புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
First topic message reminder :
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் -1
ஆப்ரஹாம் லிங்கன்
ஒரு மனிதனால் எத்தனை தோல்விகளைத் தாங்க முடியும். ஒன்று இரண்டு அதற்குள்ளாகவே மனமொடிந்து விடுவார்கள். தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால் தோல்விகளை தடைக்கற்களாகக் கருதாமல் அவற்றைப் படிக்கற்களாகக் கருதி தோல்விகளிலிருந்து பெற்ற அனுபவங்களையே தன் வாழ்க்கையின் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.
தோல்விகள் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள் சாதாரண மனிதர்கள். அந்தத் தோல்வியையே துவண்டு போகச் செய்வார்கள் வெற்றிவீரர்கள்.
அப்படித் தோல்விக்கே தோல்வியைக் கொடுத்தவர்தான் ஆப்ரஹாம் லிங்கன்.
ஆம் அவர் காணாத தோல்விகள் இல்லை, ஆனால் அத்தனை தோல்விகளிலிருந்தும் மீண்டு வந்தார்.
தோல்விகளின் குழந்தை என்றுகூட அவரை செல்லமாக அழைத்தார்கள்.
அவரின் தோல்விகளிலிருந்து அவர் மட்டும் பாடம் கற்கவில்லை நாமும் கற்றுக் கொள்ளலாம்.
அவருடைய 22 வயதிலிருந்து 51 வயது வரை அவர் கண்ட தோல்விகள் ஏராளம்.
வியாபாரத்தில் தோல்வி, சட்டம் படிப்பதில் தோல்வி, தேர்தலில் தோல்வி, காதலில் தோல்வி, செனட் தேர்தலில் தோல்வி, துணை அதிபர் தேர்தலில் தோல்வி என்று அவர் தோல்வியின் அத்தனை பரிமாணங்களையும் கண்டார்.
ஆனால் அவர் அதற்காகவெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை.
தன் கடமையை நேரம் தவறாமல் செய்துகொண்டே வந்தார். தினந்தோறும் அவரின் வேலைகளைச் செய்வதில் அவர் அயரவில்லை.
அவர் தோல்வியுற்றபோதெல்லாம் அவரைக் கேலிசெய்தவர்களைக் கண்டு அவர் மனம் நோகவில்லை. அவர்களின் எண்ணம் அப்படி, எனது எண்ணம் வெற்றியை அடைவதுதான் என்று அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார்.
கடைசியாக அவர் அத்தனை தோல்விகளுக்கு அப்புறமாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.
ஆனால் அப்போதும் பலர் குறை சொன்னார்கள். நம்மைச்சுற்றி எப்போதும் குறைசொல்லவும், கிண்டலடிக்கவும் ஆட்கள் இருப்பார்கள்.
அதைத்தாண்டி வருவது மட்டுமே வெற்றியாளனாக நினைப்பவரின் வேலை.
நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிபெறுவது என்பது சாத்தியமல்ல. அதற்காக வேலை ஒன்றும் பார்க்காமல் இருப்பதும் புத்திசாலித்தனமல்ல.
இறங்கி வேலை பார்க்க வேண்டும், வழியில் முட்களும் இருக்கும், ரோஜாக்களும் இருக்கும். ரோஜாக்களை நினைத்துக் கொண்டே முட்களைக் கடக்க வேண்டும்.
லிங்கனின் கடைசி லட்சியமான அதிபர் பதவியை அவர் அடைவதற்கு முன் அவர் பட்ட தோல்விகளை நினைத்துப் பார்த்தால் சாதாரணக் காரியங்களுக்கு நாம் படும் துயரங்கள் எல்லாம் துச்சமாகத் தெரியும்.
வாழ்க்கையில் வீழ்வது என்பது பெரிய விஷயமல்ல, அந்த வீழ்ச்சியை நினைத்துக்கொண்டு வீழ்ந்தே கிடப்பதுதான் முட்டாள்தனம்.
வீழ்ந்ததே தெரியாமல் உடனே எழுபவன்தான் வெற்றிக்கோட்டைத் தொடுகின்றான்.
தோல்வி என்பது நாம் துயரப்பட வருவதல்ல, நம்மை பலப்படுத்த வருவது. நம் மனதை மேலும் மேலும் வெற்றியை நோக்கிச் செலுத்த வருவது.
தோல்விகளைத் தட்டிவிட்டு விரைபவன் வெற்றிக்கனியை சுவைப்பான்.
தோல்வி தந்த சோகத்தில் ஆழ்பவன் , புதைகுழியில் வீழ்வான்.
தோல்வி வரும்போதெல்லாம் லிங்கனை நினைத்துக் கொள்ளுங்கள். எழுந்து வெற்றியை நோக்கிச் செல்லுங்கள்.
தோல்விகள் என்பவை தடைக்கற்கள் அல்ல, அவையே வெற்றிக்குப் படிக்கற்கள். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் அந்தப் பாடத்தை உங்கள் வெற்றிக்குப் பயன்படுத்துங்கள்.
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் -1
ஆப்ரஹாம் லிங்கன்
ஒரு மனிதனால் எத்தனை தோல்விகளைத் தாங்க முடியும். ஒன்று இரண்டு அதற்குள்ளாகவே மனமொடிந்து விடுவார்கள். தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால் தோல்விகளை தடைக்கற்களாகக் கருதாமல் அவற்றைப் படிக்கற்களாகக் கருதி தோல்விகளிலிருந்து பெற்ற அனுபவங்களையே தன் வாழ்க்கையின் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.
தோல்விகள் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள் சாதாரண மனிதர்கள். அந்தத் தோல்வியையே துவண்டு போகச் செய்வார்கள் வெற்றிவீரர்கள்.
அப்படித் தோல்விக்கே தோல்வியைக் கொடுத்தவர்தான் ஆப்ரஹாம் லிங்கன்.
ஆம் அவர் காணாத தோல்விகள் இல்லை, ஆனால் அத்தனை தோல்விகளிலிருந்தும் மீண்டு வந்தார்.
தோல்விகளின் குழந்தை என்றுகூட அவரை செல்லமாக அழைத்தார்கள்.
அவரின் தோல்விகளிலிருந்து அவர் மட்டும் பாடம் கற்கவில்லை நாமும் கற்றுக் கொள்ளலாம்.
அவருடைய 22 வயதிலிருந்து 51 வயது வரை அவர் கண்ட தோல்விகள் ஏராளம்.
வியாபாரத்தில் தோல்வி, சட்டம் படிப்பதில் தோல்வி, தேர்தலில் தோல்வி, காதலில் தோல்வி, செனட் தேர்தலில் தோல்வி, துணை அதிபர் தேர்தலில் தோல்வி என்று அவர் தோல்வியின் அத்தனை பரிமாணங்களையும் கண்டார்.
ஆனால் அவர் அதற்காகவெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை.
தன் கடமையை நேரம் தவறாமல் செய்துகொண்டே வந்தார். தினந்தோறும் அவரின் வேலைகளைச் செய்வதில் அவர் அயரவில்லை.
அவர் தோல்வியுற்றபோதெல்லாம் அவரைக் கேலிசெய்தவர்களைக் கண்டு அவர் மனம் நோகவில்லை. அவர்களின் எண்ணம் அப்படி, எனது எண்ணம் வெற்றியை அடைவதுதான் என்று அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார்.
கடைசியாக அவர் அத்தனை தோல்விகளுக்கு அப்புறமாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.
ஆனால் அப்போதும் பலர் குறை சொன்னார்கள். நம்மைச்சுற்றி எப்போதும் குறைசொல்லவும், கிண்டலடிக்கவும் ஆட்கள் இருப்பார்கள்.
அதைத்தாண்டி வருவது மட்டுமே வெற்றியாளனாக நினைப்பவரின் வேலை.
நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிபெறுவது என்பது சாத்தியமல்ல. அதற்காக வேலை ஒன்றும் பார்க்காமல் இருப்பதும் புத்திசாலித்தனமல்ல.
இறங்கி வேலை பார்க்க வேண்டும், வழியில் முட்களும் இருக்கும், ரோஜாக்களும் இருக்கும். ரோஜாக்களை நினைத்துக் கொண்டே முட்களைக் கடக்க வேண்டும்.
லிங்கனின் கடைசி லட்சியமான அதிபர் பதவியை அவர் அடைவதற்கு முன் அவர் பட்ட தோல்விகளை நினைத்துப் பார்த்தால் சாதாரணக் காரியங்களுக்கு நாம் படும் துயரங்கள் எல்லாம் துச்சமாகத் தெரியும்.
வாழ்க்கையில் வீழ்வது என்பது பெரிய விஷயமல்ல, அந்த வீழ்ச்சியை நினைத்துக்கொண்டு வீழ்ந்தே கிடப்பதுதான் முட்டாள்தனம்.
வீழ்ந்ததே தெரியாமல் உடனே எழுபவன்தான் வெற்றிக்கோட்டைத் தொடுகின்றான்.
தோல்வி என்பது நாம் துயரப்பட வருவதல்ல, நம்மை பலப்படுத்த வருவது. நம் மனதை மேலும் மேலும் வெற்றியை நோக்கிச் செலுத்த வருவது.
தோல்விகளைத் தட்டிவிட்டு விரைபவன் வெற்றிக்கனியை சுவைப்பான்.
