புதிய பதிவுகள்
» [மின்னூல்] ஒலிப்புத்தகம் அடுத்தது என்ன
by தமிழ்வேங்கை Today at 7:07 am

» tamil audio books தந்துதவ முடியுமா?
by தமிழ்வேங்கை Today at 7:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 5:41 am

» 'கம்யூனிசம் யாருக்கு சொந்தம்' - சீனாவும் ரஷ்யாவும் பங்காளி சண்டை போட்ட வரலாறு
by சிவா Today at 5:39 am

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by சிவா Today at 5:27 am

» உலகச் செய்திகள்!
by சிவா Today at 5:01 am

» நோயாளியை பார்க்கச் செல்பவர்களுக்கான 10 கட்டளைகள்
by சிவா Today at 4:54 am

» சுபாவின் நாவல் இருந்தால் பகிரவும்
by சிவா Today at 4:26 am

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 11:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 11:17 pm

» புதியவர் - ஈஸ்வரி M அவர்கள்.
by சிவா Yesterday at 11:13 pm

» இதுதான் மலேசியாவாம் -
by சிவா Yesterday at 11:11 pm

» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 10:50 pm

» ஏகலைவன்
by சிவா Yesterday at 10:19 pm

» அண்ணாமலையின் எழுச்சியால் தடுமாறும் திராவிடம்
by சிவா Yesterday at 9:56 pm

» உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 7:15 pm

» என்னை அரசியலுக்கு இழுத்தால் தாங்க மாட்டீங்க' - பாலாஜி முருகதாஸ்
by சிவா Yesterday at 7:07 pm

» இரவில் தூக்கம் வரவில்லையா?
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» கோவிட்-19 வைரஸ் எந்த விலங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது
by சிவா Yesterday at 6:09 pm

» அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா?
by சிவா Yesterday at 5:49 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 5:35 pm

» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Yesterday at 2:55 am

» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Yesterday at 2:32 am

» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Yesterday at 1:20 am

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 1:01 am

» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Yesterday at 12:50 am

» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Yesterday at 12:37 am

» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Sun Mar 26, 2023 11:53 pm

» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Sun Mar 26, 2023 11:30 pm

» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Sun Mar 26, 2023 8:36 pm

» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Sun Mar 26, 2023 6:57 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Sun Mar 26, 2023 6:48 pm

» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Sun Mar 26, 2023 5:46 pm

» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Sun Mar 26, 2023 1:25 pm

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 11:48 pm

» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 7:58 pm

» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:31 pm

» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 3:39 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 12:20 pm

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 7:41 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:01 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 2:13 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 1:58 pm

» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 10:13 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 7:54 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 2:35 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Fri Mar 24, 2023 1:03 am

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 8:53 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 8:43 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10நாட்டு மருந்துக் கடை!!! Poll_m10நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10 
28 Posts - 68%
T.N.Balasubramanian
நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10நாட்டு மருந்துக் கடை!!! Poll_m10நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10 
9 Posts - 22%
தமிழ்வேங்கை
நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10நாட்டு மருந்துக் கடை!!! Poll_m10நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10 
2 Posts - 5%
eswari m
நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10நாட்டு மருந்துக் கடை!!! Poll_m10நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10 
1 Post - 2%
TAMILULAGU
நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10நாட்டு மருந்துக் கடை!!! Poll_m10நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10நாட்டு மருந்துக் கடை!!! Poll_m10நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10 
539 Posts - 67%
T.N.Balasubramanian
நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10நாட்டு மருந்துக் கடை!!! Poll_m10நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10 
134 Posts - 17%
Dr.S.Soundarapandian
நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10நாட்டு மருந்துக் கடை!!! Poll_m10நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10 
72 Posts - 9%
mohamed nizamudeen
நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10நாட்டு மருந்துக் கடை!!! Poll_m10நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10 
31 Posts - 4%
Dhivya Jegan
நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10நாட்டு மருந்துக் கடை!!! Poll_m10நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10 
12 Posts - 1%
Elakkiya siddhu
நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10நாட்டு மருந்துக் கடை!!! Poll_m10நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10 
6 Posts - 1%
eraeravi
நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10நாட்டு மருந்துக் கடை!!! Poll_m10நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10நாட்டு மருந்துக் கடை!!! Poll_m10நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10 
4 Posts - 0%
THIAGARAJAN RV
நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10நாட்டு மருந்துக் கடை!!! Poll_m10நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10 
4 Posts - 0%
கோபால்ஜி
நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10நாட்டு மருந்துக் கடை!!! Poll_m10நாட்டு மருந்துக் கடை!!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

நாட்டு மருந்துக் கடை!!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 18, 2015 8:13 pm

