புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
62 Posts - 57%
heezulia
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
104 Posts - 59%
heezulia
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்திற்கும் விலை உண்டு !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Sep 05, 2015 1:09 pm

இயற்கையில் மரணம் என்பது எப்போதும் எங்கேயும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.மனிதன் ஒரு அறிவுள்ள சுயநல விலங்காக இருப்பதால் தன் இனமான மனிதர்களின் மரணங்களை மட்டுமே பெரும்பாலும் கணக்கில் கொள்கிறான்.மற்ற உயிரினங்களின் மரணங்கள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை; புள்ளிவிவரங்களுடன் கணக்கை முடித்து விடுகிறான்.உலகவணிகமயமாக்கலின் தாக்கமும் , விளம்பரமயமாதலின் தாக்கமும் இந்த மனிதர்களின் மரணத்தையும் விட்டு வைக்கவில்லை .

மரணம் என்பது இயல்பான ஒன்றாக இருந்தாலும் , குடும்பம் என்ற அமைப்பிலிருந்து நிகழும் மரணங்கள் அந்ததந்த குடும்பங்களுக்கு இழப்பு தான் . அது யானைக் குடும்பமாக இருந்தாலும் சரி , பறவைக்  குடும்பமாக இருந்தாலும் சரி , பட்டாம்பூச்சிக்  குடும்பமாக இருந்தாலும் சரி , மனிதக் குடும்பமாக இருந்தாலும் சரி , மற்ற எந்த உயிரினக் குடும்பமாக இருந்தாலும் இழப்பு இழப்பு தான். நாம் மனித மரணங்களை மட்டுமே கணக்கில் கொள்வோம் என்றாலும் அவையும்  சமமாக மதிப்பிடப்படுவதில்லை.

மனித மரணம் நிகழ்கின்ற இடமும் , அது பெறுகிற விளம்பர வெளிச்சமும் பொது சமூகத்தின் , ஆட்சியாளர்களின் கவனத்தைப் பெறுகிறது. எந்தவித கவனமும் பெறாத மனித மரணங்கள் பொது சமூகத்தாலோ , ஆட்சியாளர்களோ கண்டு கொள்ளப்படுவதில்லை. பல மரணங்கள் உறவுகளால் கண்டுகொள்ளப் படுகின்றன; சில மரணங்கள் யாராலும் கண்டுகொள்ளப் படுவதில்லை.

விபத்தால் நிகழும் திடீர் மரணங்களுக்கு அரசுகளால் இழப்பீடு வழங்கப்படுகின்றன. இந்த இழப்பீடுகளும் சமமாக இருப்பதில்லை. ஐம்பதாயிரம் ,ஒரு இலட்சம் , இரண்டு இலட்சம் , ஐந்து இலட்சம் , பத்து இலட்சம் என்று நிர்ணயம் செய்கிறார்கள். எதன் அடிப்படையில் இழப்பீடை நிர்ணயம் செய்கிறார்கள் என்பது புதிராகவே உள்ளது. ஊடக வெளிச்சமும் , சமூக கவனமும் பெறுகின்ற மரணங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்கப்படுகிறது. மற்றவற்றுக்கு சொற்பம் தான்.பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் இதயநோய் , இரத்த அழுத்தம் , புற்றுநோய் மற்றும் வேறுவிமான நோய்களின் காரணமாக நிகழும் திடீர் மரணங்களுக்கு கூட இழப்பீடு வழங்கப்படுவதில்லை. எதிலாவது அடிபட்டு துடிதுடித்து நிகழும் மரணங்கள் மட்டுமே இழப்பீட்டுக்குத் தகுதியுள்ளவை என்று எப்படி முடிவு செய்கிறார்கள் , நம் ஆட்சியாளர்கள்.முட்டாள்கள். இழப்பு என்பது எல்லோருக்கும் பொது தானே.

விமான விபத்தால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , ரோட்டில் அடிபட்டதால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , போராட்டத்தால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , குண்டடி பட்டதால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , மற்ற தீடீர் மரணங்களுக்கு எந்த விலையுமில்லை. இங்கு நிகழும் மனிதர்களின் மரணங்கள் ஒரே மாதிரியாக மதிப்பிடப்படுவதில்லை ;ஒரே மாதிரியான விலையும் நிர்ணயிக்கப்படுவதில்லை. பல மரணங்களுக்கு விலையே கிடைப்பதில்லை.  " மரணத்தின் முன்  எல்லோரும் சமம் " என்று இனியும் சொல்ல முடியுமா ?

நம் நவீன வாழ்வில் மரணத்திற்கும் சமமில்லாத விலை உண்டு . விலையில்லா மரணங்களுக்கும் இடமுண்டு . ஆனாலும் மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயம் என்று மட்டும் இயற்கை சொல்கிறது !



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 05, 2015 9:23 pm

seltoday wrote:இங்கு நிகழும் மனிதர்களின் மரணங்கள் ஒரே மாதிரியாக மதிப்பிடப்படுவதில்லை ;ஒரே மாதிரியான விலையும் நிர்ணயிக்கப்படுவதில்லை. பல மரணங்களுக்கு விலையே கிடைப்பதில்லை. " மரணத்தின் முன் எல்லோரும் சமம் " என்று இனியும் சொல்ல முடியுமா ?

முற்றிலும் உண்மை ,செல்வராஜ் அவர்களே !

இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்!
என்பதற்கிணங்க , உங்கள் வலைபக்க சுட்டி நீக்கப்படுகிறது .

வேண்டுமெனில் ,இதை நீங்கள் உங்கள் "signature " போட்டுக்கொள்ளலாம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 10:14 pm

நம் ஆட்சியாளர்கள் முட்டாள்கள்

உண்மை காதில் தேனாகப் பாய்கிறது!

மரணத்தின் முன் எல்லோரும் சமம்

நிச்சயம் மரணத்திற்கு முன் அனைவரும் சமம் தான்! ஆனால் அந்த மரணத்திற்கான மரியாதை நாம் வாழும் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்படுகிறது!

இழப்பீட்டு தொகையை வைத்து மரணத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு காணமுடியாது!



மரணத்திற்கும் விலை உண்டு ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Mon Sep 07, 2015 10:09 am

// இழப்பீட்டு தொகையை வைத்து மரணத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு காணமுடியாது! //

ஆனால் , சட்டத்தின் முன் மக்கள் அனைவரும் சமம் என்று இருக்கிற ஒரு ஜனநாயக நாட்டை ஆள்கின்ற அரசு இழப்பீடில் பாகுபாடு காட்டுகிறதே ஏன் ? என்பது தான் எனது ஆதங்கம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக