்பர்ல வருது. இதில் எது சரி... எது தவறு? ஒரு மனுஷன் எப்ப, எந்த அளவுக்குத் தண்ணீர் குடிக்கணும்?’ போன்ற பல சந்தேகங்களைக் களைகிறார் உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி.

''ஜீரண சக்திக்கு, உடல் சூட்டை ஒரே சீராக வைக்க, ஹார்மோன் மாற்றத்திற்கு, சருமப் பொலிவுக்கு என உடலுக்கு தண்ணீர் அவசியம். சராசரியாக ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், ஒன்றரை லிட்டர் தண்ணீர் வெளியில் போகும். இந்த நீர்ச் சத்து உடலுக்குத் தண்ணீர் மூலம் நேரடியாகவும், சாம்பார், ரசம், ஜூஸ், காய்கறிகள், பழங்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற உணவின் மூலமாகவும் உடலில் சேர்ந்துவிடும்.

எவ்வளவு?

 சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1,500 மில்லி அதாவது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அவசியம். ஏழு முதல் எட்டு தம்ளர் வரை அவசியம் தேவை.

 கோடைக் காலத்தில் சருமத்தின் மூலமாக வியர்வை வெளியேறுவதால், வறட்சி, போன்ற காரணங்களால் தண்ணீரின் தேவை இன்னும் கூடுதலாக மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தேவைப்படும்.

 விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியாளர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பது நல்லது.

எப்படி?

 வெறும் வயிற்றில் இரண்டு தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

 சாப்பிட்டவுடன், தொடர்ந்து மருந்து சாப்பிடுபவராக இருந்தால், அரை தம்ளர் முதல் ஒரு தம்ளர் வரை குடிக்கலாம்.

 காலையில் டிபன் சாப்பிட்டதும், இரண்டு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்பும் என தண்ணீரை குடிப்பது நல்லது.

 உணவு உண்ணத் தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்கச் செய்வதற்கான திரவம் சுரக்கத் தொடங்கும். வாயில் உள்ள உமிழ்நீரே உணவை உள்ளே தள்ளப் போதுமானது. கூடுதலாகத் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தும்போது, தண்ணீர் ஜீரணத் திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை மந்தமாக்கும். சாப்பிடும்போது நடுநடுவே தண்ணீர் அருந்தக் கூடாது.

 அதிக உப்பு, காரம் சேர்த்து சாப்பிடும்போது, தாகத்தைத் தூண்டி அதிக தண்ணீரை கேட்கும். தவிர்ப்பது நல்லது.

 உணவை வேகமாக சாப்பிடும்போதும் தண்ணீரின் தேவை அதிகரிக்கும். நிதானமாக சாப்பிடப் பழகுங்கள்.

 நமது உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்திப் பெற்றுக்கொள்ளும். ஒவ்வொருவரின் உடல்வாகு, வசிப்பிடம், மற்றும் வெப்பநிலை நிலை பொறுத்து, தண்ணீரின் தேவை அளவு மாறும்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Aug 31, 2014 7:50 pm

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு? P52

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக