புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீண்டும்...மீண்டும்... Poll_c10மீண்டும்...மீண்டும்... Poll_m10மீண்டும்...மீண்டும்... Poll_c10 
41 Posts - 49%
ayyasamy ram
மீண்டும்...மீண்டும்... Poll_c10மீண்டும்...மீண்டும்... Poll_m10மீண்டும்...மீண்டும்... Poll_c10 
37 Posts - 45%
ஜாஹீதாபானு
மீண்டும்...மீண்டும்... Poll_c10மீண்டும்...மீண்டும்... Poll_m10மீண்டும்...மீண்டும்... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மீண்டும்...மீண்டும்... Poll_c10மீண்டும்...மீண்டும்... Poll_m10மீண்டும்...மீண்டும்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மீண்டும்...மீண்டும்... Poll_c10மீண்டும்...மீண்டும்... Poll_m10மீண்டும்...மீண்டும்... Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
மீண்டும்...மீண்டும்... Poll_c10மீண்டும்...மீண்டும்... Poll_m10மீண்டும்...மீண்டும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீண்டும்...மீண்டும்... Poll_c10மீண்டும்...மீண்டும்... Poll_m10மீண்டும்...மீண்டும்... Poll_c10 
324 Posts - 46%
ayyasamy ram
மீண்டும்...மீண்டும்... Poll_c10மீண்டும்...மீண்டும்... Poll_m10மீண்டும்...மீண்டும்... Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
மீண்டும்...மீண்டும்... Poll_c10மீண்டும்...மீண்டும்... Poll_m10மீண்டும்...மீண்டும்... Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
மீண்டும்...மீண்டும்... Poll_c10மீண்டும்...மீண்டும்... Poll_m10மீண்டும்...மீண்டும்... Poll_c10 
17 Posts - 2%
prajai
மீண்டும்...மீண்டும்... Poll_c10மீண்டும்...மீண்டும்... Poll_m10மீண்டும்...மீண்டும்... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மீண்டும்...மீண்டும்... Poll_c10மீண்டும்...மீண்டும்... Poll_m10மீண்டும்...மீண்டும்... Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மீண்டும்...மீண்டும்... Poll_c10மீண்டும்...மீண்டும்... Poll_m10மீண்டும்...மீண்டும்... Poll_c10 
5 Posts - 1%
jairam
மீண்டும்...மீண்டும்... Poll_c10மீண்டும்...மீண்டும்... Poll_m10மீண்டும்...மீண்டும்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மீண்டும்...மீண்டும்... Poll_c10மீண்டும்...மீண்டும்... Poll_m10மீண்டும்...மீண்டும்... Poll_c10 
4 Posts - 1%
Jenila
மீண்டும்...மீண்டும்... Poll_c10மீண்டும்...மீண்டும்... Poll_m10மீண்டும்...மீண்டும்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும்...மீண்டும்...


   
   

Page 1 of 2 1, 2  Next

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Fri Nov 13, 2015 11:44 pm

மீண்டும்...
மீண்டும்...
மனம் தேடுகிறது...

கருவறையில்
கண்மூடி
கண்ட தவம்...

தாய் மடியில்
தவழ்ந்த
தருணங்கள்...

தந்தை விரல்
பிடித்து நடந்த
தடங்கள்...

தாத்தா பாட்டியிடம்
கதை கேட்ட
இரவுகள்...

படிப்பில் மூழ்கிய
பள்ளிப் பருவம்...

கனவுகள் துள்ளிய
கல்லூரி நாட்கள்...

முதல் மாத சம்பளம்
வாங்கிய நிறைவு...

திருமண நிகழ்வுகளில்
அரும்பிய வெட்கம்...

குழந்தையின் சிரிப்பில்
குழைந்த மனம்...

கடனில்லா வாழ்வில்
கணநேர உறக்கம்...

பழுத்தபின்
உதிரத் துடிக்கும்
மனமுதிர்ச்சி...

வளங்கொழிக்கும்
வயல்வெளி இயற்கை...

மனிதம் வாழும்
நாகரிக வாழ்க்கை...


- பா.வெ.



எண்ணம் போல் வாழ்வு
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Nov 14, 2015 12:56 am

என்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் தேடல் அருமை.



மீண்டும்...மீண்டும்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமீண்டும்...மீண்டும்... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மீண்டும்...மீண்டும்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sat Nov 14, 2015 1:11 am

மிக்க நன்றி தோழியே!!!



எண்ணம் போல் வாழ்வு
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Nov 14, 2015 6:00 am

கவிதை நன்று பா.வெ அவர்களே ! நன்றாகவே சிந்திக்கிறீர்கள் ; நன்றாகவே எழுதுகிறீர்கள் !




என் மனம் மீண்டும் மீண்டும் நினைப்பது .....
=================================

குரங்கு பெடல்போட்டு சைக்கிள் கற்கையில்
கரத்திலும் சிரத்திலும் காயம் பட்டு
கண்ணீர் சிந்திய அந்த நாட்கள்

இச்சைக்கினிய நண்பருடன் கூடி
பச்சைக் குதிரைத் தாண்டியபோது
தடுக்கி விழுந்த அந்த நாட்கள்

எப்போது வருமென்று கடையின் முன்னே
கல்கி இதழுக்காகக் காத்துக் கிடந்து
பொன்னியின் செல்வனைப் படித்த நாட்கள்

மார்கழி மாதம் நடுங்கும் குளிரில்
திருப்பள்ளி எழுச்சியும் திருவெம்பாவையும்
தருமபுரம் சுவாமி நாதனின் குரலில்
விருப்பமுடன் கேட்டு மகிழ்ந்த நாட்கள்

காவேரி வெள்ளத்தில் துடுமெனப் பாய்ந்து
ஆவியை அடக்கி அடிவரை சென்று
கைப்பிடி மணலைக் கொண்டு வந்து
காதலி முன்னே காட்டிய நாட்கள்

காளைப் பருவத்தில் கல்லூரி நாட்களில்
விடுதிக் காவலர் தூங்கிய பின்பு
சடுதியில் சுவர்மீது ஏறிக் குதித்து
எம்ஜியார் சிவாஜி நடித்த படங்களை
நண்பர் குழாத்தொடு பார்த்த நாட்கள்

ஆறுரூபாய் கொடுத்து ஆரிய பவனில்
ஆனியன் ரவாவும் ஆவிபறக்கும் காபியும்
ஆசையுடன் சுவைத்த அந்த நாட்கள்

அப்பாய்மென்ட் ஆர்டர் வந்த போது
அப்பாவும் அம்மாவும் வாங்கிப் பார்த்து
ஆசி வழங்கிய அந்த நாட்கள்

பெண்ணைப் பார்க்கச் சென்றபோது
என்னைப் பார்க்கத் துணிவில்லாமல்
கால் பெருவிரலால் நிலத்தைக் கீறி
கடைக் கண்ணால் அவள் பார்த்த நாட்கள்



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sat Nov 14, 2015 8:52 am

நடை வண்டி பயிற்சியும்
நரம்பு பையில் புத்தகங்களும்
நுனா தேரும் நுங்கு வண்டியும்

குரங்கு பெடல்
மிதிவண்டி காயங்களும்
குண்டுமணி பதித்த
களிமண் பொம்மைகளும்

பஞ்சு தாத்தா பறக்க விட்டதும்
பனம் பழம் சுட்டுத் தின்றதும்
பானைக்குள் மீன் பிடித்ததும்

பெட்டி அடைத்த
தொலைக்காட்சி பெட்டியும்
பெட்ருமாஸ் விளக்கு எரிந்த
பெட்டிக் கடைகளும்
பெயிண்ட் அடிக்கப்பட்ட
மாட்டுக் கொம்புகளும்

கண்ணாமூச்சி, கபடி, பம்பரம்,
கோலி, கிட்டிப்புள், குதிரையேற்றம்,
சில்லுக்கோடு, சூட்டுக்காய், பகடை,
பாண்டி, பேபே,பல்லாங்குழி,
பரமபதம், டயர் வண்டிப் போட்டி,
நண்டூருது நரியூருது, இன்னும்…
சொல்லமறந்த ஏராளமும்…

ஐந்து பைசா பத்து பைசா மிட்டாயும்
ஐந்து ரூபாய் திருவிழா கடை சர்பத்தும்
ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தில்
குட்டி போட்ட மயிலிறகும்

பனை மட்டை காத்தாடியும்
பரணி வைத்த
மாட்டுத் தொழுவமும்
படச்சுருள் கொண்டு பார்த்த
வேட்டிப் படங்களும்

அம்மியும் திருவையும்
ஆட்டுக்கல் மாவில்
சுட்ட தோசையும்

உரலில் குத்திய நெல்லும்
உறியில் கட்டிய தயிறும்
உண்டியல் பணத்தில் வாங்கிய
முதல் இங்க் பேனாவும்

ஊர்புற தொலைக்காட்சியில்
ஒன்றாய் அமர்ந்து ரசித்த
ஒளியும் ஒலியும்
ஒணிடா மண்டையும்
ஊஞ்சலாடிய ஆலமர
விழுதுகளும்


பசி மறந்து பங்குனி
வெயிலில்ஆடிய ஆட்டமும்
பதனீர் குடிக்க ஓடிய ஓட்டமும்
பக்கத்து வீட்டு
சமையல் அன்பும்

பக்கத்து ஊர் வரை சென்று
பிடித்த பட்டாம்பூச்சியும்
பின்ன மரத்தில் ஏறிப் பிடித்த
பொன் வண்டுகளும்
பார்த்து பார்த்து கட்டிய
மணல் வீடுகளும்

கூட்டு வண்டியும் கூட்டாஞ்சோறும்
குரும்பைத் தேரும் கொல்லைப்புற
குப்பைக் குழியும்

கூடை வைத்த குண்டு பல்பும்
கூடை வைத்து குருவி பிடித்ததும்
கூராய் சீவ முயன்ற
பென்சில் காயங்களும்

பூவரச இலையில் செய்த பீப்பியும்
பூதக்கண்ணாடி ஒளியில் எரிந்த சருகும்
பூம்பூம் மாட்டின்
தலையாட்டல் ஒலிகளும்

கல்லு சிலேட்டும்
கோவை இலைஅழிப்பானும்
கெண்டியில் சுவைத்த தேனீரும்

கரகாட்டம் மயிலாட்டம்
ஒயிலாட்டம் காண ஓடி வரும்
திருவிழா கூட்டமும்

கல் உப்பு வீசி உடைத்த
திருவிழாக்கால பலூன்களும்
கருவாட்டுக் கிழவி காதோரம்
கண்ட தண்டட்டையும்

மரப்பலகையும் மட்பாண்ட சமையலும்
மரப்பாச்சிபொம்மைகளும்
மழைக்கால கப்பலும்
மண்பூசிய வீடுகளும்
மார்கழி மாத தாதர் தாத்தாவும்

விடிய விடிய விழித்து செய்த
தீபாவளி பலகாரமும்
வீடு வீடாய் பகிர்ந்த பரிமாற்றமும்
விறகு அடுப்பு சமையல்சுவையும்

அனைவரின் அரவணைப்பில்
கிட்டிய அன்பும்
அரைஞாண் கயிற்றில்
கட்டிய கண்டிப்பும்

ஆல் இந்தியா ரேடியோவும்
ஆகாச வானியும்
ஆடிப்பெருக்கில் ஆற்றில்
தேடிய பேரிக்காயும்

வைக்கோல்போர் அருகே
தட்டிய வரட்டியும்
வயல்வெளி பனைமர
தூக்கனாங்குருவிக் கூடும்

விரட்டியோட வைத்த வானூர்தி ஒலிகளும்
விறகு அடுப்பில் படுத்து உறங்கிய
பூனைக்குட்டியும்
டெக் வீடியோவும் டேப்ரிக்கார்டரும்
டெலிபோனில் சுற்றி விட்டு செய்த
சில இரவல் அழைப்புகளும்

தெருவிளக்குப் பூச்சிகளைத்
தேடிப்பிடித்த இரவுப் பறவைகளும்
திருவிழாவை அறிமுகப்படுத்தும்
இராட்டின ஒலிகளும்

நெருப்பு நீர்க்குமுன்
தேடியெடுத்த சொக்கப்பானை
பனைமட்டைகளும்
நெருப்பில் வெடித்து நெடிமூட்டிய
திருஷ்டி மிளகாய்களும்
நாவல்மர செவ்வெறும்புக் கடிகளும்

சீப்பில் சிக்கிய பேனை
சீக்கிரமே நசுக்க எழுப்பிய
சிறு ஒலிகளும்
சீயக்காய் புகைமூட்டத்தில்
ஓடிய கொசுக்களும்

சோப்புநுரையில் காட்டாமணக்கு
பால் சேர்த்து வைக்கோல் துண்டு
வைத்து வாயால் ஊதிய
வண்ண முட்டைகளும்

ரிப்பன் கட்டிய
ரெட்டை சடையும்
தாத்தா காட்டிய
ரெட்டைவால் குருவியும்

நித்தம் விரும்பிய
நிலாச் சோறும்
ரத்தம் அரும்பிய
தை மாத பல் ஈறும்

திண்ணையில் சுற்றிய
தேக்கு மர தூண்களும்
தென்னையில் கிடைத்த
புயல்கால குருத்துகளும்

சிமிலி விளக்கும்
சுரைக்குடுக்கும்
சில தடவை கேட்ட
ஒப்பாரியும் தாலாட்டும்

நெல் முளை விட்டதும்
நெல்லால் கீறி
பல் முளை விட்டதும்
கொல்லையில்
அவித்த நெல்லும்

துண்டு போட்டு
உடும்பு பிடித்ததும்
தூண்டில் போட்டு
பாம்பு மாட்டியதும்

நலம் நாடிய கடிதங்களும்
மனம் வாடிய தந்திகளும்
வாழ்த்து கூறிய பொங்கல்
வாழ்த்து அட்டைகளும்

குதிரிலும் பத்தாயத்திலும்
நிறைந்த நெல்லை அண்டி
வந்த அந்துப் பூச்சிகளும்
மரத்தில் விண்மீன்களைக் காட்டிய
மின்மினிப் பூச்சிகளும்

கொடுக்கா புளியும்
தண்ணீர் கொடுத்தான் பழமும்
குளத்தில் போட்ட
கண் சிவந்த குளியலும்

வாழைச் சருகில்
சாப்பிட்ட இட்லியும்
வடகம் காய வைத்த
முற்றம் வைத்த ஓட்டு வீடும்

இரவு நேர தாத்தா பாட்டி கதைகளும்!!!

இதில்…
சொல்லி விட்ட நிகழ்வுகளும்
சொல்ல விட்ட நிகழ்வுகளும்...




எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sat Nov 14, 2015 9:09 am

மிக்க நன்றி தோழரே!!! தங்களது தேடலும் அழகோ அழகு !!! எல்லா தேடலையும் எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள் .எனவேதான் சுருக்கமாக வாழ்வை எழுதினேன்.மேலே குறிப்பிட்ட வரிகள் எனது சிறுவயது தேடல் /அனுபவங்கள்...கல்லூரி வாழ்க்கை பற்றி எனது நிழல் நினைவுகள் கவிதையில்(தோல்வி கண்டு துவளாதே தொடர் பதிவில் உள்ளது )படித்துப் பாருங்கள் தோழரே...



எண்ணம் போல் வாழ்வு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Nov 14, 2015 9:37 am

அந்த நாள் ஞாபகம் என்றுமே மனதிற்க்கு இனியதுதான்

அந்த நாள் ஞாபகத்த
அச போட்டு பாத்துத்தான்
உள்ளுக்குள்ள ஓரத்துல -ஈர
பச கொஞ்சம் இப்பவெல்லாம்
சேத்துக்கறேன்......
அருமை நண்பரே அருமை ................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sat Nov 14, 2015 9:59 am

மிக்க நன்றி தோழரே!!!



எண்ணம் போல் வாழ்வு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 12:37 pm

வெங்கடேசன்,மற்றும் ஜெகதீஸ் தேடல் கவிதைகள் அருமை

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 14, 2015 12:59 pm

மீண்டும்...மீண்டும்... 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக