புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_m10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10 
306 Posts - 42%
heezulia
பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_m10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_m10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_m10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_m10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_m10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_m10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10 
6 Posts - 1%
prajai
பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_m10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10 
5 Posts - 1%
manikavi
பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_m10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_m10பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 13, 2014 8:04 pm

பா.ஜ.வுடன் இனி எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு!  Tamil%20aruvi
சென்னை: தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பது உள்பட தமிழ் இனத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயற்படாத பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காந்திய மக்கள் இயக்கத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று அந்த இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், " காந்திய மக்கள் இயக்கம் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் நடந்தேறிய ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பாரம்பரிய விழுமியங்களை மீட்டெடுக்கவும் அரசியல் களத்தில் புனிதம் செறிந்த ஒரு வேள்வியை நடத்திக்கொண்டிருக்கிறது.

மத்தியில் பல்வேறு ஊழல்களுக்கு உற்சவம் நடத்திய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆட்சிப் பீடத்தில் இருந்து அகற்றவும், தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளின் பிடியிலிருந்தும் மக்களை விடுவிக்கவும், மாற்று அரசியலை இந்த மண்ணில் வளர்த்தெடுக்கவும் காந்திய மக்கள் இயக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி அமைவதில் தன்னுடைய பங்களிப்பைத் தந்தது.

சிறுபான்மை மக்களின் அவநம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் ராமர் கோயில் விவகாரம், பொது சிவில் சட்டம் , காஷ்மீர் மாநிலத்திற்குரிய விஷேச அந்தஸ்து ஆகியவற்றில் முரண்பட்ட கருத்துக்களை விவாதப் பொருளாக வைக்கலாகாது என்றும், ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதில் இலங்கை அரசின் மீது கடுமையான நிர்பந்தங்களை விதிக்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என்றும் மத்திய பா.ஜ.க., தலைவர்களிடமும் மாநில பா.ஜ.க., தலைவர்களிடமும் நிபந்தனைகளை முன்வைத்து, அவற்றின் அடிப்படையில்தான் தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால் மோடியின் அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நடந்து முடிந்த நிலையில், இந்த நிபந்தனைகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டன .

தமிழகத்து மீனவர்கள் இலங்கை அரசின் கொடுமைகளுக்கு உள்ளாவது முற்றுப் பெறாத தொடர்கதை ஆகிவிட்டது. ஈழத்தமிழர்களுக்கு 13வது அரசியல் சட்ட திருத்தத்தின்படி மிகக் குறைந்த உரிமைகளைக் கூட இலங்கை அரசிடமிருந்து பெற்று தரும் முயற்சியில் மோடியின் அரசு ஒரு அங்குலம்கூட முன்னேறவில்லை. சுப்பிரமணியன் சாமி தமிழர் நலனுக்கு எதிராகவும், தமிழக மீனவர் நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயற்படுவதை மோடியின் அரசு மௌனப் பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ராமர் கோயில் கட்டுவதற்கு இதுவரை இருந்த தடைகள் அகற்றப்படும் என்று பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் முரளீதரராவ் வாய் மலர்ந்திருக்கிறார். உத்தரபிரதேசத்தில் மதக்கலவரங்கள் தொடர்ந்தால், பா.ஜ.க., மாநில அரசைக் கைப்பற்றுவதற்கு வழியை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா பிரகடனம் செய்திருக்கிறார். சமூக நல்லிணக்கத்தையும் சமயங்களுக்கிடையே ஒற்றுமையையும் பேணிப் பாதுகாப்பதில் பா.ஜ.க.,விற்கு உண்மையான ஈடுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் இன நலனுக்கு எதிராக காங்கிரசை விட மிக மோசமான அணுகுமுறையையே பா.ஜ.க. அரசு பின்பற்றுகிறது. தமிழ் மண்ணின் ஓர் அங்கமான கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கு மாறாக காங்கிரஸ் வழியிலேயே நீதி மன்றத்தில் வாக்குமூலம் வழங்குகிறது.

எந்த வகையிலும் தமிழ் இனத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயற்படாத தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காந்திய மக்கள் இயக்கத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதத்தை மையமாக வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடிய கட்சிகளையும், ஜாதி உணர்வை வெறியாக மாற்றி அரசியல் நடத்தும் கட்சிகளையும் தமிழகத்தில் பொதுவாழ்வை ஊழல் மலிந்த சுயநலவாதிகளின் வேட்டைக் காடாக மாற்றிச் சீரழித்து விட்ட இரண்டு திராவிடக் கட்சிகளையும் விட்டு விலகி நிற்பவர்களோடு மட்டுமே காந்திய மக்கள் இயக்கம் இனி வரும் காலங்களில் இணைந்து செயற்படும்.

