புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குருதி ஆட்டம் (1-5) - வேல ராமமூர்த்தி
Page 1 of 1 •
- kumarvபுதியவர்
- பதிவுகள் : 23
இணைந்தது : 17/04/2017
வேல ராமமூர்த்தி தமிழ் ஹிந்து நாளிதழில் தொடராக எழுதிய " குருதி ஆட்டம் " நாவல் 27 வார தொடரில் முதல் 5 வார தொடர்
குருதி ஆட்டம்
1
இருட்டுக் கோடாங்கி
இது.. செறுபகை வென்ற சேது நாட்டு வாள். சதிகளின் தலை அறுத்துச் சதுராடிய வாள். வெட்டுப்பட்டுச் சரிந்த வேங்கைகளின் ரத்தம் நக்கிய ஓநாய்களின் நாக்கறுத்த வாள். ஆழிப் பேரலையாய் சுழித்து எழுகிறது தவசியாண்டியின் கோடாங்கிச் சத்தம். வனக் கன்னி செவ்வந்தியின் சுவாசம் தழுவி மணக்கின்றன வண்ணப் பூக்கள். வைக்கோல் பிறிகளுக்குள் ஒளிந்திருக்கும் மறத் தோள்கள், வாளெடுத்து ஆடிய குருதி ஆட்டம்.
இருட்டுக் கோடாங்கி
உச்சி ராத்திரி. உள்ளங்கை தெரியாத இருட்டு.
தவசியாண்டிக் கோடாங்கி அடிக்கிற அடியில் காடு கிழியுது.
‘டுண்…. டுண்ண்… டுண்…’
ஆவேசம் அடங்காத அடி. லயம் தப்பினால் கோடாங்கி தோல் கிழிந்துபோகும்.
வனாந்தரக் காற்று, பம்மிப் பதுங்குது. சுயராஜ்ஜியமாக ஊர்ந்து, அலைந்து இரை தேடப் புறப்பட்ட காட்டு ஜீவராசிகள், கோடாங்கிச் சத்தத்தில் குலை நடுங்கி, பசியோடும் ஆத்திரத்தோடும் பொந்துகளுக்குள் சுருண்டு கிடக்கின்றன.
ஆளைக் கொல்லும் ஜந்துக்கள் எல்லாம் வாய் பொத்தி விழித்திருக்க, நீலக் கழுத்து மயில்கள், ‘வெடுக் வெடுக்’ எனத் தலை சிலுப்பி, கோடாங்கிச் சத்தத்தையும் மீறிப் பெருங்குரல் எடுத்துக் கத்துகின்றன.
குரங்குகள், குட்டிகளை அடி வயிற்றில் அணைத்துப் பல்லிளித்துக் கீச்சாட்டம் போடுகின்றன. மலை உயர மர உச்சியில் பிடி இழந்த தேவாங்கு, ‘தொப்’ என விழுந்து, உருளும் கண்களோடு அடி மரம் பிடித்து மேலேறுகிறது.
நட்சத்திரங்களற்ற கருப்பு வானம், பொறுப்பில்லாத தகப்பனாய் மல்லாந்து கிடக்கிறது.
பாறை இடுக்குகளில் கசிந்தோடி வரும் ஓடை நீர்ச் சலசலப்பில் முழங்கால் நனைய, கண் மூடி நிற்கிறான் தவசியாண்டி. இடுப்புக்கு மேல் வெற்றுடம்பு. அள்ளி முடிந்திருந்த கோடாலி கொண்டைமுடி அவிழ்ந்து, பிடறி மறைத்துத் துள்ளி ஆடுது. உடம்பெல்லாம் பூத்துப் பெருகும் வியர்வை, புட்டம் நனைத்து, கால் வழியே ஓடிக் கரையுது காட்டு நீராய். சாராய நாற்றமெடுக்கும் உதடுகளும் கன்னத்துச் சதையும் அபிநயிக்க, இமை திறவாமல் அடிக்கிறான் தவசியாண்டி.
“ம்… ம்ம்ஹ்…. ம்ம்…” செல்லச் சிணுங்கு சிணுங்கினாள்.
“என்னடீ…. சிணுங்கலூ…!”
படுக்கையில் விலகிப் புரண்டவளை, எட்டி பிடித்தான் உடையப்பன்.
குழைந்தாள்.
‘க்ளுக்’ எனச் சிரித்தவன், “இங்கே பார்றா. நேத்து முந்தா நாளுதான் சமஞ்ச குமரி மாதிரில்ல கொணங்கிறா” தோள் தொட்டு இழுத்தான்.
புரண்டு உடையப்பனின் மார்பில் வந்து விழுந்தவள், இடது கை உள்ளங்கையால் உடையப்பனின் வழுக்கைத் தலையைத் தடவினாள்.
“இங்கே மட்டும் என்னவாம்? வாலிபம் துள்ளுதாக்கும்? வெச்ச கையி… வழுக்கிட்டுப் போகுது!” பின் மண்டை வரை தடவினாள்.
சல்லாபக் கோபத்துடன் கடிக்க வந்தவனின் வாயைப் பொத்தி, “ச்ச்சேய், சாராய நாத்தம் குடலைப் புடுங்குது” நெளித்துச் சரசமாடினாள்.
“ஏன்டீ என் வாய் மட்டும்தான் நாறுதாக்கும்? கத்தை கத்தையா குடுப்பேனே…. அந்தக் காசும் நாறுமே?”
“ஆமலூ பெரிய காசு! ராவு முழுக்க முந்தி விரிச்சு, முழுசா ஒப்படைச்சிட்டு, காலையிலே ரெண்டு காசுகளைக் கையேந்தி வாங்கிட்டுப் போற ஏனவாய்ச் சிறுக்கி நான் ஒருத்தியாதான் இருப்பேன்!”
“என்னவாம் இன்னைக்கு தெக்குப் பட்டிக்காரிக்கு இம்புட்டுக் கோவம்?”
உடையப்பனின் மார்புக்குள் மூச்சு காற்றுபட பேசினாள். “ஒங்களுக்கு நான் ஒருத்திதான் ஓவியமா இருக்கேனாக்கும்? நித்தம் ஒரு பொண்டாட்டி... நெகர் இல்லாத மஹராசா” மார்பில் செல்லக் குத்து குத்தினாள்.
‘டுண்…. டுண்ண்… டுண்…’
வனக்கோடாங்கிச் சத்தம், நர உயிர்ப் பசியோடு கொலை நாக்குகள் நீள, ஊருக்குள் நுழைந்து உடையப்பனின் மாளிகையைத் துழாவுகிறது.
தெற்குப்பட்டிக்காரியின் கோபத்தை ரசித்து, முதுகு மறைத்துக்கிடந்த கூந்தலைக் கோதினான்.
“எவ எவளோ வந்து திங்கிறாளுக. அடியேய் இந்தாடீ, அந்த வீட்டை வெச்சுக்கோ. இந்தக் காட்டை உழுதுக்கோனு கை காட்ட மனசு வருதா? பொண்டாட்டி செத்து இருபது வருசமாச்சு. பேரு சொல்லப் பிள்ளையுமில்லே. வாரிசு இல்லாத சொத்துத்தானே? கொஞ்சோண்டு கிள்ளிக் குடுத்தாக் கொறைஞ்சா… போகுது?” உடையப்பனின் நெஞ்சு ரோமங்களைக் கவ்வினாள்.
உதட்டு உரசலில் கண்கள் செருகின. மூடியவாறு சொன்னான். “இருக்கான்டீ, எனக்கு வாரிசு இருக்கான்!”
“எதூ… வாரிசு இருக்கா? யாரு..?” பதறினாள்.
பதில் சொல்ல வாய் திறந்தான்.
‘டுண்…. டுண்ண்… டுண்…’
ஆங்காரப் பேயாய் மோதும் கோடாங்கிச் சத்தம், குருதி கசியும் நக விரல்களால் கதவு, ஜன்னல்களைக் கவ்வி பிடித்து ஆட்டியது. படுக்கை அறை ஜன்னல் கண்ணாடிகள் கிடுகிடுத்தன. கட்டில் புரண்டது. தெற்குப்பட்டிக்காரி கீழே உருண்டாள். கைப் பிடிமானம் கிடைக்காத உடையப்பன், நிலைகொள்ளாமல் அறை முழுக்கத் தடுமாறினான்.
‘டுண்…. டுண்ண்… டுண்…’
புரண்டு படுத்த ஊர், தூக்கத்தில் புலம்பியது.
“ஊருக்குத் தலை செரைக்கிற நாவிதன் தவசியாண்டிக்கு யாரு மேல இம்புட்டுக் கோவம்?”
“ஊருக்குள்ளே குடியிருக்கவே மாட்டேன்னு, தாயில்லா பொண்ணை கூட்டிக்கிட்டு காட்டுக்குள்ளே ஒதுங்கி இருபது வருஷத்துக்கு மேலே ஆச்சு. அவன் கோவம் யாரு மேலேயோ, என்னைக்கு தீருமோ!”
தீந் தென்றல் மலர்த்திப் போட்ட பூவிதழாக… அவரைக் கொடி இடை திருகி, கண் விழித்தாள் செவ்வந்தி. செம்பருத்திச் செடி உயரம். மினுமினுக்கும் கமுகு மேனி. மேற்கே சரியும் சூரிய நிறம். பலாச்சுளை மூக்கு. பாக்கு உதடு. கம்பங்கதிர் கழுத்து. கால் கூசும் நடை.
தனித்திருக்கும் வனாந்தரத்து ஒற்றைக் குடிசையின் அணையா விளக்கு, ஒளிக் கீற்று அசையாமல், கற்சிற்பமாக எரிந்துகொண்டிருந்தது.
செவ்வந்தி, விரிப்பை விட்டு எழாமலே, விளக்கைத் தூண்டினாள். வெளிச்சம் பரவிப் படர்ந்த வாசலோரம், தகப்பன் தவசியாண்டியின் பாய் விரிப்பு மட்டும் கிடந்தது.
கை ஊன்றி எழுந்தாள். கூந்தலைக் கோதி முடிந்து கொண்டை இட்டாள். வாசலுக்கு வந்தாள். காட்டையும் ஊரையும் அலைக்கழிக்கும் கோடாங்கிச் சத்தம், ஒற்றைக் குடிசையை நெருங்காமல் ஒதுங்கிப் போனது. கண் பழகிய காட்டு இருட்டுக்குள் கூவினாள்.
“அப்பா!”
‘டுண்…. டுண்ண்… டுண்…’
“அப்பா!”
தவசியாண்டியைத் தேடி இருட்டுக்குள் நடந்தாள் செவ்வந்தி.
2
அஞ்சு தலை நாகம்
அரியநாச்சியின் மூடிய கண்களுக்குள் கப்பல் ஓடியது. தனுஷ்கோடி தீவிலிருந்து பினாங்கு தீவுக்கு நாடு கடத்தி வந்த கப்பல். மலேசியக் கரை இறங்கி இருபது வருடங்களாகியும் தனுஷ்கோடி தீவுக் குறுமணல், கண்களை மூட விடாமல் உறுத்தியது.
காய்ந்த இலைச் சருகாய் நீண்டு கிடக்கும் தனுஷ்கோடித் தீவின் பெண் கடலும் ஆண் கடலும் சந்திக்கும் முட்டுக் கடலுக்குள் நங்கூரம் பாய்ச்சி நின்றது ‘நாடு கடத்திக் கப்பல்’.
உடுப்பு அணிந்த துப்பாக்கிகளின் நடுவே நின்றாள் அரியநாச்சி. புட்டம் மறைத்து தொங்கும் அரியநாச்சியின் தலைமுடியை இடது கையால் இறுக் கிப் பிடித்திருந்தான் டி.எஸ்.பி. ஸ்காட். அத்தை அரியநாச்சியின் தோளில் சாய்ந்துகிடந்த ஊமைச் சிறுவன் துரை சிங்கம், மலங்க மலங்க விழித்தான்.
அரைக்கண் பார்வையில் அரிய நாச்சியைக் கோதிய ஸ்காட், வலது பக்கம் திரும்பி வங்காள விரிகுடாவைப் பார்த்தான்.
நான்கு நாட்களுக்கு முந்தைய அமாவாசை இரவில் ரணசிங்கம் வைத்த குண்டு வெடித்துச் சிதறடித்த ‘கிரேட் பிரிட்டன்’ கப்பல், அலையாடிக் கொண்டிருந்தது. வெள்ளை சாம்ராஜ்ஜியமே ஊதிப் பெருத்த பிணமாய் மிதப்பது போல் உணர்ந்தான் ஸ்காட். இடது கைப்பிடி முடி இன்னும் இறுகியது. வெள்ளிப் பூண் போட்ட பிரம்பால் அரியநாச்சியின் புட்டத்தில் ஓங்கி அடித்தான். விரிகுடாவைக் கைகாட்டி கத்தினான்.
“பாருடி… அங்கே பாரு. வெடித்துச் சிதறி மிதப்பது… கப்பல் அல்ல. பக்கிங்ஹாம் பேலஸ்!”
பிரம்படி மறுபடியும் விழுந்தது. அரியநாச்சி அசையலே. அத்தையின் கன்னங்களை உள்ளங்கையால் வருடினான் துரைசிங்கம்.
ஸ்காட்டின் முகச் சதை ஆடியது. கோபம் உச்சிக் கொம்பேறியது. வருடிய பிஞ்சுக் கையை வெள்ளிப் பூண் கைப்பிரம்பால் விலக்கினான். திரும்பி பார்த்த ஊமைச் சிறுவனின் வாய்க்குள் பிரம்பை நுழைத்தான்.
“குட்டிப் பாம்பே! உங்க அப்பன் ஒரு அஞ்சு தலை நாகம். நூற்றுக்கணக்கான போலீஸுகளைக் கொத்தினான். அதிகாரி களைக் கொன்றான். கச்சேரிகளைக் கொளுத்தினான். அவனை அடிச்சுக் கொன்னு, பால் ஊத்தி மண்ணுக்குள்ளே பொதைச்சிட்டோம்.’’
அரியநாச்சி, கண்களைச் சுழற்றி ஸ்காட்டைப் பார்த்தாள்.
“அந்தப் பாம்புக்குப் பிறந்த உன்னை உயிரோடுவிட்டால்… நீ, பத்து தலை நாகமாகி எத்தனைப் பேரை கொல் வாயோ? எத்தனைப் பிணம் தின்பாயோ? ஆனாலும் ஒரு குட்டிப் பாம்பைக் கொல்ல பிரிட்டிஷ் சட்டம் என்னை அனுமதிக்கவில்லை.’’
பிரம்பை மேலும் கீழும் ஆட்டினான்.
“உங்க அப்பன் மண்ணுக்குள்ளே போயிட்டான். நீயும் உன் அத்தைக்காரியும் மலேசியக் காட்டுக்குப் போங்க. அவன் கேட்ட சுதந்தரம், இங்கே கிடைக்காது. மலேசியக் காட்டிலேதான் கிடைக்கும்.’’
‘பா… ம்ம்… ங்… ங்…’ புறப்பட ஆயத்தமான நாடு கடத்திக் கப்பல், கடலுக்குள் இருந்து கூவியது. ஒரு படகு, கரையோரம் அணைந்து நின்றது.
அரியநாச்சியின் மீது ஸ்காட்டின் கடைசிக் கோபம் கொப்பளித்தது. முன்னும் பின்னும் மாறி மாறி விழுந்த அடியில் கைப்பிரம்பு தெறித்தது.
ம்… ஹூம். அரியநாச்சி அலுங்கலே. அத்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டான் துரைசிங்கம்.
கப்பலேறிய அரியநாச்சி, கரையில் நின்ற ஸ்காட்டைப் பார்த்து, “துப்பாக்கிப் போலீஸுகளைத் துணைக்கு வெச்சுக்கிட்டு ஒரு பொட்டச்சியை அடிக்கிற வெள்ளைக்கார நாயே! எத்தனைக் கடல் தாண்டி அனுப்புனாலும் திரும்பி வருவோம்டா... வந்து பழி தீப்போம்டா!” துரைசிங்கத்தின் கன்னம் திருப்பி,
“நேத்து வரை வாய் பேசுன இந்தப் பச்சப் பாலகனை ஊமையாக்கி அனுப்புறீங்களே… உங்களையும் உங்களுக்குத் துணை போன உள்ளூர் துரோகிகளையும், இவனே வந்து அழிப்பான்டா!” கரை கேட்க கத்தினாள்.
கப்பல் கிளம்பியது.
பத்தாம் நாள் மலேசியக் கரை இறங்கினாள். அலைக்கழிந்த கடல் பயணத்தில் அத்தையின் மடியிலேயே கிடந்தான் ஊமைச் சிறுவன்.
வெள்ளையம்மாள் கிழவி எழுபதைத் தாண்டியவள். ஒற்றை ரோமம் கூட உதிராத தலை, பஞ்சாய் நரைத்திருந் தது. உளி உளியாய் கண்ணும் மூக்கும். எப்போதாவது மூடித் திறக்கும் இமைகள். குவிந்த உதடுகளுக்கு மேல் அரும்பி மினுங்கும் பூனை ரோமம். பசுவின் நெய் நிறம். ஆப்பநாட்டு சனங்களுக்கு அருந்தலாய் வாய்க்கும் நிறம். வயதாக… வயதாக… அரண் மனைக் களை ஏறிய மேனி. இரண்டு கைகளையும் புறங்கட்டி நடக்கும் நடை. கிழட்டு ராணியின் தோற்றம். ஐம்பதாவது வயதில் சென்னைப் பட்டணம் வந்தவள்.
காடு, கழனி, கண்மாய், ஊரணி என சகதிப் பிசுக்கோடு ‘காட்டுக் காத்து’ குடித்தவளுக்கு பட்டண வாசம் ஒப்பவில்லை. பிறந்து ஆறு மாதமே ஆன பேரக் குழந்தையை அள்ளிக் கொண்டு ஊரை விட்டு வெளியேறிய வைராக்கியம், நாளுக்கு நாள் இறுக்கியது. ‘பெத்தவன் மூச்சுக் காத்தே… இவன் மேலே படக்கூடாது’ என்கிற வைராக்கியம். வந்ததோடு சரி. ஊர் இருக்கும் திசைப் பக்கம் திரும்பலே. நாளாக நாளாக பட்டண வாசம் பழகிப் போனது.
பேரன் கஜேந்திரனுக்கு இருபது வயது. பெத்துப் போட்டதும் செத்துப் போன தாயின் முகம் பார்க்காதவன். ஆறு மாதக் குழந்தையாய் ஊரை விட்டு வெளியேறியவனுக்கு அப்பன் முகம் தெரியாது.
கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம், ஊரிலிருந்து எப்போதாவது சென்னைப் பட்டணத்துக்கு வந்து போவார். ஒருநாள் தங்கி ஊர் சேதிகளைப் பேசிவிட்டு கிளம்பிவிடுவார். ரத்னா பிஷேகம்பிள்ளை கஜேந்திரனுடன் பேச ஆசைப்படுவார். கிழவி பேச விடமாட்டாள். பேரழகன் கஜேந்திரனைக் கண்கள் அகல, எட்ட நின்றே வேடிக்கை பார்ப்பார்.
‘வெகுநாட்களாய்… பிள்ளைவாள் பட்டணத்துப் பக்கம் வரக் காணோம்’
புறங்கைகளைக் கட்டியவாறு நடுக் கூடத்தில் உலாத்திக் கொண்டிருந்தாள் வெள்ளையம்மாள்.
அரியநாச்சியின் கண்களை மூட விடாமல் தனுஷ்கோடி குறு மணல் உறுத்திக் கொண்டே இருந்தது. வான் முட்டும் மரங்கள் அடர்ந்த மலேசியக் காட்டுக்குள், ஒரு சிறு பாறை மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்.
வெறிகொண்டு கட்டிப் புரளும் இரண்டு மிருகங்களின் உறுமலும் அலறலும் காட்டை அலைக்கழித்தது. இமை ஆடாமல் பார்த்துக் கொண்டிருந் தாள்.
வனக்காற்று சிலுசிலுத்தது.
3
பெருங்குடி அரண்மனை
விடியவும் உடையப்பன் வீட்டு வாசலில் ஊர் கூடிக் கிடந்தது.
பொம்பளைக யாருமில்லை. எல்லாம் ஆம்பளைகதான். சன்னம் சன்னமாய்க் கூடினார்கள்.
வீட்டுத் தோட்டத்துச் சுற்றுச் சுவர் கதவு பூட்டி இருந்தது. தோட்டம் தாண்டி வீடு. வீட்டுத் தலைவாசலைத் திறக்கிற அறிகுறி தெரியலே. தோட்டத்துக் கதவைத் தட்ட முடியாது. சத்தம் போட்டுக் கூப்பிடவும் முடியாது. திறக்கிற வரை காத்துக் கிடக்க வேண்டியது ஊருக்காரன் தலையெழுத்து.
பெருங்குடி கிராமத்துக்கு இந்த வீடுதான் அரண்மனை. இந்த அரண்மனைக்குள் தும்மல் சத்தம் கேட்டாலும், ‘அரண்மனைக்கு என்னாச்சு? நேத்து ராத்திரி ‘நச்சு நச்சுன்னு நாலு தும்மல் சத்தம் கேட்டுச்சே!’ எனக் காலையிலே ஊரே வந்து நிக்கணும். அப்படி வராதவன்… ஊருக்குள்ளே குடியிருக்க முடியாது. ஊரே…உடையப்பன் ஊரு. இந்த ஊரு மட்டுமில்லே ஆப்ப நாட்டிலே பாதி, உடையப்பனுக்குச் சொந்தம்.
வாய்க்கும் காதுக்குமாகக் குசுகுசுத் தார்கள். கூடிக்கிடந்த இளவட்டங்களில், ‘லோட்டா’ வாய் ஓயாமல் பேசுபவன். ‘லொடலொடன்னுபேசுறதுனாலே, அவனுக்குப் பட்டப் பெயர் ‘லோட்டா’. அடுத்தவன் வாயை ‘கிண்டி’விடுறதிலே கெட்டிக்காரன்.
“நேத்து ராத்திரி அரண்மனை அஸ்திவாரமே ஆடுச்சே!”
“காட்டுக்குள்ளே கோடாங்கிச் சத்தம் கேக்குறபோதெல்லாம் அரண்மனை ஆடத்தான் செய்யுது.”
“தவசியாண்டி கோடாங்கிக்கும் அரண்மனைக்கும் என்ன சம்பந்தம்?”
“அதுதானே தெரியலே!”
பெரியவர் நல்லாண்டி ‘லோட்டா’வை ஏற இறங்கப் பார்த்தார்.
“உடையப்பன் உள்ளேதான் இருக்காரா?” கோட்டைச் சுவர் தாண்டி ‘லோட்டா’ கால்விரல் நுனியில் எக்கிப் பார்த்தான்.
நல்லாண்டிக்குப் பொத்துக் கொண்டு வந்தது. “ஏன்டா… விலாவிலே வெடிச்சுப் பெறந்த பயலே! வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியாடா? ‘அரண்மனை’ பெயரைச் சொல்றியே, ஒனக்கு ஈரல்லே பித்தா? எலும்பிலே பித்தாடா? அவன்ங்க காதுக்குப் போச்சுன்னா உன்னைக் கொன்னு, தென்னை மரத்துக்கு உரமா வெச்சிறப்போறான்ங்க.”
‘உடையப்பன்’ என்கிற பெயரை ஊரு உச்சரிச்சு… வெகுகாலமாகிப் போச்சு. இப்போதெல்லாம் உடையப்பனின் பெயரே ‘அரண்மனை’தான்.
என்னச் சொன்னாலும் ‘லோட்டா’ப் பயலுக்கு வாய் நிக்கலே.
“உள்ளே கூட்டு வண்டியைக் காணோமே!”
“ம்ம்… ராத்திரி வந்த கூத்தியாளை எறக்கிவிட கூட்டு வண்டி சவாரி போயிருக்கும்.”
தெற்குப்பட்டிக்காரி ஊரார் கண்களில் படாமல், ராத்திரியோடு ராத்திரியாய்க் கூட்டு வண்டி திரை மறைப்பில் வெளியேறிப் போயிருந்தாள்.
மஞ்சள் வெயில் ஏறியது.
‘லோட்டா’ கண்களை இறுக மூடி ஆயாசமாய் ‘அப்பப்பப்பா!’ என இழுத்துப் பெருமூச்சுவிட்டான்.
பக்கத்தில் நின்ற இளவட்டம், ‘லோட்டா’வுக்கு மட்டும் கேட்கச் சொன்னான். “ஏன்டா லோட்டா…ஏறுவெயிலு கண்ணைக் கட்டுதாக்கும். இந்நேரம் ஊரணிக்கரையிலே, செவல்பட்டி கள்ளுப் பானை வந்து எறங்கிருக்கும். போ…போயி, ரெண்டு செம்பு கள்ளைக் குடி. கண்ணு பளபளன்னு நல்லாத் தெரியும்.”
அரண்மனை தலைவாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. வெளியே நின்றிருந்த எல்லோரும், கோட்டைச் சுவரில் கைபோட்டு எம்பி உள்பக்கம் பார்த்தார்கள்.
கதவைத் திறந்து வெளியே வந்த கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம், அங்கிருந்தே கோட்டைச் சுவரைப் பார்த்துக் கூவினார். “அரண்மனைக்கு ஒண்ணுமில்லே. நல்லாத்தான் இருக்காரு. எல்லாரும் போகலாம். அந்த லோட்டாப் பயலை மட்டும் உள்ளே வரச் சொல்லு.”
எல்லோரும் கலைந்தார்கள். ‘லோட்டா’ திருகித் திருகி முழித்தான். கோட்டைக் கதவு திறந்தது.
காடு
குலுங்கக் கட்டி புரண்டு எழுந்தவனின் உடம்பு முழுக்கக் காயங் கள். கன்னம், மார்பு, முதுகு நிறைய நகக் கீறல்கள். உள்ளங்கைகள் நனையப் பச்ச ரத்தம். உதறி எழுந்ததும் உடம்பை ஒரு உலுப்பு உலுப்பினான். முகம் மறைத்து முன் விழுந்த தலைமுடியை, ரத்தக் கைகோதி விலக்கிவிட்டான். தகிக்கும் முகத்தில், அடங்காத மிருக லட்சணம். உடம்பில் ஒட்டியிருந்த மலேசியக் காட்டு மண்ணைத் தட்டிவிட்டான். வலது கைவாக்கு புதர்க் காட்டை ஓரக் கண்ணளந்தான். வாய் பிளந்து செத்து கிடந்தது சிறுத்தை.
சிறு பாறையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த அரியநாச்சியின் கண்கள் சிரித்தன. அங்கிருந்தே கண் அசைத்தாள்.
“துரைசிங்கம்… வா!”
செவ்வந்தி,
குடிசைக்குள்ளிருந்து அழைத்தாள்.
“அப்பா…”
வெளி மண் திண்ணையில் அமர்ந்திருந்தான் தவசியாண்டி. தொடையை உரசிக் கொண்டு கள்ளு முட்டி. செவல்பட்டி பனங்கள்ளு.
தலை தட்டும் குடிசை வாசலில் குனிந்து வெளியே வந்தவள், “சாப்பிட வாங்கப்பா…” என அழைத்தாள்.
கவிழ்ந்தவாறு அமர்ந்திருந்தவனின் மீசை நனையக் கள்ளு நுரை. இடது கையால் துடைத்துக் கொண்டான். “நீ போயி சாப்பிடு தாயீ…”
“நீங்கச் சாப்பிட்டு ரெண்டுநாளாச்சு. வாங்கப்பா, ஒரு வாய் சாப்பிடுங்க.”
அரை குறையாய்த் தலை திருப்பி மகளின் காலடியைப் பார்த்தவன், “ஒங்கப்பன் ஒடம்புலே உசுரு இருக்குல்லே! அது போதும். நீ போத்தா…” மறுபடியும் கவிழ்ந்தான். கண்ணீர் ஓடியது. மகளை, கண்கொண்டு நேருக்கு நேர் பார்த்து ரெம்பக் காலமாச்சு. பார்த்தால் பாதி உசுரு போயிரும்.
தாயை இழந்த ரெண்டு வயசு கை குழந்தை செவ்வந்தியைத் தோளில் தூக்கிக் கொண்டு காட்டுக்குள் வந்து பதினைந்து வருஷமாச்சு. அப்பன் முகத்தை மகள் பார்க்க… மகள் முகத்தை அப்பன் பார்க்க… வேத்து முகம் பார்க்காமல் காலம் ஓடுது. செவ்வந்தி புஷ்பவதி ஆன அன்னைக்கு, கன்னி தீட்டு கழித்து, அத்தம்குத்தம் சொல்ல ஒரு பொம்பளைத் துணைக் கிடையாது. வாயிலே துண்டைப் பொத்திக்கிட்டு திண்ணையிலே உக்காந்து தவசியாண்டி அழுகிறான். குடிசை மூலையிலே குத்துக்கால் வெச்சு செவ்வந்தி அழுகிறாள். இப்பிடி ஒரு நாதியத்த பொழப்புக்கு என்ன வைராக்கியமோ?
“என் குலத் தெய்வத்தைக் கொன்ன வன்ங்க உயிரோட இருக்கிற வரை, நான் சாக மாட்டேன். நீ போ தாயீ...”
இரண்டு கை நிறையக் கள்ளு முட்டியைத் தூக்கினான்
4
இரை
ஊரார் எல்லாம் கலைந்து போய்விட, அரண்மனைத் தோட்டத்து வாசலில் ஒத்தையில் நின்றான் ‘லோட்டா’.
கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம் தலைவாசலில் நின்றவாறு, ‘லோட்டா'ப் பயலை மட்டும் உள்ளே வரச் சொல்லு’ என உத்தரவிட்டதும், ‘லோட்டா’ கிறுகிறுத்துப் போனான்.
‘அப்புடி என்ன தப்பாப் பேசினோம்? நம்ம ‘அரண்மனை’ பேரு உடையப்பன்தானே? பேரைச் சொன்னது தப்பா?’
‘தோட்டத்து வாசல்லே நின்னுக் கிட்டுச் சொன்னது, அரண்மனைக் குள்ளே எப்புடிக் கேட்டுச்சு?’
‘வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கியாடா ‘லோட்டா!’ தன்னுடைய வாயில் தானே குத்திக் கொண்டான்.
தோட்டத்துக் கதவை வேலையாள் ஒருவன் திறந்தான்.
“ ‘லோட்டா’ உள்ளே போ. இன்னைக்கு நீ… தென்னைக்கு உரம்தான்டீ…’’ வாய்க்குள் சிரித்தான் வேலையாள்.
செத்தும் உயிர் இழையும் ஓவியமாய் சிரிக்கும் பொம்மிக்கு முன் அமர்ந்து, விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வெள்ளையம்மா. வீட்டின் நடுக்கூடத்தில் சந்தன மாலையிட்ட புகைப்படமாகத் தொங்கி கொண்டிருந்தாள் பொம்மி.
உதடு சிரித்தாலும் விதித்த தாம்பத்யத்தில் தோற்றுத் துவண்ட சோகம் கண்களில் கசிந்தது. கயவனின் தாலி கழுத்தில் ஏறிய நாள் முதல், தன்னைத் தானே வீழ்த்திக்கொள்ள யத்தனித்த சோகம். கழுத்தை நீட்டிய கடனுக்காக ஓர் இரவு இமை மூடி இணங்கியதால், சூல் கொண்ட கருவைப் பெற்றுப் போட்டதும் மரித்துப் போன சோகம். பால்யம் தொட்டு கனவில் சுமந்தவனைக் கைப் பிடிக்க முடியாத சோகம். அந்த மாவீரன் துரோகக் கொலையுண்ட நிமிஷமே தன்னுயிரைத் துறந்த சோகம்.
பொம்மியைப் பொசுக்கிய வாதையை வெள்ளையம்மா அறிவாள். மகளைப் பலி கொடுத்த பாவத்தில் இவளும் பங்கு கொண்டவள். மகளுக்கு முன் மண்டியிட்டு, நித்தம் அழுது கருகினாலும், தீராத பழி. முந்தானைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்தாள்.
“பாட்டி…!’’
கஜேந்திரன் நுழைந்ததுமே, அறை முழுவதும் மெல்லிய நறுமணம் பரவியது. கஜேந்திரனின் ஒவ்வோர் அசைவிலும் சென்னைப்பட்டணம் ஒட்டியிருந்தது. பிறப்பெடுத்த பெருங்குடி கிராமத்துக்கும் பேரனுக்கும் பொட்டுச் சம்பந்தம் இல்லாமல் வளர்த்திருந்தாள்.
அருகே வந்த கஜேந்திரன், வெள்ளையம்மாவின் கலங்கிய கண்களை உற்றுப் பார்த்தான்.
“அழுதீங்களா பாட்டி..?’’
“இல்லையே. எனக்கென்ன குறை? நான் ஏன் அழுவுறேன்?’’
“பாட்டி… இந்தப் பொய்யை இருபது வருஷமா சொல்றீங்க. எங்கிட்டே எதையோ மறைக்கிறீங்க. நான் வீட்டிலே இல்லாத நேரமெல்லாம் அம்மா படத்துக்கு முன்னாடி உக்காந்து, நீங்க அழுவுறது எனக்குத் தெரியும். பாட்டி… பழசை அசைப்போட்டுக்கிட்டே, ரிவர்ஸிலே போகக் கூடாது. நாளை என்ன? நாளைக்கு மறுநாள் என்னன்னு போய்க்கிட்டே இருக்கணும்.’’
பேரனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.
வந்ததும் சொல்ல மறந்தவனாய் “ம்… பாட்டி. அடுத்த மாதம் நான் லண்டன் போறேன். கிங்ஸ்டன் யுனிவர்சிட்டியிலே பேசுறேன். பல நாட்டு மாணவர்கள் வர்றாங்க. இந்தியாவிலே இருந்து ரெண்டு பேர்தான். ஒன்னு நான். இன்னொருவர், வங்காளத்திலே இருந்து வர்றார். பத்து நாள் புரொகிராம்’’ என்றான்.
கஜேந்திரன் சொல்வது புரியாமல் விழித்தாள்.
“யாருக்கும் கிடைக்காத இந்த வாய்ப்பு. உங்க பேரனுக்குக் கிடைச்சிருக்கு. நான் ஊருக்குப் புறப்படுற நேரம் அழுவக்கூடாது. ஓ. கே.?’’ கிழவியின் கன்னத்தில் செல்லத் தட்டு தட்டிவிட்டு வெளியேறினான்.
திறந்த கதவை மூடாமலே நடந்து போய்க் கொண்டிருந்த பேரனை, இமை ஆடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வெள்ளையம்மா.
தோட்டம் தாண்டி அரண்மனை முகப்பில் கால் வைத்த ‘லோட்டா’வின் நெஞ்சு பிசைந்தது. தலைவாசலில் நின்ற கணக்குப்பிள்ளை ரத்னா பிஷேகம், “உள்ளே வாடா…’’ என கண்ணசைத்துவிட்டு உள்ளே போனார்.
தரை தேய்த்து உள்ளே போனான்.
நாயகமாக அமர்ந்திருந்த உடையப்பனுக்கு நாலு அடி தள்ளி, பவ்யமாக நின்றிருந்தார் கணக்குப்பிள்ளை.
உடையப்பனின் இமைகள் சுருங்கின.
“உன் பேரு என்னடா?’’
கைக்கட்டி குறுகி நின்றவன் “ ‘லோட்டா’ சாமி” என்றான்.
“ ‘லோட்டா’ உன் பட்டப் பேரு. நெசப் பேரு என்ன?’’
“இருளாண்டி… சாமி…’’
“உன்னை இருளாண்டின்னு எவனாவது கூப்பிடுறானா?’’
“இல்லை சாமி” நின்ற இடத்திலேயே கைகூப்பி குப்புற விழுந்தான்.
“ஒரு ஏழைப் பயலுக்கே ‘பட்டப் பேரு’ இருக்குன்னா… ஆப்ப நாட்டு அரண்மனைக்குப் பட்டப் பேரு இருக்கக் கூடாதா?” வலது கைவாக்கில் இருந்த தண்ணீர்ச் செம்பைத் தூக்கினான்.
“சாமி… அய்யாவுகளே! வாக்குச் சனி உள்ள இந்த ஏழைப் பயலை, அரண்மனைதான் மன்னிக்கணும்”. தரையோடு முகம் உரச மாறி மாறிக் கும்பிட்டான்.
“ச்… ச்சீ… ச்சீய்ய் நாயி. எந்திரி” வலது கைச் செம்பை ‘லோட்டா’வின் விலா தெறிக்க வீசினான்.
‘லோட்டா’ எழுந்து தலை தொங்க நின்றான்.
“தமுக்கு அடிக்கத் தெரியுமா உனக்கு?”
“தெரியாது அரண்மனை.”
“தெரியலேன்னா… கத்துக்கிறணும். கத்துக்கிட்டு ஊருக்குள்ளே போயி தமுக்கு அடி.”
‘லோட்டா’ முழித்தான்.
உடையப்பன் என்ன சொல்ல வர்றான்னு கணக்குப்பிள்ளைக்கே புரியலே.
“ ‘ரெம்பக் காலமா… கொண்டாடாமல் நின்னு போன இருளப்பசாமி கோயில் கொடையை இந்த வருஷம் நடத்தணும். அது சம்பந்தமாப் பேச, நாள ராத்திரி அரண்மனை வாசல்லே ஊரு கூடணும். இது அரண்மனை உத்தரவு’ன்னு ஊருக்குள்ளே நீதான் தமுக்கு அடிக்கிறே… என்ன?”
“உத்தரவு அரண்மனை.”
மலேசியக்
காட்டுப் பாறையில் அமர்ந் திருந்த அரியநாச்சி, “துரைசிங்கம்… வா!” என்றழைத்ததும் வந்துவிட வில்லை. சிறுத்தையின் வாயைக் கிழித் துப் புரட்டிப் போட்டும் அடங்காதவனாய் தலையோடு உடம்பை மறுபடியும் உலுப்பி, காடதிரக் கத்தினான்.
‘வ்… வ்வ்… வாஹ்ஹ்…’
அரியநாச்சி சிரித்துக்கொண்டாள்.
‘உன் பசிக்கான இரை நம்ம ஊரிலேதான் இருக்கு. கிளம்பிற வேண்டியதுதான்.’
5
உஸ்தாத் அப்துற் றஹீம்
ஊரே, விழுந்து விழுந்து சிரித்தது.
தெரு நெடுக, அவரவர் வீட்டு வாசலில் நின்று கைகொட்டிச் சிரித் தார்கள்.
‘‘லோட்டா’ப் பயலுக்கு என்னாச்சு?’
‘அவனுக்கு ஏன் இந்த லவி?’
பெண்கள், விடிகாலை வேலைகளை எல்லாம் போட்டுவிட்டு, வாசலுக்கு வந்து நின்று சிரித்தார்கள்.
‘லோட்டா’, எதைப் பற்றியும் கவலைப் படாமல் ‘தமுக்கு’ அடி தப்பிவிடக் கூடாது என்பதிலேயே குறியாய் இருந்தான்.
‘கிடுகிடு… கிடுகிடு… கிடுகிடு… கிட்டடி… கிட்டடி…’
அடிக்கிற கைத் தோதுக்கு ஏற்ப தலையை ஆட்டினான்.
தூக்கக் கலக்கத்தோடு கூடிய சின்னப் பயலுகள், வாயோரம் ஓடிக் காய்ந் திருந்த கொடுவாயைக் கூட கழுவாமல், ‘லோட்டா’வை அனுசரித்து நடந்து போனார்கள்.
‘‘லோட்டா’ அண்ணனுக்கு என்னாச்சு!’’ ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
குசும்புக்கார சிறுவன் ஒருவன், ‘லோட்டா’வின் பின்புறம் தட்டினான். ம்… ஹூம்…‘லோட்டா’வுக்கு எதுவும் சுனைக்கலே.
‘ஊருக்குள்ளே போயி… நீதான் ‘தமுக்கு’அடிக்கணும்,’ என உடை யப்பன் உத்தரவு போட்டதும், ஓட்டமாய் ஓடிப் போய் தமுக்கு அடிக்கிற உமையணனிடம் கெஞ்சிக் கூத்தாடி, ஒரு தமுக்கு வாங்கினான். உமையணனும் உடனே ஒத்துக்கிறலே. செவல்பட்டி கள்ளுத் தண்ணி ரெண்டு முட்டி உள்ளே இறங்கி, பின் மண்டையில் ‘சுரீர்ர்…’ எனப் பிடிக்கவும்தான் வழிக்கு வந்தான்.
“ஏஞ்… சாமி! ஒங்களுக்கு இந்த லவி?” நமட்டுச் சிரிப்பு சிரித்தவாறு தமுக்கை இடுப்பில் கட்டிவிட்டான். தமுக்கு அடிக்கிற தோலை எப்படி பிடிப்பது? எப்படி அடிப்பது என்பதை உமையணன்தான் சொல்லிக் கொடுத்தான்.
‘கிட்டடி… கிட்டடி…’ தெரு கூடும் முச்சந்தியில் அடியை நிறுத்தினான் ‘லோட்டா’. ஊர்க் கண்ணெல்லாம் ‘லோட்டா’ மீதிருந்தது.
“சேவிக்கிறேன் சாமியோவ்! ரெம்பக் காலமா… நின்னு போயிருக்கிற நம்ம இருளப்பசாமி கோயில் கொடை, குதிரை எடுப்புத் திருவிழாவை இந்த வருஷம் சீரும் சிறப்புமா கொண் டாடணும்கிறது… அரண்மனை உத்தரவு. பத்து நாள் திருவிழா பத்தி பேசி முடிவு பண்ண, இன்னைக்கு ராத்திரி… அரண்மனை வாசல்லே ஊர் கூடணும்கிறது அரண்மனை உத்தரவு சாமியோவ்…”
‘கிடுகிடு… கிடுகிடு… கிடுகிடு… கிட்டடி… கிட்டடி…’
பெரியவர் நல்லாண்டி, கையருகில் அமர்ந்திருந்தவனின் காதை கடித்தார். “உடையப்பன் பேரை ஒரு தடவை உச்சரிச்சதுக்கு…‘லோட்டா’ப் பயலுக்கு தண்டனையைப் பார்த்தியா?”
‘லோட்டா’ அடிக்கும் ‘தமுக்கு’சத்தம், அடுத்த தெருவுக்குள் நுழைந்தது.
ஆப்பநாட்டு அரியநாச்சி, மலேசியப் பெண்களின் உடை தரித்திருந்தாள்.
அழுத்தமான பல வண்ணங்களில், பெரிய பெரிய பூக்கள் போட்ட முரட்டுக் கைலியை, கெண்டைக்கால் தெரியக் கட்டி இருந்தாள். இடுப்புக்கு மேல், மேனி மறைய சாம்பல் நிற ‘குப்பாயம்’ அணிந்திருந்தாள். இரண்டு பக்கமும் தாராளமாக கை நுழையும் அளவிலான ஜேபிகளுடன், முழுக் கை மறைக்கும் குப்பாயம். மெல்லிய வண்ணத் துணியை நெற்றியோடு தலை மறைத்து, பின் மண்டையில் முடிச்சு இட்டு கட்டி இருந்தாள்.
சமீப நாட்களாக அரியநாச்சியின் மனசு, கெந்தலிப்பாக இருந்தது. இருபது ஆண்டு சபதம் நிறைவேறப் போகும் கெந்தலிப்பு. மனசு புரளும் உற்சாகத்துக்கெல்லாம் மூலக் கருவி, உஸ்தாத் அப்துற் றஹீம்.
சேதுநாட்டு பரமக்குடிக்கு அருகில் உள்ள நயினார்கோவில் கிராமம்தான் அப்துற் றஹீமின் பூர்வீக மண். இந்துக்களான மூதாதையர், பினாங்குத் தீவுக்கு பிழைக்கப் போய் கள்ளுக்கடை நடத்தியவர்கள். பின்னாளில் இஸ்லாத் தைத் தழுவியவர்கள். நயினார்கோவில் தங்கவேல் தேவரின் பேரன் அப்துற் றஹீம்.
மல்யுத்த வீரனாகக் களமிறங்கிய உஸ்தாத் அப்துற் றஹீம்… வில், வேல், வாள் விளையாட்டுக்களில் மலேசிய மண் முழுக்க கொடிக் கட்டினார். எவராலும் இறக்க முடியாத கொடி.
சொந்த மண்ணில் வஞ்சிக்கப்பட்டு, வாய் பேச முடியாத ஊமைச் சிறுவ னாக மலேசியக் காட்டில் வந்திறங்கிய துரைசிங்கத்தின் மேல் அப்துற் றஹீமுக்கு பூர்வீக ரத்த பாசம். சகல போர்க் கலைகளையும் கற்றுத் தந்து, எங்கும் தோற்காத ஆயுதமாக புடம் போட்டு, அத்தை அரியநாச்சியின் கையில் ஒப்படைத்தார்.
“அரியநாச்சி… திருப்திதானே?”
அரியநாச்சிக்குப் பேச்சு வரவில்லை. உஸ்தாத்தின் முன் மண்டியிட்டு, கையெடுத்துக் கும்பிட்டாள்.
அரியநாச்சியின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார் அப்துற் றஹீம்.
நான்கு அடி தள்ளி நின்ற துரைசிங் கத்தை ஏறெடுத்துப் பார்த்தார் உஸ்தாத். கடலின் அடி ஆழத்தை கடைந்து, சுற்றிச் சுழன்று கிளம்பப் போகும் சூறாவளி போல் தெரிந்தான். மனதுக்குள் சிரித்தவர், வாய்விட்டுச் சொன்னார்.
“உன்னை வெல்ல… இனியொருவன் பிறக்கணும்!”
அரியநாச்சியின் பக்கம் திரும்பினார்.
“அரியநாச்சி… பயண ஏற்பாடுகள் எல்லாம் முடிந்ததா?”
“நாளைக்கு… கப்பல் கெளம்பு துண்ணேன்” என்றவள், கவிழ்ந்தவாறு தன் இடுப்பில் செருகி இருந்த கத்தியை உறை நீக்கி ஊருவினாள்.
இடுப்புக் குடத்தோடு, ஓடை நீர் அள்ளப் போய்க் கொண்டிருந்தாள் செவ்வந்தி. காட்டுப் பாதை என்றாலும் கால் பழகிய பாதை. வனப் பரப்பில் கண் அலைய, ஓடை நோக்கி கால்கள் தானே போகும். ஆனால் இன்று, கண் பிரியாமல் தடம் பார்த்து நடந்து போனாள். இனம் புரியாத சந்தோஷம் உள்ளுக்குள் இழை யோடிக் கொண்டிருந்தது. தகப்பன் தவசியாண்டியிடம் இருந்து தொற்றிக் கொண்ட சந்தோஷம்.
நேற்று இரவு குடிசையை விட்டு எங்கோ போய் திரும்பிய தவசியாண்டி, குதியாய் குதித்தான்.
“என் சிங்கம் வருது… என் சிங்கம் வருது!”
வனம் கீறி நடந்து போகும் செவ் வந்திக்கு ஒண்ணும் புரியலே. தகப்பன் தவசியாண்டி, இவ்வளவு சந்தோஷமாய் இருந்து ஒருநாளும் பார்த்ததில்லே.
‘அப்பாவோட சிங்கம்… யாரு?’
‘அவரோட குல தெய்வம்… யாரு? அந்தக் குல தெய்வத்தை கொன்ன… எதிரி யாரு?’
கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் நாதியற்ற காட்டுக்குள், ஓடை நீர், சல சலத்து ஓடிக் கொண்டிருந்தது.
குருதி ஆட்டம்
1
இருட்டுக் கோடாங்கி
இது.. செறுபகை வென்ற சேது நாட்டு வாள். சதிகளின் தலை அறுத்துச் சதுராடிய வாள். வெட்டுப்பட்டுச் சரிந்த வேங்கைகளின் ரத்தம் நக்கிய ஓநாய்களின் நாக்கறுத்த வாள். ஆழிப் பேரலையாய் சுழித்து எழுகிறது தவசியாண்டியின் கோடாங்கிச் சத்தம். வனக் கன்னி செவ்வந்தியின் சுவாசம் தழுவி மணக்கின்றன வண்ணப் பூக்கள். வைக்கோல் பிறிகளுக்குள் ஒளிந்திருக்கும் மறத் தோள்கள், வாளெடுத்து ஆடிய குருதி ஆட்டம்.
இருட்டுக் கோடாங்கி
உச்சி ராத்திரி. உள்ளங்கை தெரியாத இருட்டு.
தவசியாண்டிக் கோடாங்கி அடிக்கிற அடியில் காடு கிழியுது.
‘டுண்…. டுண்ண்… டுண்…’
ஆவேசம் அடங்காத அடி. லயம் தப்பினால் கோடாங்கி தோல் கிழிந்துபோகும்.
வனாந்தரக் காற்று, பம்மிப் பதுங்குது. சுயராஜ்ஜியமாக ஊர்ந்து, அலைந்து இரை தேடப் புறப்பட்ட காட்டு ஜீவராசிகள், கோடாங்கிச் சத்தத்தில் குலை நடுங்கி, பசியோடும் ஆத்திரத்தோடும் பொந்துகளுக்குள் சுருண்டு கிடக்கின்றன.
ஆளைக் கொல்லும் ஜந்துக்கள் எல்லாம் வாய் பொத்தி விழித்திருக்க, நீலக் கழுத்து மயில்கள், ‘வெடுக் வெடுக்’ எனத் தலை சிலுப்பி, கோடாங்கிச் சத்தத்தையும் மீறிப் பெருங்குரல் எடுத்துக் கத்துகின்றன.
குரங்குகள், குட்டிகளை அடி வயிற்றில் அணைத்துப் பல்லிளித்துக் கீச்சாட்டம் போடுகின்றன. மலை உயர மர உச்சியில் பிடி இழந்த தேவாங்கு, ‘தொப்’ என விழுந்து, உருளும் கண்களோடு அடி மரம் பிடித்து மேலேறுகிறது.
நட்சத்திரங்களற்ற கருப்பு வானம், பொறுப்பில்லாத தகப்பனாய் மல்லாந்து கிடக்கிறது.
பாறை இடுக்குகளில் கசிந்தோடி வரும் ஓடை நீர்ச் சலசலப்பில் முழங்கால் நனைய, கண் மூடி நிற்கிறான் தவசியாண்டி. இடுப்புக்கு மேல் வெற்றுடம்பு. அள்ளி முடிந்திருந்த கோடாலி கொண்டைமுடி அவிழ்ந்து, பிடறி மறைத்துத் துள்ளி ஆடுது. உடம்பெல்லாம் பூத்துப் பெருகும் வியர்வை, புட்டம் நனைத்து, கால் வழியே ஓடிக் கரையுது காட்டு நீராய். சாராய நாற்றமெடுக்கும் உதடுகளும் கன்னத்துச் சதையும் அபிநயிக்க, இமை திறவாமல் அடிக்கிறான் தவசியாண்டி.
“ம்… ம்ம்ஹ்…. ம்ம்…” செல்லச் சிணுங்கு சிணுங்கினாள்.
“என்னடீ…. சிணுங்கலூ…!”
படுக்கையில் விலகிப் புரண்டவளை, எட்டி பிடித்தான் உடையப்பன்.
குழைந்தாள்.
‘க்ளுக்’ எனச் சிரித்தவன், “இங்கே பார்றா. நேத்து முந்தா நாளுதான் சமஞ்ச குமரி மாதிரில்ல கொணங்கிறா” தோள் தொட்டு இழுத்தான்.
புரண்டு உடையப்பனின் மார்பில் வந்து விழுந்தவள், இடது கை உள்ளங்கையால் உடையப்பனின் வழுக்கைத் தலையைத் தடவினாள்.
“இங்கே மட்டும் என்னவாம்? வாலிபம் துள்ளுதாக்கும்? வெச்ச கையி… வழுக்கிட்டுப் போகுது!” பின் மண்டை வரை தடவினாள்.
சல்லாபக் கோபத்துடன் கடிக்க வந்தவனின் வாயைப் பொத்தி, “ச்ச்சேய், சாராய நாத்தம் குடலைப் புடுங்குது” நெளித்துச் சரசமாடினாள்.
“ஏன்டீ என் வாய் மட்டும்தான் நாறுதாக்கும்? கத்தை கத்தையா குடுப்பேனே…. அந்தக் காசும் நாறுமே?”
“ஆமலூ பெரிய காசு! ராவு முழுக்க முந்தி விரிச்சு, முழுசா ஒப்படைச்சிட்டு, காலையிலே ரெண்டு காசுகளைக் கையேந்தி வாங்கிட்டுப் போற ஏனவாய்ச் சிறுக்கி நான் ஒருத்தியாதான் இருப்பேன்!”
“என்னவாம் இன்னைக்கு தெக்குப் பட்டிக்காரிக்கு இம்புட்டுக் கோவம்?”
உடையப்பனின் மார்புக்குள் மூச்சு காற்றுபட பேசினாள். “ஒங்களுக்கு நான் ஒருத்திதான் ஓவியமா இருக்கேனாக்கும்? நித்தம் ஒரு பொண்டாட்டி... நெகர் இல்லாத மஹராசா” மார்பில் செல்லக் குத்து குத்தினாள்.
‘டுண்…. டுண்ண்… டுண்…’
வனக்கோடாங்கிச் சத்தம், நர உயிர்ப் பசியோடு கொலை நாக்குகள் நீள, ஊருக்குள் நுழைந்து உடையப்பனின் மாளிகையைத் துழாவுகிறது.
தெற்குப்பட்டிக்காரியின் கோபத்தை ரசித்து, முதுகு மறைத்துக்கிடந்த கூந்தலைக் கோதினான்.
“எவ எவளோ வந்து திங்கிறாளுக. அடியேய் இந்தாடீ, அந்த வீட்டை வெச்சுக்கோ. இந்தக் காட்டை உழுதுக்கோனு கை காட்ட மனசு வருதா? பொண்டாட்டி செத்து இருபது வருசமாச்சு. பேரு சொல்லப் பிள்ளையுமில்லே. வாரிசு இல்லாத சொத்துத்தானே? கொஞ்சோண்டு கிள்ளிக் குடுத்தாக் கொறைஞ்சா… போகுது?” உடையப்பனின் நெஞ்சு ரோமங்களைக் கவ்வினாள்.
உதட்டு உரசலில் கண்கள் செருகின. மூடியவாறு சொன்னான். “இருக்கான்டீ, எனக்கு வாரிசு இருக்கான்!”
“எதூ… வாரிசு இருக்கா? யாரு..?” பதறினாள்.
பதில் சொல்ல வாய் திறந்தான்.
‘டுண்…. டுண்ண்… டுண்…’
ஆங்காரப் பேயாய் மோதும் கோடாங்கிச் சத்தம், குருதி கசியும் நக விரல்களால் கதவு, ஜன்னல்களைக் கவ்வி பிடித்து ஆட்டியது. படுக்கை அறை ஜன்னல் கண்ணாடிகள் கிடுகிடுத்தன. கட்டில் புரண்டது. தெற்குப்பட்டிக்காரி கீழே உருண்டாள். கைப் பிடிமானம் கிடைக்காத உடையப்பன், நிலைகொள்ளாமல் அறை முழுக்கத் தடுமாறினான்.
‘டுண்…. டுண்ண்… டுண்…’
புரண்டு படுத்த ஊர், தூக்கத்தில் புலம்பியது.
“ஊருக்குத் தலை செரைக்கிற நாவிதன் தவசியாண்டிக்கு யாரு மேல இம்புட்டுக் கோவம்?”
“ஊருக்குள்ளே குடியிருக்கவே மாட்டேன்னு, தாயில்லா பொண்ணை கூட்டிக்கிட்டு காட்டுக்குள்ளே ஒதுங்கி இருபது வருஷத்துக்கு மேலே ஆச்சு. அவன் கோவம் யாரு மேலேயோ, என்னைக்கு தீருமோ!”
தீந் தென்றல் மலர்த்திப் போட்ட பூவிதழாக… அவரைக் கொடி இடை திருகி, கண் விழித்தாள் செவ்வந்தி. செம்பருத்திச் செடி உயரம். மினுமினுக்கும் கமுகு மேனி. மேற்கே சரியும் சூரிய நிறம். பலாச்சுளை மூக்கு. பாக்கு உதடு. கம்பங்கதிர் கழுத்து. கால் கூசும் நடை.
தனித்திருக்கும் வனாந்தரத்து ஒற்றைக் குடிசையின் அணையா விளக்கு, ஒளிக் கீற்று அசையாமல், கற்சிற்பமாக எரிந்துகொண்டிருந்தது.
செவ்வந்தி, விரிப்பை விட்டு எழாமலே, விளக்கைத் தூண்டினாள். வெளிச்சம் பரவிப் படர்ந்த வாசலோரம், தகப்பன் தவசியாண்டியின் பாய் விரிப்பு மட்டும் கிடந்தது.
கை ஊன்றி எழுந்தாள். கூந்தலைக் கோதி முடிந்து கொண்டை இட்டாள். வாசலுக்கு வந்தாள். காட்டையும் ஊரையும் அலைக்கழிக்கும் கோடாங்கிச் சத்தம், ஒற்றைக் குடிசையை நெருங்காமல் ஒதுங்கிப் போனது. கண் பழகிய காட்டு இருட்டுக்குள் கூவினாள்.
“அப்பா!”
‘டுண்…. டுண்ண்… டுண்…’
“அப்பா!”
தவசியாண்டியைத் தேடி இருட்டுக்குள் நடந்தாள் செவ்வந்தி.
2
அஞ்சு தலை நாகம்
அரியநாச்சியின் மூடிய கண்களுக்குள் கப்பல் ஓடியது. தனுஷ்கோடி தீவிலிருந்து பினாங்கு தீவுக்கு நாடு கடத்தி வந்த கப்பல். மலேசியக் கரை இறங்கி இருபது வருடங்களாகியும் தனுஷ்கோடி தீவுக் குறுமணல், கண்களை மூட விடாமல் உறுத்தியது.
காய்ந்த இலைச் சருகாய் நீண்டு கிடக்கும் தனுஷ்கோடித் தீவின் பெண் கடலும் ஆண் கடலும் சந்திக்கும் முட்டுக் கடலுக்குள் நங்கூரம் பாய்ச்சி நின்றது ‘நாடு கடத்திக் கப்பல்’.
உடுப்பு அணிந்த துப்பாக்கிகளின் நடுவே நின்றாள் அரியநாச்சி. புட்டம் மறைத்து தொங்கும் அரியநாச்சியின் தலைமுடியை இடது கையால் இறுக் கிப் பிடித்திருந்தான் டி.எஸ்.பி. ஸ்காட். அத்தை அரியநாச்சியின் தோளில் சாய்ந்துகிடந்த ஊமைச் சிறுவன் துரை சிங்கம், மலங்க மலங்க விழித்தான்.
அரைக்கண் பார்வையில் அரிய நாச்சியைக் கோதிய ஸ்காட், வலது பக்கம் திரும்பி வங்காள விரிகுடாவைப் பார்த்தான்.
நான்கு நாட்களுக்கு முந்தைய அமாவாசை இரவில் ரணசிங்கம் வைத்த குண்டு வெடித்துச் சிதறடித்த ‘கிரேட் பிரிட்டன்’ கப்பல், அலையாடிக் கொண்டிருந்தது. வெள்ளை சாம்ராஜ்ஜியமே ஊதிப் பெருத்த பிணமாய் மிதப்பது போல் உணர்ந்தான் ஸ்காட். இடது கைப்பிடி முடி இன்னும் இறுகியது. வெள்ளிப் பூண் போட்ட பிரம்பால் அரியநாச்சியின் புட்டத்தில் ஓங்கி அடித்தான். விரிகுடாவைக் கைகாட்டி கத்தினான்.
“பாருடி… அங்கே பாரு. வெடித்துச் சிதறி மிதப்பது… கப்பல் அல்ல. பக்கிங்ஹாம் பேலஸ்!”
பிரம்படி மறுபடியும் விழுந்தது. அரியநாச்சி அசையலே. அத்தையின் கன்னங்களை உள்ளங்கையால் வருடினான் துரைசிங்கம்.
ஸ்காட்டின் முகச் சதை ஆடியது. கோபம் உச்சிக் கொம்பேறியது. வருடிய பிஞ்சுக் கையை வெள்ளிப் பூண் கைப்பிரம்பால் விலக்கினான். திரும்பி பார்த்த ஊமைச் சிறுவனின் வாய்க்குள் பிரம்பை நுழைத்தான்.
“குட்டிப் பாம்பே! உங்க அப்பன் ஒரு அஞ்சு தலை நாகம். நூற்றுக்கணக்கான போலீஸுகளைக் கொத்தினான். அதிகாரி களைக் கொன்றான். கச்சேரிகளைக் கொளுத்தினான். அவனை அடிச்சுக் கொன்னு, பால் ஊத்தி மண்ணுக்குள்ளே பொதைச்சிட்டோம்.’’
அரியநாச்சி, கண்களைச் சுழற்றி ஸ்காட்டைப் பார்த்தாள்.
“அந்தப் பாம்புக்குப் பிறந்த உன்னை உயிரோடுவிட்டால்… நீ, பத்து தலை நாகமாகி எத்தனைப் பேரை கொல் வாயோ? எத்தனைப் பிணம் தின்பாயோ? ஆனாலும் ஒரு குட்டிப் பாம்பைக் கொல்ல பிரிட்டிஷ் சட்டம் என்னை அனுமதிக்கவில்லை.’’
பிரம்பை மேலும் கீழும் ஆட்டினான்.
“உங்க அப்பன் மண்ணுக்குள்ளே போயிட்டான். நீயும் உன் அத்தைக்காரியும் மலேசியக் காட்டுக்குப் போங்க. அவன் கேட்ட சுதந்தரம், இங்கே கிடைக்காது. மலேசியக் காட்டிலேதான் கிடைக்கும்.’’
‘பா… ம்ம்… ங்… ங்…’ புறப்பட ஆயத்தமான நாடு கடத்திக் கப்பல், கடலுக்குள் இருந்து கூவியது. ஒரு படகு, கரையோரம் அணைந்து நின்றது.
அரியநாச்சியின் மீது ஸ்காட்டின் கடைசிக் கோபம் கொப்பளித்தது. முன்னும் பின்னும் மாறி மாறி விழுந்த அடியில் கைப்பிரம்பு தெறித்தது.
ம்… ஹூம். அரியநாச்சி அலுங்கலே. அத்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டான் துரைசிங்கம்.
கப்பலேறிய அரியநாச்சி, கரையில் நின்ற ஸ்காட்டைப் பார்த்து, “துப்பாக்கிப் போலீஸுகளைத் துணைக்கு வெச்சுக்கிட்டு ஒரு பொட்டச்சியை அடிக்கிற வெள்ளைக்கார நாயே! எத்தனைக் கடல் தாண்டி அனுப்புனாலும் திரும்பி வருவோம்டா... வந்து பழி தீப்போம்டா!” துரைசிங்கத்தின் கன்னம் திருப்பி,
“நேத்து வரை வாய் பேசுன இந்தப் பச்சப் பாலகனை ஊமையாக்கி அனுப்புறீங்களே… உங்களையும் உங்களுக்குத் துணை போன உள்ளூர் துரோகிகளையும், இவனே வந்து அழிப்பான்டா!” கரை கேட்க கத்தினாள்.
கப்பல் கிளம்பியது.
பத்தாம் நாள் மலேசியக் கரை இறங்கினாள். அலைக்கழிந்த கடல் பயணத்தில் அத்தையின் மடியிலேயே கிடந்தான் ஊமைச் சிறுவன்.
வெள்ளையம்மாள் கிழவி எழுபதைத் தாண்டியவள். ஒற்றை ரோமம் கூட உதிராத தலை, பஞ்சாய் நரைத்திருந் தது. உளி உளியாய் கண்ணும் மூக்கும். எப்போதாவது மூடித் திறக்கும் இமைகள். குவிந்த உதடுகளுக்கு மேல் அரும்பி மினுங்கும் பூனை ரோமம். பசுவின் நெய் நிறம். ஆப்பநாட்டு சனங்களுக்கு அருந்தலாய் வாய்க்கும் நிறம். வயதாக… வயதாக… அரண் மனைக் களை ஏறிய மேனி. இரண்டு கைகளையும் புறங்கட்டி நடக்கும் நடை. கிழட்டு ராணியின் தோற்றம். ஐம்பதாவது வயதில் சென்னைப் பட்டணம் வந்தவள்.
காடு, கழனி, கண்மாய், ஊரணி என சகதிப் பிசுக்கோடு ‘காட்டுக் காத்து’ குடித்தவளுக்கு பட்டண வாசம் ஒப்பவில்லை. பிறந்து ஆறு மாதமே ஆன பேரக் குழந்தையை அள்ளிக் கொண்டு ஊரை விட்டு வெளியேறிய வைராக்கியம், நாளுக்கு நாள் இறுக்கியது. ‘பெத்தவன் மூச்சுக் காத்தே… இவன் மேலே படக்கூடாது’ என்கிற வைராக்கியம். வந்ததோடு சரி. ஊர் இருக்கும் திசைப் பக்கம் திரும்பலே. நாளாக நாளாக பட்டண வாசம் பழகிப் போனது.
பேரன் கஜேந்திரனுக்கு இருபது வயது. பெத்துப் போட்டதும் செத்துப் போன தாயின் முகம் பார்க்காதவன். ஆறு மாதக் குழந்தையாய் ஊரை விட்டு வெளியேறியவனுக்கு அப்பன் முகம் தெரியாது.
கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம், ஊரிலிருந்து எப்போதாவது சென்னைப் பட்டணத்துக்கு வந்து போவார். ஒருநாள் தங்கி ஊர் சேதிகளைப் பேசிவிட்டு கிளம்பிவிடுவார். ரத்னா பிஷேகம்பிள்ளை கஜேந்திரனுடன் பேச ஆசைப்படுவார். கிழவி பேச விடமாட்டாள். பேரழகன் கஜேந்திரனைக் கண்கள் அகல, எட்ட நின்றே வேடிக்கை பார்ப்பார்.
‘வெகுநாட்களாய்… பிள்ளைவாள் பட்டணத்துப் பக்கம் வரக் காணோம்’
புறங்கைகளைக் கட்டியவாறு நடுக் கூடத்தில் உலாத்திக் கொண்டிருந்தாள் வெள்ளையம்மாள்.
அரியநாச்சியின் கண்களை மூட விடாமல் தனுஷ்கோடி குறு மணல் உறுத்திக் கொண்டே இருந்தது. வான் முட்டும் மரங்கள் அடர்ந்த மலேசியக் காட்டுக்குள், ஒரு சிறு பாறை மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்.
வெறிகொண்டு கட்டிப் புரளும் இரண்டு மிருகங்களின் உறுமலும் அலறலும் காட்டை அலைக்கழித்தது. இமை ஆடாமல் பார்த்துக் கொண்டிருந் தாள்.
வனக்காற்று சிலுசிலுத்தது.
3
பெருங்குடி அரண்மனை
விடியவும் உடையப்பன் வீட்டு வாசலில் ஊர் கூடிக் கிடந்தது.
பொம்பளைக யாருமில்லை. எல்லாம் ஆம்பளைகதான். சன்னம் சன்னமாய்க் கூடினார்கள்.
வீட்டுத் தோட்டத்துச் சுற்றுச் சுவர் கதவு பூட்டி இருந்தது. தோட்டம் தாண்டி வீடு. வீட்டுத் தலைவாசலைத் திறக்கிற அறிகுறி தெரியலே. தோட்டத்துக் கதவைத் தட்ட முடியாது. சத்தம் போட்டுக் கூப்பிடவும் முடியாது. திறக்கிற வரை காத்துக் கிடக்க வேண்டியது ஊருக்காரன் தலையெழுத்து.
பெருங்குடி கிராமத்துக்கு இந்த வீடுதான் அரண்மனை. இந்த அரண்மனைக்குள் தும்மல் சத்தம் கேட்டாலும், ‘அரண்மனைக்கு என்னாச்சு? நேத்து ராத்திரி ‘நச்சு நச்சுன்னு நாலு தும்மல் சத்தம் கேட்டுச்சே!’ எனக் காலையிலே ஊரே வந்து நிக்கணும். அப்படி வராதவன்… ஊருக்குள்ளே குடியிருக்க முடியாது. ஊரே…உடையப்பன் ஊரு. இந்த ஊரு மட்டுமில்லே ஆப்ப நாட்டிலே பாதி, உடையப்பனுக்குச் சொந்தம்.
வாய்க்கும் காதுக்குமாகக் குசுகுசுத் தார்கள். கூடிக்கிடந்த இளவட்டங்களில், ‘லோட்டா’ வாய் ஓயாமல் பேசுபவன். ‘லொடலொடன்னுபேசுறதுனாலே, அவனுக்குப் பட்டப் பெயர் ‘லோட்டா’. அடுத்தவன் வாயை ‘கிண்டி’விடுறதிலே கெட்டிக்காரன்.
“நேத்து ராத்திரி அரண்மனை அஸ்திவாரமே ஆடுச்சே!”
“காட்டுக்குள்ளே கோடாங்கிச் சத்தம் கேக்குறபோதெல்லாம் அரண்மனை ஆடத்தான் செய்யுது.”
“தவசியாண்டி கோடாங்கிக்கும் அரண்மனைக்கும் என்ன சம்பந்தம்?”
“அதுதானே தெரியலே!”
பெரியவர் நல்லாண்டி ‘லோட்டா’வை ஏற இறங்கப் பார்த்தார்.
“உடையப்பன் உள்ளேதான் இருக்காரா?” கோட்டைச் சுவர் தாண்டி ‘லோட்டா’ கால்விரல் நுனியில் எக்கிப் பார்த்தான்.
நல்லாண்டிக்குப் பொத்துக் கொண்டு வந்தது. “ஏன்டா… விலாவிலே வெடிச்சுப் பெறந்த பயலே! வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியாடா? ‘அரண்மனை’ பெயரைச் சொல்றியே, ஒனக்கு ஈரல்லே பித்தா? எலும்பிலே பித்தாடா? அவன்ங்க காதுக்குப் போச்சுன்னா உன்னைக் கொன்னு, தென்னை மரத்துக்கு உரமா வெச்சிறப்போறான்ங்க.”
‘உடையப்பன்’ என்கிற பெயரை ஊரு உச்சரிச்சு… வெகுகாலமாகிப் போச்சு. இப்போதெல்லாம் உடையப்பனின் பெயரே ‘அரண்மனை’தான்.
என்னச் சொன்னாலும் ‘லோட்டா’ப் பயலுக்கு வாய் நிக்கலே.
“உள்ளே கூட்டு வண்டியைக் காணோமே!”
“ம்ம்… ராத்திரி வந்த கூத்தியாளை எறக்கிவிட கூட்டு வண்டி சவாரி போயிருக்கும்.”
தெற்குப்பட்டிக்காரி ஊரார் கண்களில் படாமல், ராத்திரியோடு ராத்திரியாய்க் கூட்டு வண்டி திரை மறைப்பில் வெளியேறிப் போயிருந்தாள்.
மஞ்சள் வெயில் ஏறியது.
‘லோட்டா’ கண்களை இறுக மூடி ஆயாசமாய் ‘அப்பப்பப்பா!’ என இழுத்துப் பெருமூச்சுவிட்டான்.
பக்கத்தில் நின்ற இளவட்டம், ‘லோட்டா’வுக்கு மட்டும் கேட்கச் சொன்னான். “ஏன்டா லோட்டா…ஏறுவெயிலு கண்ணைக் கட்டுதாக்கும். இந்நேரம் ஊரணிக்கரையிலே, செவல்பட்டி கள்ளுப் பானை வந்து எறங்கிருக்கும். போ…போயி, ரெண்டு செம்பு கள்ளைக் குடி. கண்ணு பளபளன்னு நல்லாத் தெரியும்.”
அரண்மனை தலைவாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. வெளியே நின்றிருந்த எல்லோரும், கோட்டைச் சுவரில் கைபோட்டு எம்பி உள்பக்கம் பார்த்தார்கள்.
கதவைத் திறந்து வெளியே வந்த கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம், அங்கிருந்தே கோட்டைச் சுவரைப் பார்த்துக் கூவினார். “அரண்மனைக்கு ஒண்ணுமில்லே. நல்லாத்தான் இருக்காரு. எல்லாரும் போகலாம். அந்த லோட்டாப் பயலை மட்டும் உள்ளே வரச் சொல்லு.”
எல்லோரும் கலைந்தார்கள். ‘லோட்டா’ திருகித் திருகி முழித்தான். கோட்டைக் கதவு திறந்தது.
காடு
குலுங்கக் கட்டி புரண்டு எழுந்தவனின் உடம்பு முழுக்கக் காயங் கள். கன்னம், மார்பு, முதுகு நிறைய நகக் கீறல்கள். உள்ளங்கைகள் நனையப் பச்ச ரத்தம். உதறி எழுந்ததும் உடம்பை ஒரு உலுப்பு உலுப்பினான். முகம் மறைத்து முன் விழுந்த தலைமுடியை, ரத்தக் கைகோதி விலக்கிவிட்டான். தகிக்கும் முகத்தில், அடங்காத மிருக லட்சணம். உடம்பில் ஒட்டியிருந்த மலேசியக் காட்டு மண்ணைத் தட்டிவிட்டான். வலது கைவாக்கு புதர்க் காட்டை ஓரக் கண்ணளந்தான். வாய் பிளந்து செத்து கிடந்தது சிறுத்தை.
சிறு பாறையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த அரியநாச்சியின் கண்கள் சிரித்தன. அங்கிருந்தே கண் அசைத்தாள்.
“துரைசிங்கம்… வா!”
செவ்வந்தி,
குடிசைக்குள்ளிருந்து அழைத்தாள்.
“அப்பா…”
வெளி மண் திண்ணையில் அமர்ந்திருந்தான் தவசியாண்டி. தொடையை உரசிக் கொண்டு கள்ளு முட்டி. செவல்பட்டி பனங்கள்ளு.
தலை தட்டும் குடிசை வாசலில் குனிந்து வெளியே வந்தவள், “சாப்பிட வாங்கப்பா…” என அழைத்தாள்.
கவிழ்ந்தவாறு அமர்ந்திருந்தவனின் மீசை நனையக் கள்ளு நுரை. இடது கையால் துடைத்துக் கொண்டான். “நீ போயி சாப்பிடு தாயீ…”
“நீங்கச் சாப்பிட்டு ரெண்டுநாளாச்சு. வாங்கப்பா, ஒரு வாய் சாப்பிடுங்க.”
அரை குறையாய்த் தலை திருப்பி மகளின் காலடியைப் பார்த்தவன், “ஒங்கப்பன் ஒடம்புலே உசுரு இருக்குல்லே! அது போதும். நீ போத்தா…” மறுபடியும் கவிழ்ந்தான். கண்ணீர் ஓடியது. மகளை, கண்கொண்டு நேருக்கு நேர் பார்த்து ரெம்பக் காலமாச்சு. பார்த்தால் பாதி உசுரு போயிரும்.
தாயை இழந்த ரெண்டு வயசு கை குழந்தை செவ்வந்தியைத் தோளில் தூக்கிக் கொண்டு காட்டுக்குள் வந்து பதினைந்து வருஷமாச்சு. அப்பன் முகத்தை மகள் பார்க்க… மகள் முகத்தை அப்பன் பார்க்க… வேத்து முகம் பார்க்காமல் காலம் ஓடுது. செவ்வந்தி புஷ்பவதி ஆன அன்னைக்கு, கன்னி தீட்டு கழித்து, அத்தம்குத்தம் சொல்ல ஒரு பொம்பளைத் துணைக் கிடையாது. வாயிலே துண்டைப் பொத்திக்கிட்டு திண்ணையிலே உக்காந்து தவசியாண்டி அழுகிறான். குடிசை மூலையிலே குத்துக்கால் வெச்சு செவ்வந்தி அழுகிறாள். இப்பிடி ஒரு நாதியத்த பொழப்புக்கு என்ன வைராக்கியமோ?
“என் குலத் தெய்வத்தைக் கொன்ன வன்ங்க உயிரோட இருக்கிற வரை, நான் சாக மாட்டேன். நீ போ தாயீ...”
இரண்டு கை நிறையக் கள்ளு முட்டியைத் தூக்கினான்
4
இரை
ஊரார் எல்லாம் கலைந்து போய்விட, அரண்மனைத் தோட்டத்து வாசலில் ஒத்தையில் நின்றான் ‘லோட்டா’.
கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம் தலைவாசலில் நின்றவாறு, ‘லோட்டா'ப் பயலை மட்டும் உள்ளே வரச் சொல்லு’ என உத்தரவிட்டதும், ‘லோட்டா’ கிறுகிறுத்துப் போனான்.
‘அப்புடி என்ன தப்பாப் பேசினோம்? நம்ம ‘அரண்மனை’ பேரு உடையப்பன்தானே? பேரைச் சொன்னது தப்பா?’
‘தோட்டத்து வாசல்லே நின்னுக் கிட்டுச் சொன்னது, அரண்மனைக் குள்ளே எப்புடிக் கேட்டுச்சு?’
‘வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கியாடா ‘லோட்டா!’ தன்னுடைய வாயில் தானே குத்திக் கொண்டான்.
தோட்டத்துக் கதவை வேலையாள் ஒருவன் திறந்தான்.
“ ‘லோட்டா’ உள்ளே போ. இன்னைக்கு நீ… தென்னைக்கு உரம்தான்டீ…’’ வாய்க்குள் சிரித்தான் வேலையாள்.
செத்தும் உயிர் இழையும் ஓவியமாய் சிரிக்கும் பொம்மிக்கு முன் அமர்ந்து, விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வெள்ளையம்மா. வீட்டின் நடுக்கூடத்தில் சந்தன மாலையிட்ட புகைப்படமாகத் தொங்கி கொண்டிருந்தாள் பொம்மி.
உதடு சிரித்தாலும் விதித்த தாம்பத்யத்தில் தோற்றுத் துவண்ட சோகம் கண்களில் கசிந்தது. கயவனின் தாலி கழுத்தில் ஏறிய நாள் முதல், தன்னைத் தானே வீழ்த்திக்கொள்ள யத்தனித்த சோகம். கழுத்தை நீட்டிய கடனுக்காக ஓர் இரவு இமை மூடி இணங்கியதால், சூல் கொண்ட கருவைப் பெற்றுப் போட்டதும் மரித்துப் போன சோகம். பால்யம் தொட்டு கனவில் சுமந்தவனைக் கைப் பிடிக்க முடியாத சோகம். அந்த மாவீரன் துரோகக் கொலையுண்ட நிமிஷமே தன்னுயிரைத் துறந்த சோகம்.
பொம்மியைப் பொசுக்கிய வாதையை வெள்ளையம்மா அறிவாள். மகளைப் பலி கொடுத்த பாவத்தில் இவளும் பங்கு கொண்டவள். மகளுக்கு முன் மண்டியிட்டு, நித்தம் அழுது கருகினாலும், தீராத பழி. முந்தானைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்தாள்.
“பாட்டி…!’’
கஜேந்திரன் நுழைந்ததுமே, அறை முழுவதும் மெல்லிய நறுமணம் பரவியது. கஜேந்திரனின் ஒவ்வோர் அசைவிலும் சென்னைப்பட்டணம் ஒட்டியிருந்தது. பிறப்பெடுத்த பெருங்குடி கிராமத்துக்கும் பேரனுக்கும் பொட்டுச் சம்பந்தம் இல்லாமல் வளர்த்திருந்தாள்.
அருகே வந்த கஜேந்திரன், வெள்ளையம்மாவின் கலங்கிய கண்களை உற்றுப் பார்த்தான்.
“அழுதீங்களா பாட்டி..?’’
“இல்லையே. எனக்கென்ன குறை? நான் ஏன் அழுவுறேன்?’’
“பாட்டி… இந்தப் பொய்யை இருபது வருஷமா சொல்றீங்க. எங்கிட்டே எதையோ மறைக்கிறீங்க. நான் வீட்டிலே இல்லாத நேரமெல்லாம் அம்மா படத்துக்கு முன்னாடி உக்காந்து, நீங்க அழுவுறது எனக்குத் தெரியும். பாட்டி… பழசை அசைப்போட்டுக்கிட்டே, ரிவர்ஸிலே போகக் கூடாது. நாளை என்ன? நாளைக்கு மறுநாள் என்னன்னு போய்க்கிட்டே இருக்கணும்.’’
பேரனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.
வந்ததும் சொல்ல மறந்தவனாய் “ம்… பாட்டி. அடுத்த மாதம் நான் லண்டன் போறேன். கிங்ஸ்டன் யுனிவர்சிட்டியிலே பேசுறேன். பல நாட்டு மாணவர்கள் வர்றாங்க. இந்தியாவிலே இருந்து ரெண்டு பேர்தான். ஒன்னு நான். இன்னொருவர், வங்காளத்திலே இருந்து வர்றார். பத்து நாள் புரொகிராம்’’ என்றான்.
கஜேந்திரன் சொல்வது புரியாமல் விழித்தாள்.
“யாருக்கும் கிடைக்காத இந்த வாய்ப்பு. உங்க பேரனுக்குக் கிடைச்சிருக்கு. நான் ஊருக்குப் புறப்படுற நேரம் அழுவக்கூடாது. ஓ. கே.?’’ கிழவியின் கன்னத்தில் செல்லத் தட்டு தட்டிவிட்டு வெளியேறினான்.
திறந்த கதவை மூடாமலே நடந்து போய்க் கொண்டிருந்த பேரனை, இமை ஆடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வெள்ளையம்மா.
தோட்டம் தாண்டி அரண்மனை முகப்பில் கால் வைத்த ‘லோட்டா’வின் நெஞ்சு பிசைந்தது. தலைவாசலில் நின்ற கணக்குப்பிள்ளை ரத்னா பிஷேகம், “உள்ளே வாடா…’’ என கண்ணசைத்துவிட்டு உள்ளே போனார்.
தரை தேய்த்து உள்ளே போனான்.
நாயகமாக அமர்ந்திருந்த உடையப்பனுக்கு நாலு அடி தள்ளி, பவ்யமாக நின்றிருந்தார் கணக்குப்பிள்ளை.
உடையப்பனின் இமைகள் சுருங்கின.
“உன் பேரு என்னடா?’’
கைக்கட்டி குறுகி நின்றவன் “ ‘லோட்டா’ சாமி” என்றான்.
“ ‘லோட்டா’ உன் பட்டப் பேரு. நெசப் பேரு என்ன?’’
“இருளாண்டி… சாமி…’’
“உன்னை இருளாண்டின்னு எவனாவது கூப்பிடுறானா?’’
“இல்லை சாமி” நின்ற இடத்திலேயே கைகூப்பி குப்புற விழுந்தான்.
“ஒரு ஏழைப் பயலுக்கே ‘பட்டப் பேரு’ இருக்குன்னா… ஆப்ப நாட்டு அரண்மனைக்குப் பட்டப் பேரு இருக்கக் கூடாதா?” வலது கைவாக்கில் இருந்த தண்ணீர்ச் செம்பைத் தூக்கினான்.
“சாமி… அய்யாவுகளே! வாக்குச் சனி உள்ள இந்த ஏழைப் பயலை, அரண்மனைதான் மன்னிக்கணும்”. தரையோடு முகம் உரச மாறி மாறிக் கும்பிட்டான்.
“ச்… ச்சீ… ச்சீய்ய் நாயி. எந்திரி” வலது கைச் செம்பை ‘லோட்டா’வின் விலா தெறிக்க வீசினான்.
‘லோட்டா’ எழுந்து தலை தொங்க நின்றான்.
“தமுக்கு அடிக்கத் தெரியுமா உனக்கு?”
“தெரியாது அரண்மனை.”
“தெரியலேன்னா… கத்துக்கிறணும். கத்துக்கிட்டு ஊருக்குள்ளே போயி தமுக்கு அடி.”
‘லோட்டா’ முழித்தான்.
உடையப்பன் என்ன சொல்ல வர்றான்னு கணக்குப்பிள்ளைக்கே புரியலே.
“ ‘ரெம்பக் காலமா… கொண்டாடாமல் நின்னு போன இருளப்பசாமி கோயில் கொடையை இந்த வருஷம் நடத்தணும். அது சம்பந்தமாப் பேச, நாள ராத்திரி அரண்மனை வாசல்லே ஊரு கூடணும். இது அரண்மனை உத்தரவு’ன்னு ஊருக்குள்ளே நீதான் தமுக்கு அடிக்கிறே… என்ன?”
“உத்தரவு அரண்மனை.”
மலேசியக்
காட்டுப் பாறையில் அமர்ந் திருந்த அரியநாச்சி, “துரைசிங்கம்… வா!” என்றழைத்ததும் வந்துவிட வில்லை. சிறுத்தையின் வாயைக் கிழித் துப் புரட்டிப் போட்டும் அடங்காதவனாய் தலையோடு உடம்பை மறுபடியும் உலுப்பி, காடதிரக் கத்தினான்.
‘வ்… வ்வ்… வாஹ்ஹ்…’
அரியநாச்சி சிரித்துக்கொண்டாள்.
‘உன் பசிக்கான இரை நம்ம ஊரிலேதான் இருக்கு. கிளம்பிற வேண்டியதுதான்.’
5
உஸ்தாத் அப்துற் றஹீம்
ஊரே, விழுந்து விழுந்து சிரித்தது.
தெரு நெடுக, அவரவர் வீட்டு வாசலில் நின்று கைகொட்டிச் சிரித் தார்கள்.
‘‘லோட்டா’ப் பயலுக்கு என்னாச்சு?’
‘அவனுக்கு ஏன் இந்த லவி?’
பெண்கள், விடிகாலை வேலைகளை எல்லாம் போட்டுவிட்டு, வாசலுக்கு வந்து நின்று சிரித்தார்கள்.
‘லோட்டா’, எதைப் பற்றியும் கவலைப் படாமல் ‘தமுக்கு’ அடி தப்பிவிடக் கூடாது என்பதிலேயே குறியாய் இருந்தான்.
‘கிடுகிடு… கிடுகிடு… கிடுகிடு… கிட்டடி… கிட்டடி…’
அடிக்கிற கைத் தோதுக்கு ஏற்ப தலையை ஆட்டினான்.
தூக்கக் கலக்கத்தோடு கூடிய சின்னப் பயலுகள், வாயோரம் ஓடிக் காய்ந் திருந்த கொடுவாயைக் கூட கழுவாமல், ‘லோட்டா’வை அனுசரித்து நடந்து போனார்கள்.
‘‘லோட்டா’ அண்ணனுக்கு என்னாச்சு!’’ ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
குசும்புக்கார சிறுவன் ஒருவன், ‘லோட்டா’வின் பின்புறம் தட்டினான். ம்… ஹூம்…‘லோட்டா’வுக்கு எதுவும் சுனைக்கலே.
‘ஊருக்குள்ளே போயி… நீதான் ‘தமுக்கு’அடிக்கணும்,’ என உடை யப்பன் உத்தரவு போட்டதும், ஓட்டமாய் ஓடிப் போய் தமுக்கு அடிக்கிற உமையணனிடம் கெஞ்சிக் கூத்தாடி, ஒரு தமுக்கு வாங்கினான். உமையணனும் உடனே ஒத்துக்கிறலே. செவல்பட்டி கள்ளுத் தண்ணி ரெண்டு முட்டி உள்ளே இறங்கி, பின் மண்டையில் ‘சுரீர்ர்…’ எனப் பிடிக்கவும்தான் வழிக்கு வந்தான்.
“ஏஞ்… சாமி! ஒங்களுக்கு இந்த லவி?” நமட்டுச் சிரிப்பு சிரித்தவாறு தமுக்கை இடுப்பில் கட்டிவிட்டான். தமுக்கு அடிக்கிற தோலை எப்படி பிடிப்பது? எப்படி அடிப்பது என்பதை உமையணன்தான் சொல்லிக் கொடுத்தான்.
‘கிட்டடி… கிட்டடி…’ தெரு கூடும் முச்சந்தியில் அடியை நிறுத்தினான் ‘லோட்டா’. ஊர்க் கண்ணெல்லாம் ‘லோட்டா’ மீதிருந்தது.
“சேவிக்கிறேன் சாமியோவ்! ரெம்பக் காலமா… நின்னு போயிருக்கிற நம்ம இருளப்பசாமி கோயில் கொடை, குதிரை எடுப்புத் திருவிழாவை இந்த வருஷம் சீரும் சிறப்புமா கொண் டாடணும்கிறது… அரண்மனை உத்தரவு. பத்து நாள் திருவிழா பத்தி பேசி முடிவு பண்ண, இன்னைக்கு ராத்திரி… அரண்மனை வாசல்லே ஊர் கூடணும்கிறது அரண்மனை உத்தரவு சாமியோவ்…”
‘கிடுகிடு… கிடுகிடு… கிடுகிடு… கிட்டடி… கிட்டடி…’
பெரியவர் நல்லாண்டி, கையருகில் அமர்ந்திருந்தவனின் காதை கடித்தார். “உடையப்பன் பேரை ஒரு தடவை உச்சரிச்சதுக்கு…‘லோட்டா’ப் பயலுக்கு தண்டனையைப் பார்த்தியா?”
‘லோட்டா’ அடிக்கும் ‘தமுக்கு’சத்தம், அடுத்த தெருவுக்குள் நுழைந்தது.
ஆப்பநாட்டு அரியநாச்சி, மலேசியப் பெண்களின் உடை தரித்திருந்தாள்.
அழுத்தமான பல வண்ணங்களில், பெரிய பெரிய பூக்கள் போட்ட முரட்டுக் கைலியை, கெண்டைக்கால் தெரியக் கட்டி இருந்தாள். இடுப்புக்கு மேல், மேனி மறைய சாம்பல் நிற ‘குப்பாயம்’ அணிந்திருந்தாள். இரண்டு பக்கமும் தாராளமாக கை நுழையும் அளவிலான ஜேபிகளுடன், முழுக் கை மறைக்கும் குப்பாயம். மெல்லிய வண்ணத் துணியை நெற்றியோடு தலை மறைத்து, பின் மண்டையில் முடிச்சு இட்டு கட்டி இருந்தாள்.
சமீப நாட்களாக அரியநாச்சியின் மனசு, கெந்தலிப்பாக இருந்தது. இருபது ஆண்டு சபதம் நிறைவேறப் போகும் கெந்தலிப்பு. மனசு புரளும் உற்சாகத்துக்கெல்லாம் மூலக் கருவி, உஸ்தாத் அப்துற் றஹீம்.
சேதுநாட்டு பரமக்குடிக்கு அருகில் உள்ள நயினார்கோவில் கிராமம்தான் அப்துற் றஹீமின் பூர்வீக மண். இந்துக்களான மூதாதையர், பினாங்குத் தீவுக்கு பிழைக்கப் போய் கள்ளுக்கடை நடத்தியவர்கள். பின்னாளில் இஸ்லாத் தைத் தழுவியவர்கள். நயினார்கோவில் தங்கவேல் தேவரின் பேரன் அப்துற் றஹீம்.
மல்யுத்த வீரனாகக் களமிறங்கிய உஸ்தாத் அப்துற் றஹீம்… வில், வேல், வாள் விளையாட்டுக்களில் மலேசிய மண் முழுக்க கொடிக் கட்டினார். எவராலும் இறக்க முடியாத கொடி.
சொந்த மண்ணில் வஞ்சிக்கப்பட்டு, வாய் பேச முடியாத ஊமைச் சிறுவ னாக மலேசியக் காட்டில் வந்திறங்கிய துரைசிங்கத்தின் மேல் அப்துற் றஹீமுக்கு பூர்வீக ரத்த பாசம். சகல போர்க் கலைகளையும் கற்றுத் தந்து, எங்கும் தோற்காத ஆயுதமாக புடம் போட்டு, அத்தை அரியநாச்சியின் கையில் ஒப்படைத்தார்.
“அரியநாச்சி… திருப்திதானே?”
அரியநாச்சிக்குப் பேச்சு வரவில்லை. உஸ்தாத்தின் முன் மண்டியிட்டு, கையெடுத்துக் கும்பிட்டாள்.
அரியநாச்சியின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார் அப்துற் றஹீம்.
நான்கு அடி தள்ளி நின்ற துரைசிங் கத்தை ஏறெடுத்துப் பார்த்தார் உஸ்தாத். கடலின் அடி ஆழத்தை கடைந்து, சுற்றிச் சுழன்று கிளம்பப் போகும் சூறாவளி போல் தெரிந்தான். மனதுக்குள் சிரித்தவர், வாய்விட்டுச் சொன்னார்.
“உன்னை வெல்ல… இனியொருவன் பிறக்கணும்!”
அரியநாச்சியின் பக்கம் திரும்பினார்.
“அரியநாச்சி… பயண ஏற்பாடுகள் எல்லாம் முடிந்ததா?”
“நாளைக்கு… கப்பல் கெளம்பு துண்ணேன்” என்றவள், கவிழ்ந்தவாறு தன் இடுப்பில் செருகி இருந்த கத்தியை உறை நீக்கி ஊருவினாள்.
இடுப்புக் குடத்தோடு, ஓடை நீர் அள்ளப் போய்க் கொண்டிருந்தாள் செவ்வந்தி. காட்டுப் பாதை என்றாலும் கால் பழகிய பாதை. வனப் பரப்பில் கண் அலைய, ஓடை நோக்கி கால்கள் தானே போகும். ஆனால் இன்று, கண் பிரியாமல் தடம் பார்த்து நடந்து போனாள். இனம் புரியாத சந்தோஷம் உள்ளுக்குள் இழை யோடிக் கொண்டிருந்தது. தகப்பன் தவசியாண்டியிடம் இருந்து தொற்றிக் கொண்ட சந்தோஷம்.
நேற்று இரவு குடிசையை விட்டு எங்கோ போய் திரும்பிய தவசியாண்டி, குதியாய் குதித்தான்.
“என் சிங்கம் வருது… என் சிங்கம் வருது!”
வனம் கீறி நடந்து போகும் செவ் வந்திக்கு ஒண்ணும் புரியலே. தகப்பன் தவசியாண்டி, இவ்வளவு சந்தோஷமாய் இருந்து ஒருநாளும் பார்த்ததில்லே.
‘அப்பாவோட சிங்கம்… யாரு?’
‘அவரோட குல தெய்வம்… யாரு? அந்தக் குல தெய்வத்தை கொன்ன… எதிரி யாரு?’
கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் நாதியற்ற காட்டுக்குள், ஓடை நீர், சல சலத்து ஓடிக் கொண்டிருந்தது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|