தோல்வி தந்த சோகத்தில் ஆழ்பவன் , புதைகுழியில் வீழ்வான்.
தோல்வி வரும்போதெல்லாம் லிங்கனை நினைத்துக் கொள்ளுங்கள். எழுந்து வெற்றியை நோக்கிச் செல்லுங்கள்.
தோல்விகள் என்பவை தடைக்கற்கள் அல்ல, அவையே வெற்றிக்குப் படிக்கற்கள். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் அந்தப் பாடத்தை உங்கள் வெற்றிக்குப் பயன்படுத்துங்கள்.
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 8
மகாகவி பாரதி
சிறிய தடைகளைக் கண்டாலே அஞ்சி, மனம் பதைத்து தம் வேலைகளைத் தவறவிடும் இளைஞர்கள் பலர் உள்ளனர்.
ஆனால் தடைகள் எத்தனை வந்தபோதும் அவற்றைக் கண்டு அஞ்சாமல், தன்னிலை இழக்காமல், தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தவர் கவிஞர் பாரதியார்.
தன் லட்சியத்தை விட்டு அவர் எதற்காகவும், எப்போதும் வளைந்து கொடுத்ததே இல்லை. சிறு வயதிலேயே அரசவையில் கவிதை பாடி வலம் வந்தவர் அவர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் 1882, டிசம்பர் 11ம் நாள் பிறந்தார். பிறந்தபோது அவருக்கு வைக்கப்பட்ட பெயர் சுப்ரமணியன்.
சிறுவனாக இருந்தபோதே அவரின் புலமை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது. பள்ளிக்குச் சென்ற காலத்தில் இயற்கையை ரசிப்பதில் அவர் அதிக ஆவல் கொண்டிருந்தார். புத்தகங்கள் படிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது.
சின்னசாமி ஐயர் எட்டயபுரம் அரண்மனையில் பணிபுரிந்ததால் அவருடன் அவ்வப்போது அரண்மனைக்குச் செல்வதுண்டு. அரசரே பாரதியின் அறிவுத்திறனைக் கண்டு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். அன்றிலிருந்து இன்றுவரை அவர் பாரதி என்ற பெயராலேயே அறியப்படுகிறார்.
தந்தையின் மறைவுக்குப் பிறகு காசிக்குச் சென்ற பாரதி அங்கு தலையில் இருந்த குடுமியை வெட்டியதுடன், கம்பீரமான மீசையையும் வளர்க்கத் தொடங்கினார். சுயமரியாதையின் அடையாளமாக தலைப்பாகையும் கட்டத் தொடங்கினார்.
சிறிது காலத்திற்குப் பிறகு எட்டயபுரம் திரும்பினார், பின்னர் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
அதன்பின்னர் சுதேசமித்திரன் இதழில் வேலைக்குச் சேர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாரதியின் கவிதை வரிகள் உற்சாகம் அளித்தன. அவரின் கவிதை பாடும் ஆற்றலும்,பேச்சுத் திறனும் ஆங்கிலேயர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தன.
வ.உ.சி., சுப்ரமணிய சிவா போன்றவர்களுடன் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார்.
எவருக்கும் அஞ்சாமல் தன் மனதில் தோன்றிய கருத்துக்களை வெளியிடும் நெஞ்சுரம் அவரிடம் இருந்தது. திலகரின் பால் பற்றுக் கொண்டிருந்த பாரதி காங்கிரஸின் தீவிரவாதிகள் பிரிவினரால் விரும்பப்பட்டவராக இருந்தார்.
சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து பொதுமக்களிடையே தேச விடுதலை குறித்த உணர்வைத் தூண்டினார். அவர் பேசும் கூட்டங்களும், நடத்திய ஊர்வலங்களும் ஆங்கிலேயர்களை அச்சமடைய வைத்தன.
பாரதியின் பாடல்களால் இந்திய மக்களிடையே தோன்றும் வீரத்தைக் கண்ட ஆங்கிலேய அரசு இந்தியாவில் எந்த இடத்திலும் பாரதியாரின் பாடல்களைப் பாடக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. அப்படிப் பாடுவது தேசத் துரோகம் என்றும் சட்டம் இயற்றியது.
அதற்கெல்லாம் அவர் ஒருபோதும் அஞ்சவில்லை, தொடர்ந்து தேச விடுதலைக்காகப் பாடுபட்டு வந்தார்.
வறுமை நிலையில் இருந்தபோதும் அவர் மகிழ்வுடனேயே இருந்தார். வறுமையோ, ஆங்கிலேயரோ அவர் எதைக்கண்டும் அஞ்சவில்லை. அஞ்சாமை மட்டுமன்றி அன்பு செலுத்துதலும் அவரிடம் இருந்த அரிய குணங்களில் ஒன்று.
மற்ற உயிரினங்களையும் அவர் நேசித்தார். கழுதைக் குட்டியைத் தோள்மீது தூக்கி வைத்துக் கொஞ்சியதாகட்டும், காட்டு ராஜாவே நான் கவிராஜன் வந்திருக்கிறேன் என்று சிங்கத்திடம் பேசியதாகட்டும், யானையை அன்புடன் தடவிக் கொடுத்ததாகட்டும் அதையெல்லாம் விட அவர் பாடலில் காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற வரிகளே அவர் மற்ற உயிரினங்களின் மேல் வைத்திருந்த அன்பைக் காட்டும்.
அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள், யாருக்கும் அஞ்சாமல் செயல்புரியுங்கள். மனதை எப்போதும், எந்த சூழலிலும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். உங்களை உலகம் ஒருபோதும் மறக்கவே மறக்காது.
மகாகவி பாரதி
சிறிய தடைகளைக் கண்டாலே அஞ்சி, மனம் பதைத்து தம் வேலைகளைத் தவறவிடும் இளைஞர்கள் பலர் உள்ளனர்.
ஆனால் தடைகள் எத்தனை வந்தபோதும் அவற்றைக் கண்டு அஞ்சாமல், தன்னிலை இழக்காமல், தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தவர் கவிஞர் பாரதியார்.
தன் லட்சியத்தை விட்டு அவர் எதற்காகவும், எப்போதும் வளைந்து கொடுத்ததே இல்லை. சிறு வயதிலேயே அரசவையில் கவிதை பாடி வலம் வந்தவர் அவர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் 1882, டிசம்பர் 11ம் நாள் பிறந்தார். பிறந்தபோது அவருக்கு வைக்கப்பட்ட பெயர் சுப்ரமணியன்.
சிறுவனாக இருந்தபோதே அவரின் புலமை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது. பள்ளிக்குச் சென்ற காலத்தில் இயற்கையை ரசிப்பதில் அவர் அதிக ஆவல் கொண்டிருந்தார். புத்தகங்கள் படிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது.
சின்னசாமி ஐயர் எட்டயபுரம் அரண்மனையில் பணிபுரிந்ததால் அவருடன் அவ்வப்போது அரண்மனைக்குச் செல்வதுண்டு. அரசரே பாரதியின் அறிவுத்திறனைக் கண்டு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். அன்றிலிருந்து இன்றுவரை அவர் பாரதி என்ற பெயராலேயே அறியப்படுகிறார்.
தந்தையின் மறைவுக்குப் பிறகு காசிக்குச் சென்ற பாரதி அங்கு தலையில் இருந்த குடுமியை வெட்டியதுடன், கம்பீரமான மீசையையும் வளர்க்கத் தொடங்கினார். சுயமரியாதையின் அடையாளமாக தலைப்பாகையும் கட்டத் தொடங்கினார்.
சிறிது காலத்திற்குப் பிறகு எட்டயபுரம் திரும்பினார், பின்னர் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
அதன்பின்னர் சுதேசமித்திரன் இதழில் வேலைக்குச் சேர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாரதியின் கவிதை வரிகள் உற்சாகம் அளித்தன. அவரின் கவிதை பாடும் ஆற்றலும்,பேச்சுத் திறனும் ஆங்கிலேயர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தன.
வ.உ.சி., சுப்ரமணிய சிவா போன்றவர்களுடன் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார்.
எவருக்கும் அஞ்சாமல் தன் மனதில் தோன்றிய கருத்துக்களை வெளியிடும் நெஞ்சுரம் அவரிடம் இருந்தது. திலகரின் பால் பற்றுக் கொண்டிருந்த பாரதி காங்கிரஸின் தீவிரவாதிகள் பிரிவினரால் விரும்பப்பட்டவராக இருந்தார்.
சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து பொதுமக்களிடையே தேச விடுதலை குறித்த உணர்வைத் தூண்டினார். அவர் பேசும் கூட்டங்களும், நடத்திய ஊர்வலங்களும் ஆங்கிலேயர்களை அச்சமடைய வைத்தன.
பாரதியின் பாடல்களால் இந்திய மக்களிடையே தோன்றும் வீரத்தைக் கண்ட ஆங்கிலேய அரசு இந்தியாவில் எந்த இடத்திலும் பாரதியாரின் பாடல்களைப் பாடக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. அப்படிப் பாடுவது தேசத் துரோகம் என்றும் சட்டம் இயற்றியது.
அதற்கெல்லாம் அவர் ஒருபோதும் அஞ்சவில்லை, தொடர்ந்து தேச விடுதலைக்காகப் பாடுபட்டு வந்தார்.
வறுமை நிலையில் இருந்தபோதும் அவர் மகிழ்வுடனேயே இருந்தார். வறுமையோ, ஆங்கிலேயரோ அவர் எதைக்கண்டும் அஞ்சவில்லை. அஞ்சாமை மட்டுமன்றி அன்பு செலுத்துதலும் அவரிடம் இருந்த அரிய குணங்களில் ஒன்று.
மற்ற உயிரினங்களையும் அவர் நேசித்தார். கழுதைக் குட்டியைத் தோள்மீது தூக்கி வைத்துக் கொஞ்சியதாகட்டும், காட்டு ராஜாவே நான் கவிராஜன் வந்திருக்கிறேன் என்று சிங்கத்திடம் பேசியதாகட்டும், யானையை அன்புடன் தடவிக் கொடுத்ததாகட்டும் அதையெல்லாம் விட அவர் பாடலில் காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற வரிகளே அவர் மற்ற உயிரினங்களின் மேல் வைத்திருந்த அன்பைக் காட்டும்.
அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள், யாருக்கும் அஞ்சாமல் செயல்புரியுங்கள். மனதை எப்போதும், எந்த சூழலிலும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். உங்களை உலகம் ஒருபோதும் மறக்கவே மறக்காது.
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 9
ஜே.கே.ரவுலிங்
சராசரியாகவே வாழ்ந்து பலர் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொள்கிறார்கள். ஆனால் வாழ்வில் எதையாவது சாதிப்பதன்மூலம் தங்கள் பெயர் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்படி சிலர்தான் வாழ்கிறார்கள்.
அந்த வரிசையில் சிறு வயதிலிருந்தே எழுத்தாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டு இடையில் சில காலம் சாதாரணமான வேலையைப் பார்த்து, பின்னர் முழு வீச்சில் எழுதத் தொடங்கி உலகம் முழுவதும் உள்ள சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களின் மனதிலும் இடம் பிடித்தவர்தான் ஜே.கே.ரவுலிங்.
ஒரு படம் வெளியாகும் தினத்திற்கு முதல்நாள் இரவே தியேட்டர் வாசலில் காத்துக் கிடந்தவர்களை உலகம் பார்த்திருக்கிறது. ஆனால் ஒரு புத்தகம் வெளியாவதற்கு ஒருநாள் முன்பே கியூவில் நிற்பவர்களை உலகம் கண்டது அதுதான் முதல் முறை.
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பில் செகரட்டரி வேலை பார்த்து வந்த ரவுலிங்கிற்கு தினசரி வாழ்க்கை ஒரேபோல் சென்று கொண்டிருந்தது. அதே ரயில் பயணம், அதே அலுவலகம், அதே வேலை என்று சாதாரண மனிதர்களைப் போல்தான் அவரும் வேலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆனாலும் அவரின் அடி மனதில் எழுத்தாளராக வேண்டுமென்ற ஆசை தகித்துக் கொண்டிருந்தது.
அலுவலகத்திற்குப் போய் வரும் நேரத்தில் ரயில் பயணத்தின்போது ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பது அவரின் வழக்கம்.
ஒருநாள் ரயில் ஏதோ காரணத்திற்காக நான்கு மணி நேரம் நிறுத்தப்பட்டது. அதுதான் ரவுலிங்கின் வாழ்வில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ரயில் நின்ற அந்த நேரத்தில் அவர் மனதில் ஒரு கதாபாத்திரம் உருவெடுத்தது. தினமும் பள்ளிக்குச் செல்வதை விரும்பாத குழந்தைகள்கூட மாயாஜால, மந்திரஜாலப் படங்களைப் பார்ப்பதில் மிகவும் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். பள்ளியே ஒரு மாயாஜாலப் பள்ளியாக இருந்தால்? இதுதான் ரவுலிங்கின் மனதில் உதித்த கற்பனை. மாந்திரீகம் கற்றுத் தரும் பள்ளி என்ற ஒரே ஒரு அவுட்லைன் அவருக்குப் போதுமானதாக இருந்தது. ரயில் கிளம்பி ஸ்டேஷனை அடையும்வரை தவிப்புடனே காட்சியளித்த அவர் ரயில் நின்றவுடன் அருகிலிருந்த ஒரு ஹோட்டலுக்குள் சென்று ஆர்டர் செய்துவிட்டு ஒரு பேப்பரை எடுத்து எழுதத் தொடங்கினார்.
ஹாரிபாட்டர் என்ற ஒரு கதாபாத்திரம், அவர் எழுதத் தொடங்கியவுடனேயே உயிர்பெற்று உலகப் புகழ் பெற்றது.
முதல் நாவலை அவ்வளவு ஆர்வமாக எழுதிய ரவுலிங்கிற்கு அதை வெளியிட முடியவில்லை. பல பதிப்பகங்கள் அந்தக் கதையை கற்பனைக் கதையாக இருக்கிறது என்று காரணம் சொல்லி மறுத்தன. லண்டனில் இருந்த ப்ளூம்ஸ்பெரி என்ற சிறிய பதிப்பம் நூலை வெளியிட முன்வந்தது.
அந்தப் பதிப்பக உரிமையாளரின் மகள் அந்தக் கதையை ஆர்வமாகப் படித்தாள் என்பதுதான் காரணம்.
நாவல் வெளிவந்தது. சிறுவர்கள் மிகவும் விரும்பிப் படித்தார்கள்.
மாபெரும் வெற்றி.
சிறுவர்களின் மனதைக் கொள்ளைகொண்ட கதையாக அது இருந்ததால் அதன் அடுத்தடுத்த பாகங்களை வெளியிட பல பதிப்பகங்கள் முன்வந்தன.
ரவுலிங் ஒரு ஏலத்திற்கு ஏற்பாடு செய்தார். ஸ்கொலாஸ்டிக் நிறுவனம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பவுண்டுகளுக்கு அடுத்த பாகத்தின் கதைக்கான உரிமையை ஏலம் எடுத்தது.
ரவுலிங்கிற்கு பெரிய அதிர்ச்சி. அவ்வளவு பணத்தை அவர் எதிர்பார்க்கவில்லை.
அடுத்தடுத்த பாகங்களை விரைவாக எழுதிக் குவித்தார். அவருடைய திருமண வாழ்க்கையில் அவர் வெற்றிபெறாவிட்டாலும் சிறுவர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.
இன்று ஹாரிபாட்டர் நாவலாக மட்டுமின்றி, திரைப்படங்களாகவும் வெளிவந்து வெற்றிவாகை சூடியுள்ளது.
அவரின் வெற்றி தொடர்ந்துகொண்டே உள்ளது. உங்கள் மனதில் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நோக்கியே உங்கள் பயணம் அமையட்டும். வெற்றி தேவதை உங்களை ஆசிர்வதிப்பாள்.
ஜே.கே.ரவுலிங்
சராசரியாகவே வாழ்ந்து பலர் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொள்கிறார்கள். ஆனால் வாழ்வில் எதையாவது சாதிப்பதன்மூலம் தங்கள் பெயர் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்படி சிலர்தான் வாழ்கிறார்கள்.
அந்த வரிசையில் சிறு வயதிலிருந்தே எழுத்தாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டு இடையில் சில காலம் சாதாரணமான வேலையைப் பார்த்து, பின்னர் முழு வீச்சில் எழுதத் தொடங்கி உலகம் முழுவதும் உள்ள சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களின் மனதிலும் இடம் பிடித்தவர்தான் ஜே.கே.ரவுலிங்.
ஒரு படம் வெளியாகும் தினத்திற்கு முதல்நாள் இரவே தியேட்டர் வாசலில் காத்துக் கிடந்தவர்களை உலகம் பார்த்திருக்கிறது. ஆனால் ஒரு புத்தகம் வெளியாவதற்கு ஒருநாள் முன்பே கியூவில் நிற்பவர்களை உலகம் கண்டது அதுதான் முதல் முறை.
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பில் செகரட்டரி வேலை பார்த்து வந்த ரவுலிங்கிற்கு தினசரி வாழ்க்கை ஒரேபோல் சென்று கொண்டிருந்தது. அதே ரயில் பயணம், அதே அலுவலகம், அதே வேலை என்று சாதாரண மனிதர்களைப் போல்தான் அவரும் வேலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆனாலும் அவரின் அடி மனதில் எழுத்தாளராக வேண்டுமென்ற ஆசை தகித்துக் கொண்டிருந்தது.
அலுவலகத்திற்குப் போய் வரும் நேரத்தில் ரயில் பயணத்தின்போது ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பது அவரின் வழக்கம்.
ஒருநாள் ரயில் ஏதோ காரணத்திற்காக நான்கு மணி நேரம் நிறுத்தப்பட்டது. அதுதான் ரவுலிங்கின் வாழ்வில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ரயில் நின்ற அந்த நேரத்தில் அவர் மனதில் ஒரு கதாபாத்திரம் உருவெடுத்தது. தினமும் பள்ளிக்குச் செல்வதை விரும்பாத குழந்தைகள்கூட மாயாஜால, மந்திரஜாலப் படங்களைப் பார்ப்பதில் மிகவும் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். பள்ளியே ஒரு மாயாஜாலப் பள்ளியாக இருந்தால்? இதுதான் ரவுலிங்கின் மனதில் உதித்த கற்பனை. மாந்திரீகம் கற்றுத் தரும் பள்ளி என்ற ஒரே ஒரு அவுட்லைன் அவருக்குப் போதுமானதாக இருந்தது. ரயில் கிளம்பி ஸ்டேஷனை அடையும்வரை தவிப்புடனே காட்சியளித்த அவர் ரயில் நின்றவுடன் அருகிலிருந்த ஒரு ஹோட்டலுக்குள் சென்று ஆர்டர் செய்துவிட்டு ஒரு பேப்பரை எடுத்து எழுதத் தொடங்கினார்.
ஹாரிபாட்டர் என்ற ஒரு கதாபாத்திரம், அவர் எழுதத் தொடங்கியவுடனேயே உயிர்பெற்று உலகப் புகழ் பெற்றது.
முதல் நாவலை அவ்வளவு ஆர்வமாக எழுதிய ரவுலிங்கிற்கு அதை வெளியிட முடியவில்லை. பல பதிப்பகங்கள் அந்தக் கதையை கற்பனைக் கதையாக இருக்கிறது என்று காரணம் சொல்லி மறுத்தன. லண்டனில் இருந்த ப்ளூம்ஸ்பெரி என்ற சிறிய பதிப்பம் நூலை வெளியிட முன்வந்தது.
அந்தப் பதிப்பக உரிமையாளரின் மகள் அந்தக் கதையை ஆர்வமாகப் படித்தாள் என்பதுதான் காரணம்.
நாவல் வெளிவந்தது. சிறுவர்கள் மிகவும் விரும்பிப் படித்தார்கள்.
மாபெரும் வெற்றி.
சிறுவர்களின் மனதைக் கொள்ளைகொண்ட கதையாக அது இருந்ததால் அதன் அடுத்தடுத்த பாகங்களை வெளியிட பல பதிப்பகங்கள் முன்வந்தன.
ரவுலிங் ஒரு ஏலத்திற்கு ஏற்பாடு செய்தார். ஸ்கொலாஸ்டிக் நிறுவனம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பவுண்டுகளுக்கு அடுத்த பாகத்தின் கதைக்கான உரிமையை ஏலம் எடுத்தது.
ரவுலிங்கிற்கு பெரிய அதிர்ச்சி. அவ்வளவு பணத்தை அவர் எதிர்பார்க்கவில்லை.
அடுத்தடுத்த பாகங்களை விரைவாக எழுதிக் குவித்தார். அவருடைய திருமண வாழ்க்கையில் அவர் வெற்றிபெறாவிட்டாலும் சிறுவர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.
இன்று ஹாரிபாட்டர் நாவலாக மட்டுமின்றி, திரைப்படங்களாகவும் வெளிவந்து வெற்றிவாகை சூடியுள்ளது.
அவரின் வெற்றி தொடர்ந்துகொண்டே உள்ளது. உங்கள் மனதில் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நோக்கியே உங்கள் பயணம் அமையட்டும். வெற்றி தேவதை உங்களை ஆசிர்வதிப்பாள்.
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 10
மாவீரன் அலெக்ஸாண்டர்
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்றொரு பழமொழி உண்டு. சிறு வயதாக இருக்கும்போதே அறிவாற்றல் நிரம்பியவர்களாக விளங்குபவர்கள் பிற்காலத்தில் அறிஞர்களாகத் திகழ்வார்கள் என்பதற்காகச் சொன்ன பழமொழி அது.
அதேபோல் சிறு வயதிலேயே வீரம் நிறைந்தவராக விளங்கிய அலெக்ஸாண்டர் பிற்காலத்தில் உலகம் போற்றும் மாவீரனாக மாறிப்போனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
சிறு வயதிலேயே தன் தந்தையான கிரேக்க மன்னர் பிலிப்பின் முன்பாக, யாராலும் அடக்க முடியாத குதிரையைத் தன்னுடைய அறிவாற்றல் திறனால் அடக்கி அதன்மீது அமர்ந்து சபையோரின¢ கைதட்டல்கள் ஒலிக்க வலம் வந்தவர்தான் மாவீரன் அலெக்ஸாண்டர்.
மன்னருக்கு மகனாகப் பிறந்தாலும் தன்னுடைய திறமையாலும் அறிவு நுட்பத்தாலும் தன்னிகரற்ற வீரத்தாலும் அகில உலகையும் வெல்லப் புறப்பட்டவர் அவர்.
இந்தியாவின்மீது படையெடுத்த முதல் ஐரோப்பியர், நாணயங்களில் உருவங்கள் பொறிக்கும் முறையை அறிமுகம் செய்தவர், ஐரோப்பா கண்டத்தில் பிறந்து, ஆசியாக் கண்டத்தில் இறந்து, ஆப்பிரிக்கக் கண்டத்தில் புதைக்கப்பட்ட ஒரே மன்னர், உலகம் போதாது என்று சொன்னவனுக்கு ஆறடி நிலமே போதுமானதாக உள்ளது என்று தன் கல்லறையில் பொறிக்கச் சொன்னவர் என்று பல பெருமைகள் அவருக்கு உண்டு.
அரிஸ்டாட்டிலின் சீடராகத் திகழ்ந்தவர் என்பதும், தான் போரிட்டு நாடுகளைப் பிடிக்கச் சென்றபோதும், தன்னுடனேயே கிரேக்க வீரகாவியங்களான இலியட், ஒடிஸி போன்றவற்றை எடுத்துச் சென்றவர் என்பதும் அவரின் மற்றொரு பக்கத்தைக் காட்டுபவை.
தன்னுடைய குதிரையான பியூரிபேலஸ் மீது மிகுந்த அன்பு கொண்டவராகத் திகழ்ந்தார்.
ஒன்பதே ஆண்டுக்குள் உலகின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியவர், இந்தியாவின் ஒரு பகுதியை வென்றவுடன் உலகின் கடைசிப் பகுதியை வென்றுவிட்டதாகக் கருதி இனி நான் வெல்வதற்கு நாடு இல்லையே என்று கண்ணீர் சிந்தியதாகக் கூறுவார்கள்.
உலக வரலாற்றில் அவர் இடம் பிடித்ததற்குக் காரணம் அவரின் வீரம்தான். மிகக் குறுகிய காலத்திலேயே தான் ஒரு மாவீரன் என்பதை அவர் உலகிற்கு நிரூபித்தார்.
நாம் என்ன செய்தோம் என்று உலகைச் சொல்ல வைக்க வேண்டும். அதுதான் வெற்றியாளனின் பண்பு. அதை நிரூபித்துக் காட்டியவர் அலெக்ஸாண்டர்.
முதல் போரிலேயே வெற்றி பெற்றார் அவர். எகிப்தைக் கைப்பற்ற அவர் முயன்றபோது கடும் எதிர்ப்பு. ஆனால் அதையெல்லாம் மீறி மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். அங்கு அவர் பெயரில் ஒரு நகரைத் தோற்றுவித்தார். அதையடுத்து பல போர்களில் ஈடுபட்டார்.
இந்தியாவில் போரஸ் மன்னருடன் போரிட்டு வென்றபோதும், போரஸ் Ôஎன்னை ஒரு மன்னனாக நடத்துங்கள்Õ என்று கேட்டுக் கொண்டதால் அவரிடமே நாட்டைத் திருப்பிக் கொடுத்து பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார் அலெக்ஸாண்டர். அதுவே அலெக்ஸாண்டரின் கடைசிப்போர்.
அதன்பிறகு அவருடைய வீரர்கள் அவருக்கு சரியானபடி ஒத்துழைப்புத் தரவில்லை. அதன் காரணமாக அவர் நாட்டிற்குத் திரும்பும் வழியிலேயே மலேரியா காய்ச்சலில் இறந்தார்.
அவர் இறந்தாலும் அவர் புகழ் இன்றுவரை நிலைத்துள்ளது.
அவரின் லட்சியம் நாடு பிடிப்பது. அதில் அவர் முழுமூச்சாக ஈடுபட்டார். பல வெற்றிகளைக் குவித்தார். ஒரு வெற்றிக்குப் பிறகு அவர் ஓய்வெடுக்கவில்லை. அடுத்த இலக்கு, அடுத்த வெற்றி என்று கடைசிவரை பயணித்துக் கொண்டே இருந்தார்.
எனவே வெற்றிக்குப் பிறகு உடனடியாக அடுத்த இலக்கை நிர்ணயித்து அதைநோக்கி வெற்றிநடை போடத் தொடங்குங்கள் என்பதை வாழ்ந¢து காட்டியவர் அலெக்ஸாண்டர். அவர் ஒரு மாவீரனாக வளர்ந்தார், வாழ்ந்தார், இறந்தார்.
உலகில் பிறந்த ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை உள்ளது, அதைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும், அடுத்தவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நடந்துகொண்டால் வெற்றிக்கனியை எளிதாகப் பறிக்கலாம்.
மாவீரன் அலெக்ஸாண்டர்
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்றொரு பழமொழி உண்டு. சிறு வயதாக இருக்கும்போதே அறிவாற்றல் நிரம்பியவர்களாக விளங்குபவர்கள் பிற்காலத்தில் அறிஞர்களாகத் திகழ்வார்கள் என்பதற்காகச் சொன்ன பழமொழி அது.
அதேபோல் சிறு வயதிலேயே வீரம் நிறைந்தவராக விளங்கிய அலெக்ஸாண்டர் பிற்காலத்தில் உலகம் போற்றும் மாவீரனாக மாறிப்போனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
சிறு வயதிலேயே தன் தந்தையான கிரேக்க மன்னர் பிலிப்பின் முன்பாக, யாராலும் அடக்க முடியாத குதிரையைத் தன்னுடைய அறிவாற்றல் திறனால் அடக்கி அதன்மீது அமர்ந்து சபையோரின¢ கைதட்டல்கள் ஒலிக்க வலம் வந்தவர்தான் மாவீரன் அலெக்ஸாண்டர்.
மன்னருக்கு மகனாகப் பிறந்தாலும் தன்னுடைய திறமையாலும் அறிவு நுட்பத்தாலும் தன்னிகரற்ற வீரத்தாலும் அகில உலகையும் வெல்லப் புறப்பட்டவர் அவர்.
இந்தியாவின்மீது படையெடுத்த முதல் ஐரோப்பியர், நாணயங்களில் உருவங்கள் பொறிக்கும் முறையை அறிமுகம் செய்தவர், ஐரோப்பா கண்டத்தில் பிறந்து, ஆசியாக் கண்டத்தில் இறந்து, ஆப்பிரிக்கக் கண்டத்தில் புதைக்கப்பட்ட ஒரே மன்னர், உலகம் போதாது என்று சொன்னவனுக்கு ஆறடி நிலமே போதுமானதாக உள்ளது என்று தன் கல்லறையில் பொறிக்கச் சொன்னவர் என்று பல பெருமைகள் அவருக்கு உண்டு.
அரிஸ்டாட்டிலின் சீடராகத் திகழ்ந்தவர் என்பதும், தான் போரிட்டு நாடுகளைப் பிடிக்கச் சென்றபோதும், தன்னுடனேயே கிரேக்க வீரகாவியங்களான இலியட், ஒடிஸி போன்றவற்றை எடுத்துச் சென்றவர் என்பதும் அவரின் மற்றொரு பக்கத்தைக் காட்டுபவை.
தன்னுடைய குதிரையான பியூரிபேலஸ் மீது மிகுந்த அன்பு கொண்டவராகத் திகழ்ந்தார்.
ஒன்பதே ஆண்டுக்குள் உலகின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியவர், இந்தியாவின் ஒரு பகுதியை வென்றவுடன் உலகின் கடைசிப் பகுதியை வென்றுவிட்டதாகக் கருதி இனி நான் வெல்வதற்கு நாடு இல்லையே என்று கண்ணீர் சிந்தியதாகக் கூறுவார்கள்.
உலக வரலாற்றில் அவர் இடம் பிடித்ததற்குக் காரணம் அவரின் வீரம்தான். மிகக் குறுகிய காலத்திலேயே தான் ஒரு மாவீரன் என்பதை அவர் உலகிற்கு நிரூபித்தார்.
நாம் என்ன செய்தோம் என்று உலகைச் சொல்ல வைக்க வேண்டும். அதுதான் வெற்றியாளனின் பண்பு. அதை நிரூபித்துக் காட்டியவர் அலெக்ஸாண்டர்.
முதல் போரிலேயே வெற்றி பெற்றார் அவர். எகிப்தைக் கைப்பற்ற அவர் முயன்றபோது கடும் எதிர்ப்பு. ஆனால் அதையெல்லாம் மீறி மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். அங்கு அவர் பெயரில் ஒரு நகரைத் தோற்றுவித்தார். அதையடுத்து பல போர்களில் ஈடுபட்டார்.
இந்தியாவில் போரஸ் மன்னருடன் போரிட்டு வென்றபோதும், போரஸ் Ôஎன்னை ஒரு மன்னனாக நடத்துங்கள்Õ என்று கேட்டுக் கொண்டதால் அவரிடமே நாட்டைத் திருப்பிக் கொடுத்து பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார் அலெக்ஸாண்டர். அதுவே அலெக்ஸாண்டரின் கடைசிப்போர்.
அதன்பிறகு அவருடைய வீரர்கள் அவருக்கு சரியானபடி ஒத்துழைப்புத் தரவில்லை. அதன் காரணமாக அவர் நாட்டிற்குத் திரும்பும் வழியிலேயே மலேரியா காய்ச்சலில் இறந்தார்.
அவர் இறந்தாலும் அவர் புகழ் இன்றுவரை நிலைத்துள்ளது.
அவரின் லட்சியம் நாடு பிடிப்பது. அதில் அவர் முழுமூச்சாக ஈடுபட்டார். பல வெற்றிகளைக் குவித்தார். ஒரு வெற்றிக்குப் பிறகு அவர் ஓய்வெடுக்கவில்லை. அடுத்த இலக்கு, அடுத்த வெற்றி என்று கடைசிவரை பயணித்துக் கொண்டே இருந்தார்.
எனவே வெற்றிக்குப் பிறகு உடனடியாக அடுத்த இலக்கை நிர்ணயித்து அதைநோக்கி வெற்றிநடை போடத் தொடங்குங்கள் என்பதை வாழ்ந¢து காட்டியவர் அலெக்ஸாண்டர். அவர் ஒரு மாவீரனாக வளர்ந்தார், வாழ்ந்தார், இறந்தார்.
உலகில் பிறந்த ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை உள்ளது, அதைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும், அடுத்தவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நடந்துகொண்டால் வெற்றிக்கனியை எளிதாகப் பறிக்கலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆனால் பாவம் அந்த யானையே அவரை தூக்கி போட்டுவிட்டதே,......இல்லாவிட்டால் இன்னும் எவ்வளவு காலம் அவர் நம்முடன் இருந்திருப்பாரோ ? ...............குறைந்த பக்ஷம் விடுதலையை அவர் கண்ணால் பார்த்திருக்கலாம்
.
.
நல்ல பகிர்வு சிவம்
.
.
நல்ல பகிர்வு சிவம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Alexander The Great ! ...............
சொல்லும்போதே நமக்கும் வீரம் வரும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அவரின் வெற்றி தொடர்ந்துகொண்டே உள்ளது. உங்கள் மனதில் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நோக்கியே உங்கள் பயணம் அமையட்டும். வெற்றி தேவதை உங்களை ஆசிர்வதிப்பாள்.//
ரொம்ப சரி
ரொம்ப சரி
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 11
ஆல்பிரட் நோபல்
உலகில் எல்லோரும்தான் சம்பாதிக்கிறார்கள், பல பேர் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் தாங்கள் செய்த தவறுக்காக வருந்தி மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் அரிதாகத்தான் காணப்படுகிறார்கள்.
ஆல்பிரட் நோபல் செய்ததைத் தவறு என்றும் கூறிவிட முடியாது. ஆனால் அவரின் கண்டுபிடிப்பு பெரும் அழிவுக்குக் காரணமாகிப் போனதை எண்ணியெண்ணி மனம் வருந்திய அவர் அதற்கு இணையாக மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென்று நினைத்ததால் உருவானதுதான் நோபல் பரிசு.
ஸ்வீடனில் ஸ்டாக் ஹோம் என்ற நகரில் இமானுவேல் நோபல், ஆண்ட்ரியெட்டா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் நோபல்.
நோபலின் தந்தை வெடிமருந்தும் வெடிகளும் தயாரித்து விற்பனை செய்து வந்தார். நோபல் பிறந்தபோது அவரின் குடும்பம் எளிய நிலையிலேயே வாழ்ந்து வந்தது.
சிறு வயதில் படிப்பில் படு சுட்டியாக விளங்கினார் நோபல். முதல் மதிப்பெண்களைப் பெற்று ஆசிரியரையும் பெற்றோர்களையும் மகிழ்வித்தார்.
ஆல்பிரட் பொறியியல் கற்பதற்காக அமெரிக்காவிற்குச் சென்றார். அவருக்கு அதில் கவனம் செல்லவில்லை, தன் தந்தையைப்போல் தானும் வெடிமருந்து தயாரிப்பில் ஈடுபடவே அவர் விரும்பினார்.
1862ம் ஆண்டு தன்னுடைய சகோதரர்களின் முன்னிலையில் நைட்ரோ கிளிசரின் அமைந்த ஒரு வெடியை வெடித்துக் காட்டினார். அதுபற்றி அவரின் தந்தையிடமும் தெரிவித்தார்.
மேலும் சிறிது காலத்திற்குப் பிறகு புகையில்லாமல் வெடிக்கும் வெடியைக் கண்டுபிடித்தார். சுரங்கத் தொழில் செய்து வந்தவர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
1864ம் ஆண்டு நைட்ரோ கிளிசரின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை செல்வந்தர் ஒருவரின் உதவியோடு தொடங்கினார். மிகவும் பாதுகாப்பான டைனமைட்டையும் கண்டுபிடித்தார்.
அந்தக் கண்டுபிடிப்பின்மூலம் ஏரளாமாகச் சம்பாதித்தபோதும் மனித குல அழிவிற்குக் காரணமான ஒன்றைக் கண்டுபிடித்து விட்டோமே என்று அவர் மனம் வருந்தினார்.
1895ம் ஆண்டு அவர் உயில் எழுதிவைத்தார். தன்னுடைய இறப்பிற்குப் பிறகு தன்னுடைய சொத்துகளை வங்கிகளில் முதலீடு செய்து அதில் வரும் வட்டியைக் கொண்டு ஐந்து பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யும்படி அதில் கூறியிருந்தார்.
சமாதானம், இலக்கியம், ரசாயனம், பௌதிகம், மருத்துவம் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிவோருக்குத் தக்க பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்க வேண்டுமென்று அவர் கூறியிருந்தபடியே 1900ம் ஆண்டு அதற்காக ஒரு நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டு 1901ம் ஆண்டிலிருந்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
உலகில் உள்ள விஞ்ஞானிகள், அறிஞர்கள் ஆகியோர் இந்தப் பரிசைப் பெறுவதைத் தங்களுக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகக் கருதுகிறார்கள்.
நோபல் சிறிதும் ஓய்வின்றி கடைசிவரை உழைத்தவர். மனிதகுலத்தின் நன்மைக்காக கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவோருக்குப் பரிசு வழங்கி கௌரவிக்க ஏற்பாடு செய்தவர். வாழ்க்கையில் அவர் மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றவர்.
உலக சமாதானத்திற்காகவும் ஒரு பரிசை ஏற்படுத்தி உலக மக்களின் அமைதியில் விருப்பம் உள்ளவர் என்பதை நிரூபித்தார்.
மனிதர்கள் மேல் அன்பாகவும் நேசத்துடனும் இருப்பது வெற்றியாளரின் குணங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது இவரின் வாழ்க்கை நமக்குக் கூறும் பாடம்.
எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் நமக்கு மட்டுமே வைத்துக்கொள்ளாமல் மற்றவருக்கு உதவும் விதத்தில் அதைப் பயன்படுத்தினால்தான் அந்தச் செல்வத்திற்கே பெருமை என்பதைக் கூறும் வகையில் வாழ்ந்து காட்டியவர்.
உலகத்தில் உள்ள அனைத்துப் பரிசுகளிலும் தலைசிறந்த நோபல் பரிசை வழங்க ஏற்பாடுகள் செய்த அவர் பெயர் உலகம் உள்ளளவும் மறையாது என்பது நிச்சயம்.
ஆல்பிரட் நோபல்
உலகில் எல்லோரும்தான் சம்பாதிக்கிறார்கள், பல பேர் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் தாங்கள் செய்த தவறுக்காக வருந்தி மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் அரிதாகத்தான் காணப்படுகிறார்கள்.
ஆல்பிரட் நோபல் செய்ததைத் தவறு என்றும் கூறிவிட முடியாது. ஆனால் அவரின் கண்டுபிடிப்பு பெரும் அழிவுக்குக் காரணமாகிப் போனதை எண்ணியெண்ணி மனம் வருந்திய அவர் அதற்கு இணையாக மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென்று நினைத்ததால் உருவானதுதான் நோபல் பரிசு.
ஸ்வீடனில் ஸ்டாக் ஹோம் என்ற நகரில் இமானுவேல் நோபல், ஆண்ட்ரியெட்டா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் நோபல்.
நோபலின் தந்தை வெடிமருந்தும் வெடிகளும் தயாரித்து விற்பனை செய்து வந்தார். நோபல் பிறந்தபோது அவரின் குடும்பம் எளிய நிலையிலேயே வாழ்ந்து வந்தது.
சிறு வயதில் படிப்பில் படு சுட்டியாக விளங்கினார் நோபல். முதல் மதிப்பெண்களைப் பெற்று ஆசிரியரையும் பெற்றோர்களையும் மகிழ்வித்தார்.
ஆல்பிரட் பொறியியல் கற்பதற்காக அமெரிக்காவிற்குச் சென்றார். அவருக்கு அதில் கவனம் செல்லவில்லை, தன் தந்தையைப்போல் தானும் வெடிமருந்து தயாரிப்பில் ஈடுபடவே அவர் விரும்பினார்.
1862ம் ஆண்டு தன்னுடைய சகோதரர்களின் முன்னிலையில் நைட்ரோ கிளிசரின் அமைந்த ஒரு வெடியை வெடித்துக் காட்டினார். அதுபற்றி அவரின் தந்தையிடமும் தெரிவித்தார்.
மேலும் சிறிது காலத்திற்குப் பிறகு புகையில்லாமல் வெடிக்கும் வெடியைக் கண்டுபிடித்தார். சுரங்கத் தொழில் செய்து வந்தவர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
1864ம் ஆண்டு நைட்ரோ கிளிசரின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை செல்வந்தர் ஒருவரின் உதவியோடு தொடங்கினார். மிகவும் பாதுகாப்பான டைனமைட்டையும் கண்டுபிடித்தார்.
அந்தக் கண்டுபிடிப்பின்மூலம் ஏரளாமாகச் சம்பாதித்தபோதும் மனித குல அழிவிற்குக் காரணமான ஒன்றைக் கண்டுபிடித்து விட்டோமே என்று அவர் மனம் வருந்தினார்.
1895ம் ஆண்டு அவர் உயில் எழுதிவைத்தார். தன்னுடைய இறப்பிற்குப் பிறகு தன்னுடைய சொத்துகளை வங்கிகளில் முதலீடு செய்து அதில் வரும் வட்டியைக் கொண்டு ஐந்து பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யும்படி அதில் கூறியிருந்தார்.
சமாதானம், இலக்கியம், ரசாயனம், பௌதிகம், மருத்துவம் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிவோருக்குத் தக்க பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்க வேண்டுமென்று அவர் கூறியிருந்தபடியே 1900ம் ஆண்டு அதற்காக ஒரு நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டு 1901ம் ஆண்டிலிருந்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
உலகில் உள்ள விஞ்ஞானிகள், அறிஞர்கள் ஆகியோர் இந்தப் பரிசைப் பெறுவதைத் தங்களுக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகக் கருதுகிறார்கள்.
நோபல் சிறிதும் ஓய்வின்றி கடைசிவரை உழைத்தவர். மனிதகுலத்தின் நன்மைக்காக கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவோருக்குப் பரிசு வழங்கி கௌரவிக்க ஏற்பாடு செய்தவர். வாழ்க்கையில் அவர் மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றவர்.
உலக சமாதானத்திற்காகவும் ஒரு பரிசை ஏற்படுத்தி உலக மக்களின் அமைதியில் விருப்பம் உள்ளவர் என்பதை நிரூபித்தார்.
மனிதர்கள் மேல் அன்பாகவும் நேசத்துடனும் இருப்பது வெற்றியாளரின் குணங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது இவரின் வாழ்க்கை நமக்குக் கூறும் பாடம்.
எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் நமக்கு மட்டுமே வைத்துக்கொள்ளாமல் மற்றவருக்கு உதவும் விதத்தில் அதைப் பயன்படுத்தினால்தான் அந்தச் செல்வத்திற்கே பெருமை என்பதைக் கூறும் வகையில் வாழ்ந்து காட்டியவர்.
உலகத்தில் உள்ள அனைத்துப் பரிசுகளிலும் தலைசிறந்த நோபல் பரிசை வழங்க ஏற்பாடுகள் செய்த அவர் பெயர் உலகம் உள்ளளவும் மறையாது என்பது நிச்சயம்.
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 12
டேவிட் காப்பர் ஃபீல்டு
மனிதர்களை மகிழ்விப்பதன் மூலமும் வியப்படையச் செய்வதன்மூலமும் அவர்கள் கவனத்தைத் தன் பக்கம் கவரமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் காப்பர் ஃபீல்டு.
அவர் ஒரு யூதராகப் பிறந்தார், ரஷ்யாவிலிருந்து இஸ்ரேலுக்குக் குடியேறி, பின்னர் மீண்டும் அமெரிக்காவிற்குச் சென்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அவரின் தந்தை துணிக்கடை வைத்திருந்தார், தாய் இன்ஷுரன்ஸ் ஏஜெண்டாகப் பணியாற்றினார்.
நடுத்தரமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவருக்கு சாதனைகள் படைத்து உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
சிறு வயதிலேயே சிறுசிறு மேஜிக்குகளைச் செய்து தன் குடும்பத்தாரையும் நண்பர்களையும் மகிழ்வித்தவர்.
உலகின் தலைசிறந்த மேஜிக் நிபுணர்களில் அவரும் ஒருவராகத் திகழ்கிறார்.
மேஜிக் என்பது டிரிக்குகள்தான் என்பதை அவர் சிறு வயதிலேயே புரிந்து வைத்திருந்தார்.
பள்ளியில் படிக்கும் காலத்தில் அவருக்கு போரடித்த ஓவியப் பாடத்தை நடத்த வந்த ஆசிரியரை தன் மேஜிக் திறமையால் வகுப்பைவிட்டு வெளியே செல்லும்படி செய்தவர்.
வியப்பூட்டுவது மட்டுமே பெரிய விஷயமல்ல, எப்படி அதைச் செய்கிறோம் என்பதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் அவர் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று.
பாடங்களின்மீது அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததில்லை. புதிய புதிய டிரிக்குகளைக் கண்டுபிடிப்பது, அதைக்கொண்டு நண்பர்களை மகிழ்விப்பது மட்டுமே அவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது.
மேஜிக் சம்பந்தப்பட்ட புத்தகங்களை ஆர்வமாகப் படிப்பதோடு, மேஜிக் நிபுணர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் அவர் ஆர்வமாகப் படிக்கத் தொடங்கினார்.
செய்யும் செயலில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்வது பலரது வழக்கம். ஆனால் ஆர்வமுள்ள துறையே தங்களுக்கு வாய்க்கப் பெற்றவர்கள் அதை மேலும் மெருகேற்றிக் கொள்வது எளிதாக இருக்கும். அதுதான் அவருக்கும் அமைந்தது.
தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலேயே மேஜிக் நிபுணர்கள் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கோல்டு மெடல் வாங்கிய பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
காரணம் அவர் ஈடுபட்டிருந்த துறையில் அவர் காட்டிய ஆர்வம், உழைப்பு, அர்ப்பணிப்பு.
மேஜிக் நிபுணர்கள் பலர் இருந்தபோதும் மக்களை அவர் கவர்தற்கு மிக முக்கியக் காரணம் ஒருமுறை செய்ததை அவர் அடுத்தமுறை செய்ய மாட்டார் என்பதுதான்.
எப்போதும் புதிய சிந்தனை, புதிய ஆற்றல் எளிதாக வெற்றியைத் தரும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் அவர்.
ஒருமுறை அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையை அவர் சிறிதுநேரம் கண்களில் படாமல் மறைத்துவிட்டார், மக்களின் மனங்களைக் கவர்ந்துவிட்டார்.
சீனப்பெருஞ்சுவரின்மேல் நடந்து பின்னர் பறவைபோல் பறந்து காட்டினார், இன்னும் இதுபோல் பலப்பல நிகழ்ச்சிகளைக் கூறலாம்.
நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் இடம்பெறும் உலகப்புகழடைந்தவர்கள் பற்றிய ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே மேஜிக் நிபுணர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு வயதிலிருந்தே ஒரு செயலில் ஆர்வமாக ஈடுபட்டால் அதில் மாபெரும் வெற்றியடையலாம் என்பதற்கு அவர் ஒரு வாழும் உதாரணம். இன்னும் தாஜ்மஹாலை மறைய வைப்பது, நிலவைக் கண்ணிலிருந்து மறைப்பது போன்றவற்றைச் செயல்படுத்த திட்டங்கள் வைத்திருப்பவர்.
அவர் ஒருமுறை தன்னைப் பேட்டி எடுத்தவரிடம், Òநான் மக்களை மகிழ்விக்கும் பணியில் இருப்பவன். அதற்காக நான் இருபத்து நான்கு மணிநேரமும் உழைத்துக்கொண்டே இருந்தாக வேண்டும்Ó என்று கூறினார்.
உண்மைதான், உழைப்பு கடுமையானதாக இருந்தால் உலகில் நாம் பெறும் பலன்களும் அதிகமாகவே இருக்கும்.
டேவிட் காப்பர் ஃபீல்டு
மனிதர்களை மகிழ்விப்பதன் மூலமும் வியப்படையச் செய்வதன்மூலமும் அவர்கள் கவனத்தைத் தன் பக்கம் கவரமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் காப்பர் ஃபீல்டு.
அவர் ஒரு யூதராகப் பிறந்தார், ரஷ்யாவிலிருந்து இஸ்ரேலுக்குக் குடியேறி, பின்னர் மீண்டும் அமெரிக்காவிற்குச் சென்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அவரின் தந்தை துணிக்கடை வைத்திருந்தார், தாய் இன்ஷுரன்ஸ் ஏஜெண்டாகப் பணியாற்றினார்.
நடுத்தரமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவருக்கு சாதனைகள் படைத்து உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
சிறு வயதிலேயே சிறுசிறு மேஜிக்குகளைச் செய்து தன் குடும்பத்தாரையும் நண்பர்களையும் மகிழ்வித்தவர்.
உலகின் தலைசிறந்த மேஜிக் நிபுணர்களில் அவரும் ஒருவராகத் திகழ்கிறார்.
மேஜிக் என்பது டிரிக்குகள்தான் என்பதை அவர் சிறு வயதிலேயே புரிந்து வைத்திருந்தார்.
பள்ளியில் படிக்கும் காலத்தில் அவருக்கு போரடித்த ஓவியப் பாடத்தை நடத்த வந்த ஆசிரியரை தன் மேஜிக் திறமையால் வகுப்பைவிட்டு வெளியே செல்லும்படி செய்தவர்.
வியப்பூட்டுவது மட்டுமே பெரிய விஷயமல்ல, எப்படி அதைச் செய்கிறோம் என்பதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் அவர் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று.
பாடங்களின்மீது அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததில்லை. புதிய புதிய டிரிக்குகளைக் கண்டுபிடிப்பது, அதைக்கொண்டு நண்பர்களை மகிழ்விப்பது மட்டுமே அவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது.
மேஜிக் சம்பந்தப்பட்ட புத்தகங்களை ஆர்வமாகப் படிப்பதோடு, மேஜிக் நிபுணர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் அவர் ஆர்வமாகப் படிக்கத் தொடங்கினார்.
செய்யும் செயலில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்வது பலரது வழக்கம். ஆனால் ஆர்வமுள்ள துறையே தங்களுக்கு வாய்க்கப் பெற்றவர்கள் அதை மேலும் மெருகேற்றிக் கொள்வது எளிதாக இருக்கும். அதுதான் அவருக்கும் அமைந்தது.
தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலேயே மேஜிக் நிபுணர்கள் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கோல்டு மெடல் வாங்கிய பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
காரணம் அவர் ஈடுபட்டிருந்த துறையில் அவர் காட்டிய ஆர்வம், உழைப்பு, அர்ப்பணிப்பு.
மேஜிக் நிபுணர்கள் பலர் இருந்தபோதும் மக்களை அவர் கவர்தற்கு மிக முக்கியக் காரணம் ஒருமுறை செய்ததை அவர் அடுத்தமுறை செய்ய மாட்டார் என்பதுதான்.
எப்போதும் புதிய சிந்தனை, புதிய ஆற்றல் எளிதாக வெற்றியைத் தரும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் அவர்.
ஒருமுறை அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையை அவர் சிறிதுநேரம் கண்களில் படாமல் மறைத்துவிட்டார், மக்களின் மனங்களைக் கவர்ந்துவிட்டார்.
சீனப்பெருஞ்சுவரின்மேல் நடந்து பின்னர் பறவைபோல் பறந்து காட்டினார், இன்னும் இதுபோல் பலப்பல நிகழ்ச்சிகளைக் கூறலாம்.
நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் இடம்பெறும் உலகப்புகழடைந்தவர்கள் பற்றிய ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே மேஜிக் நிபுணர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு வயதிலிருந்தே ஒரு செயலில் ஆர்வமாக ஈடுபட்டால் அதில் மாபெரும் வெற்றியடையலாம் என்பதற்கு அவர் ஒரு வாழும் உதாரணம். இன்னும் தாஜ்மஹாலை மறைய வைப்பது, நிலவைக் கண்ணிலிருந்து மறைப்பது போன்றவற்றைச் செயல்படுத்த திட்டங்கள் வைத்திருப்பவர்.
அவர் ஒருமுறை தன்னைப் பேட்டி எடுத்தவரிடம், Òநான் மக்களை மகிழ்விக்கும் பணியில் இருப்பவன். அதற்காக நான் இருபத்து நான்கு மணிநேரமும் உழைத்துக்கொண்டே இருந்தாக வேண்டும்Ó என்று கூறினார்.
உண்மைதான், உழைப்பு கடுமையானதாக இருந்தால் உலகில் நாம் பெறும் பலன்களும் அதிகமாகவே இருக்கும்.
- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 13
ராமன் விளைவு தந்த சர். சி.வி. ராமன்
இந்தியாவிற்கே பெருமை சேர்த்த பல மனிதர்கள் உண்டு, அவர்களில் சர். சி.வி. ராமனும் ஒருவர்.
1930ம் ஆண்டு ராமன் விளைவுக்காக அவர் நோபல் பரிசு பெற்று இந¢தியாவைப் பெருமைப்படுத்தினார்.
1888ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி வேங்கடராமன் சந்திரசேகர், பார்வதி தம்பதியருக்கு மகனாக தஞ்சாவூருக்கு அருகில் உள்ள பாபநாசத்திற்கு அருகேயுள்ள மாங்குடி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
சிறு வயதாக இருக்கும்போதே கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். இயற்பியல் மற்றும் கணிதம் இரண்டும் அவரைக் கவர்ந்தன.
விசாகப்பட்டினத்திலும் சென்னையிலும் படித்தார். அரசுக் கல்லூரியில் பயின்ற அவர் முதல் வகுப்பில் எம்.ஏ. படித்து முடித்தார்.
அவரின் தந்தை ஓர் ஆசிரியர் என்பதால் மகனுக்கு அவ்வப்போது அறிவுரைகள் வழங்குவதும், மகன் கேட்கும் சந்தேகங்களுக்குத் தக்க பதில்களை வழங்குவதுமாக தன்னுடைய ஆசிரியப் பணியை வீட்டிலும் சிறப்பாகச் செய்தார்.
பிரிட்டிஷ் விஞ்ஞானியான ராலிபிரபு என்பவர் ஒலி குறித்துக் கூறிய கருத்துகள் ராமனின் மனதில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. அவரின் கல்லூரிப் பேராசிரியரிடம் கேட்டும் அவருக்குத் தக்க பதில் கிடைக்கவில்லை.
அதனால் அவர் மனம் சோர்ந்து போய்விடவில்லை. நாம் நினைத்தது கிடைக்கவில்லை என்று நினைத்து மனம் வருந்துபவர்கள் சாதாரணமானவர்கள், தாங்கள் நினைத்து நடந்தே ஆகவேண்டும் என்று செயல்படுபவர்கள் சாதனையாளர்கள் என்பதை உணர்த்தும் வகையில் அவர் தன்னுடைய சந்தேகத்திற்கு விடை தேடிக் கொண்டே இருந்தார். ஒரு வழியாக அவரின் சந்தேகம் தீர்ந்தது. அதற்கான பதிலை அவரே கண்டுபிடித்துவிட்டிருந்தார். அவரின் ஆசிரியருக்கும் அதுபற்றிக் கூறினார். ஒலி பற்றிய கட்டுரையொன்றையும் எழுதி ஆசிரியரிடம் கொடுத்தார். சிறிதுகாலத்திற்குப் பிறகு அந்தக் கட்டுரையை அயல்நாட்டுப் பத்திரிகைக்கு அனுப்பிவைத்தார். அது பிரசுரமானது. அதற்குப் பிறகு ஒளி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையும் அதே இதழில் பிரசுரமானது.
கொல்கத்தாவில் உதவி கணக்குத் தணிக்கை அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். பணி நேரம் போக மீதி நேரத்தில் தன்னுடைய ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.
பல்வேறு கட்டுரைகளை எழுதினார், அவற்றை அயல்நாட்டுப் பத்திரிகைகள் வெளியிட்டன.
ரங்கூனுக்குச் சென்று சிறிதுகாலம் பணிபுரிந்தார். அங்கேயும் அவருடைய ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. பின்னர் மீண்டும் நாகபுரிக்கு பணியிட மாறுதல் கிடைத்தது.
அப்போது பிளேக் நோய் பரவிய சமயம் என்பதால் ஊழியர்களைப் பாதுகாப்பதற்காக தோட்டத்தில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் அவர்களைத் தங்கவைத்துவிட்டு தானும் அதிலேயே தங்கினார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற பல்கலைக்கழகக் கூட்டு மாநாட்டில் கலந்துகொள்வதற்காகக் கப்பலில் பயணம் செய்தபோது வானத்தின் நீலநிறம் அவர் மனதைக் கொள்ளை கொண்டது.
கொல்கத்தாவிற்குத் திரும்பியதும் ஒளிக்கதிர்கள் பற்றிய தன்னுடைய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். ஒளி சாதாரணமான வௌ¢ளை நிறத்தில்தான் காணப்படுகிறது, காற்றின் ஊடே செல்லும்போதுதான் அவை பல நிறங்களாகப் பிரிந்துவிடுகின்றன. அதில் உள்ள நீலநிறக் கதிர்களே வானத்திற்கும் கடலுக்கும் நீலநிறத்தைக் கொடுக்கின்றன என்பதைக் கண்டறிந்தார்.
அவருக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்தனர்.
எந்தப் பொருளின் வழியாக ஒளி ஊடுருவிச் செல்கிறதோ அந்தப் பொருளின் அணுக்களால் ஒளிச்சிதைவு ஏற்பட்டு புதிய நிற ஒளிக்கதிர்கள் தோன்றுகின்றன என்ற ராமன் விளைவைக் கண்டறிந்தார். அதற்காக நோபல் பரிசும் பெற்றார்.
நாடு புகழும் சர். சி.வி. ராமன் ஒரு தமிழர் என்பதில் நாம் பெருமைப்படுவதோடு அவரைப்போல் உழைத்துப் புகழ்பெறுவதற்கும் முயல வேண்டும்.
ராமன் விளைவு தந்த சர். சி.வி. ராமன்
இந்தியாவிற்கே பெருமை சேர்த்த பல மனிதர்கள் உண்டு, அவர்களில் சர். சி.வி. ராமனும் ஒருவர்.
1930ம் ஆண்டு ராமன் விளைவுக்காக அவர் நோபல் பரிசு பெற்று இந¢தியாவைப் பெருமைப்படுத்தினார்.
1888ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி வேங்கடராமன் சந்திரசேகர், பார்வதி தம்பதியருக்கு மகனாக தஞ்சாவூருக்கு அருகில் உள்ள பாபநாசத்திற்கு அருகேயுள்ள மாங்குடி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
சிறு வயதாக இருக்கும்போதே கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். இயற்பியல் மற்றும் கணிதம் இரண்டும் அவரைக் கவர்ந்தன.
விசாகப்பட்டினத்திலும் சென்னையிலும் படித்தார். அரசுக் கல்லூரியில் பயின்ற அவர் முதல் வகுப்பில் எம்.ஏ. படித்து முடித்தார்.
அவரின் தந்தை ஓர் ஆசிரியர் என்பதால் மகனுக்கு அவ்வப்போது அறிவுரைகள் வழங்குவதும், மகன் கேட்கும் சந்தேகங்களுக்குத் தக்க பதில்களை வழங்குவதுமாக தன்னுடைய ஆசிரியப் பணியை வீட்டிலும் சிறப்பாகச் செய்தார்.
பிரிட்டிஷ் விஞ்ஞானியான ராலிபிரபு என்பவர் ஒலி குறித்துக் கூறிய கருத்துகள் ராமனின் மனதில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. அவரின் கல்லூரிப் பேராசிரியரிடம் கேட்டும் அவருக்குத் தக்க பதில் கிடைக்கவில்லை.
அதனால் அவர் மனம் சோர்ந்து போய்விடவில்லை. நாம் நினைத்தது கிடைக்கவில்லை என்று நினைத்து மனம் வருந்துபவர்கள் சாதாரணமானவர்கள், தாங்கள் நினைத்து நடந்தே ஆகவேண்டும் என்று செயல்படுபவர்கள் சாதனையாளர்கள் என்பதை உணர்த்தும் வகையில் அவர் தன்னுடைய சந்தேகத்திற்கு விடை தேடிக் கொண்டே இருந்தார். ஒரு வழியாக அவரின் சந்தேகம் தீர்ந்தது. அதற்கான பதிலை அவரே கண்டுபிடித்துவிட்டிருந்தார். அவரின் ஆசிரியருக்கும் அதுபற்றிக் கூறினார். ஒலி பற்றிய கட்டுரையொன்றையும் எழுதி ஆசிரியரிடம் கொடுத்தார். சிறிதுகாலத்திற்குப் பிறகு அந்தக் கட்டுரையை அயல்நாட்டுப் பத்திரிகைக்கு அனுப்பிவைத்தார். அது பிரசுரமானது. அதற்குப் பிறகு ஒளி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையும் அதே இதழில் பிரசுரமானது.
கொல்கத்தாவில் உதவி கணக்குத் தணிக்கை அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். பணி நேரம் போக மீதி நேரத்தில் தன்னுடைய ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.
பல்வேறு கட்டுரைகளை எழுதினார், அவற்றை அயல்நாட்டுப் பத்திரிகைகள் வெளியிட்டன.
ரங்கூனுக்குச் சென்று சிறிதுகாலம் பணிபுரிந்தார். அங்கேயும் அவருடைய ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. பின்னர் மீண்டும் நாகபுரிக்கு பணியிட மாறுதல் கிடைத்தது.
அப்போது பிளேக் நோய் பரவிய சமயம் என்பதால் ஊழியர்களைப் பாதுகாப்பதற்காக தோட்டத்தில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் அவர்களைத் தங்கவைத்துவிட்டு தானும் அதிலேயே தங்கினார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற பல்கலைக்கழகக் கூட்டு மாநாட்டில் கலந்துகொள்வதற்காகக் கப்பலில் பயணம் செய்தபோது வானத்தின் நீலநிறம் அவர் மனதைக் கொள்ளை கொண்டது.
கொல்கத்தாவிற்குத் திரும்பியதும் ஒளிக்கதிர்கள் பற்றிய தன்னுடைய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். ஒளி சாதாரணமான வௌ¢ளை நிறத்தில்தான் காணப்படுகிறது, காற்றின் ஊடே செல்லும்போதுதான் அவை பல நிறங்களாகப் பிரிந்துவிடுகின்றன. அதில் உள்ள நீலநிறக் கதிர்களே வானத்திற்கும் கடலுக்கும் நீலநிறத்தைக் கொடுக்கின்றன என்பதைக் கண்டறிந்தார்.
அவருக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்தனர்.
எந்தப் பொருளின் வழியாக ஒளி ஊடுருவிச் செல்கிறதோ அந்தப் பொருளின் அணுக்களால் ஒளிச்சிதைவு ஏற்பட்டு புதிய நிற ஒளிக்கதிர்கள் தோன்றுகின்றன என்ற ராமன் விளைவைக் கண்டறிந்தார். அதற்காக நோபல் பரிசும் பெற்றார்.
நாடு புகழும் சர். சி.வி. ராமன் ஒரு தமிழர் என்பதில் நாம் பெருமைப்படுவதோடு அவரைப்போல் உழைத்துப் புகழ்பெறுவதற்கும் முயல வேண்டும்.
தங்களின் இந்தப் பதிவுகள் அனைத்தும் அரிய பொக்கிஷங்கள்! அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி, மேலும் இதுபோன்ற ஆக்ககரமான பதிவுகளைத் தாருங்கள்!
பகிர்வுக்கு நன்றி, மேலும் இதுபோன்ற ஆக்ககரமான பதிவுகளைத் தாருங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8
|
|