அப்படி ஒரு சூழ்நிலை அமையவில்லை எனில் காந்திய மக்கள் இயக்கம் வெற்றி தோல்விகளைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் மக்கள் நலன் சார்ந்து புனிதம் செறிந்த அரசியல் வேள்வியைத் தன்னந்தனியாக நடத்தவும் தயாராக இருக்கிறது. அதற்கான முதல் முயற்சிதான் கோவை மாநகராட்சி மேயர் தேர்தலிலும், திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர் தேர்தலிலும் காந்திய மக்கள் இயக்கம் தனியாகக் களம் காண்கின்றது.

நேர்மையும் நல்லொழுக்கமும் ஊழலற்ற அரசியல் தூய்மையும் மதுவின் வாசனையற்ற சூழலும் பல்கிப் பெருக வேண்டும் என்று நினைக்கும் வாக்காளர்களின் ஆதரவை மட்டும் காந்திய மக்கள் இயக்கம் எதிர்ப்பார்க்கிறது" என்று கூறியுள்ளார்.

rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Sat Sep 13, 2014 8:59 pm

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காந்திய மக்கள் இயக்கத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று அந்த இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.

ரொம்ப சந்தோஷம் - பா ஜா காவுக்கு

ராமர் கோவில் கட்டுவதை பற்றி பாஜாகா கட்சி நிர்வாகி கூறுவதை நம்பும் நீங்கள் இலங்கையுடன் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்று சுஷ்மா ஸ்வராஜ் சொல்வதையும் நம்புவதுதானே.

பொது சிவில் சட்டம் எப்போதோ வரவேண்டிய ஒன்று காங்கிரசால் இவ்வளவு காலம் தள்ளி போடப்பட்டது. பொது சிவில் சட்டம் வந்தால் சிறு பான்மையினர் எப்படி ஐயா நசுக்கப்படுவார்கள், புரியவில்லை. நம் நாடு ஒன்றை தவிர வேறு எந்த நாட்டிலும் பாக்கிஸ்த்தான் உளப்பட தனிதனி சட்டம் வெவ்வேறு மதத்தவர்களுக்கு கிடையாது.

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்றால் தமிழருவி மணியன் சொல்வதில் அர்த்தமில்லை. அவர்களும் இந்தியர்கள் தானே எதற்கு சிறப்பு. இல்லை என்றால்( தமிழருவி மணியன் அதைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை ) இதுவரை நாம் செய்த செலவுகளே மிக அதிகம். வீண். தண்டம். ஆதலால் சிறப்பு அந்தஸ்த்து எப்படியாகிலும் மறுக்கப்படவேண்டும். நேரு காலத்து கோளாறு இது.

உதிரப்ப்ரதேசத்தில் நடக்கும் கூத்துக்களை அப்பாவும் மகனும் அரங்கேற்றி ரசிக்க ஆட்சி நாடகமல்ல. கலவரம் என்றால் செய்வது மெஜாரிட்டி தானா மைனாரிட்டி செய்வதில்லையா. இந்தியாவை பொறுத்தவரை குண்டு வெடிப்புக்கள் கலவரம் அடிதடி 15 நிமிட கேடு இவையெல்லாம் வைப்பவர்கள் மைனாரிட்டி தான் இவைகளை தட்டி கேட்க்க அரசியல் வாதிகளுக்கு வாயே கிடையாதா. எதோ தெற்கில் சையதும் சிவமும் இதுவரை ஒற்றுமையாய் இருக்கிறார்கள் அரசியல் வியாதிகள் அவ்வோற்றுமையை குலைக்கப்பார்க்கிரார்கள். வேற்றுமையில் கிடைப்பது 15 சதவிகித ஓட்டு, அவ்வளவுதான்.

தமிழகத்தை பொறுத்தவரை காமராஜருக்கு பிறகு நடப்பதெல்லாம் ஊழல்தானே, இதுவரை அது கண்ணில் படவில்லையா அவர் என்ன பேரம் பேசினாரோ அது கொடுக்கப்படவில்லையோ யார் கண்டது.

தமிழக அரசியல் வாதிகள் இன்னும் கொஞ்ச நாளில் தமிழகத்துடன் ஒதுக்கப்படப்போகிரார்கள் அது மட்டும் நிச்சயம்.

சிவம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக