புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிஸ்டர் கழுகு: அம்மாவுக்காக ‘கோ’ தானம்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
நாடு முழுக்க மாடு...
''ஸ்டார்ட் மியூசிக்'' என்றபடி ஆர்ப்பாட்டமாக உள்ளே நுழைந்தார் கழுகார்.
''உமது செய்திக் கச்சேரிக்கு எதற்காக மியூசிக்?' என்றோம்.
''எனக்கு அல்ல. ஆளும் கட்சியினர் தங்களது ஆராதனை ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டனர் என்பதைச் சொல்ல வந்தேன். ஜெயலலிதாவுக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் தண்டனை தரப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது, அவரை விடுதலை செய்ய வேண்டி அனைத்து அமைச்சர்களும் செய்தார்கள் அல்லவா ஆர்ப்பாட்டங்கள்? அதை மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள். அப்போது சிலர் தாடி வளர்த்தார்கள், சிலர் தலை முடி வளர்த்தார்கள், பலரும் கோயிலுக்கு வேண்டிக்கொண்டார்கள், அக்னிச் சட்டி முதல் அலகு குத்துதல் வரை நிறைய நடந்தன. இவை கொஞ்ச நாட்களாக அமுங்கி இருந்தது. இதோ மீண்டும் அவை ஆரம்பம் ஆகிவிட்டது. கூடுதலாக இந்தக் கூட்டத்தில் பசுவும் சேர்ந்துள்ளது.''
''பசுவா?'
''ஜெயலலிதாவின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு கோயில்களில் பூஜை, பரிகாரங்கள் செய்யவும் தங்கத் தேர் இழுக்கவும் மற்றும் ஏழை எளியவர்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கவும் உத்தரவு போயிருக்கிறது. தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் 113 ஜோடிகளுக்கு வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் 72 வகை சீர்வரிசைகள் கொடுத்தார். அத்துடன் பசுவும் கன்றும் வழங்கி திருமணம் செய்து வைத்தாராம். வைத்திலிங்கம் ரகசியமாக ஏற்பாடு செய்வதைக் கேள்விப்பட்ட அமைச்சர் காமராஜும் தன் பங்குக்கு திருவாரூரில் 104 ஜோடிகளுக்கான சீர்வரிசைகளுடன் பசுவும் கன்றும் கொடுத்தாராம்.''
''எதற்காக பசுவும் கன்றும்?'
''எல்லாம் பரிகாரம் என்றுதான் சொல்கிறார்கள். ஜெயலலிதாவின் ஜாதகக் கட்டங்களை, அவரைவிட அவரின் கட்சிக்காரர்கள்தான் அதிகம் பார்க்கிறார்கள். '2016-ம் ஆண்டு சனி புத்தி முடிந்து, புதன் புத்தி ஆரம்பமாகிறது அம்மாவுக்கு. புதனின் வாகனங்களில் ஒன்று பசு. இதைத் தானமாகக் கொடுத்தால், வரவிருக்கும் துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம். அம்மாவின் ஜாதகத்தில் 9-ம் இடமாகிய பதவி ஸ்தானத்தில் புதன் அமர்கிற காரணத்தால், ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவதற்கு இப்போதில் இருந்தே பரிகாரத்தை முறையாகச் செய்ய ஆரம்பித்துவிட்டோம். அதன் ஒரு கட்டமாக, திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் கோதானம் கொடுத்திருக்கிறோம். கோர்ட் வழக்குகளில் இருந்து ஜெயிப்பது உள்ளிட்ட பல அம்சங்களுக்கு இந்தப் பரிகாரம் உதவும். தஞ்சாவூர்க்காரர்கள் இந்தச் சூட்சுமத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டு கோதானம் கொடுத்துவிட்டார்கள். மற்றவர்கள் இனிதான் இவர்கள் பாணியை பின்பற்றப்போகிறார்கள். இதைத் தெரிந்துகொண்டு ஐந்து பசுக்களை வைத்து சென்னிமலை கோயிலில் கோ பூஜை நடத்துகிறாராம் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.
இதைக் கேள்விப்பட்ட மற்ற அமைச்சர்களும் தங்கள் மாவட்டங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து பசு தானம் கொடுக்க மாடுகளைத் தேட ஆரம்பித்துள்ளார்கள். நாடு முழுக்க மாடு தேடும் படலம் நடக்கிறது. முன்பு கோயில்கள், தேவாலயங்கள், தர்காக்களில் சர்வ மதப் பிரார்த்தனைகள்தான் நடக்கும். ஆனால் இந்த முறை கோதானம் அதிகமாக நடக்கப் போகிறது. மார்ச் மாதத்தில் பெங்களூரு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் முழுமையாக முடிந்து தீர்ப்பு வந்துவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவரை இந்தப் பசு தானம் நாடு முழுவதும் தொடருமாம்!'
''மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும்'' என்றபடியே தலையாட்டினார் கழுகார், ''தி.மு.கவும் பி.ஜே.பியும் நெருங்கி வருகிறது போலிருக்கிறதே?'
''திருப்பூர் திருமண வீட்டில் நடந்த விஷயங்களை வைத்து சொல்கிறீரா? தயாநிதி மாறன் தொடர்புடைய பி.எஸ்.என்.எல் முறைகேடு விவகாரம் மார்ச் முதல் வாரத்தில் டெல்லி நீதிமன்றத்தில் சூடுபிடிக்கப் போகிறது. அதில் கைதான மூன்று பேரை ஜாமீனில்விட எதிர்ப்பு தெரிவிக்கிறது சி.பி.ஐ. அதனால், அவர்கள் சிறைச்சாலையில் இருக்கிறார்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு முக்கியக் கட்டத்தை எட்டும் என்று டெல்லியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், எப்படி தி.மு.கவை நோக்கி பி.ஜே.பி வரும் என்று சிலர் சந்தேகக் கேள்வியைப் போடுகிறார்கள்.
பொன்.ராதாகிருஷ்ணனும் மு.க.ஸ்டாலினும் திருப்பூரில் திருமண மேடையில் ஜோடியாக போஸ் கொடுத்தார்கள். 'ஸ்டாலினை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி’ என்று நிருபர்களிடம் பொன்னார் வார்த்தையை உதிர்த்துவிட்டுப் போனார். பிப்ரவரி 22-ம் தேதியன்று திருப்பூரில் பி.ஜே.பி கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் மகன் திருமணம் நடந்தது. மணப்பெண்ணின் வீட்டார், கருணாநிதி குடும்பத்தினருடன் அறிமுகம் ஆனவர்கள். இதனால், இரண்டு கட்சிகளின் முக்கிய வி.ஐ.பிகள் பலரும் திருமணத்துக்கு முந்தின நாள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். அதேநேரத்தில், மு.க.ஸ்டாலினும் பொன்.ராதாகிருஷ்ணனும் ஒரே நேரத்தில் மேடையில் வாழ்த்துச் சொல்லப் போயிருந்தார்கள். இந்தத் திருமணத்துக்கு டெல்லியின் பி.ஜே.பி பிரபலங்கள் பலரும் வர இருந்தார்களாம். அத்வானியின் 50வது திருமண நாள், நாடாளுமன்றக் கூட்டத்தொடர்... என அடுத்தடுத்து வந்ததால், முக்கிய பெருந்தலைகள் திருமணத்துக்கு வரமுடியவில்லையாம்.
திருப்பூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள டாலர் தோட்டம் என்கிற இடத்தில் திருமணம் நடந்தது. வழிநெடுகிலும் தி.மு.க மற்றும் பி.ஜே.பி கொடிகள் கட்டப்பட்டிருந்தன. காற்று வேகத்தில் இரண்டு கொடிகளும் சில இடங்களில் பின்னிப் பிணைந்து கிடந்தன. இதை மேடையில் பி.ஜே.பிக்காரர் ஒருவர் சுட்டிக்காட்டி கமென்ட் அடிக்க.. 'இருக்கட்டும்யா.. ஏற்கெனவே இரண்டு கட்சிகளும் கூட்டணியாக இருந்தவைதானே?... அப்படியே மறுபடி நடந்தாலும் சந்தோஷம்தான்’ என்று சொல்லியிருக்கிறார். உடன் இருந்த இரு கட்சிகளின் தலைவர்கள் மௌனமாகச் சிரித்தனர். மு.க.ஸ்டாலின் வந்தபோது, மணமேடையில் பொன்னார் இல்லை. ஆனால், அவரை வரச் சொல்லுங்கள் என்று ஸ்டாலின் அழைத்துத் தன் அருகே நிற்கவைத்துக்கொண்டார். அப்போது பொன்னார் காதில், 'கோவை ஏர்போர்ட் வி.ஐ.பி லவுஞ்சில் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்’ என்று ஸ்டாலின் சொல்லிவிட்டுக் கிளம்பினார். அவரைப் பின்தொடர்ந்து பொன்னாரும் கிளம்பிவிட்டார்.''
''ஓ அப்படியா?'
''மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த அறைக்குள் பொன்னார் நுழைந்ததும் அங்கேயிருந்த தி.மு.க பிரமுகர்கள் ஜகா வாங்கிக்கொண்டனர். துர்க்கா உடன் இருக்க... மு.க.ஸ்டாலினும் பொன்னாரும் தனியாக 30 நிமிடங்கள் அரசியல் பேசிக் கொண்டிருந்தார்களாம். பரஸ்பர அரசியல் பரிமாற்றமாகத்தான் அது இருந்துள்ளது. கூட்டணி பேச்சு
வார்த்தைக்கான முதல் தொடக்கம் இது என்றும் சொல்கிறார்கள்.''
''பி.ஜே.பிக்காரர்கள் இந்த ரகசிய சந்திப்பை எப்படிப் பார்க்கிறார்கள்?'
''திருமணத்தில் சந்திப்பு என்பதை வேண்டுமானால் யதேச்சையாக என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஏர்போர்ட்டில் பொன்னார் போய் ரகசியமாக மு.க.ஸ்டாலினை சந்திக்கவேண்டிய அவசியம் என்ன? டெல்லி தலைமைக்குத் தெரிந்து பேசுகிறாரா அல்லது தெரியாமல் பேசுகிறாரா எனத் தெரியவில்லை’ என்று பி.ஜே.பியினர் நினைப்பதாகச் சொல்கிறார்கள்.
இதே திருமண நிகழ்ச்சிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் நேரில் வந்திருந்தனர். ஜெயலலிதா, ஸ்பெஷல் மெசஞ்ஜர் மூலம் குத்து விளக்கும் வாழ்த்துக் கடிதமும் கொடுத்தனுப்பியிருந்தாராம்.''
''போலீஸ் அதிகாரிகள் மாற்றத்தில் ஏதேனும் தகவல் உண்டா?'
''சென்னை மாநகரக் கூடுதல் கமிஷனராக இருந்த கருணாசாகர் ஐ.பி.எஸ் திடீரென மாற்றப்பட்டு நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கமிஷனர் ஜார்ஜின் நம்பிக்கைக்குரியவராகவும் அசைக்க முடியாத சக்தியாகவும் திகழ்ந்த கருணாசாகருக்கு டம்மி பதவி வழங்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இரண்டு விஷயங்கள் பேசப்படுகின்றன. அவர் செய்த ஒரு செயல்தான் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதற்குக் காரணம். தனக்குத்தானே அவர் சூன்யம் வைத்துக்கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!'
''என்னவாம் அது?'
''போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தேன். 'பிப்ரவரி 4-ம் தேதி கருணாசாகரின் 25-வது திருமண நாள். இதை வெகுவிமரிசையாகக் கொண்டாடி இருக்கிறார் அவர். இதற்கான விழா மகாபலிபுரத்தில் ஒரு தனியார் ஹோட்டலில் நடந்துள்ளது. அதில் முக்கியப் பிரமுகர்களும் தொழிலதிபர்களும் நெருங்கிய சொந்தக்காரர்களும் மட்டுமே பங்கேற்றுள்ளனர். விழாவில் விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இது மேலிடத்துக்குத் தெரிந்து தூக்கி அடித்துவிட்டார்கள்’ என்கிறார்கள்.
2012-13-ம் ஆண்டில் கருணாசாகர் நெல்லை மாநகர கமிஷனராக இருந்துள்ளார். அப்போது 86 பேர் துப்பாக்கிக்கு லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதில் 62 பேருக்கு லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் பெற்றதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் உள்ளனர். லைசென்ஸ் பெற்றதில் 34 பேர் மட்டுமே துப்பாக்கி வாங்கியுள்ளனர். மீதமுள்ளவர்கள் இன்னும் வாங்கவில்லையாம். இப்போது லைசென்ஸ் புதுப்பிக்கவும் பலர் தயக்கம் காட்டுகின்றனர். இந்தச் சிக்கலும் அவருக்குச் சேர்ந்துவிட்டது. இப்போது திருமண விழா, பரிசுப் பொருள் சிக்கல் என இரண்டுமே கருணாசாகரின் பதவியைப் பறித்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்து துறைவாரியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் ஆலோசகர் ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற விழாக்களைக் கொண்டாடிய மற்ற போலீஸ் உயரதிகாரிகள் இப்போது கலக்கத்தில்
இருக்கிறார்களாம்.''
''ஓஹோ!'
''வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க பிரமுகரது உதவியாளர் (பி.ஏ.,) மற்றும் கார் டிரைவர் சோளிங்கர் பேரூராட்சி பகுதியில் வசிக்கிறாராம். அங்குள்ள ஒருவரது வீட்டுக்குள் இந்த பி.ஏ. அத்துமீறி உள்ளே போயிருக்கிறார். அங்கிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். அந்தப் பெண், சத்தம் போட்டதைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். மனிதரைக் கையும் களவுமாகப் பிடித்து உதைத்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று ஒப்படைத்தனர். அங்கு, அவர் லாக்கப்பில் அடைக்கப்பட்டார்.
மறுநாள் விடியற்காலையில், அந்த அ.தி.மு.க பிரமுகர் தனது தம்பியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததாகவும் தனது உதவியாளரை அதிரடியாக அழைத்துக்கொண்டு, அங்கிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. பின்னர், அந்த உதவியாளர் தலைமறைவாகிவிட்டார். அவருக்கு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறும் முயற்சியில் அந்தப் பிரமுகர் தரப்பு இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த சோளிங்கர் போலீஸார், அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில், அந்த உதவியாளர் மீது பாலியல் பலாத்கார முயற்சி வழக்குப் பதிவு செய்திருக்கிறார்.
அத்தோடு, சூட்டோடு சூடாக எஸ்.பியை சந்தித்துள்ளார் அந்த ஸ்டேஷன் அதிகாரி. 'என்னால் சோளிங்கரில் நியாயமாக, நேர்மையாக வேலை செய்ய முடியவில்லை; அரசியல் கட்சியினர் டார்ச்சர் தாங்க முடியவில்லை; வேறு எங்காவது மாற்றி விடுங்கள். இல்லையேல், மருத்துவ விடுப்பு கொடுத்து, கொஞ்ச நாளைக்கு அனுப்பி வையுங்கள்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார். 'நீங்களே, சோளிங்கரில் வேலை செய்யாவிட்டால், வேறு யாரை அங்கே கொண்டு போடுவது? கொஞ்ச நாளைக்குப் பொறுமையாக வேலை பாருங்க. பிறகு ஆலோசனை செய்து, எந்தவொரு முடிவும் எடுக்கலாம்’ என்று, ஆறுதல் சொல்லி, அனுப்பி வைத்தாராம். இப்படித்தான் பல ஊர்களில் நடக்கிறது. அதனைத் தட்டிக் கேட்கத்தான் யாரும் இல்லை'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.
பட்டு வேட்டி பரிசு
தி.மு.க-வில் முதன்முதலாக இப்போது வர்த்தக அணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் செயலாளராக கவிஞர் காசி.முத்துமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், அந்த அணியின் நிர்வாகிகள் கூட்டத்தை அறிவாலயத்தில் 23-ம் தேதி கூட்டினார். நிர்வாகிகள் அனைவருக்கும் பட்டு வேட்டி பரிசளித்து வரவேற்றார். 'வணிகர் நல வாரியத்தை உயிர்ப்பிக்க வேண்டும். தமிழக பட்ஜெட் தயாரிப்புக்கு முன்னர் அனைத்து வணிகர் சங்கங்களையும் அழைத்துப் பேசி ஆலோசனை கேட்க வேண்டும்’ என்று தீர்மானம் போட்டார்கள். கூட்டம் முடிந்த பிறகு வர்த்தக அணி நிர்வாகிகளுக்கு மட்டுமல்லாமல், அறிவாலயம் ஸ்டாப்புகளுக்கும் வஞ்சிரம் மீனோடு, பிரியாணி சாப்பாடு போட்டு அசத்தினார் காசி.முத்துமாணிக்கம்.
செயற்குழு சஸ்பென்ஸ்!
மார்ச் 1-ம் தேதி மு.க.ஸ்டாலின் பிறந்தநாள். 5-ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் பரபரப்புகளின்போது 2016 சட்டமன்ற தேர்தலுக்குக் கட்சியினரை ஆயத்தப்படுத்துவது, தமிழக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவது, அணிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாநாடுகள் நடத்துவது என்று பல முடிவுகள் எடுக்க இருக்கிறார்களாம். முக்கியமாக கிராமம், ஒன்றியம், நகரம், பேரூர் நிர்வாகிகளிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்கள்.
கள்ள லாட்டரி பராக்!
தமிழகத்தில் விரைவில் மகாராஷ்டிர மாநில கள்ள லாட்டரி டிக்கெட் விற்பனை பட்டையைக் கிளப்ப உள்ளது. அதற்கான வேலைகள் கடந்த வாரத்தில் மும்பையில் தீவிரமாக நடந்துள்ளன. தமிழகத்தில் சுரண்டல் லாட்டரியின் மூளையாக செயல்பட்ட ஒருவர்தான் இதற்கான மூளையாக செயல்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து கள்ள லாட்டரி விற்பனைக்கான டீலர்கள் நியமனத்தை ஆடம்பரமான விருந்துடன் நடத்தியிருக்கிறார் அந்தப் புள்ளி!
இல.கணேசன் '71’
தமிழக பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் இல.கணேசனுக்கு பிப்ரவரி 22-ம் தேதி 71-வது ஜென்மநட்சத்திர பிறந்தநாள். அதை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள வாஞ்சியம் என்ற இடத்தில் ஆயுஸ் ஹோமம் நடந்ததாம். அதில் கலந்துகொண்டதால், அதே நாளில் நடந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லத்திருமண விழாவுக்கு வரமுடியவில்லையாம்.
நன்றி- ஜூனியர் விகடன்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|