திப்பிலி! திரிகடுகு எனும் மூலிகை மும்மூர்த்திகளில் மூன்றாமவர். சுக்கையும் மிளகையும் அறிந்த அளவுக்கு, இந்தத் தலைமுறை திப்பிலியை அறிந்திருக்கவில்லை. மிளகைப் போன்றே மிக முக்கிய மருத்துவக் குணம் உடையது இது. “கட்டி எதிர்நின்ற கடும் நோயெல்லாம் பணியும்” என தேரன் சித்தர் சிலாகித்துப் பாடிய இந்த திப்பிலி, சாதாரண சளி, இருமல் முதல் இளைப்புநோய் வரை குணப்படுத்தும். இளைப்புநோய் என்பது குழந்தைகளை எடை குன்றச்செய்து, காயச்சலும் சளியுமாய் இருக்கச்செய்யும் இளங்காசம் எனும் பிரைமரி காம்ப்ளக்ஸ் தான்.

‘‘மாமனுக்கு மாமனென மற்றவனுக்கு மற்றவனாக காமனெனுந் திப்பிலிக்குக் கை” என தேரன்சித்தன் பாடியதை விரித்தால், விளங்கும் விஷயம் அலாதி. பாரதத்தில் சகுனி மாமனால் வந்த பிரச்னையை, கிருஷ்ண மாமான் தீர்த்துவைத்ததுபோல், ஆஸ்துமா நோய் மாமன் போல் மரபாய் வந்திருந்தாலும், மற்றவனாய் சொல்லப்பட்ட கோழையை விரட்டி, ஆஸ்துமாவை விரட்டும் என்பதுதான் அப்பாடலின் பொருள். திப்பிலிக்கு சித்த மருத்துவத்தில் காமன் என்று இன்னொரு பெயர் உண்டு. பித்தம் தாழ்ந்து இருக்கும் ஆஸ்துமாவில், பித்தத்தை உயர்த்திச் சீராக்கும் தன்மையும் இருக்கிறது என்பதுதான் பொருள். கூடவே திப்பிலி பித்தத்தினை உயர்த்தி, விந்தணுக்களையும் உயர்த்தும் தன்மை கொண்டது.
நாட்டு மருந்துக் கடை!!! L1AOi0GaTlC38D0ymGmU+p32a
ஆஸ்துமா நீக்கும் திப்பிலி

ஆஸ்துமாவைக் கட்டுக்குள்வைக்க இன்று நவீன மருத்துவம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் சில மாதங்கள் இரவில் மட்டும் ஆன்டி லியூகோட்ரைன்ஸ் (Anti Leucotrines) கொடுப்பது வழக்கம். இந்த மருந்து செய்வதைத் திப்பிலியும் செய்யும். ஆஸ்துமாவுக்கு மூச்சுஇறுக்கத்தை (Tightness of chest) குறைக்க வேண்டும். மூச்சுக் குழலை விரிவடையச் (Broncho dilation) செய்ய வேண்டும். வெளியே வர மறுக்கும் வெந்த சவ்வரிசி போன்ற சளியை, மூச்சுக்குழல் நுரையீரல் பாதையில் இருந்து பிரித்தெடுத்து வெளியேற்ற (Mucolytic) வேண்டும். இத்தனையையும் திப்பிலி செய்யும். காற்று மாசுக்களால் ஹிஸ்டமினும், லியூகோட்ரைனும் தூண்டப்பட்டு, மூச்சுக்குழலை இறுகவைப்பதைத் திப்பிலி தடுப்பதுடன், திடீர் கோழைப்பெருக்கம் நடப்பதையும் நிறுத்தும் என்பதைப் பல சர்வதேச மருத்துவ ஆய்வேடுகள் உறுதிபடுத்தியுள்ளன.

சித்த மருத்துவ மருந்தான திப்பிலி ரசாயனம், ஆஸ்துமா நோய்க்கென கொடுக்கப்படும் மிகச் சிறந்த தடுப்பு மருந்து. திப்பிலையைப் பிரதானமாகவும், இன்னும் பல சளி நீக்கும் உலர் மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் இந்த மருந்து, சித்த மருந்துகளில் ஆஸ்துமாவுக்கான மருந்துப் பட்டியலில் தலையானது.

பல நோய் போக்கும் திப்பிலிமிளகைவிட அதிகக் காரமும் வெப்பத்தன்மையும்கொண்ட இந்தத் திப்பிலியை கைப்பக்குவ மருந்தாக வீட்டில் பல வகையில் பயன்படுத்த இயலும். இளவறுப்பாய் வறுத்துப் பொடித்த திப்பிலிப் பொடியை, 3 சிட்டிகை அளவு எடுத்துக்கொண்டு, வெற்றிலைச்சாறும் தேனும் சேர்த்துக்கொடுக்க, நுரையீரலிலிலிருந்து வெளியேற மறுக்கும் கோழையை வெளியேற்றி இருமலைப் போக்கும்.

