புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 14:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 14:09
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 10:28
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06
» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32
» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
by ஜாஹீதாபானு Today at 14:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 14:09
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 10:28
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06
» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32
» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
104-க்கு கால் பண்ணுங்க!
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. நான் ஒதுங்கிய இடம் கோஷா ஆஸ்பத்திரி என்று அழைக்கப்படும் அரசினர் கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனை. உள்ளே 108 ஆம்புலன்ஸுகள் அடிக்கடி போய் வருவதைப் பார்த்து, 'ஏதோ எமர்ஜென்ஸி' என்று உள்ளே நுழைந்தேன். அந்த மருத்துவமனை வளாகத்தில்தான், தமிழகத்தின் 108 ஆம்புலன்ஸ் சர்வீஸின் கன்ட்ரோல் ரூம் இருக்கிறது. தமிழகம் முழுவதும் 684 ஆம்புலன்ஸ்கள் ஓடுகின்றன.
அங்கிருந்த டெஸ்கில் 50 பேர் பரபரவென பேசியபடி இருந்தனர். பொதுமக்கள் 108-க்கு டயல் செய்ததும் அவர்களின் கால் இந்த கன்ட்ரோல் ரூம் போனுக்குத்தான் வருகிறது. அவர்களிடம் விவரங்களைக் கேட்டு உடனடியாக அந்த ஏரியாவுக்கு அருகில் உள்ள ஆம்புலன்ஸுக்குத் தகவல் அனுப்பி வைப்பது இவர்களின் வேலை. இங்கே டாக்டர்கள் டெஸ்க்கும் இருக்கிறது. ஆம்புலன்ஸில் இருப்பவர்களின் நிலைமையைக் கேட்டு டாக்டர்கள் டிப்ஸ் கொடுக்கிறார்கள். இப்படியாக, 160 பேர் மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
ஆத்தூரிலிருந்து ஒரு போன்...
''இங்கே டோல்கேட் பக்கத்துல ஒரு பஸ்ஸும் லாரியும் மோதி விபத்து. பஸ்ஸில் இருக்கிறவங்க வலியால கத்திட்டு இருக்காங்க. உடனே ஆம்புலன்ஸை அனுப்புங்க..''
அதையடுத்து, அருகில் இருந்த நான்கு ஆம்புலன்ஸுகளை விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி வைப்பதில் மும்முரமானர்கள்.
அதே நேரம் தஞ்சாவூரிலிருந்து போன்...
''ஐயா... என் பொண்ணு தீ வைச்சுகிட்டா. உடம்பு முழுக்க தீக்காயம். துடிச்சிட்டு இருக்கா. எப்படியாவது காப்பாத்துங்க''
அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸை அனுப்பிவிட்டு, வேனில் இருந்த ஊழியரிடம், கன்ட்ரோல் ரூமில் இருந்து விசாரிக்கிறார்கள்.
''70% தீக்காயம். என்ன செய்யலாம்?''
''உடனே, சலைன் வாட்டர் ஏற்றுங்கள். எவ்வளவு சீக்கிரமாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக முடியுமோ கொண்டு போங்கள்''- டாக்டர் அட்வைஸ் கொடுக்கிறார்.
கடலூரிலிருந்து போன்...
''சார்.. நெஞ்சுவலிக்குது. மூச்சு வாங்குது. வியர்த்துக்கொட்டுது. வலது கையைத் தூக்கவே முடியலை!''- பாதிக்கப்பட்டவரே பேசுகிறார்.
இந்தத் தகவல் சொன்னவரின் முகவரிக்கு ஆம்புலன்ஸ் விரைகிறது.
''வென்டிலேட்டர் இணைத்துவிட்டோம். இதயத்துடிப்பு தாறுமாறாக இருக்கிறது. ஆஸ்பத்திரியை நெருங்கிவிட்டோம்'' என்று ஆம்புலன்ஸில் இருந்த ஊழியர் கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் தருகிறார்.
சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்தரியில் இருந்து அவசர அழைப்பு...
''தலையில் காயம். அவரை உடனடியாக ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவேண்டும். உடனே வரவும்'' என்று போன் வர, 108 கன்ட்ரோல் ரூம் வளாகத்தில் நின்ற ஆம்புலன்ஸ் நீல விளக்குகள் ஒளிர... சைரன் எழுப்பியபடி கிளம்பியது. நானும் தொற்றிக்கொண்டேன்.
வேனில் இருந்த அவசரகால மருத்துவ உதவியாளர் நாகேந்திரன், ''இப்படித்தான் சார்... நேத்து பீச் ரோட்டுல பைக் ஸ்கிட் ஆகி ஒருத்தர் விழுந்து கிடந்தாரு. முகமெல்லாம் சிதைஞ்சு கிடந்துச்சு. தூக்கிட்டுப்போய் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். அவரோட குடும்பத்தை நினைச்சா கஷ்டமாயிருக்கு. அவரை நம்பி எத்தனை ஜீவன் இருக்கோ?'' என்றார்.
வேன் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தது. ஒரு இளைஞர் நினைவிழந்து கிடந்தார். அருகில் அவரது குடும்பத்தினர் பதற்றத்துடன் நின்றிருந்தனர்.
''ஐயா... எங்க பையன் பேரு ராஜன். 17 வயசுதாங்க ஆகுது. கொஞ்சம் முன்னாடி, பைக் ஆக்ஸிடென்ட். மூக்குல ரத்தம் வருது. தலைக்காயமா இருக்கு. இங்கே பார்க்க முடியாதுன்னு சொல்றாங்க...'' என்று சொல்லி கதறினர்.
ஸ்ட்ரச்சரில் படுக்கவைத்து வேனில் ஏற்றினர். ஆம்புலன்ஸின் பின்புறம் மினி எமர்ஜென்சி வார்டு இருந்தது. ஹார்ட் அட்டாக், தலைக்காயம், உடல் உறுப்புகள் துண்டானால் அவற்றைப் பாதுகாக்கப் பெட்டி என்று ஏகப்பட்ட உபகரணங்கள் தயார் நிலையில் இருந்தன. ராயப்பேட்டை டூ பொது மருத்துவமனை செல்லும் வழியில், இளைஞரின் உடல்நிலை குறித்து கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் கொடுத்தபடி இருந்தனர்.
ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் நுழைந்தது. நான் சென்ற ஆம்புலன்ஸில் இருந்த இளைஞரை எமர்ஜென்சி வார்டுக்குள் ஸ்ட்ரச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு ஓடினார்கள். சென்னை மற்றும் புறநகர், வடமாவட்டங்களில் எங்கு விபத்து நடத்தாலும் பெரிய மருத்துவமனை என்பதால் இங்கேதான் ஆம்புலன்ஸில் தூக்கி வருகிறார்கள்.
ரிட்டர்ன் டு கன்ட்ரோல் ரூம். கால் சென்டர் மாடியில், 104 ஹெல்த் ஹெல்ப் லைன் கால் சென்டர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. 'சார், நான் கிண்டியில இருந்து பேசுறேன். காலையில இருந்து வயிறு வலியாக இருக்கு. என்ன மாத்திரை சாப்பிடலாம்?’ என்று கேட்டார் ஒருவர். அவர் பெயரையும், முகவரியையும் கேட்டு அவருக்கு ஒரு ஐ.டி நம்பர் கொடுத்தார்கள். பிறகு, அவரது லைன், டாக்டருக்கு மாற்றப்பட்டது. அவரது பிரச்னைகளை கேட்டார் டாக்டர். 'வயிறு வலிக்கு எடுத்ததும் மாத்திரை போட வேண்டாம். நார்ச் சத்துள்ள காய்கறிகள் நிறைய சாப்பிடுங்க. காலையில் ரெகுலரா வாக்கிங் போங்க... அதுக்குப் பிறகும் சரியாகவில்லை என்றால் டாக்டரைப் பாருங்க’ என்று வழிகாட்டினார். மருத்துவம் சார்ந்த எல்லா பிரச்னைகளுக்கும் இங்கே 24 மணி நேரமும் ஆலோசனை வழங்குகிறார்கள். அதேபோல், தமிழகத்தில் உள்ள எந்த அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏதாவது குறைபாடு என்றாலும், கிராமப்புறங்களில் மர்மக்காய்ச்சல், தொற்றுநோய் எதுவானாலும் இதே எண்ணுக்குப் போன் மூலம் தகவல் தரலாம். இதற்காகவே, 2,500 செல்போன் நம்பர்களை அங்கிருக்கும் முக்கிய அதிகாரிகளுக்கு கொடுத்து வைத்திருக்கிறார்கள். எங்கிருந்தாவது புகார் வந்தால், இந்த செல்போனுக்கு ஹெல்ப் லைனில் இருந்து போன் போகிறது.
தென் சென்னையில் இருந்து வந்த ஒரு போன் கால்...
''எனக்கு மனசே சரியில்லை. தற்கொலை பண்ணிக்கலாம்னு இருக்கேன். யாருகிட்டயாவது பேசணும்போல இருந்தது. அதான் போன் பண்ணினேன்'' என்று பேச ஆரம்பித்தார் ஒருவர். அவரை சமாதானப்படுத்திப் பேசினார் கால் சென்டர் ஹேமலதா. நைஸாக அவரது சகோதரரின் போன் நம்பரை வாங்கிவிட்டார். இன்னொரு லைனில் அவரது சகோதரருக்குத் தகவல் சொல்லி அவரை உடனடியாக வீட்டுக்கு அனுப்பினார்கள். அதுவரை அவரிடம் பேச்சுகொடுத்தபடியே இருந்தார் ஹேமலதா.
கால் சென்டரில் இருப்பவர்களிடம் நான் கேட்டேன். ''ஏதாவது மிரட்டல் கால்கள் வந்திருக்கா?''
''நேத்துகூட உயர் நீதிமன்றம் அருகில் குண்டு வெடிக்கும் என்று கால் வந்தது. போலீஸுக்குச் சொல்லிட்டோம். கடலூரில் இருந்து ஒரு பெண்மணி விவகாரத்து ஆன அவரது கணவரை மாட்டிவிடுவதற்காக ஒரு தந்திரம் செய்தார். திருமண பரிசாக கணவர் வாங்கிக்கொடுத்த செல்போனில் இருந்து மிரட்டல் விடுத்திருக்கிறார். அதில் மாட்டிக்கொண்டார். இப்படி அடிக்கடி வரும். வாய்ஸ் ரெக்கார்டு பண்ணி விஷயத்தை போலீஸுக்குச் சொல்லிவிடுவோம்'' என்றனர்.
''கடந்த ஆறு வருடங்களில் 108-க்கு மூணு கோடி அவசர போன்கள் வந்துள்ளன. அவற்றில் பல லட்சம் பேரின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். குறிப்பாக, எட்டு லட்சம் கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக இதில் பயணம் செய்து குழந்தை பெற்றிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தது மனசுக்கு நிறைவாக இருந்தது'' என்று சொன்னார்கள்.
ஆந்தை கண்ணில் நல்ல விஷயங்கள் படக்கூடாதா என்ன?
ஜூனியர் விகடன்
14 Sep, 2014
அங்கிருந்த டெஸ்கில் 50 பேர் பரபரவென பேசியபடி இருந்தனர். பொதுமக்கள் 108-க்கு டயல் செய்ததும் அவர்களின் கால் இந்த கன்ட்ரோல் ரூம் போனுக்குத்தான் வருகிறது. அவர்களிடம் விவரங்களைக் கேட்டு உடனடியாக அந்த ஏரியாவுக்கு அருகில் உள்ள ஆம்புலன்ஸுக்குத் தகவல் அனுப்பி வைப்பது இவர்களின் வேலை. இங்கே டாக்டர்கள் டெஸ்க்கும் இருக்கிறது. ஆம்புலன்ஸில் இருப்பவர்களின் நிலைமையைக் கேட்டு டாக்டர்கள் டிப்ஸ் கொடுக்கிறார்கள். இப்படியாக, 160 பேர் மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
ஆத்தூரிலிருந்து ஒரு போன்...
''இங்கே டோல்கேட் பக்கத்துல ஒரு பஸ்ஸும் லாரியும் மோதி விபத்து. பஸ்ஸில் இருக்கிறவங்க வலியால கத்திட்டு இருக்காங்க. உடனே ஆம்புலன்ஸை அனுப்புங்க..''
அதையடுத்து, அருகில் இருந்த நான்கு ஆம்புலன்ஸுகளை விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி வைப்பதில் மும்முரமானர்கள்.
அதே நேரம் தஞ்சாவூரிலிருந்து போன்...
''ஐயா... என் பொண்ணு தீ வைச்சுகிட்டா. உடம்பு முழுக்க தீக்காயம். துடிச்சிட்டு இருக்கா. எப்படியாவது காப்பாத்துங்க''
அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸை அனுப்பிவிட்டு, வேனில் இருந்த ஊழியரிடம், கன்ட்ரோல் ரூமில் இருந்து விசாரிக்கிறார்கள்.
''70% தீக்காயம். என்ன செய்யலாம்?''
''உடனே, சலைன் வாட்டர் ஏற்றுங்கள். எவ்வளவு சீக்கிரமாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக முடியுமோ கொண்டு போங்கள்''- டாக்டர் அட்வைஸ் கொடுக்கிறார்.
கடலூரிலிருந்து போன்...
''சார்.. நெஞ்சுவலிக்குது. மூச்சு வாங்குது. வியர்த்துக்கொட்டுது. வலது கையைத் தூக்கவே முடியலை!''- பாதிக்கப்பட்டவரே பேசுகிறார்.
இந்தத் தகவல் சொன்னவரின் முகவரிக்கு ஆம்புலன்ஸ் விரைகிறது.
''வென்டிலேட்டர் இணைத்துவிட்டோம். இதயத்துடிப்பு தாறுமாறாக இருக்கிறது. ஆஸ்பத்திரியை நெருங்கிவிட்டோம்'' என்று ஆம்புலன்ஸில் இருந்த ஊழியர் கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் தருகிறார்.
சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்தரியில் இருந்து அவசர அழைப்பு...
''தலையில் காயம். அவரை உடனடியாக ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவேண்டும். உடனே வரவும்'' என்று போன் வர, 108 கன்ட்ரோல் ரூம் வளாகத்தில் நின்ற ஆம்புலன்ஸ் நீல விளக்குகள் ஒளிர... சைரன் எழுப்பியபடி கிளம்பியது. நானும் தொற்றிக்கொண்டேன்.
வேனில் இருந்த அவசரகால மருத்துவ உதவியாளர் நாகேந்திரன், ''இப்படித்தான் சார்... நேத்து பீச் ரோட்டுல பைக் ஸ்கிட் ஆகி ஒருத்தர் விழுந்து கிடந்தாரு. முகமெல்லாம் சிதைஞ்சு கிடந்துச்சு. தூக்கிட்டுப்போய் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். அவரோட குடும்பத்தை நினைச்சா கஷ்டமாயிருக்கு. அவரை நம்பி எத்தனை ஜீவன் இருக்கோ?'' என்றார்.
வேன் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தது. ஒரு இளைஞர் நினைவிழந்து கிடந்தார். அருகில் அவரது குடும்பத்தினர் பதற்றத்துடன் நின்றிருந்தனர்.
''ஐயா... எங்க பையன் பேரு ராஜன். 17 வயசுதாங்க ஆகுது. கொஞ்சம் முன்னாடி, பைக் ஆக்ஸிடென்ட். மூக்குல ரத்தம் வருது. தலைக்காயமா இருக்கு. இங்கே பார்க்க முடியாதுன்னு சொல்றாங்க...'' என்று சொல்லி கதறினர்.
ஸ்ட்ரச்சரில் படுக்கவைத்து வேனில் ஏற்றினர். ஆம்புலன்ஸின் பின்புறம் மினி எமர்ஜென்சி வார்டு இருந்தது. ஹார்ட் அட்டாக், தலைக்காயம், உடல் உறுப்புகள் துண்டானால் அவற்றைப் பாதுகாக்கப் பெட்டி என்று ஏகப்பட்ட உபகரணங்கள் தயார் நிலையில் இருந்தன. ராயப்பேட்டை டூ பொது மருத்துவமனை செல்லும் வழியில், இளைஞரின் உடல்நிலை குறித்து கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் கொடுத்தபடி இருந்தனர்.
ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் நுழைந்தது. நான் சென்ற ஆம்புலன்ஸில் இருந்த இளைஞரை எமர்ஜென்சி வார்டுக்குள் ஸ்ட்ரச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு ஓடினார்கள். சென்னை மற்றும் புறநகர், வடமாவட்டங்களில் எங்கு விபத்து நடத்தாலும் பெரிய மருத்துவமனை என்பதால் இங்கேதான் ஆம்புலன்ஸில் தூக்கி வருகிறார்கள்.
ரிட்டர்ன் டு கன்ட்ரோல் ரூம். கால் சென்டர் மாடியில், 104 ஹெல்த் ஹெல்ப் லைன் கால் சென்டர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. 'சார், நான் கிண்டியில இருந்து பேசுறேன். காலையில இருந்து வயிறு வலியாக இருக்கு. என்ன மாத்திரை சாப்பிடலாம்?’ என்று கேட்டார் ஒருவர். அவர் பெயரையும், முகவரியையும் கேட்டு அவருக்கு ஒரு ஐ.டி நம்பர் கொடுத்தார்கள். பிறகு, அவரது லைன், டாக்டருக்கு மாற்றப்பட்டது. அவரது பிரச்னைகளை கேட்டார் டாக்டர். 'வயிறு வலிக்கு எடுத்ததும் மாத்திரை போட வேண்டாம். நார்ச் சத்துள்ள காய்கறிகள் நிறைய சாப்பிடுங்க. காலையில் ரெகுலரா வாக்கிங் போங்க... அதுக்குப் பிறகும் சரியாகவில்லை என்றால் டாக்டரைப் பாருங்க’ என்று வழிகாட்டினார். மருத்துவம் சார்ந்த எல்லா பிரச்னைகளுக்கும் இங்கே 24 மணி நேரமும் ஆலோசனை வழங்குகிறார்கள். அதேபோல், தமிழகத்தில் உள்ள எந்த அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏதாவது குறைபாடு என்றாலும், கிராமப்புறங்களில் மர்மக்காய்ச்சல், தொற்றுநோய் எதுவானாலும் இதே எண்ணுக்குப் போன் மூலம் தகவல் தரலாம். இதற்காகவே, 2,500 செல்போன் நம்பர்களை அங்கிருக்கும் முக்கிய அதிகாரிகளுக்கு கொடுத்து வைத்திருக்கிறார்கள். எங்கிருந்தாவது புகார் வந்தால், இந்த செல்போனுக்கு ஹெல்ப் லைனில் இருந்து போன் போகிறது.
தென் சென்னையில் இருந்து வந்த ஒரு போன் கால்...
''எனக்கு மனசே சரியில்லை. தற்கொலை பண்ணிக்கலாம்னு இருக்கேன். யாருகிட்டயாவது பேசணும்போல இருந்தது. அதான் போன் பண்ணினேன்'' என்று பேச ஆரம்பித்தார் ஒருவர். அவரை சமாதானப்படுத்திப் பேசினார் கால் சென்டர் ஹேமலதா. நைஸாக அவரது சகோதரரின் போன் நம்பரை வாங்கிவிட்டார். இன்னொரு லைனில் அவரது சகோதரருக்குத் தகவல் சொல்லி அவரை உடனடியாக வீட்டுக்கு அனுப்பினார்கள். அதுவரை அவரிடம் பேச்சுகொடுத்தபடியே இருந்தார் ஹேமலதா.
கால் சென்டரில் இருப்பவர்களிடம் நான் கேட்டேன். ''ஏதாவது மிரட்டல் கால்கள் வந்திருக்கா?''
''நேத்துகூட உயர் நீதிமன்றம் அருகில் குண்டு வெடிக்கும் என்று கால் வந்தது. போலீஸுக்குச் சொல்லிட்டோம். கடலூரில் இருந்து ஒரு பெண்மணி விவகாரத்து ஆன அவரது கணவரை மாட்டிவிடுவதற்காக ஒரு தந்திரம் செய்தார். திருமண பரிசாக கணவர் வாங்கிக்கொடுத்த செல்போனில் இருந்து மிரட்டல் விடுத்திருக்கிறார். அதில் மாட்டிக்கொண்டார். இப்படி அடிக்கடி வரும். வாய்ஸ் ரெக்கார்டு பண்ணி விஷயத்தை போலீஸுக்குச் சொல்லிவிடுவோம்'' என்றனர்.
''கடந்த ஆறு வருடங்களில் 108-க்கு மூணு கோடி அவசர போன்கள் வந்துள்ளன. அவற்றில் பல லட்சம் பேரின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். குறிப்பாக, எட்டு லட்சம் கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக இதில் பயணம் செய்து குழந்தை பெற்றிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தது மனசுக்கு நிறைவாக இருந்தது'' என்று சொன்னார்கள்.
ஆந்தை கண்ணில் நல்ல விஷயங்கள் படக்கூடாதா என்ன?
ஜூனியர் விகடன்
14 Sep, 2014
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|