கபம் நெஞ்சில் கட்டிக்கொண்ட, மலச்சிக்கலும் உள்ள குழந்தைகள் அல்லது முதியோருக்கு, மலத்தை இளக்கி வெளியேற்றி கபத்தைக் குறைப்பதுதான் ஆஸ்துமா நோய்கான தீர்வைத்தரும். இதற்கு, திப்பிலி பொடியையும், கடுக்காய் பொடியையும் சம அளவு எடுத்து, தேன் சேர்த்து உருட்டி இரவில் கொடுக்கலாம்.

உடலெங்கும் பரவி, போக மறுக்கும் சாதாரணப் பூஞ்சையை நிரந்தரமாகப் போக்க, மேலுக்கு சீமையகத்திச் சாறு போடுவது, நலுங்கு மாவு போட்டுக் குளிப்பதைத் தாண்டி, தினம் ஒரு வேளை திப்பிலி பொடியை 2 சிட்டிகை அளவு சாப்பிடுவது நல்லது என்கிறது சித்த மருத்துவம்.

திப்பிலி செடியின் வேரும்கூட பெரும் மருத்துவப் பயன்கொண்டது. இதற்குத் திப்பிலி மூலம் என்று பெயர். திப்பிலி போலவே சளி நீக்கும் குணம் கொண்ட இந்த மூலிகை வேரை, பாலில் விட்டு அரைத்து, காய்ச்சிய் பாலில் கலந்துகொடுக்க இடுப்பு, முதுகுப் பகுதியில் வரும் வலிகளான ஸ்பான்டிலோசிஸ், லும்பாகோ (Spondylosis, lumbago) போன்றவை குணமாகும்.
பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கும் வெள்ளைப்படுதலும் இருந்தால், திப்பிலி 30 கிராம், தேற்றான் கொட்டை 30 கிராம் அரைத்துப் பொடித்து, காலை வேளையில் மூன்று சிட்டிகை சாப்பிட்டுவர நீங்கும் என்கிறது, சித்த மருத்துவ குணபாட நூல்.

நாட்டுமருந்துக் கடையில் அரிசித்திப்பிலி, யானைத்திப்பிலி என இரண்டு வகை கிடைக்கும். அரிசித்திப்பிலி, எனும் சன்னமாக சிறிதாக இருக்கும் திப்பிலிதான் மருத்துவத்துக்கு மிகவும் சிறப்பானது. உதிராது, உலர்ந்து முழுமையாய் இருக்கும் இதனை வாங்கி, இளவறுப்பாக வறுத்துப் பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது, இது விளையும் சீசனில் வாங்கிப் பத்திரப்படுத்தி ஃப்ரெஷாகப் பயன்படுத்துவது இன்னும் சிறப்பு.

நாட்டு மருந்துக் கடை!!! E76ZmeZyTA2LIpQVPPOY+p32b
திப்பிலி ரசாயனம் எப்படி செய்வது?

திப்பிலி 100 கிராம், மிளகு, சுக்கு ஏலம், சீரகம், திப்பிலி வேர், வாய்விடங்கம், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒவ்வொன்றும் 25 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் இள வறுப்பாய் வறுத்து, நன்கு மையாகப் பொடித்துகொள்ள வேண்டும். பனை வெல்லத்தைப் பாகு காய்ச்சி, அந்தப் பாகின் மேல் சொன்ன பொடியை அளவாகப் போட்டு, லேகியமாய் வேகவைத்து, ஆறிய பின்னர், சிறிது தேன் சேர்த்துவைத்துக்கொள்ள வேண்டும். சளி, இருமல், கோழை ஆஸ்துமா உள்ள வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய கைமருந்து இது. இந்த லேகியத்தைச் சிறு சுண்டைக்காய் அளவு குழந்தைகள் முதல் பெரியவர் வரை மாலைப்பொழுதில் சாப்பிட, இரைப்பு நோய் எனும் ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்க முடியும். ஆஸ்துமா இழுப்புக்குப் பக்கவாத்தியம் செய்யும், மலச்சிக்கல், வயிற்று உப்புசம் ஆகியவற்றையும் இந்த மருந்து போக்கும் என்பது கூடுதல் செய்தி.
நன்றி-டாக்டர்விகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 18, 2015 9:08 pm

நாட்டு மருந்துக் கடை!!! 103459460

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 19, 2015 3:36 pm

அருமையான பதிவு.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நாட்டு மருந்துக் கடை!!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக